Jump to content

இந்திய பங்குச் சந்தையில் கடும் சரிவு – 2 நாட்களில் 2.72 லட்சம் கோடி ரூபாயை முதலீட்டாளர்கள் இழந்தனர்.


Recommended Posts

இந்திய பங்குச் சந்தையில் கடும் சரிவு – 2 நாட்களில் 2.72 லட்சம் கோடி ரூபாயை முதலீட்டாளர்கள் இழந்தனர்.

share-market.jpg?resize=300%2C168

இந்தியாவில் ரூபாய் மதிப்பு வீழ்ச்சியை தொடர்ந்து பங்குச்சந்தையில் தளம்பல் ஏற்பட்டு வரும் நிலையில், கடந்த 2 நாட்களில் முதலீட்டாளர்கள் 2.72 லட்சம் கோடியை இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சர்வதேச அளவில் அமெரிக்க டொலருக்கு நிகரான நாணய மதிப்பில் பல்வேறு நாட்டு நாணயங்கள் சரிவினை சந்தித்து வருகின்ற நிலையில் , இந்திய ரூபாய் மதிப்பும் இதுவரை இல்லாத வகையில் வீழ்ச்சி கண்டுள்ளது.

 

சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பாதிப்பு மற்றும் இந்திய ரூபாய் மதிப்பு சரிவு போன்ற காரணங்களால் இந்திய பங்குச்சந்தைகள் கடந்த வாரம் கடும் சரிவைச் சந்தித்துள்ளன.  இந்த நிலையில், இந்திய பங்குச்சந்தைகள் கடந்த இரண்டு நாட்களாக மீண்டும் சரிவை சந்தித்து வருகின்றன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, இந்திய ரூபாய் மதிப்பு சரிவு போன்ற காரணங்களால் பங்குச்சந்தைகள் பெரும் சரிவைச் சந்தித்துள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் டொலர் மதிப்பு உயர்வால், முதலீட்டு நிறுவனங்கள் பலவும் லாபத்தைப் பதிவு செய்யும் நோக்கத்துடன் தங்கள் பங்குகளை விற்பனை செய்தன. இதன் காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் அதிகஅளவில் சரிவைச் சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

http://globaltamilnews.net/2018/96176/

Link to comment
Share on other sites

ரூபாயின் மதிப்புச் சரிவைத் தடுக்க என்ன வழி?

 

 
roJPG

அமெரிக்க டாலருக்கு நிகராக ரூபாயின் மதிப்பு சரிந்து வருவதைக் கடந்த 15 நாட்களாகப் பார்க்கிறோம். ஆண்டின் தொடக்கத்தில் 64 ரூபாயாக இருந்தது, தற்போது 72 ரூபாயாகியிருக்கிறது. ரூபாயின் மதிப்புச் சரிவுக்குப் புறக் காரணங்கள்தான் மூலம் என்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி சரியாகவே கூறியிருக்கிறார். அதிலும் குறிப்பாக, செலாவணியில் ஊக வியாபாரம் செய்பவர்கள் அமெரிக்கப் பொருளாதாரத்தை மையமாக வைத்துச் செயல்படுகின்றனர்.

டிரம்ப் நிர்வாகம் எடுத்த சில நடவடிக்கைகளால் அமெரிக்கப் பொருளாதாரம் நிமிரத் தொடங்கியிருக்கிறது.

 

1. கம்பெனிகள் மீதான வரிவிகிதங்களைக் கணிசமாகக் குறைத்தார் டிரம்ப். இது முதலாளிகளுக்கு ஊக்குவிப்பைத் தந்தது. 2. அமெரிக்க மத்திய வங்கிகளில் போடப்படும் டெபாசிட்டுகள் மீதான வட்டி வீதத்தை உயர்த்தியது. இது முதலீட்டாளர்களை ஈர்த்தது. 3. வேலைவாய்ப்பும் உற்பத்தியும் அதிகரித்து, அமெரிக்கப் பொருளாதாரம் எழுச்சியடையத் தொடங்கியுள்ளது. இதனால், மேற்கு நாடுகளின் முதலீடுகள் அமெரிக்காவை நோக்கிப் படையெடுக்கின்றன. இதற்கு டாலர் மிகவும் தேவைப்படுவதால் எல்லா நாட்டு கரன்சிகளுக்கு நிகராகவும் டாலரின் மதிப்பு உயர்கிறது. ரூபாய் மட்டுமல்ல பவுண்ட், ஐரோப்பிய ஒன்றியத்தின் யூரோவும்கூட சரிந்துவருகின்றன.

பின்வாங்கும் முதலீட்டாளர்கள்

மேற்கத்திய முதலீட்டாளர்கள் அமெரிக்காவில் முதலீடு செய்யும் அதேநேரத்தில், இந்தியா போன்ற வளரும் நாடுகளில் செய்திருந்த முதலீடுகளை விலக்கிக்கொள்கின்றனர். இதனால் இரட்டைச் சேதம் ஏற்படுகிறது. வளரும் நாடுகளின் பொருளாதாரச் சூழலும் அரசியல் சூழலும் நிலையற்றதாக மாறுவதும் இன்னொரு காரணம். துருக்கி, தென்னாப்பிரிக்காவில் இந்தியாவைவிட வேகமாகச் செலாவணி மதிப்புச் சரிவு நேரிட்டுள்ளது இதற்கு நல்ல உதாரணம்.

பல ஆண்டுகளுக்கு முன்னால், எந்த நாடாவது வெளிவர்த்தகப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டால், அந்நாட்டின் செலாவணி மதிப்பைக் குறைத்துக்கொள்ளுமாறு யோசனை கூறப்படும். அப்படிச் செய்தால், அந்நாட்டின் பொருட்களைக் குறைந்த விலைக்கு நிறைய வாங்க முடியும் என்பதால், அவற்றுக்கான தேவை அதிகரித்து ஏற்றுமதி பெருகும். வெளிவர்த்தகப் பற்றுவரவில் துண்டுவிழுவது குறையும். ஆனால், சமீபத்திய ஆண்டுகளில் இந்த உத்தி பலனளிக்கவில்லை. காரணம், ஒரே சமயத்தில் பல நாடுகள் தங்களுடைய நாட்டுச் செலாவணியின் மதிப்பைக் குறைத்துக்கொண்டால் சர்வதேசச் சந்தையில் பல நாடுகளின் பொருட்கள் விலை மலிந்துவிடும். எனவே, எந்த ஒரு நாட்டுக்கும் அதிக பலன் கிடைத்துவிடாது. ரூபாயின் மதிப்பு சரிந்தாலும்கூட இந்தியாவின் ஏற்றுமதி அதிகரித்துவிடாது. இறக்குமதியும் சரிந்துவிடாது. சிலவகைப் பொருட்களின் இறக்குமதி அத்தியாவசியமாக இருப்பதால், அதிக விலை கொடுத்தாவது இறக்குமதி செய்தாக வேண்டும். கச்சா பெட்ரோலியம் இதற்கு நல்ல உதாரணம்.

நீர்வட்ட விளைவுகள்

இந்திய ரிசர்வ் வங்கியிடம் கணிசமான அளவு வெளிநாடுகளின் செலாவணிகள் கையிருப்பில் உள்ளன. உடனடியாக நமக்குப் பெருத்த தட்டுப்பாடு அல்லது நெருக்கடி வராது. நம்முடைய கவலையெல்லாம் இப்படி ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிகிறதே என்பதைப் பற்றித்தான். இப்படியே தொடர்ந்தால், உள்நாட்டுப் பொருளாதாரத்தை இது பாதிக்கத் தொடங்கலாம். கச்சா பெட்ரோலிய எண்ணெய் விலை உயர்வால் உள்நாட்டில் டீசல்-பெட்ரோல் விலை உயர்த்தப்படுகிறது. இது நாளடைவில் போக்குவரத்துச் செலவிலும், போக்குவரத்து மூலம் கொண்டுசெல்லப்படும் சரக்குகளின் விலையிலும் நீர்வட்ட விளைவை ஏற்படுத்தும். காய்கறிகள், பழங்கள், உணவு தானியங்கள், பால் என்று ஏராளமான உணவுப் பொருட்கள் அன்றாடம் வாகனங்களில்தான் ஏற்றி அனுப்பப்படுகின்றன என்பதால் அவற்றின் விலையும் உயரும். அத்துடன் இறக்குமதியாகும் அவசியப் பொருட்களின் விலையும் அதிகரிக்கும். டாலர் கணக்கில் கடன் வாங்கிய இந்திய நிறுவனங்கள் அதிக வட்டி செலுத்த நேரும். இதனால் அவற்றின் லாபம் குறையும், செலவு அதிகமாகும்.

திருத்தும் வழிகள்

மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் இணைந்து நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஏற்கெனவே, அவசியமில்லாத இறக்குமதிகளைத் தவிர்க்கவும் அவசியமானவற்றின் அளவைக் கட்டுப்படுத்தவும் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. ஏற்றுமதியை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பெட்ரோல்-டீசல் மீதான உற்பத்தி வரியை மத்திய அரசும் மதிப்புக்கூட்டு வரியை (வாட்) மாநில அரசுகளும் குறைக்க வேண்டும். சர்வதேசச் சந்தையில் கச்சா பெட்ரோலியத்தின் விலை குறைவாக இருந்தபோது, அரசுக்கு வருவாய் தேவை என்பதற்காகத்தான் மத்திய அரசு அதன் மீது உற்பத்தி வரியை அதிகமாக விதித்தது. எனவே, உற்பத்தி வரியைக் குறைத்தாக வேண்டிய தார்மிகக் கடமை மத்திய அரசுக்கு இருக்கிறது. அடுத்ததாக, ரிசர்வ் வங்கி தன் கைவசம் வைத்திருக்கும் டாலர்களைச் சந்தையில் விடுவிக்கலாம். இதனால் சந்தையில் டாலர் கிடைப்பது அதிகமாகி ரூபாயின் மதிப்பு சரிவது கட்டுப்படலாம். ஆனால், கையிருப்பில் உள்ள டாலர்களை அதிகம் செலவிட்டால் பிறகு நிலைமை சிக்கலாகும்போது நெருக்கடி அதிகமாகிவிடும். எனவே, எச்சரிக்கையுடன்தான் இதைச் செயல்படுத்த வேண்டும்.

இப்போது பணவீக்க விகிதம் 4%. ரூபாயின் மதிப்பு இப்படியே இருந்தால் இது மேலும் அதிகரிக்கும். இதனால் ரிசர்வ் வங்கியின் பணக்கொள்கை குழு (எம்பிசி) கூடி வங்கிகளில் டெபாசிட்டுகளுக்கான வட்டியை மேலும் உயர்த்த நேரிடலாம். இது பணவீக்க விகிதத்தையும் கட்டுக்குள் கொண்டுவரலாம். இதனால், பொருளாதார வளர்ச்சி வேகம் குறையும். காரணம், நிறுவனங்களின் லாபம் குறையும். நிறுவனங்களின் லாபம் குறையும் என்றால், அந்நிய முதலீட்டாளர்கள் இந்தியச் சந்தையிலிருந்து பெரும் எண்ணிக்கையில் விலகுவார்கள். அது ரூபாயின் மதிப்பை மேலும் சரித்துவிடும்.

வெளிநாடு வாழ் இந்தியர்

இச்சூழலில் மிகச் சிறந்த வழி, வெளிநாடுவாழ் இந்தியர்களிடம் கடன் பத்திரங்களை விற்று டாலர்களை நேரடியாகத் திரட்டுவதுதான். மூன்று ஆண்டுகள் முதிர்வுக் காலம் என்று குறிப்பிட்டு, வட்டியையும் உள்நாட்டு இந்தியர்களுக்குள்ள அளவே அறிவித்தாலும் வெளிநாடுகளில் உள்ள இந்தியர்கள் கடன் பத்திரங்களை வாங்குவார்கள். அதனால் டாலர் கையிருப்பு கணிசமாக உயரும்.

ரூபாயின் செலாவணி மதிப்பில் ஏற்பட்டுள்ள இந்த வீழ்ச்சி தற்காலிகமானது. ஆனால், ஒரு டாலருக்கு 70 ரூபாய் என்ற அளவுக்கு மட்டுமே இது ஸ்திரமாகக்கூடும். இந்தியப் பொருளாதாரம் இதற்கேற்பத் தன்னைத் தகவமைத்துக் கொள்ளும். டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வெகுவாகக் குறையாமலும் உயராமலும் இருப்பது அவசியம். இல்லையென்றால், இந்தியாவில் முதலீடு செய்துள்ள வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்களும் தனிநபர் முதலீட்டாளர்களும் தங்களுடைய முடிவை வேகமாக மாற்றிக்கொள்வார்கள். அது விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்திவிடும்!

பாஸ்கர் தத்தா,

அசோகா பல்கலைக்கழகப் பேராசிரியர்,

தமிழில்: சாரி, 'தி இந்து' ஆங்கிலம்

https://tamil.thehindu.com/opinion/columns/article24974481.ece

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இதற்கான பதில் முன்பே எழுத பட்டுள்ளது. சீமானை விமர்சிக்காமல் விட்டாலும், ஆதரவு கருத்துகள் தொடர்வதால் - ஏதோ ஈழதமிழர் முழுவதும் நாதக ஆதரவாளர் என ஒரு விம்பம் கட்டி எழுப்ப படுகிறது. இந்த விம்பம் தமிழகத்தில் ஈழ தமிழருக்கு எதிரிகளை வலிய உருவாக்குகிறது. ஆகவே இடைக்கிடை அண்ணனின் பர்னிச்சரை உடைத்து இந்த விம்பத்தை உடைக்க வேண்டியதாகிறது.
    • இன்று நாம்   பனிப் புயலின் புரட்சியில் விழித்தோம் எங்கள் நிலப்பரப்பு மீண்டும் ஒருமுறை ஆக்கிரமிக்கப்பட்டது வெள்ளைக் கொடி பிடித்து சமாதானம் வேண்டி நிற்கிறது எம் நிலம் கட்டிடங்கள் பனியில் மூழ்கின பள்ளிகள் களை இழந்தன தபால் சேவை முடங்கியது இப்போதைக்கு நான் எங்கள் வீட்டில் சிறை வைக்கப்பட்டுள்ளேன் ஆனால் கொஞ்ச நேரத்தில் நான் பூட்ஸ் போடுவேன் விண்வெளியில் நடப்பது போல நிறை தண்ணீரில் மிதப்பது போல வெளியில் உலாவுவேன் வழியை மூடிய பனியை அகற்றி புதுப்பொலிவு செய்வேன் எங்கள் குழந்தைகள் இன்னும் சற்று நேரத்தில் ஜாக்கெட்டுகளை அணிவார்கள் அங்கு கூடுவார்கள் குதிப்பார்கள் சறுக்குவார்கள் ஆம் பனிப் பொழிவின் பெரு மௌனத்தின் பின் இங்கு ஒரு சிறு கலவரம் நடக்கவுள்ளது   தியா - காண்டீபன்
    • இருவருக்கும் நன்றி. கற்பிப்பது மட்டும் அல்ல, நல்ல கல்வியும் கொடுக்கிறாகள். நா த க வில் உள்ளவரில் 99% பேர் தமிழ் வழி கல்விதான். இஅடும்பாவனம் உட்பட.     ஓம். 
    • 2013ம் ஆண்டு ல‌ண்ட‌ன் நாட்டு ஊட‌க‌மான‌ ச‌ண‌ல்4 த‌ப்பி பால‌ச்ச‌ந்திர‌னின் ப‌ட‌த்தை வெளியிட‌ அதை பார்த்த‌ லைய‌லோ க‌ல்லுரி மாண‌வ‌ர்க‌ள் போராட‌ அந்த‌ போராட்ட‌த்தை ஜெய‌ல‌லிதா காவ‌ல்துரைய‌ வைத்து குழ‌ப்பி அடிச்சா............ஆனால் அந்த‌ போராட்ட‌ம் அடுத்த‌ நாளே தமிழ‌க‌ம் எங்கும் தீயாய் ப‌ர‌விய‌து............இப்ப‌டியே போனால் த‌ன‌து க‌ட்சிக்கு ஆவ‌த்து வ‌ரும் என்று தெரிந்து தான் ஊட‌க‌ங்க‌ளுக்கு முன்னால் அறிக்கை விட்டவ‌ர் நாங்க‌ள் காங்கிர‌ஸ் கூட்ட‌னில‌ இருந்து வில‌கிறோம் என்று....... அதே கூட்ட‌னில‌ இருந்த‌ திருமாள‌வ‌னும் ஊட‌க‌ம் மூல‌ம் சொன்னார் விசிக்காவும் காங்கிர‌ஸ் கூட்ட‌னில‌ இருந்து வில‌கிறோம் என்று...............இது தான் உண்மை ச‌ம்ப‌வ‌ம்..................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.