Jump to content

ஜோர்ன் டாபர்ட் மெய்வல்லுனரில் வட மாகாண வீரர்ளுக்கு ஐந்து பதக்கங்கள்


Recommended Posts

ஜோர்ன் டாபர்ட் மெய்வல்லுனரில் வட மாகாண வீரர்ளுக்கு ஐந்து பதக்கங்கள்

Untitled-1-191-696x464.jpg
 

கல்வி அமைச்சு மற்றும் இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுனர் சங்கம் ஆகியன இணைந்து 88 ஆவது தடவையாகவும் ஏற்பாடு செய்துள்ள சேர் ஜோன் டார்பட் சிரேஷ்ட மெய்வல்லுனர் போட்டிகள் இன்று (19) கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் ஆரம்பமாகியது.

சிலோன் பிஸ்கெட் நிறுவனத்தின் ரிட்ஸ்பறி சொக்கலட்ஸ் தொடர்ச்சியாக 8 ஆவது தடவையாகவும் அனுசரணை வழங்குகின்ற இம்முறை போட்டிகளில் நாடளாவிய ரீதியிலிருந்து சுமார் 1500 மாணவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

 

16, 18 மற்றும் 20 ஆகிய வயதுப் பிரிவுகளுக்காக நடைபெறுகின்ற இம்முறை ஜோன் டாபர்ட் சிரேஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரின் முதல் நாளில் 15 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான ஈட்டி எறிதலில் இரத்தினபுரி சுமனா மகளிர் கல்லூரி மாணவி எல். ஹபுஆராச்சி (37.91 மீற்றர்), 16 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான நீளம் பாய்தலில் பம்பலப்பிட்டி புனித பேதுரு கல்லூரி மாணவன் ஹிரூஷ ஹஷேன் (7.19 மீற்றர்), பெண்களுக்கான 2000 மீற்றர் தடைதாண்டல் ஓட்டப் போட்டியில் குளியாப்பிட்டிய மத்திய கல்லூரி மாணவி பாரமி வசந்தி மாரிஸ்டெல்லா (6 நிமிடம் 37.9 செக்.) ஆகியோர் புதிய போட்டி சாதனைகளை நிலைநாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இது இவ்வாறிருக்க, இன்று ஆரம்பமாகிய மைதான நிகழ்ச்சிகளில் வட மாகாணத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவர்கள் ஒரு தங்கம், இரண்டு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப் பதக்கங்கள் உள்ளடங்கலாக ஐந்து பதக்கங்களை வென்றனர்.

இன்று காலை நடைபெற்ற 18 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் பங்குகொண்ட தெல்லிப்பளை மகாஜனா கல்லூரி மாணவர்களான எஸ். சுகிதர்தன், எஸ். ஜம்சன் மற்றும் ஏ. ஜினோயன் ஆகியோர் முதல் மூன்று இடங்களைப் பெற்று அசத்தியிருந்தனர்.

இதன்படி, 4.00 மீற்றர் உயரத்தை தாவிய எஸ். சுகிதர்தன், எஸ். ஜம்சன் ஆகிய வீரர்கள் சேர் ஜோன் டார்பட் மெய்வல்லுனர் வர்ண சாதனையுடன், தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வெற்றிகொள்ள, 3.60 மீற்றர் உயரத்தைத் தாவிய ஏ.ஜினோயன் வெண்கலப் பதக்கத்தையும் பெற்றுக்கொண்டார்.

அத்துடன், ஜோன் டார்பட் மெய்வல்லுனர் போட்டிகளில் இம்மூன்று வீரர்களும் முதல் தடவையாக பதக்கங்களை வென்றிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

எனினும், இப்போட்டியில் 4.10 மீற்றர் உயரத்தைத் தாவுவதற்கு இவ்விரண்டு வீரர்களும் மேற்கொண்ட முயற்சிகள் தவறவிடப்பட்டமை இங்கு கவனிக்கத்தக்கது. அதிலும் குறிப்பாக, சுகிர்தன் தனது இரண்டாவது முயற்சியில் மைதானத்தின் வெளிப்புறமாக விழுந்ததால் துரதிஷ்டவசமாக உபாதைக்குள்ளானார். எனவே அவர் போட்டியிலிருந்து இடைநடுவில் விலகிக் கொண்டார்.

ஹெரினாவுக்கு 2ஆவது இடம்

18 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான உயரம் பாய்தலில் பங்குகொண்ட யாழ். தெல்லிப்பளை மகாஜனா கல்லூரியைச் சேர்ந்த சந்திரசேகரன் ஹெரினா, 1.54 மீற்றர் உயரத்தைத் தாவி வெள்ளிப் பதக்கம் வென்றார்.

 

எனினும், இப்போட்டியில் 1.54 மீற்றர் உயரத்தை முதலில் தாவிய ஹோமாகம மஹிந்த ராஜபக்ஷ கல்லூரியைச் சேர்ந்த யசோதா தேஜானி முதலிடத்தைப் பெற்றுக்கொண்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

hareena-2.jpg

 

கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் ஜோன் டார்பர்ட் மெய்வல்லுனர் போட்டிகளில் உயரம் பாய்தல் மற்றும் கோலூன்றிப் பாய்தல் போட்டிகளில் வெற்றிகளைப் பெற்று வருகின்ற ஹெரீனா, கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரில் 4 ஆவது இடத்தையும் (1.45 மீற்றர்), கடந்த மாதம் நடைபெற்ற தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் 4 ஆவது இடத்தையும் (1.50 மீற்றர்) பெற்றுக்கொண்டார்.

எனினும், கடந்த மே மாதம் நடைபெற்ற வட மாகாண விளையாட்டு விழாவில் 1.42 மீற்றர் உயரத்தைத் தாவி தங்கப் பதக்கத்தை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, அண்மைக்காலமாக தேசிய மட்டப் போட்டிகளில் வட மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி போட்டிகளில் பங்குபற்றி வருகின்ற ஒரேயோரு பாடசாலை மாணவியான ஹெரீனா, நாளை மறுதினம் (21) நடைபெறவுள்ள பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் கலந்துகொண்டு தங்கப் பதக்கதை வெல்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

உபாதையுடன் போட்டியிட்ட மிதுன்ராஜ்

போட்டிகளின் முதல் நாளான இன்று நடைபெற்ற 16 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் பங்குகொண்ட யாழ். ஹார்ட்லி கல்லூரியைச் சேர்ந்த எஸ். மிதுன்ராஜ், வெண்கலப் பதக்கம் வென்று அக்கல்லூரிக்காக முதலாவது பதக்கத்தை வென்று கொடுத்தார்.

குறித்த போட்டியில் கைவிரலில் ஏற்பட்ட உபாதையுடன் போட்டியிட்ட அவர், 14.55 மீற்றர் தூரத்தை எறிந்து மூன்றாவது இடத்துடன் திருப்தி அடைந்தார்.

mithunraj-2.jpg

 

இதேவேளை, ஈட்டி எறிதல் மற்றும் பரிதிவட்டம் எறிதல் போட்டிகளிலும் அதிக கவனத்தை செலுத்தி திறமைகளை வெளிப்படுத்தி வருகின்ற மிதுன்ராஜ், கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற 56 ஆவது கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரில் 16 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் 14.07 மீற்றர் தூரத்தை எறிந்து தங்கப் பதக்கத்தை வெற்றி கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், 15.46 மீற்றர் தூரத்தைப் பதிவுசெய்த கொழும்பு புனித ஜோசப் கல்லூரியைச் சேர்ந்த நவீன் மாரசிங்க வர்ண சாதனையுடன் தங்கப் பதக்கத்தையும், 14.71 மீற்றர் தூரத்தை எறிந்த கொழும்பு றோயல் கல்லூரியைச் சேர்ந்த தெவிந்து போகொடகே வெள்ளிப் பதக்கத்தையும் வென்றனர்.

இதேவேளை, மிதுன்ராஜ், கலந்துகொள்ளவுள்ள பரிதிவட்டம் எறிதல் மற்றும் ஈட்டி எறிதல் போட்டிகள் நாளையும், நாளை மறுதினமும் நடைபெறவுள்ளது.

சொந்த சாதனையை முந்திய பாரமி

17 வயதுடைய பாடசாலை மாணவியான பாரமி வசந்தி, இன்று நடைபெற்ற 18 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான 2000 மீற்றர் தடைதாண்டல் போட்டியில் புதிய போட்டி சாதனை நிகழ்த்தினார். அதற்காக அவர் 6 நிமிடங்களும் 37.9 நிமிடங்களை எடுத்துக் கொண்டார்.

 

முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம் சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெற்ற கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் பெண்களுக்கான 2000 மீற்றர் தடைதாண்டல் போட்டியில் (6 நிமி. 59.63செக்.) புதிய போட்டிச் சாதனையுடன் அவர் தங்கப் பதக்கம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Parami-2000m.jpg

 

இதேநேரம், இலங்கை 16 வயதுக்குட்பட்ட பெண்கள் றக்பி அணிக்காக விளையாடியுள்ள பாரமி வசந்தி, ஜப்பானின் கிபு நகரில் கடந்த ஜுன் மாதம் நடைபெற்ற ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் தொடரில் பெண்களுக்கான 3000 மீற்றர் தடைதாண்டல் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றிருந்தார்.

இதனையடுத்து, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ஆர்ஜென்டீனாவின் இளையோர் ஒலிம்பிக் விளையாட்டு விழாவுக்கான ஆசிய தகுதிகாண் மெய்வல்லுனர் போட்டிகளிலும் அவர் பங்குபற்றியிருந்தார். தாய்லாந்தின் பெங்கொங் நகரில் கடந்த ஜுலை மாதம் நடைபெற்ற குறித்த போட்டித் தொடரில் பெண்களுக்கான 2000 மீற்றர் தடைதாண்டல் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட பாரமி வசந்தி மாரிஸ்டெல்லா உலக சாதனையுடன் தங்கப் பதக்கத்தை வெற்றி கொண்டார்.

இதன்படி, இளையோர் ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் ஆசியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிடுவதற்கான வாய்ப்பையும் பாரமி பெற்றுக்கொண்டார்.

இது இவ்வாறிருக்க, இலங்கை மெய்வல்லுனர் சங்கத்தினால் கடந்த சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்ட இவ்வருடத்துக்கான தேசிய மெய்வல்லுனர்  குழாமில் சிறப்புக் குழுவிலும் அவர் முதல் தடவையாக உள்வாங்கப்பட்டிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இதேநேரம், பாரமியுடன் குறித்த போட்டியில் பங்குகொண்ட வலள ஏ ரத்னாயக்க கல்லூரி மாணவி பி. எதிரிசூரிய (07நிமி. 43.1 செக்.) வெள்ளிப் பதக்கத்தையும், சுமனா மகளிர் கல்லூரி மாணவி எல். பிரேமதிலக்க (08நிமி. 01.3 செக்.) வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.

நீளம் பாய்தலில் சாதனை

16 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான நீளம் பாய்தலில் பங்குகொண்ட பம்பலப்பிட்டி புனித பேதுரு கல்லூரி மாணவன் ஹிரூஷ ஹஷேன், 7.19 மீற்றர் தூரத்தைப் பாய்ந்து புதிய போட்டி சாதனையுடன் தங்கப் பதக்கத்தை வென்றார்.

முன்னதாக 2007 ஆம் ஆண்டு கல்கிஸ்ஸை புனித தோமியர் கல்லூரியைச் சேர்ந்த ஆர். குணசிங்க நிலைநாட்டிய சாதனையை சுமார் 11 வருடங்களுக்குப் பிறகு ஹிரூஷ ஹஷேன் முறியடித்தார்.

 

இதேவேளை, குறித்த போட்டியில் முதல் நான்கு இடங்களையும் புனித பேதுரு கல்லூரி மாணவர்கள் கைப்பற்றியிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

நாளை போட்டியின் இரண்டாவது நாளாகும்.

http://www.thepapare.com

Link to comment
Share on other sites

கோலூன்றிப்பாய்தலில் வழித்துத்துடைத்தது மகாஜனக் கல்லூரி!!

 
 
Capture-105-780x288.jpg
 
 

இலங்­கைப் பாட­சா­லை­க­ளுக்கு இடை­யி­லான 88ஆவது சேர் ஜோன்­கா­பெற் தட­க­ளத் தொட­ரில் 18 வய­துப் பிரிவு கோலூன்­றிப் பாய்­த­லில் தெல்­லிப்­பழை மகா­ஜ­னக் கல்­லூ­ரி­யின் வீரர்­கள் தங்­கம், வெள்ளி, வெண்­க­லம் என்று அனைத்­துப் பதக்­கங்­க­ளை­யும் கைப்­பற்­றி­னர்.

இலங்­கைப் பாட­சா­லை­க­ளுக்கு இடை­யி­லான 88ஆவது சேர் ஜோன்­கா­பெற் தட­க­ளத் தொடர் கொழும்பு சுக­த­தாஸ விளை­யாட்டு மைதா­னத்­தில் நடை­பெற்று வரு­கின்­றது.

நேற்று நடை­பெற்ற 18 வய­திற்கு உட்­பட்ட ஆண்­க­ளுக்­கான கோலூன்­றிப் பாய்­த­லில் தெல்­லிப்­பழை மகா­ஜ­னாக் கல்­லூ­ரி­யைப் பிர­தி­நி­தித்­து­வம் செய்த எஸ்.சுகிர்­தன் 4 மீற்­றர் உய­ரத்­துக்­குப் பாய்ந்து தங்­கப் பதக்­கத்­தை­யும், எஸ்.ஜம்­ஷான் 4 மீற்­றர் உய­ரத்­துக்­குப் பாய்ந்து வெள்­ளிப் பதக்­கத்­தை­யும், ஏ.ஜெனோ­ஜன் 3.60 மீற்­றர் உய­ரத்­துக்­குப் பாய்ந்து வெண்­க­லப் பதக்­கத்­தை­யும் கைப்­பற்­றி­னர்.

3-333333333333333.jpg3-11111111111.jpg3-222222222222.jpg

https://newuthayan.com/story/11/கோலூன்றிப்பாய்தலில்-வழித்துத்துடைத்தது-மகாஜனக்-கல்லூரி.html

Link to comment
Share on other sites

சேர். ஜோன் டாபர்ட் போட்டித் தொடரின் இரண்டாவது நாளில் சாதனை மழை

Untitled-2-12-696x464.jpg
 

கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெற்று வருகின்ற 88 ஆவது சேர். ஜோன் டார்பட் சிரேஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரின் 2 ஆவது நாளான இன்றைய தினம் பன்னிரெண்டு போட்டி சாதனைகளும், 6 முன்னைய போட்டி சாதனைகளும் முறியடிக்கப்பட்டன.

இதில், குளியாப்பிட்டிய மத்திய கல்லூரியைச் சேர்ந்த 17 வயதுடைய பாடசாலை மாணவியான பாரமி வசந்தி மாரிஸ்டெல்லா, இன்று காலை நடைபெற்ற பெண்களுக்கான 3000 மீற்றர் ஓட்டப் போட்டியில் புதிய போட்டி சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார். குறித்த போட்டியை நிறைவுசெய்ய 9 நிமிடங்கள் 58.3 செக்கன்களை அவர் எடுத்துக் கொண்டார். அத்துடன், தேசிய மட்டத்தில் பதிவாகிய ஐந்தாவது அதிசிறந்த காலமாகவும் இது இடம்பிடித்தது.

 

முன்னதாக, நேற்று (19) நடைபெற்ற 18 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான 2000 மீற்றர் தடைதாண்டல் போட்டியிலும் அவர் புதிய போட்டிச் சாதனை நிகழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம், நேற்று நடைபெற்ற 16 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான நீளம் பாய்தலில் புதிய போட்டிச் சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்ற பம்பலப்பிட்டி புனித பேதுரு கல்லூரி மாணவனான ஹிரூஷ ஹஷேன், இன்று நடைபெற்ற ஆண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டி மற்றும் ஆண்களுக்கான 4 x 100 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டிகளில் தங்கப் பதக்கங்களை வென்று இம்முறை சேர் ஜோன் டார்பட் மெய்வல்லுனர் போட்டிகளில் ஹெட்ரிக் பதக்கங்களை வென்ற முதல் வீரராகவும் இடம்பிடித்தார்.

parami-1-1.jpg

 

 

இது இவ்வாறிருக்க, மைதான நிகழ்ச்சிகளில் இன்றைய தினமும் தமது திறமைகளை வெளிப்படுத்தியிருந்த வட மாகாண வீரர்கள் ஒரு தங்கம், இரண்டு வெள்ளிப் பதக்கங்களை வென்று அசத்தியிருந்தனர்.

இதேநேரம், 20 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட பதுளை சரவஸ்வதி தேசிய கல்லூரி மாணவன் சி. அரவிந்தன் வெண்கலப் பதக்கம் வென்றார்.

இதன்படி, போட்டிகளின் இரண்டாவது நாள் முடிவில் வட மாகாணத்தைச் சேர்ந்த மாணவர்கள் ஒட்டுமொத்தமாக 2 தங்கம், 5 வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப் பதக்கங்கள் உள்ளடங்கலாக எட்டு பதக்கங்களை வென்றனர்.

மகாஜனாவுக்கு மேலும் இரு பதக்கங்கள்

கோலூன்றிப் பாய்தலில் வழமைபோல் தமது ஆதிக்கத்தை வெளிப்படுத்திய தெல்லிப்பளை மகாஜனா கல்லூரி அணி, 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் தங்கம், வெள்ளிப் பதக்கங்களை சுவீகரித்தது.

இக்கல்லூரியைச் சேர்ந்த கே. கேதூஷன், 4.00 மீற்றர் உயரம் தாவி தங்கப் பதக்கத்தை வென்றார். இதே ஆற்றலை வெளிப்படுத்திய மகாஜனா கல்லூரியின் மற்றுமொரு வீரரான எஸ். கபில்ஷன் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றனர்.

எனினும், அடுத்த இலக்காக 4.10 மீற்றர் உயரத்தை தாவுவதற்கு இவ்விரண்டு வீரர்களும் மேற்கொண்ட 3 முயற்சிகளும் தோல்வியில் முடிந்தமை இங்கு கவனிக்கத்தக்கது.

 

  • kabilson.jpg
    எஸ். கபில்ஷன்
  • kethushan.jpg
    கே. கேதூஷ>
 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

3.80 மீற்றர் உயரத்திற்குத் தாவிய பிபிலதெனிய மத்திய கல்லூரியைச் சேர்ந்த அசங்க டில்ஷானுக்கு வெண்கலப் பதக்கம் கிட்டியது.

முன்னதாக நேற்று முன்தினம் நடைபெற்ற 18 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் பங்குகொண்ட தெல்லிப்பளை மகாஜனா கல்லூரி மாணவர்களான எஸ். சுகிதர்தன், எஸ். ஜம்சன் மற்றும் ஏ. ஜினோயன் ஆகியோர் முதல் மூன்று இடங்களைப் பெற்று அசத்தியிருந்தனர்.

அத்துடன், 18 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான உயரம் பாய்தலில் மகாஜனா கல்லூரி மாணவி சி. ஹெரீனா 1.54 மீற்றர் உயரம் தாவி வெள்ளிப் பதக்கத்தை சுவீகரித்தார்.

மிதுன்ராஜுக்கு 2ஆவது பதக்கம்

16 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான பரிதிவட்டம் எறிதலில் பங்குகொண்ட ஹார்ட்லி கல்லூரி மாணவன் சுசிந்திரகுமார் மிதுன்ராஜ், 53.79 மீற்றர் தூரத்தை எறிந்து முன்னைய போட்டி சாதனையை முறியடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.

அண்மைக்காலமாக தேசிய மற்றும் அகில இலங்கை பாடசாலை மட்டத்தில் மைதான நிகழ்ச்சிகளில் திறமைகளை வெளிப்படுத்தி பதக்கங்களை வென்று வருகின்ற மிதுன்ராஜ், மைதான நிகழ்ச்சிகளான குண்டு எறிதல், பரிதிவட்டம் எறிதல் மற்றும் ஈட்டி எறிதல் நிகழ்ச்சிகளில் பங்குபற்றி வருகின்றார்.

இதில் நேற்று முன்தினம் நடைபெற்ற 16 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் 14.55 மீற்றர் தூரத்தைப் பதிவு செய்து வெண்கலப் பதக்கத்தினை வென்றார்.

இது இவ்வாறிருக்க, இன்று காலை நடைபெற்ற பரிதிவட்டம் எறிதல் போட்டியின் ஆரம்ப சுற்றுக்களில் சிறந்த தூரங்களைப் பதிவுசெய்து முன்னிலை பெற்ற மிதுன்ராஜுக்கு, கைவிரலில் ஏற்பட்டுள்ள காயத்தினால் இறுதி சுற்றுக்களில் எதிர்பார்த்தளவு திறமையை வெளிப்படுத்த முடியாமல் போனது. இதன்படி, 53.79 மீற்றர் தூரத்தைப் பதிவுசெய்த அவர், இம்முறை சிரேஷ்ட ஜோன் டார்பட் மெய்வல்லுனர் போட்டித் தொடரில் தனது 2 ஆவது பதக்கத்தையும் பெற்றுக் கொண்டார்.

mithun-raj.jpg

இந்த நிலையில், கடந்த வருடம் நடைபெற்ற சேர். ஜோன் டாபர்ட் கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரில் ஆண்களுக்கான பரிதிவட்டம் எறிதலில் பங்குபற்றியிருந்த மிதுன்ராஜ், 53.23 மீற்றர் தூரத்தை எறிந்து தங்கப் பதக்கத்தையும் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம், குறித்த போட்டியில் மிதுன்ராஜுக்கு அண்மைக்காலமாக பலத்த போட்டியைக் கொடுத்து வருகின்ற பம்பலப்பிட்டிய புனித பேதுரு கல்லூரி மாணவன் ருமேஷ் தரங்க 61.67 மீற்றர் தூரத்தை எறிந்து புதிய போட்டி சாதனையுடன் தங்கப் பதக்கத்தை வென்றார்.

 

முன்னதாக கடந்த வருடம் பம்பலப்பிட்டிய புனித பேதுரு கல்லூரியைச் சேர்ந்த அகலங்க விஜேசூரிய, 52.48 மீற்றர் தூரத்தை எறிந்து நிலைநாட்டிய சாதனையை ருமேஷ் தரங்க முறியடித்திருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

அரவிந்தன் அபாரம்

20 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குபற்றியிருந்த சந்திரகுமார் அரவிந்தன், குறித்த போட்டியை ஒரு நிமிடமும் 55.65 செக்கன்களில் நிறைவுசெய்து வெள்ளிப் பதக்கத்தை சுவீகரித்தார். ஆனால் குறித்த போட்டியில் அவருடைய சிறந்த காலத்தை பதிவு செய்ய முடியாமல் போனது.

கடந்த மே மாதம் இலங்கையில் நடைபெற்ற தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் ஆண்களுக்கான 800 மீற்றரில் நான்காவது இடத்தைப் பெற்றுக்கொண்ட அரவிந்தன், ஏப்ரல் மாதம் நடைபெற்ற கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரில் 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் 3 ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

aravindan-1.jpg

பதுளை சரஸ்வதி தேசிய கல்லூரியில் கல்வி பயின்று வருகின்ற அரவிந்தன், 2015ஆம் ஆண்டு முதல் அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழா, கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடர், ஜோன் டார்பட் கனிஷ்ட மெய்வல்லுனர் மற்றும் தேசிய இளையோர் விளையாட்டு விழாக்களில் வெற்றிகளைப் பதிவுசெய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம், குறித்த போட்டியில் பம்பலப்பிட்டிய புனித பேதுரு கல்லூரியின் இசுரு லக்‌ஷான் (ஒரு நிமி. 55.65 செக்.) தங்கப் பதக்கத்தையும், கண்டி புனித சில்வெஸ்டர் கல்லூரியின் எல். ஜயதிஸ்ஸ (ஒரு நிமி. 57.29 செக்.) வெண்கலப் பதக்கத்தையும் வெற்றி கொண்டனர்.

அஞ்சலோட்டத்தில் 3 சாதனைகள்

இன்று காலை நடைபெற்ற 18 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான 4 x 100 அஞ்சலோட்டத்தில் பெந்தொட்ட காமினி தேசிய கல்லூரி அணி தங்கப் பதக்கத்தை சுவீகரித்தது. குறித்த போட்டியை நிறைவுசெய்ய 49.74 செக்கன்களை அந்த அணி எடுத்துக்கொண்டது.

முன்னதாக 2003ஆம் ஆண்டு நடைபெற்ற ஜோன் டார்பட் மெய்வல்லுனரில் வென்னப்புவ திருக்குடும்ப கன்னியர் மடம் மாணவிகளால் (49.96 செக்.) நிலைநாட்டப்பட்ட சாதனையை சுமார் 15 வருடங்களுக்குப் பிறகு காமினி தேசிய கல்லூரி மாணவிகள் முறியடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, குறித்த போட்டியில் ராஜகிரிய கேட்வே சர்வதேச கல்லூரி அணி (50.86 செக்.) முன்னைய சாதனையை விட சிறப்பாக ஓடி முடித்து வெள்ளிப் பதக்கத்தையும், குருநாகல் சேர். ஜோன் கொத்தலாவல கல்லூரி (50.96 செக்.) வெண்கலப் பதக்கத்தையும் வென்றது.

U-18-100X4-GIRLS.jpg

அத்துடன், இப்போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற ராஜகிரிய கேட்வே சர்வதேச கல்லூரி அணியில் தேசிய கனிஷ்ட அணியில் இடம்பெற்றுள்ள ஷெலிண்டா ஜென்சன் மற்றும் சதீபா ஹெண்டர்சன் போன்ற அனுபமிக்க வீராங்கனைகளை மிகவும் பின்தங்கிய பாடசாலையான பெந்தொட்டயில் உள்ள காமினி தேசிய கல்லூரி அணி வீழ்த்தியிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

 

இது இவ்வாறிருக்க, 18 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான 4×100 அஞ்சலோட்டத்தில் கொழும்பு றோயல் கல்லூரி அணி மற்றும் 20 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான அஞ்சலோட்டத்தில் கொட்டாஞ்சேனை புனித பெனடிக்ட் கல்லூரி அணியும் புதிய போட்டி சாதனைகளுடன் தங்கப் பதக்கத்தை வென்றிருந்தன. அத்துடன், இவ்விரண்டு பாடசாலை அணிகளும் 2015ஆம் மற்றும் 2005ஆம் ஆண்டுகளில் நிலைநாட்டப்பட்ட ஜோன் டார்ப்ட் சாதனைகளை முறியடித்திருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

12 போட்டி சாதனைகள் முறியடிப்பு

இன்று காலை நடைபெற்ற 20 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான 5000 மீற்றர் வேக நடைப் போட்டியில் மாகந்துர மத்திய கல்லூரி மாணவி சசிகலா தில்ஹானி (27 நிமி. 58.35 செக்.), புதிய போட்டிச் சாதனை படைத்தார்.

முன்னதாக, 2008ஆம் ஆண்டு நமடகஸ்வௌ மத்திய கல்லூரியைச் சேர்ந்த எல்.ஏ நிமாலி நிலைநாட்டிய சாதனையை சுமார் 10 வருடங்களுக்குப் பிறகு அவர் முறியடித்தார்.

இதேவேளை, ஜப்பானின் கிபு நகரில் கடந்த ஜுன் மாதம் நடைபெற்ற ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரில் ஆண்களுக்கான 400 மீற்றரில் வெள்ளிப் பதக்கத்தையும், அதற்குமுன் நடைபெற்ற தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் தொடரில் 400 மீற்றர் மற்றும் 400 மீற்றர் சட்டவேலி ஓட்டப் போட்டிகளில் முறையே தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்ற குருநாகல் மலியதேவ கல்லூரி மாணவன் பசிந்து கொடிகார (52.69 செக்.) புதிய போட்டிச் சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார்.

இந்த மாதம் இந்தோனேஷியாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு விழாவில் இலங்கை 4 x 400 அஞ்சலோட்ட குழாமிலும் பசிந்து கொடிகார இடம்பெற்றிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

12 போட்டி சாதனைகள் முறியடிப்பு

இன்று காலை நடைபெற்ற 20 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான 5000 மீற்றர் வேக நடைப் போட்டியில் மாகந்துர மத்திய கல்லூரி மாணவி சசிகலா தில்ஹானி (27 நிமி. 58.35 செக்.), புதிய போட்டிச் சாதனை படைத்தார்.

முன்னதாக, 2008ஆம் ஆண்டு நமடகஸ்வௌ மத்திய கல்லூரியைச் சேர்ந்த எல்.ஏ நிமாலி நிலைநாட்டிய சாதனையை சுமார் 10 வருடங்களுக்குப் பிறகு அவர் முறியடித்தார்.

இதேவேளை, ஜப்பானின் கிபு நகரில் கடந்த ஜுன் மாதம் நடைபெற்ற ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரில் ஆண்களுக்கான 400 மீற்றரில் வெள்ளிப் பதக்கத்தையும், அதற்குமுன் நடைபெற்ற தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் தொடரில் 400 மீற்றர் மற்றும் 400 மீற்றர் சட்டவேலி ஓட்டப் போட்டிகளில் முறையே தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்ற குருநாகல் மலியதேவ கல்லூரி மாணவன் பசிந்து கொடிகார (52.69 செக்.) புதிய போட்டிச் சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார்.

இந்த மாதம் இந்தோனேஷியாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு விழாவில் இலங்கை 4 x 400 அஞ்சலோட்ட குழாமிலும் பசிந்து கொடிகார இடம்பெற்றிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இதேவேளை, ஆர்ஜென்டீனாவின் புவனர்ஸ் அயர்ஸில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 6ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள மூன்றாவது இளையோர் ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தவுள்ள கொழும்பு றோயல் கல்லூரி மாணவனான செனிரு அமரசிங்க, 18 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான உயரம் பாய்தலில் 2.10 மீற்றர் உயரத்தைத் தாவி புதிய போட்டி சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார்.

முன்னதாக, 2004ஆம் ஆண்டு கொடகவல மத்திய கல்லூரியைச் சேர்ந்த டி. ரணதுங்கவினால் நிலைநாட்டிய சாதனையை சுமார் 14 வருடங்களுக்குப் பிறகு அவர் முறியடித்தார்.

இதேநேரம், மத்திய தூரப் போட்டிகளில் தேசிய மற்றும் தெற்காசிய சம்பியனாகிய வலள ஏ. ரத்னாயக்க கல்லூரி மாணவி டில்ஷி குமாரசிங்க, 20 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் (2நிமி. 12.67 செக்.) புதிய போட்டிச் சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார்.

 

இதேவேளை, 16 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் கொழும்பு பிஷப்ஸ் கல்லூரி மாணவி ஒவினி சந்திரசேகர (13.15 செக்.), 18 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் நீர்கொழும்பு மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரியைச் சேர்ந்த ரமேஷ் மல்ஷான் (21.92 செக்.), 20 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் வலள ஏ ரத்னாயக்க கல்லூரியைச் சேர்ந்த டில்ஷி குமாரசிங்க (2நிமி. 12.67 செக்.) மற்றும் 16 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் மாதம்பே டி.எஸ் சேனநாயக்க கல்லூரியைச் சேர்ந்த லஹிரு அவிஷ்க குருசிங்க (ஒரு நிமி. 59..02 செக்.), ஆகிய வீரர்கள் புதிய போட்டி சாதனைகளை நிகழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

88 ஆவது தடவையாகவும் நடைபெற்றுவருகின்ற சேர். ஜோன் டார்பட் சிரேஷ்ட மெய்வல்லுனர் தொடரின் மூன்றாவது நாள் போட்டிகள் நாளை (21) நடைபெறவுள்ளது.

http://www.thepapare.com/

Link to comment
Share on other sites

ஜோன் டார்பட் மெய்வல்லுனரில் பிரகாசித்த ஹார்ட்லி, மகாஜனா வீரர்கள்

 

 

JT-1-696x460.jpg
 

கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் தொடர்ந்து மூன்று நாட்களாக நடைபெற்று வந்த 88ஆவது சேர். ஜோன் டார்பட் சிரேஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரின் இறுதி நாளான இன்றைய தினம் வட பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் மேலும் 3 பதக்கங்களை சுவீகரித்தனர்.

 

 

கல்வி அமைச்சு மற்றும் இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுனர் சங்கம் ஆகியன இணைந்து 88ஆவது தடவையாகவும் ஏற்பாடு செய்திருந்த சேர் ஜோன் டார்பட் சிரேஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரில் இம்முறை வட மாகாணம் சார்பாக பங்குகொண்ட யாழ், பருத்தித்துறை ஹார்ட்லி கல்லூரி மற்றும் தெல்லிப்பளை மகாஜனா கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் ஒட்டுமொத்தமாக 2 தங்கம், 6 வெள்ளி மற்றும் 2 வெண்கலப் பதக்கங்கள் உள்ளடங்கலாக 11 பதக்கங்களை வென்றனர்.

எனினும், அண்மைக்காலமாக தேசிய மற்றும் அகில இலங்கை பாடசாலை மட்டத்தில் மைதான நிகழ்ச்சிகளில் திறமைகளை வெளிப்படுத்தி பதக்கங்களை வென்று வருகின்ற வட பகுதியைச் சேர்ந்த பெரும்பாலான பாடசாலை வீரர்கள், வழமை போன்று இம்முறை நடைபெற்ற சேர். ஜோன் டாபர்ட் சிரேஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரில் பங்குகொள்ளவில்லை.

கடந்த ஐந்து வருடங்களாக தொடர்ச்சியாக ஜோன் டாபர்ட் மெய்வல்லுனர் போட்டித் தொடரில் பங்குகொண்டு பதக்கங்களை வென்று வருகின்ற யாழ். ஹார்ட்லி கல்லூரி சார்பாக இம்முறை 3 வீரர்கள் கலந்துகொண்டிருந்தனர். இதில் மைதான நிகழ்ச்சிகளான குண்டு போடுதல், பரிதிவட்டம் எறிதல் மற்றும் ஈட்டி எறிதல் நிகழ்ச்சிகளில் பங்குபற்றிய சுசிந்திரகுமார் மிதுன்ராஜ், 2 வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப் பதக்கத்தினை வென்று அசத்தினார்.

இந்த நிலையில், போட்டிகளின் முதல் நாளான நேற்றுமுன்தினம் நடைபெற்ற 16 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் பங்குகொண்ட மிதுன்ராஜ், வெண்கலப் பதக்கம் வென்று அக்கல்லூரிக்காக முதல் பதக்கத்தை வென்று கொடுத்தார்.

போட்டிகளின் 2ஆவது நாளான நேற்று (20) நடைபெற்ற பரிதிவட்டம் எறிதலில் அவர் 53.79 மீற்றர் தூரத்தைப் பதிவுசெய்து முன்னைய போட்டி சாதனையை முறியடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.

இதனையடுத்து போட்டிகளின் இறுதி நாளான இன்று காலை (10) நடைபெற்ற ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் பங்குகொண்ட மிதுன்ராஜ், 57.60 மீற்றர் தூரத்தை எறிந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

mithun-raj-1-1.jpg

முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம் கொழும்பில் நடைபெற்ற 56 ஆவது கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் 54.33 மீற்றர் தூரத்தை எறிந்து அவர் வெள்ளிப் பதக்கத்தை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் இறுதிவரை மிதுனுக்கு பலத்த போட்டியைக் கொடுத்திருந்த கொழும்பு புனித பேதுரு கல்லூரியைச் சேர்ந்த ருமேஷ் தரங்க 66.50 மீற்றர் தூரத்தை எறிந்து தங்கப் பதக்கத்தையும், சிலாபம் புனித மரியாள் கல்லூரியைச் சேர்ந்த ஹஷான் கோசல 55.15 மீற்றர் தூரத்தை எறிந்து வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.

எனினும், இப்போட்டியில் முதல் ஐந்து இடங்களையும் பெற்றுக்கொண்ட வீரர்கள் வர்ண சாதனைகளை பெற்றுக்கொண்டமை சிறப்பம்சமாகும்.

மகாஜனாவுக்கு எட்டுப் பதக்கங்கள்

இன்று காலை நடைபெற்ற 18 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் பங்குகொண்ட தெல்லிப்பளை மகாஜனா கல்லூரி மாணவிகளான சந்திரசேகரன் ஹெரீனா மற்றும் ரோஹினி கனகசுந்தரம் ஆகியோர் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை சுவீகரித்துக் கொண்டனர்

 

 

அண்மைக்காலமாக வட மாகாணத்தைப் பிரதிநித்துப்படுத்தி தேசிய மட்டப் போட்டிகளில் பங்குபற்றி வருகின்ற பாடசாலை மாணவியான ஹெரீனாவுக்கு, இம்முறை ஜோன் டார்பட் மெய்வல்லுனர் போட்டிகளில் எதிர்ப்பாத்தளவு திறமைகளை வெளிப்படுத்த முடியாமல் போனது.

இப்போட்டியின் ஆரம்பத்தில் 2.85 மீற்றர் உயரத்தை ஹெரீனா வெற்றிகரமாக தாவினார். எனினும், 2 ஆவது சுற்றில் 2.95 மீற்றர் உயரத்தை தாவுவதற்காக அவர் மேற்கொண்ட 3 முயற்சிகளும் தோல்வியில் முடிவடைய இறுதியில் 2.85 மீற்றர் உயரத்தைப் பதிவு செய்து இரண்டாவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

Hareena-1.jpgமுன்னதாக, கடந்த ஏப்ரல் மாதம் கொழும்பில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு விழா தகுதிகாண் போட்டிகளின் முதல் சுற்றில் அனித்தா ஜெகதீஸ்வரனுடன் போட்டியிட்ட ஹெரீனா, தேசிய மட்ட வீராங்கனைகளையெல்லாம் பின்தள்ளி 2ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

குறித்த போட்டியில் 3.10 மீற்றர் உயரத்தைத் தாவிய அவர், கோலூன்றிப் பாய்தலில் தனது சிறந்த உயரத்தையும் பதிவு செய்தார்.

அதேபோல, கடந்த ஏப்ரல் மாத முற்பகுதியில் நடைபெற்ற தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரில் 18 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் பங்குகொண்ட ஹெரீனா, தனது சொந்த போட்டி சாதனையை 0.01 மீற்றரினால் தவறவிட்டு (2.90 மீற்றர்) வெள்ளிப் பதக்கத்தை சுவீகரித்தார்.

இதுஇவ்வாறிருக்க, நேற்றுமுன்தினம் நடைபெற்ற 18 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான உயரம் பாய்தலில் பங்குகொண்ட ஹெரீனா, 1.54 மீற்றர் உயரம் தாவி வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றுக்கொண்டமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.  

இதேநேரம், நீர்கொழும்பு நியூஸ்டட் கல்லூரியைச் சேர்ந்த அவ்ஷிதி விக்ரமசேகர, 3.00 மீற்றர் உயரம் தாவி தங்கப் பதக்கத்தையும், 2.65 மீற்றர் உயரம் தாவிய மகாஜனாவின் மற்றுமொரு மாணவியான கே. ரோஹினிக்கு வெண்கலப் பதக்கமும் கிட்டியது.  

இதன்படி, கடந்த மூன்று தினங்களாக நடைபெற்ற சேர். ஜோன் டார்பட் சிரேஷ்ட மெய்வல்லுனர் தொடரில் பங்குகொண்ட தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரி மாணவர்கள் 2 தங்கம், 4 வெள்ளி மற்றும் 2 வெண்கலப் பதக்கங்களை வென்றனர்.

http://www.thepapare.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அநேகமான போட்டிகளில் மகாஜனா கல்லூரிதான் கலக்குது போலக் கிடக்குது.வாழ்த்துக்கள்... யாராவது மகாஜனா மாணவர்கள் இங்கே இல்லையா, வந்து ரெண்டு வார்த்தை பிள்ளைகளை வாழ்த்தி விட்டுப் போறது.....!  tw_blush:

Link to comment
Share on other sites

இளம் பயிற்சியாளராக மகாஜனாவுக்கு பெருமை தேடிக் கொடுத்த டிலக்ஷான்

 

கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெற்ற 88ஆவது சேர் ஜோன் டார்பட் சிரேஷ்ட மெய்வல்லுனர் போட்டிகளில் யாழ். தெல்லிப்பளை மகாஜனா கல்லூரிக்கு பல பதக்கங்களைப் பெற்றுக் கொடுக்க சிறந்த முறையில் பயிற்சிகளை வழங்கிய அக்கல்லூரியின் கோலூன்றிப் பாய்தலுக்கான உதவிப் பயிற்றுவிப்பாளர் டிலக்ஷான்

 

 

 

 

அம்மாவின் வழிகாட்டலினால் சாதனை படைத்த மாணவன் ஜம்சன்

கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெற்ற 88ஆவது சேர் ஜோன் டார்பட் சிரேஷ்ட மெய்வல்லுனர் போட்டிகளில் 18 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் வெண்கலப் பதக்கம் வென்ற யாழ். தெல்லிப்பளை மகாஜனா கல்லூரி மாணவனான எஸ். ஜம்சன், வெற்றியின் பின்னர்

 

 

 

தடைகளைத் தாண்டி சாதித்த மகாஜனா வீரன் ஜினோயன்

கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெற்ற 88ஆவது சேர் ஜோன் டார்பட் சிரேஷ்ட மெய்வல்லுனர் போட்டிகளில் 18 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் வெண்கலப் பதக்கம் வென்ற யாழ். தெல்லிப்பளை மகாஜனா கல்லூரி மாணவனான ஏ. ஜினோயன்

 

 

இலங்கைக்கு பெருமை தேடிக் கொடுக்க காத்திருக்கும் சுகிர்தன்

கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெற்ற 88ஆவது சேர் ஜோன் டார்பட் சிரேஷ்ட மெய்வல்லுனர் போட்டிகளில் 18 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் தங்கப் பதக்கம் வென்ற யாழ். தெல்லிப்பளை மகாஜனா கல்லூரி மாணவனான எஸ். சுகிதர்தன்

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.