Jump to content

மீண்டுமொரு இனப் பிரச்சினைக்கு இடமளிக்க மாட்டோம் - ஜனாதிபதி


Recommended Posts

மீண்டுமொரு இனப் பிரச்சினைக்கு இடமளிக்க மாட்டோம் - ஜனாதிபதி

 

 
 

மீண்டுமொரு இனப் பிரச்சினைக்கு இடமளிக்காது வடக்கு, கிழக்கு மக்களின் அபிவிருத்தி‍ உரிமைகளை பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறினே தெரிவித்தார்.

my6.jpg

my3.jpg

திருகோணமலை மாவட்டத்தில் பாரிய அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்காக ஆரம்பிக்கப்பட்ட “சிறிசர பிவிசும” அபிவிருத்தி செயற்திட்டத்தின் ஊடாக நிறைவு செய்யப்பட்ட பல திட்டங்கள் இன்று மக்களிடம் கையளித்து வைத்து உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு  கூறினார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி,

my5.jpg

my1.jpg

1947 முதல் ஆட்சியமைத்த அனைத்து அரசாங்கங்களும் தங்களது இருப்பை தக்க வைத்துக்கொள்வதற்காக மட்டுமே வடக்கு, கிழக்கு மக்களின் பிரதிநிதிகளை பயன்படுத்திக் கொண்டார்களே தவிர, அம்மக்களின் பொருளாதார மற்றும் அபிவிருத்தி பிரச்சினைகளை தீர்க்கக்கூடிய அரசியல் பின்புலத்தை அமைக்கவில்லை.

வடக்கு, கிழக்கு இனப் பிரச்சினைக்கு பல விடயங்கள் அடிப்படையாக இருந்தபோதிலும் தகுந்த அரசியல் தலைமை அப் பிரதேசங்களில் பிரதிபலிக்காதது முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

ஒரு மாகாணத்தை, அபிவிருத்தியை நோக்கி கொண்டு செல்வதற்கு அம்மாகாணத்தில் குறைந்தபட்சம் ஓரு அமைச்சரவை அமைச்சுப் பதவியாவது வழங்கப்பட வேண்டும் அப்போதே நாட்டை பிளவுபடுத்தாத அதிகாரப் பகிர்வு எனப்படும் எண்ணக்கரு யதார்த்தமாகம்.

மன்னர்களின் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட வாவிகளை மையமாகக் கொண்ட நீர்ப்பாசன கலாசாரத்தினால் விவசாய அபிவிருத்தியின் ஊடாக கிராமிய பொருளாதாரம் சுபீட்சம் பெற்றிருந்ததுடன், தற்போதைய அரசாங்கமும் குளங்களின் புனரமைப்பு பணிகளுக்கு முக்கியத்துவம் அளித்துள்ளதாக மேலும் தெரிவித்தார். 

“சிரிசர பிவிசும” நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்ட கோமரங்கடவல பக்மீகம குளத்தை மக்களிடம் கையளித்தல், நீண்டகாலமாக இருந்துவரும் யானைகளுக்கும் மனிதர்களுக்குமிடையிலான மோதலுக்கு தீர்வை வழங்கும் வகையில் கோமரங்கடவல பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 30 கிலோமீற்றர் நீளமான யானை வேலியை திறந்து வைக்கும் நிகழ்வுகளும் இன்று ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்றது. 

my4.jpg

“சிரிசர பிவிசும” செயற்திட்டத்தின் கீழ் குளங்களை புனரமைத்தல், யானை வேலிகளை நிர்மாணித்தல், வீதி புனரமைப்பு ஆகியவை இடம்பெறுகின்றன. இவ்வேலைத்திட்டங்கள் இலங்கை இராணுவத்தினரின் பங்களிப்புடன் இடம்பெறுகின்றது. 

“சிரிசர பிவிசும” வேலைத்திட்டத்திற்காக ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய ஜனாதிபதி செயலகத்தால் 5000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், அந்த நிதியினால் திருகோணமலை மாவட்டத்தில் 40 குளங்கள் புனரமைக்கப்பட்டுள்ளது. அச் செயற்திட்டத்தின் கீழ் இடம்பெற்ற பக்மீகம குளத்தின் புனரமைப்பிற்காக 11 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. நினைவுப் பலகையை திறந்து வைத்து புனரமைக்கப்பட்ட குளத்தை மக்களிடம் ஜனாதிபதி கையளித்தார்.

my7.jpg

my2.jpg

தொடர்ந்து இடம்பெற்ற வைபவத்தில் கந்தளாய் ஆதார வைத்தியசாலைக்கு 30 மில்லியன் ரூபா பெறுமதியான வைத்திய உபகரணங்களை ஜனாதிபதி அவர்கள் வைத்திய நிபுணர் டீ.ஜீ.எம்.கொஸ்தாவிடம் கையளித்தமை குறிப்பிடத்தக்கது. 

http://www.virakesari.lk/article/40863

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் ஒரு இனப்பிரச்சனையா..??! இனப்பிரச்சனையையே புலிகளின் பிரச்சனை என்றாக்கிட்டாங்களே..??! 

இனப்பிரச்சனை என்பது புலிகளுக்கு முந்தி இருந்தே இருக்குதுன்னு எடுத்துச் சொல்லுங்கப்பா. அது இன்னும் இருக்குது.. தொடருது. அதுக்குத்தான் தீர்வு கேட்டு புலிகளும் போராடினார்கள்.. இப்போ தமிழ் மக்களும் சமத்துவமான உரிமை கொண்டமையும்.. அரசியல் தீர்வுன்னு கோரிக்கொண்டிருக்கிறார். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நவீனன் said:

மீண்டுமொரு இனப் பிரச்சினைக்கு இடமளிக்க மாட்டோம் - ஜனாதிபதி

அப்ப இப்ப என்ன பிரச்சனை சிறிலங்காவிலை இருக்குதப்பா????? :rolleyes:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.