Jump to content

இலங்கை வர்த்தகர்களை அழைக்கப்போகிறதா அலிபாபா?


Recommended Posts

இலங்கை வர்த்தகர்களை அழைக்கப்போகிறதா அலிபாபா?
அனுதினன் சுதந்திரநாதன் /

 

இன்றைய இலங்கையில் இணைய வணிகமென்பது மிக விரைவாக வளர்ச்சியடைந்து வருகின்ற வணிகமாகும். ஏனைய தெற்காசிய நாடுகளுடன் ஒப்பிடுமிடத்து, மிக முன்னேற்றகரமானத் தொழில்நுட்ப வசதிகளும் இணைய அறிவும், இந்த வளர்ச்சிக்கு உச்சதுணையாக அமைந்திருக்கிறது. இதன் காரணமாக, வருடாவருடம் இலங்கையின் இணையவழி வணிகமானது, இருமடங்காக அதிகரித்துச் செல்வதாகக் குறிப்பிடப்படுகிறது. இதன் விளைவாக, இலங்கையின் பல்வேறு பொருட்கள் மற்றும் சேவைகளை வாங்குபவர்களும் விற்பனை செய்பவர்களும், இணையவழி வர்த்தகத்தை நோக்கி நகர ஆரம்பித்துள்ளார்கள். இந்த நிலையில், இவ்வாறு வளர்ச்சியடையும் வணிகத்ைத நம்பியிருக்கும் வணிகர்களை நேரடியாகவோ, மறைமுகமாகவோ, சீனாவின் மிகப்பெரும் வணிக நிறுவனமான அலிபாபா, நெருக்கடிக்குள் தள்ளவோ அல்லது அவர்கள் வணிகத்ைத மெல்ல மெல்ல ஏப்பமிட்டு, இலங்கையின் இணையவழி வர்த்தகம் மூலமாக, அந்த வர்த்தகர்களை ஏப்பமிட்டுக் கொள்ளவோ இருக்கிறது என்பது, இலங்கையின் சிறிய மற்றும் நடுத்தர வணிகர்களுக்கு கசப்பான செய்தியே! 

அலிபாபா நிறுவனமானது, சீனாவில் 1999ஆம் ஆண்டில் ஜாக் மா (Jack Ma)அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பத்தில், சீனாவிலுள்ள வாடிக்கையாளர்களையும் - வணிகர்களையும், அதுபோல வணிகர்களையும் - வணிகர்களையும் ஒன்றிணைக்கும் இணையத்தளமாக, அலிபாபா செயற்படத் தொடங்கியிருந்தது. ஆனால், குறித்த முயற்சிக்குக் கிடைத்த வெற்றியும் வரவேற்பும், அலிபாபாவின் வணிகத்ைத எல்லைகளைக் கடந்து விரிவாக்கம் செய்ததுடன், அலிபாபா எனும் குழும நிறுவனத்தை ஆரம்பித்து, வெவ்வேறு வணிகங்களிலும் கால்பரப்ப, ஜாக் மாவுக்கு உதவி செய்தது என்பது மிகையல்ல. இன்றைய நிலையில், அலிபாபா குழுமத்தின் பெறுமதி, 542 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். அதுபோல, அலிபாபா இணையத்தளம், சீனாவிலுள்ள உற்பத்தியாளர்களை உலகின் மூலைமுடுக்கெடுக்கலாம் கொண்டுசேர்க்கும் இணையத்தளமாக மாறியிருக்கிறது.  

குறிப்பாக, இலங்கைக்கு வருகின்ற 80%க்கும் அதிகமான சீன தயாரிப்புக்கள் அனைத்துமே, அலிபாபா இணையத்தளம் வாயிலாக அறிமுகம் செய்யப்பட்ட உற்பத்தியாளர்கள் வாயிலாக விரிவாக்கம் பெற்ற வணிகங்கள் ஆகும். இலத்திரனியல் உபகரணங்கள் முதல்கொண்டு, பெருவாரியான தயாரிப்புக்கள் அனைத்துமே, சீனாவிலிருந்து வருகின்ற நிலையில், இடைத்தரகர்களை நீக்கி, அலிபாபா நிறுவனமே இலங்கைக்கு நேரடியாக உற்பத்திகளையும், தயாரிப்புக்களையும் கொண்டுவருமாயின், நமது வணிகர்களின் நிலை என்னவாகும் எனச் சிந்தித்து பாருங்கள். 

இலங்கையின் முன்னணி இணையவழி நிறுவனமான Daraz (https://www.daraz.lk/) நிறுவனத்தின் தாய்நிறுவனத்தைதத் தனது அலிபாபா குழுமத்தின் வாயிலாகக் கொள்வனவு செய்ததன் மூலமாக, அலிபாபா இணையச் சந்தை நிறுவனமானது, இலங்கைக்குள் கால் பதித்துள்ளது. இன்றைய நிலையில், Daraz தெற்காசிய இணையச் சந்தையில் இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ் உட்பட பல்வேறு நாடுகளில், தனது வணிகத் தளத்தைக் கொண்டுள்ளது. எனவே, அலிபாபா நிறுவனம் குறித்த நிறுவனத்தைக் கொள்வனவுச் செய்தமை, அலிபாபாவை மிக இலகுவாக அனைத்து நாடுகளுக்கும் கொண்டுச் சேர்க்க இலகுவாக உதவி புரியும். இதன்மூலமாக, அலிபாபா நிறுவனம், அனைத்து நாடுகளுக்குள்ளும் தனது வணிக பரப்பை மெல்ல மெல்லமாகப் பரப்புவதுடன், தனியுரிமைச் சந்தை நிலையை உருவாக்கவும் இது வழிவகுக்க போகிறது என்பதுதான் ஆபத்தான உண்மை ஆகும். 

இலங்கையில் தற்போது Daraz நிறுவனத்தைக் கொள்வனவு செய்ததன் மூலமாக, நிர்வாக உரிமையாளராக அலிபாபா நிறுவனம் இலங்கைக்குள் கால் பதித்து இருக்கிறது. தற்போதைய நிலையில், தனது இலங்கை வணிகத்தின் நிர்வாகத்தை முன்னேற்றும் வகையிலானப் பயிற்சிகளை மாத்திரம் ஆரம்பித்துள்ளது. ஆனால், மேலதிகமாக, சந்தைத் தொடர்பிலான விரிவாக்கம் மற்றும் சந்தை நிர்வாகம் என்பவற்றை  அலிபாபா கையிலெடுக்க ஆரம்பிக்கும்போது, நிச்சயமாக இலங்கை வணிகர்கள் நிலை அச்சுறுத்தலுக்குள்ளாகப் போகிறது. 

தற்போது, இணையவழி வணிகத்தை  நடத்தும் வணிகங்களுக்கு, பெரும்பாலான உற்பத்தியாளர்கள் சீனாவிலிருந்து தருவித்தே, தமது பொருட்களை விற்பனைக்கு வழங்கி வருகிறார்கள். எந்தவொரு இலத்திரனியல் பொருட்களை எடுத்து கொண்டாலும் சரி, ஏனைய உபகரணங்களை எடுத்துகொண்டாலும் சரி அவை அனைத்துமே, இலங்கை வணிகர்களினால் பெரும்பாலும் சீனாவிலிருந்தே கொண்டு வரப்படுகிறது. பெரும்பாலும், இணைய வணிகங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்ற விலைக்கழிவுகள் மற்றும் சலுகைகள் வாயிலாகவே, வாடிக்கையாளர்களை கவருகின்றன. இதற்கு, வணிகர்கள் மிகக் குறைவான விலையில் பொருட்களைக் கொண்டுவர வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. இதற்கு, அவர்களின் ஒரே தீர்வாக, சீனத் தயாரிப்புக்களே உள்ளன. எனவே, பெரும்பாலான வணிகர்கள் தமது வணிக்கத்துக்கான சீன பொருட்களைக் கொண்டுவருவதன் மூலமாகக் கொள்ளை இலாபத்தை ஈட்டி கொள்ளுகிறார்கள். 

இந்த நிலையில், அலிபாபா நிறுவனம், இலங்கை சந்தைக்குள் உள்வருவதன் மூலமாக, சீனச் சந்தையை நேரடியாக இலங்கைக்குள் கொண்டு வர முடிவதுடன், நம்மவர்கள் இடைத்தரகர்களாக வைத்திருக்கும் இலாப அளவை விட குறைவாக இலாபத்தைக் கொண்டு, தற்போது இலங்கையிலுள்ள வணிகத்தை அடியோடு தகர்த்துவிடவும் வாய்ப்புக்கள் உள்ளன. தற்போதைய நிலையில், அலிபாபா கொள்வனவு செய்துள்ள Daraz நிறுவனத்துக்கு, இலங்கை வணிகர்களே பொருட்களை வழங்கி வருகின்றார்கள். இவர்கள் மூலமாக, இலகுவாக சந்தையில் மிக அதிகமாக கேள்விக் கொண்ட பொருட்களையும், சந்தையில் வாடிக்கையாளர்களைக் கவருவதற்கானப் பொருட்களையும் கண்டுகொள்ள, மிகநீண்டகாலம் போகாது. அதற்குப் பின், சீனாவிலிருந்து அலிபாபா நிறுவனமே நேரடியாக அத்தகைய பொருட்களை இறக்குமதி செய்யத் தொடங்கிவிட்டால், சீன சந்தையை நம்பியிருக்கும் நமது வணிகர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும் என்பதே நிதர்சனமாக உண்மை. 

ஒரு வணிகத்ைத மிகப்பெரும் முதலீட்டு நிறுவனம் மிகப்பெரும் முதலீடுகளுடன் கொள்வனவு செய்கின்றபோது, அதைச் சுற்றியுள்ள வணிகங்களும் சிறு முதலீட்டாளர்களும், இவ்வாறான சிக்கல்நிலைக்குள் மாட்டிக்கொள்ளுவது சகஜமானது. இதன்போது, பல வணிகங்கள் காட்டற்று வெள்ளத்தில் அடித்து செல்வதுபோல, காணாமல் போய்விடுகின்றது. சில வணிகங்கள் அதிலும் தப்பிப் பிழைத்து தம்மைத் தக்கணப் பாதுகாத்துக் கொள்ளுகின்றது. குறிப்பாக, இந்த நிலை ஏற்படுகின்றபோது, ஒவ்வொரு வணிகமும் தமது தனித்துவம் வாய்ந்த வணிக உத்திகளைப் பயன்படுத்திகொள்ளுவதன் மூலமாக மட்டுமே, சந்தையில் பிழைத்துக்கொள்ள முடியும். அதாவது, வெறுமனே சீனத் தயாரிப்புக்களை மாத்திரம் நம்பியிராமல், வணிகத்தின் உற்பத்திகளை பல்வகைமைபடுத்துவதுடன், வாடிக்கையாளர்களையும் அதற்குத் தகுந்தாற்போலப் பழக்கப்படுத்த வேண்டியது அவசியம். இல்லையெனில், அலிபாபா போன்ற நிறுவனங்கள் சந்தையில் தமது வணிக உத்திகளை மிகப்பெரும் முதலீட்டுடன் அமுல்படுத்தும்போது, இலங்கையின் ஒருபகுதி வணிகமும், அந்த வணிகத்தை நம்பியுள்ளவர்களும் காணாமல் போவதைத்  தவிர்க்க இயலாது.    

http://www.tamilmirror.lk/business-analysis/இலங்கை-வர்த்தகர்களை-அழைக்கப்போகிறதா-அலிபாபா/145-221902

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
    • தோற்றாலும் வென்றாலும் அரசியல் தனித்தன்மையோடு தனித்து நிற்கும்.. அண்ணன் சீமானின் முடிவு வரவேற்கத்தக்கது. மேலும்.. மைக் சின்னத்தில்.. சம பால்.. சமூக பகிர்வுகளோடு.. அண்ணன் தேர்தலை சந்திக்க வாழ்த்துக்கள்.  வீரப்பனின் மகளுக்கு அளித்த வாய்ப்பு நல்ல அரசியல் முன்னுதாரணம். வீரப்பன் ஒரு இயற்கை வள திருடல் குற்றவாளி ஆகினும்.. அதில் அவரின் அப்பாவி மகளுக்கு எந்தப் பங்களிப்பும் இல்லாத நிலையில்.. அவர் அரசியல்.. சமூகப் புறக்கணிப்புக்கு உள்ளாவது ஏற்கக் கூடியதல்ல. நாம் தமிழர் அதனை தகர்த்திருப்பது நல்ல முன் மாதிரி. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.