Jump to content

இனங்களுக்கிடையில் ஐக்கியத்தை கூட்டமைப்பும் புலம்பெயர் தமிழர்களும் விரும்பவில்லை – கூட்டு எதிரணி


Recommended Posts

இனங்களுக்கிடையில் ஐக்கியத்தை கூட்டமைப்பும் புலம்பெயர் தமிழர்களும் விரும்பவில்லை – கூட்டு எதிரணி

 

Udayashantha-Gunasekara.jpg

இலங்கையில் இனங்களுக்கிடையில் ஐக்கியம் ஏற்படுவதை கூட்டமைப்பும், புலம்பெயர் தமிழர்களும் விரும்பவில்லை என, கூட்டு எதிரணி குற்றம் சாட்டியுள்ளது.

கொழும்பில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த, ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பத்ம உதயசாந்த குணசேகர இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.

அவர் மேலும் கூறுகையில் “முல்லைத்தீவு மாவட்டத்தில் சிங்கள மக்கள் பூர்விகமாக பரம்பரை பரம்பரையாக வாழ்ந்துவரும் ஜானகபுர, கல்யாணபுர என்ற பிரதேசத்தில் உள்ள 450 சிங்கள குடும்பங்களை அங்கிருந்து வெளியேறுமாறு, அம்மாவட்டச் செயலாளர் கூறியுள்ளார்.

இதனை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். யுத்தத்தில் தமிழர்கள் தீங்கிழைக்கப்பட்டிருந்தால் அவர்களுக்கு நிச்சயமாக நியாயம் கிடைக்க வேண்டும் என்பதுதான் எமதும் நிலைப்பாடாகும்.

அதேநேரம், தமது பூர்வீக இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட சிங்கள மக்களும் அங்கு குடியமர்த்தப்பட வேண்டும். இனங்களுக்கிடையில் ஐக்கியத்தை ஏற்படுத்தி விடக்கூடாது என்பதில் தமிழ்க் கூட்டமைப்பினர் மற்றும் புலம்பெயர் தமிழர்களும் தீவிரமாக செயற்பட்டு வருகிறார்கள்.

வடக்கில் அபிவிருத்திகள் என்ற பெயரில், தமிழ் பிரிவினைவாதிகளின கோரிக்கைகளை செயற்படுத்தும் வேலைத்திட்டங்களே மேற்கொள்ளப்பட்டுகின்றன.

சிங்கள, தமிழ், முஸ்லிம்மக்களின் ஒற்றுமையை சீர்குழைக்கும் இவ்வாறான செயற்பாடுகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.” என தெரிவித்திருந்தார்.

http://athavannews.com/இனங்களுக்கிடையில்-ஐக்கி/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.