Jump to content

இலங்கையின் அடுத்த ஜனாதிபதி – யாருக்கு அந்த அதிஷ்டம்?


Recommended Posts

இலங்கையின் அடுத்த ஜனாதிபதி – யாருக்கு அந்த அதிஷ்டம்?

 

 

இலங்கையின் அடுத்த ஜனாதிபதி யார்? என்ற கேள்விக்கு இன்னும் தெளிவற்ற பதில்களே கிடைக்கப்பெறுகின்றன.

அன்மையில் இந்தியாவுக்குச் சென்றிருந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இதுதொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில், மீண்டும் தாம் ஆட்சிக்கு வருவது உறுதி என்றும், அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக தமது சகோதரன் ஒருவரே போட்டியிடுவார் என்றும். எனினும் இதுவிடயமாக கூட்டு எதிர்க்கட்சியுடன் கலந்துரையாடி இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் இந்தியாவின் ‘இந்து’ பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்திருந்தார்.

மகிந்த ராஜபக்சவின் இந்திய பயணத்தின்போது அவரது மூத்த மகன் நாமல் ராஜபக்சவையும் கூடவே அழைத்துச் சென்றிருந்தார். நாமல் ராஜபக்சவும் இன்னொரு மகிந்தராஜ பக்சவைப் போன்று தோற்றமளித்தார்.

அவற்றைப் பார்க்கும் போது மகிந்த ராஜபக்சவின் அடுத்த அரசியல் வாரிசாக நாமல் ராஜபக்சவை இந்தியாவுக்கு அறிமுகம் செய்து வைக்கும் ஒரு ராஜதந்திர நகர்வாகவே இருந்தது. தனது மகனுக்கு வயது போதாமை காரணமாக அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக தனது சகோதரன் ஒருவரையே களமிறக்கப்போவதாக கூறியிருந்தார்.

மகிந்த ராஜபக்சவின் சகோதரர்கள் மூன்று பேர் தற்போது அரசியலில் இருக்கின்றார்கள். மூத்த சகோதரர் சமல் ராஜபக்ச, அடுத்து கோட்டபாய ராஜபக்ச, அடுத்து பசில் ராஜபக்ச இவர்களில் ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவதற்கான சமிக்ஞையை மகிந்த ராஜபக்ச வெளியிட்டுள்ளார்.

இவர்களில் சமல் கடந்த ஆட்சிக்காலத்தில் சபாநாயகராக இருந்த அனுபவம் இருந்தாலும் ஜனாதிபதி வேட்பாளராக மிளிர்வதற்கு போதுமான மக்கள் ஆதரவைத் திரட்டக்கூடியவரல்ல. கோட்டபாய முன்னாள் பாதுகாப்புச் செயலாளராக செயற்பட்டவர், விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்ததில் இவரின் துணிச்சலான தீர்மானங்களும், தந்திரோபாயங்களும் மிகப்பெரிய பங்கு வகித்தது என்பதால், அந்த வரலாற்று வெற்றியின் கதாநாயகனாக சிங்கள மக்கள் கொண்டாடும் ஒருவர்.

யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் நகர அபிவிருத்திப் பணிகளை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவந்து நாட்டின் அபிவிருத்திக்கு முக்கிய பங்காற்றியவர் என்ற நற்பெயரும் இவருக்கு இருக்கின்றது.

இறுதியாக பசில் இவர் கடந்த ஆட்சியில் முக்கிய அமைச்சுப் பொறுப்பான பொருளாதார அபிவிருத்தியையும், திட்டமிடல் அமைச்சையும் தன்னகத்தே வைத்துக்கொண்டு விரைவுச்சாலைகள் அமையவும், 50 வருடங்களாக ஒட்டுப்போட்டு பாவிக்கப்பட்டு வந்த நாட்டின் முக்கிய பிரதான வீதிகளை காப்பற் வீதிகளாக மாற்றியமைத்தது மட்டுமல்லாமல் நாட்டிலுள்ள நிர்வாகக் கட்டிடங்களை மீளக்கட்டி எழுப்பியவர், சமுர்த்தி, மற்றும் வாழ்வாதாரத் திட்டங்களை ஏற்படுத்தி கிராமங்களின் எழுச்சிக்கு திட்டம் வகுத்தவர்.

இந்த ராஜபக்சக்கள் கொள்ளையடித்தார்கள், அதிகாரத்துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டார்கள் என்றெல்லாம் ஆயிரம் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டாலும், அதையெல்லாம் தாண்டி நாட்டின் பல நல்ல காரியங்கள் நடத்தேறியது அவர்களின் ஆட்சிக்காலத்தில் என்பதே இன்றளவும் பேசப்படுகின்றது.

இவர்களில் கோட்டபாய ராஜபக்சவுக்கு யுத்தத்தை வெற்றிகொண்ட கதாநாயகன் என்ற மதிப்பும், படைகளின் பாதுகாவலனாக இருக்கக்கூடியவர் என்பதால், முப்படையினர் மத்தியிலும் ஒரு எதிர்பார்ப்பும், அத்துடன் பௌத்த இனவாதிகளின் ஆசிர்வாதத்திற்கும் தகுதியானவர் என்ற கருத்துக்கள் நிலவகின்றது. அதற்கு பலம் சேர்க்கும் வகையில் கூட்டு எதிரணியினர் ஒன்றினைந்து பிரச்சாரப் பணிகளை முன்னெடுத்தால் அவரது வெற்றி நிச்சயிக்கப்படும்.

இதேபோல் பசில் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட்டால் அவரின் பிரதான பலமாக இருப்பது அவர் ஒழுங்கமைத்து வழிநடத்திய கூட்டு எதிரணியின் பொதுஜன பெரமுன கட்சியானது மக்களிடம் பெரும் ஆதரவைப் பெற்றுள்ளது. அந்த பலம் ஒருபக்கமாகவும், கோட்டபாயவைவிட ராஜபக்ச குடும்பத்திலிருப்பவர்களில் பசில் ராஜபக்ச இனவாதியாகவோ, சிறுபான்மையினங்களின் வெறுப்புக்குரியவராகவோ இல்லாதவர் ஆகையால் சிறுபான்மை இனங்களின் வாக்குகளை ஓரளவு பெறக்கூடிய ராஜபக்ச குடும்பத்தில் ஒருவராக இருக்கின்றார். எனவே பசிலுக்கும் வெற்றிவாய்ப்பு இருக்கின்றது.

இதில் சர்ச்சைக்குரிய விடயம் என்னவென்றால் அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்தவர்தானா வேட்பாளராக இருக்க வேண்டும். கூட்டு எதிரணியில் இருக்கும் மூத்த அரசியல்வாதிகளுக்கு ஏன் அந்த வாய்ப்பு வழங்கப்படக் கூடாது என்பதுதான் பொது எதிரணியிலுள்ள சிரேஷ்ட தலைவர்களின் கேள்வியாக இருக்கின்றது.

அவர்களில் தற்போது பொது எதிரணியின் தலைவராக இருக்கும் தினேஸ் குணவர்தன முதன்மையானவராக இருக்கின்றார். இந்தியாவில் மகிந்த ராஜபக்ச தெவித்த கருத்துத் தொடர்பில் பொது எதிரணியின் மூத்த உறுப்பினரில் ஒருவரான குமார வெல்கம கருத்துத் தெரிவித்த போது, மகிந்தவின் சகோதரர் ஒருவர்தான் அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்படுவதற்கு முடிவு செய்யப்படுமாக இருந்தால், அவர்கள் இன்னொரு மைத்திரிபால சிறிசேனவை உருவாக்கப்போகின்றார்கள் என்று கூறியிருந்தார்.

இன்னொரு சிறிசேன என்று கூறப்படுவது எதுவெனில் கூடவே இறுதிவரை இருந்துவிட்டு இறுதியில் ஒரே இரவில் அந்தக் கூட்டத்திலிருந்து விலகி நன்பர்களுக்கு துரோகியாக எதிரணியில் நிற்பது என்றுதான் அவர்கள் வரைவிலக்கணம் கொடுக்கின்றார்களால் என்றால், மகிந்த ராஜபக்ச அல்லாத வேறு ராஜபக்சக்களில் ஒருவர் முன்னிலைப்படுத்தப்படுவாராக இருந்தால் அதற்கு எதிராக நண்பர்களும் எதிரியாக மாறுகின்ற நிலைமை உறுவாகும் என்பதையே அவ்வாறு கூறுகின்றார்கள்.

இவ்வாறான சர்ச்சைகளுக்கு பிரதான காரணமாக இருப்பது, அடுத்து நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் நிச்சயமாக தற்போதுள்ள ஆட்சியாளர்களால் மக்களின் பெரும்பான்மை பலத்தை பெறமுடியாது என்ற கணிப்பும், பொது எதிரணிக்கு நாளாந்தம் மக்கள் ஆதரவு பெறுகிவருவதும்தான் என்கின்றார்கள் நோக்கர்கள்.

இதற்கிடையே நல்லாட்சி நடத்தும் இரு கட்சியினரும், ஒற்றுமையையும், தமக்கிடையேயான நம்பிக்கையீனத்தையும் இழந்து ஆளுக்கொரு திசையில் பயணித்துக்கொண்டு இருக்கின்றார்கள். அதில் சுதந்திரக்கட்சியினரைப் பொருத்தவரை அடுத்த ஜனாதிபதியாகவும் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபாலதான் தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற நம்பிக்கையில் இருக்கின்றார்கள்.

ஒருவேளை அடுத்த தேர்தலில் மைத்திரிபால தோற்றுப்போய்விட்டால் அவர்களின் அரசியல் எதிர்காலம் எவ்வாறு அமையப்போகின்றது என்பதை அவர்களால் சிந்திக்கவும் முடியவில்லை.

அந்த அணியினரைப் பொறுத்தவரை இருளான பாதையில் மைத்திரிபால எனும் ஒரு கைவிளக்கை மட்டும் பிடித்துக்கொண்டு பயணித்துக்கொண்டு இருக்கின்றார்கள்.

ஐக்கிய தேசியக் கட்சியைப் பொறுத்தவரை, அவர்களும் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தமது தலைவர் ரணில் விக்ரமசிங்கவே மக்களால் தெரிவு செய்யப்படுவார் என்று திட்டவட்டமாக நம்புகின்றார்கள். ஆனாலும் கடந்த மூன்று ஆண்டுகளில் நல்லாட்சி அரசாங்கம் மீது ஏற்பட்டுள்ள அதிருப்தியின் காரணமாக ஜனாதிபதித் தேர்தலில் பெரும்பான்மை வாக்குகளை பெற்றுக்கொள்வார்களா? என்பது கேள்விக்குரியாகத்தான் இருக்கின்றது.

இந்த இரு கட்சிகளும் யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு கடந்த தேர்தலைப்போன்று இடையிலுள்ள அனைத்து முரண்பாடுகளையும், நம்பிக்கையீனங்களையும் ஒதுக்கி வைத்துவிட்டு பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தி முயற்சி செய்வார்களாக இருந்தால் பொது எதிரணிக்கு கடும்போட்டியைக் கொடுக்கவும், வெற்றியைப் பெறவும் முடியுமாக இருக்கலாம். ஆனால் அதற்கான புறச்சூழலை இம்முறை யார் தோற்றுவிப்பார்கள் என்பதே கேள்வியாகும்.

-ஈழத்துக் கதிரவன்-

http://athavannews.com/இலங்கையின்-அடுத்த-ஜனாதி-3/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, நவீனன் said:

இலங்கையின் அடுத்த ஜனாதிபதி – யாருக்கு அந்த அதிஷ்டம்?

எவர்   ஆட்சிக்கு   வந்தாலும்   என்ரை     செல்லக்குஞ்சுகள்    சம்சும் கொம்பனிக்கு   ஓட்டமெற்றிக் அதிஷ்டம் கண்டியளோ :cool:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • புதிய ஆடுகளம் அமைத்து தானே அதில் சுருண்டு பலியாகிவிட்டதா குஜராத் அணி? ஏன் இந்த மோசமான தோல்வி? பட மூலாதாரம்,SPORTZPICS ஒரு மணி நேரத்துக்கு முன்னர் 4வது ஓவர் தொடக்கத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி, 169 ரன்கள் வரை சேர்க்கும் என்று கணினியின் முடிவுகள் கணிக்கப்பட்டது. இது 6-வது ஓவரில் திடீரெனக் குறைந்து 120 ரன்களாகக் குறைந்தது. முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி இந்த சீசனிலேயே குறைந்தபட்ச ஸ்கோருக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தது. 2022ம் ஆண்டு இந்த ஐபிஎல் தொடருக்குள் வந்தபின் குஜராத் டைட்டன்ஸ் அணி சேர்த்த மிகக்குறைந்த ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன் 125 ரன்களில் சுருண்டிருந்தது குஜராத் அணி. அதைவிட இந்த ஆட்டத்தில் மோசமாகும். ஆமதாபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 32-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ் அணி. முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 17.3 ஓவர்களில் 89 ரன்களில் சுருண்டது. 90 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 53 பந்துகளில் 4 விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள் சேர்த்து 67 பந்துகள் மீதமிருக்கையில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்த வெற்றியால் டெல்லி கேபிடல்ஸ் அணி 7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்வி என 6 புள்ளிகளுடன் 9வது இடத்தில் இருந்தது, 6-வது இடத்துக்கு முன்னேறியது. குறைந்த ஓவரில் வெற்றி வெற்றி பெற்றதால் நிகர ரன்ரேட்டும் மைனஸ் 0.975 லிருந்து மைனஸ் 0.074 ஆக முன்னேறிவிட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES நிகர ரன்ரேட் மோசமாக இருந்தநிலையில் தற்போது பாசிட்டிவ் நோக்கி டெல்லி அணி நகர்ந்துள்ளது. அடுத்ததாக ஒரு வெற்றி பெற்றால், நிகரரன்ரேட் பிளஸ்குக்குள் சென்றுவிடும். அதேசமயம், குஜராத் டைட்டன்ஸ் அணி அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்துள்ளது.7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்விகள் என 6 புள்ளிகளுடன் 6-வது இடத்திலிருந்து 7-வது இடத்துக்கு சரிந்துள்ளது. நிகர ரன்ரேட்டும் மைனஸ் 1.303 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. நிகர ரன்ரேட்டை உயர்த்த குறைந்தபட்சம் அடுத்த இரு போட்டிகளில் பெரிய வெற்றியை குஜராத் அணி பெற்றால்தான் முன்னேற்ற முடியும். டெல்லி கேபிடல்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கியக்காரணம், ஹீரோக்களாக இருந்தவர்கள் பந்துவீச்சாளர்கள்தான். 6 பந்துவீச்சாளர்கள் பந்துவீசியதில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் தவிர மற்ற 5 பந்துவீச்சாளர்களும் ஓவருக்கு. 4.50 ரன்களுக்கும் குறைவாகவே வழங்கினர். அதிலும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இதுவரை 79 டி20 போட்டிகளில் விளையாடி 177 பந்துகளை மட்டுமே வீசியுள்ளார். இந்த ஆட்டத்தில் ஸ்டப்ஸ் ஒரு ஓவர் மட்டும் சுழற்பந்துவீசி 11 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES கலீல் அகமது 4 ஓவர்கள் வீசி ஒரு மெய்டன் 18 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இசாந்த் சர்மா 2 ஓவர்கள் வீசி 8ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்தார். முகேஷ் குமார் 2.3 ஓவர்கள் வீசி 14 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அக்ஸர் படேல் 4ஓவர்கள் வீசி 17 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். இதில் விக்கெட் வீழ்த்தாமல் இருந்தது குல்தீப் யாதவ் மட்டும்தான். குறிப்பாக இந்த ஆட்டத்திஸ் ஸ்டப்ஸ் தவிர மற்ற 5 பந்துவீச்சாளர்களும் உள்நாட்டு பந்துவீச்சாளர்களை வைத்தே டெல்லி கேபிடல்ஸ் விளையாடியது. கடந்த ஆட்டத்திலும் இதேபோன்று வெளிநாட்டு பந்துவீச்சாளர்கள் உதவி இல்லாமல் உள்நாட்டு வீரர்களை வைத்தே டெல்லி அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த ஆட்டத்தில் இரு முக்கிய கேட்ச்கள், இரு முக்கிய ஸ்டெம்பிங்குகள் ஆகியவற்றுடன்16 ரன்கள் சேர்த்த டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ரிஷப் பந்த் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.   பட மூலாதாரம்,SPORTZPICS ரிஷப் பந்த் கூறியது என்ன? டெல்லி கேபிடல்ஸ் ரிஷப் பந்த் கூறுகையில் “ ஏராளமான நேர்மறையான அம்சங்கள் நடந்தன. சாம்பியன் மனநிலையோடு எங்கள் அணி விளையாடியது. ஐபிஎல் சீசனில் சிறந்த பந்துவீச்சாக இருக்கும். தொடர்ந்து நாங்கள் எங்களை முன்னேற்றி வருகிறோம். நிகர ரன்ரேட்டை இழந்துவிட்டதால் இனிமேல் அதை உயர்த்த கவனம் செலுத்தவோம். பந்துவீச்சாளர்கள் அவர்கள் பணியை ரசித்துச் செய்தனர், அதனால்தான் வெற்றி எளிதாகியது” எனத் தெரிவித்தார் குஜராத் அணியின் பேட்டிங் நேற்று படுமோசமாக இருந்தது. சுருக்கமாகக் கூறினால், குஜராத் அணியின் பேட்டர்கள் களத்தில் சந்தித்ததே 17.3 ஓவர்கள்தான். அதில் பேட்டர்கள் டாட் பந்துகளாகச் சந்தித்தது 63 பந்துகள். ஏறக்குறைய 10 ஓவர்களுக்கு எந்த பேட்டர்களும் ரன்கள் ஏதும் சேர்க்கவில்லை. ஆக 7.3 ஓவர்களில்தான் 89 ரன்கள் சேர்த்தனர். அது மட்டுமல்லாமல் ஐபிஎல் வரலாற்றிலேயே ஒரு ஆட்டத்தில் குறைந்தபட்சமாக குஜராத் அணி ஒரே ஒரு சிக்ஸர் மட்டுமே நேற்று அடித்தது. குஜராத் அணியில் காயத்திலிருந்து மீண்டு டேவிட் மில்லர் அணிக்கு திரும்பி இருந்தார், இம்பாக்ட் ப்ளேயராக ஷாருக்கான் சேர்க்கப்பட்டிருந்தார். குஜராத் அணியில் 8-வது வரிசைவரை ஓரளவுக்கு நன்கு பேட்டிங் செய்யக்கூடிய வீரர்கள்தான் இருந்தனர். ஆனால், நேற்று ரஷித் கான் சேர்த்த 24 பந்துகளில் 31 ரன்கள்தான் அதிகபட்ச ஸ்கோர். மற்ற எந்த பேட்டரும் பெரிதாக ரன்கள் சேர்க்கவில்லை.   பட மூலாதாரம்,GETTY IMAGES சாய் சுதர்சன்(12), திவேட்டியா(10) ரஷித்கான்(31) ஆகிய 3 பேட்டர்கள் மட்டும்தான் இரட்டை இலக்க ரன்கள் சேர்த்தனர். மற்ற பேட்டர்களான சுப்மான் கில்(2), சாஹா(8), மில்லர்(2) அபினவ் மனோகர்(8), ஷாருக்கான்(0), மோஹித் சர்மா(2), நூர் அகமது(1) என 7 பேட்டர்கள் ஒற்றை இலக்க ரன்கள் மட்டுமே சேர்த்து மோசான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். ரஷித்கான் தவிர வேறு எந்த பேட்டரும் களத்தில் 15 பந்துகளைக் கூட சந்திக்காமல் தேவையின்றி டெல்லி பந்துவீச்சாளர்களிடம் விக்கெட்டை வழங்கி வெளியேறினர். ஆடுகளத்தின் தன்மை என்ன, பந்து எப்படி பேட்டை நோக்கி வருகிறது என்பது குறித்த எந்தப் புரிதலும் இல்லாமல், பொறுமை இல்லாமல் மோசமான ஷாட்களை ஆடியே ஒட்டுமொத்தமாக விக்கெட்டுகளை இழந்தனர். அதிலும் இசாந்த் சர்மா வீசிய 5வது ஓவரில் சுதர்சன் 12 ரன்னில் ரன்அவுட் ஆக, அதே ஓவரின் கடைசிப்பந்தில் மில்லர் 2 ரன்னில் ரிஷப்பந்திடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். இதேபோல டிரிஸ்டன் ஸ்டப்ஸ் வீசிய 9-வது ஓவரில் 3வது பந்தில் அபினவ் மனோகர் 8ரன்னில் ரிஷப்பந்தால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டார், அடுத்த பந்தைச் சந்தித்த இம்பாக்ட் ப்ளேயர் ஷாருக்கானும் ஸ்டெம்பிங் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார். இரு முறை ஒரே ஓவர்களில் 2 விக்கெட்டுகள் என குஜராத் அணி இழந்தது. முதல் விக்கெட்டை 11 ரன்களில் இழந்த குஜராத் அணி, அடுத்த 36 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அடுத்த 42 ரன்களுக்குள் மீதமிருந்த 5 விக்கெட்டுகளையும் குஜராத் ஒட்டுமொத்தமாக இழந்தது.   பட மூலாதாரம்,SPORTZPICS குஜராத் சரிவுக்கு ஆடுகளம்தான் காரணமா? ஆமதாபாத்தில் போட்டி நடந்த ஆடுகளம் இதற்கு முன் நடந்த சீசன்களில் பயன்படுத்தப்படாத புதிய விக்கெட்டாகும். ஆடுகளத்தில் பந்து பிட்ச் ஆனதும் பேட்டரை நோக்கி மெதுவாகவே வரக்கூடிய ஸ்லோ பிட்சாகும். சுழற்பந்துவீச்சாளர்களுக்கும் பந்து வேகமாகத் திரும்பாமல் மெதுவாகத் திரும்பக்கூடிய ஆடுகளம். இதனால் மோசமான ஷாட்களை தேர்ந்தெடுத்து குஜராத் பேட்டர்கள் வெளியேறினர். அதிலும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் வீசிய ஒரு ஓவரில் அடுத்தடுத்த பந்தில் மனோகர், ஷாருக்கான் இருவரும் ஸ்டெம்பிங் செய்யப்பட்டனர். இவர்கள் இருவருமே பந்து இந்த அளவு டர்ன் ஆகும் என நினைத்திருக்கமாட்டார்கள். பந்து வருவதற்கு முன்பே பேட்டர்கள் பேட்டை சுழற்றியதும், ஸ்லோ பந்துகளில் பெரிய ஷாட்களை அடிக்க முற்பட்டதும் எளிதாக விக்கெட்டுகளை வீழ்த்த உதவியது. ஆனால் புதிய ஆடுகளத்தால் தங்களுக்கு எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை என்று சுப்மான் கில் கூறினார். தோல்விக்குப் பிறகு அவர் கூறுகையில் “ எங்கள் பேட்டிங் சராசரியாகவே இருந்தது. விக்கெட் ஓரளவுக்கு நன்றாகத்தான் இருந்தது. விக்கெட் மோசம் என்று நான் கூறவில்லை. எங்கள் வீரர்கள் ஆட்டமிழந்த விதத்தைப் பார்த்தால், குறிப்பாக நான்ஆட்டமிழந்ததற்கும் ஆடுகளத்துக்கும் தொடர்பில்லை. சாஹா ஆட்டமிழந்தது, சாய் சுதர்சன் ரன்அவுட் ஆகியவையும் பிட்சுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. என்னைப் பொருத்தவரை மோசமான பேட்டிங், மட்டமான ஷாட் தேர்வுகள்தான் தோல்விக்கு காரணம்” எனத் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES ஆனால், குஜராத் பேட்டர் டேவிட் மில்லர் ஆடுகளத்தை குற்றம்சாட்டினார். அவர் கூறுகையில் “ விக்கெட் மிக மெதுவாக இருந்தது. எந்த அணியும் இதுபோன்று மோசமாக குறைந்த ஸ்கோரில் ஆட்டமிழந்தது இல்லை. அதிலும் ஒரு முன்னாள் சாம்பியன் அணி ஆட்டமிழந்தது இல்லை. இரு விக்கெட்டுகள் திடீரென அடுத்தடுத்து பறிபோனது அதிர்ச்சியளித்தது.” “சுப்மான் கில் கவர் ட்ரைவ் ஷாட்களை பந்து வரும்முன்பே ஆடிவிட்டார். பந்து ஆடுகளத்தில் நின்று மெதுவாக பேட்டரை நோக்கி வந்ததை புதிய பேட்டராக வருபவரால் கணிக்க முடியவில்லை அதனால்தான் 90 ரன்களுக்குள் ஆட்டமிழந்தோம். இந்த உலகத்திடம் ஆயிரம் மன்னிப்புகள் கேட்கலாம். ஆனால், இறுதியில் பார்த்தால் நாங்கள் மோசமான கிரிக்கெட்டைத்தான் விளையாடியிருக்கிறோம். 120 ரன்கள் சேர்த்திருந்தால்கூட பந்துவீச்சாளர்கள் டிபெண்ட் செய்ய உதவியிருக்கும். ஆனால்,90 ரன்கள்கூட வரவில்லை. ரஷித்கான் அணியை பெரிய ஸ்கோருக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில் பேட் செய்ததால்தான் ஓரளவுக்கு ஸ்கோர் கிடைத்தது. இல்லாவிட்டால் மோசமாகி இருந்திருக்கும் ” எனத் தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/cqqny66krveo
    • @goshan_che எழுதிய தாயக பயண அனுபவங்கள் என்ற இந்த பயண கட்டுரைக்கு பொருத்தமாக இருக்கும் என்று நினைப்பதால் அவரின் அனுமதியுடன் இந்த தாயக இளைஞர்களின் முயற்சிகள் தொடர்பான  காணோளியை இணைக்கிறேன்.    பி. கு அனுமதி பெறாமலே😂
    • ஆம் இது உண்மை எனக்கு பலமுறை இப்படி ஏற்பட்டது. இது ஒரு புதிய யுக்தி. பெரெரா அன்ட் சன்ஸ் இல் சாப்பிட்டு கொண்டிருக்கும்போது இப்படி அடிக்கடி நடக்கும். கடை வாசலுக்கு முன் வந்து சாப்பிட்டு கொண்டிருப்பவரை பர்ர்த்து, கெஞ்சி மன்றாடி உணவ வாங்கி கேட்பது, அலுப்பு கொடுப்பது அடிக்கடி நடக்கும்.
    • வைகாசி மாதம் என்றால்  அகம் குளிரும் அன்னையின் முகம் காணும் ஆசைவரும்  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.