Jump to content

சியோனிசத்தை முன்னுதாரணமாக்கி இலங்கை அரசு நகரும் அபாயம்


Recommended Posts

சியோனிசத்தை முன்னுதாரணமாக்கி இலங்கை அரசு நகரும் அபாயம்

புதுப்பிப்பு: செப். 19 14:29
Israel
 
இஸ்ரேல் நாட்டின் குடிகளில் இருபது விகிதத்துக்கு மேற்பட்டோர் யூதர் அல்லாத அரேபியர்கள். இந்த வருடம் வரை அங்கு அரேபிய மொழிக்கு இரண்டாவது உத்தியோக பூர்வ மொழி என்ற அந்தஸ்து இருந்துவந்தது. ஆனால், யூலை மாதம் கொண்டுவரப்பட்ட ‘அடிப்படைச் சட்டம்’ (Basic Law) என்ற சட்டவாக்கம் இந்த அந்தஸ்தை யாப்பு ரீதியாகக் குறைத்துள்ளது. தற்போது ஹீப்ரு (எபிரேயம்) மட்டுமே அரச மொழி. அடுத்தபடியாக, இன ரீதியான யூதக் குடியேற்றங்களைப் பரப்புதல் என்ற கோட்பாட்டை தேசியப் பெறுமானமாக்கி (national value) குறித்த சட்டவாக்கம் பெருமிதம் காண்கிறது. அரச காணிகளில் யூதக் குடியேற்றங்களுக்கு முன்னுரிமையும் தனித்துவமும் பேணப்படல் வேண்டும் என்பதே இதன் உட்கிடக்கை என்பதைக் காண்க. ஆக, இஸ்ரேல் கொண்டுவரும் இப்பரிமாணத்தின் சர்வதேச வியூகம் தான் என்ன? 
 
இந்தச் சர்வதேச வியூகத்தை ஈழத்தமிழர்கள் எப்படி எதிர்கொள்ளவேண்டும் என்பதை இந்தக் கட்டுரை ஆராய விழைகிறது.

 

முழுமையாக ஒன்றிணைக்கப்பட்ட ஜெருசலேம் நகரமே இஸ்ரேலின் தலைநகரம் என்று இஸ்ரேலின் புதிய சட்டம் பறை சாற்றுகிறது.

இவற்றுக்கெல்லாம் இன்னும் ஒரு படி மேலே சென்று சுயநிர்ணய உரிமை என்பது யூதர்களுக்கு மட்டுமே தனித்துவமானது என்றும் அந்தச் சட்டம் வரையறை செய்திருக்கிறது.

 

 

யூதர் அல்லாதவர்களுக்கு இஸ்ரேலின் இறைமைக்குட்பட்ட நிலத்தில் சுயநிர்ணய உரிமை இல்லை என்பதே அதன் பொருள்.

உலகெங்கும் வாழும் யூத மக்களின் தேச அரசாக (Nation-State) இஸ்ரேலைப் பிரகடனம் செய்யும் சட்டம் என்று இந்த அடிப்படைச்சட்டத்திற்குப் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.

 

 

 

Israel vote
share-fb.png share-tw.png
62 வாக்குகள் ஆதரவாகவும் 55 வாக்குகள் எதிராகவும் பதிவாகி 7 அதீத வாக்குகளால் 19 ஜூலையன்று இஸ்ரேலிய பாரளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது இந்த அடிப்படைச் சட்டம்
வெளிநாடுகளில் யூதர்கள் வாழ் புலங்களுக்குள்ளும் தனது அரசுடன் அந்த மக்களின் பிணைப்பை ஏற்படுத்திக்கொள்ளும் வகையில் செயற்படும் ஆளுகை இஸ்ரேல் அரசுக்கு இருப்பதாகவும் புதிய தேச-அரசுச் சட்டம் சுட்ட விழைகிறது. சர்வதேசச் சட்டம் தொடர்பான விடயத்தில் ஒரு புதிய பரிமாணத்தையும் இது கொண்டுவருகிறது.

 

சர்வதேசச் சட்டங்களுக்கும், மற்றைய நாடுகளின் இறைமைக்கும் முரணான வகையில் – அதாவது வேறு நாடுகளின் ஆள்புலங்களுக்குள்ளும் – தனது அரசின் இறைமை யூத அரசு என்ற அடிப்படையில் நீண்டிருக்கும் என்பதான தோரணையில் அந்தச் சட்டவாக்கம் வெளிப்பட்டிருக்கிறது.

 

Israel naton-state law
share-fb.png share-tw.png
சட்டவாகத்தின் முக்கிய அம்சங்கள். மூலம்: haaretz.com
உலகின் எந்த மூலையிலாயினும் யூதர் அல்லது இஸ்ரேல் குடியுரிமை கொண்டவர்கள் ஆபத்துக்குள்ளாகினால் அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளில் இஸ்ரேலிய அரசு ஈடுபடக்கடமையுடையது என்றும் அந்தச் சட்டம் சொல்லிவைத்திருக்கிறது.

 

ஹிட்லரின் நாசி ஜேர்மனியினாலும் ஏனைய சில நாடுகளாலும் யூதர்கள் இன அழிப்புக்கு உள்ளாக்கப்பட்டதை ஈடு செய்வதற்காகவும், அவ்வாறான இன அழிப்பில் இருந்து யூதர்களைப் பாதுகாப்பதற்கான ஒரு பொறிமுறையாகவும் இரண்டாம் உலகயுத்தத்தின் முடிவில் இஸ்ரேல் என்ற நாடு உருவாக்கப்பட்டது.

1948 இல் எழுநூறாயிரம் பாலஸ்தீனியர்களை நாடற்ற அகதிகளாக்கியே அமெரிக்கா தலைமையிலான மேற்குலகம் இஸ்ரேலை உருவாக்கியது.

இன்று, 70 வருடங்கள் கழிந்த நிலையில், இஸ்ரேல் வெளிப்படுத்தியிருக்கும் இந்தச் சட்டவாக்கம் எந்த மனுகுல தர்மத்தின் பாற்பட்டது என்ற கேள்விகள் பலமாக எழுப்பப்பட்டிருக்கின்றன.

இந்தக் கேள்விகளை அமெரிக்காவில் வாழும் யூத ரபிகளிற் சிலர் கூட துணிந்து கேட்கின்றனர்.

 

 

குறிப்பாக, இஸ்ரேல் உருவாக்கப்பட்டபோது, பல மதத்தினரும் தமது புனித நகராகக் கருதும் ஜெருசலேம் என்ற நகரம் சர்வதேசத்தின் பொறுப்பில் ஒரு பொதுவான நகராகப் பிரகடனப்படுத்தப்படும் என்று தீர்மானிக்கப்பட்டிருந்தது.

ஆனால், இந்த முடிவுகளுக்கு மாறாக மேற்கு ஜெருசலேம் இஸ்ரேலினால் ஆக்கிரமிக்கப்பட்டது.

பாலஸ்தீனியர்கள் தமது தலைநகராகக் கருதும் கிழக்கு ஜெருசலேமும் பின்னாளில் இஸ்ரேலினால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது.

 

 

தற்போது ஒன்றிணைந்த முழுமையான ஜெருசலேம் நகரம் இஸ்ரேலின் தலைநகர் என்று சட்டவாக்கம் உருவாக்கப்படுவது, பாலஸ்தீனர்களுக்கும் யூதர்களுக்கும் இரு அரசுகள் என்ற தீர்வை நோக்கிய சர்வதேச அணுகுமுறைக்கே சவால் விட்டிருக்கும் செயல் என்று ஐரோப்பிய ஒன்றியம் உட்பட்ட பல தரப்புகள் கருத்துவெளியிட்டிருக்கின்றன.

யூதர்களுக்கான நாடாக இஸ்ரேல் உருவாகியிருக்கும் அதேவேளை பாலஸ்தீனர்களுக்கென்று ஒரு தனி அரசு உருவாக்கப்படவேண்டும் என்றும் பாலஸ்தீனர்கள் தமக்கான தனித்துவமான சுயநிர்ணய உரிமை உடையவர்கள் என்றும் ஐ.நாவின் உறுப்புரிமை பெற்ற 193 நாடுகளில் மொத்தம் 134 நாடுகள் அங்கீகரித்திருக்கும் நிலையிலும் இன்னும் முழுமையான தனிநாடாக பாலஸ்தீனம் உருவெடுக்காதவாறு வீட்டோ அதிகாரம் கொண்ட அமெரிக்கா தடுத்துவருவது தெரிந்ததே.

 

After vote, selfie with Netanyahu
share-fb.png share-tw.png
வாக்கெடுப்பின் பின் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவுடன் செல்பி படம் எடுக்கும் அவரது ஆதரவாளர்கள். சியோனிசத்தை வரைவிலக்கணஞ் செய்யும் வராலாற்றுத் தருணம் இது என்றார் நேதன்யாகு

 

2017 டிசம்பரில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஜெருசலேமுக்கு அமெரிக்காவின் இஸ்ரேலுக்கான தூதுவரலாயத்தை மாற்ற இருப்பதாக அறிவித்திருந்தார்.

அதைத் தொடர்ந்து 2018 மே 14ம் திகதி, குறிப்பாக இஸ்ரேல் அரசு உருவாக்கப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவடைந்த தினத்தில், அமெரிக்கத் தூதுவராலயம் ஜெருசலேமில் திறந்து வைக்கப்பட்டது.

உலகளாவிய கடும் அதிருப்திக்கும், வெடித்தெழும்பிய பாலஸ்தீனியர்களின் போராட்டங்கள் மீது கனத்த உயிரிழப்பை ஏற்படுத்தும் வகையில் தாக்குதல்களை நடாத்தியும், இஸ்ரேல் தனது இராணுவ அடக்குமுறையைத் தொடர்ந்தது.

இந்தத் தருணத்திலேயே, பாலஸ்தீனர்களுக்காக பல வருடங்களாக ஆதரவுக் குரல் கொடுத்து, இஸ்ரேல் தொடர்பான ஒருவகைப் புறக்கணிப்பை மேற்கொண்டிருந்த இந்திய அரசு, தனது கொள்கையை இஸ்ரேல் சார்பு நிலையாக மாற்றிக்கொண்டிருக்கிறது என்பது நாம் நோக்கவேண்டிய வேதனையான இன்னுமோர் உண்மையாகிறது.

 

Netanyahu and Modi
share-fb.png share-tw.png

 

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 2017 இல் இஸ்ரேலுக்கு விஜயம் செய்தமையும், 2018 இல் இஸ்ரேலிய பிரதமர் பென்ஜமின் நெத்தன்யாகு இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டமையும் இந்த அடிப்படையிலேயே நடந்தேறின.

20க்கு மேற்பட்டட இராணுவ, பொருளாதார ஒப்பந்தங்களை இந்த இரு நாடுகளும் செய்துகொண்டுள்ளன.

2016 இல் இஸ்ரேலின் மொத்த ஆயுத ஏற்றுமதியில் அரைவாசி ஏற்றுமதி இந்தியாவுக்கே சென்றிருக்கிறது என்ற கசப்பான தகவலையும் இங்கு நோக்கவேண்டும்.

 

 

இரண்டு நாடுகளும் இஸ்லாமியர்களுக்கு எதிரான போக்குடைய வலதுசாரித் தீவிரவாதத் தலைவர்களால் ஆளப்படுபவை. இந்தப் பின்னணியில் உருவாகியிருக்கும் இராஜதந்திர உறவு பலமான இராணுவ, பொருளாதார உறவாக மாறியிருக்கிறது.

வெறுமனே இனவாத அடிப்படையில் சிந்திக்கும் தலைவர்களைக் கொண்ட நாடுகள் என்பதற்கும் அப்பால், பூகோள அரசியல் மற்றும் இராணுவ நலன்கள் என்பவையே இந்த உறவுப் போக்கைத் தீர்மானித்து வந்துள்ளது என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.

இது அண்மைக்காலத்தில் திடீரென்று நடந்த மாற்றமில்லை என்றாலும். அண்மையில் இது பெரியதோர் இராணுவப் பரிமாணத்தைப் பெற்றிருக்கிறது என்பதையும், குறிப்பாக அமெரிக்காவின் வியூகத்திற்குள் இந்தியாவைக் கொண்டு செல்வதற்கு இஸ்ரேல் ஓர் உத்தி வழியாகப் பயன்படுத்தப்படிருக்கிறது என்பது தெளிவாகிறது.

அமெரிக்காவின் இராணுவ வியூகத்தில் இஸ்ரேலுக்கு இணையாக இந்தியாவும் பங்கெடுக்க ஆரம்பித்துவிட்டது.

 

 

இலங்கையும் அதே வியூகத்திற்குள்ளேயே உள்வாங்கப்பட்டிருக்கிறது என்பது மட்டுமல்ல, ஈழத்தமிழர் பாரம்பரியத் தாயகத்தின் முக்கிய நகரான திருகோணமலை இந்த வியூகத்தின் பிரதான கடற் தளமாகியிருக்கிறது என்பதையும் கூர்மை இணையம் ஏற்கனவே வெளியிட்ட கட்டுரைகளில்தெளிவுபடுத்தியிருந்தது.

ஜப்பானும் இந்த அணுகுமுறையின் மிக முக்கிய பங்குதாரி என்பதும் இங்கு ஒருசேர நோக்கப்படவேண்டியது.

தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிராக இலங்கை அரசு நடாத்திவந்த போரில் கபீர் ரக போர் விமானங்களையும், சூப்பர் டுவோரா வகைக் கடற்படைக் கலங்களையும் மட்டுமல்ல, புலனாய்வு தொழிநுட்ப விடயங்களிலும் தொடர்ச்சியாக இஸ்ரேல் உதவியளித்து வந்த வரலாற்றையும் இங்கு நினைவிற் கொள்ளவேண்டும். (எவ்வாறு இலங்கை அரசுக்கு இஸ்ரேல் போர்க்காலத்தில் உதவி புரிந்தது என்பது பற்றி மேலதிக தரவுகளை அமெரிக்காவைத் தளமாகக் கொண்டியங்கும் அல்கமைனர் என்ற யூதர்களின் விவகாரங்கள் குறித்த கருத்துக்களை வெளியிடும் சஞ்சிகை ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறது.)

2009க்குப் பின்னான சூழலில், கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு என்று ஈழத்தமிழர் தரப்புகள் விபரித்துவரும் சிங்கள பௌத்த மேலாதிக்கவாதம் தன்னை நியாயப்படுத்திக்கொள்வதற்கு இஸ்ரேலின் சியோனிஸத்தையே இனிமேல் முன்னுதாரணமாகக் கொள்ளும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

இதற்கான சர்வதேசப் புறச் சூழல் தீவிரமாக வீச்சடைந்திருக்கிறது என்பதே யதார்த்தமாக எமக்கு முன் விரியும் உண்மையாகிறது.

மூலநோக்குப் பங்காளிகள் என்று தம்மைக் கூறிக்கொள்ளும் இந்தச் சக்திகள் தமக்கிடையே இராணுவ உறவையும் பொருளாதார உறவையும் மேலும் வலுப்படுத்திவருகின்ற சூழலில் இலங்கை அரசு எந்தத் தயவு தாட்சண்யமும் இன்றி இஸ்ரேலைப் பிரதியாக்கம் செய்யும் என்பது வெள்ளிடை மலை.

மத்திய கிழக்கில் இருந்து எண்ணெய் இறக்குமதியில் தங்கியிருக்கும் இலங்கையின் சக்திப் பொருளாதாரத்திலும் அடிப்படை மாற்றங்களை அமெரிக்க மூலோபாய வியூகம் ஏற்படுத்த முயல்கிறது என்பதையும் ஆழமாக உற்றுநோக்கவேண்டும்.

அரச காணிகளாக பல்லாயிரக்கணக்கான ஏக்கர்களை வனவள, வனவிலங்கு, மகாவலி, கரையோரப் பாதுகாப்பு என்று அமைச்சுகள் மற்றும் அதிகாரசபைகள் மூலமாக தமிழர் தாயகப் பகுதிகளில் இருந்து சுவீகரித்துச் செல்கின்ற இலங்கை அரசு, தனக்கான சிங்களக்குடியேற்றங்களைத் தமிழர் தாயகமெங்கும் நிர்மாணிக்கும் வகையில் இஸ்ரேல் வகுத்திருக்கும் அடிப்படைச் சட்டம் போன்ற அரசியல் யாப்பு மாற்றங்களைக் கொண்டுவந்து மேலும் வேகமாகச் செயலாற்ற முனைந்தால் அதைப் பார்த்து யாரும் அதிசயிக்கப்போவதில்லை.

அடுத்த கட்டமாக இலங்கையின் ஆட்சிக் கட்டிலில் யார் ஏறினாலும், அதாவது, கோதபாயா ஆண்டால் என்ன விக்கிரமசிங்கா ஆண்டால் என்ன, நடக்கப்போவது ஒன்றுதான்.

இலங்கைத் தீவில் சிங்கள மக்களுக்கு மட்டுமே சுய நிர்ணய உரிமை உண்டு என்று கூட இலங்கை அரசு இஸ்ரேல் பாணியில் சட்டமாற்றம் கொண்டுவர விழைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இந்த நிலையில் மாகாண சபைகளுக்கான அதிகாரங்களைப் பலப்படுத்த இந்திய அரசும் தமிழர்களுக்குத் துணைவரப்போவதில்லை என்பது தெள்ளத் தெளிவு.

ஆகவே, சுயநிர்ணய உரிமை என்ற தளத்தில் மேலும் இறுக்கமான நிலைப்பாட்டை ஈழத்தமிழர்களின் அனைத்துத் தரப்பினரும் எடுத்தாக வேண்டும்.

'அது' இல்லாத 'இது' இல்லாத சுய நிர்ணய உரிமையை நாம் கேட்கிறோம் என்றோ, சுயநிர்ணயம் இல்லாத சமஷ்டி என்ற வேஷ்டியே நாங்கள் கட்டுவோம் என்று அடம் பிடித்தோ, எந்தத் தீர்வை நோக்கியும் ஈழத்தமிழர்கள் நகரப்போவதில்லை. மாறாக, வரலாற்றில் ஈழத்தமிழர்களைப் பின்னோக்கிப் பயணிக்கவைக்கும் பொறியாகவே இந்த அடம் பிடித்தல் அமையும்.

உறுதியாக உரிமை சார்ந்த சுயநிர்ணயம், தனித்துவமான இறைமை என்ற தளத்தை வலுப்படுத்திய கொள்கையை முன்வைத்து ஒன்றுதிரள்வதன் மூலமே சுயநிர்ணய உரிமை சார்ந்த அடுத்த கட்டப் பயணத்தில் ஈழத்தமிழர்கள் திண்ணமாகக் காலூன்றி நகரமுடியும்.

 

'அது' இல்லாத 'இது' இல்லாத சுய நிர்ணய உரிமையை நாம் கேட்கிறோம் என்றோ, சுயநிர்ணயம் இல்லாத சமஷ்டி என்ற வேஷ்டியே நாங்கள் கட்டுவோம் என்று அடம் பிடித்தோ, எந்தத் தீர்வை நோக்கியும் ஈழத்தமிழர்கள் நகரப்போவதில்லை.
இஸ்ரேலை இலங்கை முன்னுதாரணமாகக் கொள்ளும் வாய்ப்பு அதிகரித்திருப்பது குறித்து இலங்கை வாழ் தமிழ்பேசும் முஸ்லிம்களளும் கவனம் கொள்ளவேண்டும்.

 

இலங்கைத் தீவில் சலுகைகள் சார்ந்த அரசியல் இனிமேலும் முஸ்லிம்களுக்குச் சார்பாக அமையப்போவதில்லை.

ஈழத்தமிழர்களின் உரிமைகள் சார்ந்த போராட்டம் தீவிரமடைந்தபோது தமிழ் பேசும் முஸ்லிம்களின் சலுகைகள் சார்ந்த அரசியலுக்கு கடந்தகாலத்தில் இருந்த அரசியல்வெளி எதிர்காலத்தில் இருக்கப்போவதில்லை.

ஆகவே, ஒன்றிணைந்த வடக்கு கிழக்கு என்ற உரிமை சார்ந்த கோரிக்கையில், ஈழத்தமிழர்களுடன் ஒன்றித்துப் பயணித்தால் அன்றி, சிங்களப் பெருந்தேசியவாதத்தை இலங்கைத் தீவில் முறியடிக்கமுடியாது.

சிங்களப் பெருந்தேசியவாதத்திற்கு ஆப்படிக்காமல் வேறு எந்த பண்பாட்டு அடையாளமும் இலங்கைத் தீவில் சுயமரியாதையுடன் தன் இருப்பைத் தக்கவைக்கமுடியாது.

இலங்கை ஒற்றையாட்சி அரசு இஸ்ரேலை ஒத்துச் சிந்திக்கிறதென்றால், எந்த நிலைவரினும் தமது சுயநிர்ணய உரிமை, இறைமை என்பவற்றை விட்டுக்கொடுக்காது போராடிவரும் பாலஸ்தீனியரின் கொள்கை நிலைப்பாட்டை ஒத்தே ஈழத்தமிழர்கள் சிந்திக்கவேண்டும்.

இலங்கைத் தீவின் உள்விவகாரங்கள் எமது அரசியல் வெளியையும் கொள்கை நிலைப்பாட்டையும் தீர்மானிப்பதை விட சர்வதேச வெளிவிவகாரங்களே தீர்மானிக்கின்றன.

ஆகவே, சர்வதேச ஓட்டங்களின் திக்குகளை உற்றுநோக்கி, அவற்றின் போக்குகளை உய்த்துணர்ந்த நிலையில் எமது உரிமை சார் அரசியற் தளத்தைக் கெட்டிப்படுத்திக்கொள்ளவேண்டும்.

இஸ்ரேல் இலங்கைக்கு முன்னுதாரணம் என்றால், பாலஸ்தீனியர்களின் உரிமைப்போராட்டம் ஈழத்தமிழருக்கான ஒரு முன்னுதாரணம்.

இந்த வகையில் ஈழத்தமிழர்களுக்கும் தமிழ் பேசும் முஸ்லிம்களுக்கும் இடையே ஆழமான உரிமை சார் உறவு தீட்டப்படவேண்டும்.

இதுவே எமக்குரிய மூலோபாயக் கூட்டு என்பதை இரண்டு தரப்புகளும் எவ்வளவு வேகமாகப் புரிந்துகொள்கிறார்களோ அவ்வளவுக்கு அந்தப் புரிதல் அவர்களுக்கு நன்மை பயப்பதாகும்.

ஆனால், தேர்தல் அரசியலில் மூழ்கித் திளைத்திருக்கும் ஈழத்தமிழர்களின் அரசியற் தலைமைகள் எனத் தம்மைக் கூறிக்கொள்வோரும் அந்த இடத்தைப் பிடிக்க ஆசைப்படும் இதர கட்சியினரும் தமிழ் முஸ்லிம் உறவு வலுப்பட அடித்தளம் இடுவதற்குத் தயாராக உள்ளார்களா என்பது கேள்விக்குறியே.

ஆக, தேர்தல் அரசியலுக்கு அப்பாற்பட்ட ஈழத்தமிழர்களின், தமிழ் பேசும் முஸ்லிம்களின் சிந்தனையாளர்களும் செயற்பாட்டாளர்களும் விழிப்போடு விரைந்து செயலாற்றவேண்டிய காலம் இது என்பதே இஸ்ரேல் சார்ந்த சர்வதேச அரசியல் எமக்குச் சொல்லித் தரும் இன்றைய அரசியற் பாடமாகிறது.

 

Protest against Israel's law
share-fb.png share-tw.png
இஸ்ரேலின் அடிப்படைச் சட்டத்தை தென் ஆபிரிக்க நிறவெறிச் சட்டமாக அரேபியப் போராட்டகாரர்கள் வர்ணித்து எதிர் ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள்
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அதிக வெப்பநிலையால் விலங்குகளுக்கும் பாதிப்பாம்! 19 MAR, 2024 | 10:01 AM வெப்பமான காலப் பகுதியானது வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளுக்கும் ஆபத்தான நோய்களை ஏற்படுத்தும் எனக் கால்நடை வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். பகல் வேளையில் விலங்குகளை மூடிய வாகனங்களில் ஏற்றிச் செல்வதைத் தவிர்க்குமாறும் இந்த நாட்களில் நாய் போன்ற விலங்குகளுடன் விளையாடுவதைத் தவிர்க்குமாறும் கால்நடை வைத்தியர் அருண சந்திரசிறி தெரிவித்தார்.  விலங்குகளின் உடல் சூடாக இருப்பதனால் தினமும் செல்லப்பிராணிகளை குளியாட்டுதல், கூந்தல் உள்ள விலங்குகளுக்கு இரண்டு அல்லது மூன்று முறை குளியாட்டுதல், குடிப்பதற்குத் தேவையான அளவு சுத்தமான தண்ணீர் கொடுத்தல், பகல் வேளையில் ஐஸ் கட்டிகள் கொடுத்தல் போன்றவற்றை  செய்யலாம். வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகள் மயங்கி கீழே விழுந்தால், கால்நடை மருத்துவரிடம் அழைத்துச் செல்வதற்கு முன் குளிர்ந்த நீரில் உடலைக் கழுவுவதால் உயிரைக் காப்பாற்ற முடியும் என வைத்தியர் அருண சந்திரசிறி சுட்டிக்காட்டினார்.  செல்லப்பிராணிகள் மாத்திரமின்றி வீட்டில் வளர்க்கப்படுகின்ற  விலங்குகள் அனைத்தும் அதிக வெப்பநிலையால் பாதிக்கப்படுகின்றன,  அதிக வெப்பநிலையால்  மென்மையான  தோல் கொண்ட விலங்குகளுக்குக் காயங்கள் கூட ஏற்படலாம்  என்றும்  அவற்றை எப்போதும் நிழலான இடங்களில் கட்டி வைக்கலாம் என்றும் கால்நடை வைத்தியர்கள்  சுட்டிக்காட்டுகின்றனர். https://www.virakesari.lk/article/179087
    • பட மூலாதாரம்,HAMED NAWEED/LEMAR AFTAAB படக்குறிப்பு, ரபியா பால்ஜி 19 மார்ச் 2024, 02:44 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் "மிக முக்கியமான விஷயம், இது ஒரு காதல் கதை." இப்படிக் கூறியவர் பிபிசி உலக சேவையில் பணிபுரியும் அப்துல்லா ஷதன், அவர் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர். ஒரு காலத்தில் திரைப்பட நடிகராக இருந்தவர். 50 ஆண்டுகளுக்கு முன்பு அதே காதல் கதையைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படத்தின் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார். அத்திரைப்படம் இளவரசி ரபியா பால்ஜியின் வாழ்க்கை வரலாறு. அவர் இப்போதும் நேசிக்கப்பட்டு போற்றப்படுகிறார். அவர், சமூகத் தடைகளை மீறி ஒருவரைக் காதலித்தார். அதற்காக அவரது சகோதரனே அவரைக் கொன்றார். “அவள் அன்பின் சின்னம். காதலுக்காக எல்லாவற்றையும் தியாகம் செய்தவள். அதுதான் இன்றும் அனைவரையும் ஈர்க்கிறது,” என்று அப்படத்தில் இளவரசி ரபியாவின் காதலனாக நடித்த ஷதன் கூறுகிறார். ஆனால், ரபியாவின் காதல் இரண்டு வழிகளில் புரிந்துகொள்ளப்படுகிறது. ஒரு வகையில் அவரது காதல் தெய்வீகமானதாகவும், ரபியா ஒரு முஸ்லிம் துறவியாகவும் கருதப்படுகிறார். மற்றொருபுறம் அவர் ஒரு பெண்ணியவாதியாக அவரது காதல் கலகமாக, உடல்சார்ந்ததாகக் கருதப்படுகிறது. இப்படிச் சொல்பவர் ஆஸ்திரேலிய தேசியப் பல்கலைகழகத்தில் மானுடவியலில் முனைவர் பட்ட ஆராய்ச்சி செய்யும் ஷமீம் ஹுமாயுன்.   தலைமுறைகள் கடந்தும் சொல்லப்படும் கதை ஆனால், ரபியா, இஸ்லாம் கலாசாரத்தின் பொற்காலத்தைச் சேர்ந்த சிறந்த கவிஞர்களில் ஒருவர், மேலும் ஆப்கானிஸ்தானின் கற்பனையில் மிகவும் மதிக்கப்படும் நபர்களில் ஒருவர் என்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற முனாசா எப்திகர் கூறுகிறார். பண்டைய ஆப்கானிஸ்தானின் பால்க் பகுதியைப் பூர்வீகமாகக் கொண்டவர் ரபியா. இது இன்று வடகிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ளது. அங்கு 9-ஆம் நூற்றாண்டில் கணிதம் மற்றும் வானியல் செழித்து வளர்ந்தது. அங்கு 10-ஆம் நூற்றாண்டில் புகழ்பெற்ற தத்துவஞானி மற்றும் விஞ்ஞானி அவிசென்னா பிறந்தார். ரபியா கி.பி. 940-இல் பிறந்தார் என்று நம்பப்படுகிறது. இருப்பினும் அவரது ஆரம்பகால வாழ்க்கையை பற்றிய விவரங்கள் குறைவு என்பதால் சரியான தேதி நமக்குத் தெரியவில்லை. ஆனால், இக்கதை தலைமுறைகள் கடந்தும் சொல்லப்படுகிறது. ஒவ்வொரு கதைசொல்லியும் இக்கதையில் தங்கள் சொந்த விளக்கத்தின்படி அவர்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதுவதை முன்னிலைப்படுத்தி வெவ்வேறு அம்சங்களை வலியுறுத்துகின்றனர். எனவே இக்கதைக்குப் பல பதிப்புகள் உள்ளன. எப்டிகார் என்பவர் எழுதிய கதைதான் இன்று பரவலாகச் சொல்லப்படுகிறது. பட மூலாதாரம்,MUNAZZA EBTIKAR படக்குறிப்பு, ரபியா கி.பி. 940-இல் பிறந்தார் என்று நம்பப்படுகிறது. இருப்பினும் அவரது ஆரம்பகால வாழ்க்கையை பற்றிய விவரங்கள் குறைவு அழகும் அறிவும் ஒன்றுகூடிய இளம்பெண் அக்கதை இப்படித் துவங்குகிறது. "... ஆயிரம் மசூதிகளுடைய, பால்க் அமீரின் மகளாக ரபியா பிறந்தார். பன்னீரில் குளித்து, பட்டால் அலங்கரிக்கப்பட்டு, தங்க ரதத்தில் அமர்த்தப்பட்டார். அவள் பிறந்த நாளை பால்க் மக்கள் கொண்டாடினர்...” "ரபியா அரண்மனையில் வளர்ந்தார், அங்கு அவருக்கு கலை, இலக்கியம், வேட்டை, வில்வித்தை ஆகியவை கற்பிக்கப்பட்டன..." அக்காலத்தில் அப்பகுதியில் பெண்களின் கல்வி கற்பது அசாதாரணமானது அல்ல, என்று லண்டன் பல்கலைக்கழகத்தின் கிழக்கத்திய மற்றும் ஆப்பிரிக்க ஆய்வுகள் பள்ளியின் ஆய்வாளர் நர்கஸ் ஃபர்சாத் பிபிசியிடம் கூறினார். "இஸ்லாத்துக்கு முந்தைய மரபுகள் மற்றும் கலாச்சாரங்கள் இஸ்லாமிய காலகட்டத்திலும் தொடர்ந்தன. எனவே செல்வந்தர்கள் மற்றும் பிரபுக்களின் மகன்களைப் போலவே அவர்களது மகள்களுக்கும் கல்வியறிவு வழங்கப்பட்டது," என்கிறார் நர்கஸ் ஃபர்சாத். மேலும் அவர், "ரபியா ஒரு மகிழ்ச்சியான மற்றும் பணக்கார தந்தையின் செல்ல மகள்" என்று கூறுகிறார். "சமானிட் தேசத்தின் அரசவைக் கவிஞரான ருடாக்கி, ரபியாவின் பேச்சுத்திறன், மொழித்திறன் மற்றும் கவியாற்றல் ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டார் என்பதும் நமக்குத் தெரியவருகிறது," என்று அவர் மேலும் கூறுகிறார். சிலகாலம் எல்லாம் மகிழ்ச்சியாகவே இருந்தது. "அவளது அழகும், வார்த்தைகளும் வசீகரமாக இருந்தன . அவளது பேச்சுத்திறன் பலரையும் ஈர்த்தது.” "ரபியா தனது கவிதைகளை மக்கள்முன் வாசித்தபோது, அவரது சமகால கவிஞர்களும் எழுத்தாளர்களும் வியப்பில் ஆழ்ந்தனர். அவர் தனது பெற்றோரின் இதயங்களை மட்டுமல்ல, பால்க் மக்களின் இதயங்களையும் வென்றார்." இருப்பினும், அவரது சகோதரர் ஹரிஸ் அவர்மீது கொடிய பொறாமை கொண்டிருந்தார். அவர்களது தந்தை மரணப்படுக்கையில் இருந்தபோது, அவருக்குப் பிறகு ரபியாவை நன்றாக கவனித்துக் கொள்ளுமாறு ஹரிஸைக் கேட்டுக்கொண்டார். ஆனால் ஹரிஸ்தான் ரபியாவின் கொடூரமான முடிவுக்குக் காரணமாக இருந்தார்.   பட மூலாதாரம்,FARHAT CHIRA படக்குறிப்பு, அவர் தனது கடைசி கவிதை வரிகளை அரச குளியலறையின் சுவர்களில் தனது சொந்த இரத்தத்தால் எழுதினார் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்கிறார்கள் ரத்தத்தால் எழுதிய கடைசி வரிகள் எப்டிகாரின் கதை தொடர்கிறது. "ஒரு நாள், ரபியா தனது பால்கனியில் ஒரு தோட்டத்தை பார்த்துக் கொண்டிருந்தபோது, ஒரு அழகான மனிதர் ஹரிஸுக்கு மது பரிமாறுவதைக் கண்டாள்…” "ஹரிஸின் துருக்கிய அடிமையும் புதையல் காவலருமான அவரது பெயர் பக்தாஷ். அவர் ரபியாவின் இதயத்தைக் கவர்ந்தார். அந்த தருணமே ரபியாவின் துயரமான விதி தொடங்கியது..." பக்தாஷுக்கு ரபியா தனது விசுவாசமான பணிப்பெண் ரானா மூலம் காதல் கடிதங்களை அனுப்பத் துவங்கினார். "அருகிலிருந்தும் விலகியிருப்பவனே, நீ எங்கே இருக்கிறாய்? வந்து என் கண்ணுக்கும் என் இதயத்துக்கும் மகிழ்ச்சியைக் கொடு, இல்லையேல் வாளை எடுத்து என் வாழ்க்கையை முடித்துவிடு…" பக்தாஷும் ரபியாவுக்கு அதேபோல அன்பான மற்றும் கவிதை மிகுந்த பதில் கடிதங்களை எழுதினார். காந்தஹாரின் ஆட்சியாளர் பால்க் பகுதியைத் தாக்க முற்பட்டபோது, ஹரிஸ், தனது ஆலோசகர்களுடன் கலந்தாலோசித்த பிறகு, பக்தாஷின் உதவியின்றி தனது எதிரியைத் தோற்கடிக்க முடியாது என்பதை அறிந்தார். பக்தாஷ் தன் எதிரியைக் கொன்றால், அவன் விரும்பியதை அவனுக்குப் பரிசாகத் தருவதாக ஹரிஸ் சொன்னான். பக்தாஷ் வெற்றி பெற்றார், ஆனால் முயற்சித்து அதில் பலத்த காயமடைந்தார். "அவர் கிட்டத்தட்ட உயிரை இழந்துவிட்ட தறுவாயில், முகத்தை மூடிய ஒரு போர்வீரர் பக்தாஷைக் காப்பாற்றவும், போரில் வெற்றி பெற அவருக்கு உதவவும் போர்க்களத்திற்கு பாய்ந்து வந்தார். இந்த வீரர் வேறு யாருமல்ல, ரபியா தான்..." ரபியாவும் பக்தாஷும் காதலிக்கிறார்கள் என்பதை அறிந்த ஹரிஸ், பக்தாஷை கிணற்றில் வீசவும், ரபியாவை ‘ஹமாம்’ என்று அழைக்கப்படும் அரண்மனையின் குளியலறையில் பூட்டவும் உத்தரவிட்டார். சில பதிப்புகள், ஹரிஸ் ராபியாவின் கழுத்து நரம்புகளை வெட்ட உத்தரவிட்டதாகவும், மற்றவை, அவளது மணிக்கட்டில் உள்ள நரம்புகளை அவளே வெட்டிக் கொண்டதாகவும் கூறுகின்றன. ஆனால் அவர் தனது கடைசி கவிதை வரிகளை அரச குளியலறையின் சுவர்களில் தனது சொந்த இரத்தத்தால் எழுதினார் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்கிறார்கள். "உன் காதலின் கைதி நான்; தப்பிப்பது சாத்தியமல்ல "அன்பு என்பது எல்லைகளற்றக் கடல், புத்தியிருப்பவன் அதில் நீந்த விரும்ப மாட்டான்... "உனக்கு கடைசி வரை அன்பு வேண்டுமென்றால் ஏற்றுக்கொள்ளப்படாததை ஏற்றுக்கொள், கஷ்டங்களை மகிழ்ச்சியுடன் எதிர்கொ, விஷம் அருந்து, ஆனால் அதை தேன் என்று சொல்..." சில நாட்களுக்குப் பிறகு, ரானாவின் உதவியுடன், பக்தாஷ் கிணற்றில் இருந்து தப்பித்து, ஹரிஸின் தலையை வெட்டிக்கொன்று, குளியலறைக்குச் சென்றார். "தரையில் கிடந்த ரபியாவின் அழகான, உயிரற்ற உடலையும், சுவர்களில் ரத்தத்தால் எழுதப்பட்ட அவளது கடைசி காதல் கவிதைகளையும் மட்டுமே" அவன் கண்டான். அவன் தனது காதலியுடன் தன்னுயிரையும் விட்டுவிட்டான்.   பட மூலாதாரம்,SHAMIM HOMAYUN படக்குறிப்பு, பால்க் பகுதியிலுள்ள ரபியா ஆலயம் சமூகச் சீர்கேட்டின் இடமாகக் கருதப்பட்டதால் மூடப்பட்டது. ஒரே பெண், இரண்டு முகங்கள் "ரபியா இறந்த பல நூற்றாண்டுகளுக்குப் பிறகும், மற்ற கவிஞர்கள் அவரது நற்பண்புகளையும் அழகையும் குறித்துப் பேசினர்," என்று ஃபர்சாத் கூறுகிறார். அவர்களில் ஒருவர் முதல் சூஃபிக் கவிஞரான அபு சயீத் அபு அல்-கைர் (1049 இறந்தவர்). இவர் அந்தக் காதல் கதையின் நாயகி ஏன் ஒரு புனிதராகக் கருதப்படுகிறார் என்பதைப் புரிந்துகொள்ள உதவுகிறார். வெளிப்படையாகப் பார்த்தால் அவரது கவிதைகள் தெய்வீகத்தைப் பற்றிப் பேசுவதிலிருந்து வெகு தொலைவில் இருந்தன. ஆனால், ரபியா உணர்ந்த அன்பின் தன்மையைப் பற்றி அல்-கைர் வியந்து பேசுகிறார். "அது மிகவும் தீவிரமானது, அது தெய்வீகமான இடத்திலிருந்து மட்டுமே வந்திருக்க முடியும்," என்று அல்-கைர் கூறியதை ஹுமாயுன் கூறுகிறார். அல்-கைர் எழுதிய பிரதி இப்போது நமக்குக் கிடைக்கவில்லை என்றாலும், 13-ஆம் நூற்றாண்டின் பாரசீகக் கவிஞர் ஃபரித் அல்-தின் அத்தாரால் மீண்டும் எழுதப்பட்டதிலிருந்து நாம் அறியலாம், என்கிறார். ரபியா ஒரு உண்மையான சூஃபி என்பதை நிரூபிப்பதே இந்த இரண்டு கவிஞர்களின் குறிக்கோள் என்று அவர் கூறுகிறார். அந்த விளக்கத்தின்படி, பக்தாஷ் மீதான அவளது காதல் வெறும் காமத்தால் தூண்டப்படவில்லை. மாறாக அவளுடைய காதல் தெய்வீக அன்பை வெளிப்படுத்தும் வழிமுறையாகும். இருப்பினும், வேறு ஒரு புரிதலின்படி ரபியா பெண்களின் தைரியத்திற்கான குறியீடாக இருக்கிறார். இந்தப் புரிதலின்படி ரபியா பழமைவாத எதிர்ப்பின் அடையாளமாகக் கருதப்படுகிறார். கடந்த 2018-ஆம் ஆண்டு காபூலில் நடந்த ‘குறிப்பிடத்தக்க ஆப்கான் பெண்களைப்’ பற்றிய ஓவியக் கண்காட்சியில்), ஆப்கானிஸ்தான் ஓவியரும் புகைப்படக் கலைஞருமான ராதா அக்பர், "ரபியா ஆணாதிக்கத்திற்கு எதிரான எதிர்ப்பின் சின்னம். காதலுக்காகவும் சுதந்திரத்திற்காகவும் ஆப்கானியப் பெண்கள் எதிர்கொண்ட ஒடுக்குமுறையின் நினைவூட்டல்," என்று ராபியாவை விவரித்தார். பல வருடங்களுக்கு முன்பு, ஆப்கானிஸ்தானின் முதல் திரைப்படமான ‘ரபியா பால்ஜி’ வெளியானபோது, பிரபல பத்திரிகையான ‘ஜ்வாண்டுன்’ இதழில் அதுபற்றி ஒரு கட்டுரை வெளியானது. அதன் முதல் வரி: "ரபியாவின் கதை கழுத்து நெரிக்கப்பட்ட நம் சமூகத்தின் பெண்களின் வாயிலிருந்து வெளிவந்த கதறல்."   பட மூலாதாரம்,WORLD DIGITAL LIBRARY, LIBRARY OF CONGRESS படக்குறிப்பு, ரபியா குறித்த திரைப்படத்தில் பெண்கள் காபூலில் 1970-களில் பிரபலமாக இருந்த நாகரீகமான பாணியில் ஆடம்பரமான, இறுக்கமான ஆடைகளுடனும் முடி அலங்காரத்துடனும் தோன்றினர் தாலிபான்களிடமிருந்து காப்பாற்றப்பட்ட திரைப்படம் ரபியா பால்ஜி படத்தில்தான் அப்துல்லா ஷதன் பக்தாஷ் வேடத்தில் நடித்தார். அதில் அவர் ரபியாவை காதலித்தார். குறிப்பாகச் சொல்வதெனில் அப்பாத்திரத்தில் நடித்த நடிகை சிமாவுடன். அவரையே அவர் திருமணமும் செய்து கொண்டார். இது அப்போது ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியது. "ரபியா பால்ஜி மிகவும் பிரபலமான படமாகும்," என்று ஷதன் பிபிசி முண்டோவிடம் கூறினார். “சுமார் 40 பெண்கள் இதில் வேலை செய்தனர். இப்போது தாலிபான்களின் ஆட்சியில் அப்படி ஒரு படத்தை எடுக்கவே முடியாது," என்றார். அது மட்டுமல்ல. அப்படத்தில் ரபியா காதல்வயப்பட்ட, சுதந்திரமான, வலிமையான பெண். அவரும் மற்ற பெண்களும் காபூலில் 1970-களில் பிரபலமாக இருந்த நாகரீகமான பாணியில் ஆடம்பரமான, இறுக்கமான ஆடைகளுடனும் முடி அலங்காரத்துடனும் தோன்றினர். தாலிபான்கள் 1996-ஆம் ஆண்டு கடுமையான தணிக்கையை திணித்தபோது காபூலில் உள்ள தேசிய திரைப்படக் காப்பகத்தில் பணிபுரிந்தவர்கள், 6,000 விலைமதிப்பற்ற ஆப்கானிய திரைப்படங்களைப் பாதுகாத்தனர். அவர்கள் அவசரமாக ஒரு பொய்ச்சுவரைக் காட்டி அதற்குப் பின்னால் மறைத்து வைத்து, தாலிபான்களின் தணிக்கை பிடியில் இருந்து காப்பாற்றிய திரைப்படங்களில் இதுவும் ஒன்றாகும். பால்க் பகுதியிலுள்ள ரபியா ஆலயம் சமூகச் சீர்கேடின் இடமாகக் கருதப்பட்டதால் மூடப்பட்டது. ஆனால், பள்ளிகள் முதல் மருத்துவமனைகள் வரை, பல பெண் நிறுவனங்கள், ‘ரபியா’ என்று பெயரிடப்பட்டன. https://www.bbc.com/tamil/articles/cekervmdr94o
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • ஆதரவற்றோர் இல்லத்தை சிறுமிகள் கடத்தும் இடமாக பாவித்துள்ளார்கள்.
    • நாற்பதாயிரம் ரூபா என நினைக்கிறேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.