Jump to content

ஜனாதிபதியின் ஐ.நா.உரை நல்லிணக்க சவால்களை நன்கு புலப்படுத்தும்


Recommended Posts

ஜனாதிபதியின் ஐ.நா.உரை நல்லிணக்க சவால்களை நன்கு புலப்படுத்தும்

 

 
 

ஆட்சிமுறைப் பிரச்சினைகளில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மைக்காலத்தில் செய்திருக்கும் தலையீடுகள் அவரின் தலைமையிலான அரசாங்கத்திற்குள் நிலவுகின்ற கடுமையான அபிப்பிராய வேறுபாடுகளை வெளிச்சத்துக்கு கொண்டுவருகின்றன. அவற்றில் முக்கியமானது போர்க்காலத்தில் இடமபெற்றதாகக் கூறப்படுகின்ற பாரதூரமான மனித உரிமை மீறல்கள் தொடர்லான பொறுப்புக்கூறல் விவகாரத்தில் சர்வதேச சமூகத்திற்கு அரசாங்கத்தினால் அளிக்கப்பட்ட உறுதிமொழிகளில் இருந்து விடுபடுவதற்கு அவர் மேற்கொள்கின்ற முயற்சியாகும்.முன்னைய அரசாங்கத்துக்கும் சர்வதேச சமூகத்தின் சில பிரிவுகளுக்கும் தீவிரமடைந்திருந்த பதற்றநிலையை புதிதாக தெரிவுசெய்யப்பட்ட அரசாங்கம் 2015 அக்டோபரில் தணித்தது.

un.jpg

அந்த பதற்றநிலை இலங்கை மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படுவதற்கும் காரணமாகியது.ஐரோப்பிய ஒன்றியம் ஜி.எஸ்.பி.வரிச்சலுகையை விலக்கிக்கொண்டது.மேலும் பல தடைகள் விதிக்கப்படும் என்பதற்கான அறிகுறிகளும் தென்பட்டன.ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் 30/1 தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கியதன் மூலமாக அரசாங்கம் கடந்தகால பிரச்சினைகளைக் கையாளுவதற்கும் தேசிய நல்லிணக்கத்துக்கான பாதையை வகுப்பதற்குமான தொடர்ச்சியான பல நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக உறுதியளித்தது.

ஆனால், சர்வதேச நெருக்குதலின் விளைவாக போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக் கூறுவதென்பது இலங்கையின் பாதுகாப்பு படைகளையும் பெரும்பான்மையினத்தவரான சிங்களவர்களையும் பொறுத்தவரை சர்ச்சைக்குரிய ஒரு விவகாரமாகவே இருந்துவருகிறது.ஜெனீவாவில் அரசாங்கம் அளித்த உறுதிமொழிகளுக்கு மாற்று யோசனைகளை இணக்கபூர்வமான முறையில் முன்வைக்கப்போவதாக அண்மைக்காலமாக ஜனாதிபதி சிறிசேன கூறிவருகின்றார்.

பொறுப்புக்கூறலுடன் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை விசாரணை செய்வதற்கென்று  அமைக்கப்படவேண்டியிருக்கும் விசேட நீதிப்பொறிமுறையில் சர்வதேச சமூகத்தின் பங்கேற்பு என்பது எப்போதுமே மிகவும் சர்ச்சைக்குரியதாக இருந்துவருகிறது.இது விடயத்தில் சர்வதேச பங்கேற்பு என்பது கலப்பு முறையிலான நீதிமன்றம் ஒன்றில் உள்நாட்டு நீதிபதிகளுடன் அருகருகாக சர்வதேச நீதிபதிகளும் அமர்ந்திருந்து விசாரணைசெய்து தீர்ப்பு வழங்கும் வகையிலானதாக இருக்கப்போவதில்லை என்று ஜனாதிபதியும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் ஏற்கெனவே விளக்கமளித்திருக்கிறார்கள்.

இலங்கையின் இணை அனுசரணையுடன் ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பாதுகாப்புப் படைகளுக்கு தண்டைனை வாங்கிக்கொடுக்கும் நோக்கில் நேர்மையற்ற முறையில் இலக்குவைப்பதாக அமைந்திருக்கிறது என்ற ஒரு எண்ணம் உருவாகியிருப்பதால், அந்தத் தீர்மானத்தைத் திருத்தியமைக்கவேண்டுமென்று ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் நிகழ்த்தவிருக்கும் உரையில் இணக்கபூர்வமான முறையில் வலியுறுத்தப்போவதாக ஜனாதிபதி சிறிசேன கூறியிருக்கிறார்.

தனது யோசனைகளை ஐ.நா.செயலாளர் நாயகம் அன்ரோனியோ குற்றெரஸுக்கும் புதிய  ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்சேல் பாச்செலெற்றுக்கும் கையளிக்கப்போவதாகவும் அவர் கூறியிருக்கிறார்.அத்துடன் தனது யோசனைகள் பிரச்சினைகளைத் தீர்த்துவைப்பதையும் பாதுகாப்பு படைகளின் பெருமைக்கு ஊறு விளைவிக்காத வகையில் அல்லது இலங்கையின் சுதந்திரத்தை ஆபத்துக்குள்ளாக்காத வகையிலும் நிவாரணத்தை வழங்குவதையும் இலக்காகக்கொண்டவை என்றும் ஜனாதிபதி தெரிவித்திருக்கிறார்.எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ( செப்டெம்பர் 25) ஐ.நா.பொதுச்சபையில் அவர் உரையாற்றவிருக்கின்றார்.

UNHRC-.jpg

அரசியல் முற்றுகை

பொருளாதாரத்தை மேம்படுத்தி பொதுமக்களுக்கு அதன் பலாபலன்கள் சென்றடையக்கூடியதாக செயற்படத் தவறியதற்காக மாத்திரமல்ல, வேறு பல காரணங்களினாலும் அரசாங்கம் இன்று அரசியல் முற்றுகைக்குள்ளாகியிருக்கிறது.இரு வருட காலவரையறைக்குள் பொறுப்புக்கூறலுடனும் நிலைமாறுகால நீதியுடனும் தொடர்புபட்ட பல கருமங்களைச் செய்ய வலியுறுத்தும் 2015 அக்டோபர் ஜெனீவா தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கியதும் இந்த முற்றுகை நிலைக்கான இன்னொரு காரணமாகும்.

இந்த ஜெனீவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதும் பணியில் அரசாங்கம் அதன் அணிகளுக்குள்ளேயே ஆதரவைப்பெறமுடியாமல் இருக்கிறது என்பது அது எதிர்நோக்குகின்ற சவாலின் கடுமையை தெளிவாக உணர்த்துகின்றது.காணாமல்போனோர் விவகார அலுவலகத்தை அமைப்பது உட்பட ஒவ்வொரு சீர்திருத்தமும் கடுமையான எதிர்ப்புக்கு முகங்கொடுக்கவேண்டியிருக்கிறது.அதனால், ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் 30/1 தீர்மானத்தில் குறித்துரைக்கப்பட்டவாறு நிலைமாறுகால நீதி நிகழ்ச்சித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு மேலுமொரு இருவருட காலஅவகாசத்தை 2017 மார்ச்சில் இலங்கை அரசாங்கம் கேட்டுப் பெற்றுக்கொண்டது ஒன்றும் அதிர்ச்சி தரத்தக்கதல்ல.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 30/1 தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இலங்கை அரசாங்கம் அதில் கைச்சாத்திட்டபோது அதன் உள்ளடக்கங்கள் குறித்து அமைச்சர்களுக்கு எதுவும் தெரியாது எனாற போரின் இறுதிக்கால கட்டத்தில் இராணுவத்தளபதியாக இருந்த தற்போதைய அமைச்சர் ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கடந்தவாரம் கூறியிருந்தார்.தீர்மானத்தின் உள்ளடக்கம் குறித்து இன்று கூட அரசாங்க உறுப்பினர்களுக்கு விளக்கம் இல்லாமல் இருந்தால் அது ஒன்றும் ஆச்சரியத்துக்குரியதல்ல.

இத்தகைய சூழ்நிலையிலே, நிலைமாறுகால நீதிச் செயன்முறைகள் சிறியளவுக்கேனும் முன்னோக்கி நகர்திருக்கிறது என்றால் அதறகான பெருமை  பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ( வெளியுறவு அமைச்சராக இருந்தபோது ஜெனீவா தீர்மானத்தில் கைச்சாத்திட்ட ) தற்போதைய நிதி அமைச்சர் மங்கள சமரவீர உட்பட ஒரு சில அமைச்சர்களுக்குமே உரியதாகும்.சர்வதேச தராதரங்களை எட்டுவதற்கான தேவையை அவர்கள் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.தேசிய அரசியல் யதார்த்தங்களுக்கு   இந்த தராதரங்களை இசைவுபடுத்துவது எவ்வாறு என்பதே இங்குள்ள பிரச்சினையாகும்.

ஜெனீவா தீர்மானத்துக்கு இணங்க முதன் முதலாக நிறுவப்பட்ட நிலைமாறுகால நீதிப் பொறிமுறை காணாமல்போனோர் விவகார அலுவலகமேயாகும். அந்த அலுவலகம் கடந்தவாரம் அதன் இடைக்கால அறிக்கையை வெளியிட்டது.வலிமைவாய்ந்த சிபாரிசுகளுடன் கூடிய விரிவான ஒரு ஆவணமாக அந்த அறிக்கை அமைந்திருக்கிறது.

எந்தளவுக்கு அதை நடைமுறைப்படுத்த முடியும்; எந்தளவுக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்பதே கேள்வியாகும்.சகல தடுப்புக்காவல் நிலையங்களினதும் தடுத்துவைக்கப்பட்டிருப்பவர்களினதும் முழுமையான பட்டியல்கள் வெளியிடப்படவேண்டும் என்று விதப்புரை செய்திருக்கும் காணாமல்போனோர் விவகார அலுவலகம் அதிகாரமளிக்கப்படாத எந்தவொரு தடுப்புக்காவல் நிலையத்திலும் ஆட்கள் தடுத்துவைக்கப்படாதிருப்பதை உறுதிசெய்யுமாறு வலியுறுத்தியிருக்கிறது.

ஆனால், அந்த அலுவலகம் கையாளவேண்டிய அடிப்படைப் பிரச்சினையொன்று இருக்கிறது.கடந்த காலத்தைக் கிளறுவதற்கான ஒவ்வொரு முயற்சியையும் போரில் வெற்றியீட்டித் தந்தவர்களை நீதிமன்றத்தில் என்றாவது ஒரு நாள்  நிறுத்துவதற்கு வகைசெய்யக்கூடியதாக சான்றுகளைக் கண்டறிவதற்கான சூழ்ச்சித்தனமான பிரயத்தனமாகவே இலங்கை ஆயுதப்  படைகளும் பாதுகாப்புத் துறையும் பெரும்பான்மையினத்தவர்களான சிங்களவர்களும் நோக்குகிறார்கள் என்பதே அந்தப் பிரச்சினையாகும்.

எதிர்நிலையான இந்த நெருக்குதல்களுக்கு மத்தியிலும், அரசாங்கம் மெதுமெதுவாக என்றாலும் முன்னோக்கிச் செல்லவே முயற்சிக்கின்றது.நிலைமாறுகால நீதிப்பொறிமுறையில் இரண்டாவதான இழப்பீட்டுக்கான அலுவலகத்துக்கு அமைச்சரவை அண்மையில் அங்கீகாரம் வழங்கியிருந்தது.அத்துடன் சட்டமாக நிறைவேற்றப்படுவதற்கு அந்த அலுவலகம் தொடர்பான யோசனைகள் பாராளுமன்றத்தில் சமமர்ப்பிக்கப்படவேண்டியிருக்கின்றன.

மூன்றாவது பொறிமுறையான உண்மை கண்டறியும் ஆணைக்குழு தொடர்பாக இப்போது பரிசீலிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. நிலைமாறுகாலநீதி தொடர்பான விவகாரங்களில் இலங்கை அரசியல் சமுதாயம் பிளவுபட்டிருக்கும் பின்புலத்தில் முன்னோக்கி நகருவதற்கான வழிவகைகளைக் கண்டறிய மேலும் கூடுதலான காலமும் விவேகமும் அரசியல் துணிவாற்றலும் தேவைப்படுகின்றன.உலகின் வேறு பகுதிகளில் இத்தகைய செயன்முறைகள் கட்டவிழ பல தசாப்தங்கள் தேவைப்பட்டன.

ஆனால், ஐ.நா.மனித உரிமைகள் பேரவை போன்ற ஐ.நா.நிறுவனங்கள் அவற்றுக்கென சொந்த ஆணைகளையும் சுயாதிக்கத்தையும் கொண்டிருக்கின்றன என்பதை ஜனாதிபதி சிறிசேனவும் அரசாங்கமும் மனதிற்கொள்ளவேண்டியது முக்கியமானதாகும்.

இலங்கை தொடர்பிலான 2015 அக்டோபர் 30/1 தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கிய ஐ.நா.மனித உரிமைகள் பேரவை ஐ.நா. பொதுச்சபையின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் செயற்படவில்லை. உலகில் மிகவும் வல்லமைபொருந்திய நாடாக அமெரிக்கா இருக்கின்றபோதிலும் கூட, அதனால் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையை செல்வாக்கின் கீழ் கொண்டுவர இயலாமல்போய்விட்டது. பேரவையைக் கண்டனம் செய்த அமெரிக்கா இறுதியில் அதன் உறுப்புரிமையில் இருந்து விலகிக்கொண்டது என்பதை நாம்விளங்கிக்கொள்ளவேண்டும்.

எனவே, சர்வதேச சமூகம் குறிப்பாக, மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கான ஆணையைக் கொண்ட பிரிவினர் சர்வதேச தராதரத்துடனான  பொறுப்புக்கூறலுக்கான தேவையை இலங்கையின் தராதரங்களுக்கு இசைவானமுறையில் தளர்த்துவதற்கு பேச்சுவார்த்தைகளை நடத்தத்தயாராயிருப்பர் என்று நம்புவது பொருத்தமானதல்ல.ஜனாதிபதியின் நடவடிக்கைகள் அரசாங்கத்துக்கு அரசியல் ரீதியிலும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய சாத்தியத்தைக் கொண்டிருக்கின்றன.ஏனென்றால், அவை தமிழ் மக்களுக்கும் அவர்களினால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகளுக்கும் ஏற்புடையவையல்ல.

குற்றச்செயல் ஒன்றைச் செய்வதற்கு கடற்படை அதிகாரியொருவருக்கு உதவியும் ஒத்தாசையும் வழங்கியதாகக் கூறப்படுகின்ற விவகாரம் தொடர்பில் குற்றவியல் விசாரணை திணைக்களத்தினால்( சி.ஐ.டி.) வேண்டப்படுகின்ற பாதுகாப்பு படைகளின் அதிகாரிகளின்  பிரதானி றியர் அட்மிரலல் ரவி விஜேகுணரத்ன சம்பந்தப்பட்ட விடயத்தில் ஜனாதிபதி அண்மையில் செய்த தலையீடுகள் பொறுப்புக்கூறலுடன் தொடர்புடைய முழு விவகாரமும் சர்வதேச நீதிச்செயன்முறைக்கு உட்ப்டதாக இருக்கவேண்டுமென்று தமிழ் தேசிய கூட்டமைப்பு கோரிக்கை முன்வைப்பதற்கு வழிவகுத்தன.நாட்டின் அதியுயர் அதிகாரபீடத்தில் உள்ளவரின் தலையீடு உரிமை மீறல்களனால் பாதிக்கப்பட்டவர்கள்  உள்நாட்டு நீதிச்செயன்முறையின் ஊடாக நீதியை எதிர்பார்க்கமுடியாது என்பதையே உணர்த்துகின்றது என்று கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாவட்ட எம்.பி.யும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் ' த ஐலண்ட் ' ஆங்கிலப் பத்திரிகைக்குக் கூறியிருக்கிறார்.

எனவே , சமரசமுடைய சமுதாயமொன்றை நோக்கியதாக  இலங்கையை மாற்றியமைப்பதற்கு பின்பற்றப்படவேண்டிய நிலைமாறுகால நீதியில் உள்ள சிக்கலான அம்சங்களை அரசாங்கத்திற்குள் இருக்கின்ற தலைவர்கள் பலரும் முறையாக விளங்கிக்கொள்ளவேண்டியது அவசியமாகும்.

 

(கலாநிதி ஜெகான் பெரேரா)

http://www.virakesari.lk/article/40672

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 12:09 PM பிரபல வர்த்தக நாமங்கள் மற்றும் அவர்களின் வர்த்தக முத்திரைகளை பயன்படுத்தி பரிசுகள் வழங்கப்படும் எனக் கூறி  சமூக ஊடகங்களில் பகிரப்படும் இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம் என இலங்கை கணினி அவசரநிலை தயார்நிலைக் குழு (SLCERT) மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. இது குறித்து இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல  தெரிவித்துள்ளதாவது, குறித்த இணைப்புகள் குறுஞ்செய்தி, வட்ஸ்அப், எக்ஸ் (ட்விட்டர்) மற்றும் பேஸ்புக் மற்றும் கையடக்க தொலைபேசியில் பெறப்பட்ட அழைப்பு ஆகியவற்றினூடாக பகிரப்படுகிறது. எனவே இவ்வாறான இணைப்புகள் வந்தால்  கிளிக் செய்யவதற்கு முன்பு அவற்றின் நம்பகத்தன்மையை முதலில் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இதுபோன்ற இணைப்புகளை உங்கள் நண்பர்கள் வட்டாரத்தில் இருந்து உங்களுக்கு வரலாம். சில சமூக ஊடகங்களில் பகிரப்படும் இவ்வாறான இணைப்புகளை கிளிக் செய்வதால் தனிப்பட்ட தரவுகளை திருடப்படலாம். மேலும், உங்களின் தேசிய அடையாள அட்டை இலக்கம் (NIC), சாரதி அனுமதி பத்திரம், வங்கிக் கணக்கு விவரங்கள், ஒரு முறை பயன்படுத்தப்படும் கடவுச்சொல் (OTP), வேலை செய்யும் விவரங்கள் போன்ற தனிபட்ட விவரங்களை பெற்றுகொள்வார்கள். சில நேரங்களில் மூன்றாம் தரப்பு கையடக்க தொலைபேசியில் இணைப்புகள் பதிவிறக்கம் செய்யப்பட்டு, குறித்த கையடக்க தொலைபேசியில்  சேமித்து வைக்கப்பட்டுள்ள தனிபட்ட விவரங்களை திருடலாம். எனவே அவர்களும் பாதிக்கப்படலாம் என்பதால், அந்த இணைப்புகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179956
    • உண்மைதான் இது ஒரு மதத்திற்கெதிரான பிரச்சார படமாக காட்டப்பட்டிருந்தாலும் இந்த படத்தினை அனைவரும் பார்க்கவேண்டிய படமக உணர்கிறேன். ஆனால் இதனை ஒத்த இன்னொரு மதமும் கேரளாவிலும் அதனை அண்டிய தமிழ்நாட்டுப்பகுதியிலும் இதனை விட அதிகளவில் மதமாற்றம் செய்துவருகிறார்கள். விளங்கநினைப்பவன், புத்தன் இந்த திரைப்படம் தொடர்பான உங்கள் கருத்துகளையும் பதிவிடுங்கள்.
    • புதிய மின்சார சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்படும் மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான ஏற்பாடுகளை உள்ளடக்கிய புதிய மின்சார சட்டமூலம் அடுத்த இரண்டு வாரங்களில் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு, ஏப்ரல் இறுதி வாரத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பிலான முன்னேற்றத்தை ஆராயும் மீளாய்வுக் கூட்டத்தின் போது இது தொடர்பில் கலந்துரையாடியதாக அமைச்சர் X வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். சட்டமூலத்தை மீளாய்வு செய்த பின்னர், அதனை நடைமுறைப்படுத்துவதற்கான உறுதிப்பாடு கடந்த திங்கட்கிழமை சட்டமா அதிபரால் வழங்கப்பட்டது. அதனடிப்படையில், வர்த்தமானி பிரசுரிக்கப்பட்டதன் பின்னர் எந்தவொரு நபருக்கும் மீளாய்வு செய்வதற்கு குறைந்தபட்சம் இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்கப்படும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.   https://thinakkural.lk/article/297573
    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 03:40 PM   அதிகாரபகிர்வு உரிய முறையில் சரியான விதத்தில் இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என அரசியல் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்  வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பில் தூய்மையான அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்துவதற்காக மார்ச் 12 இயக்கம் ஏற்பாடு செய்திருந்த தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம் என்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, தூய்மையான ஒரு எதிர்காலத்தினை  தூய்மையான அரசியலிற்கான ஒரு தேவைப்பாட்டினை அரசிடமிருந்து மக்கள் நீண்டகாலமாக  எதிர்பார்க்கின்றனர். இலங்கைதொடர்ந்து பல வருடங்களாக பொருளாதார ரீதியில் பின்னடைவுகளை சந்தித்துவந்தாலும் 2022ம் ஆண்டு மிக மோசமான அடியை சந்தித்தது 2022 பொருளாதார பிரச்சினை என்பது வெறுமனே 2022 ம் ஆண்டு வந்தது அல்ல இது மிகநீண்டகாலமாக தீர்க்கவேண்டிய பிரச்சினைகளை தீர்க்காமல் அந்த பிரச்சினைகளை மையமாக வைத்து அதன் ஊடாக அரசியல் இலாபம் தேடிக்கொண்டிருந்தவர்களால் எடுத்துக்கொண்டுவரப்பட்டு பின்னர் அது ஒரு பூகம்பமாக வெடித்தது. அதுதான் நாங்கள் அனைவரும் எதிர்நோக்கிய மோசமான பொருளாதார  நெருக்கடி. அதன் பிற்பாடு நாங்கள் மீட்சியை அடைந்துவிட்டோம் என சிலர் கூறினாலும் கூட நாங்கள் உண்மையான மீட்சியை அடையவில்லை. சிறந்த ஒரு பொறிமுறை ஊடாக நாங்கள் அடையவேண்டிய இலக்குகள் இன்னமும் உள்ளன. சமத்துவம் என்ற வார்த்தையை வைத்து நாங்கள் இலங்கையின் ஒட்டுமொத்த  பிரச்சினையையும் அடையாளம் காணமுடியும். சமத்துவமற்ற ஜனநாயகத்தினால் நாங்கள் எந்தவொரு முன்னேற்றத்தையும் அடைந்துவிட முடியாது. இலங்கையில் இலவசக்கல்வி வழங்கப்படுகின்றது இந்த இலவசக்கல்வி ஊடாக தங்களுடைய இலக்கினை ஒரு பணக்கார மாணவன் அடைந்துகொள்ளும்;  தன்மையும் ஏழை மாணவன் அடைந்துகொள்ளும் முறைக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகின்றது. அடித்தட்டுமக்கள் இவ்வளவு சிரமங்களை எதிர்கொள்கின்றனர் ஏன் அவர்கள் இவ்வளவு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளவேண்டியுள்ளது என்பதை சற்றே சிந்தித்து பார்த்தால் சமத்துவமற்ற நிலையே இதற்கு காரணம் என்பது புலப்படும். வருமானசமத்துவம் இன்மை அதிகரித்துவருகின்றது செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாகின்றனர்  வறியவர்கள் மேலும் வறியவர்களாகின்றனர். இங்கு காணப்படுகின்ற ஜனநாயகத்தில் தமிழர்கள் முஸ்லீம்கள்  ஒருபோதும் அதிகாரம் செலுத்துவதில்லை. சிங்களவர்கள் கொண்டுவருகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் அதிகாரம் செலுத்துகின்றார்கள. நாங்கள் பங்காளிகள் இல்லையா என்ற கேள்வி  தமிழ் முஸ்லீம்கள் மத்தியில் காணப்படுகின்றது. வடக்குகிழக்கில் தமிழ் மக்களின் நிலங்கள் அடாத்தாக கைப்பற்றப்படுகின்றன இதற்கு பொலிஸார் துணைபோகின்றனர். இனங்களுக்கு இடையில் சமத்துவம் இன்மையே இதற்கு காரணம் மற்றைய சமூகங்களிற்கு அதிகாரங்கள் சென்றடையவில்லை. கொரோனா காலத்தில் முஸ்லீம்மக்களின் உடல்கள் எரியூட்டப்பட்டன அவர்கள் பழிவாங்கப்பட்டார்கள் இதற்கு யாராவது பொறுப்புக்கூறச்செய்யப்பட்டார்களா  சிறுபான்மை சமூகங்களின் இடங்களை பிடித்து  பௌத்த மக்களை கவர்ந்து நாயகர்களாக மாறி தேர்தல்களில் வெற்றிபெறுகின்றனர் ஆனால் அவர்களை வெற்றிபெறச்செய்தவர்களின் வாழ்க்கை மாற்றமடையாமல் வறுமையில் நீடிக்கின்றது. இந்த உணர்வு அரசியலை என் சகோதரசிங்கள மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். சரியான முறையில்  அதிகாரபகிர்வு இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை நீங்கள் நம்பவேண்டும். மீண்டும் மீண்டும் இந்த விடயங்களை  கூறி எங்களை எத்தனை காலமாக எங்களை ஏமாற்றப்போகின்றீர்கள். புரிந்துணர்வுதான் இந்த ஜனநாயகத்திற்கு மிகவும் அவசியமானது. https://www.virakesari.lk/article/179972
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.