Jump to content

மன்­னார்ப் புதை­குழி மீதான -பன்­னாட்­டுக் கவ­னம்!!


Recommended Posts

மன்­னார்ப் புதை­குழி மீதான -பன்­னாட்­டுக் கவ­னம்!!

 

 

மன்னார் சதோச நிறு­வ­ன வளாகத்தில் தொடர்ச்­சி­யாக மீட்­கப்­பட்­டு­ வ­ரும் மனித எலும்­புக்­கூ­டு­கள், எச்­சங்­கள் அவற்­றின் மீதான அதிக கவ­னத்­தை­யும் அக்­க­றை­யை­யும் கோரி நிற்­கின்­ற­ போ­தும் அது அர­சி­யல் அரங்­கி­லும் பன்­னாட்டு அரங்­கி­லும் ,பேசு­பொ­ரு­ளா­காது மறை­பொ­ரு­ளாக விளங்­கு­வது கவலை தரும் விட­யம்.

மன்­னார் நக­ரின் மத்­தி­யில் உள்ள பகு­தி­யில் சதோச வளா­கம் அமைப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­பட்­ட­போது தற்­செ­ய­லா­கக் கண்­ட­றி­யப்­பட்­டதே இந்த மனி­தப் புதை­குழி. கட்­ட­டம் அமைப்­ப­தற்­காக மண்ணை அகழ்ந்­தெ­டுத்த நிறு­வ­னம் அதைப் பள்­ளக் காணி­களை நிர­வு­வ­தற்­கா­கத் தனி­யா­ருக்கு விற்­றது. அப்­படி விற்­கப்­பட்ட மண்­ணுக்­குள் மனித எலும்பு எச்­சங்­க­ளும் சேர்ந்து வரு­வதை அவ­தா­னித்த வீட்டு உரி­மை­யா­ளர் செய்த முறைப்­பாட்­டின் அடிப்­ப­டை­யில் இந்­தப் புதைகுழி தோண்­டும் பணி தொடங்­கப்­பட்­டது.

பல மாதங்­கள் கடந்­தும் தொட­ரும் இந்­தத் தோண்­டும் பணி அதற்­கான வல்­லு­நர்­க­ளால் நிபு­ணத்­துவ ஆலோ­ச­னை­யோடு மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றது. கள­னிப் பல்­க­லைக்­க­ழ­கப் பேரா­சி­ரி­யர் தலை­மை­யில் முன்­னெ­டுக்­கப்­ப­டும் இந்த அகழ்­வுப் பணி­கள் முடிந்த வரை­யில் பன்­னாட்­டுத் தரத்­துக்கு அமை­வா­கவே முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. இது­வ­ரை­யில் மனி­தர்­க­ளு­டை­யவை என்று கரு­தப்­ப­டும் 127 எலும்­புக்­கூ­டு­கள் மற்­றும் எலும்பு எச்­சங்­கள் மீட்­கப்­பட்­டுள்­ளன. தொடர்ந்­தும் மீட்­கப்­பட்டு வரு­கின்­றன.

கடந்த சில வாரங்­க­ளாக மீட்­கப்­பட்­டு­வ­ரும் எலும்பு எச்­சங்­க­ளில் அதற்­கு­ரிய நபர்­கள் இறப்­ப­தற்கு முன்­னர் சித்­தி­ர­வதை செய்­யப்­பட்­டி­ருப்­ப­தற்­கான சாத்­தி­யங்­க­ளைக் காண முடிந்­தி­ ருக்­கி­றது. கை, கால்­கள் கட்­டப்­பட்ட நிலை­யில் இந்த எலும்­பு­க­ளுக்­கு­ரிய நபர்­கள் புதைக்­கப்­பட்­டி­ருக்­க­லாம் என்று வலு­வா­கச் சந்­தே­கிப்­ப­தற்கு ஏற்­ற­வ­கை­யில் அவை இருந்­தன என்று கூறப்­ப­டு­கின்­றது. மீட்­புப் பணி­யில் ஈடு­பட்­டுள்ள வல்­லு­நர்­க­ளின் உத்­தி­யோ­க­பூர்வ அறிக்­கை­கள் இது தொடர்­பில் வெளி­வ­ர­வில்­லை­யா­யி­னும் பணி­கள் விரை­வு ­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

இப்­போது மீட்­கப்­பட்­டுள்ள எலும்­பு­க­ளில் காணப்­ப­டும் இத்­த­கைய அடை­யா­ளங்­கள், அந்த எலும்­பு­க­ளுக்­கு­ரி­ய­வர்­கள் இறப்­ப­தற்கு முன்­னர் சித்­தி­ர­வ­தைக்கு உள்­ளாக்­கப்­பட்­டுக் கொல்­லப்­பட்­டி­ருக்­க­லாம் என்று சந்­தே­கிப்­ப­தற்­கு­ரிய வாய்ப்­பு­க­ளைத் திறந்­து­விட்­டி­ருக்­கின்­றன. இத்­த­கைய ஒரு பெரும் மனி­தப் புதை­குழி, அதி­லும் போர்க் காலத்­தில் பல ஆயி­ரக்­க­ணக்­கா­ன­வர்­கள் காண­மல் ஆக்­கப்­பட்­டார்­கள் என்று கூறப்­ப­டும் ஒரு நாட்­டில் கண்­ட­றி­யப்­பட்ட புதை­குழி, புதைக்­கப்­பட்­ட­ வர்­கள் சித்­தி­ர­வதை செய்து கொல்­லப்­பட்­டி­ருக்­க­லாம் என்று சந்­தே­கிப்­ப­தற்கு இட­ம­ளிக்­கும் புதை­குழி மீது பன்­னாட்­டுக் கவ­ன­மும் உள்­ளூர் அர­சி­ய­லின் கவ­ன­மும் திரும்­பா­தது வியப்­ப­ளிப்­ப­தாக இருக்­கி­றது.

1998ஆம் ஆண்டு இது­போன்­ற­தொரு புதை­கு­ழி­யான செம்­ம­ணிப் புதை­குழி விவ­கா­ரம் வெளிக்­கி­ளம்­பி­ய­போது அது பன்­னாட்­டுக் கவ­னத்தை மிக அதி­க­ள­வில் ஈர்த்­தது. ஊட­கங்­கள், தூத­ர­கங்­கள், மனித உரி­மைக் குழுக்­கள் என அனைத்­தும் அதன் மீது அதி­க­ள­வில் கவ­னம் செலுத்­தின. அது மிகப் பெரி­ய­தொரு பிரச்­சி­னை­யா­கப் பார்க்­கப்­பட்­டது. யாழ்ப்­பா­ணத்­தில் காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­கள் அங்கு கொன்று புதைக்­கப்­பட்­டி­ருக்­க­லாம் என்­கிற சந்­தே­கம் கார­ண­மாக அது தொடர்­பான விசா­ர­ணை­க­ளும் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருந்­தன.

இவ்­வாறு பன்­னாட்­டுக் கவ­னம் பெற்­றி­ருந்த அந்­தச் செம்­மணி வழக்கே இன்று எங்கே என்று தெரி­யா­த­தொரு நிலையை அடைந்­தி­ருக்­கை­யில், மன்­னார்ப் புதை­குழி மீதான மிகக் குறைந்த கவ­னம் இது தொடர்­பான விசா­ர­ணை­களை மந்­தப்­ப­டுத்­தி­வி­டுமோ என்­கிற அச்­சத்தை ஏற்­ப­டுத்­து­கின்­றது.

இறு­திப் போரின்­போது உயி­ரோடு பிடிக்­கப்­பட்­ட­வர்­கள் கைகள் கட்­டப்­பட்ட நிலை­யில் சுட்­டுக் கொல்­லப்­ப­டும் காட்­சி­கள் அடங்­கிய ஆவ­ணப் படம் ஒன்­றைப் பிரிட்­ட­னைச் சேர்ந்த சனல்-4 தொலைக்­காட்சி வெளி­யிட்ட நிலை­யில் கைகள் கட்­டப்­பட்­டுப் புதைக்­கப்­பட்ட இந்த எலும்­புக்­கூ­டு­கள் மீதான கவ­ன­மும் அது தொடர்­பில் கூர்­மைப்­ப­டுத்­தப்­பட்­டி­ ருக்­க­ வேண்­டும்.

அது நடை­பெ­றா­மல் போன­தன் பின்­னால் இருக்­கும் அச­மந்­தம் நீக்­கப்­பட்டு அக்­கறை தீவி­ரப்­ப­டுத்­தப்­ப­ட­ வேண்­டும்.­­ அதற்­கூ­டாக இந்த விட­யத்­தில் பன்­னாட்­டுக் கவ­ன­மும் ஈர்க்­கப்­ப­ட­வேண்­டும். காணா­மல் ஆக்­கப்­பட்­டோர் விவ­கா­ரம் உள்­ளிட்ட பல­வற்­றுக்கு விடை­சொல்­லும் திறன் அந்­தப் புதை­கு­ழிக்கு இருக்­கக்­கூ­டும். எனவே அதன் மீதான கவ­னக்­கு­விப்பு எப்­போ­துமே தேவை.

https://newuthayan.com/story/09/மன்­னார்ப்-புதை­குழி-மீதான-பன்­னாட்­டுக்-கவ­னம்.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பன்னாட்டுச் சமூகம் பங்கு பிரிப்பதில் பிசி. இதோ புலிகள் அழிந்தவுடன் அதுஇது எல்லாம் பெற்றுத் தாறம் என்றதையே அந்தச் சமூகம் மறந்துவிட்டது.

எனி நாமாக அவர்களை துயில் எழுப்பனும்.

அதுக்கு புலி வந்திட்டுது.. இல்ல ஏலியன் வந்திட்டிது என்றால் தான் பன்னாட்டு சமூகம் விழிக்கும். 

எல்லாம் காலக் கொடுமை. தமிழரின் ஒற்றுமை இன்மையின் சாபக் கேடு. 

எது எதுக்கோ படம் எடுத்து வெள்ளைக்காரனுக்கு காட்டிறதுங்கள்.. இதுகளைக் காட்டுங்களா??

இதில தாங்கள் பெரிய மனிதாபிமானிகளாம். பிரபாகரன் விச ஜந்தாம். ?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.