Jump to content

“சம்பந்தன் தனது பதவியை ஒரு நாள் தந்தால் அதன் பெறுமதியை உணர்த்துவேன்”


Recommended Posts

“சம்பந்தன் தனது பதவியை ஒரு நாள் தந்தால் அதன் பெறுமதியை உணர்த்துவேன்”

Sambathan-sankari.jpg?resize=800%2C444

“தமிழத்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தனது எதிர்க் கட்சி தலைவர் பதவியை ஒரு நாள் எனக்கு தந்தால்  அப்பதவியின் பெறுமதியை உணர்த்துவேன்.அப்பதவி மூலம் என்னவெல்லாம் செய்யலாம் என்பதனை காட்டுவேன்” என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

 

இன்று (20-09-2018) கிளிநொச்சியில் அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அவர், தமிழ் அரசியல் கைதிகள் விடயம் தொடர்பில் தான் 2004ம் ஆண்டு முதல் யுத்தம் இடம்பெற்றுக்கொண்டிருக்கையிலேயே வலியுறுத்தி வந்துகொண்டிருப்பதாகவும், ஆனால் இன்று அரசாங்கத்திற்கு ஆதரவளித்துக்கொண்டுள்ள சம்பந்தன் தலைமையிலானவர்கள் இவர்கள் விடயத்தில் அக்கறை செலுத்துவதாக தெரியவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் சரத்தில் உள்ளவாறு தமிழ் அரசியல் கைதிகள் பொது மன்னிப்படிப்படையில் விடுதலை செய்யப்பட வேண்டும் என ஒப்பந்தம் சுட்டிக்காட்டுகின்றது. எனினும் அரசாங்கத்தின் சலுகைகளை அனுபவித்துவரும் கூட்டமைப்பினர், கைதிகளின் விடுதலை தொடர்பில் வலியுறுத்த தவறியுள்ளனர். அரசாங்கத்தை தாம்தான் காப்பாற்றுவதாகவும், தம்மால்தான் அரசாங்கம் உருவாக்கப்பட்டது எனவும் அடிக்கடி கூறிக்கொள்ளும் சம்பந்தன், பிரதமருடனும், ஜனாதிபதியுடனும் அரசியல் கைதிகள் விடயத்தில் பேசப்போவதாக இப்போதுதான் சொல்கின்றார் எனின், இதுவரை இவர்கள் என்ன செய்தார்கள் எனக் கேள்வி எழுப்பி உள்ளார்.

நாளுக்கு நாள் பொருட்கள் சேவைகளின் விலைகள் அதிகரிக்கரித்துச் செல்கிறது ,ஆனால் பொறுப்புள்ள எதிர்க்கட்சி வாயை மூடிக்கொண்டு அமைதியாக இருக்கிறது. சம்பந்தன் அவர்களுக்கு இவ்வாறு அமைதியாக இருக்கவே இந்தப் பதவி வழங்க்கப்பட்டிருக்கிறது எனக் குறிப்பிட்ட ஆனந்தசங்கரி இன்று சமஸ்டி தொடர்பில் பேசுகின்றார்கள். ரணில் விக்ரமசிங்க அன்று தனது தேர்தலில் சமஸ்டியை முன்வைத்து போட்டியிட்டார். அக் காலத்தில் பல்வேறு தரப்பினரிடமும் பணத்தை பெற்றுக்கொண்ட தமிழ்தேசியக் கூட்டமைப்பு ரணிலுக்கு வாக்களிக்க வேண்டாம் என பிரச்சாரம் செய்தனர்.அவ்வாறு இருந்தபோதும் 49 வீதமான மக்கள் சமஸ்டிக்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர்.

அத்தோடு இறுதி யுத்தத்தை தலைமைதாங்கி நடத்திய படைத்தளபதியான சரத்பொன்சேகா 2009 மே மாதம் பிரபாகரனை கொன்றுவிட்டதாக அறிவித்தார். அதே சரத்பொன்சேகாவுக்கு 2010 ஜனவரியில் வாக்களிக்குமாறு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களிடம் கேட்டுக்கொண்டனர் எனவும் தெரிவித்தார்

http://globaltamilnews.net/2018/96426/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, நவீனன் said:

அத்தோடு இறுதி யுத்தத்தை தலைமைதாங்கி நடத்திய படைத்தளபதியான சரத்பொன்சேகா 2009 மே மாதம் பிரபாகரனை கொன்றுவிட்டதாக அறிவித்தார். அதே சரத்பொன்சேகாவுக்கு 2010 ஜனவரியில் வாக்களிக்குமாறு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களிடம் கேட்டுக்கொண்டனர் எனவும் தெரிவித்தார்

ஐயோ ஐயோ எங்கிருந்து கிளம்பி வருகிரான்களோ தெரியலையே இன்னும் ஒரே ஒரு முறை இந்த தமிழ் சனத்தை பேய்க்காட்டி தேர்தலில் வெண்டால் அடுத்த ஆசியாவின் பணக்காரனா நான் வந்துவிடுவன் அதை கெடுக்கிரதுக்கு எண்டு வந்து பிறந்து தொலைத்து இருக்கு இந்த சங்கரி வால் (சம்பந்தரின் வாய்ஸ்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, நவீனன் said:

“சம்பந்தன் தனது பதவியை ஒரு நாள் தந்தால் அதன் பெறுமதியை உணர்த்துவேன்”

ஐயோ!  உந்தாள் இப்பதான்  சங்கரின்ரை முதல்வன் படம் பார்த்திருக்கு போலை 

Link to comment
Share on other sites

18 hours ago, நவீனன் said:

“தமிழத்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தனது எதிர்க் கட்சி தலைவர் பதவியை ஒரு நாள் எனக்கு தந்தால்  அப்பதவியின் பெறுமதியை உணர்த்துவேன்.

ஒருநாள்ல சம்பந்தனுக்கு உடும்பு பிடிக்க கற்றுக்கொடுப்பாரோ?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது .
    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.