Jump to content

4ஆவது யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழா 2018…


Recommended Posts

4ஆவது யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழா 2018…

Jaffna-International-Cinema-Festival.jpg

தொடர்ச்சியாக, 4ஆவது வருடமாக, யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழா இந்த ஆண்டும் ஒக்ரோபர் 03ஆம் திகதி தொடக்கம் 8ஆம் திகதி வரை யாழ்ப்பாணத்தில் நடாத்தப்பட ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 

யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழாவின் நோக்கம் சுயாதீன திரைப்படக் கலையை யாழ்ப்பாணத்தில் கொண்டாடுவதாகும். முப்பது வருட யுத்த இழப்புகளிலிருந்து மீளெழும் ஒரு முயற்சியாகவும் இது அமைகிறது.

யாழ்ப்பாண சர்வதேச தி;ரைப்பட விழா (Jaffna International Cinema Festival) ஒரு பக்கசார்பற்ற, சினிமாத்துறை சார்ந்த படைப்பாளிகளின் ஆக்க வெளிப்பாடுகளுக்கான ஒரு களமாகும். இது Agenda 14  மற்றும் சிலோன் தியேட்டர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நடாத்தப்படுகிறது. இதன் கல்வித்துறைப் பங்காளியாக, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நுண்கலைத் துறை விளங்குகிறது.

இந்த வருடத் திரைப்பட விழாவில் 30 நாடுகளைச் சேர்ந்த 80 திரைப்படங்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன. இவற்றுள் முழுநீள, விவரண, குறுந்திரைப்படங்கள் ஆகியன உள்ளடங்கும். விழாவில் – ஆப்கானிஸ்தான், அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், பெல்ஜியம், பூட்டான், பிரேசில், கனடா, குறோஷியா, கொலம்பியா, செக் குடியரசு, எகிப்து, பிரான்ஸ்;, ஜேர்மனி, இந்தியா, ஜப்பான், கர்க்கிஸ்தான், கஸாக்கிஸ்தான், மங்கோலியா, நேபாளம்;, போலந்து, பாகிஸ்தான், சிங்கப்பூர், சுலோவோக்கியா, இலங்கை, சுவிற்ஸலாந்து, ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அமெரிக்கா, வியட்நாம் ஆகிய நாடுகளின் திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.

இந்த வருட Jaffna ICF  ஒக்டோபர் 3ஆம் திகதி யாழ்ப்பாணம் கார்கில்ஸ் சதுக்கத்தில் அமைந்துள்ள மஜஸ்டிக் திரையரங்கில் மாலை 5.45 மணிக்கு ஆரம்பித்து, விருதுகள் வழங்கும் நிகழ்வு அதே திரையரங்கில் ஒக்டோபர் 8ஆம் திகதி மாலை 6.15 மணிக்கு இடம்பெறும்.

விழாவின் ஆரம்பத் திரைப்படமாக, ‘ த யங் கார்ல் மார்க்ஸ்’ (இயக்குனர் ஜேர்மனியைச் சேர்ந்த ரவூல் பெக் – (2017Æ18))> முடிவுநாள் திரைப்படமாக ‘சுவீற் கன்றி’ (இயக்குனர் அவுஸ்ரேலியாவைச் சேர்ந்த ‘வாரிக் தோன்ரன்’ (2017 Æ 113)ஆகியன திரையிடப்படுகின்றன.

மூத்த தலைமுறைக் கலைஞர்களைப் பாராட்டி கௌரவிக்கவும், இளம் தலைமுறை திரைப்படக் கலைஞர்களை ஊக்குவிக்கவும் இவ்விழாவில் – வாழ்நாள் சாதனையாளர், சிறந்த முழுநீள அறிமுகத் திரைப்படம், மிகச் சிறந்த சர்வதேச குறுந்திரைப்படம், சிறந்த இலங்கை குறுந் திரைப்படம், மிகச் சிறந்த ஜனரஞ்சகத் திரைப்படத்துக்கான பார்வையாளர் விருது என 05 விருதுகள் வழங்கப்படவுள்ளன.

இவ்வருட விழாவில் Saffaa Elaisy Haggag (Egypt), Urvashi Archana (India) and Muralitharan Mauran (Sri Lanka) ஆகியோர் அறிமுக திரைப்படங்களுக்கான நடுவர்களாக இருப்பர். Carla Maria Losch (Germany), Aunohita Mojumdar (India), Dr. S. Jeyasankar (Sri Lanka)  ஆகியோர் குறுந்திரைப்படங்களுக்கான நடுவர்களாகப் பங்காற்றுவர்.

இந்த வருட விழா – மலையாள இயக்குனர் சஜி நாராயண் கருண்; படைப்புக்களை நினைவு கூரவிருக்கிறது. அவரின் ‘பிறவி’ (1989), ‘வனப்பிரஸ்தம்’ (1999), ‘குட்டி சிராங்’ ;(2009), ‘சுவப்பனம்’ (2013) ஆகிய முழுநீளத் திரைப்படங்களும்;, மேலும் 03 குறுந்திரைப்படங்களும்; ரசிகர்களுக்குக் காண்பிக்கப்படவுள்ளன. சஜி நாராயண் கருண் இவ்விழாவின் இறுதிநாள் நிகழ்வின்போது பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.

யாழ்ப்பாண சர்வதேச தி;ரைப்பட விழாவின் இந்த ஆண்டுக்கான முன்னிலைப்படுத்தப்படும் நாடாகப் போலந்து விளங்குகிறது: போலந்து நாட்டு திரைப்பட இயக்குனர்களான Andrzej Wajda, Krzysztof Kieslowski, Roman Polanski , Andrzej  Munkand Jerzy Kawalerowicz  ஆகியோரின் புத்தாக்கம் செய்யப்பட்ட மூன்று திரைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட இருக்கின்றன.

இலங்கைத் திரைப்படப் பிரிவு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த விவரணப்படத் தொகுதி ஒன்றை இரண்டாவதுமுறையும் இந்த விழாவில் வழங்கவிருக்கிறது.

சிறப்புத் திரைப்படங்களாக தீபா மேத்தாவின் ‘வன்செயலின் கட்டமைப்பு’ (The Anatomy of Violence),  லூயிஸ் ஒஸ்மண்ட்டின் ‘‘Versus: The Life and Films of Ken Loach’,  பிராட் ஓல்கூட் மற்றும கிரஹாம் ரௌன்சிலியின் ‘Landfill Harmonic’  ஆகியன காண்பிக்கப்படவிருக்கின்றன.

பிராட் ஓல்கூட் – விவரணத்திரைப்படங்கள் குறித்த பயிற்சிப்பட்டறையொன்றை நடாத்த இருப்பதுடன் ‘திரைப்படங்களுக்கான பொதுமக்கள் நிதி திரட்டல்’ சம்பந்தமான கலந்துரையாடல் ஒன்றிலும் கலந்துகொள்ளவிருக்கிறார். விருதுகள் பல பெற்ற Shaji Narayan Karun,   Urvashi Archana (India)  மற்றும் சிறந்த திரைப்பட விமர்சகர் Saffaa Elaisy Haggag (Egypt)  ஆகியோரும் திரைப்படத்துறை சார்ந்த பயிற்சிப் பட்டறைகளை நடாத்தவுள்ளனர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுண்கலைத்துறைத் தலைவரும் காண்பியக் கலைஞருமான கலாநிதி; ரி. சனாதனன் ‘வெள்ளித்திரை: 70 – 80 களின் யாழ்ப்பாண சினிமாக்களுடனான ஒரு பயணம்’ குறித்த தொகுப்புரையை வழங்கவுள்ளார்.

இலங்கைத் திரைப்பட ஓளிப்பதிவுக் கலைஞர் வைரமுத்து வாமதேவனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதினை வழங்கி, அவரின் சினிமாத்துறைப் பங்களிப்புக்கு யாழ்ப்பாண சர்வதேச தி;ரைப்பட விழா மரியாதை செய்யவிருக்கிறது.

சிலோன் தியேட்டர்ஸ் நிறுவனம் தொடர்ந்தும் இரண்டாவது தடவையாகச் சிறந்த குறுந்திரைப்படத்திற்கான விருதினையும், பணப்பரிசு ரூபா ஒரு இலட்சத்தையும் வழங்கவிருக்கின்றது.

இவ்விழாவின் பிரதான அரங்குகளாக மஜெஸ்டிக் கொம்ப்ளெக்ஸ் – கார்கில்ஸ் சதுக்கம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கைலாசபதி கலையரங்கம்; மற்றும் யாழ். நூலகக் கேட்போர் கூடம் ஆகியன அமையவுள்ளன. தொடர்புடைய ஏனைய நிகழ்வுகள் பிரித்தானிய கவுன்ஸிலிலும், அமெரிக்கன் கோர்னரிலும் இடம்பெறும்.

விழாவினை நடாத்த உதவும் ஏனைய பங்காளிகளாக – அரசாங்கத் திரைப்படப் பிரிவு, திண்ணை ஹோட்டல்ஸ், ஆண்ட்ரூ டிரவல்ஸ் கொம்பனி, யாழ். ஊடக அமையம், சூரியன் எவ். எம்., கோதே இன்ஸ்ரியூட், கிரைசலீஸ் மற்றும் ஜி.ஐ. சட் ஆகியவை அமைகின்றன.

British Council, Embassy of France, Alliance Francise de Kotte, InstitutFrancais, Embassy of Switzerland, Embassy of Italy, Embassy of USA, Consulate of Slovakia, High Commission of Canada, High Commission of Australia, Polish Institute in New Delhi, Embassy of Czech Republic in New Delhi, Iran Cultural Center and UNFPA  ஆகியன திரைப்படங்களை வழங்கி உதவுகின்றன.

மேலதிக விபரங்களுக்கு : www.jaffnaicf.lk

Anomaa Rajakaruna, Festival Director, T.P. : 0777879911 | E: anomaaraj@gmail.com

Dr. S. Raguram, Festival Committee Chair, T.P. :0787907433 | E: ragunadu2003@yahoo.com

http://globaltamilnews.net/2018/96344/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.