Jump to content

புலிகள் அமைப்பின் தலைவர் பிர­பா­க­ரன் விஷ­ ஜந்து- டக்ளஸ் தேவா­னந்தா!!


Recommended Posts

புலிகள் அமைப்பின் தலைவர் பிர­பா­க­ரன் விஷ­ ஜந்து- டக்ளஸ் தேவா­னந்தா!!

 
 
625.500.560.350.160.300.053.800.900.160.

 

 

தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள் அமைப்­பின் தலை­வர் வே.பிர­பா­க­ரன் தமிழ் மக்­க­ளுக்கு மட்­டு­மல்ல மனித குலத்­துக்கே விஷ­ஜந்து. அவரை நான் அப்­ப­டித்­தான் பார்க்­கின்­றேன்.

இவ்­வாறு ஈழ மக்­கள் ஜன­நா­ய­கக் கட்­சி­யின் செய­ல­ரும், நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான டக்­ளஸ் தேவா­னந்தா தெரி­வித்­துள்­ளார்.

இந்­தி­யா­வுக்கு அண்­மை­யில் சென்­றி­ருந்த நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் டக்­ளஸ் தேவா­னந்தா, அங்­குள்ள தொலைக்­காட்­சிக்கு வழங்­கிய நேர்­கா­ண­லி­லேயே இவ்­வாறு கூறி­யுள்­ளார்.அவர் தெரி­வித்­த­தா­வது,

தமி­ழீழ விடு­த­லைப் புலி­க­ளின் போக்கு மக்­க­ளை­யும் அழித்து தங்­க­ளை­யும் அழிக்­கும் நிலை­யையே உரு­வாக்­கும் என்று நான் எப்­போதோ கூறி­யி­ருந்­தேன். அது போலவே நடந்­தது. என்­னைப் பொறுத்­த­வ­ரை­யில் தமி­ழீழ விடு­த­லைப் புலி­க­ளின் தலை­வர் வே.பிர­பா­க­ரன் உயி­ரி­ழந்­து­விட்­டார்.

ஆனால் அர­சி­யல் உள்­நோக்­கத்­து­டன் அவர் உயி­ரு­டன் இருக்­கின்­றார் என்று கருத்­துக்­கள் வெளி­யி­டப்­பட்டு வரு­கின்­றன. பிர­பா­க­ரன் தமிழ் மக்­க­ளுக்கு மட்­டு­மல்ல மனித குலத்­துக்கே விஷ ஜந்து என்றே நான் அவ­ரைப் பார்க்­கின்­றேன். அவர் மக்­க­ளுக்­காக போரா­டு­வ­தா­கச் சொல்­லப்­ப­டு­கின்­றது. ஆனால் என்ன நடந்து முடிந்­துள்­ளது.

இந்­தி­யப் படையை தாக்கி விரட்­டி­ய­டித்த போது உல­கத்­தில் நான்­கா­வது இடத்­தில் இருந்த படையை விரட்டி விட்­டோம் என்று கூறி­யி­ருந்­த­னர். ஆனால் உல­கில் 35 ஆவது இடத்­தில் உள்ள இலங்கை இரா­ணு­வத்தை வெல்ல முடி­ய­வில்லை. அவர்­கள் விவே­க­மாக செயற்­ப­ட­வில்லை. அத­னால் ஏரா­ள­மான உயி­ரி­ழப்­புக்­கள் இடம்­பெற்­றன. இது மட்­டு­மல்­லாது எனது சகோ­த­ரர், உற­வி­னர்­கள் கடத்­தப்­பட்­ட­னர்.

இலங்கை – இந்­திய ஒப்­பந்­தத்தை நாம் சரி­யா­கப் பயன்­ப­டுத்தி இருக்­க­லாம். போரால் இருப்­ப­தை­யும் இழந்து உள்­ளோம்.என்­னைக் கூட பல தட­வை­கள் கொல்ல முயற்­சித்­தும் புலி­க­ளால் முடி­ய­வில்லை. தமிழ் மக்­கள் இப்­போது எல்­லா­வற்­றை­யும் இழந்து உள்­ள­னர்.

புதிய அரசு உரு­வாகி ஒரு வரு­டத்­தில் முக்­கிய தீர்­வு­கள் கிடைக்­க­விட்­டால் பின்­னர் கிடைக்­காது. அது ஆறிய கஞ்சி பழங் கஞ்சி ஆகி­வி­டும்.

தமி­ழீழ விடு­த­லைப் புலி­க­ளின் தலை­வர் பிர­பா­க­ரன் சர­ண­டைந்­தார் என்றே கூறப்­ப­டு­கின்­றது. இந்த நேரத்­தில் ஆதா­ர­பூர்­வ­மாக நான் கூற­வி­ரும்­ப­வில்லை. போரில் சர­ண­டைந்­தால் யார் என்­றா­லும் மனித நேயத்­து­டன் நடத்தி இருக்க வேண்­டும். புலி­க­ளும் அரச படை­யும் அவ்­வாறு நடக்­க­வில்லை. விடு­த­லைப் புலி­க­ளின் தலைமை இப்­போது முற்­றாக இல்லை – என்­றார்.

https://newuthayan.com/story/08/புலிகள்-அமைப்பின்-தலைவர்-பிர­பா­க­ரன்-விஷ­-ஜந்து-டக்ளஸ்-தேவா­னந்தா.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு நல்லவராக மனிதகுலத்திற்கே தெய்வம்போல் இருக்கும் உங்கள  அதே கொடிய  பிரபாகரனால் ஆளப்பட்ட யாழ்மக்கள்,அவர் இல்லாத இந்த நேரத்தில்கூட  உங்கள ஏன்அவர்கள் முதல்வராக்கல்ல எண்டு இந்தியாக்காரன் கேட்கலையா செயலாளர் நாயகம் அவர்களே...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரனும்.. புலிகளும் உங்களின் விசுவாசம் மிக்க சிங்கள பேரினவாத அரச பயங்கரவாதிகளுக்கும்.. ஹிந்திய பிராந்திய வல்லாதிக்க பயங்கரவாதிகளுக்கு விஷ ஜந்துகளாக இருந்துவிட்டுப் போகட்டும்..

பல வழிகளிலும் கெட்டித்தனமாகப் போராடி.. இப்போ தமிழீழத்தை மீட்டு.. ச்சா.. மத்தியில் கூட்டாட்சி.. வடக்குக்கிழக்கு இணைந்த.. மாகாணத்தில் மாநில ஆட்சி.. நிறுவி.. அதுக்கு சனாதிபதியாக இருக்கும் தாங்கள்..  சூளைமேட்டுப் படுகொலையில் தேடப்படும் குற்றவாளியாக நீதிமன்றால் அறிவிக்கப்பட்டும்.. இன்னும் நீதிமன்றில் சரணடையாது.. ஹிந்திய வல்லாதிக்கத்தின் செல்லப்பிள்ளையாக அங்கு போய் வந்து கொண்டிருப்பது பற்றியும்..

ஈழ மண்ணில்..தங்களின் சிங்கள.. ஹிந்திய அரச பயங்கரவாதங்களின் தயவுபெற்ற.. ஒட்டுக்குழு செயற்பாடுகள் பற்றியும்.. சற்று விளக்கமாக சொல்ல முடியுமா... மானிப்பாய் கோவில் நகைக் கொள்ளை புகழ்.. டக்கிளஸ் வெட்டி தேவானந்தா... என்ற தேவாங்கே. 

தேவாங்கு விச ஜந்தா இல்லையான்னு.. கடிக்க விட்டுப் பார்த்தால் தான் தெரியும்.. ஹிந்திய பிராந்திய வல்லாதிக்க பயங்கரவாதிகளுக்கு. ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் முற்றாக இலாதுபோன பின்பும் .......
கடல் கடந்து எஜமானி மடியில் இருக்கும்போதுதான் 
இப்படியான வார்த்தைகள் வருகிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நம்பாளுங்க சிலருக்கு ஆயுள்ரேகை ரொம்ப கெட்டிணு வீராப்பு பேசினா நாம  அதுக்கு ஏதாச்சும் பண்ணணும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஜந்து தன்னைதானே இதுவரைக்கும் கடித்து பார்க்கலை போல் இருக்கு .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நக்குற நாயிக்கு செக்கு என்ன சிவலிங்கமென்ன ... எல்லாமே ஒண்ணுதானே பாஸ்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வருங்கால வட மாகாண முதல்வரே வருக!! .. குறிப்பா டப்ஸ் சுமாஸ் அருமை ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2009க்கு பின் எதுவுமே சாதிக்காமல் இன்றும் புலிகள் மீது சேறடிக்கின்றீர்களே வெட்கமாக இல்லையா?

Link to comment
Share on other sites

இவரும் ஆயுதம் ஏந்தி தமிழ் மக்களுக்காக போராட வெளிக்கிட்டவர் எப்படி எதிரியுடம் இணைந்து தமிழ் மக்களை கொன்றார் என கூறுவாரா??

Link to comment
Share on other sites

கொடுக்கனால் தனக்கு ஏற்பட்டுள்ள அளவற்ற ஆனந்தத்தைக் காட்டுவதற்கும், அதன் கொடுக்கினால் கொட்டித்தான் காட்ட முடியும். பிரபாகரன் இல்லை என்ற ஆனந்தத்தை இந்தத் தேவானந்தாவும் காட்ட முனைகிறார். அவரது ஆனந்த நிலையை எதிர்த்தாலும் வலிக்கும், வரவேற்றாலும் வலிக்கும் எது வசதி.  

Bildergebnis für %e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டக்ளஸ் தேவானந்தாவுக்கு யாழ் குடாநாட்டில் ஓரிரு பாராளுமண்ற உறுப்புரிமையைப் பெற்றுக்கொடுப்பதற்கும் உள்ளூராட்சி சபைகளில் கூட்டமைப்புக்கு ஆதரவு என்னும் முண்டு கொடுப்பதற்கும் வாக்களிக்கத் தமிழர் கூட்டமொன்று இருக்குது அவர்கள் அனைவரும் பிரபாகரன் விச ஜந்து எனும் கோட்பாடுடன் ஒருமித்துள்ளார்கள்தானே பிறகெதற்கு டக்ளசை மட்டும் குற்றம் சொல்லுகுறியள். ஆக டக்ளஸ் மாத்திரமல்ல ஆயிரக்கணக்காண குடாநாட்டின் தமிழர்களும் சேர்ந்துதான் கூறுகிறார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவிற்கு போய் வந்தவர்...நல்லாய் படிப்பிச்சசு அனுப்பி இருக்கினம் போல?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/19/2018 at 9:07 PM, Elugnajiru said:

டக்ளஸ் தேவானந்தாவுக்கு யாழ் குடாநாட்டில் ஓரிரு பாராளுமண்ற உறுப்புரிமையைப் பெற்றுக்கொடுப்பதற்கும் உள்ளூராட்சி சபைகளில் கூட்டமைப்புக்கு ஆதரவு என்னும் முண்டு கொடுப்பதற்கும் வாக்களிக்கத் தமிழர் கூட்டமொன்று இருக்குது அவர்கள் அனைவரும் பிரபாகரன் விச ஜந்து எனும் கோட்பாடுடன் ஒருமித்துள்ளார்கள்தானே பிறகெதற்கு டக்ளசை மட்டும் குற்றம் சொல்லுகுறியள். ஆக டக்ளஸ் மாத்திரமல்ல ஆயிரக்கணக்காண குடாநாட்டின் தமிழர்களும் சேர்ந்துதான் கூறுகிறார்கள். 

எனக்கு இரு கண் போனாலும் பரவாயில்லை அவனுக்கு ஒரு கண்ணாவது போகவேணும் என்ற நல்லமனம் கொண்டவர்கள்.
நாடும் இனமும் எக்கேடு கெட்டுப்போனாலும் பரவாயில்லை. நான்/நாம் பழி தீர்க்க வேண்டும் என்ற கொள்கை வெறியர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டக்ளஸ் கூறுவது உண்மை தான்.

தமிழருக்கு எதிரானவர்களுக்கு தலைவர் பிரபாகரன் விஷ ஜந்து தான்.அதை மறக்காமலிருந்தால் சரி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/19/2018 at 9:07 PM, Elugnajiru said:

டக்ளஸ் தேவானந்தாவுக்கு யாழ் குடாநாட்டில் ஓரிரு பாராளுமண்ற உறுப்புரிமையைப் பெற்றுக்கொடுப்பதற்கும் உள்ளூராட்சி சபைகளில் கூட்டமைப்புக்கு ஆதரவு என்னும் முண்டு கொடுப்பதற்கும் வாக்களிக்கத் தமிழர் கூட்டமொன்று இருக்குது அவர்கள் அனைவரும் பிரபாகரன் விச ஜந்து எனும் கோட்பாடுடன் ஒருமித்துள்ளார்கள்தானே பிறகெதற்கு டக்ளசை மட்டும் குற்றம் சொல்லுகுறியள். ஆக டக்ளஸ் மாத்திரமல்ல ஆயிரக்கணக்காண குடாநாட்டின் தமிழர்களும் சேர்ந்துதான் கூறுகிறார்கள். 

அவர் வென்ற இடங்களிலே மொத்தமாக விழுந்த ஓட்டு எண்ணிக்கையை மறந்து போட்டியளோ ??

இதேபோல ஐயா சுமந்திரன் கதைகிற கதைகளும் அவர் வென்ற தொகுதி மக்களின் பிரதிபலிப்பு என்று சொல்ல வாறியளோ? வடிவேல் சொன்னமாதிரி சின்னப்பிள்ளைதனமாயெல்லோ  இருக்கு!!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அனுபவப் பகிர்விற்கு நன்றி கோசான் அவர்களே. புத்தர் சிலைகள் எல்லாம் எந்தளவு தூரம் முளைத்துள்ளன? 
    • மனித வளம் அதிகம் இருப்பதால்தான் இன்னும் மனித மலத்தை மனிதர்களை வைத்தே கையால் அள்ளிக் கொண்டிருக்கிறார்களோ?தமிழ்நாட்டில் எண்ணெய்கப்பல் கசிந்து கடல்நீரில் கலந்த பொழுது வாளியால் அள்ளி ஊற்றினார்கள்.உண்மையில் இந்தியாவில் பொருளாதாரம் பெரும் வளர்ச்சி அடையவில்லை.ஆனால் ஒரு அணுவாயுத வல்லரசு பொருளாதாரத்தில் வளர்ந்தது போல் ஒருமாயத் தோற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.நகர்ப்புறங்கள் நவீனத் தோற்றத்தைக் காட்டிக் கொண்டிருக்கின்றன.சந்திராயனுக்கு ரொக்கற் அனுப்பிய அதே வேளையில் இந்தியாவின் கடைக்கோடி கிராமத்தில் அடிப்படை வசதிகளற்று மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.ஒப்பீட்டளவில் தென் மாநிலங்கள் ஓரளவு வளர்ச்சி அடைந்த நிலையில் வடமாநிலங்களின் நிலமை படு மோசம்.
    • சகோ சீமானின் பிள்ளைகள் பற்றிய கருத்தை இங்கே பதிவிட்டவன் யானே.  இங்கே எனது கேள்வி தனது பிள்ளைகள் தமிழ் படிக்காததற்கு  மேடை கோணல் என்பது.  ஆனால் அது உண்மையல்லவே.  எனவே இந்த இவரது கூற்று தேர்தல் நேரத்தில் அவரை கவிழ்க்க உதவும் என்பதே அவரின் அபிமானியான எனது கவலை. நன்றி. 
    • சீமான் தமிழ் தேசியத்தைப் பேசுகிறார், உண்மை - ஈழத்தில் கஜேந்திரகுமார் அணி தமிழ் தேசியத்தைப் பேசுவது போல பேசுகிறார்😎. இதனால் மட்டும் தமிழ் தேசியம் வாழும் என்றால், நீங்கள் குறிப்பிடும் தமிழ் தேசியம் "யூ ரியூப்" வியாபார தமிழ் தேசியம் என எடுத்துக் கொள்கிறேன்! இந்த "திராவிடர்-தமிழர் ஆணி" ஈழவருக்கு தேவையில்லாத ஆணி என்கிறேன். இதனால், தமிழ் நாட்டில் ஆட்சியில் இருக்கப் போகும் கட்சிகளோடும் (குறைந்த பட்சம் புலத்தில் வாழும்) ஈழவர் பகைத்துக் கொள்ள வேண்டி வரும். இன்னொரு பக்கம், சீமான் தம்பிகள் முன்மாதிரியில் போலிச் செய்திகள், வைரல் வீடியோக்கள், யாழில் நடப்பது போன்ற எங்களிடையேயான அர்த்தமில்லாத சண்டைகளும் வளரும். இதெல்லாம் "ஈழவரான எங்களுக்கு ரொம்ப நல்லது!" என்று நீங்கள் சொன்னால் நான் நம்புகிறேன்!  
    • உங்களுக்கு இந்தியா பற்றி நான் தந்திருப்பது தரவுகளை. நீங்கள் மேலே அலம்பியிருப்பது இந்தியா தொடர்பான உங்கள் ஆத்திரக் கருத்துக்களை. இந்தியா மீது அபிமானம் எனக்கும் இல்லை - ஆனால், தரவுகளை நோக்கித் தான் ஒரு நாட்டின் முன்னேற்றம் பற்றிய கருத்துக்கள் வர வேண்டும், அந்த நாட்டை விரும்புகிறோமா வெறுக்கிறோமா என்பதை ஒட்டியல்ல. பொருளாதார வளர்ச்சி ஊழலால் பெரிதும் பாதிக்கப் பட்டிருக்கிறது இந்தியாவில். ஆனால், மனித வளம் அதையும் மீறி இந்தியாவை முன்னேற்றி வருகிறது. இந்தியா போன்ற கலாச்சாரப் பின்னணி கொண்ட, ஆனால் மனித வளம் மிகக் குறைந்த பாகிஸ்தானிலோ. வங்க தேசத்திலோ இந்தியாவில் இருப்பது போன்ற வளர்ச்சி இல்லை - இது உங்களுக்குக் கசக்கலாம், ஆனால் யதார்த்தம் அது தான்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.