Jump to content

பொறுப்­புக்­கூறும் விட­யத்தில் ஜனா­தி­ப­தியின் புதிய யோசனை


Recommended Posts

பொறுப்­புக்­கூறும் விட­யத்தில் ஜனா­தி­ப­தியின் புதிய யோசனை

 

இறுதி யுத்­தத்தின் போது இடம்­பெற்ற மனித உரிமை மீறல்கள், யுத்­தக்­குற்­றங்கள் தொடர்பில் உரிய விசா­ரணை நடத்தி நீதி வழங்­கு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்­டு­மென்று ஐ.நா. மனித உரிமை பேரவை வலி­யு­றுத்தி தீர்­மா­னங்­களை நிறை­வேற்­றி­யுள்ள நிலையில் அதற்­கான நட­வ­டிக்­கை­களை எடுப்­பதில் இலங்கை அர­சாங்கம் காலம் ­தாழ்த்தி வரு­கின்­றது. சர்­வ­தேச நீதி­ப­தி­களை உள்­ள­டக்­கிய உள்­ளக விசா­ரணைப் பொறி­மு­றையின் கீழ் விசா­ர­ணை­களை மேற்­கொள்­வ­தற்கு நல்­லாட்சி அர­சாங்கம் இணங்­கி­யி­ருந்­த­போ­திலும் அதற்­கான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­ட­வில்லை.

நல்­லாட்சி அர­சாங்­கத்தின் மீது சர்­வ­தேச சமூகம் நம்­பிக்கை வைத்து இரண்டு வரு­ட­கால அவ­கா­சமும் வழங்­கப்­பட்­டி­ருந்­தது. இந்த இரண்­டு­வ­ரு­ட­கால அவ­காசம் அடுத்த வருடம் மார்ச் மாதத்­துடன் முடி­வ­டை­ய­வுள்­ளது. இந்­தக்­கால எல்­லைக்குள் பொறுப்­புக்­கூறும் விட­யத்தில் நல்­லாட்சி அர­சாங்கம் உரிய நட­வ­டிக்­கை­களை எடுக்­குமா என்ற சந்­தேகம் தற்­போது வலு­வ­டைந்­தி­ருக்­கின்­றது.

2015ஆம் ஆண்டு செப்­டெம்பர் மாதம் 1ஆம் ­தி­கதி இலங்கை தொடர்­பான 30/1 தீர்­மானம் ஐ.நா. மனித உரிமை பேர­வையில் நிறை­வேற்­றப்­பட்­டது. இதற்கு நல்­லாட்சி அர­சாங்கம் இணை அனு­ச­ரணை வழங்கி ஏற்­றுக்­கொண்­டி­ருந்­தது. இதே­போன்றே 34/1 தீர்­மா­னமும் அதன் பின்னர் நிறை­வேற்­றப்­பட்­டி­ருந்­தது. இந்த தீர்­மா­னங்­க­ளுக்கு அனு­ச­ரணை வழங்­கிய நல்­லாட்சி அர­சாங்கம் இன்­னமும் பொறுப்­புக்­கூறும் விட­யத்தில் அக்­கறை செலுத்­தாத நிலைமை நீடித்து வரு­கின்­றது. தற்­போது ஐ.நா. மனித உரிமை பேர­வையின் 39 ஆவது அமர்வு நடை­பெற்று வரும் வேளையில் அர­சாங்­கத்தின் மந்­த­க­ர­மான செயற்­பாடு தொடர்பில் கடும் அதி­ருப்தி தெரி­விக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது.

இந்த நிலை­யில்தான் ஐ.நா. மனித உரிமை ஆணைக்­கு­ழுவின் முன்­மொ­ழி­வுகள் தொடர்பில் புதிய யோச­னை­யொன்றை ஐ.நா. பொதுச்­ச­பைக்­கூட்­டத்தில் முன்­வைக்­க­வுள்­ள­தாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்­துள்ளார். இலங்கை மீதான மனித உரிமை மீறல் குற்­றச்­சாட்­டுக்கள் மற்றும் யுத்­தத்­திற்குப் பின்­ன­ரான நிலை­வரம் என்­ப­வற்­றுக்­கான தீர்­வுகள் தொடர்­பா­கவே இந்த யோச­னையை தான் முன் வைக்­க­வுள்­ள­தாக ஜனா­தி­பதி அறி­வித்­தி­ருக்­கின்றார்.

கடந்த வெள்­ளிக்­கி­ழமை ஊடக நிறு­வ­னங்­களின் பிர­தா­னி­களை ஜனா­தி­பதி மாளி­கையில் சந்­தித்து கலந்­து­ரை­யா­டிய ஜனா­தி­பதி இந்த விடயம் தொடர்பில் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்றார். ஐ.நா. மனித உரிமை பேரவை இலங்­கைக்கு முன்­வைத்­துள்ள பிரே­ர­ணை­களை நடை­மு­றைப்­ப­டுத்­துதல் தொடர்பில் சலு­கை­களைப் பெற்­றுக்­கொள்ள, நாட்டின் சுயா­தீனத் தன்மை மற்றும் தேசிய பாது­காப்­பிற்கும் முப்­ப­டை­யி­னரின் கௌர­வத்­திற்கும் பாதிப்பு ஏற்­ப­டா­த­வ­கையில் செயற்­ப­டுதல் ஆகிய விட­யங்­களை உள்­ள­டக்­கியே தான் யோச­னையை முன்­வைக்­க­வுள்­ள­தாக அவர் தெரி­வித்­துள்ளார்.

ஐ.நா. பொதுச்­ச­பைக்­கூட்­டத்தில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கலந்­து­கொண்டு எதிர்­வரும் 25ஆம் திகதி உரை­யாற்­ற­வுள்ளார். இந்த உரையின் போதே தனது புதிய யோச­னை­யினை அவர் முன்­வைக்­க­வுள்ளார். ஐ.நா. மனித உரிமை ஆணைக்­குழு முன்­னி­லையில் பாது­காப்பு படை­யி­ன­ருக்கு எதி­ராக முன்­வைக்­கப்­பட்­டுள்ள குற்­றச்­சாட்­டுக்­களைப் போன்றே கடந்த யுத்­த­ கா­லத்தில் இரு­த­ரப்­பி­ன­ருக்­கு­மி­டையில் இடம்­பெற்­ற­தாக கூறப்­படும் சில சம்­ப­வங் கள் தொடர்பில் இன்னும் தீர்க்­கப்­ப­டா­துள்ள பல பிரச்­சி­னை­களை சுமு­க­மாக தீர்த்­துக்­கொள்­வ­தற்கு இந்த யோசனை ஊடாக வாய்ப்பு ஏற்­படும் என்­பதே ஜனா­தி­ப­தியின் நிலைப்­பா­டாக உள்­ளது.

தனது யோச­னைகள் அடங்­கிய எழுத்­து­மூ­ல­மான அறிக்­கையை ஐ.நா. செய­லா­ள­ரி­டமும் ஐ.நா. மனித உரிமை ஆணை­யா­ள­ரி­டமும் கைய­ளிக்­க­வுள்­ள­தா­கவும் ஜனா­தி­பதி இந்த சந்­திப்­பின்­போது சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்றார்.

இத­னை­விட கடந்­த­வாரம் இடம்­பெற்ற வைப­வ­மொன்றில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றிய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன யுத்­தக்­குற்­றச்­சாட்­டுக்­க­ளி­லி­ருந்து படை­யி­னரை மீட்கும் வகையில் ஐ.நா. பொதுச்­ச­பைக்­கூட்­டத்தில் யோச­னையை முன்­வைத்து தான் உரை­யாற்­ற­வுள்­ள­தாக தெரி­வித்­தி­ருந்தார். இதி­லி­ருந்து படை­யினர் மீதான யுத்­தக்­குற்­றச்­சாட்­டுக்­களை இல்­லாது செய்­ய­வேண்டும் என்ற நிலைப்­பாட்­டி­லேயே ஜனா­தி­ப­தியின் உரை அமை­ய­வுள்­ள­தாக கரு­தப்­ப­டு­கின்­றது.

மனித உரிமை மீறல் குற்­றச்­சாட்டு தொடர்பில் உரிய விசா­ரணை நடத்­தப்­படும் நிலையில் அந்த குற்­றச்­சாட்­டுக்­க­ளி­லி­ருந்து படை­யி­னரை விடு­விக்கும் வகையில் ஜனா­தி­பதி முன்­வைக்­க­வுள்ள யோச­னை ஐ.நா.வினால் எந்­த­ள­விற்கு ஏற்­றுக்­கொள்­ளப்­படும் என்ற கேள்வி தற்­போது எழு­கின்­றது.

2015ஆம் ஆண்டு சர்­வ­தேச நீதி­ப­தி­களை உள்­ள­டக்­கிய உள்­ளகப் பொறி­மு­றையின் கீழ் விசா­ரணை நடத்­தப்­ப­ட­வேண்­டு­மென்ற தீர்­மானம் ஐ.நா. மனித உரிமை பேர­வையில் நிறை­வேற்­றப்­பட்­ட­போதும் ஜனா­தி­பதி இந்த விசா­ர­ணையில் சர்­வ­தேச நீதி­ப­தி­களை உள்­ள­டக்க முடி­யாது என்ற நிலைப்­பாட்டில் ஆணித்­த­ர­மாக நின்­றி­ருந்தார். பல கூட்­டங்­களில் அவர் இதனை பகி­ரங்­க­மா­கவே தெரி­வித்­தி­ருந்தார். இதே நிலைப்­பாட்­டி­லேயே ஜனா­தி­பதி தற்­போதும் உள்­ளமை அவ­ரது கூற்­றுக்­க­ளி­லி­ருந்து புல­னா­கின்­றது.

இறுதி யுத்­த­கா­லத்தின் போது இடம்­பெற்ற சில மனித உரிமை மீறல் சம்­ப­வங்கள் தொடர்பில் தற்­போது குற்­றப்­பு­ல­னாய்­வுப்­ பி­ரி­வினர் விசா­ர­ணை­களை நடத்தி வரு­கின்­றனர். இந்த விசா­ர­ணை­களில் முப்­படை அதி­கா­ரிகள் பலரும் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். இவர்­களில் பலர் தற்­போது பிணையில் விடு­விக்­கப்­பட்­டுள்­ளனர். இந்த நிலை­யில்தான் கொழும்பில் ஐந்து மாண­வர்கள் உட்­பட 11 பேர் கடத்­தப்­பட்டு காணாமல் ஆக்­கப்­பட்ட வழக்கு விசா­ரணை தொடர்பில் கடற்­படை அதி­கா­ரிகள் பலரும் கைது­செய்­யப்­பட்­டி­ருந்­தனர். அதன் தொடர்ச்­சி­யாக முன்­னைய கடற்­படை தள­ப­தியும் கூட்­டுப்­ப­டை­களின் பிர­தா­னி­யு­மான ரவீந்­திர விஜ­ய­கு­ண­ரட்­ன­விடம் விசா­ரணை நடத்­து­வ­தற்கு குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரிவு முயன்­ற­போது அதற்கு கடும் எதிர்ப்பு தற்­போது தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இந்த விடயம் தொடர்பில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன விசேட அமைச்­ச­ர­வையைக் கூட்டி ஆராய்ந்­தி­ருந்தார். இத்­த­கைய நிலை­வரம் கார­ண­மாக தற்­போது பாது­காப்பு படை­களின் பிர­தா­னியை கைது­செய்­ய­வேண்­டிய அவ­சி­ய­மில்லை என்று அர­சாங்கம் அறி­வித்­தி­ருக்­கின்­றது.

ஐ.நா. மனித உரிமை பேர­வையின் பொறுப்­புக்­கூறல் தொடர்­பான தீர்­மா­னத்தை நிறை­வேற்­று­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­காத அர­சாங்­க­மா­னது இடம்­பெற்று வரும் சில குற்­றங்கள் தொடர்­பான விசா­ர­ணை­க­ளையும் தலை­யீடு செய்யும் நிலைமை தற்­போது தொடர்ந்து வரு­கின்­றது. இந்த நிலை­யில்தான் ஐ.நா. பொதுச்­ச­பைக்­கூட்­டத்­திலும் புதிய யோசனை ஒன்றை முன்­வைப்­ப­தற்கு ஜனா­தி­பதி திட்­ட­மிட்­டி­ருக்­கின்றார்.

இந்த விடயம் தொடர்பில் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்­பா­னது தனது அதி­ருப்­தி­யினை தெரி­வித்­தி­ருக்­கின்­றது. கூட்­ட­மைப்பின் பேச்­சா­ளரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எம். ஏ. சுமந்­திரன் இந்த விடயம் தொடர்பில் கடும் அதி­ருப்­தியை வெளி­யிட்­டுள்ளார். பொறுப்­புக்­கூறல் விட­யத்தில் இலங்­கையின் உள் நகர்­வுகள் மிகவும் மோச­மா­ன­தாக உள்­ளன. தமிழ் மக்­க­ளுக்கு நீதி கிடைக்கும் வரையில் சர்­வ­தேச மேற்­பார்வை இருப்­பது அவ­சி­ய­மாகும். உண்­மை­களை கண்­ட­றியும் பொறி­மு­றையில் இலங்­கையின் நீதித்­துறை செயற்­பா­டுகள் மோச­மா­ன­வை­யாகும். எனவே சர்­வ­தேச நீதி­மன்ற தலை­யீ­டுகள் அவ­சியம் என்று சுமந்­திரன் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

இத­னை­விட ஜனா­தி­ப­தியின் புதிய யோசனை தொடர்பில் கருத்து தெரி­வித்­துள்ள சுமந்­திரன் எம்.பி. இலங்­கையில் இடம்­பெற்­றுள்­ள­தாக தெரி­விக்­கப்­படும் போர்க்­குற்­றங்­க­ளி­லி­ருந்து படை­யி­னரை பாதுகாக்கும் நோக்கில் ஐ.நா.விற்கு புதிய யோசனையொன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வைத்தால் அதனை ஒரு அங்குலம் கூட முன்நகர இடமளிக்கமாட்டோம் என்று அவர் கூறியிருக்கின்றார்.

 உண்மையிலேயே இறுதி யுத்தத்தின் போது உயிர்களையும் உடைமைகளையும் இழந்த மக்கள் பல்வேறு துன்பங்களுடன் வாழ்ந்து வருகின்றனர். இவ்வாறு இழப்புக்களை சந்தித்த மக்கள் தமக்கு நீதி வழங்கப்படவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் சர்வதேச சமூகத்திற்கு அளித்த வாக்குறுதிக்கு இணங்க பொறுப்புக்கூறும் விடயத்தில் அரசாங்க மானது உண்மையான அக்கறை காண்பிக்கவேண்டும். அதற்கான உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். ஆனால் அவ்வாறு செயற்படாது அரசாங்கமானது எதிர்மறையான செயற்­பாட்டில் ஈடுபடுவதாகவே தெரிகின்றது. நாட்டில் உண்மையான நல்லிணக்கம் ஏற்படவேண்டுமானால் பொறுப்புக்கூறும் விடயத் தில் அரசாங்கம் அக்கறை செலுத்த வேண்டும் என்பதை சுட்டிக் காட்ட விரும்புகின்றோம்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-09-17#page-4

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் எப்போதும் என்னை தேர்தல் விற்பனர் என்றோ - என் கணிப்புகள் திறம் என்றோ சொன்னதில்லை.  நான் என்ன லயலா கொலிஜா அல்லது இந்தியா டுடேயா? சர்வே எடுக்க. அல்லது சாத்திரக்காரனா🤣 நான் கணிக்கிறேன் என நீங்கள் எழுதுவதே சுத்த பைத்தியக்காரத்தனம். எல்லாரையும் போல் நான் என் கருத்தை எதிர்வுகூறலாக எழுதுகிறேன். அது என் கருத்து மட்டுமே. Pure speculation. அது சரி வரும், பிழைக்கும் - I don’t give a monkey’s.
    • சீமான் பேசுவ‌தை உள‌வுத்துறை தொட்டு ப‌ல‌ர் கேட்ப‌து உண்டு சீமான் தேர்த‌ல் ஆணைய‌த்தை ப‌ற்றி அவ‌தூறாக‌ பொய்யாக‌ பேசி விட்டார் என்று வ‌ழ‌க்கு தொடுக்க‌ வேண்டிய‌து தானே நீங்க‌ள் சொல்லுவ‌து ம‌ட்டும் உண்மை என்று எத‌ன் அடிப்ப‌டையில் ந‌ம்புவ‌து இத‌ற்க்கு உங்க‌ளால் ப‌தில் அளிக்க‌ முடியுமா.....................நேர்மையான‌வ‌ர்க‌ள் என்றால் நேர்மையின் ப‌டி தான் ந‌ட‌ப்பின‌ம் 2009க்கு முத‌ல் ஒரு முக‌ம் 2009க்கு பின் இன்னொரு முக‌ம் இதில் சீனானை ப‌ற்றி விம‌ர்சிப்ப‌து வெக்க‌க் கேடு.................... சீமான் ஊட‌க‌த்துக்கு கொடுத்த‌ பேட்டி அப்ப‌டியே இருக்கு அதை ப‌ல‌ ல‌ச்ச‌ம் பேர் பார்த்து இருக்கின‌ம் தேர்த‌ல் ஆணைய‌த்துக்கு சீமான் பேசின‌து தெரியாம‌ போகுமா அல்ல‌து உள‌வுத்துறை இப்ப‌டியான‌ விடைய‌த்தில் தூங்கி கொண்டு இருக்குமா ஜ‌ன‌நாய‌க‌ நாட்டின் தேர்த‌ல் ஆணைய‌த்தை சீமான் தேவை இல்லாம‌ அவ‌தூறாக‌ பொய்யாக‌ பேசி விட்டார் என்று சீமானை கைது செய்து இருக்க‌லாமே அல்ல‌து சீமான் பிர‌ச்சார‌ம் செய்ய‌க் கூடாது என்று த‌டை விதித்து இருக்க‌லாமே தேர்த‌ல் ஆனைய‌ம்........................பொல்லை கொடுத்து அடி வேண்ட‌ வேண்டாம்😁........................
    • இதுவரை பல தரம் கேட்டும் நீங்கள் பதில் சொல்லாத கேள்வி-  இவ்வளவு மோசமான தேர்தல் முறையில், எப்படியும் தோற்கடிப்பார்கள் என தெரிந்து, அதுவும் தனியே ஏன் 2016 இல் இருந்து போட்டியிட்டு மண்ணை கவ்வுகிறார்? பேசாமல் தேர்தலுக்கு அப்பால் இயக்கம் நடத்தலாமே? வாங்கோ என்னை வசைபாட எனவே வாழும் அகலிகை….சாரி யாழுக்கு வரும் கல்யாண். நான் கஜேஸ் கட்டுகாசு இழப்பார் என கூறவில்லை. நான் வெல்லமாட்டார்கள் என கூறிய அத்தனை தேர்தல்களிலும் அவர்கள் வெல்லவில்லை. கடந்த முறை சொன்னது போலவே யாழில் ஒரு சீட்டை எடுத்தார் பொன்னர். அம்பாறை மக்களை ஏமாற்றி அடுத்த சீட்டை 100 வாக்கு வித்தியாசத்தில் எடுத்தார் குதிரை கஜே.   நேற்று வைரவர் பூசை பலமோ?
    • மற்றவர்களிடம் கேள்வி கேட்கும் போதே நீங்களும் ஏதோ ஒரு ஐடியாவை வைத்துள்ளீர்கள் என நம்புகிறேன்.எடுத்து(துணிவாக) விடுங்கள் பார்க்கலாம். ஆப்பா  இல்லை காப்பா என பின்னர் பார்க்கலாம்.
    • உங்களுக்கு மேலே இருப்பது என் பதில். இப்போ யார் கோமாளி🤣 இதுவும் சீமான் ப்ரோ விட்டா இன்னொரு அவிட்டா. இல்லை என்றால் இப்படி தேர்தல் ஆணையம் சொன்ன ஆதாரம் எங்கே? அண்ணன் சொல்வதை எல்லாம் மொக்கு தம்பிகள் நம்பலாம். எல்லாரும் நம்ப தேவையில்லை. நீங்கள் ஏலவே என்னை 200 உபி என பல இடங்களில் எழுதிவிட்டீர்களே. எனக்கு ஒரு நற்பெயர் மீதும் ஆர்வம் இல்லை. அப்படி புற இருக்கோ இல்லையோ இ டோண்ட் கேர். இருந்தாலும் - சீமான் முகத்திரையை கிழிக்காமல் அந்த பெயரை தக்கவைப்பதிலும் பார்க்க கெட்ட பெயரே மேல்🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.