Jump to content

ஆங்­கி­லம் தெரி­யாது என்­ற­தால்- அனந்தி மீது அவ­ம­திப்பு வழக்கு?


Recommended Posts

ஆங்­கி­லம் தெரி­யாது என்­ற­தால்- அனந்தி மீது அவ­ம­திப்பு வழக்கு?

 
ananthy-sasitharna-780x405.jpg

 

 

வடக்கு அமைச்­சர் அனந்திக்கு ஆங்­கி­லம் தெரி­யாது என்று அவரின் சட்­டத்­த­ரணி மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றில் நேற்­றுத் தெரி­வித்­தார். இந்­தக் கருத்­தால் நீதி­மன்ற அவ­ம­திப்பு வழக்கை எதிர்­கொள்­ளும் அபா­யத்தை திரு­மதி அனந்தி சசி­த­ரன் எதிர்­நோக்­கி­யுள்­ளார்.

வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன், அமைச்­சர்­க­ளான திரு­மதி அனந்தி சசி­த­ரன், க.சிவ­நே­சன் ஆகி­யோ­ருக்கு எதி­ரா­கத் தாக்­கல் செய்­யப்­பட்ட நீதி­மன்ற அவ­ம­திப்பு வழக்கு நேற்று விசா­ர­ணைக்கு எடுத்­துக் கொள்­ளப்­பட்­டது.

அமைச்­சர் திரு­மதி அனந்தி சசி­த­ரன் சார்­பில் மன்­றில் முன்­னி­லை­யான சட்­டத்­த­ரணி கணேஸ், தனது கட்­சிக்­கா­ர­ருக்கு குற்­றப் பத்­தி­ரம் ஆங்­கில மொழி­யில் வழங்­கப்­பட்­டுள்­ளது. அவ­ரால் ஆங்­கி­லம் வாசிக்­கவோ, படிக்­கவோ தெரி­யாது என்று ஆட்­சே­பனை எழுப்­பி­னார்.

திரு­மதி அனந்தி சசி­த­ர­னின் கையெ­ழுத்­து­டன், உங்­க­ளால் (சட்­டத்­த­ரணி) நீதி­மன்­றுக்­குச் சமர்­பிக்­கப்­பட்­டுள்ள பதிலி (புரொக்ஸி) ஆங்­கி­லத்­தி­லேயே உள்­ளது. அவ­ரால் தமி­ழில் பதிலி சமர்­பிக்­கப்­ப­ட­வில்­லையே? ஆங்­கி­லம் தெரி­யாது என்­றால் எப்­படி பதி­லியை ஆங்­கி­லத்­தில் சமர்­பித்­துள்­ளார். இந்த மன்று அவ­ருக்கு இதற்கு முன்­னர் ஆங்­கி­லத்­தில் கட்­ட­ளை­கள் அனுப்­பி­யுள்­ளது.

அதன்­போது ஆங்­கி­லம் தெரி­யாது என்ற ஆட்­சே­பனை எழுப்­பப்­ப­ட­வில்லை என்­பதை மன்று சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது. அந்த ஆட்­சே­ப­னை­யை­யும் நிரா­க­ரித்­துள்­ளது.

இதன்­போது மனு­தா­ர­ரான டெனீஸ்­வ­ர­னின் சட்­டத்­த­ரணி சுரேன் பெர்­னாண்டோ, திரு­மதி அனந்தி சசி­த­ர­னால் ஆங்­கி­லம் வாசிக்­கவோ, படிக்­கவோ தெரி­யாது என்­பதை மன்­றில் பதிவு செய்ய வேண்­டும் என்று கோரிக்கை விடுத்­துள்­ளார். தனக்கு இந்த வழக்­கின் பின்­னர் அது உப­யோ­கப்­ப­டும் என்­றும் கூறி­யுள்­ளார்.

ஐ.நா. மனித உரி­மை­கள் சபை­யில் திரு­மதி அனந்தி சசி­த­ரன் ஆங்­கி­லத்­தில் உரை­யாற்­றிய காணொலி மன்­றில் சமர்­பிக்­கப்­ப­டும் என்று சுரேன் பெர்­னாண்டோ தெரி­வித்­துள்­ளார். அவர் ஆங்­கி­லம் தெரி­யாது என்று கூறி நீதி­மன்­றத்தை அவ­ம­தித்­துள்­ளார் என்­றும் அவர் குறிப்­பிட்­டார்.

https://newuthayan.com/story/09/ஆங்­கி­லம்-தெரி­யாது-என்­ற­தால்-அனந்தி-மீது-அவ­ம­திப்பு-வழக்கு.html

Link to comment
Share on other sites

அனந்திக்கு ஆங்கிலம் தெரியுமா? – நீதிமன்றில் சர்ச்சை

0d2d9cd01683688bc91c063ca422a320?s=48&d=
 

ananthi-300x169.jpg“வடக்கு மாகாணஅமைச்சர் அனந்தி சசிதரனுக்கு ஆங்கில மொழி தெரியுமா?”

– இப்படி ஒரு சர்ச்சை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விவாதிக்கப்பட்டது.

வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கும் மற்றைய இரு மாகாண அமைச்சர்களுக்கும் எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நேற்று எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த சர்ச்சை கிளம்பியது.

“குற்றப்பத்திரமும் ஏனைய ஆவணங்களும் ஆங்கில மொழியில் உள்ளன. எனது கட்சிக்காரரான திருமதி அனந்தி சசிதரனுக்கு ஆங்கிலமொழி தெரியாது. ஆகவே, இந்தக் குற்றப் பத்திரத்தில் உள்ள விடயத்தை புரிந்துகொண்டு குற்றவாளியா, சுத்தவாளியா என்று பதிலளிக்க முடியாத நிலையில் அவர் உள்ளார்” என்று அனந்தி சசிதரனின் தரப்பில் பிரசன்னமான சட்டத்தரணி கணேசராஜா தெரிவித்தார்.

அச்சமயம் குறுக்கிட்ட நீதியரசர்கள் இந்த வழக்கில் தம் சார்பில் ஆஜராகும் சட்டத்தரணிகளை நியமித்து நீதிமன்றுக்கு எதிர்மனுதாரர் அனந்தி சசிதரன் சமர்ப்பித்த ‘புரொக்ஸி’ பத்திரத்தை பரிசீலனைக்கு எடுக்க உத்தரவிட்டனர்.

அதில் தமது சட்டத்தரணியாக இன்னார் நியமிக்கப்படுகின்றார் என்ற ஆவணத்தை அனந்தி சசிதரன் ஆங்கில மொழியில் நிரப்பியிருந்தமையை நீதிமன்று சுட்டிக்காட்டியது.

தனது சட்டத்தரணியைத் தாம் நியமிப்பது பற்றிய ஆவணத்தை ஆங்கிலத்தில் சமர்ப்பிக்கும் எதிர்மனுதாரர், தமக்கு ஆங்கில மொழி தெரியாதமையால் குற்றவாளியா, சுத்தவாளியா என்றுரைக்க முடியாமல் உள்ளது என்று கூறும் ஆட்சேபனையை ஏற்க முடியாது என நீதியரசர்கள் கட்டளை பிறப்பித்தனர்.

அச்சமயம் குறுக்கிட்ட மனுதாரர் டெனீஸ்வரனின் சட்டத்தரணி சுரேன் பெர்னாண்டோ, இவ்வாறு தமக்கு ஆங்கிலம் தெரியாது என தமது சட்டத்தரணி மூலம் அனந்தி சசிதரன் முன்வைத்த சமர்ப்பணத்தை அப்படி நீதிமன்ற பதிவேட்டில் பதிய வேண்டும் என்று கோரினார்.

“அனந்தி சசிதரன் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் ஆங்கிலத்தில் உரையாற்றியிருக்கின்றார். அதற்கான வீடியோ ஆதாரங்கள் எங்களிடம் உண்டு. அவற்றை எல்லாம் நீதிமன்றில் சமர்ப்பித்து, ஆங்கிலம் தெரிந்திருந்தும், தமக்கு ஆங்கிலம் தெரியவில்லை என்று கூறியதன் மூலம் இந்த மேன்முறையீட்டு நீதிமன்றத்தை அவர் அவமதித்துள்ளார் எனப் பிறிதொரு நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நாம் தொடுக்க எண்ணியுள்ளோம். அதற்காக இந்த விடயத்தை நீதிமன்றப் பதிவுகளில் சேர்த்துக் கொள்ளும்படி வேண்டுகின்றோம்” என்றும் அவர் வேண்டினார்.

அவரது கோரிக்கையை ஏற்ற நீதியரசர்கள் அந்த விடயங்களை நீதிமன்றப் பதிவுகளில் தவறாது சேர்த்துக்கொள்ள உத்தரவிட்டனர்.

http://www.newsuthanthiran.com/2018/09/19/அனந்திக்கு-ஆங்கிலம்-தெரி/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.