Jump to content

நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் தெரியுமா?- வைரலாகும் நித்தியின் வீடியோ


Recommended Posts

நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் தெரியுமா?- வைரலாகும் நித்தியின் வீடியோ


 

 

nityananada-viral-video

 

 

பாலியல் பலாத்கார புகாரில் சிக்கிய சாமியார் நித்யானந்தா சர்ச்சைகள் இல்லாமல் இருந்ததே இல்லை.

ரஞ்சிதா வீடியோ சர்ச்சை, ஆசிரமத்தில் இருந்த பெண்ணை பலாத்காரம் செய்த சர்ச்சை, மதுரை ஆதீனத்துடனான சர்ச்சை என்று அடுக்கிக் கொண்டே செல்லலாம். அந்த வரிசையில் தற்போது நிதியின் வீடியோ ஒன்று வைரலாகிக் கொண்டிருக்கிறது. நித்தியின் வீடியோ என்றவுடன் நீங்கள் வேறுமாதிரி யோசிக்க வேண்டாம். இது அவரின் 'சொற்பொழிவு' வீடியோ.

இன்னும் கொஞ்ச நாளில் மாடுகளும் எருதுகளும் உங்களிடம் மிக அழகான தமிழிலும் சமஸ்கிருதத்திலும் பேசும் என சாமியார் நித்யானந்தா பேசியிருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. 

அதில் அவர் பேசியிருப்பதாவது:

நமக்கு இருக்கும் உள் உறுப்புகள் இல்லாத குரங்குகளையும் இன்னும் பிற விலங்குகளையும் சூப்பர் கான்சியஸ் நிலைக்கு கொண்டு சென்று அவற்றை தூண்டிவிட்டு அந்த விலங்குகள் தாமாகவே உள் உறுப்புகளை உருவாக்கும்படி செய்யவிருக்கிறேன். இதை நான் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கவும் உள்ளேன்.

இதற்கான மென்பொருளை நேற்று சோதனை செய்துவிட்டுதான் இன்று உங்களிடம் நான் இதை பேசுகிறேன். இன்னும் ஒரே ஆண்டில் இதை செயல்படுத்தி நிரூபிப்பேன். என்னால் குரங்களுக்கும், மாடுகள், எருதுகள், புலி, சிங்கங்களுக்கும் குரல் நாணை உருவாக்கப்போகிறேன். அது மொழியை பேசக்கூடியதாக இருக்கும். வெகு விரைவில் மாடுகளும் எருதுகளும் உங்களிடம் மிக அழகான பிழையில்லாத தமிழிலும் சமஸ்கிருதத்திலும் பேசும்.

இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

அவர் ஒவ்வொரு முறை இப்படி பிதற்றும்போதும் வீடியோவுக்கு பின்னணியாக இசை சேர்க்கப்பட்டுள்ளது. எதிரே குட்டி சீடர்களும் அமர்ந்துள்ளனர். இந்த வீடியோவைப் பகிர்ந்து, 2.0 டீஸரில் வரும் திஸ் இஸ் பியாண்ட் சயின்ஸ் (This is beyond Science) என்ற வசனத்தைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை. ஆனால், இப்போது திடீரென வைரலாகிக் கொண்டிருக்கிறது.

https://www.kamadenu.in/news/india/6204-nityananada-viral-video-1.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நித்தியருக்கு போட்டியாய் அன்னபூரணியை   இறக்கி விடுறன்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, நவீனன் said:

நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் தெரியுமா?- வைரலாகும் நித்தியின் வீடியோ


 

 

nityananada-viral-video

 

 

பாலியல் பலாத்கார புகாரில் சிக்கிய சாமியார் நித்யானந்தா சர்ச்சைகள் இல்லாமல் இருந்ததே இல்லை.

ரஞ்சிதா வீடியோ சர்ச்சை, ஆசிரமத்தில் இருந்த பெண்ணை பலாத்காரம் செய்த சர்ச்சை, மதுரை ஆதீனத்துடனான சர்ச்சை என்று அடுக்கிக் கொண்டே செல்லலாம். அந்த வரிசையில் தற்போது நிதியின் வீடியோ ஒன்று வைரலாகிக் கொண்டிருக்கிறது. நித்தியின் வீடியோ என்றவுடன் நீங்கள் வேறுமாதிரி யோசிக்க வேண்டாம். இது அவரின் 'சொற்பொழிவு' வீடியோ.

இன்னும் கொஞ்ச நாளில் மாடுகளும் எருதுகளும் உங்களிடம் மிக அழகான தமிழிலும் சமஸ்கிருதத்திலும் பேசும் என சாமியார் நித்யானந்தா பேசியிருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. 

அதில் அவர் பேசியிருப்பதாவது:

நமக்கு இருக்கும் உள் உறுப்புகள் இல்லாத குரங்குகளையும் இன்னும் பிற விலங்குகளையும் சூப்பர் கான்சியஸ் நிலைக்கு கொண்டு சென்று அவற்றை தூண்டிவிட்டு அந்த விலங்குகள் தாமாகவே உள் உறுப்புகளை உருவாக்கும்படி செய்யவிருக்கிறேன். இதை நான் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கவும் உள்ளேன்.

இதற்கான மென்பொருளை நேற்று சோதனை செய்துவிட்டுதான் இன்று உங்களிடம் நான் இதை பேசுகிறேன். இன்னும் ஒரே ஆண்டில் இதை செயல்படுத்தி நிரூபிப்பேன். என்னால் குரங்களுக்கும், மாடுகள், எருதுகள், புலி, சிங்கங்களுக்கும் குரல் நாணை உருவாக்கப்போகிறேன். அது மொழியை பேசக்கூடியதாக இருக்கும். வெகு விரைவில் மாடுகளும் எருதுகளும் உங்களிடம் மிக அழகான பிழையில்லாத தமிழிலும் சமஸ்கிருதத்திலும் பேசும்.

இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

அவர் ஒவ்வொரு முறை இப்படி பிதற்றும்போதும் வீடியோவுக்கு பின்னணியாக இசை சேர்க்கப்பட்டுள்ளது. எதிரே குட்டி சீடர்களும் அமர்ந்துள்ளனர். இந்த வீடியோவைப் பகிர்ந்து, 2.0 டீஸரில் வரும் திஸ் இஸ் பியாண்ட் சயின்ஸ் (This is beyond Science) என்ற வசனத்தைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை. ஆனால், இப்போது திடீரென வைரலாகிக் கொண்டிருக்கிறது.

https://www.kamadenu.in/news/india/6204-nityananada-viral-video-1.html

இவர் ஒரு சிறந்த மனோதத்துவ சித்தர் 
இதை இவரை நம்பாத வெளி கூட்டம் தான் 
நகைச்சுவையாக இப்போது பார்க்கும் ......
இவரை நம்புவார்கள் ... இதையும் ஓரளவு நம்புவார்கள்.

ஒரு வருடம் ஆகும்போது வேறு ஒரு கிறுக்கு கதை 
பேசுவார் ...... இவரது பக்தர் கூட்ட்டம் இதை மறந்துவிடும் 
பின்பு அதில் மூழ்கி கொள்ளும் 

நாமும் மறந்துவிடுவோம் ... அப்போ எது ரெண்டோ 
அதையே நாமும் பின் பற்றுவோம்.

இனி ஆசிரமத்தில் இருக்கும் பெண்களுக்கு அலுப்பு குறையும்போல .....
சாமி அடுத்த கட்டதுக்கு ........ மிருக இஸ்பரிசத்துக்கு மாறுதுபோல இருக்கு 
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நச்சு என்று இதுதான் சொல்றது 

மேலை நாட்டில் சில வெள்ளைகள் இப்படி அலைய இதுதான் காரணம்.
காமம் பெண் எல்லாம் ஒரு அளவில் இருந்தால்தான் சுகக்கும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆஹா, இனி கேரளாவுக்கு அனுப்பப்படும் மாடுகள் எல்லாம் கெஞ்சிக் கூத்தாடி முடிந்தால் மிரட்டி தப்பித்து விடுங்கள்.அநேக ஓட்டல்களின் கதவுகள் அறைந்து சாத்தப்படுவது உறுதி......!  ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹிந்தி பாசை  தெரிந்தவர்கள் மட்டும், இந்தக் காணொளியை பார்க்கவும்.
நான்... என்ன செய்து கொண்டிருக்கின்றேன் என்பதை, நீங்கள் அறிவீர்கள். ? :grin: ?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் நினைக்கின்றேன் அவருக்கு தெரியும் இது புதிது என்று.  ஆனால் பையனின் கருத்தை மட்டும் வைத்து எப்படி சம்பவம் பழையதுதான் என்று அடிச்சு சத்தியம் பண்ணினாரோ தெரியவில்லை. ஓருவர் இங்கு எழுதுவதை மட்டும் வைத்து தனது நிலைப்பாட்டினை மாற்றும் ஆள் அல்ல அவர்.0
    • ஈரான் ஜனாதிபதியின் இலங்கை வருகை : கண்கானிப்பு நடவடிக்கையில் அமெரிக்க உளவுத்துறை. ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இலங்கை வருகையை இஸ்ரேலின் மொசாட் புலனாய்வு சேவையும், அமெரிக்க எப்.பி.ஐ உளவுத்துறையும் கண்காணித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தின் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொள்வதற்காக ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி எதிர்வரும் புதன்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இந்நிலையில், இலங்கையில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைமுறையில் உள்ளதோடு, ஈரானிய சிரேஷ்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் குழுவொன்று அண்மையில் இலங்கைக்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டிருந்தது. ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும், சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதேவேளை, கொழும்பிற்கு அழைத்து வரப்படும் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1379001
    • முற்றிலும் உண்மை ஆனால் மீசாலையில் வ‌சிக்கும் என‌து அத்தை வ‌ய‌தான‌ கால‌த்திலும் சிங்க‌ள‌வ‌னின் அட‌க்கு முறைய‌ தாண்டி த‌மிழ் தேசிய‌ கூட்ட‌மைப்புக்கு தொட‌ர்ந்து ஓட்டு போடுகிறா அதோட‌ அத்தைய‌ ஏதோ ஒரு ச‌ம்ப‌வ‌த்தில் சாலையில் வைச்சு மிர‌ட்டினார்க‌ள் அத்தை அவேன்ட‌ கைய‌ த‌ள்ளி விட்டு வீட்டுக்கு ந‌ட‌ந்து வ‌ந்த‌வா 2009க‌ட‌சியில் ட‌க்கிள‌ஸ்சின் ஆட்க‌ள் வீடு புகுந்து நெஞ்சில் துப்பாக்கிய‌ வைச்சு மிர‌ட்டின‌வை ஆனால் அவ‌ன் ப‌ய‌ப்பிட‌ வில்லை பிற‌க்கு உற‌வுக‌ள் சொல்ல‌ அர‌சிய‌லில் இருந்து முற்றிலுமாய் வில‌கி விட்டான் என‌து ம‌ச்சான் ..............................
    • "ஊசிப் போன வடை" என்று, யாரோ... உருட்டிக் கொண்டு திரிந்தார்கள். 😂 எல்லாம், பொய்யா... கோப்பால். 🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.