Jump to content

நியாயப்படுத்த முடியாததை நியாயப்படுத்துவதை நிறுத்தவேண்டும்


Recommended Posts

நியாயப்படுத்த முடியாததை நியாயப்படுத்துவதை நிறுத்தவேண்டும்

 

 

ரொஹிங்கியா அகதிகள் நெருக்கடி தொடர்பில்  மியன்மார் அரசாங்கம் கடைப்பிடிக்கின்ற அணுகுமுறையை சர்வதேச சமூகம் கடுமையாகக் கண்டனம் செய்துகொண்டிருக்கிறது. அந்நாட்டின் தலைவி ஆங் சான் சூகீ மீது பாரதூரமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.இறுதியாக அவர் இப்போது ரொஹங்கியா நெருக்கடியை சிறப்பாகக் கையாண்டிருக்க முடியும் என்பதை பகிரங்கமாக ஒத்துக்கொண்டிருக்கிறார்.ஆனால், அவரின் இந்த ஒப்புதல் மியன்மார் இராணுவத்தின் கொடுமைகளில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அயல்நாடான பங்களாதேஷுக்குத் தப்பியோடிய 7 இலட்சத்துக்கும் அதிகமான ரொஹிங்கியாக்களுக்கு போதுமான ஆறுதல் வார்த்தையாக இருக்கப்போவதில்லை.

 fafss.jpg

ராக்கைன் மாநிலத்தில் ரொஹிங்கியாக்களுக்கு எதிராக இராணுவம் மேற்கொண்ட கொடூரமான ஒடுக்குமுறையை ' இனச்சுத்திகரிப்பு என்பதைத் தவிர வேறு வார்த்தைகளில் வர்ணிக்கமுடியாது' என்று ஐக்கிய நாடுகள் அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள்.ஐ.நா.மனித உரிமைகள் பேரவையினால் அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கையொன்றில் மியன்மாரின் உயர்மட்ட ஜெனரல்கள் ராக்கைன் மாநிலத்தில் இடம்பெற்ற  ' இனப்படுகொலைக்காக' விசாரணைசெய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக வழக்குகள் தொடரப்படவேண்டும் என்று வலியுறுத்தியிருந்தது.

 

ராக்கைன் மாநிலத்தில் மியன்மார் துருப்புக்கள் செய்திருக்கும் கொலைகள், பாலியல் வல்லுறவுகள் மற்றும் கிராமங்கள் நிர்மூலம் ஆகியவற்றை மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களும் ஊடகவியலாளர்களும் அறிக்கை மேல் அறிக்கையாக வெளியிட்டு ஆவணப்படுத்தியிருக்கிறார்கள். கடந்த வருடம் வன்முறைகளில் இறந்துபோன ராஹிங்கியாக்களின் தொகை 10 ஆயிரத்துக்கும் அதிகம் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது.

 

ராக்கைன் மாநில நிலைவரங்கள் தொடர்பாக ஆங் சான் சூகீ பேசுவது அபூர்வம்.ரொஹிங்கியா அகதிகள் பற்றிய ஊடகங்களின் கேள்விகளுக்கும் அவர் பதிலளிப்பதில்லை.ஏன் ரொஹிங்கியா என்ற சொலைக்கூட அவர் உச்சரிப்பதும் அபூர்வம்.வியட்நாம் தலைநகர் ஹனோயில் கடந்தவாரம்நடைபெற்ற சர்வதேச மகாநாடொன்றில் பங்கேற்பதற்காக சென்றிருந்தவேளை ரொஹிங்கியா நெருக்கடி குறித்து கருத்துவெளியிட்ட அவர் இலாணுவத்துடனான அதிகாரப்பகிர்வு ஏற்பாட்டின்கீழ் தனது சிவிலியன் அரசாங்கம் 75 சதவீதமான அதிகாரங்களையே கொண்டிருக்கிறது என்று கூறியதைக் காணக்கூடியதாக இருந்தது. இந்த விளக்கம் மியன்மாரின் இராணுவக்கும்பல் ஆட்சியைத் தன்னந்தனியனாக எதிர்த்துநின்று போராடி  ஜனநாயக சீர்திருத்தங்களுக்கு வழிவகுத்து இறுதியில் 2015 தேர்தல்களில் தனது கட்சியை ஆட்சியதிகாரத்துக்குக் கொண்டுவந்த பெருமைக்குரியவர் என்ற அவரின் அந்தஸ்துக்குப் பொருத்தமானதேயல்ல.

 

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்காகப் பணியாற்றிய இரு மியன்மார் நிருபர்கள் ( வா லோன், யாவ் சூ ஊ) அண்மையில் சிறைக்கு அனுப்பப்பட்தை சூகீ நியாயப்படுத்திக் கருத்துவெளியிட்டமை மிகவும் பாரதூரமான ஒரு செயலாகும்.அந்த நிருபர்கள் உத்தியோகபூர்வ இரகசியங்கள் சட்டத்தை மீறியதற்காகவே நீதிமன்றத்தினால் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது என்று அவர் கூறியிருக்கிறார்.கடந்த வருடம் ராக்கைன் மாநிலத்தில் இன் தின் என்ற கிராமத்தில் ரொஹிங்கியா இனத்தைச் சேர்ந்த 10 ஆண்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை அம்பலப்படுத்தியதில் வகித்த பங்கிற்காகவே அவ்விரு நிருபர்களும் 7 வருட சிறைவாசத்துக்கு அனுப்பப்பட்டிருக்கிறார்கள் என்று பெரும்பாலான மனித உரிமைகள் குழுக்களும் ஊடகவியலாளர்களின் அமைப்புக்களும் நம்புகின்றன.பல வருடங்களாக வீட்டுக்காவலில் இருந்தபோது சூகீ  தனது செய்திகளை உலகிற்கு தெரியப்படுத்துவதற்கு ஊடகங்களிலேயே தங்கியிருக்கவேண்டியிருந்தது.இராணுவ ஆட்சியாளர்களினால் விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்களையும் உத்தரவுகளையும் மீறி துணிச்சலுடன் செயற்பட்ட ஊடகவியலாளர்கள் சூகீயின் கருத்துக்கள் உலகெங்கும் சென்றடைவதற்கு உதவினார்கள்.அதே சூகீ இன்று நியாயப்படுத்தமுடியாததை நியாயப்படுத்த முயற்சிப்பதை உண்மையில் புரிந்துகொள்ளவே முடியவில்லை.

 

1991 ஆம் ஆண்டில் நோபல் சமாதானப் பரிசைப் பெற்றபோது சூகீ தனது மகன் மூலமாக அனுப்பிய செய்தியில் பர்மாவின் சகல மக்களினதும் பெயரிலேயே அந்தப் பரிசை ஏற்றுக்கொள்வதாகக் கூறினார்.ஆனால், இன்று மெய்நடப்பில் மியன்மாரின் சிவிலியன் தலைவியாக இருக்கும் அவர் தனது நாட்டின் சகல மக்களினதும் உரிமைகளையும் நலன்களையும் இதயத்தில் கொண்டவராக இல்லை என்பது தெட்டத்தெளிவானது.

 

வீரகேசரி இணையத்தள வெளியுலக அரசியல் ஆய்வுத்தளம்

http://www.virakesari.lk/article/40743

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அடுத்த‌ பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில் ஸ்டாலின் தான் பிர‌த‌மரா போட்டி போடுவார் என்று அமெரிக்கா க‌னடா தொட்டு ப‌ல‌ நாட்டில்  க‌தை அடி ப‌டுது.....................துண்டறிக்கை பார்த்தே த‌மிழ‌ ஒழுங்காய் வாசிக்க‌ தெரியாது............ பிரத‌மர் ஆகினால் ஒட்டு மொத்த‌ உல‌க‌மே அதிரும் ஸ்டாலின் ஜயாவின் பேச்சை கேட்டு  😁😜................ வீட்டில் சீமான் பிள்ளைக‌ளுக்கு க‌ண்டிப்பாய் தூய‌ த‌மிழ் சொல்லிக் கொடுப்பார் அதில் எந்த ச‌ந்தேக‌மும் இல்லை யுவ‌ர் ஆன‌ர்.............ஆட்சிக்கு வ‌ராத‌ ஒருத‌ர‌ 68கேள்வி கேட்ப‌து எந்த‌ வித‌த்தில் ஞாய‌ம்...........ஒரு முறை ஆட்சி சீமான் கைக்கு போன‌ பிற‌க்கு அவ‌ர் த‌மிழை தமிழை வளர்க்கிறாரா அல்ல‌து திராவிட‌த்தை போல் தமிழை அழிக்கிறாரா என்று பின்னைய‌ காலங்களில் விவாதிக்க‌லாம்............இப்ப‌ அவ‌ர் எடுக்கும் அர‌சிய‌லை ப‌ற்றி விவ‌திப்ப‌து வ‌ர‌வேற்க்க‌ த‌க்க‌து...................
    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.