Jump to content

இரண்டு பக்கங்களிலும் கால்வைத்து பயணிக்க முயற்சிக்கிறது இந்தியா :


Recommended Posts

இரண்டு பக்கங்களிலும் கால்வைத்து பயணிக்க முயற்சிக்கிறது இந்தியா :

City-Page-01-colorGMGPage1Image0013-c5ed31d351f4d16de0e69686e09edf2f9ca39b31.jpg

 

(ஆர்.யசி)

அமைச்சர் மனோ கணேசன் விசனம்

இலங்கை விடயத்தில் இந்தியாவின் நிலைப்பாடு என்னவென தெளிவாக தெரிந்துவிட்டது. இரண்டு பக்கங்களிலும் கால்வைத்து பயணிக்கவே இந்தியா எத்தனிக்கின்றது என்று அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.  

இலங்கையின் ஆட்சியையோ ஜனாதிபதியையோ - பிரதமரையோ தீர்மானிப்பது நாமே தவிர இந்தியா அல்ல எனவும் அவர் குறிப்பிட்டார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொண்டதுடன் அங்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்புகளை முன்னெடுத்திருந்த நிலையில் இந்த விவகாரம் இலங்கையில் அரசியல் கட்சிகள் இடையில் மாறுபட்டு பல விமர்சனங்களை உருவாக்கியுள்ளது. இந்நிலையில் இது குறித்தும் ஏனைய அரசியல் காரணிகள் குறித்தும் அமைச்சர் மனோ கணேசன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது

முன்னாள் ஜனாதிபதி இந்தியாவுக்கான விஜயத்தை முன்னெடுத்திருந்தார். இதுவரை விமர்சனங்களை முன்வைத்தவர்கள் இன்று இந்தியாவுக்கு செல்லும் நிலைமை உருவாகியுள்ளது. இந்திய அரசாங்கதின் நிலைப்பாடு என்ன என்பது இப்போது எமக்கு தெளிவாக தெரிந்துவிட்டது. இந்தியா இரண்டு பக்கமும் கால் வைத்து பயணிக்கின்றது. இரு கரங்களையும் பிடித்து கொண்டுள்ளது. எமது அரசாங்கத்தை தமது தேவைக்காக பயன்படுத்த முயற்சிப்பது அவர்களுக்கு ஒரு முயற்சி மட்டுமேயாகும். ஆனால் நாம் மிகத் தெளிவாகவும் அவதானமாகவும் இந்தியாவை கையாண்டு வருகின்றோம். இந்த நாட்டின் ஜனாதிபதி யார், பிரதமர் யார், எவரை அரசாங்கமாக்குவது என்பதை நாமே தீர்மானிப்போம், எமது மக்களே தெரிவு செய்வார்கள் மாறாக இந்தியா அல்ல.

 இதே மஹிந்த ராஜபக் ஷ கூட்டணிதான் எமது அரசாங்கம் இந்தியாவுடன் கூட்டணி வைத்து செயற்பட்டு வருவதாக கூறினார்கள். இந்தியாவே ஆட்சி மாற்றத்துக்கு உதவியும் செய்தது எனவும் , அவர்களின் தேவைக்காக இந்த அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது என்ற கதைகளையும் கூறினார்கள். அவ்வாறு கூறியவர்கள் இப்போது இந்தியாவிற்கு சென்று, தோசை சாப்பிட்டு, வடை சாப்பிட்டு, பலூடா குடித்து, கை குலுக்கி, வாக்குறுதிகளையும் கொடுத்துவிட்டு வருகின்றனர். இது முகவும் வேடிக்கையாக உள்ளது. இரட்டை வேடம் யார் போடுகின்றனர் என்பதை மக்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.

 அடுத்த தேர்தலில் பொது வேட்பாளர் என்ற நோக்கம் இல்லை, ஐக்கிய தேசிய முன்னணியாக எமது அணியை பதிவு செய்ய வேண்டும் என்ற தீர்மானமே எம்மிடத்தில் உள்ளது. இதில் கூட்டணியின் பெயரை மாற்றவும் தீர்மானம் உள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி என்ற பெயர் இல்லாத பொதுப் பெயர் வைத்து ஐக்கிய தேசியக் கட்சியுடன் இதுவரை இணைந்து செயற்படாத கட்சிகளை இணைத்துக்கொண்டு செயற்படவும் வாய்ப்புகளை உருவாக்கியுள்ளோம். இதில் வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது. இது நல்லாட்சி, அதற்கான அடையாளம் இந்த ஆட்சியில் உள்ளது. எமது தரப்பில் குற்றச்சாட்டுகளில் அடையாளப்படுத்தப்படும் நபர்களும் அதிகாரத்தை பயன்படுத்தி தப்பிக்காது நீதிமன்றம் சென்று, தம்மை நிருபிக்க வேண்டும் என்ற நிலைமையை உருவாக்கியுள்ளோம். தாம் சுற்றவாளிகள் என்றால் நீதிமன்றத்தில் நிருபிக்க வேண்டும், நிருபிக்க முடியாதவர்கள் சிறைக்கு செல்ல வேண்டும். இதில் எமது தரப்பு ஏனைய தரப்பு என்ற பாகுபாடுகள் எவையும் இல்லை எனக் குறிப்பிட்டார்.

 

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-09-17#page-1

Link to comment
Share on other sites

17 hours ago, நவீனன் said:

இலங்கை விடயத்தில் இந்தியாவின் நிலைப்பாடு என்னவென தெளிவாக தெரிந்துவிட்டது. இரண்டு பக்கங்களிலும் கால்வைத்து பயணிக்கவே இந்தியா எத்தனிக்கின்றது என்று அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.  

தமிழின விரோத இந்திய அரச பிச்சைக்காரர்களிடம் மனோகணேசன் எதிர்பார்த்த ஏதோ ஒன்று கிடைக்கவில்லை என்ற ஆதங்கம் தான்! 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.