Jump to content

அப்பாவைப் பார்க்கணும்!


Recommended Posts

அப்பாவைப் பார்க்கணும்!

 

 
kadhir4

அருண்  வயசு 27. சிவந்த நிறம். எடுப்பான மூக்கு. அழகான உருண்டை முகம். இன்றைய இளைய  தலைமுறை இளைஞன். ஒரே ஒரு சின்ன விசயம் இடறல். இன்றைய இளைஞர்கள் விருப்பம் போல் கொஞ்சமாய் முடி உள்ள தாடி வைத்துக் கொள்ளப் பிடிக்காது. ஒரு நாள் விட்டு மறுநாள்  முகச் சவரம் செய்து கொள்வான். மீசையும் அளவாய் அழகாய் இருக்கும். இவனைக் கடக்கும் எந்தப் பெண்ணும் ஓரக் கண்ணாலோ, அடிக்கண்ணாலோ பார்க்காமல் போகமாட்டார்கள். அந்த அளவிற்கு இவனுக்கு உடல்மொழி, முக வசீகரம், கண்கள் கவர்ச்சி. 

அம்மாவுடன் பேச நேரம் பார்த்துக் கொண்டிருந்த இவனுக்கு இந்த ஞாயிற்றுக்கிழமை மணி 10. 10 நேரம் வசதியாக அமைந்தது. 

அம்மா காயத்ரி. வயது 57. கொஞ்சம் பூசிய உடல்.  அருணுக்கு நிகரான சிவந்த அதே நிறம். இன்னும் சொல்லப் போனால் அவனைத் தாண்டிய இன்னும் கூடுதல் நிறம். அரசு அலுவலகம் ஒன்றில் உயர் பதவி. இவளைப் பார்க்க எவரும் அனுமதி பெற்றுத்தான் அறைக்குள் நுழைய முடியும்.  ரொம்ப நேர்மையானவள். சரியான நேரத்திற்கு வேலைக்கு வருபவள். ஆரம்ப காலத்திலிருந்தே எந்த ஆண்கள், அதிகாரிகளிடம் அநாவசியப்பேச்சு, வழிசல், உரசல் கிடையாது. அரசாங்க காரை வீண் படாடோபத்திற்கு உபயோகப்படுத்த மாட்டாள். அலுவலகத்திற்கு இவள் தன் காரில் தானே ஓட்டிக்கொண்டு போவாள். வருவாள். அலுவல் நேரத்தில் மட்டுமே அரசாங்கக் காரைத் தொடுவாள்.  மேலும், எந்த காரணமுமில்லாமல் யாரையும் இவள் சந்திப்பது, அரசு அல்லாத வேலைகளைச் செய்வதெல்லாம் இவளுக்குப் பிடிக்காத விசயம். கறாராக இருப்பாள். அதனாலேயே இவளைக் கண்டால் மற்றவர்களுக்குப் பயம். அரசு அலுவலங்களில் மதிப்பு, மரியாதை.

இவளுக்கு மகன் அருண் மீது ரொம்ப பாசம், பிரியம்.  அவன்தான் அவளுக்கு மூச்சு, முடிச்சு,  ஆதாரம் எல்லாம். 

முன் பக்கம் தோட்டம் உள்ள ஒரு குட்டி பங்களா போன்ற பெரிய வீட்டில் அம்மா, மகன் மட்டும் உறுப்பினர்கள்.  வாசலில் மூன்று வேளை சுழற்சி முறையில் இருபத்தி நான்கு மணி நேரமும் ஒப்பந்த காவலாளிகள்.  மாலை தோட்ட பராமரிப்பிற்கென்று  ஐம்பது வயதைத் தாண்டிய ஒரு  முதியவர். பத்துப் பாத்திரம் தேய்க்க, வீட்டைக் கூட்டிப் பெருக்க என்று வீட்டு வேலைக்கு காலை, மாலை ஒரு மணி நேர வேலைக்காரி என்பதுதான் இவளது சுருக்கமான வாழ்க்கை. 

அருண் மாடிப்படிகளை விட்டு இறங்கினான். சோபாவில் உட்கார்ந்து தொலைக்காட்சிப் பெட்டியில் செய்திகள் பார்த்துக் கொண்டிருந்த காயத்ரி அருகில் அமர்ந்தான்.

மகன் அமர்ந்தது தெரிந்தும் தாய் இவனைக் கவனிக்காமல் தொலைக்காட்சிப் பெட்டியிலிருந்தாள். 

""அம்மா'' அழைத்தான்.
""சொல்லுப்பா?''
""நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும்'' இவனாகவே அவள் எதிரிலிருந்த ரிமோட்டை எடுத்து மூன்றாம் ஆளாகப் பேசிக் கொண்டிருந்த தொலைக்காட்சிப் பெட்டியை அணைத்தான். 
தொலைக்காட்சி அணைப்பால் காயத்ரி மகனைத் திரும்பிப் பார்த்தாள். 
""சுத்தி வளைக்காமலேயே விசயத்துக்கு வர்றேன். நான் அப்பாவைப் பார்க்கணும்'' மெல்ல சொன்னான். 
அவளும் அலுங்காமல் குலுங்காமல் ""எந்த அப்பாவை ?'' கேட்டாள். 
""நான் பொறக்கக் காரணமாய் இருந்த அப்பாவை''
காயத்ரி உள்ளுக்குள் கொஞ்சமாய்த் துணுக்குற்றாள். விபரம் புரியாமல்.
""அவர்தான் நீ என் வயித்துல ரெண்டு மாசமாய் இருக்கும் போதே செத்துட்டாரே'' வழக்கமாகச் சொல்வதைச் சொன்னாள். 
""ஆமாம். நான் உன் வயித்துல ரெண்டு மாச கருவாய் இருக்கும் போதுஅப்பா இரு சக்கர வாகனத்தில் போய் விபத்தில் அடிபட்டு செத்தார். அவர் மேல உனக்கு ரொம்பப் பாசம், பிரியம். அவருக்குப் பிறகு அவர் உருவம், படம் எதுவும் உன் கண்ணுல பட்டு கஷ்டம், வருத்தம் கொடுக்கக் கூடாது  என்பதற்காக உங்க திருமண ஆல்பம், நீங்க சம்பந்தப் பட்ட போட்டோ, அவர் தனி போட்டோ, துணிமணி எல்லாம்... எல்லாத்தையும் ஒன்னு விடாமல் அழிச்சே.  பெத்தவர் நிழல் பிள்ளை மேலும் விழுந்து தொந்தரவு கொடுக்கக் கூடாது என்கிற அக்கறையில் என் பெயருக்கு முன்னால் அவர் பெயரின் முதலெழுத்தைத் தலை எழுத்தாய்ப் போடாமல் உன் பெயரின் முதலெழுத்தை என் பெயருக்கு முன் தலை எழுத்தாய்ப் போட்டிருக்கே என்கிற  எல்லா செய்தியும் நான் சின்ன வயசிலிருந்தே உன்கிட்டே இருந்து கேட்டு கேட்டு சலிச்சுப் போன விசயம். எல்லாம் எனக்காக இட்டுக் கட்டி சொன்ன  பொய்'' அருண் நிறுத்தி நிதானமாக சொன்னான்.  
எதிர்பாராத பேச்சு, தாக்குதல்.  காயத்ரி அரண்டாள். முகம் இருண்டாள்.
அருண் தாயை ஆழமாகப் பார்த்துஅவளின் முகமாற்றம், உடல் மாற்றங்களை மனதால் படம் பிடித்தான்.  விடாமல்
""என் அப்பா பேர் என்னம்மா?'' என்று இதுவரை கேட்காத கேட்கத் தோன்றாத கேள்வியை முதன் முதலாகக் கேட்டான். 
கொஞ்சமாக யோசித்த காயத்ரி "" அழகேசன்''  சொன்னாள்.
அருணுக்கு அவள் தடுமாற்றம் புரிந்தது.  
""அம்மா நான் கேட்டதுக்காக இந்த பெயர் எனக்காக இப்போ உதிச்ச பெயரா, இல்லேமுன்னாடியே யோசிச்சு வைச்ச பெயரா?'' கேட்டான்.
மனதைப் படம் பிடிக்கப்பட்ட கேள்வி   
காயத்ரி உள்ளுக்குள் மொத்தமாக நொறுங்கினாள். உடலுக்குள் எல்லாம் உடைந்தது,  உதிர்ந்தது.  
அருணுக்கு அம்மாவை ஆசுவாசப்படுத்தத் தோன்றியது. அதே சமயம் அடுத்ததைத் தெரிந்து கொள்ளவும் ஆவலாய் இருந்தது. அதனால்கொஞ்ச நேரம் இடைவெளி விட்டு.
""அம்மா எனக்குத் தெரிஞ்சு நான் உன்னைப் பெத்த அம்மா அப்பாவைப் பார்த்ததே இல்லே. அவுங்களும் இங்கே வந்தது கிடையாது. நாமும் அவுங்களைத் தேடிப் போனது கிடையாது. ஏன் அவுங்களைப் பத்தின பேச்சே உன்கிட்ட இல்லே. அவுங்க இருக்காங்களா இல்லியா ?'' கேட்டான்.
~ மகன் ஏதோ விபரம் தெரிய ஆசைப்படுகிறான். அதனால் வில்லங்கமாகக் கேட்கிறான்.  காயத்ரிக்குத் தெளிவாகத் தெரிந்தது.  
""இல்லே'' மெல்ல சொன்னாள். 
""உனக்குக் கூடப் பொறந்த சகோதர சகோதரிகள்?''
""யாரும் கிடையாது'' அதற்கும் பொறுமையாகப் பதில் சொன்னாள்.  
""எல்லாருமே செத்துப் போயிட்டாங்களா?''
""அம்மா, அப்பா செத்துப் போயிட்டாங்க. சகோதரன் சகோதரிகள் கிடையாது'' விளக்கினாள்.  
""தனியாய்ப் பொறந்தியா?'' 
""ஆமாம்.'' 
""உன் அம்மா அப்பா எப்போ செத்துப் போனாங்க?''
"நீ ஏன் இந்த கேள்வி எல்லாம் கேட்குறே. உனக்கு என்ன விபரம் வேணும்?' கேட்க காயத்ரிக்குள் துடித்தது. போகட்டும்  எதுவரை போகும் பார்க்கலாம் என்று  நினைத்தாள். அதனால், 
 ""நான்பொறந்ததும்'' 
""அப்போ உன் வளர்ப்பு, படிப்பு?''
""எல்லாம் ஒரு அனாதை ஆசிரமம்''
""நமக்குச் சொந்தக்காரங்க?'' 
""யாரும்  கிடையாது'' 
""ஏன் ?''
""அனாதை சுமையாகிடுவேன் என்கிற பயத்துல யாரும் என்னைத் தேடி வரலை. எனக்கும் யாரையும் தெரியாது. தேடிப் போகலை.''
""அம்மா உன் திருமணம்?''
""முப்பது வருசத்துக்கு முந்தி.''
""அப்பா?''
""அவரும் ஓர் அரசாங்க அதிகாரி''
""அவர் எந்தத் துறையில் அரசாங்க அதிகாரி?''
அதற்கு மேல் காயத்ரிக்குப் பொறுமை இல்லை.
""அருண்  உனக்கு என்ன விபரம் வேணும். அதை நேரடியாய்க் கேள்'' கொஞ்சம் கடுமையாகவே  சொன்னாள்.
""அம்மா இந்த அனாதை ஆசிரமம், படிப்பு, வேலையும் மட்டும்தான் நீ சொன்னதுல உண்மை. மத்ததெல்லாம் பொய்'' அருண் மெல்ல சொன்னான்.
காயத்ரி அதிரவில்லை. அவனை அமைதியாகப் பார்த்தாள். அடுத்து அவன் என்ன சொல்லப் போகிறான்? என்பதற்காகக் காதுகளைக் கூர்மையாக்கிக் கொண்டாள். 
அருண் அவள் எதிர்பார்ப்புகளைப் பொய்யாக்கவில்லை. தொடர்ந்தான்...
""அம்மா உனக்கு அம்மா அப்பா கெடையாது. யாருன்னே தெரியாது. அனாதை . ஓர் அனாதை ஆசிரமத்துல வளர்ந்தே. அங்கேயே பட்டப் படிப்பு வரைக்கும் படிச்சே. உன் படிப்புத் தகுதிக்கு நல்ல அரசாங்க வேலை கிடைச்சுது. வெளியே வந்தே, வசதியானே. இதுதான் உண்மை. சரியா?'' கேட்டு அவள் முகத்தைப் பார்த்தான். 
மெüனம் சம்மதத்திற்கு அடையாளமாய் காயத்ரி அமைதியாய் இருந்தாள். 
""இப்போ சொல்லு? நான் எப்போ பொறந்தேன், எப்படி பொறந்தேன்?'' அருணும் அவளை விடாமல் கேட்டான். 
""என் பொறப்பு வளர்ப்பெல்லாம் சரியாய்த் தெரிஞ்ச உனக்கு  இதுவும் தெரிஞ்சிருக்கணும்; நீயே சொல்லு?''
""சொல்றேன். அம்மா உனக்கு அம்மா அப்பா இல்லே. சாதி சனம் கெடையாது.  தனியா வாழ்ந்த உனக்குத் துணை தேவை. பெண்கள் ஆசிரமத்தில் வளர்ந்த உனக்கு ஆண்கள் மேல் நாட்டம், ஈர்ப்பு கிடையாது. அதனால் திருமண ஆசை இல்லே. ஆனாலும் குழந்தைப் பெத்துக்க ஆசை. அதுக்காக என்னை செயற்கைக் கருத்தரிப்பு மூலம் சுயமாகப் பெத்தே. நான் சொன்னதெல்லாம் நூத்துக்கு நூறு உண்மை. சரியா?''
"இவனுக்கு இந்த விசயங்களெல்லாம் எப்படித் தெரியும்?'  என்கிற யோசனையில்      
""சரி'' - மென்று விழுங்கினாள். 
""பத்து மாசம் சுமந்தவளில்லையா? அதனால பெத்தப் பிள்ளையான என் மேல உனக்கு பாசம் அதிகம்.  அம்மாவும் அப்பாவுமாய் கண்ணுக்குக் கண்ணாய் வளர்த்தே. எனக்கு ஒன்னுன்னா துடிச்சே. இன்னைக்கும் துடிக்கிறே. நான் வளரும்போது அப்பா எங்கேன்னு கேட்டால் பதில் சொல்றதுக்காக அப்பா அப்படிச் செத்தார், இப்படிச் செத்தார், அவர் நினைவே இருக்கக் கூடாது என்கிறதுக்காக கலியாண ஆல்பம், புகைப்படமெல்லாம் தொலைச்சேன்... அழிச்சேன்... கட்டு கதைகள் சொன்னே. அதே கட்டுக் கதைகளை நீ இன்னைக்கும் சொல்றே. இதுவரைக்கும் சொல்றே. சரியா?''
""சரி''
""ஆனாஅம்மா. இங்கே ஒரு சின்ன தப்பு நடக்குது.''
""என்ன?'' 
""நீ என் மேல வைச்சிருக்கும்  பாசத்துல  கால்வாசி அளவு கூட எனக்கு உன் மேல கிடையாது''
""அருண்'' அதிர்வாய்ப் பார்த்தாள்.  
""நிசம்  எனக்கு அப்பா மேல பாசம்மா. நீ என் மேல கொட்டும் மொத்தப் பாசமும் அப்படியே இரட்டடிப்பா அப்பா மேல போய்க்கிட்டிருக்கு''
""அருண்'' காயத்ரி இப்போது அலறினாள். 
""உண்மைம்மா. அந்தப் பாசம். இயற்கையாவே என் ரத்தத்துல கலந்து போயிருக்கு. அப்படித்தான் நெனைக்கிறேன். அப்படித்தான் ஆகுது. இல்லே எனக்கு அப்பா இல்லை என்கிற ஏக்கம் ஒரு காரணமாய் இருக்கலாம். இல்லே தாய்ப் பாசமே பார்த்த எனக்கு தந்தை பாசத்துக்கு ஏங்கி தாவி இருக்கலாம். அதனாலதான் எங்கேயும்அப்பாவோட வர்ற, வளர்ற பிள்ளைகளை ஆசையாய், ஏக்கமாய்ப் பார்க்கும் பழக்கம் எனக்குத் தொத்தி இருக்கும்ன்னு நினைக்கிறேன்.  அப்பா கைப்பிடிச்சு நடக்க அவர் முதுகுல சவாரி செய்ய எனக்கு ரொம்ப பிடிக்கும்மா'' ரொம்ப தழைவாய்ச் சொன்னான்.
காயத்ரிக்கு மகனின் மனசு, ஏக்கம் புரிந்தது. 
""இதெல்லாம் உனக்கு இருக்கக் கூடாதுன்னுதான் நான் இதை எல்லாம்; உனக்கு செய்தேனே?''
""நீ மகன் மனசு புரிஞ்சவள். அதனால நீ எல்லாத்தையும் பார்த்துப் பார்த்து ஒன்னுக்குப் பத்தாய்ச் செய்தே. பையன் அப்பா எங்கேன்னு கேள்வி கேட்பான்னு எதிர்பார்த்து அதுக்கான பதிலை அப்பவே தயாரிச்சு என்கிட்ட அப்படியே சொன்னே.  ஆனா நீ எனக்குப் பார்த்துப் பார்த்து செய்த அத்தனையும் சத்தியமா வீண். மனசுல ஒட்டவே இல்லே. அந்த அப்பா ஏக்கம்,  தாக்கம் எனக்குத் தீரவே இல்லே.  இன்னைக்கும் அப்படியே இருக்கு.''
""சரி. இப்போ அதுக்கு என்ன செய்யணும்?''
""எனக்கு அப்பா வேணும்''
""அது எப்படி முடியும்?''
""நான் அப்பாவைப் பார்க்கணும்''
""முடியாது''
""முடியும்''
""அது எப்படி முடியும்?''
""நீ எனக்காகச் சிகிச்கை எடுத்துக்கிட்ட மருத்துவமனையில் போய் விபரம் கேட்பேன்.''
""கொடுக்க மாட்டாங்க.'' 
""கொடுக்க வைப்பேன்.''
""அருண்''
""ஏன்ம்மா அதட்டுறே? உனக்கு இது அநாவசியம்,  தேவை இல்லாதது. ஆனா எனக்குத் தேவை''
""தெரிஞ்சு நீ அதனால என்ன சாதிக்கப் போறே.?''
""சாதிக்கிறது அப்பாற்பட்ட விசயம். எனக்கான ஆதாரத்தை நான் தெரிஞ்சிக்க வேணாமா?  அனாதைங்களுக்கெல்லாம் கூட அப்பா அம்மாக்கள் இருக்காங்க. ஏன் உனக்கே அப்பா, அம்மா இருக்காங்கன்னு தெம்பு, தைரியமா சொல்றே... எனக்கு? என்னை மாதிரி பிறந்த பிள்ளைகளுக்கு எங்கே அப்பா ? தெரிஞ்சுக்க எனக்கு உரிமை கிடையாதா, தெரிஞ்சுக்கக் கூடாதா?''
""அதைத் தெரிஞ்சிக்க முடியாது அருண். 
அப்படியே கஷ்டப்பட்டு தெரிஞ்சிக்கிட்டாலும் அதனால பிரயோஜனம் கிடையாது''
""பிரயோஜனம் இல்லேன்னு சொல்லாதேம்மா. என் ஏக்கம், தாக்கத்தைத் தீர்க்கவாவது எனக்கு அப்பா இன்னார்ன்னு தெரியணும்.  எனக்கும் அப்பா இருக்கார்ன்னு தலை நிமிர்ந்து நடக்கணும். மனம் சாந்தியடையணும்''
""உன் மனக்கதவைச் சாத்து அருண். அவரை யாருன்னு கண்டு பிடிக்க முடியாது. கண்டுபிடிச்சாலும்அதுல நிறைய சிக்கல் இருக்கு.''
""எல்லா சிக்கலும் எனக்குத் தெரியும். நான் அதைப் பத்தி நிறைய யோசிச்சிருக்கேன்.''
""எப்படி அருண்?'' 
""உன் வளர்ப்பு, என் பொறப்பு சரித்திரம் என் கைக்குக் கிடைச்சதுமே நான் அதைப்பத்தி நிறைய யோசிச்சாச்சு''
""புரியலை?'' குழப்பமாகப் பார்த்தாள். 
""அம்மா பத்து நாட்களுக்கு முன் வீட்ல நான் எதையோ தேடப் போய் நீ பத்திரப்படுத்தி ஒளிச்சு வைச்சிருந்த என் சம்பந்த மருத்துவமனை தாட்கள், உன் அனாதை ஆசிரம சான்றிதழ்கள் எல்லாம்  மொத்தமா என் கைக்குக் கிடைச்சுது'' 
""அருண்''
""அம்மா நான் ஆடிப் போய்ட்டேன். உன்னை நினைச்சி உருகிப் போய்ட்டேன். ஆனாலும் உன் மேல பாசம் வரலை. அப்பா நேசம் விடலை.''
மகன் பேசிய பேச்சு, கேட்ட கேள்விகளுக்கெல்லாம் இப்போது அர்த்தம் புரிந்தது காயத்ரிக்கு.  அமைதியாய் அவனைப் பார்த்தாள். 
""என் கையில கிடைச்ச அந்த மொத்தத் தாள்களையும் ஒன்னு விடாமல் என் கைபேசியில் படம் புடிச்சி பதிவு செய்து பத்திரப்படுத்திட்டேன். போற இடத்தில் நகல் கேட்டால் எடுத்துக் காட்டுறதுக்கும் அவற்றை என் பயணப் பையில் வைச்சு பத்திரப்படுத்திட்டேன். நான் உன்கிட்ட சேதி சொல்லிட்டு கிளம்பணும். அதான் பாக்கி. சேதியும் சொல்லிட்டேன். கிளம்புறேன்.'' - எழுந்தான். 
~ தெளிவான யோசனை, நடப்பு, முடிவு  - காயத்ரிக்குப் புரிந்தது. 
ஆனாலும் மகனை மருட்சியாகப் பார்த்தாள். 
""ஒன்னும் பயப்படாதே  நான் அலுவலகத்திற்குப் பத்து நாள் விடுப்பு. அதனால வேலையை பத்தின கவலை, அக்கறை இல்லே. அப்பாவைப் பார்க்கணும். அதான் வேலை. முடிஞ்சதும் நான் பத்திரமா திரும்பி வருவேன். நீயும் பத்திரமா இரு.'' சொல்லி நடந்து மாடிப்படி ஏறினான். 
காயத்ரி   எந்தவித அசைவுமின்றி அவனைப் பார்த்தபடி இருந்தாள். 

கரூர் புறநகர்ப்பகுதியில் பல ஏக்கர் பரப்பளவில் அந்த அன்னைத் தெரசா மகப்பேறு மருத்துவமனை முன்புறம்  தோட்டம், வாகன நிறுத்தம் வசதிக்காக நிழல் தரும் மரங்கள், ஷெட்டுகள் பின்னே மூன்றடுக்கு கட்டடங்கள் என்று அருமையாக அமைந்திருந்தது. 
அருண் எந்தவித அலட்டலுமில்லாமல் பேருந்து நிறுத்தத்திலிருந்து வாடகைக் காரில் வந்து இறங்கினான். 
தன் பயணப் பையுடன் படி ஏறினான். 
முகப்பிலேயே நிறுவனர், தலைமை மருத்துவர் பெயர்களெல்லாம் வரிசையாக இருந்தன. 
வரவேற்பை அணுகினான். அங்கு சுண்டி இழுக்கும் அழகில் உள்ள இளம்பெண் ஒரு காதில் போனும், மறு காதில் கைபேசியுமாக பேசிக் கொண்டிருந்தாள். அவள் முடித்ததும்
""நான் டாக்டர் சதாசிவத்தைப் பார்க்கணும்'' - அருண் சொன்னான்.  
""என்ன விசயமா பார்க்கணும்?'' -  குரல் குளிர்ச்சியாக வந்தது. 
""குழந்தை சம்பந்தமா'' இழுத்தான்.
""நீங்க லிப்ட்ல போனீங்கன்னா முதல் மாடி. முப்பத்தி இரண்டாவது அறை'' சொன்னாள்.   
""இதுக்கு முன்னாடி அவரைப் பார்க்க நிறைய ஆட்கள் இருக்காங்களா?''
""இல்லேன்னு நெனைக்கிறேன். சார் கொஞ்சம் ஓய்வாய்த்தான் இருக்கார்.'' 
அருண் வரவேற்பு அறைக்கு எதிரிலுள்ள மின்தூக்கியில் ஏறினான்.
முதல் மாடி, 32 இரண்டாவது அறை முன் தடுப்பாக ஓர் இளைஞி இருந்தாள்.
""நான் சாரைப் பார்க்கணும்''
அவள் எழுந்து அடைத்திருந்த கதவு கண்ணாடி வழியே உள்ளே பார்த்தாள்.
""கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுங்க. சார் பைல் பார்த்துக்கிட்டிருக்கார்.''
பக்கவாட்டில் வரிசையாய் இருக்கும் நாற்காலிகளில் ஒன்றில் அமர்ந்தான். 
"அம்மா இப்போது அலுவலகம் போயிருப்பாளா இல்லை, விடுப்பெடுத்து வீட்டில் தங்கி தன்னைப் பற்றி நினைத்துக் கொண்டு இருப்பாளா?' மனம் நினைத்தது. 
அடுத்து யோசிக்க விடாமல், ""சார்  நீங்க உள்ளே போகலாம்'' அந்த பெண் குரல். 
பையுடன் அறைக்கதவைத் திறந்து உள்ளே நுழைந்தான். ஏ.சி. குளிர் முகத்திலிருந்து மொத்த உடலையும்  வருடியது. 
டாக்டர் சதாசிவம் வயது 55. நெற்றியில் சுருக்கம். கோட் சூட் போட்டு முறையாக சுழல் நாற்காலியில் அமர்ந்திருந்தார். மேசை மேல் கணினி, பைல்கள். எதிர் சுவரில் உள்ள பெரிய திரையில் கண்காணிப்புக் கேமராக்களின் நடப்பு ஒளி ஓட்டங்கள் என்று அனைத்து நிர்வாக அம்சங்களுடன் இருந்தார்.  
""வணக்கம் சார்''
அவர் இவனுக்குப் பதில் வணக்கம் சொல்லாமல் எதிர் நாற்காலியைக் காட்டினார்.
அருண் பையை நாற்காலிக்கருகில் காலடியில் தரையில் வைத்துவிட்டு அமர்ந்தான்.  அடுத்து தன் கைபேசியை எடுத்து உயிர்ப்பித்தான். 
தொடு திரையில்அவன் அம்மாவுடன் இருந்தான். 
""சார் நான் அருண். இது அம்மா. பேர் காயத்ரி'' சொல்லி கைபேசியை அவரிடம் கொடுத்தான். 
"எதற்கு இப்படி ஒரு அறிமுகம்?'  என்று குழம்பிய சதாசிவம் அவன் கைபேசியை சர்வ சாதாரணமாக  வாங்கிப் பார்த்துவிட்டு அவனிடம் திருப்பிக் கொடுத்து 
""சொல்லுங்க?'' அருண் முகத்தைப் பார்த்தார்.  
""சார்  எனக்கு வயசு  இருபத்தி ஏழு.  என்னை என் அம்மா இங்கே செயற்கை கருத்தரிப்பு மூலம்  பெத்திருக்காங்க. அதுக்கான ஏற்பாட்டை நீங்கதான் செய்து மருத்துவம் பார்த்திருக்கீங்க'' நிறுத்தினான்.
சதாசிவத்திற்கு அவன் அறிமுகத்திற்கான காரணம் புரிந்தது. 
""அப்படியா?'' என்றார். 
""ஆமாம் சார். நீங்க கையெழுத்துப் போட்டு மருத்துவம் பார்த்த மொத்த தாள்களும் என்கிட்ட இருக்கு. எல்லாம் என் கைபேசியில் படம் புடிச்சி வைச்சிருக்கேன். தேவைப்பட்டால் உங்களிடம் காட்ட அசலும் என் பையில் இருக்கு சார்.'' சொல்லியபடி
அருண் தன் கைபேசியில்இருக்கும் அவற்றை அவரிடம் காட்டினான். 
சதாசிவம் அதை வாங்கி ஒவ்வொன்றாய்ப் பொறுமையாய்ப் பார்த்து விட்டு அவனிடம் திருப்பினார். 
""இப்போ எனக்கு நீங்க ஒரு உதவி செய்யணும் சார்''
""என்ன உதவி?''
""நான் என் அப்பாவைப் பார்க்கணும்''
""புரியலை?''
""என் தாய் வயிற்றில் நான் கருவானதுக்கு காரணமான அந்த ஆளைப் பார்க்கணும்''
இப்போது சதாசிவத்திற்குப் புரிந்தது. 
""ஏன் ஏதாவது பிரச்னையா?'' கேட்டார்.
""இல்லே சார். அந்த ஆள் முகத்தைப் பார்க்கணும்ன்னு ஆசை.உதவணும்''
""மன்னிக்கணும் அருண். அது யார்கிட்டேயும் சொல்லக் கூடாது. சொல்ல முடியாது.''
""ஏன் சார் ?''
""அது மருத்துவமனைகளின்  சட்ட திட்டம், கட்டுப்பாடு.''
""தெரியும் சார். ஆனா, ஒருத்தர் உயிரணுக்களிலிருந்து நாங்கள் இத்தனைக் குழந்தைகளை உருவாக்கி சாதனை செய்திருக்கிறோம்ன்னு  வெளிநாட்டில் ஒரு மருத்துவமனை அறிக்கை விட்டதாய்  சமீபத்தில் தினசரி செய்தித்தாளில் படிச்சேன். அது எப்படி?'' 
""நானும் படிச்சேன். அது சம்பந்தமா இங்கே விவாதம் நடந்துகிட்டு இருக்கு.'' 
""எனக்கு அது தேவை இல்லாத விசயம் சார். இன்னார் உயிரணு இன்னாருக்குச் சேர்த்திருக்கு என்கிற விபரம் அது சம்பந்தப்பட்ட டாக்டர், மருத்துவமனை நிர்வாகத்துக்குத் தெரியும் இல்லியா?'' 
""கண்டிப்பாத் தெரியும்''
""அப்படி எனக்கு உயிர் கொடுக்க யார் உதவினாங்க என்கிற விபரம்  உங்களுக்குத் தெரியும் இல்லியா ?'' 
"" தெரியும்''
""அதுதான் சார் எனக்கு வேணும்''
""அதான் சொல்லக் கூடாது. ரகசியம்''
""ஏன் சார்?''
""அதுல நிறைய நடைமுறை சிக்கல்கள் இருக்கு. பொது மருத்துவமனைகளில் ரத்த வங்கி செயல் படுவதுபோல்இப்படிப்பட்ட குழந்தைகள் மருத்துவமனைகளில் விந்தணு சேமிப்பு வங்கிகளும் செயல்படுது. ரத்த வங்கிகளில் இத்தனை வயதுக்கு மேல்தான் ஒருத்தர் ரத்தத்தானம்; கொடுக்கலாம், விற்கலாம். அறுபது வயசுக்கு அப்புறம் அவர் கொடுக்கக் கூடாது. கொடுப்பவர் உடலில் எந்தவித நோய், நோய்த் தொற்றுகள் இருக்கக் கூடாது. அவர் மது, புகை, போதைப் பழக்கங்களுக்கு ஆளாகி இருக்கக் கூடாது போன்ற பல சட்ட திட்டங்கள் இருப்பது போல்இந்த சேமிப்பிற்கும் அதைவிட கடுமையான, கறாரான மருத்துவப் பரிசோதனைகள்  இருக்கு. அது எல்லாத்தையும்விட முக்கியம் விந்து விற்பவர், தானம் செய்பவர் முகம், முகவரிகள் வெளி உலகுக்குத் தெரிவிக்க மாட்டோம். காரணம். ஓர் ஆண், பெண் உயிரணுக்களிலிருந்து பல குழந்தைகளை உருவாக்குவோம். ஆளை அடையாளம் காட்டினால் எல்லா குழந்தைகளுக்கும் இது என் அம்மா, இது என் அப்பான்னு சொந்தம் கொண்டாடினால் கொடுத்தவர் வாழ்க்கை சிக்கலாகிவிடும்.  வெளி நாடுகளில் இந்த விந்து சேமிப்பு விவகாரம் ரத்ததானம் போல்... ரொம்ப சர்வசாதாரணமாய் நடக்குது. ஆனால் இங்கே தமிழ்நாட்டில் வெட்கம், மானம், மரியாதை, கூச்சம் நாச்சம் விசயங்களால் இலைமறைவு காய்மறைவாய் நடக்குது. அதனால் இது சம்பந்தமான எந்த விபரங்களையும் யாருக்கும் மறந்தும் தெரிவிக்க மாட்டோம்.'' சதாசிவம் சொல்லி நிறுத்தினார்.
இதை எல்லாம் பொறுமையாய்க் கேட்ட அருண்...
""இது எல்லாம் எனக்கும் தெரியும் சார்.  நான் அப்பா முகத்தைப் பார்க்கணும். அவ்வளவுதான் ஆசை. இது பேராசை, பெரிய ஆசை கிடையாது. நியாயமான ஆசை.  ஒரு குழந்தைக்குக் கண்டிப்பா ஒரு அம்மா அப்பா இருந்தே தீரணும். இது தவிர்க்க முடியாதது. இன்றையச் சூழ்நிலையில் நான் அப்படி இல்லே. அம்மா இருக்காங்க. அப்பா இல்லே. இருந்தும் அவர் முகம் தெரியாமல் வானத்திலிருந்து குதிச்சு என் அம்மா வயித்துல புகுந்து பொறந்த தெய்வக் குழந்தை மாதிரி இருக்கேன். இது எனக்குப் பிடிக்கலை. மனம் உளைச்சலாய் இருக்கு. எனக்கு மூலகாரணமானவர் முகத்தைப் பார்த்தால் இதெல்லாம் தீரும். மனசு ஆறும்'' - சொன்னான்.
இதுவரை...இதைப் பற்றி இப்படி சிந்திக்காத சதாசிவத்திற்கு அருண் சொன்னது அனைத்தும் அதிர்ச்சி;  ஆச்சரியமாக இருந்தது. அதே சமயம்... எல்லாம் நியாயமாகவும் பட்டது. இதற்குத்  தீர்வு? இவருக்குள்ளேயே ஓர் உதைப்பு, உலுக்கல் ஏற்பட்டது.  வினாடி நேரம் திகைத்தார். பின்... மெல்ல...
""அது கொடுக்கக் கூடாது அருண். இன்னும் நடைமுறை சிக்கலைச் சொல்றேன். அன்றையச் சூழ்நிலையில் உங்க அம்மா கரு முட்டையோடு   திருமண வயசைத் தொட்ட 21 வயசு இளைஞன் கரு அணுவைச் சேர்த்திருந்தால்... இன்னைக்கு... அந்த ஆள் உங்க வயசையும் சேர்த்து... நாப்பத்தி எட்டு, அம்பது வயசு ஆனவராய் இருப்பார். தேடிப் போய் பார்த்த உனக்கும் வயசு, உருவம் எல்லாம் பொருத்தமாய் இருக்கும். திருப்தியாய் இருக்கும். நாப்பது வயசு ஆள் கருவினைச் சேர்த்திருந்தால்...இன்னைக்கு அவருக்கு 67 வயசு. பார்க்கிற உனக்கு எப்படி இருக்கும். இந்தக் கிழவனையா கஷ்டப்பட்டு; பார்க்க வந்தோம்ன்னு மனம் வெறுக்கும், கசக்கும். அப்புறம்... அன்னைக்குக் கொடுத்தவன்... இளவயசு, எந்த கெட்ட பழக்க வழக்கமுமில்லாத யோக்கியமானவனாவே இருக்கலாம். இன்னைக்கு? ஆள் அப்படியே மாறி...  குடிகாரன், ரவுடி, கொலைக்காரனாய், பிச்சைக்காரனாய் இருக்கலாம். வினையை விலை கொடுத்து வாங்கிய கதை. மனசு நொந்து போகும்!''
 

அருண் மெளனமாய் இருந்தான். 

( அடுத்த இதழில்...)

http://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2018/sep/17/அப்பாவைப்-பார்க்கணும்-3002103.html

Link to comment
Share on other sites

அப்பாவைப் பார்க்கணும்! 2

 

 
ka1

சென்ற இதழ் தொடர்ச்சி...


"அப்புறம் ஆள் இல்லாமலும் இருக்கலாம். இயற்கையாகவோ விபத்திலோ செத்துப் போயிருக்கலாம். நீ ஆளைக் கண்டுபிடிக்கிறதும் கஷ்டம். விந்து வித்த விசயம் வெளியே தெரிந்தால் மான அவமானம், கஷ்டம், கேவலம்ன்னு நெனைச்சி, எங்களிடம் அவன் கொடுத்தது போலி முகவரியாய் இருக்கலாம். அடுத்து அந்த ஆள் இன்னைக்கு மனைவி மக்களுடன் குடும்பமாய் இருக்கலாம். இந்த சூழ்நிலையில் அவரை நீ என்ன சொல்லி பார்ப்பே? பார்த்து என்ன செய்ய முடியும் ? பிரயோசனம்? அருண் சில விசயங்கள் தெரியாமல் இருக்கிறதுதான் நல்லது''
"சார்... நீங்க சொல்றது எல்லாம் சரி. அத்தனையும் நானும் யோசிச்சேன். எனக்கு ஆள் எப்படி இருந்தாலும் கவலை இல்லே. நான் பார்க்கணும். அதான் என் ஆசை, வெறி''
"இது ரொம்ப பிடிவாதம். தீக்குள் விரலை வைக்கும் சமாச்சாரம். வலிய கஷ்டத்தை விலைக்கு வாங்கும் வேலை. வேணாம். வீண் முயற்சி. விட்டுடு.'' 
"முடியாது சார். நான் என் அப்பாவைப் பார்க்கணும்.''
சதாசிவத்திற்கு அவன் பிடிவாதம் எரிச்சலைத் தந்தது.
"போடா என்று கழுத்தைப் பிடித்துத் தள்ளுவது எளிது. ஆனால் பின் விளைவுகள்? இப்படிப்பட்ட ஆட்கள் ஏதாவது ஒரு திட்டம், முடிவோடுதான் வந்து இருப்பார்கள். அந்த முடிவு விபரீதமாக இருந்தால்? தன்னைக் கொலை செய்யலாம், இந்த கட்டடங்களுக்குக் குண்டு வைக்கலாம். சதாசிவத்திற்கு அடுத்து நினைத்துப் பார்க்கத் துணிவில்லை. 


"ஆளை அவன் வழிக்கே வந்து திருப்பி அனுப்புவதுதான் சரி' - முடிவிற்கு வந்தார். 
"சரி. ஆளைஎப்படித் தேடுவே?'' கேட்டார். 
"நீங்க கொடுக்கிற முகவரியைத் தேடிப் போவேன். அங்கே இல்லேன்னா இருக்கும் இடம் தேடிப் போவேன். அங்கேயும் இல்லேன்னா என் தேடுதல் தொடரும். எப்படியும் கண்டு பிடிப்பேன் சார் ?''
"எங்கேயும் இல்லே. கண்டுபிடிக்க முடியலைன்னா என்ன செய்வே?'' 
"முயற்சி செய்த திருப்தி இருக்கும் சார்.''
"அந்த திருப்தியோட நீ இப்போ இப்படியே திரும்பிப் போ.'' 
"அது முடியாது சார்... முதல் அடியிலேயே முடியாது திரும்பிப் போக மனசு ஒத்துக்காது'' 
"நீ தலை கீழாய் நின்னாலும் என்கிட்ட இருந்து எதுவும் பெயராது. என்ன செய்வே?''
"பெயரும் சார்.''
"எப்படி ?''


"என் ஆசை சரியா, தப்பா சார் ?''
"ரெண்டும் இருக்கு. அதுல பிடிவாதம் ரொம்ப ரொம்ப அதிகம்.''
"இந்த மாதிரி செயற்கைக் கருத்தரிப்பில் பிறந்த குழந்தைக்கு ஒரு தாய் தன் குழந்தைக்கு தகப்பன் கிடையாது. ஆண் துணை இல்லாமல் சுயமாய்ப் பெத்த குழந்தை. இவனுக்கு தன் பெயரைத்தான் தலை எழுத்தாய்ப் போடுவேன்ன்னு கோர்ட்டுல கேஸ் போட்டு வெற்றியடைஞ்சிருக்காங்க. ஒரு பெண் தாய்க்கு அந்த உரிமை இருக்கும்போது அப்படிப் பிறந்த எனக்கு, ஒரு குழந்தைக்கு தன் தகப்பன் யாருன்னு தெரிய ஏன் உரிமை, ஆசை இருக்கக் கூடாது?'' அருண் நிறுத்தி நிதானமாகச் சொல்லி சதாசிவம் முகத்தைப் பார்த்தான்.
அவர் முகத்தில் சிந்தனைக் கோடுகள் மெல்ல படர்ந்தன. 
தொடர்ந்தான்: 
"அப்படி ஒரு கேசை நான் இந்த மருத்துவமனை மேல் போடுவேன். அப்படி போட்டா... நீங்க கோர்ட்ல படி ஏற வேண்டி வரும். குழந்தைக்கு அப்பாவைத் தெரிஞ்சுக்க உரிமை உண்டு. ஆனாஅப்பான்னு உரிமை, உறவு கொண்டாட முடியாதுன்னு கண்டிப்பா தீர்ப்பு வரும். அப்படி வந்தால் நீங்க அப்போ எனக்குத் தேவையானதையெல்லாம் கொடுக்க வேண்டி வரும். அப்படியே நான் ஜெயிக்கலைன்னாலும் அந்த கேஸ் முடியும் வரை நீங்க கோர்ட்டுக்கும் வீட்டுக்குமாய் அலைய வேண்டி வரும். அப்படி அலையும்போது தொலைக்காட்சி மீடியாக்கள் உங்களைச் சும்மா விட்டு வைக்காது. நீங்க கோர்ட்டுக்கு அலையுறதை எடுத்துக் காட்டும். விவரம் கொடுக்கலாமா? கூடாதான்னு விவாதம் செய்யும். இந்த வெளிச்சம் உங்களுக்கு நல்லதும் செய்யும், கெட்டதும் செய்யும். அதெல்லாம் தேவை இல்லேங்குறதுதான் என் அபிப்பிராயம்'' சொல்லி நிறுத்தினான்.
சதாசிவம் நேராய் அவனை உறுத்துப் பார்த்தார். 


"சார்... இந்த சமாச்சாரத்தை இன்னும் கலாட்டாவாய்ப் பிரபலப்படுத்தலாம். இப்படின்னு நான் விலாவாரியாய் மனு எழுதி கலெக்டர் கிட்ட கொடுக்கலாம். நடவடிக்கை இல்லேன்னு தீக்குளிக்கிற மாதிரி மண்ணெண்ணெய்யை ஊத்தி கலாட்டா நாடகம் நடத்தலாம். இல்லே டெலிபோன் டவர் மேல ஏறி தற்கொலை செய்துக்குவேன்னு மிரட்டலாம். எப்படிச் செய்தாலும் என்னை கைது செய்து இப்படித்தான்னு கேஸ் போடுவாங்க. இந்த கலாட்டா, கைதுனால இந்த மருத்துவமனை மானம், மரியாதை எல்லாம் அதலபாதாளத்துல விழுந்து வியாபாரம் சரிந்து தலை நிமிர பல வருசங்களாகும்'' நிறுத்தினான். 
சதாசிவத்திற்கு வேர்த்தது. 
"நீங்க முரண்டு பிடிக்காமல் நான் கேட்ட விவரங்களைக் கொடுத்தால் நான் வெளியில எதுவும் சொல்லாமல் காதும் காதும் வைச்ச மாதிரி வேலையைப் பார்ப்பேன். கலாட்டா, கைது, கோர்ட், கேசுக்கெல்லாம் வேலையே இருக்காது'' அருண் நிறுத்தி நிதானமாக 
ரொம்ப தெளிவாகச் சொன்னான். 
சதாசிவம் கைக்குட்டையை எடுத்து முகத்தைத் துடைத்தார். 
"நான் தேடிப் போற ஆள் ஆத்திரப்பட்டு நீங்க விதிகளை மீறி செயல்பட்டதாய் உங்க மேல வழக்குப் போட வாய்ப்பிருக்கும்ன்னு நீங்க பயப்பட வேணாம். நான் விவரம் சொன்னால்தானே அவருக்குத் தெரியும். சொல்ல மாட்டேன். கேட்டாலும் சொல்ல மாட்டேன். ஒரு கணிப்பில் அப்படி போட்டால் அவர் தன் சொந்த வாழ்க்கைக்குச் சூனியம் வைச்ச கதை. போட வாய்ப்பில்லே'' நிறுத்தினான். 
சதாசிவத்திற்குள் வேர்வை அடங்கியது. 


அதே நேரம் " இவனை எப்படி நம்புவது?' என்றும் உள்ளுக்குள் கேள்வி எழுந்தது.
"அருண் உனக்கு விவரம் கொடுத்தால்எனக்கு எந்த வில்லங்கமும் வராதுன்னு உன்னை எப்படி நம்புறது?'' நேரடியாகவே கேட்டார்.
"அதுக்கு நான் என்ன செய்யணும்?'' இவன் அவரைத் திருப்பிக் கேட்டான். 
"நான் சொல்லும் விவரத்தை யாருக்கும் தெரிவிக்க மாட்டேன். இது சம்பந்தமா இந்த மருத்துவமனை தொழில், புகழுக்கு எந்தவித இடையூறு, களங்கம் வந்தால் அதுக்கு நான் பொறுப்புன்னு உன் கையால் எழுதிக் கொடு.'' 
"தாராளமாய் சந்தோசமாய் எழுதி தர்றேன் சார்'' - சொன்னான். 
சதாசிவம் தன் மேசை இழுப்பறையைத் திறந்து அதிலிருந்து ஒரு தாளை எடுத்து அவனிடம் நீட்டினார். 
அருண் பேனா எடுத்து கடகடவென்று அதில் அவர் சொன்னபடி எழுதி கையெழுத்துப் போட்டு சதாசிவத்திடம் நீட்டினான். 
வாங்கிப் படித்துப் பார்த்த அவருக்கு திருப்தி. முகம் தெளிவாகியது.
உடன் அவர், அருணிடம் ஒரிஜினல் டாக்குமெண்டுகளைக் கேட்டு வாங்கிஅதிலுள்ள பெயர், தேதி விவரங்களைக் கணினியில் தட்டி."இதோ அவர் பேர், விலாசம் இதை முதலும் கடைசியுமாய்ப் பார்த்து எழுதிக்கோ. நாளைக்கு வந்தா கெடைக்காது. ஏன் நீ வெளியே போய் உள்ளே வந்தால் கிடைக்காது'' - சொல்லி கணினியை அவன் பக்கம் திருப்பினார். 


"இந்த இடைவெளி நேரத்தில் இது என்ன இடக்கு முடக்கு? அருண் திடுக்கிட்டான்.
"ஏன் சார்?'' என்று கேட்டான்.
"நாளைக்கு உன்னை மாதிரி இன்னோர் ஆள் முளைக்கக் கூடாது. அப்படியே முளைச்சாலும் கேட்கிற எந்த விவரங்களும் எங்கேயும் கிடைக்காம செய்யப் போறேன்.''
"புரியலை?''
"விந்து கொடுத்தவங்க பெயர் விலாசம், அதை இன்னார் கரு அணுவோடு சேர்த்த மொத்த விவரங்களையும் அழிக்கப் போறேன். ஏன்? இன்னார் உயிரணு இன்னாருக்குச் சேர்க்கிறோம் என்கிற விவரம் அதை செய்யும் டாக்டருக்கே தெரியாது. அவருக்குத் தேவை குழந்தை வேண்டி வருகிறவர்களுக்குத் தேவையான ஆண், பெண் உயிர் அணு. அவ்வளவுதான். அப்படி இருந்தால்தான்உன்னை மாதிரி முளைச்சு வர்ற ஆட்களிடம் இதோ பார் எதுவும் கிடையாதுன்னு, தைரியமாய் எடுத்துக்காட்டி நாங்களும் பயமில்லாம இருக்கலாம். இந்த தொழிலும் ஆரோக்கியமா வளரும்'' - சொன்னார்.
" தன்னால் இந்தப் பிரச்னை, இவர்களுக்கு ஒரு நல்ல முடிவு தோன்ற அருண் கணினியைப் பார்த்தான். 
"ஜெரால்டு'' தன் அப்பாவின் பெயரை முதன் முதலாக வாய்விட்டு உச்சரித்தான். தன் சட்டைப் பையிலிருந்த சின்ன டயரியை எடுத்துஅதிலிருந்த விலாசத்தை நிறுத்தி, நிதானமாய் அழுத்தி எழுதினான். 


3
அடுத்த நாள் மதியம் சேலம் பேருந்து நிலையத்தில் இறங்கினான். வழக்கம் போல் வாடகைக் கார்கள் நிற்கும் இடத்திற்குச் சென்றான்.
"காரா சார் ?'' - கேட்டு இளைஞன் வலிய வந்தான்.
"ஆமா''
"எங்கே சார் போகணும்?''
"கணபதி நகர்''
"எந்த கணபதி நகர்?''
"சேலத்துல எத்தினி கணபதி நகர் இருக்கோஅங்கே எல்லாம் போகணும்''
"வேண்டுதலா சார்?''
"இல்லே. ஓராளைத் தேடணும்''
"கையில விலாசம் இருக்கா?''
"இருக்கு''
"காட்டுங்க''
அருண் தன் பாக்கெட் டைரியை எடுத்து பிரித்துக் காட்டினான். 
வாங்கி ஒரு விநாடி பார்த்த அவன், "உட்காரு சார்'' சொல்லி அதை அவனிடம் திருப்பினான்.
"இடம் தெரியுமா?''
"தெரியும். பின் கோடு இருக்கு. இது நாப்பது வருசத்துக்கு முன்னாடி புதுசா மொளைச்ச முதல் கணபதி நகர். ஏற்காடு போற வழி. மலை அடிவாரத்தில் இருக்கு.'' சொல்லி அவன் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்தான்.
அருணும் அமர்ந்தான். 
கார் விரைந்தது.
34, பிள்ளையார் கோயில் தெரு, வீடு முன் நின்றது. 
வீடு சுமாராக இருந்தது.


அருண் இறங்கினான். 
"இருக்கணுமா சார் ?'' ஓட்டுநர்.
ஒரு விநாடி யோசித்த அருண், "இருக்கணும்'' என்று அந்த வீட்டு படி ஏறினான். 
கதவு சாத்தி இருந்தது. அழைப்பு மணி அழுத்தினான்.
வேட்டி, கை வைத்த பனியனில் 50 வயதில் ஒருவர் கதவு திறந்து வெளியே வந்தார்.
அவர் அறிமுகமில்லாத இவனைப் பார்த்து விழித்தார். 
"இவர்தான் தன் அப்பாவா?' - அருணுக்குள் ஓடியது.
"சார் நான் சென்னையிலிருந்து வர்றேன். ஜெரால்டு'' இழுத்தான். 
"இங்கே அப்படி யாரும் இல்லே'' பதில் சொல்லிய அவர் இவன் அப்பா இல்லை என்பதை உறுதி செய்தான். 
"சார் வீட்டு நம்பர் முப்பத்தி நாலு பழைய நம்பரா புது நம்பரா?''
"ஒரே நம்பர்தான்.''
"இது உங்க சொந்த வீடா, வாடகையா ?''
"சொந்த வீடு''
"நீங்க கட்டினீங்களா?''
"கட்டல. வாங்கினேன்... இந்த வீடுதான். நான் சூசைராஜ்கிட்ட வாங்கினேன். அவருக்கு ஜெரால்டுன்னு ஒரு பையன் இருந்தான். அவன் வேணுமா?''சட்டென்று அவர் நினைவு வந்தவராய்ச் சொன்னார்.
அருணுக்கு மயிரிழையில் உயிர் தப்பிய அதிசயம்.
"ஆமாம் சார்'' என்றான் பிரகாசமாய்.
"அவுங்க வீட்டை என்கிட்ட வித்துட்டு அப்போ கோயம்புத்தூர் போயிட்டாங்க.'' 


"அந்த விலாசம்?''
"ஏன் என்ன விசயமா அந்தப் பையனைப் பார்க்கணும்?''
"எதிர்பாராத கேள்வி. என்ன சொல்வது ?' என்று ஒரு விநாடி திகைத்த அருண்,
"ஜெரால்டு. என் அப்பாவோட நண்பர் சார். எங்க நிலம் சம்பந்தமா அவரைப் பார்க்கணும்'' பொய்யைப் பொருத்தமாகச் சொன்னான். 
"அந்த ஜெரால்டை நீங்க பார்த்திருக்கீங்களா?'' மனுசன் இவனைத் திருப்பிக் கேள்வி கேட்டார். 
"இல்லே சார். அப்பா எதுவும் சொல்லாம பொசுக்குன்னு போய்ட்டார். பழைய குப்பைகளை அலசிப் பார்க்கும்போதுதான் தெரிஞ்சுது இவர்கிட்ட எங்களுக்குச் சொந்தமான நிலம் இருக்கும் விசயம். அதான் தேடிப் புறப்பட்டேன்.'' 
"அப்படியா?''
"சார் விலாசம்?'' அருண் மீண்டும் ஞாபகப்படுத்தினான். 
"எனக்கும் அந்தக் குடும்பத்தைப் பத்தி அவ்வளவாய்த் தெரியாது. இங்கே வீடு வாங்கும் விசயமாய் அலைஞ்சிக்கிட்டிருக்கும்போது புரோக்கர் மூலமா சூசைகிட்ட வந்தோம். வேலை முடிஞ்சுது. உள்ளே வாங்க. பத்திரத்துல இருக்கும். பார்க்கலாம்.'' சொல்லி உள்ளே சென்றார்.
அருணும் அவரைத் தொடர்ந்தான்.
இருவரும் ஹாலுக்குள் நுழைந்தார்கள். 
"உட்காருங்க தம்பி. வீட்ல யாரும் இல்லே. நானும் என் மனைவியும் மட்டும்தான். அவ கோயிலுக்குப் போயிருக்காள்.'' சொல்லி அவர் அடுத்து இருந்த அறைக்குள் நுழைந்தார். 
இந்த கலியுகக் காலத்திலும் முன்பின் தெரியாத ஒருவனை வீடு உள்வரை அழைத்து உபசரித்தது அருணுக்கு நினைக்கவே நெகிழ்ச்சியாக இருந்தது.
சோபாவில் அமர்ந்தான். வீட்டில் வேறு எவரும் இல்லை என்பதற்கடையாளமாய் இடம் அமைதியாய் இருந்தது. 


சுவர்களில் திருப்பதி வெங்கடாசலபதி, முருகன் காலண்டர் படங்கள் மாட்டி இருந்தன. 
உள்ளே சென்றவர் பத்திரத்துடன் திரும்பி வந்தார். இவன் அருகில் வந்து அமர்ந்து பத்திரத்தின் முதல் பக்கத்தைப் பிரித்தார். 
அதில் இரண்டு புகைப்படங்கள் ஒட்டி பத்திரம் பதிவு செய்யப்பட்டிருந்தது. 
"இது நான். இவர் சூசைராஜ். இவர்கிட்டே இருந்துதான் இந்த வீட்டை வாங்கினேன்.'' அவர் புகைப்படங்களை அடையாளம் காட்டி சொன்னார்.
அருண் சூசைராஜ் முகத்தை உற்றுப் பார்த்தான். 
"ஏறக்குறைய இவர் சாயலில்தான் தன் அப்பா இருப்பார்' நினைத்தான். 
"சார். நீங்க இவர் பையன் ஜெரால்டைப் பார்த்திருக்கீங்களா?'' அருண் அவரைக் கேட்டான்.
"இந்த வீடு பத்திரப்பதிவு அன்னைக்குத்தான் ஆளை நேராப் பார்த்தேன். பணத்தை அவன் கையில கொடுத்தேன். கரூர்ல படிச்சான் போல. நல்ல அழகா லட்சணமா இருந்தான்.''
"பையன் அப்பா சாயலா, அம்மா சாயலா சார் ?'' 
"தெரியலை. முப்பது வருசத்துக்கு முன் ஒரே ஒரு தடவைப் பார்த்தது. சரியா ஞாபகம் இல்லே. முகம் மறந்து போச்சு. மேலும் அப்போ இருந்த பத்திரப்பதிவு அவசரத்துல ஆளை சரியாவும் கவனிக்கலை. இப்போ எப்படி இருக்கான்னு தெரியலை. சாரி இருக்கார்ன்னு தெரியலை. இன்னும் சொல்லப் போனா ஆள் இருக்காரா... இல்லையா... தெரியலை.''
"என்ன சார் சொல்றீங்க?'' அருண் துணுக்குற்றான். 
"நான் முப்பது வருசத்துக்கு முன்னாடி பார்த்த முகம். சந்தித்த மனிதர்கள். அதுக்கப்புறம் அவுங்களுக்கும் எனக்கும் தொடர்பு இல்லே. அதனால் ஆள் இந்த முகவரியில்தான் இருக்கிறார் என்பதும் எனக்குத் தெரியாது. அன்னைய நிலைமை. பத்திரத்தில இந்த விலாசம் இருக்கு. அங்கே இது சொந்த வீடா? வாடகை வீடா? தெரியாது. காலச்சக்கரம் அங்கே போய்அதுக்கப்புறம்அவுங்க வேற வீடு, இடம் மாறி இருக்கலாம். என்னால முடிஞ்ச உதவி. இருக்கிற விலாசத்தை எழுதிட்டுப் போங்க. தேடிப் பாருங்க. கெடைச்சா உங்க அதிர்ஷ்டம்.'' என்றார். 
அறிமுகமில்லாத ஆள் இந்த அளவிற்கு உதவி செய்வார் என்று அருண் கொஞ்சமும் நினைத்துப் பார்க்கவில்லை. 
அந்தப் பத்திரத்தைப் பார்த்து அதிலுள்ள விலாசம், 50, ரோஸ் நகர் பச்சாபாளையம், கோவை எழுதினான். 
நன்றி தெரிவித்து விட்டு வந்து காரில் ஏறினான்.

அருண் சலிக்காமல்அடுத்த நாள் காலை 9.00 மணிக்குக் கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இறங்கினான். 
மறுபடியும் வாடகைக் கார்.
கார் செல்வபுரத்தைத் தொட்டு பேரூரைத் தாண்டியது. 
கைபேசி ஒலித்தது.
ஒட்டுநர் எடுத்து, "ஹலோ சொல்லுப்பா ?'' என்றபடி வளைவில் திருப்பினான்.
சுதாரிப்பதற்குள்எதிரில் வந்த லாரி. 
கண்விழிக்கும் போது தலையில் கட்டுடன் அருண் மருத்துவமனை கட்டிலில் படுத்திருந்தான். அருகில் அழகான ஐம்பது வயது ஆள் நின்று கொண்டிருந்தார்.
இவன் விழிப்பை எதிர்பார்த்து காத்திருந்த அவர், "தம்பி நான் ரோட்டுல வரும்போது என் கண்ணுக்கு எதிரே நடந்த விபத்து. நான்தான் உங்களைக் கொண்டு வந்து இந்த மருத்துவமனையில் சேர்த்தேன். கவலைப்படாதீங்க. சின்ன விபத்துதான். உங்க போன், பர்ஸ், பையெல்லாம் என்கிட்ட பத்திரமா... இதோ உங்க கட்டிலுக்கு அடியில இருக்கு'' சொன்னார்.
" சார் டிரைவர்?'' அருண் இழுத்தான். 
"அவருக்கும் லேசான காயம்தான் பக்கத்து அறையில் இருக்காரு. வண்டிக்கும் அதிகம் சேதமில்லே. உரசல்தான். உங்க உறவினர் யாருக்காவது சேதி சொல்ல உங்க கைபேசியை ஆராய்ஞ்சேன், அம்மான்னு நம்பர் இருந்துது. அடிச்சேன் வந்துக்கிட்டு இருக்காங்க'' கூடுதல் தகவலையும் சொன்னார்.
"ரொம்ப நன்றி சார்... உங்க பேர் ?''
"ஜெரால்டு''
கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்த பரவசம். கண் முன் காட்சி. அருணால் நம்ப முடியவில்லை. நம்பாமலும் இருக்க முடியவில்லை. கொஞ்சமும் யோசிக்காமல் பரவசமாய்.
"சார் நீங்க பச்சாப்பாளையமா?'' சடக்கென்று கேட்டான். 
அவருக்கும் ஆச்சரியம். 
"ஆமாம். எப்படித் தெரியும்?'' அவர் இவனைத் திருப்பிக் கேட்டார்.
"உங்களைத்தான் சார் தேடி வந்தேன்.'' 
"என்னையா ஏன்?''
"இவர் வேறொரு ஜெரால்டாய் இருந்தால்? அருணுக்குள் சட்டென்று சுதாரிப்பு வந்தது.
"சார் நீங்க இதுக்கு முன்னாடி சேலத்துல இருந்தீங்களா ?'' கேட்டான். 
"ஆமா''
"உங்க அப்பா பெயர் சூசைராஜா?'' 
"ஆமாம்.''
அடுத்த விநாடி அருணுக்குள் அவரை, "அப்பா' என்று அழைக்க ஆசை. வார்த்தைகள் வாய் வரை வந்தது. " சட்டென்று அழைத்து ஏமாறக் கூடாது' என்று சுதாரித்து அடக்கிக் கொண்டான். ; 
"நீங்க கரூர்ல இருந்தீங்களா?'' - அருண் அடுத்தக் கேள்வியைக் கேட்டான். 
"ஆமாம். அங்கே படிச்சேன்''
"அப்போ நான் தேடி வந்த ஆள் கண்டிப்பா நீங்கதான் சார்''
"என்னப்பா சொல்றே?'' நின்று கொண்டிருந்த ஜெரால்டு கட்டில் ஓரம் அவன் அருகில் அமர்ந்தார்.
"அங்கே உள்ள அன்னை தெரசா மருத்துவமனை உங்களுக்குப் பழக்கமா?''
ஜெரால்டு முகத்தில் சின்ன அதிர்ச்சி. 
" இல்லே'' 
"தொடர்பு இருக்கு சார். நல்லா யோசிச்சு சொல்லுங்க?''
"....''
"நீங்க படிக்கும்போதுவிளையாட்டாவோ, அத்தியாவசியமாவோ, அவசியமாவோ அன்னைத் தெரசா மருந்துவமனைக்கு விந்து தானம் செய்திருக்கீங்க''
"வந்து வந்து''
"அதுல பொறந்தவன் சார் நான்.''
"தம்பி'' ஆயிரம் வோல்டேஜில் அதிர்ந்தார். 
"என் அம்மா பேர் காயத்ரி சார். அனாதை. படிச்சி முன்னுக்கு வந்தவங்க. ஆரம்பத்திலிருந்தே பெண்கள் அனாதை ஆசிரமத்தில் சேர்ந்து வளர்ந்ததினால ஆண்கள் மேல் அவுங்களுக்குப் பிடிப்பு, ஈர்ப்பு கிடையாது. அதனால் கலியாண ஆசை கிடையாது. ஆனா துணைக்குப் குழந்தை பெத்துக்க ஆசைப் பட்டாங்க. அன்னை தெரசா மருத்தவமனைக்குப் போனாங்க. அங்கே உங்க உயிரணு உதவியால் நான் உருவானேன். பெத்தாங்க, வளர்ந்தேன். இதுதான் சார் என் பிறப்பு சுருக்கம்'' நிறுத்தினான். 
கேட்ட ஜெரால்டிற்கு வேர்த்தது. 
"பயப்படாதீங்க சார். எனக்குள் அப்பா இல்லியேன்னு ரொம்ப ஏக்கம், மன உளைச்சல். அதுக்காகத்தான் கஷ்டப்பட்டு தேடி வந்தேன். மத்தப்படி உங்க சொத்து சுகம், ஒட்டு உறவு எதுவும் எனக்குத் தேவை இல்லே. நம்ம சந்திப்பு இன்னைக்கு, இந்த நிமிசத்தோடு அத்துப் போச்சு. இது சத்தியம்'' சொன்னான்.
ஜெரால்டிற்குள் கொஞ்சம் தெம்பு தைரியம் வந்தது, 
"தம்பி அந்த மருத்துவமனையில் என்னைப் பத்தின விவரம் சொன்னாங்களா?'' கேட்டார்.
"இல்லே சார்.'' 
"பின்னே எப்படி என் விவரம் உங்களுக்குத் தெரியும்?''
"எப்படியோ தெரியும் சார்'' 
"அருண்''
"பின்னால என்னால உங்களுக்குத் தொந்தரவு, கஷ்டம் இருக்காது. அப்புறம் எதுக்கு சார் அந்த விவரம் உங்களுக்கு?''
"அதுக்கு இல்லே அருண்அடுத்து உன்னைமாதிரி ஓர் ஆணோ, பெண்ணோ என்னைத் தேடி வரமாட்டாங்கன்னு என்ன நிச்சயம் ?''
"கவலைப்படாதீங்க. அதுக்கு வாய்ப்பே இல்லே. என்னை மாதிரி இதுவரை யாரும் இப்படி தேடி கண்டுபிடித்ததாய் தகவல்கள் இல்லே. ஒரு வேளை அது எனக்குத் தெரியாமல் கூட இருக்கலாம். அது ஏதோ லட்சத்துல ஒருத்தனுக்குள் ஏற்பட்ட ஆசை, தாகமாய் இருக்கலாம். அதில் நான் ஒருத்தன். அவ்வளவுதான் சார்''
"இல்லே அருண்'' இழுத்தார். குரல் நடுங்கியது.
"பயமே வேணாம் சார். இது சம்பந்தமா இனி யாரும் உங்களைத் தேடி வரமாட்டாங்க. அன்னை தெரசா மருத்துவமனையில் நீங்க கொடுத்த உயிரணுக்கள் உபயோகப்படுத்தியது போக மிச்சம் இருக்குமேயொழிய மத்தப்படி கொடுத்தவங்க பத்தின விவரங்கள் இருக்காது.''
"எப்படி சொல்றே?'' 
"டாக்டர் சதாசிவம் என்னை மாதிரி ஒரு பிரச்னை இனிவரக் கூடாது என்பதற்காக என் கண் முன்னாலேயே தங்கள் கணினியில் உள்ள உங்களை மாதிரி விந்து கொடுத்த பேர், விவரங்களை மொத்தமா அழிச்சுட்டாரு. இனி பிள்ளைகளுக்காக அதை உபயோகப்படுத்தும் டாக்டர்களுக்கே யார் உயிரணுன்னு தெரியாது, இனி இந்த மாதிரிஇது போன்ற எந்த மருத்துவமனையிலும் நடக்கக் கூடாது என்பதற்காக மத்த மருத்துவமனைகளுக்கும் தகவல்கள் அனுப்பிட்டாரு. அதனால் கவலையே படாதீங்க.'' என்றான். 
ஜெரால்டுக்கு இப்போதுதான் நிம்மதி பெரு மூச்சு வந்தது. என்றாலும் 
"நிஜமாவா சொல்றே?'' என்றார்.
"ஆமாம் சார். இது சத்தியம்'' சொல்லி அருண் ஜெரால்டு வலது கையின் மேல் தன் வலது கையை வைத்து சத்தியம் செய்தான். 
ஜெரால்டு முகம் இப்போது இன்னும் நன்றாகத் தெளிவானது.
அதை கவனித்த அருண்
"சார் ஒரே ஒரு சின்ன ஆசை'' அந்தக் கையை எடுக்காமலேயே கெஞ்சலாய்க் கேட்டான்.
"என்ன அருண்?''
"கடைசியும் முதலுமாய் நான் உங்களை அப்பான்னு ஒரு முறை அழைச்சிக்கலாமா?'' தயவாய்ப் பார்த்தான்.
"கூப்பிடு அருண்'' சொல்லி ஜெரால்டு அவன் கையை இறுக்கிப் பிடித்தார்.
அருண்அப்பாவிற்கென்று சேர்த்து வைத்து வைத்திருந்த மொத்த உணர்ச்சி, தாக்கங்களையெல்லாம் ஒன்று திரட்டி, " அப்பா...'' மெல்ல அழைத்தான். 
ஜெரால்டு தன்னையுமறியாமல் கண் மூடினார்.
குரல்... தொலைந்த பிள்ளையின் தொலை தூர குரலாக காதுகளில் ஒலித்தது. 
அப்படியே... அவர் கண்ணோரங்களில் நீர் துளிர்த்தது. 
துடைத்துக் கொண்ட ஜெரால்டு , "சரி அருண். நான் வர்றேன். உங்க அம்மா. அதோ வந்துக்கிட்டிருக்காங்க'' சொல்லி அவனிடமிருந்து தன் கையை விடுவித்துக் கொண்டு எழுந்தார்.
அருண் திரும்பிப் பார்த்தான். 
காயத்ரி தூரத்தில் இவன் கட்டிலை நோக்கி வந்து கொண்டிருந்தாள். 
ஜெரால்டு அருண் நெற்றியில் அழுந்த முத்தமிட்டுஅகன்றார்.

http://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2018/sep/25/அப்பாவைப்-பார்க்கணும்-2-3007484.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விட்ட குறை தொட்ட குறை எங்கே போனாலும் விடாது......! பணத்தை சேர்க்கலாம், ரத்தத்தை சேர்க்கலாம் தப்பில்லை. விந்தை மட்டும் அங்கங்கே அப்படியே விட்டுடனும். அதுதான் உனக்கும் நல்லது, உலகுக்கும் நல்லது. சேர்த்தால் உருவம் கண்டு பருவம் கொண்டு திரும்பி வந்து மிரட்டும்.....!  tw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அடுத்த‌ பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில் ஸ்டாலின் தான் பிர‌த‌மரா போட்டி போடுவார் என்று அமெரிக்கா க‌னடா தொட்டு ப‌ல‌ நாட்டில்  க‌தை அடி ப‌டுது.....................துண்டறிக்கை பார்த்தே த‌மிழ‌ ஒழுங்காய் வாசிக்க‌ தெரியாது............ பிரத‌மர் ஆகினால் ஒட்டு மொத்த‌ உல‌க‌மே அதிரும் ஸ்டாலின் ஜயாவின் பேச்சை கேட்டு  😁😜................ வீட்டில் சீமான் பிள்ளைக‌ளுக்கு க‌ண்டிப்பாய் தூய‌ த‌மிழ் சொல்லிக் கொடுப்பார் அதில் எந்த ச‌ந்தேக‌மும் இல்லை யுவ‌ர் ஆன‌ர்.............ஆட்சிக்கு வ‌ராத‌ ஒருத‌ர‌ 68கேள்வி கேட்ப‌து எந்த‌ வித‌த்தில் ஞாய‌ம்...........ஒரு முறை ஆட்சி சீமான் கைக்கு போன‌ பிற‌க்கு அவ‌ர் த‌மிழை தமிழை வளர்க்கிறாரா அல்ல‌து திராவிட‌த்தை போல் தமிழை அழிக்கிறாரா என்று பின்னைய‌ காலங்களில் விவாதிக்க‌லாம்............இப்ப‌ அவ‌ர் எடுக்கும் அர‌சிய‌லை ப‌ற்றி விவ‌திப்ப‌து வ‌ர‌வேற்க்க‌ த‌க்க‌து...................
    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.