Jump to content

யாழ். வீதி ஒழுங்குப் பிரச்சினை ; விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்


Recommended Posts

யாழ். வீதி ஒழுங்குப் பிரச்சினை ; விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்

 

 

யாழ்ப்பாணத்தில் பிரதான வீதிகளில் 15 இடங்களில் வீதி ஒழுங்கு பிரச்சினைகள் உள்ளதாகவும், அவற்றை அதிகாரிகளுக்கு சுட்டிக்காட்டியபோது அதனை அவர்கள் ஏற்றுக் கொண்டதாகவும் யாழ். பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் வருண ஜயசுந்தர தெரிவித்தார்.

police.jpg

நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது இதனை தெரிவித்த  அவர்,

யாழ்ப்பாணத்தின் போக்குவரத்து பிரச்சசினைகள் மற்றும் விபத்துகளை தடுப்பது தொடர்பாக அதிகாரிகளுடன் சந்திப்பு ஒன்றினை மேற்கொண்டு இருந்தேன்.

அதன்போது,  யாழ்ப்பாணத்தில் போக்குவரத்து நெரிசல்கள், விபத்துக்ளை கட்டுப்படுத்தும் நோக்கில் நாம் வீதி ஒழுங்கு தொடர்பாக  கலந்துரையாடினோம். முக்கிய வீதிகளில் உள்ள குறைபாடுகளை ஒளிப்படங்களின் ஆதரத்துடன் நாம் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியுள்ளோம்.

எனவே அதிகாரிகள் அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என நான் நம்புகின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.

http://www.virakesari.lk/article/40780

Link to comment
Share on other sites

யாழ்ப்பாணத்தில் பிரதான வீதிகளில் வீதி ஒழுங்கு பிரச்சனைகள் உள்ளன :

gtn-jaffna.jpg?resize=259%2C194
யாழ்ப்பாணத்தில் பிரதான வீதிகளில் 15 இடங்களில் வீதி ஒழுங்கு பிரச்சனைகள் உள்ளதாகவும், அவற்றை சுட்டிக்காட்டிய போது அதிகாரிகளும் ஏற்றுக் கொண்டனர் எனவும் அதனால் அவற்றின் மீது நடவடிக்கை எடுப்பார்கள் என தான் நம்புவதாகவும் யாழ். பிராந்திய சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் வருண ஜயசுந்தர தெரிவித்துள்ளார். யாழில் உள்ள தனது அலுவலகத்தில் இன்று புதன்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் ,

 

யாழ்ப்பாணத்தின் போக்குவரத்து பிரச்சினைகள் மற்றும் விபத்துகளை தடுப்பது தொடர்பாக நேற்றுமுன்தினம் அதிகாரிளுடன் சந்திப்பு ஒன்றினை மேற்கொண்டு இருந்தேன். அதன் போது, யாழ்ப்பாணத்தில் போக்குவரத்து நெரிசல்கள், விபத்துக்ளை கட்டுப்படுத்தும் நோக்கில் நாம் வீதி ஒழுங்கு தொடர்பாக கலந்துரையாடினோம். முக்கிய வீதிகளில் உள்ள குறைபாடுகளை ஒளிப்படங்களின் ஆதரத்துடன் நாம் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியுள்ளோம்.

குறிப்பாக யாழ்நகரின் பிரதான வீதிகளில் வீதிக் கோடுகள் உரிய முறையில் வரையப்படவில்லை. அதிலும் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்துக்கு முன்னாள் உள்ள பாதசாரி கடவை ஆபத்தினை ஏற்படுத்தக் கூடிய வகையில் அமைந்துள்ளதுடன் மண்டபத்தின் வாசலுக்கு நேரெதிரே காணப்படுகின்றது.

இதனால் மண்டபத்தில் இருந்து வீதிக்கு வரும் சிறுவர்கள்,பெரியவர்கள் திடீரென கடப்பதால் அதிக விபத்து அங்கு இடம்பெறுகின்றது.எனவே அந்த கடவையை அந்த இடத்தில் இருந்து சற்று தூரம் தள்ளி மாற்றி அமைக்க வேண்டும். என வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு கோரியுள்ளேன்.

மேலும் யாழ்ப்பாண நகரில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடமாக யாழ் போதனா வைத்தியசாலை வீதி காணப்படுகின்றது. அங்கு மூன்று முச்சக்கர வண்டி தரிப்பிடங்கள் உள்ளன.அவர்களின் பிரதிநிதிகளுடன் நாம் பேசினோம். அத்துடன் யாழ் மாநகர சபையின் பொறியியலாரும் கலந்துரையாடலில் கலந்து கொண்டார். இருவரிடமும் முச்சக்கர வண்டிகளை அங்கு நிறுத்தது.அங்கு சேவையில் ஈடுபடும் சாரதிகள் தொடர்பு இலக்கங்களுடன் ஓர் விளம்பர பலகையை வைப்பதன் ஊடாக அங்கு வாகனங்களின் எண்னிக்கை குறைவாக இருக்கும்.

அவ்வாறு செயற்படடால் வாகன நெரிசல் குறையும்.இந்த முறை பிற மாவட்டங்களிலும் உள்ளன.இதை அவர்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர். மேலும் யாழ் நகரில் உள்ள சில புடவை வியாபார நிலையங்கள் நடைபாதைகளில் புடவையையும்,பொம்மைகளையும் காடசிப் படுத்துகின்றனர்.இதனால் நடைபாதையில் பயணிக்க வேண்டிய மக்கள் வீதியில் நடக்கின்றனர். இதனால் விபத்து ஏற்படுகின்றது.எனவே அவ்வாறான கடைக்காரர்களுக்கு எதிராக சடட நடவடிக்கையை இனி எடுப்போம் என தெரிவித்தார்

http://globaltamilnews.net/2018/96287/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.