Jump to content

நயன்தாராவை பார்த்தால் வியப்பாக இருக்கிறது: ஜோதிகா


Recommended Posts

நயன்தாராவை பார்த்தால் வியப்பாக இருக்கிறது: ஜோதிகா சிறப்பு பேட்டி

 

 
36VAYADHINILE122394680f

ஜோதிகா | கோப்புப்படம்.

தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸில் 2018-ம் ஆண்டு சிறப்பான ஆண்டு என்கிறார் நடிகை ஜோதிகா. பாலாவின் 'நாச்சியார்', மணிரத்னத்தின் 'செக்கச் சிவந்த வானம்', ராதா மோகனின் 'காற்றின் மொழி', புதிதாக இரண்டு படங்களில் ஒப்பந்தம் என்று பிஸியாக இருக்கிறார் ஜோ. அவருடனான சந்திப்பில்..,

'செக்கச் சிவந்த வானம்' இசை வெளியீட்டு விழாவில் அத்தனை நடிகர்களும் வந்திருந்தனர். உங்களைப் பார்க்க முடியவில்லையே...

 

அந்த நேரத்தில் என்னுடைய குழந்தைகளுக்கு விடுமுறை விட்டிருந்தது. இமயமலைக்கு ட்ரெக்கிங் சென்றிருந்தோம். அவர்களின் விடுமுறையின்போது பொதுவாக நான் எந்த வேலையையும் வைத்துக் கொள்வதில்லை.

சொல்லப்போனால் நானும் சூர்யாவும் ஆண்டின் ஆரம்பத்திலேயே ஒன்றாக உட்கார்ந்து முக்கியமான நாட்களையும், குழந்தைகளின் விடுமுறைகளையும் குறித்துக் கொள்வோம். அந்த நாட்கள் எங்களுக்கானவை. அதில் எந்த மாற்றமும் செய்வதில்லை.

எந்த காரணத்துக்காக அரவிந்த் சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய், அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், பிரகாஷ் ராஜ் என ஏராளமானோர் நடிக்கும் 'செக்கச் சிவந்த வானம்' படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டீர்கள்?

முதல் காரணம், அது மணி சார் படம், அவர் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் அத்தனை அழகாக எழுதுவார். எல்லா நடிகர்களுக்கும் அதில் நடிக்க சமமான வாய்ப்பு இருக்கும்.

மணி ரத்னத்துடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் எப்படி இருந்தது?

படப்பிடிப்பில் நான் தொடர்ந்து அவரைக் கவனித்துக் கொண்டே இருப்பேன். அவருடன் சேர்ந்து வேலை பார்த்தேன் என்பதை என்னால் இன்னும் நம்பவே முடியவில்லை, அதுவும் என்னுடைய இரண்டாவது இன்னிங்ஸில்...

படப்பிடிப்புத் தளத்துக்கு உயிர்கொடுப்பதே அவர்தான். கேமரா இயங்குவதற்கு முன்னால் எங்கள் ஒவ்வொருவருடனும் உட்கார்ந்து பேசுவார். எது சரி, எது தவறு என்று நாங்கள் கூறவேண்டும் என எதிர்பார்ப்பார்.

படத்தில் அரவிந்த் சாமியின் மனைவியாக நடித்திருக்கிறீர்கள்...

ஆம், படத்தில் உள்ள அனைத்துப் பெண்களுக்கும் ஒவ்வொரு பிரச்சினை இருக்கும். ஆனால் அதுகுறித்து ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு பார்வை இருக்கும்.

17MPccvjo11jpg

'செக்கச் சிவந்த வானம்' படத்தில்

 

பாலா படத் தளத்தில் இருந்து, மணி ரத்னத்தின் படத்துக்குள் வருவது எப்படி இருந்தது?

இரண்டு இயக்குநர்களுமே வெவ்வேறு விதத்தில் தாக்கத்தை ஏற்படுத்துபவர்கள். மணி சார் சொல்லிக்கொண்டே இருப்பார். ''ஜோ, 'நாச்சியார்' படத்திலிருந்து வெளியே வாருங்கள்!'' என்று.

பாலா படத்தில் அவரே பொறுப்பு எடுத்துக் கொள்வார். அங்கு நடிக்கும்போது உங்களால் தவறு செய்யமுடியாது.தேவையான உணர்ச்சிகளை எடுத்துக் கொள்வதில் அவர் மேஜிக் நிகழ்த்துவார்.

மணி சார் உங்களுடைய கதாபாத்திரத்தை முழுமையாக உள்வாங்க விடுவார். ஒரே நேரத்தில் இரண்டு சிறப்பான இயக்குநர்களிடம் பணியாற்றியதில் மகிழ்ச்சி.

'நாச்சியார்' பட விளம்பரத்தில் நீங்கள் பேசிய வார்த்தை, ஏராளமான விமர்சனத்துக்கு உள்ளானது பற்றி...

இதை நான் ஸ்டைலுக்காகச் செய்யவில்லை. அது ஒரு காரணத்துக்காக சொல்லப்பட்டது. ஒரு நடிகையாக சமூகப் பொறுப்புள்ள விஷயங்களைச் செய்யவே விரும்புகிறேன். பாலாவின் படமும் அதைத்தான் முன்னெடுப்பதாக நினைக்கிறேன்.

உங்களின் மகளை யாராவது தொட்டால், அவரை அடிப்பதோ, மோசமான வார்த்தையால் திட்டுவதோ, ஓர் அம்மாவுக்கு இயல்பானதுதான். 'நாச்சியார்' படத்துக்காக என்னுடைய பாதுகாப்பு வளையத்தில் இருந்து (comfort zone) நான் வெளியே வரவில்லை.

தும்ஹரி சுலு’ என்னும் இந்திப் படத்தின் தமிழாக்கத்தில் நடிக்கிறீர்கள்.. அனுபவம் எப்படி இருக்கிறது?

தமிழ்ப் பெண் எப்படி இருப்பாளோ, யோசிப்பாளோ அதற்கேற்றவாறு இங்கு மாற்றம் செய்திருக்கிறோம். மூலப்படத்தை எடுத்தவர் புத்திசாலியாக இருக்கும்போது, ரீமேக்கை சிறப்பாக எடுப்பது சிரமம்தான். முடிந்தவரை சிறப்பாகச் செய்திருக்கிறோம்.

பெரிய ஹீரோக்கள், பெரிய படங்கள்... உங்களுடைய முதல் இன்னிங்ஸைத் திரும்பிப் பார்த்தால் எப்படி இருக்கிறது?

அப்போது சிம்ரன், சினேகா, மீரா ஜாஸ்மின் என்னுடைய சமகாலத்திய நடிகைகளாக இருந்தார்கள். நாங்கள் பெரிய ஹீரோ படங்களில் நடித்தோம், அழுத்தமான கதாபாத்திரங்களும் கிடைத்தன.

'டும் டும் டும்', 'குஷி', 'பூவெல்லாம் உன் வாசம்' ஆகியவற்றை நினைத்துப் பாருங்கள். சில படங்களில் பணத்துக்காக நடித்திருந்தாலும் பெரும்பாலான படங்களில் அழுத்தமான பாத்திரங்களில் நடித்திருப்பேன்.

கோலிவுட்டில் நயன்தாரா முன்னணியில் இருக்கிறார். இரண்டு முறை தொடர்ந்து ஹிட் அடித்திருக்கிறாரே...

எப்போதும் கூடுதல் முயற்சிகளை எடுக்கும் அவரைப் பார்த்தாலே வியப்பாக இருக்கிறது. அது அத்தனை எளிதல்ல. ஹீரோக்களை முதன்மைப்படுத்தாத படங்களில், ஒரே நாளில் 3, 4 சீன்களில் நடித்து, குறிப்பிட்ட காலத்துக்குள் படத்தை முடித்துக்கொடுப்பது மிகவும் கடினமான காரியம்.

நடிப்பது பெரிய கலை. அத்துடன் பல தடைகளைத் தாண்டி நேரம், பட்ஜெட்டுக்குள் படத்தை முடித்துத் தருவது அதைவிடப் பெரிய கலை. ஒரு பெண்ணாக வெற்றிகளைப் பெற்று, நயன்தாரா தனக்கென ஒரு மார்க்கெட்டை உருவாக்கி இருப்பது பெரிய சாதனை.

முன்னணி நடிகைகள் இடையே போட்டி இருக்கிறதா?

நாங்கள் எல்லோரும் ஒன்றாக இருக்கிறோம். குறிப்பாக நயன்தாரா, சிம்ரன், நான். ஹீரோக்களுக்கு எல்லாமே கிடைக்கிறது. ஆனால் எங்களுக்கு ஓர் இசையமைப்பாளர் கிடைக்கக் கூடப் போராட வேண்டும். பெண்களை மையப்படுத்தும் படங்கள், தொடங்கப்படுவதற்கு முன்பே பிரச்சினைகளைச் சந்திக்கின்றன.

முன்னணி நடிகைகளாக நாங்கள் பிரியாணி சீன்களில் நடிக்க முடியாது. ஒயின் ஷாப்புகளில் இருக்க முடியாது, குழந்தை பெற்றாலும் குண்டாக இருக்கக் கூடாது, இளையவர்களுடன் ரொமான்ஸ் செய்ய முடியாது. வணிக ரீதியாக நிறைய விஷயங்களுக்கு நாங்கள் நோ சொல்கிறோம். ஆனால் அதை நினைத்து எனக்கு சந்தோஷம்தான்.

https://tamil.thehindu.com/cinema/tamil-cinema/article24968663.ece?utm_source=HP&utm_medium=hp-cinema

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இந்திய‌ அள‌வில் ஏவிம் மிசினுக்கு எதிர்ப்பு கூடுதே அண்ணா அது எத‌ற்காக‌.................ப‌ல‌ர் ஊட‌க‌ங்ளில் நேர‌டியா சொல்லுகின‌ம் ஏவிம் மிசினில் குள‌று ப‌டி செய்ய‌லாம் என்று ஏன் அவ‌ர்க‌ள் மீது தேர்த‌ல் ஆனைய‌ம் வ‌ழ‌க்கு போட‌ வில்லை................இப்ப‌டி கேட்க்க‌ ப‌ல‌ இருக்கு...............யாழிலே வ‌ய‌தில் மூத்த‌வ‌ர்க‌ள் எழுதி விட்டின‌ம் இந்தியாவில் தேர்த‌ல் என்ப‌து க‌ண்துடைப்பு நாட‌க‌ம் என்று அப்ப‌ புரிய‌ வில்லை இப்ப புரியுது...............இப்ப இருக்கும் தேர்த‌ல் ஆனைய‌ம் கிடையாது மோடியின் ஆனைய‌ம்..............ப‌ல‌ருக்கு ப‌ல‌ ச‌ந்தேக‌ம் வ‌ந்து விட்ட‌து த‌மிழ் நாட்டு தேர்த‌ல் ஆனைய‌ம் மேல்..........................
    • வைகோ தனது மகனை அரசியிலில் முன்னிறுத்துவதற்காக நீண்டகாலம் வைகோவிற்கு விசுவாசமாக இருந்த கணேசமூர்த்த்திக்கு  தேர்தலில் இடங் கொடுக்கவில்லை.. திமுக ஒரு இடம்தான் கொடுக்குமென்றால் அதிமுகவுடன் கூட்டணி அமைந்திருந்தால் அவர்கள் கட்டாயம் 2 இடம் கொடுத்திருப்பார்கள்.கூட்டணிமாறுவது வைகோவுக்கு புதிதில்லை.வைகோவைக் திமுகவில் இருந்து வெளியேற்றியதற்காக எத்தனையோ போர் தீக்குளித்தார்கள். வாரிசு அரசியலை எதிர்த்து கட்சி தொடங்கியவர் அதே வாரிசு அரசியலைக் கையில் எடுத்தது மட்டுமல்ல யாரை எதிர்த்து கட்சி தொடங்கினாரோ அவரின் காலடியில் கிடக்கிறார். கணேசகமூர்த்தியின் சாவுக்கு வைகோவே பொறுப்பு.
    • தமிழ் தேசியத்தை தனது கட்சியின் கொள்கையாக கொண்டுள்ள சீமான் பிள்ளைகளை தமிழ்வழி கல்வியில் சேர்க்காதது தவறான முன்னுதாரணம்.. படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோவில் என்று வாழும் திராவிடகட்சிகளுக்கும் தனக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதை தனது சில அண்மைக்கால நடவடிக்கைகள் மூலம் சீமான் வெளிப்படித்தி வருகிறார்.. அவரை நம்பி பின்தொடரும் பல லட்சம் இளைஞர்கள் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக நாம் தமிழர் இருக்கும் என்று வந்தவர்கள்.. இலட்சிய பிடிப்புள்ளவர்கள்.. இப்படியான செயல்களை அவர்களை வெறுப்பேற்றும்.. நமக்கெதுக்கு வம்பு.. நம்மூர் அரசியலே நாறிக்கிடக்கு.. தமிழக உறவுகள் தம் அரசியலை பார்த்துக்கொள்வார்கள்..
    • சாந்தனின் இறுதி ஊர்வலத்தில் தமிழ் தேசியம் இன்னமும் உயிருடன் இருப்பது போலவே உணர முடிந்ததே?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.