Jump to content

சிரிக்க வைக்கும் குறும்புகள் (பிராங்க்).


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சிரிக்க வைக்கும் குறும்புகள் (பிராங்க்).

குறும்புகள் பலவகை... திட்டமிட்டு ஆனால் அப்பாவிதித்தனமானதாக செய்யப்படும் குறும்புகள் பலவிதம். அடக்க முடியாத, வயிறு வலிக்கும் சிரிப்பினை உண்டாக்குபவை.

பலவகை....

பிரித்தானியாவில் டெலிவிசின் நிகழ்வில் புகழ் மிக்க இந்த குறும்பு நிகழ்வினை நிகழ்த்தியவர் மறைந்த ஜெரேமி பீட்ல்லி என்பவர். 

மனைவியின் ஏற்பாட்டில் கணவர் பிள்ளை போல பார்க்கும் காரை... இரவோடிரவாக பக்குவமாக அப்புறப் படுத்தி, அதேபோல இலக்கத்தகடு, நிறம் கொண்ட வேறு ஒரு காரை நிறுத்தி.... ஒரு குடிகாரர் வந்து வெறியில் அதனை கீறுவது அல்லது உடைப்பது... அல்லது... வரி, மாதாந்த வாடகை செலுத்தாததால் தூக்கிப் போவதாக அட்டகாசம் செய்து அந்த கணவரை டென்ஷன் ஆக்குவது தான் அவரது குறும்பு வகை. (அவர் டென்ஷன் ஆகி, இது தான் வரி கட்டின செர்டிபிகேட், இது தான் நான் முழு பணமும் செலுத்தி வாங்கிய விபரம் என்று ஓடி, ஓடி டென்ஷன் ஆவதை பார்வையாளர்கள் சிரித்து ரசிப்பதே நிகழ்ச்சியின் நோக்கம்.

சிலவேளைகளில் வேலைக்கு ஆளை எடுத்து, அவருக்கு செய்ய முடியாத வேலைகளை கொடுத்து ( ஒழுகும் வாளியினை கொடுத்து, தண்ணி அள்ளி தொட்டியினை நிரப்ப சொல்வது, இறந்தவர் போல நடிக்கும், பெட்டியினுள் இருக்கும் உடலுக்கு உடுப்பு போட சொல்வது...அவர் எழுப்பி செய்யும் சேட்டைகள்)  அவர் படும் பாட்டினை ரகசிய கமராவில் பிடித்து, காட்டுவது வேறு ஒரு ரகம்.. 

இயக்குனர் சங்கரின் பிரசாந்த், ஐஸ்வர்யா ஆகியோரை வைத்து எடுத்த படம் ஜீன்ஸ். ஆனந்த விகடன் பத்திரிகை குறும்பு டீம் என்று ஒரு சிறு டீமை வைத்திருந்தது. அந்த டீம் ஜீன்ஸ் பிரிவியூ என்று ஒரு அரங்கை புக் பண்ணி சினிமா உலகினை சேர்ந்த பலரை வரவழைத்தது. சத்யராஜ் உள்பட பலரும் அரக்கப் பரக்க வந்து அமர்ந்து இருந்தார்கள்.

ஷோ தொடங்கியபின்னர் தான் தெரிந்தது அது சினிமா ஜீன்ஸ் அல்ல... ஜீன்ஸ் உடை என்று. பெரிய ஒரு குறும்பு அது.

அவிந்து போனோம் என்று முதலில் புரிந்து கொண்டவர் சத்யராஜ்... 'அடப் பாவிகளா' என்று சத்தமாக சொல்லி சிரித்தார் அவர்.

Just for laugh போன்ற பல வகையறாக்கள் உண்டு.

இது இந்தியாவின் ரேடியோ ஒன்றின் கிளாஸ் குறும்பு... Honeymoon Prank...

அசைவ உணவு... சைவ உணவாளருக்கு கொடுக்க பட்ட குறும்பு.. 

இது இணையத்தினைக் கலக்கும் பிரேசில் நாட்டு குறும்பு... ஜோடியாக வரும், பூங்காவில் இருக்கும் இருவரில், ஆணிடம், ஒரு அழகிய பெண் ... ஆபாசம் இல்லாத, அப்பாவித்தனம் போன்ற உதவி கேட்பதாக நடித்து... பெண்ணினை டென்ஷன் ஆக்குவது தான் இந்த வகை குறும்பு... போர்த்துக்கேய மொழி தெரியாவிட்டாலும்.... சிரிப்பு வரவழைக்கும் ரகம்.

பல மில்லியன் கணக்கான பார்வையாளர்களை சிரிக்க வைக்கும் குறும்புகள் நீங்களும் பாருங்களேன்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உதில வரேக்க விழுந்து போனம்... காயம்.... தெரியுதோ எண்டு பார்த்து சொல்லுவியளே...

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

32 மில்லியன் பார்வையாளர்களை சிரிக்க வைத்த வீடியோ

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வீடியோக்கள் எல்லாம் ஆண்களுக்கு ஒரு முக்கியமான செய்தியையும்,  இளைஞர்களுக்கு  தனியாக ஒரு செய்தியையும் சொல்லிச் செல்கின்றன..... மனைவியானால் என்ன,காதலியானால் என்ன அவர்களின் அடிப்படைக் குணம் மாறவே மாறாது. ஆண்களின் அற்ப சந்தோஷத்தையும் அடித்து விரட்டுவதிலேயே குறியா இருக்கிறாங்கள்.....!  ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா... அய்யய்யோ....அவிஞ்சு போனமா?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னா அடி.... முடியல்லயா..... இப்படியா.. பப்ளிக்கிள...அடிக்கிறது.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

488 பேர் பாத்திருக்கினம் உந்த திரியை...

சுவியரும், ஆதவனும் தான் துணிஞ்சு பதிவு போட்டிருக்கினம்..

ஏனைய விண்ணாதி விண்ணர்கள் எல்லாம் கமுக்கமா பார்த்தமா, அமுசடக்கமா போனோமா என்று ஓடுகிறார்கள்.

வீட்டுல சாத்து விழும்..எண்டு...பயம் போல கிடக்குது.... 

தமிழ்சிறியர் கூட சைலன்ட் ஆகிட்டாரே... நம்ப முடியல.. :grin:

கடைசி விடீயோவில தொடக்கத்திலே கறுவளின்ர பார்வை சொல்லும் கதையும்... அடி வாங்கும் போது.... படுற பாடும்....எல்லோரையும் கலங்க ? வைத்திருக்கும்..:grin::grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட நீங்க வேற, அடிக்கு அப்புறம்தான் அந்தப் பதிவே போட்டது.....!  ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் போர்த்துக்கல் போயிருந்தேன். Water Theme park ஒன்றுக்கு போயிருந்த போது, அங்கே வந்திருந்த இளம் பெண்கள் முதல், கிழவிகள் வரை இந்த வகை பிகினி உடுப்புகள் தான் போட்டிருந்தார்கள். முக்கியமாக பின்புறம் (பிட்டம்) முழுவதுமாக தெரியக் கூடியதாக கீழாடை இருந்தது. (மேல பெண்கள் போட்டிருப்பது போல)

மாறாக ஆண்கள், நானும் நண்பர்களும் உட்பட, களுசான் (swimming shorts) அணிந்திருந்தோம். 

ஆங்கில பத்திரிகை ஒன்றில் ஒருவர் எழுதி இருந்தார், அலுவலக உடுப்பு போடும் ஆண்கள், கழுத்துக்கு மேல மட்டும் தெரியும் வண்ணம் உடை அணிகிறார்கள். பெண்களோ, உடலின் கூடிய பகுதிகள் தெரியுமாறு மிக குறைவாக உடை அணிந்து செல்கிறார்கள்.

உண்மையில் இது மாறி அல்லவா இருந்திருக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.

போர்ட்ஸமௌத் கடற்க்கரை போயிருந்த பொது, அங்கே வந்திருந்த தமிழ் குடும்பத்து பெண்கள் அணிந்து வந்த அதே உடுப்புடன் கடலில் குளித்தார்கள். அதேவேளை அவர்களுடன் வந்திருந்த இங்கே பிறந்திருக்கக் கூடிய இளம் பிராயத்துப் பெண்கள் பிகினி உடையில் குளித்தார்கள். (முறையா பிகினி உடை).

இதனை பார்க்கையில் சிலருக்கு ஓகேயாக இருப்பது வேறு சிலருக்கு ஆபாசமாக இருக்கும் போல தெரிகிறது.

இன்னுமொரு திரியில், நான் விபத்தாக பார்த்து, இதனையும் போடுகிறார்களே என்று வியந்த ஒன்றை பத்தி பதிந்தேன்.

பின்னர் இந்த திரியினையும் ஆரம்பித்தேன். இது பிரேசில் நாட்டு பொது TV நிகழ்ச்சி. கவனமாக தான் ஆபாசம் எல்லை கடக்காதவாறு எடுத்து இருக்கிறார்கள்.

யாழில் ஒரு சமூக பரீட்ச்சையாக  (social experiments) தான், மிக கவனமாக தேர்ந்தே பதிந்தேன்.

பலர் தூரத்தில் இருந்து இரு திரிகளையும் பார்த்து விட்டு நகர்ந்து விட்டார்கள். சுவியர் மட்டுமே இந்த திரியில் கருத்துக்கள் பதிந்தார். 

இங்கே மேலை நாடுகளில் 10ம் வயதில், 5 வது வகுப்பில் பாலியல் கல்வி சொல்லிக் கொடுக்கின்றனர். அதுக்கு பாடசாலை கொடுக்கும் தகவல் படங்கள், எமது பார்வையில் மிக, மிக ஆபாசமானது. இங்கே கூட பல வருடங்களுக்கு முன்னர் ஜெர்மனி உறவு அந்தவகை படங்களை போட்டு இருந்தார். தனது பிள்ளைக்கு பாடசாலை வழங்கியதாக...வருத்தத்துடன் கூறி இருந்தார்..

அதை பார்த்த உறவுகள், நானும் கூட, அட... இவை குழந்தைகளுக்கு தரப்படடவை என வியந்து கொண்டே... 'அய்யய்யோ ஆபாசமான படங்கள்' என்று சொல்ல  முடியாமல், 'மெல்லவும் முடியாமல். விழுங்கவும் முடியாமல்' கடந்து சென்றோம். 

சில தமிழ் தாய், தந்தையர் இந்த பாலியல் கல்வி தமது குழந்தைக்கு வேண்டாம் என பாடசாலைக்கு போய் சொல்லப் போக, அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுத்து, அதனை படிப்பதால் நன்மை என்ன என்று சொல்லி புரிய வைத்திருக்கிறார்கள். 

இங்கே பல தமிழ் பெற்றார்கள்,ஆங்கிலேயர்கள் போல வாழ தலைப்படும் அடுத்த தலைமுறை பிள்ளைகள், நிதர்சனத்தினை புரிந்து கொள்கிறார்கள்.  டேட்டிங், அது, இது... கழட்டி விடுவது.... மீண்டும் டேட்டிங்....டேட்டிங், அது, இது... கழட்டி விடுவது.... அவர்களுக்கு சர்வ சாதாரணம்... எமது பார்வையில் அவ்வாறு இருக்காது... இருக்கப் போவதும் இல்லை. காரணம் நாம் இங்கே உடலளவில், மனதளவில் இன்னும் ஊரில் தான்....

எமக்கு ஊர் எப்படியோ.. அதே போல், பிள்ளைகளுக்கும் தாம் பிறந்து வளர்ந்த ஊரும் அதன் பழக்க வழக்கங்களும்...

முக்கியமாக வெள்ளைகள் 16 வயதுக்கு மேல், பிள்ளைகளை அவர்கள் பாட்டுக்கு விட்டு விடுவார்கள். பலர் வீட்டினை விட்டு வெளியேறுவார்கள். 

இது நிதர்சனம்.... இது புரியாவிடில்... நாம் நம்மையும் வேதனைக்கு உட்படுத்தி, நமது பிள்ளைகளையும் வேதனைக்கு உட்படுத்தும் நிலையில் இருப்போம்.

அதே வேளை பெற்றார்களாக ஆலோசனை தேவைப்படும் நேரத்தில் வழங்குவோம்.

லண்டன் ஈஸ்ட் ஹாம் பகுதியில் மகளை, ஆண் நண்பர் உடன் கண்டு விட்ட தகப்பன் தூக்கில் தொங்கிய சம்பவமும் சில ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்தது.  

ஆகவே நாம் ரோமில் வாழ்ந்தால் ரோமரைப் போல வாழ வேண்டும் அல்லது வாழ முற்படுபவரை பார்த்துக் கொண்டே, ஆச்சோ, போச்சோ... குய்யோ, முறையோ என்று அலம்பறை பண்ணாது அமைதியாக கடந்து செல்ல வேண்டும்.

இல்லாவிடில் டென்ஷன் தான் வாழ்க்கை ஆகிவிடும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/29/2018 at 12:12 AM, Nathamuni said:

488 பேர் பாத்திருக்கினம் உந்த திரியை...

சுவியரும், ஆதவனும் தான் துணிஞ்சு பதிவு போட்டிருக்கினம்..

ஏனைய விண்ணாதி விண்ணர்கள் எல்லாம் கமுக்கமா பார்த்தமா, அமுசடக்கமா போனோமா என்று ஓடுகிறார்கள்.

வீட்டுல சாத்து விழும்..எண்டு...பயம் போல கிடக்குது.... 

தமிழ்சிறியர் கூட சைலன்ட் ஆகிட்டாரே... நம்ப முடியல.. :grin:

கடைசி விடீயோவில தொடக்கத்திலே கறுவளின்ர பார்வை சொல்லும் கதையும்... அடி வாங்கும் போது.... படுற பாடும்....எல்லோரையும் கலங்க ? வைத்திருக்கும்..:grin::grin:

கம்மாக்கோ...   சிக்காக்கோ.... எண்ட  மாதிரி, நாதமுனியரின் கதை  இருக்கு.
நாங்கள்,  இப்படியான...   தலைப்புகளை,  தவற விடாமல், வரி வாரியாக படித்திட்டு தான்... படுக்கைக்கு போற ஆக்கள் அப்பு.

என்ன... நீங்கள் தலைப்பை  ஆரம்பித்த நேரம், எனக்கு.. தலைக்கு மேலை வேலை... இருந்ததால்...   
பதில் எழுத முடியவில்லை , நாதமுனியர். 

அத்துடன்.... இப்படியான தலைப்புக்களில்...  மினக்கெட்டு, 
முக்கி, முக்கி... எழுதினாலும்....படு பாவிகள், வெட்டிப் போடுவாங்கள். 

அதனால்...  அவங்களையும்,  சுழிச்சுக்    கொண்டு போக வேணும், அய்யா..
திஸ்... இஸ்.. வெறி  இன்ரலிஜெண்ட்   அன்ட்   ரெக்னிக்  வேர்க். அண்டர் சாண்ட்,  முனி.  :grin:  ?  ? 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

அண்மையில் போர்த்துக்கல் போயிருந்தேன். Water Theme park ஒன்றுக்கு போயிருந்த போது, அங்கே வந்திருந்த இளம் பெண்கள் முதல், கிழவிகள் வரை இந்த வகை பிகினி உடுப்புகள் தான் போட்டிருந்தார்கள். முக்கியமாக பின்புறம் (பிட்டம்) முழுவதுமாக தெரியக் கூடியதாக கீழாடை இருந்தது. (மேல பெண்கள் போட்டிருப்பது போல)

மாறாக ஆண்கள், நானும் நண்பர்களும் உட்பட, களுசான் (swimming shorts) அணிந்திருந்தோம். 

ஆங்கில பத்திரிகை ஒன்றில் ஒருவர் எழுதி இருந்தார், அலுவலக உடுப்பு போடும் ஆண்கள், கழுத்துக்கு மேல மட்டும் தெரியும் வண்ணம் உடை அணிகிறார்கள். பெண்களோ, உடலின் கூடிய பகுதிகள் தெரியுமாறு மிக குறைவாக உடை அணிந்து செல்கிறார்கள்.

உண்மையில் இது மாறி அல்லவா இருந்திருக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.

போர்ட்ஸமௌத் கடற்க்கரை போயிருந்த பொது, அங்கே வந்திருந்த தமிழ் குடும்பத்து பெண்கள் அணிந்து வந்த அதே உடுப்புடன் கடலில் குளித்தார்கள். அதேவேளை அவர்களுடன் வந்திருந்த இங்கே பிறந்திருக்கக் கூடிய இளம் பிராயத்துப் பெண்கள் பிகினி உடையில் குளித்தார்கள். (முறையா பிகினி உடை).

இதனை பார்க்கையில் சிலருக்கு ஓகேயாக இருப்பது வேறு சிலருக்கு ஆபாசமாக இருக்கும் போல தெரிகிறது.

இன்னுமொரு திரியில், நான் விபத்தாக பார்த்து, இதனையும் போடுகிறார்களே என்று வியந்த ஒன்றை பத்தி பதிந்தேன்.

பின்னர் இந்த திரியினையும் ஆரம்பித்தேன். இது பிரேசில் நாட்டு பொது TV நிகழ்ச்சி. கவனமாக தான் ஆபாசம் எல்லை கடக்காதவாறு எடுத்து இருக்கிறார்கள்.

யாழில் ஒரு சமூக பரீட்ச்சையாக  (social experiments) தான், மிக கவனமாக தேர்ந்தே பதிந்தேன்.

பலர் தூரத்தில் இருந்து இரு திரிகளையும் பார்த்து விட்டு நகர்ந்து விட்டார்கள். சுவியர் மட்டுமே இந்த திரியில் கருத்துக்கள் பதிந்தார். 

இங்கே மேலை நாடுகளில் 10ம் வயதில், 5 வது வகுப்பில் பாலியல் கல்வி சொல்லிக் கொடுக்கின்றனர். அதுக்கு பாடசாலை கொடுக்கும் தகவல் படங்கள், எமது பார்வையில் மிக, மிக ஆபாசமானது. இங்கே கூட பல வருடங்களுக்கு முன்னர் ஜெர்மனி உறவு அந்தவகை படங்களை போட்டு இருந்தார். தனது பிள்ளைக்கு பாடசாலை வழங்கியதாக...வருத்தத்துடன் கூறி இருந்தார்..

அதை பார்த்த உறவுகள், நானும் கூட, அட... இவை குழந்தைகளுக்கு தரப்படடவை என வியந்து கொண்டே... 'அய்யய்யோ ஆபாசமான படங்கள்' என்று சொல்ல  முடியாமல், 'மெல்லவும் முடியாமல். விழுங்கவும் முடியாமல்' கடந்து சென்றோம். 

சில தமிழ் தாய், தந்தையர் இந்த பாலியல் கல்வி தமது குழந்தைக்கு வேண்டாம் என பாடசாலைக்கு போய் சொல்லப் போக, அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுத்து, அதனை படிப்பதால் நன்மை என்ன என்று சொல்லி புரிய வைத்திருக்கிறார்கள். 

இங்கே பல தமிழ் பெற்றார்கள்,ஆங்கிலேயர்கள் போல வாழ தலைப்படும் அடுத்த தலைமுறை பிள்ளைகள், நிதர்சனத்தினை புரிந்து கொள்கிறார்கள்.  டேட்டிங், அது, இது... கழட்டி விடுவது.... மீண்டும் டேட்டிங்....டேட்டிங், அது, இது... கழட்டி விடுவது.... அவர்களுக்கு சர்வ சாதாரணம்... எமது பார்வையில் அவ்வாறு இருக்காது... இருக்கப் போவதும் இல்லை. காரணம் நாம் இங்கே உடலளவில், மனதளவில் இன்னும் ஊரில் தான்....

எமக்கு ஊர் எப்படியோ.. அதே போல், பிள்ளைகளுக்கும் தாம் பிறந்து வளர்ந்த ஊரும் அதன் பழக்க வழக்கங்களும்...

முக்கியமாக வெள்ளைகள் 16 வயதுக்கு மேல், பிள்ளைகளை அவர்கள் பாட்டுக்கு விட்டு விடுவார்கள். பலர் வீட்டினை விட்டு வெளியேறுவார்கள். 

இது நிதர்சனம்.... இது புரியாவிடில்... நாம் நம்மையும் வேதனைக்கு உட்படுத்தி, நமது பிள்ளைகளையும் வேதனைக்கு உட்படுத்தும் நிலையில் இருப்போம்.

அதே வேளை பெற்றார்களாக ஆலோசனை தேவைப்படும் நேரத்தில் வழங்குவோம்.

லண்டன் ஈஸ்ட் ஹாம் பகுதியில் மகளை, ஆண் நண்பர் உடன் கண்டு விட்ட தகப்பன் தூக்கில் தொங்கிய சம்பவமும் சில ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்தது.  

ஆகவே நாம் ரோமில் வாழ்ந்தால் ரோமரைப் போல வாழ வேண்டும் அல்லது வாழ முற்படுபவரை பார்த்துக் கொண்டே, ஆச்சோ, போச்சோ... குய்யோ, முறையோ என்று அலம்பறை பண்ணாது அமைதியாக கடந்து செல்ல வேண்டும்.

இல்லாவிடில் டென்ஷன் தான் வாழ்க்கை ஆகிவிடும். 

நாதமுனி... இந்தக் கருத்துக்கு  மட்டும்   தனியாக...      "சமூகச் சாளரம்"  என்ற பகுதியில்...  தலைப்பை, ஆரம்பித்தால்  நல்லது என நினைக்கின்றேன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Nathamuni said:

போர்ட்ஸமௌத் கடற்க்கரை போயிருந்த பொது, அங்கே வந்திருந்த தமிழ் குடும்பத்து பெண்கள் அணிந்து வந்த அதே உடுப்புடன் கடலில் குளித்தார்கள். அதேவேளை அவர்களுடன் வந்திருந்த இங்கே பிறந்திருக்கக் கூடிய இளம் பிராயத்துப் பெண்கள் பிகினி உடையில் குளித்தார்கள். (முறையா பிகினி உடை).

32 மில்லியன் பேர் பெண்களின் தொடைகளையும் அதற்கு நடுவில் உள்ளதையும் பார்க்க ஜொள்ளுவிட்டதால் நீங்கள் இணைத்த அந்த வீடியோவை நானும் பார்த்தேன். எல்லாவற்றையும் பார்க்கவில்லை. 

Internet traffic இல் 50 வீதம் porn என்று புள்ளிவிபரம் சொல்கின்றது. அதற்காக porn mainstream என்று அர்த்தமில்லை. அது போலத்தான் பலர் இந்த வீடியோக்களை பெண்களின் தசைப் பிரதேசங்களைப் பார்க்கவென்று வந்திருப்பார்கள். அதில் ஒரு சிலர் பல்லுப்போன வயசாளிகள் ( naughty old men ?)

இதில் social experiment செய்ய என்ன இருக்கின்றது? பெண்களை (தங்கள் வீட்டாரைத் தவிர) உடுப்பில்லாமல் பார்க்கத்தானே எல்லா ஆண்களும் விரும்புகின்றார்கள்!

நீங்கள் இணைத்த வீடியோக்கள் பிரேசிலில் ரீவியில் காட்டுகின்றார்கள் என்பது சரிதான். பிரித்தானிய mainstream channels களில் காட்டுவதாகத் தெரியவில்லை. அதற்கு என்ன காரணம்?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, கிருபன் said:

32 மில்லியன் பேர் பெண்களின் தொடைகளையும் அதற்கு நடுவில் உள்ளதையும் பார்க்க ஜொள்ளுவிட்டதால் நீங்கள் இணைத்த அந்த வீடியோவை நானும் பார்த்தேன். எல்லாவற்றையும் பார்க்கவில்லை. 

Internet troubles affic இல் 50 வீதம் porn என்று புள்ளிவிபரம் சொல்கின்றது. அதற்காக porn mainstream என்று அர்த்தமில்லை. அது போலத்தான் பலர் இந்த வீடியோக்களை பெண்களின் தசைப் பிரதேசங்களைப் பார்க்கவென்று வந்திருப்பார்கள். அதில் ஒரு சிலர் பல்லுப்போன வயசாளிகள் ( naughty old men ?)

இதில் social experiment செய்ய என்ன இருக்கின்றது? பெண்களை (தங்கள் வீட்டாரைத் தவிர) உடுப்பில்லாமல் பார்க்கத்தானே எல்லா ஆண்களும் விரும்புகின்றார்கள்!

நீங்கள் இணைத்த வீடியோக்கள் பிரேசிலில் ரீவியில் காட்டுகின்றார்கள் என்பது சரிதான். பிரித்தானிய mainstream channels களில் காட்டுவதாகத் தெரியவில்லை. அதற்கு என்ன காரணம்?

 

பிரித்தானியாவில் என்ன காட்டுகிறார்கள் என்றும் சொல்லி இருக்கிறேனே தலைவா.... பிரேசிலில் காட்டுவது இங்க ஜுஜுபி.

நீங்கள் விசயத்தை விட்டு , தசை, அது இது என்று  எங்கவோ போய்விட்டர்கள் போல தெரிகிறே...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/28/2018 at 6:12 PM, Nathamuni said:

488 பேர் பாத்திருக்கினம் உந்த திரியை...

 சுவியரும், ஆதவனும் தான் துணிஞ்சு பதிவு போட்டிருக்கினம்..

நான் இன்னமும் பார்க்கல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, Nathamuni said:

பிரித்தானியாவில் என்ன காட்டுகிறார்கள் என்றும் சொல்லி இருக்கிறேனே தலைவா.... பிரேசிலில் காட்டுவது இங்க ஜுஜுபி.

நீங்கள் விசயத்தை விட்டு , தசை, அது இது என்று  எங்கவோ போய்விட்டர்கள் போல தெரிகிறே...

சனல் 4 இல் watershed க்கு முன்னர் காட்டுவதில்லையே. எத்தனையோ முறைப்பாடுகள் Ofcom க்குப் போயிருந்தும் கலவியைக் காட்டுவதில்லை என்ற rule ஆல் அவற்றைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார்கள். ஆனால் பிரேசில் ரீவி பெண்களின் உடலைத்தான் காட்டுகின்றது.  இதில் தசை இல்லாமல் வேறு என்ன இருக்கின்றது?

 Just for a laugh ஒன்று.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட உங்களிடம்கூட நல்ல வீடியோக்கள் இருக்கின்றனவே, நீங்களும் இங்கே தொடர்ந்து இணைக்கலாமே......!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, suvy said:

அட உங்களிடம்கூட நல்ல வீடியோக்கள் இருக்கின்றனவே, நீங்களும் இங்கே தொடர்ந்து இணைக்கலாமே......!  tw_blush:

வைச்சுக் கொண்டு தானே பார்த்து ரசிச்சுக் கொண்டு, அமுசடக்கமாய் (உபயம்: ரதி அக்கா) இருந்திருக்கிறார்.... :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

அட உங்களிடம்கூட நல்ல வீடியோக்கள் இருக்கின்றனவே, நீங்களும் இங்கே தொடர்ந்து இணைக்கலாமே......!  tw_blush:

இப்படியான வீடியோக்களைப் பார்க்க நேரமும் இல்லை. வயதும் இல்லை.  வடதுருவ நாடுகளுக்கான  விமானப்பயணங்களில் just for a laugh பார்த்த  ஞாபகத்தில் தேடியபோது வந்தது. அதுதான் இணைத்தேன்?

56 minutes ago, Nathamuni said:

வைச்சுக் கொண்டு தானே பார்த்து ரசிச்சுக் கொண்டு, அமுசடக்கமாய் (உபயம்: ரதி அக்கா) இருந்திருக்கிறார்.... :grin:

நான் ஒருபோதும் நல்லவராக நடிப்பதில்லை. மனசில நினைக்கிறது வாயில் வார்த்தையாக வரும்; யாழில் எழுத்தாக வரும். சிலபேர் அதை rude என்று சொல்வார்கள்!

இப்ப இரண்டு வீடியோக்களை கிளிக் பண்ணிப் பார்த்ததால் என்னுடைய யூரியூப் கணக்கில குட்டைப்பாவடையோடு குனிஞ்சு நிற்கின்ற ப்ளொண்டிஸ் வீடியோக்களைப் பார் என்று கூகிள் சொல்லுது?

முன்னர் இருந்தவை  Game of Thrones, iOS hidden features, cycling and walking போன்றவை. அவை எல்லாம் பின்னுக்குப் போயிட்டுது. எனக்கு naughty old men கிளப்பில் சேர விருப்பமில்லை என்று கூகிளுக்கு சொல்லவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Nathamuni said:

 

ஏதோ  ஒரு அரபு நாட்டில் எடுக்கப் பட்ட  காணொளி போல் உள்ளது.
ஆட்களுக்கு விழுகின்ற   அடி  எல்லாம்... பயங்கர அடியாய்  இருக்கு.
ஆள்...  கையிலை அம்பிட்டால்,  செமத்தாக  வாங்கிக் காட்டியிருப்பார்.

அதிலும்... 2:45 வது,  நிமிடம் அளவில்  இறைச்சிக் கடையில் செய்த  இம்சையில்... 
கடைக்காரன் கத்தியுடன் வந்து விட்டான்  அம்பிட்டு இருந்தால்... இவரையும்  கூறு  போட்டு,  கட்டித்  தொங்க விட்டிருப்பார்கள். :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெண்களை ஒரு ஆபாச பிண்டமாக நினைக்கும் ஒரு கூட்டம் யாழிலும் இருக்கினம் 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரதி said:

பெண்களை ஒரு ஆபாச பிண்டமாக நினைக்கும் ஒரு கூட்டம் யாழிலும் இருக்கினம் 
 

உங்கள் கருத்துக்கு நன்றி. 

எய்தவர்கள் இருக்க அம்பை நோவது போல இருக்கிறது இந்த கருத்து. 

யாழில் அல்ல, ஜரோப்பாவில் C4 TV, தென் அமெரிக்காவில் Brazil TV போன்றவற்றில் உள்ளனர் என்பதே சரி.

இருப்பினும் உங்கள் பதிவு இந்த திரியின் நோக்கம் குறித்த எனது பதிலை தர, நான் காத்திருந்த, சந்தர்ப்பத்தினை அளித்துள்ளது. 

இந்த திரியின் நோக்கம், நாம் வாழும் நாடுகளில், நம்மை சுற்றி நடப்பதை தெரிந்து வாழ்கிறோமா, அல்லது கண்ணை மூடிக் கொண்டு, உலகு இருட்டு என நினைக்கும் பூணை போல வாழ்கிறோமா என அறிவது தான்.

முக்கியமாக பிள்ளைகள், அதுவும் பெண் பிள்ளைகள் வளர்ப்பவர்கள் இந்த பூணை போல வாழ நிணைத்தால் பல அதிர்சிக்களை தவிர்க்க முடியாது போகும்.

பூட்டிய அறையில், பிள்ளை படிக்குது என்று பெற்றோர் இருக்க, கைத்தொலைபேசி ஊடாக, வெளியுலக தொடர்பில் பிள்ளை இருக்கும். பெத்தவர்களுக்கு தெரியாத, புரியாத, Instagram, Snap-chat என அவர்களது தொடர்பு உள்ளது.

இந்த வகை வலைத் தொடர்பு, ஒரு கொலையில் முடிந்ததை நாம் பார்த்தோம். அந்த தாய் தந்தையர் இன்னும் அதிர்வில் இருந்து மீளவில்லை.

இந்த இணைய வழி தொடர்பு பெரும் நிணைக்கவே முடியாத பெரும் சிக்கல்களை தருவதுடன், ஆண் நண்பரின் தொடர் வற்புறுத்துதலில், சில extremely intimate, படங்கள் அந்த நண்பர் பார்வைக்கு மட்டும் என இன்டர்நெட் ஊடக போய்... பின்னர் இருவரும் பிரிந்ததும், இணைய வெளியில் பகிரப் படுகின்றன.

இந்த வகையில் மான்செஸ்டர் நகரில் ஒரு பெண் பிள்ளையை போலீசார் கைது செய்து எச்சரித்து அனுப்பி உள்ளனர். அதாவது ஒரு extremely intimate படத்தினை முதலில் அனுப்பி சட்ட மீறலில் அவர் ஈடுபடடார் என போலீசார் வீட்டுக்கு வந்தனர். 

படமும் இணையத்தில், போலீசாரும் பின்னால்... அந்த தாய், தந்தைக்கு எப்படி இருந்திருக்கும்?

இவ்வளவுக்கும், பையனின் தாய் தந்தையரே போலீசுக்கு போய் இருந்தனர். தமது மகன் extremely intimate image கைத்தொலைபேசியில் வைத்துருந்தார் என எப்போதாவது கைதாக கூடாது என, முன் எச்சரிக்கையாக வந்து இருந்தனர். போலீசார் விசாரித்ததில், பெண் நண்பி தான் அனுப்பி இருக்கிறார். ஆண் நண்பர் வற்புறுத்துதலில் தான் என சட்டத்தினை நம்ப வைக்க முடியாது என்ற வகையில் அந்த 15 வயது சிறுமி எச்சரிக்கை செய்யப்பட்டார்.

அது மட்டுமல்ல, பெண்பிள்ளைகள் இப்படியான படங்களை சமூக வலை ஊடகங்கள் மூலம் அனுப்புவது தண்டனைக்குரிய குற்றம் என போலீசார் பத்திரிகையாளரை கூட்டி சொல்லி உள்ளனர் (Sending indecent images of a child via internet is a criminal offence). ஆண்... நான் கேட்க்கவில்லை... அவோ தான்... தன் பாட்டுக்கு அனுப்பினவோ என்று சொல்லி தப்பி விடுவார். பெண் பிள்ளைகளின் படங்களைக் கேட்பது ஆண் பிள்ளைகளின் passion ஆக உள்ளது. ஆனால் சட்டம், யார் அனுப்பினார்களோ அவர்களைத்தான் தண்டிக்கும். பெண் 17 வயதுக்கு மேலானால் வழக்கும், தண்டனையும் நிச்சயம். 

இந்த செய்தி எத்தனை தமிழ் தாய் தகப்பனுக்கு தெரியும்? விஜய் டிவி யும், சூப்பர் சிங்கரும்.... வாழும் நாட்டு செய்தி சொல்லாது.

இது வெள்ளையர் குடும்பங்கள் தான் என்று யாரும் சொல்லலாம். 

ஆனால்... தமிழ் குடும்பங்களில் தாராளமாக நடக்கின்றன. மேலே லண்டனில் ஒரு தந்தை தூக்கில் தொங்கின்னார் என மேலோட்டமாக சொல்லி இருந்தேன். அவர் உண்மையில் மகளின் காதலுக்கு மறுப்பு தெரிவித்து இருந்தார். 

மகளின், ஆண் நண்பரோ, தனது மொபைலில் உள்ள படங்களைக் காட்டி.... உங்கள் மகள் அனுப்பியது.... நாம் அந்தளவு தூரம் காதலில் உள்ளோம் என சொல்ல..... மானம் போய்விட்டதாக கருதி...தந்தை அந்த முடிவினை எடுத்திருந்தார்.

இதெல்லாம் ஆபாசம், இங்கே பதிக்கிறீர்களே என்றால்... நாம் படிப்பறிவில்லாத இவர்கள் போன்ற தந்தைக்கோ, தாய்க்கோ இங்குள்ள நிலைமைகளை புரிய வைப்பது எப்படி? 

என்னைப் பொறுத்த வரை சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் தெரிந்த குடும்பங்களுக்கு இந்த விபரங்களை சொல்லி, பெண் பிள்ளைகளை கவனமாக இருக்குமாறு சொல்லுங்கள் என உதவுகிறேன்.

இந்த பெண் சாலோட் சர்ச், வேல்ஸ் நாட்டு அழகிய பாடகி...17 வயது இளம் பெண்ணாக இருக்கும் போது... தனது அப்போதைய ரகர் வீரரான, காதலனுக்கு... முன்னழகு படத்தினை அனுப்பி இருந்தார்... அது காதலன் தொலைபேசியில் இருந்து... (திருடப்பட்டதாக சொல்லப் பட்டது) உலகம் முழுக்க பரவ.... அம்மணி... அப்செட் ஆக இருந்தார். பாடுவதை விட்டார். அந்த காதலனையும் உதறினார்.

நல்ல வேளையாக அந்த நேரத்தில் இந்த சட்டம் இல்லாததால் 17 வயது இளம் பெண் தப்பித்தார்.

Image result for charlotte church

ஆகவே... இந்த பத்தாம் பசலி தனமான கருதியலை விடுத்து... நிதர்சனத்துக்கு வரவேண்டும் நமது சமூகம் என்பதே நோக்கம்...

ஐயையோ... இதுகள் ஆபாசம்... என் காதுகளில் விழக்கூடாது... கண்ணில் படக் கூடாது என்று இருந்தால்... பிள்ளைகள் வளர்க்கும் போது... ஒரு நாள் போலீசார் கதவினை தட்டக் கூடும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோல்ட் டிக்கெர் பிராங்க் என்பது... ஒருவர் வசதி இல்லாதவர் என்று நிராகரிப்பதும்.... வசதியானவர் என்று தெரிந்ததும்... ஒட்டிக் கொள்ள முனைவது...

இங்கே செவிடராக, குருடராக, நடக்க முடியாதவராக ஒருவர் நடிக்கிறார். வெவ்வேறு பெண்களும் நிராகரிக்கின்றனர்... ஒவ்வொரு  முறையும் அவர் பணக்காரர் என தெரிய வர ஒட்டிக் கொள்ள முனைகின்றனர். அவிந்து போகின்றனர்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, Nathamuni said:

உங்கள் கருத்துக்கு நன்றி. 

எய்தவர்கள் இருக்க அம்பை நோவது போல இருக்கிறது இந்த கருத்து. 

யாழில் அல்ல, ஜரோப்பாவில் C4 TV, தென் அமெரிக்காவில் Brazil TV போன்றவற்றில் உள்ளனர் என்பதே சரி.

இருப்பினும் உங்கள் பதிவு இந்த திரியின் நோக்கம் குறித்த எனது பதிலை தர, நான் காத்திருந்த, சந்தர்ப்பத்தினை அளித்துள்ளது. 

இந்த திரியின் நோக்கம், நாம் வாழும் நாடுகளில், நம்மை சுற்றி நடப்பதை தெரிந்து வாழ்கிறோமா, அல்லது கண்ணை மூடிக் கொண்டு, உலகு இருட்டு என நினைக்கும் பூணை போல வாழ்கிறோமா என அறிவது தான்.

முக்கியமாக பிள்ளைகள், அதுவும் பெண் பிள்ளைகள் வளர்ப்பவர்கள் இந்த பூணை போல வாழ நிணைத்தால் பல அதிர்சிக்களை தவிர்க்க முடியாது போகும்.

பூட்டிய அறையில், பிள்ளை படிக்குது என்று பெற்றோர் இருக்க, கைத்தொலைபேசி ஊடாக, வெளியுலக தொடர்பில் பிள்ளை இருக்கும். பெத்தவர்களுக்கு தெரியாத, புரியாத, Instagram, Snap-chat என அவர்களது தொடர்பு உள்ளது.

இந்த வகை வலைத் தொடர்பு, ஒரு கொலையில் முடிந்ததை நாம் பார்த்தோம். அந்த தாய் தந்தையர் இன்னும் அதிர்வில் இருந்து மீளவில்லை.

இந்த இணைய வழி தொடர்பு பெரும் நிணைக்கவே முடியாத பெரும் சிக்கல்களை தருவதுடன், ஆண் நண்பரின் தொடர் வற்புறுத்துதலில், சில extremely intimate, படங்கள் அந்த நண்பர் பார்வைக்கு மட்டும் என இன்டர்நெட் ஊடக போய்... பின்னர் இருவரும் பிரிந்ததும், இணைய வெளியில் பகிரப் படுகின்றன.

இந்த வகையில் மான்செஸ்டர் நகரில் ஒரு பெண் பிள்ளையை போலீசார் கைது செய்து எச்சரித்து அனுப்பி உள்ளனர். அதாவது ஒரு extremely intimate படத்தினை முதலில் அனுப்பி சட்ட மீறலில் அவர் ஈடுபடடார் என போலீசார் வீட்டுக்கு வந்தனர். 

படமும் இணையத்தில், போலீசாரும் பின்னால்... அந்த தாய், தந்தைக்கு எப்படி இருந்திருக்கும்?

இவ்வளவுக்கும், பையனின் தாய் தந்தையரே போலீசுக்கு போய் இருந்தனர். தமது மகன் extremely intimate image கைத்தொலைபேசியில் வைத்துருந்தார் என எப்போதாவது கைதாக கூடாது என, முன் எச்சரிக்கையாக வந்து இருந்தனர். போலீசார் விசாரித்ததில், பெண் நண்பி தான் அனுப்பி இருக்கிறார். ஆண் நண்பர் வற்புறுத்துதலில் தான் என சட்டத்தினை நம்ப வைக்க முடியாது என்ற வகையில் அந்த 15 வயது சிறுமி எச்சரிக்கை செய்யப்பட்டார்.

அது மட்டுமல்ல, பெண்பிள்ளைகள் இப்படியான படங்களை சமூக வலை ஊடகங்கள் மூலம் அனுப்புவது தண்டனைக்குரிய குற்றம் என போலீசார் பத்திரிகையாளரை கூட்டி சொல்லி உள்ளனர் (Sending indecent images of a child via internet is a criminal offence). ஆண்... நான் கேட்க்கவில்லை... அவோ தான்... தன் பாட்டுக்கு அனுப்பினவோ என்று சொல்லி தப்பி விடுவார். பெண் பிள்ளைகளின் படங்களைக் கேட்பது ஆண் பிள்ளைகளின் passion ஆக உள்ளது. ஆனால் சட்டம், யார் அனுப்பினார்களோ அவர்களைத்தான் தண்டிக்கும். பெண் 17 வயதுக்கு மேலானால் வழக்கும், தண்டனையும் நிச்சயம். 

இந்த செய்தி எத்தனை தமிழ் தாய் தகப்பனுக்கு தெரியும்? விஜய் டிவி யும், சூப்பர் சிங்கரும்.... வாழும் நாட்டு செய்தி சொல்லாது.

இது வெள்ளையர் குடும்பங்கள் தான் என்று யாரும் சொல்லலாம். 

ஆனால்... தமிழ் குடும்பங்களில் தாராளமாக நடக்கின்றன. மேலே லண்டனில் ஒரு தந்தை தூக்கில் தொங்கின்னார் என மேலோட்டமாக சொல்லி இருந்தேன். அவர் உண்மையில் மகளின் காதலுக்கு மறுப்பு தெரிவித்து இருந்தார். 

மகளின், ஆண் நண்பரோ, தனது மொபைலில் உள்ள படங்களைக் காட்டி.... உங்கள் மகள் அனுப்பியது.... நாம் அந்தளவு தூரம் காதலில் உள்ளோம் என சொல்ல..... மானம் போய்விட்டதாக கருதி...தந்தை அந்த முடிவினை எடுத்திருந்தார்.

இதெல்லாம் ஆபாசம், இங்கே பதிக்கிறீர்களே என்றால்... நாம் படிப்பறிவில்லாத இவர்கள் போன்ற தந்தைக்கோ, தாய்க்கோ இங்குள்ள நிலைமைகளை புரிய வைப்பது எப்படி? 

என்னைப் பொறுத்த வரை சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் தெரிந்த குடும்பங்களுக்கு இந்த விபரங்களை சொல்லி, பெண் பிள்ளைகளை கவனமாக இருக்குமாறு சொல்லுங்கள் என உதவுகிறேன்.

இந்த பெண் சாலோட் சர்ச், வேல்ஸ் நாட்டு அழகிய பாடகி...17 வயது இளம் பெண்ணாக இருக்கும் போது... தனது அப்போதைய ரகர் வீரரான, காதலனுக்கு... முன்னழகு படத்தினை அனுப்பி இருந்தார்... அது காதலன் தொலைபேசியில் இருந்து... (திருடப்பட்டதாக சொல்லப் பட்டது) உலகம் முழுக்க பரவ.... அம்மணி... அப்செட் ஆக இருந்தார். பாடுவதை விட்டார். அந்த காதலனையும் உதறினார்.

நல்ல வேளையாக அந்த நேரத்தில் இந்த சட்டம் இல்லாததால் 17 வயது இளம் பெண் தப்பித்தார்.

Image result for charlotte church

ஆகவே... இந்த பத்தாம் பசலி தனமான கருதியலை விடுத்து... நிதர்சனத்துக்கு வரவேண்டும் நமது சமூகம் என்பதே நோக்கம்...

ஐயையோ... இதுகள் ஆபாசம்... என் காதுகளில் விழக்கூடாது... கண்ணில் படக் கூடாது என்று இருந்தால்... பிள்ளைகள் வளர்க்கும் போது... ஒரு நாள் போலீசார் கதவினை தட்டக் கூடும். 

 

நீங்கள் சொன்ன கருத்து நல்ல கருத்து நாதமுனி ஆனால் இந்தத் திரிக்கு எவ்வாறு பொருந்தும் எனது தெரியவில்லை

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.