Jump to content

வடமராட்சியில் பதற்றம் – மீனவர்கள்- பொலிஸார் இடையே முறுகல்!!


Recommended Posts

யாழில் பெரும் பதற்றம்! பொலிசார் குவிப்பு!!

 

 
 
Image

யாழ் வடமராட்சி கடற்பரப்பில் அத்துமீறி சட்டவிரோத தொழிலில் ஈடுபட்ட எட்டு மீனவர்களை அப்பகுதி மீனவர்கள் மடக்கிக் பிடித்துள்ளனர்.

இதனால் அப் பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டிருக்கின்ற நிலையில் பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

 

வடமராட்சி கிழக்கின் பல இடங்களிலும் தென்னிலங்கையைச் சேர்ந்த பெருமளவிலான மீனவர்கள் அத்துமீறி சட்டவிரோத தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் பல பகுதி மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதுடன் கடல் வளமும் அழிக்கப்படுவதால் இவர்களை அங்கிருந்து வெளியேற்ற வேண்டுமென தொடர்ச்சியாக கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு போராட்டங்களும் நடைபெற்றிருக்கின்றன.

இதனையடுத்து கடற்தொழில் அமைச்சர் உள்ளிட்ட பல தரப்பினர்களும் அந்த மீனவர்களை வெளியேற்றுவது கூறியிருந்தார் போதிலும் அங்கு தொடர்ந்தும் அவர்கள் தங்கியிருந்து தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்

இவ்வாறு வடமராட்சி கிழக்கின் தாளையடிப் பகுதியில் தங்கியிருந்து சட்டவிரோத தொழிலில் ஈடுபட்டு வருகின்ற மீனவர்களும் எட்டு மீனவர்கள் வடமராட்சி கடறபரப்பிற்கைள் நுழைந்து தொழிலில் ஈடுபட்ட போது வடமராட்சி மீனவர்களும் மடக்கி பிடிக்கப்பட்டு தற்போது தடுத்து வைக்கப்பட்டிருக்குன்றனர் இதனால் அப் பகுதியில் பெரும் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து அங்கு வந்த பருத்தித்துறை பொலிஸாரும் தடுத்து வைக்கப்பட்ட மீனவர்களை கைது செய்து தாம் பொலிஸ் நிலையம் கொண்டு செல்ல முற்பட்ட போதும் அதற்கு அப்பகுதி மீனவர்கள் மறுப்புத் தெரிவித்துள்ளனர்.

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

 

மேலும் சட்ட விரோதமான தொழில்கள் நிறுத்தப்பட வேண்டுமென்றும் இந்த விடயத்தில் தமக்கு சாதகமான முடிவு பெருக்கு வாய்ந்த தரப்பினர்கள் தெரியப்படுத்தும் வேண்டுமென்றும் அப் பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

https://www.ibctamil.com/srilanka/80/106267

Link to comment
Share on other sites

வடமராட்சியில் பதற்றம் – மீனவர்கள்- பொலிஸார் இடையே முறுகல்!!

 
 
42059029_234288027263595_555919604776855
 

வடமராட்சியில் கடலட்டை பிடித்த மூன்று படகுகளுடன் எட்டு வெளிமாவட்ட மீனவர்களை இன்று அதிகாலை சுற்றிவளைத்துப் பிடித்த வடமராட்சி மீனவர்கள், அவர்களைத் தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

மீனவர்களை பருத்தித்துறை பொலிஸார் பொறுப்பெடுக்க முயற்சித்த போதும் கடலட்டை பிடிப்பதை கடற்றொழில் அமைச்சு தடுக்கும் வரை அவர்களை விடுவிப்பதில்லை என்று வடமராட்சி மீனவர்கள் பிடிவாதமக உள்ளனர்.

இதனால் மீனவர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் முறுகல் நிலமை ஏற்பட்டுள்ளது என்று உதயன் செய்தியாளர் சம்பவ இடத்தில் இருந்து தெரிவித்தார்.

42045179_453359911858410_41473708264773341869218_475800802912367_39532095155323542195206_897872130417688_18173084580267920180918_075719.jpg20180918_075043.jpg20180918_0800100.jpg20180918_075723.jpg

https://newuthayan.com/story/10/வடமராட்சியில்-பதற்றம்-மீனவர்கள்-பொலிஸார்-இடையே-முறுகல்.html

Link to comment
Share on other sites

யாழ். பருத்தித்துறையில் பதற்றம்  ; தென்னிலங்கை மீனவர்களை மீட்பதில் பொலிஸார் - மீனவர்களுக்கிடையில் இழுபறி

 

 

வடமராட்சி பருத்தித்துறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றன மீனவர்களை தம்மிடம் ஒப்படைக்க வேண்டுமென பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

2c658c3b-035c-4c53-aef9-07543d9a1ee7.jpg

ஆனாலும் அந்த மீனவர்களை பொலிஸாரிடம் ஒப்படைக்க முடியாதென்றும் தமது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென்றும் மீனவர்கள் தெரிவித்திருந்தனர்.

ae768f2f-4eb8-4bc4-a763-eb155bd34352.jpg

இந் நிலையில் அங்கு வந்த காங்கேசன்துறை பொலிஸ் அத்தியட்சகர் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்காவிட்டால் விசேட அதிரடிப்படையினரை களமிறக்கப்போவதாகவும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

d139c7ac-7a25-473d-8a86-564403b1086b.jpg

இதனால் அங்கு பெரும் குழப்பம் ஏற்பட்டிருந்தத நிலையில் திடீரென தடுத்து வைக்கப்பட்டிருந்த மீனவர்களை பொலிஸார் தம்முடன் அழைத்துச்சென்றனர். 

c4efefbc-1cca-421e-8469-078f97405e83.jpg

இதனால் மேலும் குழப்பம் அதிகரித்ததுடன் பொலிஸ் மற்றும் அப் பகுதி மீனவர்களுக்கிடையே முரண்பாடுகளும் ஏற்பட்டு பதற்றமானதொரு சூழல் நிலவியது.

613a3ff6-5c4c-4500-bf1c-83185aaf1c9e.jpg

இதேவேளை தடுத்து வைக்கப்பட்டிருந்த எட்டு பேர்களில் ஆறு பேரை பலவந்தமாக. பொலிஸார் மீட்டுச் சென்றனர் .

ஏனைய இரண்டு பேரையும் பொலிஸாரால் மீட்க முடியவில்லை. இதனையடுத்து அங்குள்ள அருட்தந்தை ஒருவர் மூலமாக ஏனைய இரண்டு பேரையும் பொலிஸாரிடம் மீனவர்கள் ஒப்படைத்தனர்.

513c624a-3dfc-4e10-b049-b827d2ce40c6.jpg

இவ்வாறு குழப்பங்கள் ஏற்பட்டிருந்தது போதிலும் பாதுகாப்பிற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த  பொலிஸார் அங்கிருந்து வெளியேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

34a3fe8f-933b-477c-8b24-d60221e8fd01.jpg

இதேவேளை அங்கு நின்ற அப் பகுதி மீனவர்களை அச்சுறுத்தும் வகையில் பொலிஸார் பலரும் புகைப்படங்களையும் வீடியோக்களையும் எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

7b632b9c-7247-4857-b58b-d05161e92b28.jpg

http://www.virakesari.lk/article/40632

Link to comment
Share on other sites

தென்னிலங்கை மீனவர்களை விடுவிக்கும் முயற்சி தோல்வி – கொட்டகைகளை அமைத்து மீனவர்கள் போராட்டம்

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

ed8279f7-1cc8-4189-9db7-5c361eeb7418.jpg
வடமராட்சி பருத்தித்துறை கடலில் அத்துமீறி சட்டவிரோத தொழிலில் ஈடுபட்ட எட்டு மீனவர்களையும் விடுவிப்பதற்கு கடற்தொழில் நீரியல் வளம் திணைக்களம் பணிப்பாளர் வர வேண்டும் உள்ளிட்ட ஐந்து கோரிக்கைகளை வடமராட்சி பருத்தித்துறை மீனவர்கள் முன்வைத்துள்ளனர்.

 

மீனவர்களை விடுவிக்குமாறு கோரி நடைபெற்ற பேச்சு வார்த்தைகளும் தோல்வியில் முடிவடைந்த நிலையில் தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை தொடர்ச்சியான போராட்டத்தையும் மீனவர்கள் ஆரம்பித்து உள்ளனர்.

வடமராட்சி கிழக்கில் அத்து மீறி சட்ட விரோதமாகத தொழிலில் ஈடுபட்டு வருகின்ற மீனவர்கள் நேற்றிரவு வடமராட்சி பருத்தித்துறை கடற்பரப்பிற்குள் நுழைந்த போது வடமராட்சி பருத்தித்துறை மற்றவர்களால் மடக்கி பிடிக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்குன்றனர்.

இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டடிருந்த நிலையில் பருத்தித்துறை காவல்துறையினர் பிரதேச செய்லர் மாவட்ட கடற்தொழில் நீரையும் வளம் திணைக்களம் பணிப்பாளர் உள்ளிட்ட மீனவர்களுக்கும் இடையில் அவசர சந்திப்பொன்று நடைபெற்றது..

ஆனாலும் மீனவர்களை விடுவிக்கும் பேச்சு வார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அதாவது தொடர்ந்தும் தாம் பாதிக்கப்பட்டு வருவதற்கு தீர்வு கிடைக்க வேண்டுமென்றும் கடற்தொழில் பணிப்பாளர் நேரடியாக வருகை தர வேண்டுமென்றும் ஐந்து கோரிக்கைகளை மீனவர்கள் முன்வைத்துள்ளனர்.

ஆயினும் அந்தப் கோரிக்கைக்கு சாதகமான பதில் அல்லது முடிவு கிடைக்காத நிலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க முடியாதென்றும் தமது கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ள கொள்ளப்பட்டு அதனை நிறைவேற்றும் வரையில் தாம் கடலுக்கு செல்லக் போவதில்லை எனத் தெரிவித்துள்ள மீனவர்கள் கொட்டகைகளை அமைத்து போராட்டத்தை ஆரம்பித்துள்ளது.

2a9ec894-b0fa-4746-a4b9-0b1a03b78bc1.jpg2be7ded8-7fb4-4695-98ed-d069d526b493.jpg5d938c18-4d34-43b0-99a3-f78deb4bbf01.jpgad949d49-de80-45eb-9254-a864ef1accb0.jpgae82eed3-b465-48fc-853f-7f4d255d6d42.jpg

http://globaltamilnews.net/2018/96129/

Link to comment
Share on other sites

கடலட்டை பிடித்தோரை- மடக்கிப் பிடித்தும் ஏமாற்றம் அடைந்த வடமராட்சி மீனவர்கள்!!

 
 
42206692_1733968076728794_22005357454651

 

 

வட­ம­ராட்சி கிழக்­குக் கட­லில் கட­லட்டை பிடித்த வெளி­மா­வட்ட மீன­வர்­கள் பிர­தேச மீன­வர்­க­ளால் திட்­ட­மிட்டு மடக்­கிப் பிடிக்­கப்­பட்­ட­னர். மடக்­கிப் பிடித்த மீன­வர்­களை வைத்து உரி­மை­யா­ளர்­களை இனங்­காண பிர­தேச மீன­வர்­கள் திட்­ட­மிட்­ட­போ­தும், பொலி­ஸார் அச்­சு­றுத்­தும் வகை­யில் செயற்­பட்டு பிடிக்­கப்­பட்ட மீன­வர்­களை மீட்­டுச் சென்­ற­னர்.

வட­ம­ராட்சி கிழக்­குக் கட­லில் வெளி­மா­வட்ட மீன­வர்­கள் கட­லட்­டைத் தொழி­லில் ஈடு­ப­டு­கின்­ற­மையை ஆதா­ர­பூர்­வ­மாக நிரூ­பிக்க முயன்ற பிர­தேச மீன­வர்­கள் மனச் சோர்­வு­டன் திரும்­பி­னர்.

தொட­ரும் பிரச்­சினை

வட­ம­ராட்சி கிழக்­குக் கடற்­ப­ரப்­பில் வெளி­மா­வட்ட மீன­வர்­கள் கட­லட்­டைத் தொழி­லில் ஈடு­ப­டு­கின்­ற­னர் என்­றும், அத­னால் தமது வாழ்­வா­தா­ரம் பாதிக்­கப்­ப­டு­கின்­றது என்­றும் வட­ம­ராட்­சிக் கிழக்கு மீன­வர்­கள் குற்­றஞ்­சாட்­டு­கின்­ற­னர்.

வட­ம­ராட்சி கிழக்­குக் கடல்­ப­ரப்­பில் வெளி­மா­வட்ட மீன­வர்­க­ளால் மேற்­கொள்­ளப்­ப­டும் கட­லட்­டைத் தொழி­லைத் தடை செய்ய வேண்­டும் என்று அவர்­கள் பல தரப்­பி­ன­ரி­டம் கோரிக்­கை­கள் விடுத்­தி­ருந்­த­து­டன், பல போராட்­டங்­க­ளை­யும் செய்­தி­ருந்­த­னர்.

உறுதி மொழி­கள்

இது தொடர்­பாக கடந்த ஜூன் மாதம் 5ஆம் திகதி தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான மாவை.சோ.சேனா­தி­ராசா, எம்.ஏ.சுமந்­தி­ரன் ஆயி­யோர் கடற்­தொ­ழில் நீரி­யல்­வ­ளத்­துறை அமைச்­சர் நாடா­ளு­மன்­றில் சந்­தித்­தி­ருந்­த­னர்.

வட­ம­ராட்சி கிழக்­கில் வெளி­மா­வட்ட மீன­வர்­க­ளால் ஏற்­பட்­டுள்ள பாதிப்­பு­கள் தொடர்­பில் அமைச்­ச­ருக்கு விளக்­க­ம­ளிக்­கப்­பட்­டது. கட­லட்டை பிடிப்­ப­தற்­கான அனு­மதி வழங்­கப்­ப­டும் விதிக்­கப்­ப­டும் நிபந்­த­னை­களை மீறி தொழில் நட­வ­டிக்­கை­க­ளில் ஈடு­ப­டு­கின்­ற­போ­தும், கடற்­தொ­ழில் நீரி­யல்­வ­ளத் திணைக்­கள அதி­கா­ரி­கள் நட­வ­டிக்கை எடுப்­ப­தில்லை என்­றும், கூட்­ட­மைப்பு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளால் அமைச்­ச­ருக்­குச் சுட்­டிக்­காட்­டப்­பட்­டது.

கட­லட்டை பிடிப்­ப­தற்கு விதிக்­கப்­ப­டும் நிபந்­த­னை­கள் உரிய முறை­யில் பின்­பற்­றப்­ப­டு­வதை உறுதி செய்­யு­மாறு, கடற்­தொ­ழில் நீரி­யல்­வ­ளப் பணிப்­பா­ள­ருக்கு அமைச்­சர் உட­ன­டி­யா­கவே பணிப்­புரை விடுத்­தி­ருந்­தார். அதன்­பின்­ன­ரும் வட­ம­ராட்­சிக் கிழக்­குக் கடற்­ப­ரப்­பில் வெளி­மா­வட்ட மீன­வர்­க­ளால் கட­லட்­டைத் தொழில் மேற்­கொள்­ளப்­பட்டு வந்­தது.

வட­ம­ராட்சி கிழக்­குக் கடற்­ப­ரப்­பில் இரவு வேளை அனு­ம­தி­யின்­றிக் கட­லட்டை பிடித்­த­னர் என்று தெரி­வித்­துக் கடற்­ப­டை­யி­ன­ரால் 81 மீன­வர்­கள் கடந்த மாதம் 18 ஆம் திகதி அதி­காலை கைது செய்­யப்­பட்­ட­னர்.

அவர்­க­ளின் பட­கு­க­ளும் கைப்­பற்­றப்­பட்­டன. பின்­னர் அவர்­க­ளி­டம் இர­வில் கட­லட்டை பிடிப்­ப­தற்­கான அனு­மதி உள்­ளது என்று தெரி­வித்து கடற்­ப­டை­யி­னர் அவர்­களை விடு­வித்­த­னர். அத­னால் உள்­ளூர் மீன­வர்­கள் முரண்­பட்­ட­னர். அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன யாழ்ப்­பா­ணம் வரும்­போது எதிர்ப்பு ஆர்ப்­பாட்­டத்­தில் ஈடு­ப­டு­வ­தற்கு மீன­வர்­கள் திட்­ட­மிட்­ட­னர்.

அதை­ய­டுத்து கடந்த மாதம் 22ஆம் திகதி கடற்­றொ­ழில் நீரி­யல்­வ­ளத்­துறை அமைச்­சர் காமினி விஜித் விஜி­த­முனி செய்சா யாழ்ப்­பா­ணத்­தில் வைத்து வட­ம­ராட்சி கடற்­றொ­ழில் சமா­சத் தலை­வர் வர்­ண­கு­ல­சிங்­கம், மீன­வர் சங்­கப் பிர­தி­நி­தி­க­ளைச் சந்­தித்­தார்.

இந்­தச் சந்­திப்பு கடற்­றொ­ழில் சமா­சத் தலை­வர் வே.தவச்­செல்­வத்­தால் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­தது. யாழ்ப்­பா­ணம் நக­ரில் உள்ள விடுதி ஒன்­றில் சந்­திப்பு நடை­பெற்­றது.

“கடற்­றொ­ழில் அமைச்­சர் வட­ம­ராட்சி கிழக்­கில் நடை­பெ­றும் கட­லட்­டைத் தொழி­லுக்கு தடை விதிக்­கப்­ப­டும் என்று உறு­தி­ய­ளித்­தார். அங்கு கட­லட்­டைத் தொழி­லில் ஈடு­ப­டும் இரு நிறு­வ­னங்­க­ளின் செயற்­பா­டு­க­ளும் நிறுத்­தப்­ப­டும் என்­றும் இர­வில் ஒளி­பாய்ச்சி மீன்­பி­டிப்­ப­தற்­கும் தடை­வி­திக்­கப்­ப­டும் என்­றும் அமைச்­சர் கூறி­னார்.

அமைச்­ச­ரின் உறு­தி­மொ­ழியை அடுத்து போராட்­டம் நடத்­தும் முடிவை மீனவ சங்­கங்­கள் கைவிட்­டன. இந்த உறு­தி­மொ­ழி­கள் நிறை­வேற்­றப்­ப­டா­விட்­டால் போராட்­டங்­கள் நடத்­து­வது பற்றி ஆலோ­சிப்­பது என்று மீனவ சங்­கங்­கள் முடி­வெ­டுத்­துள்­ளன.”- என்று இந்­தச் சந்­திப்­பின் பின்­னர் கடற்­றொ­ழில் சமா­சத் தலை­வர் வே.தவச்­செல்­வம் தெரி­வித்­தி­ருந்­தார்.

இந்­தச் சந்­திப்பை அடுத்து அரச தலை­வர் வரு­கை­யின்­போது நடத்­தத் திட்­ட­மிட்­டி­ருந்த போராட்­டத்தை வட­ம­ராட்சி கிழக்கு மீன­வர்­கள் கைவிட்­ட­னர்.

நேற்று நடந்­தவை

தமது கோரிக்­கை­க­ளுக்கு உரிய நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டாத நிலை­யில் அட்­டைத் தொழில் ஈடு­ப­டு­ப­வர்­களை கையும் மெய்­யு­மா­கப் பிடிப்­ப­தற்கு வட­ம­ராட்சி மீன­வர்­கள் திட்­ட­மிட்­ட­னர். வட­ம­ராட்சி மீன­வர் சங்­கங்­க­ளின் சமா­சத்­துக்­குட்­பட்ட 12 சங்­கங்­க­ளைச் சேர்ந்த மீன­வர்­க­ளும் நேற்­றுக் கட­லுக்­குச் செல்­ல­வில்லை.

சக்­கோட்­டைக் கரை­யில் அமர்ந்­தி­ருந்­த­னர். அதி­காலை 3 மணி­ய­ள­வில் கட­லட்­டைத் தொழி­லுக்­குச் சென்ற வெளி­மாட்ட மீன­வர்­கள் 8 பேரை மீன­வர்­கள் கையும் மெய்­யு­மா­கப் பிடித்­த­னர். அவர்­கள் பய­ணித்த பட­கு­க­ளும் கடற்­க­ரை­யில் தடுத்து வைக்­கப்­பட்­டன. பிடிக்­கப்­பட்ட மீன­வர்­கள் சக்­கோட்­டைக் கடற்­தொ­ழி­லா­ளர் சங்­கக் கட்­ட­டத்­தில் தடுத்து வைக்­கப்­பட்­ட­னர்.

மீன­வர்­கள் நிபந்­தனை

கடற்­றொ­ழில் அமைச்­ச­ரின் வாக்­கு­றுதி பொய்த்­துப் போயுள்­ளது. மீன்­பிடி அமைச்­சர் உடன் நடை­மு­றைக்­கு­வ­ரும் வகை­யில் கட­லட்­டைத் தொழி­லைத் தடை­செய்ய வேண்­டும், டைன­மெட் பாவ­னையை தடை செய்­ய­வேண்­டும், சுருக்கு வலை, ரோலர், ஒளி பாய்ச்சி மீன்­பி­டிக்­கும் தொழில்­க­ளைத் தடை செய்ய வேண்­டும்.

அது­வரை நாங்­கள் பிடித்­துள்ள மீன­வர்­களை விட­மாட்­டோம் என்று மீன­வர்­கள் தெரி­வித்­த­னர். பிடிக்­கப்­பட்ட வெளி­மா­வட்ட மீன­வர்­க­ளுக்கு உணவு, குடி­தண்­ணீர் வழங்கி அவர்­க­ளைப் பாது­காப்­பா­கத் தடுத்து வைத்­த­னர்.

பேச்சு

அர­சி­யல்­வா­தி­கள், பிர­தேச செய­லர், கடற்­தொ­ழில் நீரி­யல் வளத்­தி­ணைக்­கள அதி­கா­ரி­கள், பொலி­ஸார் காலை 10.30 மணி­ய­வில் சம்­பவ இடத்­துக்கு வந்­த­னர். அவர்­கள் மீன­வர்­க­ளு­டன் கலந்­து­ரை­யா­டி­னர்.

“அனை­வ­ரும் வாக்­கு­றுதி வழங்­கு­கின்­ற­னர். ஆனால் அவை நிறை­வேற்­றப்­ப­டு­வ­தில்லை. சட்ட விரோ­தத் தொழில்­கள் இடம்­பெ­று­கின்­றன. கடற்­தொ­ழில் அமைச்­சர் தடை உத்­த­ரவை வழங்­கிய போதும் கட­லட்­டைத் தொழில் இடம்­பெ­று­கி­றது. யார் அனு­மதி வழங்­கு­கின்­ற­னர்?. மீன­வர்­க­ளைப் பிடிப்­பது எமது நோகக்­க­மல்ல.

எமது பகு­தி­க­ளில் இவ்­வா­றான தொழல்­கள் இடம் பெறு­வ­தைத் தடுப்­பதே நோக்­கம். இப்­போ­தும் அந்­தத் தொழிலை நிறுத்­து­வ­தற்கே மீன­வர்­களை பிடித்­துள்­ளோம். உடன் நடை­மு­றைக்கு வரும் வகை­யில் கடற்­தொ­ழில் அமைச்­சர் எமக்கு உத்­த­ர­வா­தம் தர­வேண்­டும். அது­வரை மீன­வர்­களை விடு­விக்க முடி­யாது” என்று வட­ம­ராட்சி மீன­வர்­கள் தெரி­வித்­த­னர்.

போராட்­டத்­துக்கு ஏற்­பாடு

கட­லட்­டைத் தொழி­லுக்­குத் தீர்வு கிடைக்­கும்­வரை தொடர்ந்து போரா­டு­வ­தற்கு மீன­வர்­கள் முடிவு செய்­த­னர். சக்­கோட்­டைக் கடற்­தொ­ழி­லா­ளர் சங்­கத்­துக்கு முன்­பாக கொட்­ட­கை­களை அமைத்து போராட்­டத்­துக்கு தயா­ரா­கி­னர்.

பொலி­ஸார் நட­வ­டிக்கை

அப்­போது காங்­கே­சன்­துறை உத­விப் பொலிஸ் அத்­தி­யட்­ச­கர் (தரம் 1) சம்­பவ இடத்­துக்கு வந்­தார். மீன­வர்­க­ளு­டன் பேச்சு நடத்­தி­னார். அவ­ருக்­கும் மீன­வர்­கள் தமது முடி­வைத் தெரி­வித்­த­னர். மீன­வர்­களை அச்­சு­றுத்­தும் தொனி­யில் உத­விப் பொலிஸ் அத்­தி­யட்­ச­கர் நடந்­து­கொள்­ளத் தொடங்­கி­னார்.

மீன­வர்­கள் ஒவ்­வொ­ரு­வ­ரும் கருத்­துத் தெரி­விக்­கத் தொடங்­கும்­போது, தனக்கு அரு­கில் இருந்த பொலிஸ் அதி­கா­ரி­யைப் பார்த்து “வீடியோ எடுங்­கள்” என்று உத­விப் பொலிஸ் அத்­தி­யட்­ச­கர் கூறி­ய­வண்­ணம் இருந்­தார். அனை­வ­ரை­யும் வீடியோ எடுங்­கள் என்­றும் அடிக்­கடி கூறிக் கொண்­டி­ருந்­தார். அரு­கில் இருந்த அதி­கா­ரி­யும் மீன­வர்­க­ளைக் காணொலி எடுத்­தார். அத­னால் மக்­கள் தமது கருத்­தைத் துணிந்து கூற முடி­யாத நிலை ஏற்­பட்­டது.

நீங்­கள் செய்­வது சட்­டப்­படி சரி­யான நட­வ­டிக்கை அல்ல. எம்­மி­டம் உங்­கள் வீடி­யோக்­கள் உள்­ளன. உங்­கள் அனை­வ­ரும் கைது செய்ய முடி­யும். காணொ­லி­க­ளின் உத­வி­யு­டன் அனை­வ­ரை­யும் கைது செய்ய முடி­யும். 20 ஆண்­டு­கள் உங்­க­ளைச் சிறை­யில் அடைக்க முடி­யும் என்று கடுந்­தொ­னி­யில் காங்­கே­சன்­துறை உத­விப் பொலிஸ் அத்­தி­யட்­ச­கர் கூறி­னார்.

பிடி­பட்­டோர் விடு­விப்பு

காங்­கே­சன்­துறை உத­விப் பொலிஸ் அத்­தி­யட்­ச­கர் (தரம் 1) ஒரு­பு­றம் மீன­வர்­களை அச்­சு­றுத்­தும் தொனி­யில் பேசிக் கொண்­டி­ருக்க ஏனைய பொலி­ஸார் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்த வெளி­மா­வட்ட மீன­வர்­களை மெல்ல மெல்­லத் தமது வாக­னத்­தில் ஏற்­றி­னார்­கள்.

அதைச் சற்­றுத் தாம­த­மா­கவே மீன­வர்­கள் அவ­தா­னித்து சங்க வளா­கக் கதவை மூட முயன்­ற­போ­தும், அதற்­குள்­ளாக பொலிஸ் வாக­னம் சீறி வெளி­யே­றி­யது. அப்­போது காங்­கே­சன்­துறை உத­விப் பொலிஸ் அத்­தி­யட்­ச­கர் கேற்றை மூடச் சொன்­ன­வ­ரை­யும் வீடியோ எடுங்­கள் என்­றார்.

தடுத்து வைப்பு

மீட்­டுச் சென்ற வெளி­மா­வட்ட மீன­வர்­கள் பருத்­தித்­துறை பொலிஸ் நிலை­யத்­தில் தடுத்து வைக்­கப்­பட்­ட­னர். இந்த விட­யம் தொடர்­பில் மேல­திக நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும் என்று பொலி­ஸார் தெரி­வித்­துள்­ள­னர்.

https://newuthayan.com/story/09/கடலட்டை-பிடித்தோரை-மடக்கிப்-பிடித்தும்-ஏமாற்றம்-அடைந்த-வடமராட்சி-மீனவர்கள்.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.