Jump to content

அணு ஆயுத ஒழிப்பு: "ஏவுகணை தளத்தை மூட ஒப்புக்கொண்டது வடகொரியா"


Recommended Posts

அணு ஆயுத ஒழிப்பு: "ஏவுகணை தளத்தை மூட ஒப்புக்கொண்டது வடகொரியா"

கொரியாபடத்தின் காப்புரிமைREUTERS

அணு ஆயுத ஒழிப்பு பற்றிய பேச்சுவார்த்தைகளுக்காக வட கொரிய தலைநகரில் இரு நாட்டு உயர் தலைவர்களிடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது அந்த சந்திப்பின்போது, கிம் ஜாங்-உன், தனது நாட்டின் முக்கிய ஏவுகணை சோதனை மற்றும் ஏவுதளங்களை மூட ஒப்புக் கொண்டதாக தென் கொரிய அதிபர் மூன் ஜே இன் தெரிவித்துள்ளார்.

பியாங்யாங்கில் நடைபெற்ற சந்திப்பிற்கு பிறகு, அணு ஆயுத ஒழிப்பு என்ற இலக்கை அடைவதற்கான வழிமுறைகளை இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டதாக மூன் ஜே இன் தெரிவித்தார்.

இந்த ஒப்பந்தமானது, கொரிய தீபகற்பத்தில் ராணுவ அமைதியை இலக்காக கொண்ட "முன்னோக்கிய பாய்ச்சல்" என்று கிம் தெரிவித்தார்.

மேலும், விரைவில் தான் தென் கொரியத் தலைநகர் சோல் நகருக்கு பயணம் மேற்கொள்ளலாம் என்று வட கொரிய உயர் தலைவர் கிம் ஜாங்-உன் தெரிவித்தார். அவர் கூறியது நிறைவேறினால், தென் கொரியாவுக்கு பயணம் மேற்கொள்ளும் முதல் வட கொரியத் தலைவர் ஆவார்.

கொரியாபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

உச்சிமாநாடு: ஆணு ஆயுத ஒழிப்பு

அணு ஆயுத ஒழிப்பு என்பதே இந்த உச்சி மாநாட்டின் பிரதான நோக்கம். இந்த இலக்கை நோக்கி அமெரிக்காவும் வட கொரியாவும் இந்த ஆண்டு தொடக்கத்தில் விரிவான அடிப்படையில் உடன்பட்டன. இருந்தபோதிலும், தற்போது அதன் தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகள் தடைபட்டுள்ளன.

தற்போது தனது நிலைப்பாட்டை பியோங்யாங் உறுதிப்படுத்த வேண்டியிருக்கிறது.

தாங்சாங்-ரி ஏவுகணை பரிசோதனைத் தளம் மற்றும் ஏவுகணை தளத்தை நிரந்தரமாக மூடவும் அதை "சம்பந்தப்பட்ட நாடுகளைச் சேர்ந்த நிபுணர்கள் முன்னிலையில்" செய்யவும் வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் ஒப்புக்கொண்டதாக தென் கொரிய அதிபர் மூன் ஜே இன் தெரிவித்தார்.

தாங்சாங்-ரி ஏவுகணை பரிசோதனைத் தளம் மற்றும் ஏவுகணை தளத்தில் ஆய்வு செய்ய சுயாதீன ஆய்வாளர்களை அனுமதிப்பது முக்கியமான முன்னேற்றமாக பார்க்கப்படுவதாக பிபிசி சோல் செய்தியாளர் லாரா பிக்கெர் கூறுகிறார்.

கொரியாபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

தாங்சாங்-ரி ஏவுகணை தளம் அழிக்கப்படுவதற்கு தயார் நிலையில் இருப்பதாக செயற்கைக்கோள் படங்கள் காட்டுவதாக கூறிய லாரா, அங்கு ஆய்வாளர்கள் அனுமதிக்கப்படுவதை உறுதி செய்யவேண்டும் என்று தெரிவித்தார்.

  • தாங்சாங்-ரி தளம், 2012ஆம் ஆண்டில் இருந்து வடகொரியாவின் பிரதான ஏவுகணை தளம்.
  • அமெரிக்காவை இலக்கு வைத்து இயங்கும் வட கொரிய ஏவுகணைகளுக்கான இயந்திரங்களை பரிசோதனை செய்ய இந்த தளம் பயன்படுத்தப்பட்டது.

மேலும், வடகொரியாவின் அணு ஆயுத சோதனைகளுக்கு தேவையான பொருட்கள் தயாரிக்கப்படுவதாக நம்பப்படும் யோங்பியான் அணு ஆயுத தளத்தையும் வடகொரியா மூடிவிடும். ஆனால், அமெரிக்கா சில பரஸ்பர நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இத்தளம் மூடப்படும்.

கடந்த ஜூன் மாதம் அதிபர் டிரம்ப் மற்றும் வடகொரிய தலைவர் கிம் ஜாங்-உன் சிங்கப்பூரில் சந்தித்தனர். அதில் அணு ஆயுத ஒழிப்பு குறித்த வேலைகளில் ஈடுபவதற்கு இரு தலைவர்களும் உறுதியளித்தனர். அதற்கு சற்று முன்பு தனது புங்க்யே-ரி அணு ஆயுத பரிசோதனை தளத்தை வடகொரியா தகர்த்தது.

கொரியாபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

"அமெரிக்க-வட கொரிய தலைவர்களின் சந்திப்பு வெற்றிகரமாக நடைபெற்றதற்கு தென் கொரிய அதிபர் மூன் ஜே இன்னின் முக்கியமான பங்களிப்பே காரணம்" என்று டிப்ளமேட் பத்திரிகை ஆசிரியர் அங்கித் பாண்டா பிபிசியிடம் தெரிவித்தார்.

ஆனால் உண்மையில் இந்த இழப்புகள் எதுவுமே கிம்முக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தாது. குறுகிய காலத்திற்கு ஆயுதங்களை கைவிட வேண்டியிருக்கும். அவ்வளவுதான். ஆனால் அமெரிக்க-வட கொரியா பேச்சுவார்த்தைகளை முன்னோக்கி கொண்டு செல்லமுடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கு இது உதவும்.

மாநாட்டு முடிவுகள்: வட மற்றும் தென் கொரியா

தென்கொரியாவுக்கு வரவேண்டும் என வட கொரிய அதிபருக்கு மூன் ஜே இன் அழைப்பு விடுத்துள்ளார். இந்த ஆண்டு இறுதிக்குள் கிம் ஜாங்-உன் தென்கொரியாவுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டார்.

அதுபோல 2032 கோடைக்கால ஒலிம்பிக்ஸ் போட்டிகளை இரு நாடுகளும் ஒன்றாக நடத்தவிருக்கின்றன.

இரு நாடுகளுக்கும் இடையிலான ராணுவ பதற்றங்களை குறைப்பது, இரு நாடுகளுக்கும் நடுவில் உள்ள ராணுவ கண்காணிப்பற்ற பகுதியில் அவ்வப்போது ஏற்படும் மோதல்களை தவிர்ப்பது போன்ற முக்கிய அம்சங்கள் கொண்ட ஒப்பந்தத்தில், தென் கொரிய பாதுகாப்பு அமைச்சர் மற்றும் வட கொரிய ராணுவத் தலைவரும் கையெழுத்திட்டனர்.

வட கொரியாவில் தென் கொரிய அதிபர் மூன் ஜே இன் 3 நாட்கள் பயணம் மேற்கொண்ட சந்தர்ப்பத்தில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த பத்து ஆண்டுகளில் தென் கொரிய அதிபர் வட கொரியாவுக்கு செல்வது இதுவே முதல்முறை.

இந்த உச்சிமாநாடு அமெரிக்காவுக்கு முக்கியமானதா?

இந்த ஆண்டு தொடக்கம் முதல் தென் கொரியா மற்றும் அமெரிக்காவோடு இதற்கு முன்னர் மேற்கொள்ளாத வகையிலான கூட்டங்களை வட கொரியா நடத்தி வருகிறது.

இருதரப்பும் பொதுவான நோக்கங்களை மட்டுமே ஒப்புக்கொண்டுள்ள நிலையில், வட கொரியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே நடைபெறும் பேச்சுவார்த்தைகள் தேக்கமடைந்துள்ளன.

மத்தியஸ்தராக செயல்படுவதில் தென் கொரியா முக்கிய பங்காற்றி வருகிறது.

https://www.bbc.com/tamil/global-45576221

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.