Jump to content

சம்பிக்கவின் ஆபத்தான ‘சமாதானத் தூது’


Recommended Posts

சம்பிக்கவின் ஆபத்தான ‘சமாதானத் தூது’
Gopikrishna Kanagalingam /

இலங்கை மத்திய அரசாங்கத்தின் முக்கியமான அமைச்சரொருவர், சமாதானத் தூதொன்றோடு வந்திருக்கிறார். கடும்போக்குக் கொள்கைகளைக் கொண்டவரெனக் கருதப்படும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க, போர்க் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருக்கும் இராணுவத்தினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களுக்கும், பொதுமன்னிப்பு வழங்கப்பட வேண்டுமெனக் கோரியிருக்கிறார்.   

பாடசாலைக் காலங்களில், இரண்டு மாணவர்களுக்கிடையில் ஏற்படும் பிடுங்குப்பாடுகளைத் தீர்க்கும் நோக்கத்துடன், அப்பகுதிக்கு வரும் ஆசிரியரொருவர், “சரி, இரண்டு பேரும் கைகுலுக்கி, சமாதானமாகிக் கொள்ளுங்கள்” என்று சொல்வதைப் போன்று தான், அமைச்சரின் கருத்து அமைந்திருக்கிறது.  

ஏனென்றால், விடுதலைப் புலிகளை இவ்விடயத்தில் இழுத்ததன் மூலம், படையினர் மீதுள்ள குற்றச்சாட்டுகளை வலுவிழக்கச் செய்யும் முயற்சியாகவே இதைப் பார்க்க வேண்டியதாகவிருக்கிறது. ஏற்கெனவே, படையினர் மீதான குற்றச்சாட்டுகளை இல்லாமல் செய்வதற்கான பரிந்துரையை அல்லது திட்டத்தை, ஐக்கிய நாடுகளில் சமர்ப்பிக்கப் போவதாக, ஜனாதிபதி கூறியிருக்கிறார்.

ஆகவே, படையினர் மீதான அழுத்தங்கள் அண்மைக்காலத்தில் அதிகரித்துவரும் நிலையில், அவற்றைச் சமாளிப்பதற்காக, பல்வேறுபட்ட திட்டங்களுடன் அரசாங்கம் களமிறங்கியிருப்பதைப் பார்க்கக்கூடியதாக இருக்கிறது.   

ஆனாலும் கூட, படையினரையும் விடுதலைப் புலிகளையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்கும் இந்த முயற்சி ஆபத்தானது. 

விடுதலைப் புலிகள் என்ற அமைப்பு, தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்காகப் போராடிய அமைப்பு என்பது தான், தமிழ் மக்களில் பெரும்பாலானோரின் நிலைப்பாடாக இருக்கிறது. இதில், எந்தவிதமான விட்டுக்கொடுப்புகளையும் மேற்கொள்ள அவர்கள் தயாராக இல்லை. ஆனால், அதையும் தாண்டி, விடுதலைப் புலிகள் அமைப்பு, ஆயுதக்குழு என்பது தான், உணர்வுகளுக்கு அப்பாலான உண்மையாக இருக்கிறது.

மறுபக்கமாக, இலங்கைப் படையினர் என்போர், நாட்டின் சட்டதிட்டங்களை மதித்து உருவாக்கப்பட்ட, இறையாண்மைமிக்க நாடொன்றின் படையினர். ஆயுதக்குழுவொன்றையும் படையினரையும் ஒரே மட்டில் வைத்துப் பார்க்க முனைவது, எப்போதுமே சரியானதாக அமையாது.

“இரண்டு தரப்புகளுக்கும் பொது மன்னிப்பு வழங்குவோம்” என்று சொல்வதன் மூலமாக, “இரண்டு தரப்புகளும் தவறு செய்தன” என்ற, பொதுமைப்பாடான கருத்தை ஏற்படுத்த முனைவதையும் அனுமதிக்க முடியாது.   

இறுதிக்கட்ட யுத்தத்தில், தமிழ் மக்களைக் கேடயங்களாகப் பயன்படுத்தினர் என்ற குற்றச்சாட்டு, புலிகள் மீது இருக்கிறது. அதேபோல், சிறுவர்களைப் படைகளுக்குச் சேர்த்தமை; இறுதிக்கட்ட யுத்தத்தில், புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலிருந்து தப்பியோடியோர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியமை; இறுதிக்கட்ட யுத்தத்துக்கு முன்னரான காலப்பகுதிகளில் அப்பாவிப் பொதுமக்கள் மீதான தாக்குதல்கள்; அரசியல் தலைவர்களின் கொலைகள் போன்றனவெல்லாம், புலிகள் அமைப்பு மீது காணப்படும், பாரதூரமான குற்றச்சாட்டுகள். நடுநிலைப் பார்வையிலிருந்து பார்க்கும் போது, இவ்வாறான குற்றச்சாட்டுகள், அவ்வமைப்பின் நோக்கங்கள் குறித்துக் கேள்விகளை எழுப்புகின்றன.   

ஆனால், நாட்டின் இறையாண்மையைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட படையினர், பொதுமக்களை வேண்டுமென்றே கொன்றமை; சரணடைந்தவர்களை, சர்வதேச சட்டத்துக்கு முரணாகக் கொன்றமை; வைத்தியசாலைகள் உள்ளிட்ட, பொதுமக்கள் தங்கியிருந்த இடங்கள் மீது வேண்டுமென்றே தாக்குதல்களை நடத்தியமை; பாலியல் குற்றங்கள்; சித்திரவதை போன்ற குற்றங்களையெல்லாம் செய்தனர் என்ற குற்றச்சாட்டு, சர்வதேச மட்டத்தில் முன்வைக்கப்பட்டிருக்கிறது. இனவழிப்பை மேற்கொண்டார்கள் என, தமிழர் தரப்பால் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருக்கிறது.

விடுதலைப் புலிகள் என்ற ஆயுதக்குழு மீதான குற்றச்சாட்டுகளையும், இக்குற்றச்சாட்டுகளையும் ஒப்பிட முடியுமா? அதுவும், அவ்வமைப்பு அழிக்கப்பட்ட பின்னர், அவ்வமைப்பு மீதான குற்றச்சாட்டுகளைக் காட்டி, படையினரதும் அரசாங்கத்தினதும் அரசினதும் பொறுப்புக்கூறல் பொறுப்பிலிருந்து தப்பிக்க முடியுமா என்பது, கேள்விக்குரிய ஒரு விடயம் தான்.   

ஆனாலும் கூட, விடுதலைப் புலிகளின் பெயரை, அமைச்சர் சம்பிக்க பயன்படுத்தியமைக்கும் ஒரு காரணம் இருக்கிறது. விடுதலைப் புலிகள் அமைப்பு, தவறு செய்ததாக ஏற்றுக்கொள்ளும் நிலைப்பாட்டில், பெரும்பான்மையான தமிழர்கள் இல்லை என்பது தான் அக்காரணம். ஆகவே, விடுதலைப் புலிகள் தவறு செய்தார்கள் என்று ஏற்றுக்கொள்ள தமிழ்த் தரப்பு மறுக்கும் போது, அதே நிலைப்பாட்டைப் பயன்படுத்தி, படையினர் மீதான குற்றச்சாட்டுகளையும் நீர்த்துப் போகச் செய்யும் முயற்சியாக இதைப் பார்க்க முடியும்.   

ஏனென்றால், தமிழ்த் தரப்பின் மிகப்பெரிய பலவீனங்களில் ஒன்றாக, விடுதலைப் புலிகள், தவறே செய்யாதவர்கள் என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருப்பது காணப்படுகிறது. 

இதில், ஒரு விடயத்தைத் தெளிவுபடுத்துதல் அவசியமானது. விடுதலைப் புலிகள் மீதான விமர்சனங்கள், அவர்களின் உருவாக்கத்தை நிராகரிக்கின்றவையாகக் கருதப்படத் தேவையில்லை. விடுதலைப் புலிகள் மீதான முற்றுமுழுதான விமர்சனங்களைக் கொண்டவர்களும் கூட, விடுதலைப் புலிகள் அமைப்பு என்ற அமைப்பு, இலங்கையில் தோன்றுவதற்கான நியாயப்பாட்டை ஏற்றுக்கொள்வர். ஆகவே, விடுதலைப் புலிகள் மீதான விமர்சனங்கள், அவ்வமைப்பைக் கேள்விப்படுத்துவதாகவோ அல்லது அவ்வமைப்புக்கான நியாயப்பாட்டை நிராகரிப்பனவாகவோ கருதப்படக்கூடாது.   

விடுதலைப் புலிகள் இயக்கம், ஆயுதரீதியாக அழிக்கப்பட்ட பின்னர், அவ்வமைப்பு மீதான விமர்சனங்கள் இருந்தாலென்ன, இல்லாவிட்டாலென்ன என்ற கேள்வி இருக்கிறது. அதேபோல், விடுதலைப் புலிகள் மீதான விமர்சனங்கள் என்று சொல்லப்பட்டு, தெற்கில் முன்வைக்கப்படுகின்ற விமர்சனங்களில் பெரும்பாலானவை, தமிழ் மக்கள் மீதான அல்லது தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் மீதான விமர்சனங்களாக இருக்கின்றன என்ற நியாயமான, யதார்த்தபூர்வமான கருத்தும் இருக்கிறது.   

விடுதலைப் புலிகள் மீதும் தமிழ் மக்கள் மீதும் விமர்சனங்களை அதிகமாக முன்வைப்பதன் மூலம், இலங்கை அரச (இலங்கை அரசாங்கம் இல்லை, இலங்கை அரசு. இலங்கையின் அரசாங்கங்கள் எப்போது மாறிவந்தாலும், இலங்கையிலுள்ள அரச கட்டமைப்பு, எப்போதும் தமிழர்களுக்கு எதிரானதாகவே இருந்தது என்பது தவிர்க்கப்பட முடியாத உண்மை) தரப்பில் மேற்கொள்ளப்பட்ட நீதியின்மைகளுக்கும் கொடூரங்களுக்கும் அவை ஈடாகுமா என்ற கேள்வியும் தவிர்க்கப்பட முடியாதது.   

ஆனாலும் கூட, போருக்குப் பின்னரான காலப்பகுதியில், போரில் தமிழ்த் தரப்பு (அல்லது விடுதலைப் புலிகள் தரப்பு. பார்ப்போரின் பார்வையைப் பொறுத்து இது வேறுபடும்) தோல்வியடைந்த பின்னர், அவை தொடர்பில் போதுமானளவு ஆய்வுகள், நடுநிலையான முறையில் மேற்கொள்ளப்பட்டனவா என்ற கேள்வி இருக்கிறது. அரச, அரசாங்கத் தரப்புகள், தமிழ் மக்களுக்குச் செய்த அல்லது செய்திருக்காத விடயங்கள் குறித்தே, பிரதானமான கவனம் காணப்பட்ட பின்னர், விடுதலைப் போராட்டம் தோல்வியடைந்தமைக்கான ஏனைய காரணங்கள் முழுதாக அலசப்படவில்லை என்பது உண்மையானது. இன்னமும் கூட, “பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்” என, தமிழகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் பிழைப்பு நடத்தும் சூழலைப் பார்க்கிறோம். இவற்றுக்கு மத்தியில், ஆயுதப் போராட்டம் தொடர்பான நியாயமான ஆய்வுகள் எவ்வாறு இடம்பெற முடியும்?   

ஆயுதப் போராட்டத்தின் மீதான விமர்சனமென்பது, எதற்காக அவசியமென்ற கேள்வியெழுந்தால், விமர்சனங்களைச் செவிமடுக்கவே தயங்குகின்ற ஒரு சூழல் காணப்படும்போது, அப்போராட்டத்துக்கு எதிரான முடிவுகள் பெறப்படும் போது, அவற்றைத் தமிழ்ச் சூழல் எவ்வாறு எதிர்கொள்ளுமென்ற பிரச்சினை இருக்கிறது.   

எனவே தான், விடுதலைப் புலிகளின் பெயருக்கு அல்லது அவர்கள் மீதான சர்வதேச விமர்சனத்துக்கு, தமிழ்த் தேசிய அரசியலும் அதன் தலைமைத்துவங்களும், எவ்வாறான பதற்றத்தை வெளிப்படுத்துமெனச் சரியாகக் கணித்துவைத்துள்ள பெரும்பான்மையினத் தரப்பு, போர்க் குற்றச்சாட்டுகள் என்று வரும் போது, இரு தரப்புகளும் தான் பாதிக்கப்படும் என்ற விடயத்தை, அவ்வப்போது ஞாபகமூட்டி வந்திருக்கிறது. அதில், இறுதிக்கட்டமாகத் தான், இந்தப் பொது மன்னிப்புப் பற்றிய கதை உலாவவிடப்பட்டிருக்கிறது. இதே நிலைப்பாட்டைத் தான், ஐக்கிய நாடுகளிலும் சென்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளிப்படுத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.   

எனவே தான், அமைச்சர் சம்பிக்கவின் கருத்துக்கான எதிர்வினைகளைப் பற்றிச் சிந்திக்கும் அதேநேரத்தில், ஐக்கிய நாடுகள் போன்ற உயர்மன்றத்தில், “மன்னிப்போம், மறப்போம்” வகையிலான உரையொன்றை ஜனாதிபதி ஆற்றுவாராயின், அதற்கு என்ன பதிலளிப்பது என்பதைப் பற்றியும் ஆராய வேண்டியிருக்கிறது.

ஏனென்றால், ஐக்கிய அமெரிக்காவின் ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவான பின்னர், உலகத் தலைமையொழுங்கில் ஏற்பட்டிருக்கின்ற மாற்றங்களுக்கு மத்தியில், “மன்னிப்போம், மறப்போம்” தான் தமிழ் மக்களுக்குச் சிறந்த தீர்வு என, சில தரப்புகள் குறிப்பிடக்கூடும். அதற்கான அழுத்தமும், தமிழ்த் தரப்புக்கு வழங்கப்படலாம். அப்போது என்ன செய்யப் போகிறோம் என்பது தான், எம்முன்னாலுள்ள கேள்வியாக, இப்போது இருக்கிறது.     

  •  

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/சம்பிக்கவின்-ஆபத்தான-சமாதானத்-தூது/91-222223

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சிறிதோ பெரிதோ தவறு தவறு தானே அண்ணா.  இவர்கள் பலமுறை செய்து ருசிப்பட்டவர்களாக இருப்பார்கள். ஆனால் ஏழை எளிய மக்களாக இருந்து அமெரிக்க படிப்புக்கு முயற்சித்து அதன் அழுத்தம் காரணமாக இவ்வாறு நடந்திருந்தால் இவர்களுக்காக நானும் இரங்குகிறேன்.
    • இஸ்ரேல் இரானுக்குள் (நின்று, அதன் முகவர்களை பாவித்து) தாக்குதல் செய்தது போல தோன்றுகிறது. இப்படி செய்வதற்கு இஸ்ரேல்   இரு கூட்டங்களை பாவிக்கிறது. ஒன்று, ஈரானில் இருந்து இஸ்ரேலுக்கு வந்த  யூதர்களால். இவர்களால் ஈரானியர்களாகவே (Persian) இரானுக்குள் புழங்க முடியும்.  ஈரானின் இப்போதும் யூதர்கள் இருக்கிறார்கள், அனால், முன்பை விட மிக குறைவு. மற்றது, ஈரானில் கொடூர ஆட்சி ஷா வுக்கு, மொசாட், Savak எனும் கொடூர (இரகசிய) போலீசை உருவாக்கி கொடுத்தது.   உண்மையில், Savak ஐ உருவாக்கி தருமாறு ஷா கேட்டது CIA இடம். ஏனெனில், CIA தான், பிரித்தானியரின் வேண்டுதலில் , 1953 இல்  ஈரானின் உண்மையான சனநாயக   அரசை கவிட்டு, Sha ஐ ஆட்சிக்கு கொண்டுவந்தது. இந்த  ஈரானின் உண்மையான சனநாயக ஆட்சி 1953 இல்  கவிழ்த்தலின் முக்கிய காரணம், அன்றைய உண்மையான சனநாயக ஈரானிய அரசாங்கம் எண்ணெய் வளத்தை, கம்பனியை தேசியமயப்படுத்தியது, அதில் பிரித்தானியரின் BP தேசியமயப்படுத்தப்பட்டது. CIA அதன் குளிர் யுத்தத்தை வேலைப்பளுவால்,  Savak ஐ பயிற்சி அளித்து உருவாகுவதை Mosad இடம் அளித்தது. Mosad கொடூர Savak ஐ உருவாக்கியது. ஷா, Savak  இன் மிக கொடுமையான ஆட்சியை எதிர்க்க ஈரான் மண்ணில் அதுவாக பிறந்ததே இந்த முல்லாக்கள். முல்லாக்கள் ஆட்சியை பிடித்து, அகப்பட்ட Savak எல்லோரையும் (கொடூரமாக) கொன்றது, அனால், ஈரான் பெரும்பான்மை மக்கள் அதை வரவேற்றனர் அல்லது நிம்மதி அடைந்தனர். (முல்லாக்களுக்கும், ஈரான் மக்களுக்கும் உள்ள உறவு மேற்கால் சொல்லப்படுவது போல ஒரே வெறுப்பு அல்ல. சிலவற்றை எதிர்க்கிறாரக்ள் , சிலவற்றை வரவேற்றுகிறாரக்ள், முக்கியாக, அணுத்துறை, தொழில்நுட்ப வளர்ச்சி, இராணுவ வளர்ச்சி, குறிப்பாக அமெரிக்கா எதிர்ப்பு போன்றவை. மேற்கின் பிரச்சனை, மசகு, படிம எண்ணை, வாயு  நழுவி, மசகு, படிம எண்ணெய், வாயுவில் தவழ்ந்து மசகு, படிம எண்ணெய், வாயுவில் விழும்  ஈரானில், மேற்கிற்கு  ஒத்து ஊதக்கூடிய ஆட்சி இல்லாதது, ஈரானின் மக்கள் பற்றி முதலை கண்ணீர்  வடிக்கிறது).  முல்லாக்கள் கொன்று  எஞ்சிய Savak இன் எச்சம், சொச்சத்தை, Mosad தத்தெடுத்து பேணி வருகிறது, இரானுக்குள் இருந்து ஆட்தேர்வும் செய்கிறது, தாக்குதலுக்கு பாவிக்கிறது.  (சிறு குறிப்பு: இப்போதைய யூதர், தம்மை யூதர் என்று அழைக்கத்தொடங்கியது, சைரஸ் கிமு 500-550 களில் அவர்களை (யூதரை) (இப்போதைய ஈரானில்) அடிமை சிறைவாசத்தில் இருந்து  விடுவித்து, விடுவிக்கப்பட்டவர்கள் Judea வந்ததினால் என்று அவர்களே சொல்கிறார்கள். அதன் முதல் (யூதர்கள்) இஸ்ரேல் இன் புதல்வர்கள் என்றே அழைக்கப்பட்டார்கள். இங்கு இஸ்ரேல் என்பது, ஆபிரகாமின் பேரன் Jacob, இஸ்ரேல் (இராச்சியம் அல்ல) என்று பெயர் மாற்றப்பட்டவர் (கடவுளினால் என்கிறது விவிலியம்), அதுக்கும் முதல், Canaan (இப்போதைய இஸ்ரேல், பலஸ்தீன், பகுதி ஜோர்டான், சிரியா)  ஐ பிடிக்கும் வரையிலும் ஆபிரகாம் ஐயும் உள்ளடக்கி Hebrew என்ற அடையாளம் என்கிறது (Hebrew) விவிலியம். ).  (இன்னொரு வளமாக, திராவிடர் என்ற கூட்டமும், இப்போதைய ஈரானின் சாகிறோஸ் மலைப்பகுதியில் இருந்து வந்த, ஒழுங்குபடுத்தப்பட்ட விவசாயத்தை வாழ்வாதரமாக கொண்ட மக்கள் கூட்டம் என்பதற்கு விஞ்ஞான  ஆதாரங்கள் பெருகி வருகிறது. இதில் ஒரு பகுதியை சிறீனிவாச ஐயங்கார், 1920 களில் சொல்லி இருந்தார்.)
    • போட்டியில் இணைந்துகொண்ட @கறுப்பிக்கும் @Eppothum Thamizhan க்கும் வெற்றிக்கனியைப் பறிக்க வாழ்த்துக்கள்! @கறுப்பி 17 கேள்விக்கு பதிலைத் தாருங்கள்
    • வேடிக்கையை விட, இதில் யதார்தத்தை குறும்பாக சொல்வதுதான் தொனிக்கிறது. என்னதான் வெளி உலகில் கணவன் ஆண்டான் மனைவி அடிமை என அன்றைய சமூகம் கட்டமைத்து வைத்திருந்தாலும், நிஜ வாழ்வில், வீட்டுள், இந்த இறுக்கங்கள் இருப்பதில்லை என்ற முரண்நகையை கேலியாக சொல்கிறதென நான் நினைக்கிறேன். டெல்லிக்கு ராஜா, வீட்ல வேலைக்காரன் என்பதை போல. Nobody is perfect; I am nobody. இதை நெப்போலியனின் கூற்று என்பார்கள். இதன் அர்த்தம் I am perfect என்பதாக வரும். இதுவும் வார்த்தை ஜாலம் wordplay யே ஒழிய சிரிப்பு வரும் விசயம் இல்லை. தத்தக்க பித்தக்க நாலு கால், தாவி நடக்க இரெண்டு கால், ஒட்டி முறிந்தால் மூன்று கால், ஊருக்கு போக எட்டுக் கால்.
    • சிறிய வயது பெட்டைகள் இந்தா பார் செய்து காட்டுகிறேன் என்று சவால் விட்டுட்டுப் போயிருப்பார்கள். மூட்டை மூட்டையாக தூக்கிக் கொண்டு போறதை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களை மட்டும் மடக்கி பிடித்திருக்கிறார்கள். கட்டாருடன் கதைத்து 7 பேரை விடுதலை செய்த மாதிரி ஜெய்சங்கர் வந்து கதைத்து இவர்களையும் விடுவிக்க வேண்டும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.