Jump to content

"இறுதிப் போரில் விடுதலைப் புலிகள் வீழ வேண்டும் என்று நினைத்தேன்" - தமிழ் இயக்குநர் ஜூட்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nedukkalapoovan said:

கொழும்பில் குண்டுவெடிப்புகள் நடக்க முதல்.. கொழும்பில் தமிழர்கள் தாரில்.. ரயரில் எரிந்தார்களே. அப்போ எல்லாம் அங்குள்ள சிங்கள மக்கள் தமிழர்களை ஏன் காப்பாற்றத் தவறினார்கள்..??! புள்ளடி போட்டு ஏன் இனவாதிகளை மீண்டும் மீண்டும்.. தலைவர்கள் ஆக்கினார்கள்..??! 

 

 

நெடுக்கு ஐயா

83 கலவரத்தில் எத்தனை பேரை சிங்களவர்கள் பாதுகாத்தார்கள் தெரியுமா? என் அனுபவத்தில்  கண்ணால் கண்டது. இன்னும் அவர்கள் உயிருடன் இருக்கின்றார்கள். நீங்கள் புலிகளின் “Diehard” என்பதால் இவை உங்கள் கண்களுக்கு தெரிவதில்லை.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனபேருக்கு புலி இல்லாததுதான் இப்ப பிரச்சினை 

பயங்கர டெரர் டயர்  அக்டரா இருப்பார் போல ( நக்கி திரிகிறதுக்கு செக்கென்ன சிவலிங்கமென்ன)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, colomban said:

 

நெடுக்கு ஐயா

83 கலவரத்தில் எத்தனை பேரை சிங்களவர்கள் பாதுகாத்தார்கள் தெரியுமா? என் அனுபவத்தில்  கண்ணால் கண்டது. இன்னும் அவர்கள் உயிருடன் இருக்கின்றார்கள். நீங்கள் புலிகளின் “Diehard” என்பதால் இவை உங்கள் கண்களுக்கு தெரிவதில்லை.

 

இது ஆழமாக பார்க்க வேண்டிய ஒரு கருத்து 
மத்திய வங்கி கொண்டு வெடிப்பு ஒன்றுதான் பொதுமக்கள் பாதிக்க படலாம் 
என் தெரிந்தும் அப்போதைய கொழுப்பு புலனாய்வு பிரிவு செய்த ஒரே ஒரு தாக்குதல் 
புலிகளின் 35 வருட போராட்ட வரலாற்றில் எனபது நீங்கள் அறிந்து இருக்க கூடியது.
(84-85 காலத்தில் குமுதினி படகு கொலைக்கு பழிவாங்க புலேந்திரன் அம்மான் ஒரு சிங்கள 
கிராமத்தில் புகுந்து பொதுமக்களை பழிக்கு பழிவாங்கினார்கள். அதில் பங்குபற்றிய 22 புலிகளும் 
தலைமையால் தண்டிக்க பட்டு பனிஸ்மனில் இருந்தார்கள். திருமலை தற்காலிக தளபதியாக சஞ்சய் நியமிக்க பட்டார்) 

எவ்ளவோ நாட்கள் வேவுகள் செய்து. பல வேவு புலிகளை பலிகொடுத்து 
 தாக்குதல் காலம் குனியும்போது அதனால் மக்களுக்கு பாதிப்பு வரலாம் என்ற ஒரே காரணத்தால் 
தவிர்க்கப்பட்ட தாக்குதல் எத்தனையோ.

மத்திய வாங்கி தாக்குதல் தவிர்க்க முடியாமல் போனதன் காரணம் 
ஒன்று சிங்கள பொருளாதார இலக்கு .... இரண்டு காலை 7 மணிக்கும் மாலை 6 மணிக்கும் 
இடையில் மட்டுமே சிலிங்கோ வீதி அப்போது பொது பாவனைக்கு இருந்தது வார இறுதியில் கூட 
பாதுக்காப்பு என்று பூட்டியிருந்தது உங்களுக்கும் தெரியும். தாக்குதல் இந்த நேரத்துக்குள் மட்டுமே சாத்தியம்.
தவிர்த்து இருக்கலாம் என்பது என்னுடைய தனிப்பட்ட எண்ணமும் 
35 வருட போரில்  வீழ்ந்த ஒரு கறுப்பு புள்ளி. 

பொதுமக்களின் இறப்பை ஒருபோதும் நாம் நியப்படுத்த கூடாது 
என்பதில் எனக்கும் உங்களைப்போல வேறு கருத்து இல்லை. 

தராசின் இரண்டு பக்கமும் பார்த்தால் இலக்கு பொதுமக்கள் இல்லை என்பதும் உங்களுக்கும் தெரியும் 
பொதுமக்கள் இறந்தார்கள் என்ற உண்மையும் மறுக்க முடியாதது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரியான பார்வை மருது,

பொதுமக்கள் கொலைகள் தடுக்கப்பட்டிருக்கலாம். எமது போராட்டத்தின் நியாயத்தை பலவீனப்படுத்தி, எதிரியின் எம்மீதான ஆக்கிரமிப்பினை வெளியுலகில் நியாயப்படுத்த அவர்களுக்குக் கிடைத்த  ஒரு சந்தர்ப்பம்  என்றுதான் இத்தாக்குதல்களைப் பார்க்கிறேன்.

உங்கள் கருத்திற்கு நன்றி

 

 

Link to comment
Share on other sites

சிலர் ராஜினி திரணகம விஜிதரன்செல்வி என்ற பெயர்களை சொல்லி வாழ்நாழ் முழுவதும் குடம் குடமாக கண்ணீர் விட்டுக்கொண்டே இருப்பார்கள். அது வர்க்க கண்ணீர்.  இவ்வாறு கண்ணீர் விடுபவர்களால் சிங்களம் செய்த பல நூறு படுகொலைகளுக்காக கண்ணீர் விட முடியாது. அது குமுதினி படகுமுதல் கிழாலியில் வெட்டினாலும் சரி கிழக்கில் வந்தாறுமுலை கொக்கட்டிசோலை சத்துருகொண்டான் படுகொலையானாலும் சரி வடக்கில் நவாலி குமுழமுனை படுகொலைகள் என எத்தனை நூறு கொடூரங்களை சிங்களம் செய்தபோதும் அதில் குஞ்சு குருமன் எல்லாம் வதைபட்ட போதும் கூட   வர்க்கக் கண்ணீர் என்பது குறிப்பிட்ட ஒரு காரணத்தோடுதான் சுரக்கும்.  

தன்னினத்துக்குள் சாதிய வர்க்கமாக இரைதேடி பழக்கப்பட்ட எம்மினத்துக்கு இந்த வரக்க கண்ணீர் ஆச்சரியமானதில்லை.  மேற்கண்ட கருத்துக்களால் படுகொலையில் ஈடுபடுபட்டவர்களையும் உட்பட்டவர்களையும் நியாயப்படுத்துவது என்று பொருள் கிடையாது ஆனால் மனிதாபிமானத்திலும் அறத்திலும் ஏற்றதாழ்வுள்ள  இந்த வரக்க கண்ணீரில்தான் மையவாதமும் பேரினவாதமும் ஐக்கியமாகின்றது. 

இனி ஒரு ஆயுதப்போராட்டத்திற்கு வாய்ப்பு மிக குறைவு  இருந்தாலும் பல காலங்களுக்குப் பிறகு மீள ஒரு ஆயுதப்போராட்டம் ஆரம்பிக்குமானால் கடந்த போராட்டத்தில் நடந்ததை விட பத்து மடங்கு அதிகமான கொலைகள் எமக்குள் நடக்கும். சாதி மத வர்க்க பிரதேசவாதப் பிழவுகள் உள்ளதும் பேரினவாதத்தை அண்டிப் பிழைக்கும் எமது சமூகத்தில் இவை தவிர்க்க முடியாமல் நிகழும். 

 

Link to comment
Share on other sites

On 9/19/2018 at 8:57 AM, colomban said:

 

நெடுக்கு ஐயா

83 கலவரத்தில் எத்தனை பேரை சிங்களவர்கள் பாதுகாத்தார்கள் தெரியுமா? என் அனுபவத்தில்  கண்ணால் கண்டது. இன்னும் அவர்கள் உயிருடன் இருக்கின்றார்கள். நீங்கள் புலிகளின் “Diehard” என்பதால் இவை உங்கள் கண்களுக்கு தெரிவதில்லை.

 

அப்படி காப்பாற்றியே இத்தனை லட்சம் தமிழ் மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்றால் எத்தனை கொடிய கொலைகாரர்கள் தெற்கில் வாழ்கிறார்கள் என்பது தெரியும்.

Link to comment
Share on other sites

On ‎9‎/‎20‎/‎2018 at 4:05 AM, சண்டமாருதன் said:

தன்னினத்துக்குள் சாதிய வர்க்கமாக இரைதேடி பழக்கப்பட்ட எம்மினத்துக்கு இந்த வரக்க கண்ணீர் ஆச்சரியமானதில்லை. 

தமிழர்கள் புலம்பெயர்ந்த மேலை நாடுகளில் இந்தச் சாதியம் அவர்களிடம் ஒரு தலைமுறையோடு அழியத்தொடங்கியிருப்பதைக் காணலாம். நிலத்திலும் அந்த நிகழ்வு தொடங்கி இருந்தாலும் அது நிறைவேற பல தலைமுறைகள் செல்லும் எனத் தெரிகிறது.

Link to comment
Share on other sites

On 9/19/2018 at 2:46 AM, colomban said:

இங்கு இவர் மக்கள் இறந்ததாலும் பரவாயில்லை என கூறியது மிகவும் தவறு. மனசாட்சியுள்ள எவனும் இவ்வாறு கூறமாட்டான். 

அதேபோல் புலிகளும் அதிபர் ஆனந்தராஜாவை சுட்டுக்கொன்றது, அரசாங்கத்தை பலிவாங்குகின்றோம் என  மத்திய வங்கியில் குண்டு வைத்து பல அப்பாவி உயிர்களை பலி எடுத்தது என பல உதாரணங்கள் தரலாம். (இக்குண்டு வெடிப்பில் எனக்கு Audit &  Assurance பாடம் படிப்பித்த ஒர் அப்பாவி சிங்கள ஆசிரியர் கொல்லப்பட்டார்.)

ஆகவே இரு பக்கத்தையும் நாம் பார்க்க வேண்டும்.

எனது தந்தைக்கு கொரனவிலும் தாயாருக்கு இன்னுமொரு தெற்கு நகரிலும்  வாள் வெட்டுக்களுடன் குறை உயிரும் குற்றுயிருமாக கப்பலில் யாழ்ப்பாணம்  திரும்பினர். நீஙகள் கொழும்பு தமிழர் என வீரம் பேசுவது எப்படி நியாயம் ஆகும்? உங்களின் அனுதாபங்கள் எத்தகையது??

பல இனப்படுகொலைகளின் சேகரிப்பு அப்பாவி தமிழ் இளைஞர்களை ஆயுதம் தூக்க வைத்த ஆண்டுகள் பல பல . உங்களுக்கு விளங்காதது எப்படி பல மேற்கு நாட்டவர்களுக்கும் ஏன் சில சிங்கள மக்களுக்கும் விளங்கி உள்ளது??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, nunavilan said:

எனது தந்தைக்கு கொரனவிலும் தாயாருக்கு இன்னுமொரு தெற்கு நகரிலும்  வாள் வெட்டுக்களுடன் குறை உயிரும் குற்றுயிருமாக கப்பலில் யாழ்ப்பாணம்  திரும்பினர். நீஙகள் கொழும்பு தமிழர் என வீரம் பேசுவது எப்படி நியாயம் ஆகும்?

யார் இப்பொழுது வீரம் பேசினார்கள்? எங்கையா வீரம் பேசியுள்ளேன்?

உங்களின் அனுதாபங்கள் எத்தகையது??

சகமனிதன், மனிதத்தன்மையுள்ளவன் எனும் தகமையில் கூறுகின்றேன். என்னப்பா இது அனுதாபம் தெரிவிக்க கூடாதா? 

பல இனப்படுகொலைகளின் சேகரிப்பு அப்பாவி தமிழ் இளைஞர்களை ஆயுதம் தூக்க வைத்த ஆண்டுகள் பல பல . உங்களுக்கு விளங்காதது எப்படி பல மேற்கு நாட்டவர்களுக்கும் ஏன் சில சிங்கள மக்களுக்கும் விளங்கி உள்ளது??

யாரிந்த "அப்பாவி தமிழ் இளைஞர்கள்"?.இரத்தப்பொட்டு வைத்து இவர்களை உசுப்பேற்றி ஆயுதம் தூக்க வைத்தது உங்கள் தமிழ் தலைவர்களே.  இது சிங்களவனுக்கு, சர்வதேசத்துக்கு எல்லோருக்கும் தெரியும்? சரி ஆயுதம்தான் தூக்கினீங்கள், ஒரு நோக்கத்திற்காக எல்லோரும் ஏன் ஒன்றினையவில்லை? 30 க்கு மேட்பட்ட இயக்கங்கள் எதற்கு?
இப்படியான அப்பாவி இளைஞ்சர்களை போர்குற்றம் வரை
கொண்டு சென்றது யார்? 

(புலிகளும் போர்குற்றம் புரிந்துள்ளார்கள் என சர்வதேசம் கூறுகின்றதே?)

 

இப்படியான கேள்விகள் நான் கேட்டால் சிங்கள கைகூலி? தமிழின விரோதி? என்னையா இது?

நான் மனிதன். எங்கு அனியாயம் நடந்தாலும் தட்டிக்கேட்பேன். மேல மருங்கேணி மிகத்தெளிவாக அருமையாக மனப்பூர்வமாக பதிலளித்துள்ளார். 

நீங்கள் யாழில் ஓர் moderator இருந்துகொண்டு இப்படியான கேள்விகள் கேட்பது ஆச்சரியமாக இருக்கின்றது.

எந்த நாணயத்திற்கும் இருபக்கம் உண்டு. இருபக்கத்தையும் பார்க்க வேண்டும். (Balance view) 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/19/2018 at 12:43 AM, poet said:

மருதங்கேணி அவர்களுக்கு "செல்வியை ***** 
புலிகள் விட்டு விட்டு கொண்டே வந்தார்கள் ..."  தயவு செய்து பயங்கர வாத தன்மைகொண்டதும் சட்டரீதியாக தண்டனைகுரிய குற்றமும் அபத்தமானதுமான மேற்படி வார்த்தைகளை திரும்ப பெறுங்கள். விடுதலை போராட்டத்தை நாங்களும் ஆதரித்தோம். ஆனால் தவறுகளை தட்டிக்கேட்டோம். செல்வி தொடர்பாக முதலில் பரீசில் லோறன்ஸ் திலகர் ஊடாகவும் பின்னர் பலதவை வன்னியில் நேரடியாகவும் என் கண்டனத்தை தெரிவித்திருந்தேன். பல்கலைக் கழக மாணவர்களுக்கு எதிராக கிட்டு செய்த விடுதலைக்கு புறம்பான கொலைகளில் செல்வி கொலையும் அடக்கம்.  செல்விக்கு துரோகி முத்திரை கூத்தப்படக்கூடாது என்பதில் அக்கறையாக இருந்தேன்.  இறுதியில் விசாரனையின்போது இறந்துவிட்டதாக தெரிவிக்கபட்டது. செல்வியின் கொலையை புலிகள் இயக்கம்கூட பகிரங்கமாக நியாயப்படுத்தவில்லை. 

## ஒருமுறை டக்ளஸ் தேவானந்தா வெளிநாட்டிற்கு சென்றிருந்த சமயம், மாதாந்த அவசரகால சட்டநீடிப்பு நேரத்தில் சந்திரிக்கா அரசிற்கு அன்று மிகவும் அவசியமாக இருந்த, 20 ஆயிரம் ஓட்டுக்களால் 9 பாராளுமன்ற உறுப்பினர்களைக்கொண்டிருந்த ஈபிடிபியின் பாராளுமன்ற உறுப்பினர்கள்களை வழிநடாத்தும் பொறுப்பு அற்புதனிடம் வந்தது. அம்மாத வாக்கெடுப்பில் அவசரகாலச் சட்டநீடிப்பை எதிர்த்து வாக்களிப்பது என்று அற்புதன் முடிவெடுத்தமையை டக்ளஸிற்கு விசுவாசமான உறுப்பினர்கள் டக்ளஸிற்கு அறிவித்ததையடுத்து டக்ளஸ் அவசரமாக வெளிநாட்டுப் பயணத்தை இடைநிறுத்தி நாடுதிரும்பி அவசரகாலச் சட்ட நீடிப்பு பாராளுமன்றில் நவெற்றிபெறுவதை உறுதிப்படுத்தியிருந்தார்.

புலிகளை விமர்சிப்பதாகத் தொடங்கிய அல்பிரட் துரையப்பா தொடக்கம் காமினிவரையான அற்புதனின் தொடர், போகப்போக உண்மையை உணரவைத்ததால் எதார்த்தத்தை நோக்கி அவரை நகரவைத்தது.

அவ்வாறான ஒரு சூழலில் அற்புதன் எழுதியது ராஜினி திரணகமவைச் சுட்டது ஈபிஆர்ல்வ் இன் மண்டையன் குழுவேயன்றி புலிகள் அல்ல என்பதே."

நண்பன் இனமொன்றின் குரல் அவர்களின் கீழ்வரும் இப்பதிவு அந்நிகழ்வை ஆராய்கின்றது.

###
இன்று ரஜினி திரணகம நினைவு நாள் 
இவரின் நினைவு நாளில் வெளிநாடுகளில் பதுங்கி இருக்கும் EPRLF கும்பலின் எச்சங்கள் தலித் அமைப்பு என்றும் மனித உரிமை குழுக்கள் இலக்கிய குழுக்கள் என பல பெயர்களில் மனித உரிமை பாடம் எடுப்பதும் அவரை புத்தியீவி என கதை எழுதுவதும் தொடர்ந்து நடக்குகிறது. 2009 களுக்கு பின்னால் இவை அதிகரித்து வருகிறது 
உண்மையில் தனிப்பட்ட காரணம் உடபட இரண்டு காரணங்களை முன் வைத்து ரஜினி திரணகம கொல்லப்பட்டார் .
முறிந்த பனை நூல் புலிகளை விமரிசித்து இருந்தாலும் இந்தியா அமைதிப்படை மற்றும் அதனோடு சேர்ந்து இயங்கி வடக்கு கிழக்கில் பத்மநாபா தலைமையில் கொலை களவு கடத்தல் பாலியல் வல்லுறவு என வெறியாட்டம் ஆடிய EPRLF ஆயுத கும்பலை பற்றியும் பேசி இருந்தது . இந்தியா ஆமி கொடூரங்கள் இந்த புத்தகங்கள் வழியாக வெளிவருவதை இந்தியா ஆமியின் ஒரு சாரார் விரும்பவில்லை .இந்தியா ஆமியின் சார்பில் கொலை செய்வதற்கான திட்டத்தை இந்தியா ஆமி தளபதிகளில் ஒருவரான கேணல் சசிகுமார் EPRLF அமைப்பின் ரஃபிக் என்பவரோடு சேர்ந்து திட்டமிட்டார் . இந்த திட்டத்தின் படி EPRLF அமைப்பின் கார்த்திக் மற்றும் தாமஸ் ஆகிய இருவரும் இந்த கொலையை செய்தனர் .திட்டத்தின் படி கொலை விழுந்த மறு கணமே புலிகள் மீது குற்றம் சுமத்தி EPRLF அறிக்கை வெளியிட்டது ..அதை மக்கள் மத்தியில் இந்தியா ஆமி ஏற்பாட்டில் EPRLF கொண்டு சென்றது ..புலிகள் இயக்கம் மணலாறு காட்டுக்குள் ஒடுக்கப்பட்ட நிலையில் இதை EPRLF கும்பல் வேகமாக செய்தது .இந்தியா படை வெளியேறிய பின்னர் கொலை செய்த தாமஸ் டக்ளஸ் கும்பலில் செயல்பட்டு வந்தார் .கார்த்திக் சில காலம் சுரேஷ் பிரம்மச்சந்திரனின் உதவியாளராக இயங்கி பின்னர் வெளிநாடு சென்று விட்டார் .பிற்காலத்தில் தாமஸ் திருகோணமலை பகுதியில் தனிப்பட்ட தகராறு ஒன்றில் வெட்டி கொல்லப்பட்டார் 
இந்த கொலை திட்டத்தை செய்லபடுத்திய கேணல் சசிகுமார் என்கிற இந்தியா ஆமி அதிகாரி கொலை நடந்த சில நாளில் மணியம்தோட்ட பகுதியில் வைத்து புலிகளால் கொல்லப்பட்டார் . இந்த கொலையை பகிரங்கமாக அம்பலப்படுத்திய EPRLF கும்பலின் முன்னை நாள் உறுப்பினரும் டக்ளஸ் குழுவை சேர்ந்தவருமான அற்புதனை இலங்கை ராணுவ ஏற்பாட்டில் டக்லஸ் மற்றும் சந்திரகுமார் (கிளிநொச்சி) சுட்டு கொன்றனர் .இந்த கொலையை சந்திரகுமார் நெறிப்படுத்தி இருந்தார். இந்த கொலையை தொடர்ந்து அற்புதனின் மனைவி மற்றும் பிள்ளைகளை டக்ளஸ் கும்பல் கொடூரமாக ஏமாற்றி இலங்கையில் இருந்து விரட்டி விட்டு தினமுரசு பத்திரிகையை அபகரித்தனர் .இதற்க்கு இன்றும் சட்டத்தரணியாக தொழில் புரியும் CV Vivekananthan சாட்சியாக இருக்கிறார்

PS 1: இந்த EPRLF கும்பல் இந்தியா ஆமி காலத்தில் வடக்கில் பிரபல ஆசிரியர் கிருசானந்தன் கிழக்கில் வண பிதா சந்திரா அடிகள் என ஆயிரக்கணக்கான அப்பாவிகளை வேட்டையாடியது .இதனால் தான் இந்தியா ஆமியோடு சேர்ந்து கும்பல் இந்தியா தப்பி ஓடியது. 2009 க்கு பின்னர் மீண்டும் இந்தியா ஆமி அனுசரணையில் வரதராஜ பெருமாள் தரையிறக்க பட்டு இருக்கிறார் .இந்த கும்பலின் எச்சங்கள் இந்தியா புலனாய்வு துறையின் ஏற்பாட்டில் இலக்கிய அமைப்புகள் , தலித் அமைப்புகள் என பல பெயர்களில் மீண்டும் இயக்க முயற்சிக்கப்படுகிறது . கிளிநொச்சியில் புலிகளின் சஞ்சிகை ஒன்றில் வேலை செய்த கருணாகரன் என்கிற ஒரு நபர் இந்த குழுக்களை இலக்கிய கூட்டங்கள் என்கிற பெயரில் ஒருங்கிணைக்கும் முகவராக செய்லபாடுகிறார்

PS 2: புலிகள் பெயரில் இந்தியா புலனாய்வு அமைப்பு கொலைகளை செய்ய தொடங்கியது புலிகள் டெலோ மோதலுக்கு முற்பட்ட காலமாகும் . நாடாளமன்ற உறுப்பினர்கள் தர்மலிங்கம் (சித்ததார்த்தன் தந்தை ) ஆலாலசுந்திரம் ஆகியோரை டெலோ புலிகள் பெயரில் கொலை செய்து இருந்தது ..பின்னர் டெலோ அமைப்பு மோதலுக்கு முற்பட்ட காலம் ஒன்றில் புலிகள் இதை அம்பலப்படுத்தி இருந்தனர் .பாராளமன்ற உறுப்பினர் சித்ததார்த்தன் இதற்க்கு இன்றும் சாட்சி

டக்ளஸ் கும்பல் தன்னுடைய கும்பலை சேர்ந்த மகேஸ்வரி வேலாயுதத்தை கொலை செய்ததும் இப்படியான ஏற்பாடு தான் ..ஆனால் இந்த கொலை தனிப்பட்ட காரணம் ஒன்றுக்காக நடத்தப்பட்டது
###
குறிப்பு ,பொருளியல் ஆசான் கிருஷ்ணகாந்தன் ஆசிரியரையும் இந்த கும்பலே கொலை செய்தது 
நன்றி 
ஈழபபிரியன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் கொல்லப்பட்டதில் மகிழ்ந்தவரின் படம் யாழிலா?: வலுக்கிறது எதிர்ப்பு!

October 2, 2018
Jude-Ratnam.jpg

விடுதலைப்புலிகளையும் தமிழ் மக்களையும் கொச்சைப்படுத்தி எடுக்கப்பட்ட சினிமா ஒன்றை யாழில் திரையிடுவதற்கு எதிராக பல தரப்பிலிருந்தும் எதிர்ப்பு எழுந்துள்ளது. தமிழர்களின் உரிமைப் போராட்டத்திற்கு எதிராக தொடர்ந்து பேசி வந்த ஜூட் ரத்தினம் என்ற நபரால் இயக்கப்பட்ட DemonsIn Paradise என்ற திரைப்படத்தை திரையிடுவதற்கே எதிர்ப்பு எழுந்துள்ளது.

தமிழ் மக்களின் போராட்டத்தை உலகளவில் கொச்சைப்படுத்துவதையே நோக்கமாக கொண்ட கருத்து வன்முறையை வளர்க்கும் இந்தவகையானவர்களிற்கு இடமளிக்க கூடாதென பரவலான எதிர்ப்பு எழ ஆரம்பித்துள்ளது.

 

யாழில் நடக்கவுள்ள திரைப்படவிழாவில் இந்த திரைப்படத்தையும் காட்சிப்படுத்த ஏற்பாட்டாளர்கள் திட்டமிட்டிருந்தனர். சிங்கள பெண் திரைப்பட இயக்குனர் ஒருவரே, அந்த படத்தை திரையிட வேண்டுமென ஒற்றைக்காலில் நின்றார். எனினும், நிகழ்ச்சி ஒழுங்கமைப்புகுழுவில் இருந்தவர்கள் அதற்கு சம்மதிக்காமல், அந்த படத்தை நிகழ்ச்சி நிரலில் இருந்து அகற்றியுள்ளது.

எனினும், தமிழர்களின் உரிமைப் போராட்டத்திற்கு தொடர்ந்து எதிராக இயங்கி வரும் பல தனிநபர்கள், இந்த படத்தை திரையிட்டு பேச்சுரிமை காப்பாற்றப்பட வேண்டுமென கோசமெழுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.

முள்ளிவாய்க்காலில் எப்படியாவது யுத்தம் முடிக்கப்பட்டு விடுதலைப்புலிகள் அழிக்கப்பட வேண்டுமென தான் விரும்பியதாக திரைப்படத்தை இயக்கிய நபர் பகிரங்கமாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

http://www.pagetamil.com/17733/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முடிந்தவரையில் இத்திரைப்படம் யாழில் திரையிடப்படுவது தடுக்கப்படல் வேண்டும்.

தமிழர்களின் இனக்கொலையில் அகமகிழும் ஒரு பிறவியின் படைப்பை தமிழர்கள் ஒட்டுமொத்தமாகப் புறக்கணிக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ragunathan said:

முடிந்தவரையில் இத்திரைப்படம் யாழில் திரையிடப்படுவது தடுக்கப்படல் வேண்டும்.

தமிழர்களின் இனக்கொலையில் அகமகிழும் ஒரு பிறவியின் படைப்பை தமிழர்கள் ஒட்டுமொத்தமாகப் புறக்கணிக்க வேண்டும்.

படம் திரையிடப்படவில்லை.

குய்யோ, முறையோ என்று கொழும்பு பத்திரிகைகள் எழுதுகின்றன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் தடுக்கப்பட்ட திரைப்படத்தின் பின்னணியில் இருந்தவர் மஹிந்தவின் ஆலோசகர்!

October 3, 2018
Jude-Ratnam.jpg

யாழில் திரையிடுவதிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள Demons in Paradise என்ற திரைப்படம் குறித்த பல அதிர்ச்சி தகவல்களை தமிழ்பக்கம் திரட்டியுள்ளது.

யாழில் இடம்பெறும் சர்வதேச திரைப்பட விழாவில் கனடாவில் வசிக்கும் ஜூட் ரட்ணம் என்ற நபர் இயக்கிய Demons in Paradise திரைப்படத்தை திரையிடுவற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. “பொதுமக்கள் கொல்லப்பட்டாலும் சரி, விடுதலைப்புலிகள் அழிக்கப்பட வேண்டும் என்ற மனநிலையில் இருந்தோம்“ என அவர் பிபிசியில் நேர்காணல் வழங்கியிருந்தார்.

Demons in Paradise படம் சில நாடுகளில் ஏற்கனவே திரையிடப்பட்டிருந்தது அப்போதெல்லாம் அது யாரையும் ஈர்க்கவோ, கவனத்தை கோரவோ செய்யவில்லை. இதையடுத்து, பிபிசியில் அப்படியான பரபரப்பு கருத்தை கூறி, திரைப்படத்தை சர்ச்சையானதாக மாற்ற ஜூட் ரட்ணம் முயன்றதாக கூறப்படுகிறது.

ஈ.என்.டி.எல்.எவ் அமைப்பை சேர்ந்த ஒருவர் புலிகள், இந்திய ராணுவத்தை கடந்து எப்படி தப்பி பாதுகாப்பாக வெளியேறுகிறார் என்பதே திரைப்படம்.

இந்த படம் உருவாக்கப்படுவதில் மனித உரிமைகளிற்கான பல்கலைகழக ஆசிரியர் சங்கம் என்ற தீவிர புலியெதிர்ப்பு கும்பல் பின்னணியில் இருந்துள்ளது. இந்த கும்பலை சேர்ந்த ராஜன் கூல், படம் திரையிடப்பட வேண்டுமென குத்திமுறிவது கவனிக்கத்தக்கது.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு யாழில் நடைபெற்றபோது, அதற்கான முழு ஏற்பாட்டையும் செய்திருந்தவர் மனோரஞ்சன். விடுதலைப்புலிகள் எதிர்ப்பாளராக நீண்டகாலம் அறியப்பட்ட இவர், முன்னாள் ஜனாதிபதிகள் சந்திரிகா, மஹிந்த ராஜபக்ச ஆகியோரின் ஆலோசகராகவும் செயற்பட்டவர்.

 

http://www.pagetamil.com/17746/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படத்தை இயக்கிய ரட்ணம் என்பவர் மலையகத் தமிழ்ச் சமூகத்தைச் சார்ந்தவர். கனடாவில் வசித்து வருபவர்.

இவருக்கும் மனோரஞ்சன் என்பவருக்குமிடையே தொடர்பிருக்கிறது.

மனோரஞ்சன் என்பவரது பெயர் சந்திரிக்கா காலத்தில் அடிக்கடி உச்சரிக்கப்பட்ட பெயர். மனிதவுரிமைகளுக்கான யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் அமைப்பினரோடு தொடர்புடையவர் என்று பேசப்பட்டது. இறுதியாக லேக் ஹவுஸ் தமிழ்ப் பத்திரிக்கையொன்றின் ஆசிரியராகவோ அல்லது, பத்தி எழுத்தாளராகவோ இருந்திருக்கிறார்.

ஆக, மகிந்தவினால் யாழ் பல்கலைக் கழகத்துக்குள் மீண்டும் கொண்டுவரப்பட்ட ராஜன் கூழ், மனோரஞ்சன் மற்றும் இன்னும் கொழும்பு மேல்த்தட்டிவர்க்க "டமிலர்கள்", ஜனநாயக வேடமிட்டு வலம் வரும் சிங்கள இனவாதிகளின் அனுசரணையுடந்தான் இப்படம் இயக்கப்பட்டு இப்போது யாழ்ப்பாணத்திலும் திரையிடப்பட எத்தனிக்கிறது.

Link to comment
Share on other sites

On 9/24/2018 at 1:28 AM, colomban said:

 

Quote

 

 

 

யார் இப்பொழுது வீரம் பேசினார்கள்? எங்கையா வீரம் பேசியுள்ளேன்?

 

நான்  எனது குடும்பம் சிங்கள காடையர்களால் சின்னா பின்னாமாக்கப்பட்டது என கூறுகிறேன். நீங்களோ சிங்கள மக்களால் தமிழ் மக்கள் காக்கப்பட்டார்கள் என்கிறீர்கள்.எப்படி இனவாத முஸ்லிம்களால் இனவாத கருத்தை கக்கும் தளத்தில் இருந்து உங்களால் கருத்துக்களை இணைக்க முடியும் என சொல்ல முடியுமா??

Quote

 

உங்களின் அனுதாபங்கள் எத்தகையது??

சகமனிதன், மனிதத்தன்மையுள்ளவன் எனும் தகமையில் கூறுகின்றேன். என்னப்பா இது அனுதாபம் தெரிவிக்க கூடாதா? 

 

எப்படி இனவாத முஸ்லிம்களின் தளத்தில் இருந்து கருத்தை இணைத்து  அனுதாபம் தேட முனைந்தீர்கள் அதுவும் ஒரு கொழும்பு தமிழராக நீங்கள் வித்தியாசமாக எல்லாவற்றையும் அணுகுபவராக உள்ள போதும்.???

 

Quote

 

யாரிந்த "அப்பாவி தமிழ் இளைஞர்கள்"?.இரத்தப்பொட்டு வைத்து இவர்களை உசுப்பேற்றி ஆயுதம் தூக்க வைத்தது உங்கள் தமிழ் தலைவர்களே.  இது சிங்களவனுக்கு, சர்வதேசத்துக்கு எல்லோருக்கும் தெரியும்? சரி ஆயுதம்தான் தூக்கினீங்கள், ஒரு நோக்கத்திற்காக எல்லோரும் ஏன் ஒன்றினையவில்லை? 30 க்கு மேட்பட்ட இயக்கங்கள் எதற்கு?
இப்படியான அப்பாவி இளைஞ்சர்களை போர்குற்றம் வரை
கொண்டு சென்றது யார்? 

(புலிகளும் போர்குற்றம் புரிந்துள்ளார்கள் என சர்வதேசம் கூறுகின்றதே?)

 

இரத்தபொட்டு வைத்தது கொழும்பு தமிழர்களுக்கு சும்மா நகைச்சுவையாக (எனது பார்வையில் நீங்கள் தமிழர் அல்ல அல்ல) இருக்கலாம். 400 க்கும்  360 எடுத்தும் பல்கலைகளகம் போகமுடியாதது எத்தகைய வாதம் என வெளிநாடுகளுக்கு வந்த போது தான் தெரிந்தது .
ஒரு உதைப்பந்தாட்ட குழு வென்றால் ஒருவரை ஒருவர் பாராட்டுவர். தோற்றால் ஒருவரை ஒருவர் விரல் நீட்டுவர். உலக நியதி.  
பலஸ்தீனத்திலும் பல இயக்கங்கள் உருவாகி இருந்தன. பில்லியன் முஸ்லிம்களினால் ஆனாப்பட்ட வெள்ளைகளின் காலடி தூசை ஏன் தொட முடியவில்லை என தேடுங்கள்??

Quote

புலிகளும் போர்குற்றம் புரிந்துள்ளார்கள் என சர்வதேசம் கூறுகின்றதே?)

அப்படியா சொல்லவே இல்லை. சில புலிகளே எஞ்சி உள்ளனர். ஏன் பத்து வருடங்களாக பயந்த சிங்கள பூச்சாண்டிகள் அஞ்ச வேண்டும்?  யாரும் தெற்கில் மனிதர்களாக சிந்திக்க மாட்டார்களா??  இல்லை அறிவு மத்திமமா?? 

சிரியாவில் அமெரிக்கா போட்ட குண்டுகள் போர்க்குற்றமா இல்லையா என கூறுங்கள்??

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • வயதைப் பார்த்தால் வேலை செய்பவர்கள் போல தெரியலை.
    • @nunavilan என்ன‌ அண்ணா க‌ள‌த்தில் குதிக்கிற‌ ஜ‌டியா இல்லையா இன்னும் சில‌ ம‌ணி நேர‌ம் தான் இருக்கு🙏🥰...................................
    • @நீர்வேலியான், உங்கள் பதில்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன😀 வெற்றிபெற வாழ்த்துக்கள்😃 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.