Jump to content

சீன கடன்­பொ­றியும், நவ கால­னித்­து­வமும்


Recommended Posts

சீன கடன்­பொ­றியும், நவ கால­னித்­து­வமும்

SAMAKALAM150918-PG03-R1Page1Image0002-6936ca0cc8ff3630d4a0aef2444d66fd4500667c.jpg

 

ஒரு ஊர். அதி­லொரு செல்­வந்தர். தமது சுய முயற்­சியில் சமீ­பத்தில் பணக்­கா­ர­ரான செல்­வந்தர்.

இந்த செல்­வந்தர் ஊரின் ஒரு கோடியில் வசிக்­கிறார். ஆற்றைத் தாண்டி மறு­கோ­டியில் சில வறிய குடும்­பங்கள்.

வறிய குடும்­பங்­க­ளுக்கு செல்­வந்தர் வாரி வழங்­கு­கிறார். அந்தக் குடும்­பங்­களின் தேவை­களை நிறை­வேற்­று­கிறார்.நான் வளர்ந்து விட்டேன். உங்­க­ளிடம் குறைகள் இருக்­கின்­றன. நான் உதவி செய்து உங்கள் குறைகள் தீர்ந்தால், நாம் வள­ரலாம். ஊரும் பயன் பெறலாம் என்­கிறார், செல்­வந்தர்.

செல்­வந்­தரின் வார்த்­தை­களை வறிய குடும்­பங்கள் நம்­பு­கின்­றன. அவ­ரிடம் இருந்து வாங்­கு­கின்­றன. தமக்குத் தரப்­ப­டு­வதை தாம் திருப்பிச் செலுத்த வேண்டும் என்ற பிரக்ஞை அவற்­றுக்கு இல்லை. தம்மால் திருப்பிச் செலுத்த முடி­யாத அள­விற்கு தாம் வாங்­கு­கிறோம் என்ற உணர்வும் கிடை­யாது.

இந்த செல்­வந்­த­ருக்கு ஊரில் பகை­யா­ளிகள். செல்­வாக்கு இழந்த பகை­யா­ளி­களின் எண்­ணிக்கை அதிகம். அந்தப் பகை­யா­ளிகள் வறிய குடும்­பங்­களை எச்­ச­ரிக்­கின்­றனர். இங்கே பார், இந்த பணக்­காரன் உனக்கு நல்ல நோக்­கத்­துடன் தர­வில்லை. உன்னை கடன் பொறியில் சிக்க வைக்­கிறான், என்று எச்­ச­ரிக்கை விடுக்­கின்­றனர்.

ஒட்­டு­மொத்த ஊரும் பணக்­கா­ரனைப் பார்த்து கேட்­கி­றது: நீ நல்­ல­வனா, கெட்­ட­வனா? நீ உத­வு­கி­றாயா, உத­வி­யென்ற போர்­வையில் எம்மை ஏமாற்­று­கி­றாயா? செல்­வந்தன் பதில் அளிக்­கிறான். நான் நல்­லவன் தான் என்­கிறான். தனது உத­வியின் மூலம் வறிய குடும்­பங்கள் வளர்ச்சி பெறும்­போது தம்மைப் பற்றி அறி­வார்கள் என்று கூறு­கிறான்.

இது இன்­றைய அர­சியல் உலகின் தலை­யாய பிரச்சி­னை­யொன்றை விப­ரிக்கும் உவ­மானம். இதில் சீனா செல்­வந்தர் என்றால், சீனா­விடம் இருந்து உதவி பெறும் ஆசிய, ஆபி­ரிக்க நாடு­களை வறிய குடும்­பங்­க­ளாகக் கொள்­ளலாம். இந்­நா­டு­க­ளுக்கு சீனா வழங்கும் உத­விகள் கடன்­பொ­றியா, அபி­வி­ருத்தி உத­வியா என்­பது முதன்மைக் கேள்வி.

சீனா என்ற செல்­வந்­த­னிடம் இலட்­சியத் திட்டம் உள்­ளது. அதனை Belt and Road Initiative என்­பார்கள். சுருக்­க­மாகச் சொன்னால் BRI. இது பண்­டைய காலத்தில் கிழக்­கையும் மேற்­கையும் இணைத்து, வர்த்­த­கத்தை இல­கு­வாக்­கிய பட்­டுப்­பாதைத் திட்­டத்தின் புதிய வடி­வ­மாகும்.

சீனாவின் பிர­சித்தி பெற்ற பட்டு உற்­பத்­தி­களை தென்­மேற்கில் ஐரோப்பா வரை­யிலும், தென்­கி­ழக்கில் ஆபி­ரிக்கா வரை­யிலும் கொண்டு செல்­வ­தற்­கான பாதை. அது ஆசிய கண்­டத்தின் பல நாடு­களை ஊட­றுத்துச் செல்லும் வீதி வலைப்­பின்­ன­லையும், இந்து சமுத்­தி­ரத்தைக் கடந்து செல்லும் கடல் மார்க்­கங்­க­ளையும் உள்­ள­டக்­கி­யது.

பட்­டுப்­பாதை வணி­கத்தின் மூலம் பண்­டைய காலத்தில் பெரும் செல்வம் ஈட்­டிய சீனா, இன்று BRI முன்­மு­யற்­சியின் மூலம் அனு­கூலம் பெற முயல்­கி­றது. இந்த இலட்­சியத் திட்டம் தமது நாட்­டுக்கு மாத்­தி­ர­மன்றி, ஒட்­டு­மொத்த உல­கிற்கும் நன்மை பயக்கும் என்­பது சீன ஜனா­தி­பதி ஷி ஜின்­பிங்கின் வாதம்.

புதிய பட்­டுப்­பா­தையை அமைக்க வேண்­டு­மானால், அந்தப் பாதையில் அமைந்­துள்ள நாடு­களில் வச­தி­களை அபி­வி­ருத்தி செய்­வது அவ­சியம். அந்­நா­டு­களில் துறை­மு­கங்­களை நிர்­மா­ணிப்­பது அவ­சியம். வீதி­களை அமைப்­பதும் கட்­டா­ய­மா­னது. இன்ன பிற அபி­வி­ருத்தி வேலை­க­ளையும் நிறை­வேற்ற வேண்டும்.

அத்­த­கைய கட்­டு­மாண அபி­வி­ருத்திப் பணி­க­ளுக்கு நான் உத­வு­கிறேன், நீங்கள் எமது இலட்­சியத் திட்­டத்தில் இணைந்து கொண்டால் போது­மா­னது என்­பது சீனாவின் கோரிக்கை. இதன் கீழ், பல நாடுகள் உத­வி­களைப் பெற்­றுள்­ளன. அவற்றில் ஆபி­ரிக்க நாடு­களின் எண்­ணிக்கை அதிகம்.

இன்று சீனாவின் நோக்­கங்கள் குறித்து பல்­வேறு வாதப்­பி­ர­தி­வா­தங்கள். இந்­நாடு வறிய நாடு­களைக் கடன்­பொ­றிக்குள் தள்ளி, அவற்றின் வளங்­களை சூறை­யாட முனை­கி­றது என்­பது பிர­தான குற்­றச்சாட்டு. BRI என்­பது பொரு­ளா­தார நலன்­களைத் தாண்டிச் சென்று, பிராந்­திய நாடு­களை அடி­மை­யாக்கும் சீனாவின் நவ­கா­ல­னித்­துவம் என்­பது மற்­றைய குற்­றச்­சாட்டு.

BRI திட்­டத்தை விளம்­ப­ரப்­ப­டுத்­து­வ­தற்­காக பெருந்­தொகை பணத்தை செல­விடும் சீன அர­சாங்கம், அதனை நியா­யப்­ப­டுத்­து­வ­திலும் தீவிர அக்­கறை காட்­டு­கி­றது. BRI என்­பது சகல தரப்­புக்­க­ளையும் உள்­வாங்கிக் கொண்டு முன்­னேறும் நீண்­ட­கால அபி­வி­ருத்தித் திட்டம். இந்தத் திட்­டத்தை தவ­றாகப் புரிந்து கொள்ள வேண்டாம் எனவும், எதிர்­மறைக் கண்­ணோட்­டத்­துடன் பார்க்க வேண்டாம் எனவும் சீனத் தலை­வர்கள் கூறு­கி­றார்கள்.

இம்­மாத முற்­ப­கு­தியில் சீனத் தலை­ந­கரில் முக்­கி­ய­மான மாநா­டொன்று இடம்­பெற்­றது. இதில் ஆபி­ரிக்கக் கண்­டத்­தி­லுள்ள ஐம்­பது நாடு­களின் தலை­வர்கள் தமது பரி­வா­ரங்கள் சகிதம் கலந்து கொண்­டார்கள். இதில் சீன ஜனா­தி­பதி ஷி ஜின்பிங் உரை­யாற்­றினார். ஆபி­ரிக்கா கண்­டத்தில் சீனா நல்ல நோக்­கத்­துடன் முத­லீடு செய்­கி­றது. இந்த உத­வி­களில் அர­சியல் உள்­நோக்கம் கிடை­யாது என அவர் வலி­யு­றுத்­தினார்.

சீனாவின் BRI திட்­ட­மா­னது, அமெ­ரிக்கா முத­லான வல்­ல­ர­சு­களின் கண்­களை உறுத்­து­கி­ற­தாயின், அதற்­கு­ரிய கார­ணங்­களைப் புரிந்து கொள்­வதில் சிரமம் இல்லை. ஆசிய ஆபி­ரிக்க நாடு­களில் சீனாவின் செல்­வாக்கு அதி­க­ரிப்­பதை அமெ­ரிக்கா போன்ற நாடுகள் விரும்பப் போவ­தில்லை. இத்­த­கைய செல்­வாக்கு கார­ண­மாக, சீனா பொரு­ளா­தார ரீதியில் மாத்­தி­ர­மன்றி பாது­காப்பு மூலோ­பாய ரீதி­யிலும் வலு­வ­டையும் என்­பது அந்­நா­டு­களின் கரி­சனை.

BRI திட்­டத்தின் ஊடாக, ஆசிய ஆபி­ரிக்க நாடு­க­ளுக்கு வழங்­கப்­படும் உத­விகள் கடன்­பொ­றியே. அதனைத் தவிர வேறொன்றும் இல்லை என அமெ­ரிக்கா வாதி­டு­கி­றது. அந்த வாதத்தை நிரூ­பிக்க பல்­வேறு கார­ணிகள் முன்­வைக்­கப்­ப­டு­கின்­றன. ஒரு செல்­வந்தர் ஏழைக்கு கடன் வழங்­கு­கிறார் என்று கரு­துவோம். அந்த ஏழை ஒரு­நாளும் திருப்பிச் செலுத்த முடி­யாத அள­விற்கு கடன் வழங்கும் பட்­சத்தில், செல்­வந்தர் ஏழை­யிடம் வேறு ஏதோ­வொன்றை எதிர்­பார்க்­கிறார் என்று தானே அர்த்தம் என்ற கேள்வி முதன்­மை­யா­னது.

மொன்­டி­நீக்ரோ என்ற நாட்டை உதா­ர­ண­மாகக் கொள்ள முடியும். தனது துறை­மு­க­மொன்றில் இருந்து செர்­பியா நோக்கி நெடுஞ்­சாலை அமைப்­ப­தற்­காக சீனாவின் நிதி­யு­த­வியைப் பெற்­றது. இந்த நெடுஞ்­சா­லையின் நிர்­மாணப் பணிகள் பாதி­யில் நிற்­கின்­றன. எனினும், இன்று மொன்­டி­நீக்­ரோவின் படு­கடன் எகி­றி­யுள்­ளது. மொத்த தேசிய உற்­பத்­தியில் 80 சத­வீ­தத்­திற்கு மேலான பெறு­ம­தி­யு­டைய தொகையை மொன்­டி­நீக்ரோ கட­னாக செலுத்த வேண்டும்.

அடுத்து பாகிஸ்தான். அந்­நாட்டில் கடந்த சில ஆண்­டு­க­ளாக பல்­வேறு அர­சியல் நெருக்­க­டிகள். ஆற்றல் அற்ற கறை­ப­டிந்த ஆட்­சி­யா­ளர்கள் சீனா­விடம் இருந்து தாறு­மா­றாக கடன் பெற்­றார்கள். BRI திட்­டத்­திற்கு சீன-­–பா­கிஸ்­தா­னிய பொரு­ளா­தார தாழ்­வாரம் என்று பெயர் சூட்டி சீனாவின் உத­வி­யுடன் நெடுஞ்­சாலை அமைத்­தார்கள். ரயில் பாதை நிர்­மா­ணித்­தார்கள். இன்று சீனாவின் படு­க­டன்­களைத் திருப்பிச் செலுத்த முடி­யாத நிலைக்கு பாகி;தான் தள்­ளப்­பட்­டுள்­ள­தாக சர்­வ­தேச நாணய நிதியம் அறி­வித்­துள்­ளது.

ஆபி­ரிக்க நாடு­களில் நிலைமை படு­மோசம். இந்­நா­டுகள் பல­வற்றில் ஆட்சி நிர்­வாகம் சீர்­கு­லைந்து, இலஞ்­சமும் ஊழலும் தலை­வி­ரித்­தா­டு­கின்­றன. பொரு­ளா­தாரம் பெரும் வீழ்ச்­சியை எதிர்­கொள்­கி­றது. பெரும்­பா­லான நாடு­க­ளுக்கு சீனா கடன் வழங்­கி­யி­ருக்­கி­றது. இதற்கு முன்னர் 60 பில்­லியன் டொலர் கடன். இம்­மாத முற்­ப­கு­தியில் இடம்­பெற்ற மாநாட்டில் மேலும் 60 பில்­லியன் டொலரை உத­வி­யாக வழங்கப் போவ­தாக சீன ஜனா­தி­பதி ஷி ஜின்பிங் அறி­வித்­துள்ளார்.

இந்தக் கடன்கள் குறித்து கடும் விமர்­ச­னங்கள். தமது மக்­களை ஏமாற்­று­வ­தற்­காக சீன அர­சாங்கம் ஆபி­ரிக்க நாடு­க­ளுக்­காக கடன்­களை உத­விகள் என்றே கூறு­வ­தாக மேற்கு நாடுகள் சாடு­கின்­றன. ஆபி­ரிக்க மக்­க­ளிடம், இது சலுகைக் கடன் என்று விப­ரிக்­கப்­ப­டு­கி­றது. ஆனால், 60 பில்­லியன் டொலரில் 15 பில்­லி­ய­னுக்கு வட்டி செலுத்தத் தேவை­யில்­லை­யென ஷி ஜின்பிங் கூறி­யதை மேற்­கு­லகம் சுட்­டிக்­காட்­டு­கி­றது. சலுகைக் கடன் என்று சீனா ஏமாற்­றி­னாலும், 45 பில்­லியன் டொல­ருக்கு ஆபி­ரிக்க நாடுகள் வட்டி செலுத்த வேண்டும் என மேற்­கு­லக சார்­பு­டைய ஆய்­வா­ளர்கள் கூறு­கி­றார்கள்.

கடன் என்ற பெயரில் சீனா பொறி வைக்­கி­றது என்ற சந்­தேகம் பற்றி இன்று வெளிப்­ப­டை­யாக பேசப்­ப­டு­கி­றது. சில நாடுகள் நிலைமை உணர்ந்து, சீனாவின் உத­வியின் கீழான அபி­வி­ருத்தித் திட்டங்­களை முடக்­கி­யி­ருக்­கின்­றன. மியன்மார் சீன உத­வி­யி­லான துறை­முக நிர்­மாணத் திட்­டத்தை மீள்­ப­ரி­சீ­லனை செய்­வ­தென முடிவு செய்­துள்­ளது. சீனக் கம்­ப­னிகள் நிர்­மா­ணிக்கும் இரு நீர்­மின்­வலு உற்­பத்தித் திட்­டங்­களின் கட­டு­மாணப் பணி­களை நிறுத்­து­வது பற்றி நேபாளம் சிந்­திக்­கி­றது.

இந்தத் தீர்­மா­னங்­களின் பின்னால் முக்­கி­ய­மான கார­ணங்கள் இருக்­கின்­றன. உதவி என்ற பெயரில் சீனக் கம்­ப­னி­களின் ஆதிக்­கமும், சீனத் தொழி­லா­ளர்­களின் படை­யெ­டுப்பும் தீவிரம் பெறு­வது முதன்மைக் காரணம். இந்த நிலை­மையை மொன்­டி­நீக்ரோ முதல் மலேஷியா வரை­யி­லான பல நாடு­களில் காணக்­கூ­டி­ய­தாக இருக்­கி­றது என மேற்கு நாடுகள் குற்­றஞ்­சு­மத்­து­கின்­றன. எங்­கெல்லாம் சீனக் கம்­ப­னிகள் கால்­ப­தித்­துள்­ள­னவோ, அங்­கெல்லாம் சீனர்­க­ளுக்­கான குடி­யி­ருப்­புக்கள் முளைப்­ப­தாக அவை குற்­றஞ்­சு­மத்­து­கின்­றன.

இலங்­கையின் துறை­முக நகரைப் போன்று, மலேஷி­யாவில் நான்கு செயற்கைத் தீவு­களை அடிப்­ப­டை­யாகக் கொண்டு ஃபொரெஸ்ட் சிற்றி என்ற பெயரில் பாரிய நகரம் உரு­வாக்­கப்­ப­டு­கி­றது. இந்த நகரில் ஏழு இலட்சம் பேர் மாத்­தி­ரமே வசிக்­கலாம்.. இதில் சரா­சரி மலே­ஷியப் பிர­ஜைகள் எவரும் காணி­க­ளையோ, வீடு­க­ளையோ வாங்க முடி­யாது. அவ்­வ­ளவு விலை. இது மலேஷி­யாவில் வாழும் செல்­வந்த சமூ­கத்தை இலக்­காக வைத்து உரு­வாக்­கப்­பட்ட திட்­ட­மென வெளிப்­ப­டை­யாகத் தெரி­வ­தாக மேற்­கு­லகம் குறை கூறு­கி­றது. இவை போன்ற திட்­டங்கள் நவ கால­னித்­து­வத்­திற்கு சம­மா­னவை என கூறப்­ப­டு­வ­தற்­குக் காரணம், இவை சுதந்­திரம் பெற்ற நாடு­களின் இறை­மையை மீறும் வகையில் அமைந்­தி­ருப்­பது தானென்ற வாதத்தை முற்­று­மு­ழு­தாக நிரா­க­ரிக்க முடி­யாது.

சம­கால அர­சியல், பொரு­ளா­தார உலகில் தவிர்க்க முடி­யாத பிரச்சி­னை­யொன்று உள்­ளது. அது சீனாவைப் புறக்கணித்து முன்னேற முடியாது என்ற நிலைப்பாடாகும். சுதந்திர நாடுகள் மாத்திரமன்றி, அரசியல் தலைவர்களும் இத்தகைய நிலைப்பாட்டிலேயே உள்ளார்கள் என்பதை, அவர்களின் செயற்பாடுகள் உணர்த்தி நிற்கின்றன. சீனா வலைவிரிக்குமானால் அந்த வலையில் இருந்து சூசகமாகத் தப்பித்து, சீனாவின் வலையை வைத்து மீன்பிடிக்கும் அரசியல் சாணக்கியமோ, தைரியமோ பல நாடுகளுக்கு இல்லை. இருந்தபோதிலும், முதுபெரும் அரசியல்வாதியான மஹதிர் மொஹம்மட் சீனா என்ற ஜாம்பவானை தைரியமாக எதிர்த்து நின்றிருக்கிறார். தமது நாட்டில் பெருந்தொகை முதலீட்டுடன் சீனா முன்னெடுக்கும் இரு திட்டங்களை ரத்துச் செய்யப் போவதாக மலேஷியப் பிரதமர் அறிவித்துள்ளார். நாம் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாவிட்டால், அந்தத் திட்டங்களை அமுலாக்கி சிக்கலில் மாட்டிக் கொள்ளத் தேவையில்லை என்பது அவரது நிலைப்பாடு. சீனக் கடன்பொறி ராஜதந்திரம் பற்றிய வாதப்பிரதிவாதங்களுக்கு மஹதிர் மொஹமட்டின் நிலைப்பாடே சிறப்பான பதிலாகத் தோன்றுகிறது.   

http://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2018-09-16#page-3

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.