Jump to content

மாணவிகளுக்கு முன்பாக தகாத செயற்பாடு – முல்லையில் இராணுவ சிப்பாய்கள் கைது…


Recommended Posts

மாணவிகளுக்கு முன்பாக தகாத செயற்பாடு – முல்லையில் இராணுவ சிப்பாய்கள் கைது…

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…

arrest.jpg?resize=445%2C334

 

பாடசாலை மாணவிகளுக்கு அந்தரங்க உறுப்பை காட்டிய இரண்டு இராணுவ சிப்பாய்களை முல்லைத்தீவு காவற்துறையினர் கைது செய்துள்ளனர். முல்லைத்தீவு கரைச்சி குடியிருப்பு பகுதியில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை பாடசாலை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த பாடசாலை மாணவிகளுக்கு , அப்பகுதியால் துவிச்சக்கர வண்டியில் பயணித்த இரு இராணுவ சிப்பாய்க்களும் தமது அந்தரங்க உறுப்பை காட்டியுள்ளனர்.

அதனை அப்பகுதியில் நின்றவர்கள் அவதானித்து குறித்த இரு சிப்பாயக்களையும் மடக்கி பிடித்து காவற்துறையினருக்கு அறிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற காவற்துறையினர் இருவரையும் கைது செய்து காவற்துறை நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

கைது செய்யப்பட்ட இரு சிப்பாய்க்களும் 59ஆவது படைப்பிரிவை சேர்ந்தவர்கள் எனவும் , அவர்களிடம் தாம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் காவற்துறையினர்  தெரிவித்தனர்.

http://globaltamilnews.net/2018/96213/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெரும் மானுடத்திற்கு எதிரான இன அழிப்புக் குற்றங்களையும் பாலியல் வன்புணர்வுகளை ஆயுதமாகவும் பாவித்த இராணுவம் ஒன்றை பாதுகாத்து உலகம் மக்கள் மத்தியில் இருப்புக் கொள்ள வைத்தால்.. இதுதான் நிகழும். 

இதனை இந்த உலகத்தார் உணருவதாக இல்லை. உணராத மாதிரி நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.. பாதிப்புக்கள் தொடருனும் என்ற ரீதியில் போலும். 

Link to comment
Share on other sites

முல்லைத்தீவில் மாணவிகளுக்கு முன்பாக அநாகரிகமாக நடந்த இராணுவ சிப்பாய்க்கு விளக்கமறியல்

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

Judgement1.jpg?resize=560%2C390
முல்லைத்தீவில் பாடசாலை மாணவிகளுக்கு முன்பாக அநாகரிகமாக நடந்து கொண்ட கோப்பரல் தர இராணுவ சிப்பாயை விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு உத்தரவிட்ட முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்ற நீதிவான், மற்றைய இராணுவ வீரரை பிணையில் செல்ல அனுமதித்தார்.

 

முல்லைத்தீவு கரைச்சி குடியிருப்பு பகுதியில் பாடசாலை முடிந்து வீடு திரும்பிய பாடசாலை மாணவிகளுக்கு அப்பகுதியால் சென்ற 59 ஆவது படைப்பிரிவை சேர்ந்த இரு இராணுவ சிப்பாய்கள் தமது அந்தரங்க உறுப்பை காட்டியுள்ளனர். அதனை அங்கிருந்த சிலர் அவதானித்து இரு இராணுவ சிப்பாய்களையும் மடக்கி பிடித்து முல்லைத்தீவு காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

இதனையடுத்து காவல்துறையினர் குறித்த இரு இராணுவ சிப்பாய்க்களையும் , முல்லைத்தீவு நீதிவான் முன்னிலையில் முற்படுத்தினர்.

அதனை அடுத்து வழக்கினை விசாரணை நடத்திய நீதிவான் கேப்பரல் தர இராணுவ சிப்பாயை எதிர்வரும் 02ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டதுடன் , மற்றைய சிப்பாயை ஒரு இலட்சம் ரூபாய் ஆள் பிணையில் செல்ல நீதிவான் அனுமதித்தார்

http://globaltamilnews.net/2018/96510/

Link to comment
Share on other sites

On 9/19/2018 at 10:34 AM, நவீனன் said:

பாடசாலை மாணவிகளுக்கு அந்தரங்க உறுப்பை காட்டிய இரண்டு இராணுவ சிப்பாய்களை

புத்தன் சரணம் கச்சாமி.  புத்தர்ட்ட  ...........................  (சுய தணிக்கை)

என்று சொல்லறது சும்மா ஜோக் இல்லை தானே!!

?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.