Jump to content

ராஜீவ்காந்தி கொலை வழக்கு: 4 இலங்கையர்களின் நிலை என்ன?


Recommended Posts

ராஜீவ்காந்தி கொலை வழக்கு: 4 இலங்கையர்களின் நிலை என்ன?

ராஜீவ் காந்திபடத்தின் காப்புரிமைSHARAD SAXENA/THE INDIA TODAY GROUP/GETTY IMAGES

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ளவர்களை விடுவிக்க தமிழக அமைச்சரவை பரிந்துரைத்துள்ளது. ஆனால், இவர்களில் நான்கு பேர் இலங்கை குடிமக்களாக இருக்கும் நிலையில் விடுதலைக்குப் பிறகு அவர்கள் எங்கு செல்வார்கள்?

ராஜீவ் காந்தி கொலையில் தண்டிக்கப்பட்டு கடந்த 27 ஆண்டுகளாக சிறையில் உள்ள சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோரை விடுவிக்க தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

இந்தத் தீர்மானம் தற்போது ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இதுவரை இந்த விவகாரத்தில் எந்த முடிவும் எடுக்கவில்லை.

இந்த ஏழு பேரில் நளினியின் கணவர் ஸ்ரீஹரன் என்ற முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய நான்கு பேர் இலங்கையைச் சேர்ந்தவர்கள். இவர்களில் சாந்தன் இலங்கைக் கடவுச் சீட்டின் மூலமாகவே இந்தியா வந்தவர். முருகனிடமும் கடவுச் சீட்டு உண்டு. ராபர்ட் பயஸும் ஜெயக்குமாரும் 1990 செப்டம்பரில் தமிழகத்திற்கு வந்தவுடன் அகதிகளாகப் பதிவுசெய்துகொண்டவர்கள்.

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அமைச்சரவைத் தீர்மானத்தை ஏற்று, அனைவரும் விடுதலை செய்யப்படும் நிலையில் சட்ட ரீதியாகப் பார்த்தால் இவர்கள் இலங்கைக்கே திரும்ப வேண்டியிருக்கும். ஆனால், இந்த நால்வரில் எத்தனை பேர் இலங்கைக்குத் திரும்ப விரும்புவார்கள் என்பது கேள்விக்குறிதான்.

தமிழக ஆளுநர்படத்தின் காப்புரிமைHTTP://WWW.TNRAJBHAVAN.GOV.IN/

இந்த நால்வரில் ஸ்ரீஹரன் என்ற முருகனும் ராபர்ட் பயசும் ஆகியோர் வெளிநாடுகளில் உள்ள தங்களது உறவினர்களின் மூலம் அந்த நாடுகளுக்குச் சென்றுவிடக்கூடும்.

சாந்தனைப் பொறுத்தவரை, தன் மீதான வழக்கு அடையாள மாறுபாட்டால் தொடுக்கப்பட்டது எனக் கருதுகிறார். ஆகவே தான் இலங்கை திரும்பினால், தனக்கு பிரச்சனை இருக்காது என அவர் கருதினால், தன் கடவுச் சீட்டைப் புதுப்பித்துக்கொண்டு இலங்கைக்கே அவர் செல்லலாம்.

மீதமிருக்கும் ஜெயக்குமாரின் குடும்பத்தினர் தமிழகத்தில்தான் வசிக்கின்றனர். அவருடைய மனைவி 80களின் இறுதியிலேயே இந்தியா வந்தவர். அதனால், அவர் தன் குடும்பத்தினரோடு இணைந்து வாழ விரும்பலாம்.

ஆனால், இலங்கை திரும்புவதைத் தவிர்த்த பிற வாய்ப்புகள் எல்லாமே மிக சிக்கலானவை என்கிறார்கள் சர்வதேச குடியேற்றச் சட்டங்களை அறிந்தவர்கள்.

ராஜீவ் கொலைபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

"வெளிநாட்டினர் ஏதாவது குற்றங்களுக்காக இந்தியாவில் தண்டிக்கப்பட்டால், தண்டனைக் காலம் முடிவடைந்த பிறகு அவர்கள் சம்பந்தப்பட்ட நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்படுவதே இந்தியாவில் நடைமுறை. ஆகவே, இந்த நான்கு பேரையும் இலங்கைக்கு திருப்பி அனுப்பவே இந்தியா முயற்சிசெய்யும்" என்கிறார் லயோலா கல்லூரியின் பேராசிரியரான க்ளாட்ஸன் சேவியர்.

இலங்கை

 

சிறையிலிருந்து விடுதலை ஆன பிறகு இந்த நான்கு பேரும் இலங்கைக்குத் திரும்ப விரும்பாவிட்டால், இங்கேயே அரசியல் அடைக்கலம் கோருவதோ, அகதிகளாக இருக்க விரும்புவதோ முடியாது.

காரணம், இந்தியாவில் அடைக்கலம் கோருவதற்கென எந்தச் சட்டமும் கிடையாது. 2013ஆம் ஆண்டு ஜனவரிக்குப் பிறகு இலங்கையிலிருந்து ஆவணங்களின்றி வருபவர்களை அகதிகளுக்கான முகாமிலோ, பதிவுசெய்துகொண்டு வெளியிலோ தங்குவதற்கோ அனுமதி அளிப்பதில்லை.

ராஜீவ் கொலைபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

இந்த நால்வரைப் பொறுத்தவரை அவர்கள் ஏற்கனவே இந்தியாவுக்கு வந்துவிட்டவர்கள் என்றாலும் அவர்களுக்கு அகதி அந்தஸ்தை அளிக்க மத்திய அரசு விரும்புமா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.

தாங்கள் இலங்கைக்குத் திரும்புவதால் இனம், பால், அரசியல் நிலைப்பாடு சார்ந்து தாங்கள் தண்டிக்கப்படலாம் என்று அவர்கள் கருதினால், விடுதலையானவுடன் வேறு நாட்டில் அடைக்கலம் கோரலாம்.

இலங்கைஇலங்கை

"இவர்களில் யாருடைய ரத்த உறவினராவது வெளிநாடுகளில் இருந்தால், அவர்கள் 'ஸ்பான்ஸர்ஷிப்' அளிக்கும்பட்சத்தில், அந்த நாட்டிற்கு இவர்கள் குடியேறிவிட முடியும். அதற்காக இலங்கை அரசு பாஸ்போர்ட் அளிக்க வேண்டிய அவசியம்கூட இல்லை. சமீபத்தில் ஈழ நேரு என்பவர் அப்படித்தான் வெளியேறினார்" என்கிறார் அகதிகள் மத்தியில் செயல்பட்டுவரும் சர்வதேச அமைப்பைச் சேர்ந்த அதிகாரி ஒருவர்.

இம்மாதிரி ஒரு மூன்றாவது நாட்டில் அடைக்கலம் கிடைக்கும்வரை, ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் அமைப்பான யுஎன்எச்சிஆரில் பதிவுசெய்து, மற்றொரு நாட்டில் அகதி நிலையோ, அடைக்கல நிலையோ உறுதிப்படும்வரை இங்கே இருக்கலாம். இவைதான் இவர்களுக்கு முன்பாக இருக்கும் வாய்ப்புகள் என்கிறார் க்ளாட்ஸன்.

ராஜீவ் காந்திபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

ஜெயக்குமாரின் குடும்பத்தினர் இங்கு இருந்தாலும் அவருடைய தனிப்பட்ட நிலையை வைத்தே அவர் இந்தியாவில் தங்கியிருக்க அனுமதிக்கப்படுவாரா, இல்லையா என்பதும் தீர்மானிக்கப்படும் என்கிறார் க்ளாட்ஸன்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 26 பேர் தண்டிக்கப்பட்டனர். இதில் 13 பேர் இலங்கைத் தமிழர்கள். உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டபோது இந்த ஏழு பேரைத் தவிர மற்ற 19 பேர் விடுவிக்கப்பட்டனர்.

விடுவிக்கப்பட்ட 19 பேரில் 9 பேர் இலங்கைத் தமிழர்கள். இவர்கள் அனைவரும் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பிறகு, அகதிகளுக்கான சிறப்பு முகாம்களில் வைக்கப்பட்டனர்.

அவர்களில் கடவுச் சீட்டு வைத்திருந்த, முறையான விசாக்களில் இந்தியா வந்த 3 பேர் உடனடியாக இலங்கைக்குச் சென்றனர். மீதமிருந்தவர்கள் சில நாட்களில் இலங்கையிலும் அதன் பிறகு வெளிநாடுகளிலும் குடியேறினர்.

https://www.bbc.com/tamil/india-45574204

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.