Jump to content

ஆவா குழுவை 2 நாட்களுக்குள் அடக்குவோம் ; சட்டத்தை மதித்தே பொறுமை காக்கின்றோம் - யாழ்.மாவட்ட இராணுவத் தளபதி


Recommended Posts

ஆவா குழுவை 2 நாட்களுக்குள் அடக்குவோம் ; சட்டத்தை மதித்தே பொறுமை காக்கின்றோம் - யாழ்.மாவட்ட இராணுவத் தளபதி 

Published by Daya on 2018-09-20 14:37:05

 

ஆவா குழுவை இரண்டு நாட்களுக்குள் அடக்குவோம். நாட்டின் சட்டம் ஒழுங்கு என்பவற்றை மதித்தே பொறுமையாக இருக்கின்றோம் என யாழ்.மாவட்ட இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

பலாலி இராணுவ தலைமையகத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் ,

நாட்டில் தற்போது சட்டம் ஒழுங்கு என்பன பொலிஸாரிடம் உள்ளன. அதனால் அவற்றில் நாம் தலையிடுவதில்லை. 

யாழில் உள்ள ஆவா குழு போன்ற கோஸ்டிகளை அடக்குவது எமக்கு பெரிய சவால் இல்லை இரண்டு நாளுக்குள் அடக்கி விடுவோம். 

Darsana_Hettiarachchi.jpg

பொலிஸாரினால் அவர்களை அடக்க முடியாது என இராணுவத்தின் உதவியை நாடினால் உதவ நாம் தயாராக உள்ளோம்.

தற்போதைய சூழ்நிலையில் வன்முறையில் ஈடுபடும் இளைஞர்களை இராணுவத்தினர் கைதுசெய்து பொலிஸாரிடம் ஒப்படைத்தால், இராணுவம் தமிழ் இளைஞர்களை கைது செய்கிறார்கள் என இராணுவத்தின் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைப்பார்கள். அதனால் பொறுமையாக இருக்கின்றோம்.

அதற்காக தொடர்ந்து இவ்வாறான வன்முறைச் சம்பவங்களை நாம் பொறுமையாக பார்த்துக்கொண்டிருக்க முடியாது. ஜனாதிபதியிடம் யாழில் நடக்கும் வன்முறைகளை கட்டுக்குள் கொண்டுவர இராணுவத்தினருக்கு அனுமதியளிக்க வேண்டும். அதற்கான அனுமதிக்காக காத்திருக்கிறோம் என மேலும் தெரிவித்தார்.

http://www.virakesari.lk/article/40817

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.