Jump to content

போதைக்கு எதிராக குரல் கொடுத்த தமிழ் இளைஞன் கொலை - மக்கள் ஆர்ப்பாட்டம்


Recommended Posts

போதைக்கு எதிராக குரல் கொடுத்த தமிழ் இளைஞன் கொலை - மக்கள் ஆர்ப்பாட்டம்

 

 
 

இரத்தினபுரி - கொலுவாவில - பாம்காடன் தோட்ட பிரதேசத்தில் போதைக்கு  எதிராக  குரல் கொடுத்த தமிழ் இளைஞன் கொலை செய்யப்பட்டதை எதிர்த்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

42261188_1015112008694031_19225762338460

மேற்படி   சந்தேகநபரை உடனடியாக கைது செய்யுமாறு கோரி இரத்தினபுரி மாநகர சபை உறுப்பினர் பதிராஜா தலைமையில் நேற்று பகல் பாம்கார்டன் பிரதேசத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.

இதில் பெருந்திரலான தோட்ட மக்கள் கலந்து கொண்டனர். 

மேற்படி ஆர்ப்பாட்டம் சில மணி நேரம் இடம்பெற்றது.

42229915_1878975498876654_25633044286354

சந்தேகநபரை  உடனடியாக கைதுசெய்வதாக. பொலிஸார் உறுதியளித்ததையடுத்து ஆரப்பாட்டம் கைவிடப்பட்டது.

மேற்படி பிரதேசத்தில் பொலிஸ் பாதுகாப்பு பலபடுத்தப்பட்டுள்ளது.

42182339_290013205182689_635432385867310

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

http://www.virakesari.lk/article/40866

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேற்படி   சந்தேகநபரை உடனடியாக கைது செய்யுமாறு கோரி இரத்தினபுரி மாநகர சபை உறுப்பினர் பதிராஜா தலைமையில் நேற்று பகல் பாம்கார்டன் பிரதேசத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.

செய்தியின் சாராம்சத்தையே பிழையாக புரிந்து கொண்டேன். உண்மையில் "மேற்படி சம்பவத்துடன் தொடர்புள்ள சந்தேகநபரை(அல்லது சந்தேக நபர்களை) கைது செய்யுமாறு கோரி ............. " என்று எழுதப்படவேண்டும்.

Link to comment
Share on other sites

இரத்தினபுரி கொலை சம்பவம் தொடர்பில் இரு இளைஞர்கள் கைது - பொலிஸ் பலத்த பாதுகாப்பு

 

 
 

இரத்தினபுரி – பாமன்கார்டன் பகுதியில் போதைப்பொருளுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வந்த தனபால் விஜேரத்னம், மர்மமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேகநபர்களை நேற்று மாலை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ratna.jpg

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் வசமிருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டொன்று கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர்கள் பயன்படுத்தியதாக கூறப்படும் முச்சக்கரவண்டியொன்றும் மீட்கப்பட்டுள்ளது.

பாமன்கார்டன் பகுதியிலுள்ள ஒரே முகவரியில் வசிக்கும் 24 மற்றும் 23 வயதான இருவரே சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்டவிரோத போதைப்பொருள் வர்த்தகத்திற்கு எதிராக செயற்பட்டதே, இந்த கொலைக்கான காரணமாக அமைந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிடுகின்றனர்.

http://www.virakesari.lk/article/40871

Link to comment
Share on other sites

விஜேரத்தினத்தின் பூதவுடலுக்கு அமைச்சர் மனோ கணேஷன் அஞ்சலி

 

 

கடந்த 19 ஆம் திகதி கடந்தப்பட்டு அடித்து கொலை செய்யப்பட்ட இரத்தினபுரி கொலுவாவில பாம்காடன் தோட்டத்தை சேர்ந்த  விஜேரத்தினத்தின் பூதவுடலுக்கு அமைச்சர் மனோ கணேஷன் இன்று(22) இறுதி அஞ்சலி செலுத்தினார். 

manoganesan.jpg

இதன்போது இரத்தினபுரி மாநகர சபை உறுப்பினர் பதிராஜா, தமிழ் முற்போக்கு முன்னணியின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளர் சந்திரகுமார் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்

http://www.virakesari.lk/article/40990

 

 

விஜேரத்தினத்தின் மரணத்திற்கு நீதிகோரி இரத்தினபுரியில் மக்கள் ஆர்ப்பாட்டம்

 

இரத்தினபுரி கொலுவாவில பாம்காடன் தோட்டத்தில்  சட்ட விரோதமாக கசிப்பு விற்பனைக்கு எதிராக செயற்பட்ட  விஜேரத்தினம் என்பர் நேற்று முன்தினம் அடித்து கொலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கைது செய்யுமாறுகோரி இன்று பகல் இரத்தினபுரி மணிகூட்டு கோபுரத்திற்கும் இரத்தினபுரி பொலிஸ் நிலையத்திற்கும்  முன்பாக மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.

20180921_175615.png

மேற்படி ஆரப்பாட்டத்தில் மழை என்றும் பாராது பெருந்திரலான மலையக மக்கள் கலந்து கொண்டனர்.

மேற்படி ஆர்ப்பாட்டம் காரணமாக இரத்தினபுரி நகரில் பல மணி நேரம் போக்குவரத்து தடையும் ஏற்பட்டது.

20180921_175640.png

இந்நிலையில் கொலையுடன் சம்பந்தப்பட்ட  சந்தேகநபர்களுக்கு ஆதரவு வழங்காமல் உடனடியாக சந்தேகநபர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறும் இவ்வாரான சம்பவம் இனிமேலும் இடபெற கூடாது என்றும் பதாதைகள் ஏந்தி கோசமிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

மேற்படி ஆரப்பாட்டத்தில் மலையக மக்கள் முன்னணியின் உப தலைவர் ரூபன் பெருமாள் இரத்தினபுரி மாநகர சபை உறுப்பினர் பதிராஜா மற்றும் வர்த்தகர்கள் தோட்டத் தொழிலாளர்கள் உட்பட  பெருந்திரலானோர் இதில் கலந்து கொண்டனர். 

20180921_175816.png

இதேவேளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மலையக மக்கள் முன்னணியின் உப தலைவர் ரூபன் பெருமாள் மற்றும் இரத்தினபுரி மாநகர சபை உறுப்பினர் பதிராஜா ஆகியோர் தலைமையிலான குழுவினருக்கும் இரத்தினபுரி பொலிஸ் அதிகாரிகளுக்கிடையே கலந்துரையாடல் ஒன்றும் இன்று பகல் இடம்பெற்றது.

இதன்போது மேற்படி சம்பவத்துடன் தொடர்புடைய நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மற்றும் நான்கு முச்சக்கர வண்டிகள் உட்பட இரண்டு மோட்டார் சைக்கில்கள் என்பன  கைபற்றியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

42338157_1086214698226349_67871678925100

இதற்கு பதிலளித்து கருத்து தெரிவித்த ஆர்ப்பாட்டகாரர்கள், நான்கு முச்சக்கர வண்டிகள் கைபற்றினால் அதன் உரிமையாளர்கள் எங்கே?

இரண்டு  சைக்கிள் வண்டிகள் கைபற்றினால் அதன் உரிமையாளர்கள் எங்கே? என்று கேள்வி எழுப்பி ஆவேசம் அடைந்தார்கள். இதன் முக்கிய சந்தேகநபரை உடனடியாக கைது செய்யுமாறும் அவர்கள் பொலிஸாரிடம் ஆவேசத்துடன் கோரிகை விடுத்தனர்.

received_833782230079027.jpeg

மேற்படி தோட்டப்பகுதிக்கு குருவிட்ட பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் அமர்த்தப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது

http://www.virakesari.lk/article/40989

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.