Jump to content

சர்வதேச சுற்றுலா தின தேசிய நிகழ்வு இம்முறை யாழில்


Recommended Posts

சர்வதேச சுற்றுலா தின தேசிய நிகழ்வு இம்முறை யாழில்

 

 
 

‘சுற்றுலாவும் டிஜிற்றல் பரிமாற்றமும்’ எனும் தொனிப்பொருளில் சர்வதேச சுற்றுலா தின தேசிய நிகழ்வு இம்முறை யாழ் மாவட்டத்தில் பிரமாண்டமாக முன்னெடுக்கப்படவுள்ளதாக வடமாகாண சுற்றுலாப் பணியகம் அறிவித்துள்ளது.

worl_tourusm.jpgயாழ் மாவட்டத்தில் எதிர்வரும் 26, 27, 28ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள சுற்றுலா தின நிகழ்வு தொடர்பில் வட மாகாண சுற்றுலா பணியக அதிகாரிகள் உடனான ஊடக சந்திப்பு நேற்று வடக்கு மாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்டு குறித்த நிகழ்வு தொடர்பில் விளக்கமளித்த வட மாகாண சுற்றுலாப் பணியகத்தின் தலைவர் பேராசிரியர் க.தேவராஜா, ‘மத்திய அரசின் சுற்றுலா மற்றும் கிறிஸ்தவ மத விவகார அமைச்சின் அனுசரனையுடன் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையும், வடமாகாண சுற்றுலாப் பணியகமும் இணைந்து இந்த ஆண்டுக்கான உலக சுற்றுலா தினத்தை யாழ்ப்பாணத்தில் நடாத்தத் திட்டமிடப்பட்டுள்ளன.

நீண்ட கால யுத்தம் நிறைவுக்கு வந்த பின்னர் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு மேம்பாட்டு போக்குவரத்துக்கான வீதிகளின் புனரமைப்பும், புகையிரத சேவையின் மீள் அறிமுகமும் வட பகுதிக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கச் செய்தன.

இதன் அடிப்படையில் வடக்கு மாகாண மக்கள் சுற்றுலாத்துறையில் முதலீடுகளை மேற்கொள்ள ஆரம்பித்ததுடன், வடமாகாண முதலமைச்சின் கீழ் சுற்றுலாத்துறைகென தனியான பிரிவு உருவாக்கப்பட்டு அதனைத் திட்டமிட்ட வகையில் வளர்த்தெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

வடமாகாணத்துக்கென 2017-2020 காலப்பகுதிக்கென தந்திரோபாயத் திட்டமிடல் மேற்கொள்ளப்பட்டதுடன் 2018 யூன் மாதம் முதலாம் திகதியிலிருந்து சுற்றுலாப் பணியகம் என்ற ஓரு தனியமைப்பு உருவாக்கப்பட்டு சுற்றுலாத்துறையின் அபிவிருத்தி தொடர்பான நடவடிக்கைகள் அதனிடம் கையளிக்கப்பட்டன.

வடமாகாணத்திலுள்ள யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் சுற்றுலாத்துறையை விருத்தி செய்ய சுற்றுலாப் பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அத்துடன், தேசிய ரீதியாக உலக சுற்றுலா தினத்தை வட மாகாண சபையுடன் இணைந்து யாழ்ப்பாணத்தில் கொண்டாடுவதற்கான வாய்ப்பு இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் வழங்கப்பட்டுள்ளது.

உலக சுற்றுலா தினம் 2018ஐ இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையும், வட மாகாண சுற்றுலா பணியகமும் இணைந்து யாழ்ப்பாண மாநகர சபை மைதானத்தில் கொண்டாடுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் யாழ்ப்பாண பல்கலைக்கழகமும் இணைந்திருப்பது மகிழ்ச்சிக்குரியதாகும்.

உலக சுற்றுலா தினத்தின் தொனிப்பொருளான ‘சுற்றுலாவும் டியிற்றல் பரிமாற்றமும்’ (Tourism and Digital Transtarmation) என்பதனை மையமாகக் கொண்டு சுற்றுலாத்துறையை தகவல் தொழில்நுட்ப பரிமாற்றத்தினூடாக வளர்த்தெடுக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

உலக சுற்றுலா தினத்திற்கென கொழும்பிலிருந்து புகையிரத மார்க்கமாக தென்பகுதி ஊடகவியலாளர்களும், பொதுமக்களும் வருகை தர இருப்பதனால் வட மாகாண சுற்றுலாத் துறையின் விழிப்புணர்வு சாத்தியமாவதுடன் ஒன்பது மாகாணங்களிலிருந்தும் எடுத்துவரப்படும் சுற்றுலாத் துறையினரின் உற்பத்திகள் காட்சிக்கு வைக்கப்படவுள்ளன.

எதிர்வரும் 26ஆம் திகதி சுற்றுலாத் துறைக்கான கண்காட்சியை வட மாகாண முதலமைச்சர் சி.விவிக்னேஸ்வரன் யாழ் மாநகரசபையின் மைதானத்தில் திறந்து வைக்கவுள்ளார்.

இதன்போது எமது பிரதேச கலாச்சார நிகழ்வுகள் இடம்பெறவென மேடை அமைக்கப்பட்டிருப்பதுடன், பல்கலைக்கழக நுண்கலைப் பிரிவின் நிகழ்ச்சிகளும், வடமாகாண கல்வியமைச்சின் கலாச்சாரப் பிரிவின் நிகழ்ச்சிகளும் மேடையேற்றப்படவுள்ளன.

உலக சுற்றுலா தினமான செப்ரம்பர் 27ம் திகதி அங்குரார்ப்பண நிகழ்வுகள் யாழ் பல்கலைக்கழகத்தின் கைலாசபதி கலையரங்கில் இடம் பெறவுள்ளதுடன், மாலை Tourism and Digital Transtarmation என்ற தொனிப்பொருளின் ஆய்வரங்கு இடம்பெறும்.

இதனைத் தொடர்ந்து இரவு பல்கலைக்கழக மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன. அன்றைய தினம் சமகாலத்தில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் சர்வதேச மாநாட்டு நிகழ்ச்சிகளும் இடம்பெறவதற்கான ஓழுங்குகள் செய்யப்பட்டுள்ளன’ என தெரிவித்துள்ளார்.

http://www.virakesari.lk/article/40804

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • நீங்கள் சீமானின் அநியாயம் மட்டும் தெரிந்த பால்குடி.😂 தமிழ்நாட்டு அரசியலுடன் கலந்த  சினிமா அவலங்களை உங்களுக்காக மட்டுமே இங்கே  கொஞ்சம் கொஞ்சமாக எழுதுகின்றேன் காத்திருங்கள். 😎 யாழ் களமும்,அதன் உறுப்பினர்களும் கிணற்று தவளையல்ல என்பதை நெஞ்சில் நிறுத்திக்கொண்டு காத்திருங்கள்..
    • ஊழ‌ல் கஞ்சா திமுக்கா எத்த‌னை கூட்ட‌னி வைச்சு தேர்த‌ல‌ ச‌ந்திக்குது...................சீமானின் க‌ட்சி த‌னித்து அதை நினைவில் வைத்து இருங்கோ இதே சீமான் ஆதிமுக்கா கூட‌ கூட்ட‌னிக்கு போய் இருந்தால் 1000கோடி காசும் 10 தொகுதியும் குடுத்து இருப்பின‌ம் நாம் த‌மிழ‌ர் 40 இட‌ங்க‌ளில் தோத்தாலும் நேர்மைக்கு கிடைச்ச‌ தோல்வி........................ஊட‌க‌ ப‌ல‌ம் இல்லை ப‌ண‌ ப‌ல‌ம் இல்லை..............ஊட‌க‌ங்க‌ளில் 4ங்கு முனை போட்டி என்று காட்டாம‌ வெறும‌ன‌ 3மூனை போட்டி என்று போடுவ‌து சீமானை வ‌சை பாட‌ 200ரூபாய் கொத்த‌டிமைக‌ளை இற‌க்கி இருக்கின‌ம் கொத்த‌டிமைக‌ள் வேண்டுற‌ காசுக்கு மேல‌ கூவுங்க‌ள் ஹா ஹா 65வ‌ருட‌ க‌ட்சி ஜ‌ரிம்க்கு  200ரூபாய் கொடுத்து அவ‌தூற‌ ப‌ர‌ப்ப‌ விடுவ‌து........................ இப்ப‌டி சொல்லிட்டு போக‌லாம் திமுக்கா ப‌ண‌த்தை ந‌ம்பி தான் தேர்த‌ல‌ ச‌ந்திக்கிற‌து இவ‌ர்க‌ள் ஆட்சிக்கு வ‌ந்து இந்த‌ மூன்று ஆண்டுக‌ளில் எவ‌ள‌வு ஊழ‌ல்க‌ள் க‌ஞ்சா மோசடி பொன்மொடி சிறை போக‌ வேண்டிய‌வ‌ர் தேர்த‌ல் டீலிங்கை பிஜேப்பி கூட‌ பேசி த‌ப்பிச்சிட்டார் சிறைக்கு ப‌ய‌ந்து த‌மிழ் நாட்டில் ம‌றைவுக‌மாய் பிஜேப்பிய‌ திமுக்கா வ‌ள‌த்து விடுது ஹா ஹா.....................................
    • சினிமா காலத்தை வைத்து பார்த்தால் கருணாநிதியே ஆட்சி கதிரையில் அமர்ந்திருக்க முடுடியாது.நீங்கள் விரும்பினால்  படங்களுடன் பூரண விளக்கம் தரப்படும்  ஓகேயா? முதலில் கனிமொழியுடம் தொடங்கவா? ஆதாரம் கேட்டால் படங்கள் போட்டோக்கள் எக்ஸ்சற்றாக்கள் இணைக்கலாம். 😂
    • ஆழ்ந்த இரங்கல்கள். மேலே  ஏராளன் இணைத்த தினக்குரல் பத்திரிகையில் 1933 ஓகஸ்ட்இல் பிறந்த எதிர்வீரசிங்கம் வயது 89 என்று எழுதியிருக்கிறார்கள். 90 என்றுதானே வரவேண்டும்?. அவர் மத்திய கல்லூரியில் படிக்கும் போது இலங்கை சாதனையை முறியடிக்கும் போது ,  கொழும்பில் வெளிவந்த ஆங்கில பத்திரிகை ஒன்றில் இவரது பெயரை எதிர்வீரசிங்க என்று எழுதியிருந்தது. அப்பொழுது மத்திய கல்லூரியின் அதிபர் சிமித் அவர்கள் ‘எதிர்வீரசிங்க அல்ல நாகலிங்கம் எதிர்வீரசிங்கம்’  என்று எழுதிய கடிதம் அதே பத்திரிகையில் பிறகு வந்தது.  ஆசிய விளையாட்டுப்போட்டியில் தங்கப்பதக்கம் வென்றபின்பு யாழ் புகையிரத நிலையத்தில் இருந்து மத்திய கல்லூரிக்கு அழைத்து வரப்பட்டு ,எதிர்வீரசிங்க அவர்களுக்கு சிறந்த வரவேற்பு பாடசாலையில்வழங்கப்பட்டது.  -  மத்திய கல்லூரியின் பழைய மாணவரான எனது தகப்பனார் சொன்ன தகவல் இவரும் , இவரது சகோதரர்களும் படிக்கிற காலத்தில் மத்திய கல்லூரியில்துடுப்பாட்டத்தில் ஆரம்ப வேகப்பந்தாளராக விளங்கினார்கள் (Opening blower). 
    • அட்லீஸ்ட் விஜயலக்சுமிக்கு செய்தது போல் அநியாயம் செய்யாமல் தன்னை நம்பி வந்த பெண்ணை கண்ணியத்தோடு நடத்தினார் என நினைக்கிறேன்🤣. பதில் விளக்கம் போதும் என நினைக்கிறேன்🤣 ஐயகோ….இரு மாநில ஆளுனர்….ஆட்டுகுட்டி கதையை கேட்டு…
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.