Jump to content

14 வீரர்களுடன் சென்ற ரஷ்ய போர் விமானம் சிரியாவில் மாயம்


Recommended Posts

14 வீரர்களுடன் சென்ற ரஷ்ய போர் விமானம் சிரியாவில் மாயம்

 

 

 
INDIAAEROSHOWjpg

மாதிரி படம்

ரஷ்யாவைச் சேர்ந்த போர் விமானம் ஒன்று சிரியாவில் மாயமாகி உள்ளதாக  அந் நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சகம் சார்பில்,  "ரஷ்யாவின் போர் விமானமான  Russian Il-20,  14  வீரர்களுடன் சிரியாவிலுள்ள ரஷ்யாவின் ராணுவ தளமான ஹிமியம் விமானப்படை தளத்திற்குத் திரும்பியது. அப்போது சிரியா கடற்கரையில் இருந்து சுமார் 35 கிமீ தொலைவில் மத்திய தரைக்கடல் பகுதியில் வந்தபோது விமானத்தின் தொடர்பு துண்டிக்கப்பட்டது. விமானத்தைத் தேடும் பணி நடந்து வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

போர் விமானம் சுட்டு  வீழ்த்தப்பட்டதா? என்ற கோணத்திலும் ரஷ்ய உளவுத்துறை அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் ரஷ்ய விமானத்தை தாங்கள் தாக்கவில்லை என்று அமெரிக்கா, இஸ்ரேல், பிரான்ஸ் ஆகிய நாடுகள் தெரிவித்துள்ளன.

சிரியாவில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக  6 ஆண்டுகளாக நடந்து வரும் உள் நாட்டுப் போரில் சிரிய அரசப் படையுடன் ரஷ்யா போர் தொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

https://tamil.thehindu.com/world/article24974965.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் படத்தில் இருக்கும் விமானம் அல்ல சுட்டு வீழ்த்தப்பட்டது.

அதுபோக இஸ்ரேலின் சதிவலையில் சிக்கி.. இந்த விமானம்.. சிரியாவால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

எதுஎப்படியோ.. எங்களை அழிக்க ஒத்தூதி நின்ற எதிரிகள் எல்லோரும்... இப்போ. தமக்குள் அடிபட்டு அழிகிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே படத்தில் காட்டப்பட்டுள்ள விமானம் சண்டை விமானம் ஆகும். ஆனால், சுட்டு வீழ்த்தப்பட்டதோ 1950 களில் ரஷ்ஷியாவினால் உருவாக்கப்பட்ட உளவுபார்க்கும் விமானம் ஒன்று.

சிரியாவினுள் ஆளமாக கால்பதிக்கும் ஈரானின் ராணுவ இலக்குகள் மீது இஸ்ரேல் விமானத் தாக்குதல்களை மேற்கொண்டபோது, ரஷ்ஷியாவினால் செலுத்தப்பட்ட விமானம், சிரியாவின் விமான எதிர்ப்பு ஏவுகணைகளின் வீச்சுக்குள் இஸ்ரேல் விமானங்களால் பலவந்தமாக அனுப்பிவைக்கப்பட, ஏவுகணைத் தாக்குதலுக்கு உள்ளாகி அது நொருங்கியிருக்கிறது.

இதில் வேடிக்கை என்னவென்றால், ரஷ்ஷிய விமானத்தைச் சுட்டு வீழ்த்திய ஏவுகணை கூட ரஷ்ஷியாவினால் சிரியாவுக்கு வழங்கப்பட்டதுதான். அதுமட்டுமல்லாமல், சுட்டு வீழ்த்தப்பட்ட ரஷ்ஷிய விமானம் கூட, சிரியாவின் ராணுவ நடவடிக்கைகளுக்காக உளவு பார்ப்பதற்காகவே அங்கு அனுப்பிவைக்கப்பட்டது.

சொந்தக் காசில் சூனியம் வைப்பது என்று கேள்விப்பட்டிருக்கிறேன், இப்போதுதான் பார்க்கிறேன்.

https://www.bbc.com/news/world-europe-45563304

 

Link to comment
Share on other sites

ரஷ்ய விமான ஊழியர் சாவுக்கு சிரியா மீது குற்றம் சுமத்தும் இஸ்ரேல்

ரஷ்ய இராணுவ விமானம்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

ரஷ்ய விமான ஊழியர்கள் 15 பேர் உயிரிழப்புக்கு சிரியா படையினரின் தாக்குதலே காரணம் என்று இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது.

லடாகியா நகரின் மீது இஸ்ரேல் படையினர் வான்வழித் தாக்குதல் நடத்திய நேரத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

ரஷ்ய ஊழியர்களின் உயிரிழப்பு குறித்து கவலை வெளியிட்டுள்ள இஸ்ரேல், சிரியாவின் விமான எதிர்ப்பு பீரங்கிகளின் உக்கிரமான மற்றும் இலக்கில்லாத தாக்குதலே காரணம் என்று இஸ்ரேல் கூறியுள்ளது.

ரஷ்ய விமனம் II-20, திங்கள்கிழமை மாலை, மத்திய தரைக்கடல் பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்டது.

முதலில், இஸ்ரேலின் பொறுப்பற்ற நடவடிக்கையே காரணம் என ரஷ்யா குற்றம் சாட்டியிருந்தது. பின்னர், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், செவ்வாய்க்கிழமை இதுபற்றிப் பேசும்போது, துக்ககரமான விபத்துக்குரிய தொடர் சூழ்நிலைகள் காரணமாக இது நடந்ததாக தெரிவித்தார்.

 

 

சிரியாவில் நடக்கும் உள்நாட்டுப் போரில், அதிபர் பசார் அல் - அசத் அரசுக்கு ரஷ்யா ஆதரவளித்து வருகிறது.

இஸ்ரேல் சொன்னது என்ன?

ரஷ்ய விமான ஊழியர்களின் உயிரிழப்பு கவலையளிப்பதாகக் கூறியுள்ள இஸ்ரேல் பாதுகாப்புப் படை, மிகவும் அரிதான அறிக்கை ஒன்றில், ரஷ்ய விமானத்தின் மீதான தாக்குதலுக்கு அசாத் அரசே பொறுப்பு என்று கூறியுள்ளது.

அதே நேரத்தில், ரஷ்ய விமானங்களை தாக்குதலுக்கான கவசமாக இஸ்ரேல் பயன்படுத்திக் கொண்டது என்ற ரஷ்யாவின் குற்றச்சாட்டுக்கும் இஸ்ரேல் பதிலளித்துள்ளது.

லடாகியாவில் குறிப்பிட்ட இலக்கின் மீது தாக்குதல் நடத்தப்பட்டபோது, தாக்குதல் இலக்கில் ரஷ்ய விமானம் இல்லை. சிரியா ஏவுகணை தாக்குல் நடத்தி, எந்த ரஷ்ய விமானத்தின் தாக்குதலுக்கு காரணமாக இருந்ததோ, அந்த நேரத்தில் இஸ்ரேலியப் படைகள் இஸ்ரேலிய எல்லைக்குள் வந்து சேர்ந்துவிட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

உண்மையில்என்ன நடந்தது?

கடந்த திங்கட்கிழமையன்று, இல்யூஷின் Il-20 விமானம், வட மேற்கு நகரமான லடாக்கியாவிற்கு அருகில் உள்ள ரஷ்யாவின் ஹிமேமீம் விமான தளத்திற்கு திரும்பிக்கொண்டிருக்கையில் சிரியா கடற்கரையிலிருந்து சுமார் 35 கிமீ (22 மைல்) தொலைவில் இந்த சம்பவம் நடந்ததாக அறிக்கைகள் கூறுகின்றன.

ரஷ்ய இராணுவ விமானம்

Il-20 விமானம், லடாக்கியா மாகாணத்தில் உள்ள சிரியாவின் இடங்களில் நான்கு இஸ்ரேலிய எஃப் -16 ஜெட் விமானங்கள் தாக்குதல் நடத்தியபோது காணாமல் போனதாக ரஷ்யாவின் டாஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

''கடலில் இருந்து லடாக்கியா நகரத்திற்கு வருகிற எதிரி ஏவுகணைகளை தடுத்துள்ளதாக சிரிய ராணுவம் தெரிவித்துள்ளது'' என்று சானா செய்தி நிறுவனம் கூறுகிறது.

உள்ளூர் நேரப்படி இரவு ஒன்பது மணிக்கு முன்பு லடாக்கியாவில் வான் தாக்குதல்கள் நடந்ததாக சிரிய தொலைக்காட்சி பதிவு செய்தது.

அரை மணி நேரத்திற்கு பிறகு, சிரியாவின் விமான பாதுகாப்பு படைகள், எதிரிகளின் ஏவுகணைகளுக்கு பதிலளித்ததாக சனா தொலைக்காட்சியின் பேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்டது.

 

 

திங்களன்று லடாக்கியா பகுதியில் சில இடங்களை இலக்கு வைத்தது பற்றி கருத்து தெரிவிக்க மறுத்து இஸ்ரேலிய ராணுவம், "நாங்கள் வெளிநாட்டு அறிக்கைகள் குறித்து கருத்து தெரிவிக்க மாட்டோம்" என்றது.

ஆரம்பத்தில் விமானம் காணாமல் போனது குறித்து பலர் மீது குற்றம் சாட்டப்பட்டது; ஆனால் செவ்வாயன்று, விமானம் தற்செயலாக சிரியாவால் சுடப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் கூறியது.

இஸ்ரேலின் எந்த செயலுக்கு ரஷ்யா குற்றம் சாட்டுகிறது?

இஸ்ரேலின் "பொறுப்பற்ற செயல்கள்" தவறானவை என்றும், தாக்குதல்கள் நடப்பதற்கு ஒரு நிமிடத்திற்கு முன்னரே எச்சரிக்கை விடப்பட்டதனால், ராணுவகண்காணிப்பு விமானத்தை வெளியேற்றுவதற்கு போதுமான நேரம் கிடைக்கவில்லை என்றும் அறிக்கை ஒன்றில் ரஷ்யா கூறியுள்ளது

ரஷ்ய இராணுவ விமானம்படத்தின் காப்புரிமைREUTERS

"இஸ்ரேலிய விமானங்கள் வேண்டுமென்றே அந்த பகுதியில் போர்க்கப்பல்கள் மற்றும் விமானங்களுக்கு ஆபத்தான சூழ்நிலையை உருவாக்கியுள்ளனர்," என்று பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

பின்னர் ரஷ்யா அதன் வெளியுறவு அமைச்சகத்திற்கு இஸ்ரேலிய தூதரை வரவழைத்தது.

விமான பயணிகளின் தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

https://www.bbc.com/tamil/global-45564574

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
    • இல்லை ச‌கோ வீர‌ப்ப‌னே உள்ள‌தை ஒத்து கொண்டார் தன‌க்கு கிடைச்ச‌ காசை த‌ன் ஊர் ம‌க்க‌ளுக்கே கொடுத்து விட்டேன் ஏதோ 9ல‌ச்ச‌ம் அப்ப‌டியா தான் நான் பார்த்த‌ காணொளியில் என் காதுக்கு கேட்ட‌து..............அந்த‌ ம‌னுஷ‌ன் கோடி கோடியா கொள்ளை அடிக்க‌வும் இல்லை சிறு தொகை கிடைச்சா கூட‌ அவ‌ரின் சொந்த‌ ஊர் ம‌க்க‌ளுக்கு அது போய் சேருமாம்.................. ......................அண்ண‌ன் சீமான் சொன்ன‌து போல் வீர‌ப்ப‌ன் கொள்ளைக் கார‌ன் என்றால் ஜெய‌ல‌லிதாவும் க‌ருணாநிதியும் திருடாத‌ நேர்மையாள‌ர்க‌ளா என்று ஜெய‌ல‌லிதாவின் ஆட்சி கால‌த்திலே வெளிப்ப‌டையாய் பேசின‌வ‌ர் 2012 அல்ல‌து 2013 இந்த‌ கால‌ப் ப‌குதியில்.................. என‌க்கு பெரும் ம‌கிழ்ச்சி வீர‌ப்ப‌ன் ம‌க‌ள அண்ண‌ன் சீமான் வேட்பாள‌ரா.........................
    • விவசாயியின் குளிர்சாதனப் பெட்டி .......!   😁
    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது . இப்படி இருக்கையில் சிங்களத்தில் இருந்த குரங்கு கூட தமிழர்களை பார்த்து இனவாதம் கக்கும் .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.