Jump to content

'தனிமனித அவலத்தின் நினைவுகள் கூட்டு மனநிலையில் வடுவாக மாறுகின்றன.' பா.அகிலனின் 'அம்மை' கவிதை நூலை முன்வைத்து…


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

'தனிமனித அவலத்தின் நினைவுகள் கூட்டு மனநிலையில் வடுவாக மாறுகின்றன.' பா.அகிலனின் 'அம்மை' கவிதை நூலை முன்வைத்து…

தேவகாந்தன்

 

book_ammai239.jpg

மறைந்த கலை இலக்கிய விமர்சகர் வெங்கட் சாமிநாதன்மூலம் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் பா.அகிலனது கவிதைகளுடனான அறிமுகம் எனக்கு ஏற்பட்டது. இந்த அறிமுகத்தைத் தொடர்ந்தே 'பதுங்கு குழி நாட்கள்' தொகுப்புக்குள்ளான என் பிரவேசம் இருந்தது. அவரது அடுத்த கவிதைத் தொகுப்பு 'சரமகவிகள்' வெளிவந்தபோது, மேலும் அவரது கவிதைகளை அறிவதற்கான தரவுகளுடன் நான் இருந்திருந்தேன். 'அம்மை' தொகுப்பு வெளிவந்தபொழுது அவருடன் நேரடி அறிமுகமே உண்டாகியிருந்தது. கவிதைகளின் அகத்துள்ளும் அகலத்துள்ளும் சென்று தேட இது இன்னும் வாய்ப்பாக அமைந்தது.  
'அம்மை' தொகுப்பை புரட்டியதுமே என் மனத்தில் ஞாபகமானது சோ.ப.வின் 'தென்னிலங்கைக் கவிதைகள்' மொழிபெயர்ப்பு நூலுக்கு பேராசிரியர் கா.சிவத்தம்பி எழுதியிருந்த 22 பக்க முன்னுரை. 'அம்மை'யிலும் கீதா சுகுமாரனின் அதைவிட நீண்ட பின்னுரையொன்று இடம்பெற்றிருக்கிறது. பா.அகிலனின் மூன்று கவிதைத் தொகுப்புகளினையும் உள்ளடக்கி பல தளங்களினூடாகவும் அலசிய ஆய்வு அது. எனினும் பின்னுரையின் தேவை பின்னாலேதான் ஏற்படுகிறது. அப்போது 'அம்மை' கவிதைகள் குறித்து வாசகன் இன்னும் கூடுதல் வெளிச்சம் பெறுகிறான்.

ஈழக் கவிதையாக வரலாற்றின் அடுக்கில் வைத்தும், இதிலிருந்து கிளைத்த புலம்பெயர் கவிதையென்ற புதிய வகையினத்துடன் ஒப்பவைத்தும், தமிழ்க் கவிதையானதால் தமிழக கவிதைகளுடனும் 'அம்மை' நோக்கப்படலாம். அது 'அம்மை'பற்றிய அகல்விரிவான ஒரு பார்வையைத் தருமென்பது மெய்யே. ஆனாலும் கவிதையென்ற ஒற்றைத் தளத்தில் இது அடையக்கூடிய பேறுகள் முக்கியமானவை. அதனால் இவ்வொப்பீடுகளின் கவனிப்பு அகன்றுவிடாதவாறு கவிதையின் நயம் காண்பதே எனது எண்ணம்.

நாற்பத்திரண்டு கவிதைகளைக்கொண்ட 'அம்மை' இருபத்தொன்பது கவிதைகளைக் கொண்ட 'காணாமற் போனாள்' என்றாகவும், மீதி பதின்மூன்று கவிதைகள் 'மழை'யென்றாகவும் அமைவுபெற்றிருக்கின்றது. ஆயினும் துல்லியமாய் வித்தியாசப்படும் பொருள்களைப் பேசுகிற கவிதைகளை இவை கொண்டில்லை. ஒரே விஷயத்தை அடிநாதமாய்க்கொண்டு வெவ்வேறு கதிகளிலும் ஆழங்களிலும் பேசுகிறவையாகவே அவை பெரும்பாலும் இருக்கின்றன. வேறுவேறு உணர்ச்சிகளைப் பேசுகிற கவிதைகளை தொகுப்பு உள்ளடக்கியிருப்பினும் அவை 'மழை'யென்கிற இரண்டாம் பகுதியிலேயே அதிகமாயும் உள்ளன. இந்த இரண்டு வகைக் கவிதைகளுக்கிடையிலும் கவிதைநிலை சார்ந்த வித்தியாசம் இருக்கவே செய்கிறது. அது அவை வெளிப்படுத்தும் கருத்துக்களின் காரணத்தாலாகும்.

தனதும், பிறரதுமான போர்க்கால அனுபவங்களிலிருந்து சுழித்தெழுந்த இத் தொகுப்பின் பெரும்பாலான கவிதைகளின் ஊற்று மன உடல்ரீதியாக அடைந்த அவலங்களினதும் வடுக்களினதும் மய்யத்திலிருந்தே பீரிட்டெழுகிறது. கைகால்கள் போன்ற பொறிகள் மட்டுமில்லை, புலன்களும்கூட இழக்கப்பட்டன. மிகக்கொடூரமான மனித அவலம் சம்பவித்தது. ஆனால் அந்த அவல உணர்வுகள் மீளுதல் சாத்தியமற்ற நிர்கதியின் இருளாய் உறைவடைந்து மேலும் பகுக்கக்கூடிய திண்மமாய் 'அம்மை' கவிதைகளில் மாற்றம் பெறுகின்றன.  

போர்க்கால அவலங்களில் அமிழ்ந்துகிடந்து அவற்றின் உடலியற் துன்பங்களையும், மனோவியல் பாதிப்புகளையும் பொதுவில் பேசுகிற நிலையொன்று இருக்கிறது. இது வெளிப்படையானது. இன்னொன்று, தன்னை அவலத்தின் பின்னால் மறைந்திருந்துகொண்டு குரல்மட்டும் கொடுத்துக்கொள்கிற ஒரு நிலை.

ஒரு போர் மனித மனநிலையில் விளைக்கும் சிதைவுகளை அவல(Trauma)மென்ற ஒற்றைப்படைச் சொல்லில் அடக்கிவிடுவது எப்போதும் சரியாவதில்லை. அது உடம்பில் ரணமாக, மனத்தில் திகிலாக எப்போதும் பாதிக்கப்பட்டவரின் சகல உணர்வுகளையும் இடைஞ்சல் படுத்திக்கொண்டிருக்கிறது. இவ்வகை அவலத்தின் அனுபவமாய்த் திரளும் நினைவு அவரை மெல்லமெல்லத் தின்று தீர்த்தும்விடுகின்றது. வெற்றியின் உவகையும், தோல்வியின் வடுவும் தம்மை இனங்காட்டுகிற புள்ளி இது.  

மனத்தையும் நினைவையும் இங்கு வேறுபடுத்திப் பார்க்கவேண்டுமென்று நான் விரும்புகிறேன். அவை இரண்டு விதங்களில் தொழிற்படுகின்ற காரணத்தால் இந்தப் பகுப்பு அவசியமென்று தோன்றுகிறது. நினைவு தனிமனித நிலையின் அம்சமாய் துக்கம், வலிகளைச் சுமந்துகொண்டு இருக்கிறவேளையில், மனம் ஒரு கட்டத்தில் கூட்டுச் சமூகநிலையின் கோலம் கொண்டுவிடுகிறது. அது ஞாபகங்களாலல்ல, கருதுகோள்களாலும் கனவுகளாலும் கட்டமைக்கப்படுகிறது. அப்போது தனிமனித அவலத்தின் நினைவலைகள் கூட்டுமனநிலையில் அவமானத்தின் எரி வடுக்களாக உறைக்கின்றன.  

இந்த வேற்றுமை 'அம்மை' தொகுப்பில் பகுதியாகப் பிரித்துப் பார்க்குமளவு அவ்வளவு தெளிவற்றவைதான். ஆனாலும் அவை இத் தொகுப்பில் இருக்கின்றனவென்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

akilan_pa.jpg

- கவிஞர் பா.அகிலன் -

இவற்றுக்கான உதாரணக் கவிதைகளினை நூலிலிருந்து காணவேண்டும்.  

நிலக்காட்சி: இரணைப்பாலை

அப்புறம் பிணக்காடு
தசையொட்டிய சுவர்கள்
இரத்தச் சூடடங்கா அவயவத் துண்டுகள்

ஏவுகணைகளின் பலவாய வெடிப்புகளுக்கு நடுவில்
உயிரைக் கையிற்கொண்டோடியபோது
நிலத்திருந்து நெடுத்து மறித்ததொரு குரல்

ஆடையிலா அப்பெண்ணின் மேலுடல் கண்டபோது  
கீழுடலிலா வெற்றிடத்தில்
இரண்டேயிரண்டு எலும்பு நீளங்களைக்  
கண்டேன், கண்டேன்.



தோற்றவர்கள் 02

இப்போது இங்கேயுள்ளோம்

கைகளின்றி உண்டு
கண்களின்றிப் பார்த்து
மரக்கால்களால் அடி நகர்ந்து

இங்கேயுள்ளோம்
உங்கள் பட்டொளிப் பதாகைகளின் கீழே
நாங்கள் தான் அது

இங்கேயுள்ளோம்
உமது குடையின் கீழ்
ஆறாப் புண்களின் சீறுஞ் சீழ் மேல்
வாரி நெருப்பை விடாதிறைத்தபடி

மிக நிமிர்ந்து
உம்மைப் பார்த்தபடி
நாங்கள் தான் அது

தோற்றுப் போனவர்கள்.


இந்த இரண்டு கவிதைகளிலும் முதலாவதான 'நிலக்காட்சி: இரணைப்பாலை'யில் காட்சியின் அவலம் வரிவடிவங்களாய் எழுந்திருக்கையில், இரண்டாவதான 'தோற்றுப்போனவர்கள் 02'ல் யுத்த முடிவில் எதிர்கொண்ட நம்பிக்கையின் தகர்வும் தோல்வியின் அவமானமும்கொண்டதாய் எழுத்துக்கள் நிமிர்ந்திருக்கின்றன.

முதலாவதுவகைக் கவிதையின் பாடுபொருளான அவலத்துக்கு இலங்கைக் கவிதை மரபில் சற்றொப்ப முப்பதாண்டுகளுக்கு மேலான வரலாறுண்டு. இரண்டாவது வகையினம் 2009இன் இறுதி யுத்தத்துக்குப் பின்னான காலத்தினைப் பாடுபொருளாகக்கொண்டு எழுந்திருக்கிறது. சமகால இலங்கைக் கவிதைகள் அவலத்தினைப் பாடுபொருளாய் நீண்டகாலம் கொண்டுவிட்டனவென்ற அயலகக் குரலின் பின்னணி இங்கே இருக்கிறது. அதுவே எதார்த்தமாக, அதுவே வரலாற்றுக்குத் தேவையான பதிவாக உள்ளபோதும் கவிதை வாசகன் ஒரு நீண்டகாலத்தை அவ்வாறான அனுபவப் பகிர்வில் அயர்ச்சி அடைகிறான். அது அத்தனை காலத்தில் சுதாரித்து மேலெழுந்து தன்னை நிறுதிட்டப்படுத்தி இருக்கவேண்டும். சுதாரிப்பதோடு மேல்வீழ்ந்த அவலங்களையும் வடுக்களையும் ஒரு தத்துவார்த்தப் புலத்தில் பொருத்தி காரண காரியங்களை வகுத்துப் பார்த்திருக்கவேண்டும். இந்த இரண்டும் ஈழக் கவிதைப்புலத்தில் நிகழவில்லை. அது துர்பாக்கியமானது.

தொகுப்பிலிருக்கிற முதலாவது பகுதியிலுள்ள பெரும்பாலான கவிதைகளின் பண்பும், இரண்டாவது பகுதியின் சில கவிதைகளின் பண்பும் இந்த வரையறைக்குள் அடங்குகின்றன. ஈழக் கவிதைகளை இந்த இடத்தில் வடக்கு, கிழக்கென்று அவை வெளிப்படுத்திய அர்த்தங்களின் மேலாய் இரண்டாகப் பிரிக்க முடியும்போல் எனக்குத் தோன்றுகிறது. யதார்த்தன், யாத்ரீகன், துவாரகன், மயூரரூபன், சிந்தாந்தன், தானா விஷ்ணு, தீபச்செல்வன், கருணாகரன் போன்றவர்களது கவிதைகளில் அவலத்தின் குரல் பேரலையாய் எழுந்துகொண்டிருந்த பொழுதில், கிழக்கிலே அனார், நவாஸ் சௌபிபோன்ற கவிஞர்களின் குரலில் அவலத்தின் பின்னால் அதற்கான காரிய காரணத் தேடலும் இருந்திருந்தது. இது ஒரு திரவநிலைத் தோற்றம். அறுதியாக அவ்வாறான ஒரு கோட்டை கிழித்துவிட முடியாதுதான். வடக்கின் பல கவிஞர்களது குரலில் பல புலம்பெயர் கவிஞர்களது குரலில்போல் யுத்தத்தின் எதிர்ப்புக்கூட இருந்திருக்கிறது. ஆனால் வடக்கினதும் கிழக்கினதும் கவிதை நிலைகளைப் பிரித்துப் பார்க்கிறபோது அப்படியில்லையென்று அதை மறுத்து சமர்ப்பிக்க வலுவான நியாயங்கள் இல்லை.

ஆயினும் அதைக் குற்றமென்றோ குறையென்றோ சொல்லிவிடவும் முடியாது. நீண்ட காலத்துக்கும் ஒலிக்கக்கூடியதான பெரும்பாதிப்பே அவர்கள்மீது வந்து விழுந்ததென்பது நிஜம். சமூகத்தின் இந்த கூட்டு மனநிலையின் வெளிப்பாடு அதன் அடுத்த கட்டமாக ஒரு செயற்பாட்டுத் தளத்தை அடைகிறபோதுதான் ஒரு மாற்றத்தை கவிதை காணமுடியும். இப்போதுள்ள முழுவதுமாய் வீழ்ந்துள்ளதான நிலை, கவிதையிலாவது அதன் அடுத்த கட்ட வாழ்வியக்கமாக உருக்கொண்டிருக்கவேண்டும். உடனடி நிவாரணியொன்று கண்டடையப்பட்டிருக்க வேண்டும். ஆனால் எதுவும் நடக்கவில்லை.

காணாமலாக்கப்பட்டோர் விவகாரம் எந்த அழிவின் அம்சத்தைவிடவும் நீண்டகாலத்துக்கு மனதைத் தொடரக்கூடியது. 'அம்மை'யின் முதலாம் பகுதியின் பெரும்பாலான கவிதைகளின் சோகம் இந்தப் பொருளிலிருந்தே குரலெடுக்கிறது. அதன் தலைப்புகூட 'காணாமற் போனாள்'. இது ஒருவகையில் மனவடுவையும் மீறி சம்பந்தப்பட்டோரை சிதறச் செய்துவிடுகிற ஒரு அம்சம்தான். உயிரோடு உடம்பையும் இழத்தலென்பது கொடுமைகளின் உச்சம். அதேவேளை இருப்போரின் வாழ்வும் முக்கியமானதென்பது நமது புரிதலாக இருக்கவேண்டும். வாழ்வு நந்தவனத்து ஆண்டியிடத்துக் கிடைத்த தோண்டியாகவே எப்போதும் இருந்துவருகிறதென்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.  

இத்தகைய மனவடு அழுத்தம்பெற்று மேலே செல்லச் செல்ல பித்தாக மாறிவிடுகிற ஒரு புள்ளியிருக்கிறது. தொகுப்பின் இரண்டாம் பகுதியின் சில கவிதைகளில் பித்தக நிலைகொள்ளும் தன்னிலைகளைக் காணமுடிகிறது. அதேவேளை, அதைக்கடந்தும் சூன்யத்தின் பித்துநிலை கொள்கிற தன்னிலைகளும் இங்கே உலவுகின்றன.  

'மழை' பகுதி மயக்கம் கொண்டுள்ளது. அது கார்முகிலிலிருந்து சொரியும் மழை மட்டுமல்ல, அனுதாபம், அன்பு என பொழியும் மழையாகவும் படிமம் கொள்ளக்கூடியது. மழையின் வறட்சியில் வனங்கள் எரிவதுபோல், அன்பின் வறட்சியில் மனங்கள் எரிவதைச் சில கவிதைகள் கோடு காட்டுகின்றன. 'கோடைமழை' கவிதையை அவ்வாறாக விரித்துக் காணமுடியும். 'தாமரைச்செல்வியை நினைதல் 01', 'மழை', 'மாமழை', 'மழைவேனில்' ஆகிய கவிதைகளும் படிமமாய் இன்னும் விரிந்த பொருள் தரக்கூடியவைதான்.  

உறவுகள்கொள்ளும் விசித்திர உணர்வுநிலைகளை சில கவிதைகள் விரிக்கின்றன. தன்னையும் தன் உறவையும் வேறுபடுத்திக் காணவியலா தூரத்திற்கு நகர்ந்து செல்பவையாயும் இவற்றில் சில உள. இது இன்னொரு வகையான பித்தகநிலை.

உருக்குலைய இனியேதும் இல்லையென்ற போதிலும்
மனத் தசைகளில் கீறிய சித்திரங்களைப் பார்த்து  
வியந்து சிரித்துப் பரிகசிக்கிறேன் நான்
அவள் ஒரு பித்தனைக் காண்கிறாள்


என்ற அடிகளில் (பெரிடப்படவில்லை 01) முன்னதற்கான உதாரணமுண்டு.

நானற்றேன்
நீ மட்டும் எஞ்சினாய்;
நீதான் நானில்லை இது என்றாய்

ஒர் குளிர் வாடை வீசியடங்கியது

நானுமில்லை நீயுமில்லை எனில்?
தேகக் கோதுடைத்து
திரண்ட எண்ணவெளி நின்றவர் யார்?


என்ற வரிகளை (தாமரைச்செல்வியை எழுதுதல்) இரண்டாவதற்கான எடுத்துக்காட்டாகவும் சொல்லல்கூடும். 'அவன் தேவதைகளைக் கற்பித்தான்\ விநோதனானான் \ வேறொரு உலகத்தை விரித்துப் படுத்தான்' (மழைவேனில்) இறுதியானதற்கு எடுகோள்.

இந்த மூன்று எடுத்துக்காட்டுகளுமேகூட இரண்டாவது பகுதியான மழையிலேயே வருகின்றன.

எந்த ஒரு எழுத்தும் மௌனமாகக்கூட இருக்கும், ஆனால் அரசியலற்று இருந்துவிடாது எனச் சொல்லப்படுகிறது. பிரதியைக் கட்டுடைத்தல் செய்கிறபோது வெளிப்படுவது ஆசிரியனின் அரசியல்தான். அதுதான் எவ்வாறு அவாவாகத் தொழிற்பட்டுள்ளதென்பதை விளக்கமாய்க் காட்டுகிறது. அரசியலொன்றும் விலக்கப்பட்ட கனியல்ல, உரைநடைக்குப்போலவே கவிதைக்கும். ஆனாலும் உரைநடையைவிட கவிதையில் அரசியல் மிகுந்த உக்கிரத்துடன் வெளிவரும்; ஒளித்துவைத்தபோதும் தன்னை அடையாளம் தெரியும்படி வெளியே தலையை நீட்டும். இக்காரணம் சுட்டியே கலகக்காரக் கவிஞர்கள் அரசின் இரும்புக் கரம்கொண்டு எங்கெங்கும் நசுக்கப்படுகிறார்கள்.  

ஆக, உள்ளோடிய அரசியலாக இருப்பதுமட்டுமல்ல, வெளிப்படையான அரசியல் பேசுவதாகக்கூட பிரதி இருக்கட்டும். 'என் எழுத்துக்களுக்கு ஒரு கூர்மையான சிறுபான்மை அரசியலுண்டு என நினைக்கிறேன்' என்ற பா.அகிலனின் கலைக்கொள்கைப் பிரகடனத்தில் (பின்னுரை பக்:63) தயக்கம் தெரிகிறது. அது தேவையில்லை. அதில் அரசிலுண்டுதான். அவரது அரசியலை அவர் பேசுகிறார். ஆனாலும் வரலாற்றுப் பதிவெழுத்துக்களின் சாங்கம் கவிதையின் கழுத்தை நசிக்குமளவு அனுமதித்துவிடாதிருந்தால் சரிதான்.  

இலங்கையில் தங்கியிருந்த கவிஞர்களுக்கு மட்டுமே 2009இன் பின்னான காலத்தினை அச்சொட்டாகப் பாடும் வாய்ப்பு கூடியிருக்கிறது. இது புலம்பெயர் கவிஞர்களுக்குச் சாத்தியமில்லை. அவை இயக்க முரண்களையும், யுத்தத்தின் அழிவுகளையும் அவலங்களையும் நிலமிழத்தலையும் அலைந்துழல்வையும் பாடியதுபோல் இறுதியுத்தத்தின் அழிவுகளையோ அவலங்ளையோ விளைந்த ஆறா வடுக்களையோ உரைத்தல் கூடிவிடாது. தமிழக நிலைமையோடும் ஈழத்தின் இந்தவகைக் கவிதைகளை ஒப்பிட்டு எழுத்திவிடுதல் சாத்தியமில்லை. ஆயினும் கவிதைத்தனத்தில் சில கவிதைகளோடு உள்ளுள்ளாகவேனும் மனம் ஒப்பீட்டில் முனைவது தவிர்க்க முடியாதது.

கவிதையே மொழியின் உயர்ந்தபட்ச சாத்தியத்தின் அடைதலெனக் கூறுகிறார்கள். அதை நவீனகவிதையாய், புதுக்கவிதையாய் பரந்த தமிழுலகு கண்டுகொண்டிருக்கிறது. இன்றைய நவீன கவிதைதான், புதுக்கவிதையின் துளிர்ப்பு அறுந்து புதியவொரு தளத்தில் மிதந்துகொண்டு இருக்கிறதெனவும் கூறப்படுகிறது. இந்த வடிவ ஆய்வுக்குள் புகாமல் மேலோட்டமாய் ஓரிரண்டு ஒப்பீடுகளுடன் இதை முடித்துக்கொள்வது சிலாக்கியம்.  

தமிழ்நாட்டில் சமீபத்தில் எழுபத்தொரு கவிதைகளைக்கொண்ட எஸ்.சண்முகத்தின் 'ஈர்ப்பின் பெருமலர்' என்கிற தொகுப்பு போதிவனம் வெளியீடாக வந்திருக்கிறது. இதை அண்மையில் வெளிவந்த முக்கியமான கவிதைத் தொகுப்புகளிலொன்று என நான் எண்ணுகிறேன். இந்த எழுபத்தொரு தலைப்பற்ற கவிதைகளும் நீண்ட, இடைத்தரமான, சிறியவென பல அளவினதான இருக்கின்றன. தலைப்பற்ற கவிதைகள் இன்னுமின்னும் கூடுதலான அவதானிப்பை வாசகனிடத்தில் கோரிக்கொண்டு இருப்பவை. தன்னிச்சையாக முன்னனுமானமின்றி வாசகன் கவிதையுள் புக வாய்ப்பாக அமைபவையும். அது 'ஈர்ப்பின் பெருமல'ரில் கூடிவந்திருக்கிறது.  

இயல்பாகவே மரபார்ந்த சொற்களை ஓரளவு தன் பாவிப்பிலிருந்து ஒதுக்கிக்கொண்டு சீரிய, தீவிர சொல்லெடுத்து பிறந்திருக்கும் இக் கவிதைகள் தலைப்புமற்ற வரிசை எண்களுமற்ற இந்த அடுக்கில் மேலும் இறுக்கத்தைச் சேர்த்துவிடுகின்றனவென்பது மெய்யே. ஆனால் அது உண்மையில் இறுக்கமல்ல, வாசகனின் முழுக் கவனத்தையும் கவிதைத் தலைவி தனக்கென கேட்பதாகவே கொள்ளவேண்டும். கரணம் தப்பினால் மரணம்போல, இங்கே கவிதை கவனம் தப்பினால் புதிர் என்றாகிவிடக்கூடும்.

கவிதைகள் வெளிப்படுத்தும் அர்த்தங்கள் வெவ்வேறாயினும் அவை கட்டமைக்கும் கவிதையுடல் ஒத்த தன்மை கொண்டுள்ளதாய் நான் காண்கிறேன். பா.அகிலனின் கவிதைகளிலும் இந்த கவிதையிறுக்கம் குறிப்பிடப்படவேண்டிய ஒன்று. அது முன்னரே சுட்டிக்காட்டியதுபோல் இறுக்கம்கூட இல்லை, வாசகனின் முழுக் கவனத்தையும் அவாவி நிற்றலேயாகும். எஸ்.சண்முகத்தின் சொற்குதம்போல் பா.அகிலனதும் குறிப்பிடக்கூடியது. அது ஈழத்தில் மு.பொ. கொள்ளும் பிடிவாதமான கருத்துச் செறிவையும் கட்டிறுக்கத்தையும் (காலி லீலை) வேறுபட்ட இயல்பிலும், புழக்கத்திலும் ஆற்றும் செயற்பாட்டுத் தனம் கொண்டதாயிருக்கிறது.  

வேறொரு நாளும்
இன்னும் பலநாளும்
பின்பொரு நாளும் வந்தனவாயினும்

'இழந்த நாளெல்லாம் திரும்பியேகா' என  
இன்னொருவனிடம் இவனும்
இவனிடத்து அவளும் கூறினர் (பெயரிடப்படவில்லை 02) என்றும்,

பரந்து விரிந்த கூடங்களில் தனித்தலைந்தாள்
நட்சத்திரங்களின் வெற்றொளிமீது
தேய்ந்த நிலாமீது வெறுப்புக் கொண்டாள்  
பனி அவள் துயர்மீது விடாது பெய்தது


பைத்தியமானாள் (சுதேஷனா) என்றும் வருகையில் சொற்செட்டுடன் கவிதை உருக்கொள்வதைக் காணமுடியும். சித்த இலக்கியத்தினின்று வெகுவாய் விலகிப்போய்விடாத தோற்றம் இது.

'யானைச் சட்டை எனும் கவிதை' எனும் கவிதை தொகுப்பிலுள்ள 'அம்மை' கவிதையைவிடவும் விஷேசமானது. அது சுருங்கிய வரிகளில் எடுத்திருக்கும் விகாசம் பிரமாண்டமானது. சங்கக் கவிதைகளில் கண்ட பிரகாசமும் வரிகளில் வெடித்தெழுகிறது. அது இது:

யானைச் சட்டை எனும் கவிதை

மஞ்சளில் ஒரு ஊதா நிறத்து யானை  
மேலே இன்னொரு கொட்டைப் பாக்குக் குருவி
குருத்துப் பச்சைப் புற்களில்
செந்நிறத்தும் நீலநிறத்தும் சிறுபூக்கள்
இருண்டு வரிகளிற் பயணஞ் செய்யும் நீரலைகள்

பெட்டியுள் இருக்கிறது இப்போதும்
நீ கழற்றி வீசிய  
சிறு பராயத்து 'யானைச் சட்டை'.


இயக்கத்துக்கு ஓடி விட்டதை, இயக்கத்தால் பிடித்துக்கொண்டு போகப்பட்டுவிட்டதை, காணாமலாக்கப்பட்டதை, திருமணமாகிப் போய்விட்டதை, விரும்பியவருடன் ஓடிவிட்டதையென பல கதைகளை இந்த வரிகளின் ஊடுகளிலிருந்து புனைய முடியும். அத்தனைக்கு இவற்றினுள் பொதிந்திருக்கும் கதைகள் அனந்தம்.

இந்தத் தொகுப்பிலுள்ள பா.அகிலனின் இன்னும் சில கவி விசேஷங்களை இனிக் காணலாம்.

'யுத்த ஆடைகளின் மெய்யுருக்கள்', 'அம்மை', 'கோடை மழை'போன்ற ஒருசில கவிதைகள் தவிர மீதி யாவும் அளவில் சிறியன. உணர்வலைகளின் வீச்சைமட்டும் காட்டி பின்னணியை ஊகமாய்த் தெரிவிக்கும் திறன் அச் சீறடிப் பாடல்களுக்கு உண்டுவென நினைக்கிறேன். மேலும் இவற்றின் இன்னொரு சிறப்பம்சம் இவற்றின் இறுதி அடிகள்.

பின்னர் தரப்பட்டது குருதி காய்ந்தொட்டிய பிணம்
புதிதாகச் சூடிக் கொள்ளவென்றொரு பெயர்
முடிவடையாதவொரு கண்ணீர்த் தெரு
 (விதவைக் கவிதை 01) என்றும்,

நகரா நாட்களை நகர்த்தி
மரணத்துக்குக் காத்துக் கிடந்தாள் தாய் 
(ஒளிப்படத் தொகுப்பேடு) என்றும்,

எல்லாப்பொழுதும் என் பின்னால் யாரோ வருகிறார்கள்
ஒளித்து என்னை வைக்க ஓர் இடமுண்டா உலகத்தில்?
 (அவள்) என்றும்,

நேசமொன்றுக்காய்
வாழ்வெறிந்து மரணமேற்றுப் போனார்கள்
என்பது உன் சரித்திரத்தில் பதியப்பட்டுள்ளதா?
 (அன்ரிகனி) என்றும்,  

அவள் சிற்றுடல் சுருண்டெழுந்து
விண்ணேறி

பத்ம வியூகத்துள் வீழ்ந்தபோது இருளுச்சியை அடைந்தது
 (சுபத்திரா) என்றும்,

அவன் பாவக் கடல் பெருகி
அவன் குரல் வாங்கியழித்து பாழில் மிதந்தது
 (விம்பம்) என்றும் வரும் ஈற்றடிகள் மிக நேர்த்தியாய் அமைந்து, சுள்ளிடும் ஒரு விசையோடு கவிதையை முடித்துவைக்கின்றன. சில இடங்களில் கவிதையே அந்த அடிகளுடன்தான் உயிர்பெறுகிறதென்றும் சொல்ல முடியும்.

'கணவன் உயிர்வேண்டி போனாள்… போனாள் முடிவின்றிப் போனாளெ போனாள்' எனவும், 'இரண்டேயிரண்டு எலும்பு நீளங்களைக் கண்டேன்… கண்டேன்' எனவும் வருமிடங்கள்கூட இசை நிரப்பவல்ல, இந்த சுரீர் உறைப்பை விளைக்க சொல்லின் மீளுருக் கொள்வனதாகக் கருதமுடியும்.  

இந்தக் கவிதைகள் நேற்றுப்போல் இன்று இல்லை. புதிதுபுதிதான கருத்துக்களையும், புதிது புதிதான அனுபவங்களையும் வாசகனுக்கு உத்தரவாதம் செய்கிறது தொகுப்பு. அதன்மூலம் பல்வேறு கவிதைச் சிந்தனைகளை, பல்வேறு வாசிப்புச் சுகங்களைத் தந்தமைக்காக பா.அகிலனுக்கு என் நன்றி.

 

 

http://www.geotamil.com/pathivukalnew/index.php?option=com_content&view=article&id=4699:2018-09-15-01-34-25&catid=57:2013-09-03-03-55-11&Itemid=74

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.