Jump to content

அர­சி­யல் கைதி­க­ளுக்கு ஆத­ர­வா­க- யாழ்ப்­பா­ணத்­தில் போராட்­டம்!!


Recommended Posts

அர­சி­யல் கைதி­க­ளுக்கு ஆத­ர­வா­க- யாழ்ப்­பா­ணத்­தில் போராட்­டம்!!

 

குறு­கி­ய­கால மறு­வாழ்வு வழங்கி விடு­விக்க வேண்­டும் என்ற கோரிக்கை முன்­வைத்து உணவு ஒறுப்­புப் போராட்­டத்­தில் குதித்­துள்ள தமிழ் அர­சி­யல் கைதி­க­ளுக்கு ஆத­ர­வாக, யாழ்ப்­பா­ணத்­தில் இன்று காலை 10 மணிக்கு கவ­ன­வீர்ப்­புப் போராட்­டம் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளது.

யாழ்ப்­பா­ணம் நகர பேருந்து நிலை­யத்­துக்கு எதி­ரில் இந்­தப் போராட்­டம் நடை­பெ­றும் என்று, சமூக நீதிக்­கான வெகு­ஜன அமைப்பு தெரி­வித்­துள்­ளது.

தமிழ் அர­சி­யல் கைதி­கள் 8 பேர் கடந்த வெள்­ளிக்­கி­ழ­மை­யி­லி­ருந்து உணவு ஒறுப்­புப் போராட்­டத்­தில் ஈடு­பட்­டுள்­ள­னர்.

அநு­ரா­த­பு­ரம் சிறைச்­சா­லை­யில் போராட்­டத்தை முன்­னெ­டுக்­கும் கைதி­க­ளுக்கு ஆத­ர­வாக இந்­தப் போராட்­டம் யாழ்ப்­பா­ணத்­தில் இன்று நடை­பெ­ற­வுள்­ளது. வவு­னி­யா­வில் நாளை போராட்­டம் நடத்­தப்­ப­ட­வுள்­ளது.

https://newuthayan.com/story/09/அர­சி­யல்-கைதி­க­ளுக்கு-ஆத­ர­வா­க-யாழ்ப்­பா­ணத்­தில்-போராட்­டம்.html

Link to comment
Share on other sites

‘வாய்ப்பேச்சில் நல்லிணக்கம் வதைப்பது அரசியல் கைதிகளையா?’- யாழில் போராட்டம்

 

 

IMG-7121-720x450.jpg

‘வாய்ப்பேச்சில் நல்லிணக்கம் வதைப்பது அரசியல் கைதிகளையா?’ எனக் கோஷமெழுப்பி தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக யாழில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

சிறையில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

சமூக நீதிக்கான வெகுஐன அமைப்பின் ஏற்பாட்டில் யாழ். மத்திய பேருந்து நிலையத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை இப்போராட்டம் நடைபெற்றது.

இதன்போது ‘அரசியல் கைதிகளின் கோரிக்கையை நிறைவேற்று’, ‘அனைத்து அரசியல் கைதிகளையும் பொதுமன்னிப்பில் விடுதலை செய்’, ‘பயங்கரவாத தடைச் சட்டத்தை உடனே விலக்கு’, ‘உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளின் உயிரைப் பறிக்காதே’, ‘நல்லாட்சி அரசே ஏமாற்றாதே’, ‘வாய்ப்பேச்சில் நல்லிணக்கம் வதைப்பது அரசியல் கைதிகளையா?’, ‘நல்லாட்சி அரசே வாக்குறுதி என்னாச்சு’ உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாதைகளை தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இப்போராட்டத்தில் அரசியல் கைதிகளின் உறவினர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டம் எட்டாவது நாளாக இன்றும் தொடர்கின்ற நிலையிலேயே இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தங்களை விடுவிக்குமாறு அல்லது புனர்வாழ்வளிப்புக்கு உட்படுத்துமாறு கோரி அநுராதபுரம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள எட்டு அரசியல் கைதிகள் கடந்த 14ஆம் திகதி முதல் உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

IMG-7120-428x285.jpgIMG-7128-428x286.jpg

http://athavannews.com/வாய்ப்பேச்சில்-நல்லிணக/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.