Jump to content

இலங்கையை குற்றவியல் நீதிமன்றத்துக்கு பாரப்படுத்த வேண்டிய கடப்பாடு ஐ.நா.வுக்கு உண்டு - நாடு கடந் தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திகுமாரன்


Recommended Posts

ruthrakumar.jpg

ஐ.நா.வை நோக்கிய 1.6 மில்லியன் மக்களின் கோரிக்கைக்கு அமைய இலங்கை விவகாரத்தினை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்துக்கு பாரப்படுத்த வேண்டிய கடப்பாடு ஐ.நா.வுக்கு உண்டு. அதனைத்தான் வருகின்றதீர்மானத்தின் உள்ளடக்கமாக கொண்டிருக்க வேண்டும் என்று தெரிவித்த நாடு கடந் தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திகுமாரன், அதைவிடுத்து தற்போதைய தீர்மானத்தை மீண்டும் கால அவகாசத்துடன் நீடிக்க வைப்பது என்பது நீதிக்காக காத்திருக்கும் மக்களை ஏமாற்றுகின்ற செயலாக அமைந்துவிடும் என்றும் தெரிவித்தார்.

ஞாயிறு தினக்குரலுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்;

கேள்வி : இலங்கை தொடர்பில் ஐ.நா. மனித உரிமைச்சபையில் கால அவகாசத்துடன் கூடிய மற்றுமொரு தீர்மானம் கொண்டு வரப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் அவர்கள் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் உங்களுடைய பார்வை என்ன ?

பதில் : எதிர்வரும் 2019 மார்ச் ஐ.நா. மனித உரிமைச்சபைக் கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பில் மற்றுமொரு தீர்மானம் ஒன்று கொண்டு வரப்பட வேண்டும் என்பது எல்லோருடைய எதிர்பார்ப்பாக உள்ளது. ஆனால் அது எத்தகைய உள்ளடக்கத்தைக் கொண்டிருக்கப் போகின்றது என்பதில்தான் நாம் விழிப்பாக இருக்க வேண்டும்.

ஐ.நாவை நோக்கிய 1.6 மில்லியன் மக்களின் கோரிக்கைக்கு அமைய, இலங்கை விவாகாரத்தினை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்துக்கு பாரப்படுத்த வேண்டிய கடப்பாடு ஐ.நா.வுக்கு உண்டு. அதனைத்தான் வருகின்ற தீர்மானத்தின் உள்ளடக்கமாகக் கொண்டிருக்க வேண்டும். மாறாக தற்போதைய தீர்மானத்தை மீண்டும் காலஅவகாசத்துடன் நீடிக்க வைப்பது என்பது, நீதிக்காகக் காத்திருக்கும் மக்களை ஏமாற்றுகின்ற செயல்மட்டுமன்றி, அறத்துக்குப் புறம்பான இலங்கை அரசின் நடத்தையை அங்கீகரிப்பதாக மாறிவிடும்.

ஆகவே பாதிக்கப்பட்ட மக்களின் நோக்கு நிலையில் இருந்து இலங்கையை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திற்குப் பாரப்படுத்த வலியுறுத்தும் வகையிலான தீர்மானம் ஒன்றினை ஐ.நாவில் கொண்டுவருவதற்குரிய அழுத்தங்களை, ஐ.நா உறுப்பு நாடுகளுக்கு தமிழர் தரப்பு ஒன்றுபட்டு வலியுறுத்த வேண்டும்.

கேள்வி : இலங்கையை சர்வதேசத்தின் கண்காணிப்பின் கீழ் வைத்திருக்க வேண்டுமெனில், காலஅவகாசம் அவசியமானது என ஓரு தரப்பினர் கூறுகின்றனர். இதற்கு தங்களின் மாற்று வழி இருக்கின்றதா?

பதில் : நிச்சயமாக. இலங்கை அரசினைப் பொறுத்தவரை ஐ.நாவுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் அது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. காரணம் இலங்கை சிங்கள பௌத்த இனவாத அரச க்கட்டமைப்பைக் கொண்டது. (ஞுtடணிணணிஞிணூச்tடிஞி ண்tச்tஞு)

தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட பாரிய மனித உரிமை மீறல்களுக்கான பொறுப்புக்கூறல் விவகாரத்தினை ஐ.நா பாதுகாப்புச் சபைக்குக் கொண்டு செல்ல வேண்டும். அதன் ஊடாக அனைத்துல குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதற்கான வழி இருக்கின்றது. பொறுப்புக்கூறல் தவிர்ந்த பிற விவகாரங்களை ஐ.நா. மனித உரிமைச்சபையில் கையாள்வதற்குரிய ஏற்பாட்டைக் காணலாம். இதற்கு ஒரு சரியான கால அட்டவணையைப் போட்டு அதனை நடைமுறைப்படுத்த முயற்சிக்கலாம். அதுதவறிய நிலையில், பயணத்தடைகள், சொத்து முடக்கங்கள் போன்ற தண்டனை அழுத்தங்களைப் பிரயோகிக்கலாம்.

உதாரணத்துக்கு பலஸ்தீன விவகாரம், ஐ.நா. பாதுகாப்பு சபையிலும், ஐ.நா.மனித உரிமைச்சபையிலும் பேசப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றது.
ஆகவே ஐ.நா மனித உரிமைச்சபைக்குள் மட்டும் சுழன்றுகொண்டிருந்தால், அது தமிழ் மக்களுக்கான நீதியின் தேடலை நீர்த்துப் போகச் செய்வதோடு, பொறுப்புகூறலில் இருந்த இலங்கையைக் காப்பாற்றிவிடுவதாக அமைந்துவிடுகின்றது.

கேள்வி : சமீபத்தில் மியான்மார் விவகாரத்தில் ரொகிங்கிய மக்கள் மீதான பாரிய மனித உரிமை மீறல் விவகாரத்தினை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்துக்குப் பாரப்படுத்த வேண்டும் என ஐ.நா நிபுணர் குழு தெரிவித்துள்ளது. இதனை இலங்கை விவகாரத்தோடு எப்படிப் பொருத்திப் பார்க்கலாம் ?

பதில் : இது வரவேற்கத்தக்க ஒன்று. மியான்மார் விவகாரத்துக்கென நியமிக்கப்பட்டிருந்த நிபுணர் குழு போல்தான், இலங்கை விவகாரத்துக்கும் ஐ.நாவின் முன்னாள் பொதுச்செயலர் பான் கீ மூன் அவர்களினால் நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தது. தமிழர்கள் மீது நடந்தேறிய பாரிய குற்றங்கள் தொடர்பில் அக்குழு பட்டியலிட்ட விடயங்கள் ஒரு இனப்படுகொலைக்குரிய கூறுகளைக் கொண்டிருந்தது. ஆனால் வெளிப்படையாக இனப்படுகொலை என அக்குழு தெரிவிக்கவில்லை. இன்று இந்த நிபுணர் குழு மியான்மாரில் ஒரு இனப்படுகொலை நிகழ்வதாகக் குறிப்பிட்டுள்ளது. தமிழர்கள் விடயத்தில் இனப்படுகொலை எனச் சொல்ல அனைத்துலக சமூகம் பின்நிற்பதன் பின்னால் பூகோள நலன்சார் அரசியல் காணப்படுகின்றது.

இத்தகையதொரு புறச்சூழலில்தான் மியான்மார் விவகாரத்தினை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்துக்குப் பாரப்படுத்த வேண்டும் என ஐ.நா நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது. இதனைத்தான் நாமும் வலியுறுத்துகின்றோம். ஒப்பீட்டளவில் மியான்மாரைவிட நாம் கொடுத்த விலை என்பது பெரியது.

கேள்வி : நிறைவாக, கடந்த சில நாட்களுக்கு முன்னர் வட மாகாண சபையில் முக்கியமான இரண்டு விடயங்களை உள்ளடக்கி தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. இலங்கையை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்துக்குப் பாரப்படுத்த வேண்டும், மற்றயது அரசியற் தீர்வுக்குப் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும். இது தொடர்பில் தங்களின் பார்வை என்ன ?

பதில் : நாம் இதனை முழுமையாக வரவேற்கின்றோம். தீர்மானத்தை சபைக்குக் கொண்டு வந்திருந்த உறுப்பினர் சிவாஜிலிங்கமும், மற்றும் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற ஒத்துழைத்த உறுப்பினர்களுக்கும் எமது நன்றியும், பாராட்டும்.

இத்தீர்மானம் தாயக மக்களின் உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தி உள்ளது.
இதே நிலைப்பாட்டைத்தான் நாம் கொண்டுள்ளோம் என்பது மட்டுமன்றி, அதை நோக்கியே செயற்பட்டும் வருகின்றோம்.

இந்நிலையில் தாயகமும், புலமும் ஒற்றைக்குரலாக ஒரே நிலைப்பாட்டில் ஒலிப்பதானது, தமிழர்களின் ஒன்றுபட்ட சக்தியை உலகிற்கு எடுத்துக்காட்டுகின்றது என்பது மட்டுமன்றி, இந்தியப் பெருங்கடல் மூலோபாய அரசியலில், தமிழர்கள் ஒரு தரப்பாக மட்டுமன்றி தவிக்க முடியாத ஒரு சக்தியாகவும் இருப்பர்.

http://thinakkural.lk/article/18753

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.