Jump to content

இன்­றைய கூட்­டாட்­சி­யின் விரி­வாக்­கம்!!


Recommended Posts

இன்­றைய கூட்­டாட்­சி­யின் விரி­வாக்­கம்!!

 

 

 
sumanthiran1-720x450-720x405.jpg

 

 

வழக்கு
இன்­றைய பேரு­ரைக்­கான தலை­யங்­கம் சமஷ்டி பற்­றி­யது. இந்­தச் சொல் பெட­ரல் என்­கின்ற ஆங்­கி­லச் சொல்­லைக் குறிக்­கி­ற­தா­கத் தமி­ழிலே பயன்­ப­டுத்­தப்­பட்டு வந்­தி­ருந்­தா­லும் அது வட­மொழி சார்ந்த ஒரு சொல்­லா­கும். பொருத்­த­மான தமிழ்ச் சொல் இல்­லை­யென்­றா­லும் கூட்­டாட்சி அல்­லது இணைப்­பாட்சி என்ற சொற்­கள் தற்­போது பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன.

சமஷ்­டி­யைத் தனது அடிப்­ப­டை­யா­கக் கொண்­டி­ருக்­கின்ற இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யும் சில வரு­டங்­க­ளுக்கு முன்­னர் எமது யாப்­பிலே காணப்­ப­டும் வட சொற்­க­ளைத் தமிழ்ச் சொற்­க­ளாக மாற்­றி­ய­போது சமஷ்­டியை இணைப்­பாட்சி என்று மாற்­றி­யி­ருந்­தோம். இந்த மாற்­றத்தை எமது கொள்­கை­யில் ஏற்ப­டுத்­திய மாற்­ற­மா­கக் குற்­றம் சுமத்தி, பிரி­வி­னை­யைக் கோரு­வ­தா­கச் சொல்லி, எமக்­கெ­தி­ராக வழக்­கும் தாக்­கல் செய்­யப்­பட்­டது. இந்த வழக்­கின் விவ­ரங்­களை நான் பின்­னர் எடுத்­துக் கூறு­வேன். ஆனால் தற்­போ­தைக்கு இந்த உரை­யில் சமஷ்டி என்ற சொற் பாவ­னை­யையே நான் பயன்­ப­டுத்­தப் போகி­றேன்.

சமஷ்­டி­யைக் கொள்­கை­யா­கக் கொண்ட ஒரே அர­சி­யல் கட்சி இலங்கை தமிழ் அர­சுச் கட்சி. ஆனால் ஒட்­டு­மொத்­தத் தமிழ் மக்­க­ளு­டைய அடிப்­ப­டைக் கொள்­கை­யாக அது இன்று பரி­ண­மித்­தி­ருக்­கி­றது. எழு­பது வரு­டச் சுதந்­திரச் சரித்­தி­ரத்­தில் பல்­வேறு தமிழ்க் கட்­சி­கள் வெவ்வேறு கொள்­கை­களை முன்­வைத்­தி­ருந்­தா­லும் கூட அனைத்­துக் கட்­சி­க­ளும் இன்று இலங்கை தமிழ் அர­சுக் கட்­சி­யின் யாப்­பில் உள்ள கொள்­கையே தமது கொள்­கை­யென்று ஏற்­றுக்­கொண்­டுள்­ளன. இப்­ப­டி­யான சந்­தர்ப்­பத்­தில் சமஷ்டி ஆட்சி முறை என்­றால் என்ன என்­ப­தைத் தெளி­வாக வரை­ய­றுத்­துக் கூற வேண்­டி­யது இலங்கை தமிழ் அர­சுக் கட்­சி­யி­னு­டைய கட­மை­யென்று நான் கரு­து­கி­றேன்.

துல்­லிய வரை­வி­லக்­க­ணம் இல்லை
சமஷ்டி என்ற அர­சி­யல் கோட்­பாட்­டுக்கு குறித்­த­ வொரு வரை­வி­லக்­க­ணத்­தைக் கொடுப்­பது இய­லாத விட­யம். துல்­லி­ய­மான குறித்த வரை­வி­லக்­க­ணம் ஒன்­றைக் கொடுக்க முடி­யா­விட்­டா­லும் அத­னு­டைய வரை­ய­றை­க­ளை­யும், விரி­வாக்­கத்­தை­ யும் சற்று விளக்­க­மாக முன்­வைப்­பதே இந்­தப் பேரு­ரை­யின் நோக்­க­மா­கும்.

சமஷ்டி ஆட்­சி­முறை இருப்­ப­தா­கக் கூறப்­ப­டு­கிற ஏதே­னும் இரண்டு நாடு­க­ளு­டைய ஆட்­சி­மு­றை­கள் ஒரே மாதி­ரி­யாக இருப்­ப­தா­கக் காண­மு­டி­யாது. ஆனா­லும் சமஷ்­டி­யி­னு­டைய சில அடிப்­ப­டைப் பண்­பி­யல்­பு­கள் ஒரு­கு­றித்த நாட்­டின் ஆட்சி முறை­யில் இருக்­கின்­றதா, இல்­லையா? என்று பரி­சீ­லித்­துப் பார்க்க முடி­யும். ‘ஏவி டைசி’ என்­கின்ற மிகப் பிர­ப­ல­மான அர­சி­யல் அறி­வி­ய­லா­ள­ரு­டைய கருத்­துப்­படி சமஷ்டி என்­பது தேசிய ஒரு­மைப்­பாட்­டுக்­கும், பிராந்­தி­யங் கள், அரச அதி­கா­ரங்­களைக் கையாள்­வ­தற்­கும் இடை­யி­லான நடு­நி­லை­யைப் பேணு­கின்ற ஓர் அர­சி­யல் ஒழுங்­க­மை­பா­கும். அவ­ரு­டைய கருத்­துப்­படி சமஷ்­டி­யின் அடிப்­படைக் குணா­தி­சங்­க­ளா­வன:-

1. அர­ச­மைப்­புச் சட்­டத்­தி­னு­டைய மீயு­யர் தன்மை
2. வெவ்வேறு அரச அதி­கா­ரங்­க­ளைச் சம­மா­ன­தும் மட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட நிறு­வ­னங்­க­ளுக்­குப் பகிர்ந்­த­ளிப்­பது
3. அர­ச­மைப்­புச் சட்­டத்­துக்­கான வியாக்­கி­யா­னம் கொடுக்­கும் அதி­கா­ரம் நீதி­மன்­றத்­துக்கு வழங்­கப்­ப­டு­தல் என்­ப­னவாகும்
இதே­போன்று வெயாரி என்­கின்ற அறி­ஞ­ரின் கூற்­றுப்­படி சமஷ்டி அர­ச­மைப்பு என்­பது அர­சின் வெவ்வேறு மட்­டங்­க­ளுக்­குப் பிரித்­துக் கொடுக்­கப்­ப­டும் அதி­கா­ரங்­க­ளின் மீது அவை ஒவ்­வொன்­றும் முழு­மை­யான அதி­கா­ரத்­தைக் கொண்­டி­ருக்க வேண்­டும் என்­பதே ஆகும்.

ரொனால்ட் வட்ஸ், பொது­வான அர­சும் பிராந்­திய சுயாட்சி அல­கு­க­ளும் ஆட்­சி­ய­தி­கா­ரங்­கள் பகிர்ந்து கொள்­ளும் முறை என்று சமஷ்­டியை வர்­ணித்­தி­ருக்­கின்­றார். இவர் சமஷ்டி என்­பது, அதி­கார அல­கு­கள் ஒன்­றி­லி­ருந்து மற்­றது தன்­னு­டைய அதி­கா­ரத்­தைப் பெற்­றுக்­கொள்­ளா­மல் நேர­டி­யா­கவே அர­ச­மைப்­புச் சட்­டத்­தி­லி­ருந்து இறை ­மை­யி­ன் அடிப்­ப­டை­யில் பெற்­றி­ருக்க வேண்­டு­மெ­னக் கருத்­து­ரைத்­தி­ருக்­கி­றார்.

வட்­ஸி­னு­டைய சமஷ்­டிக் கோட்­பாட்டை எமது அர­ச­மைப்­புச் சட்ட நிபு­ணர் ரொஹான் எதி­ரி­சின்க பின்­வ­ரும் கூறு­க­ளா­கக் காண்­பித்­தி­ருக்­கி­றார்

1. குடி­மக்­கள் மீது நேர­டி­யாக அதி­கா­ரம் செலுத்­தும் தகை­மை­யுள்ள இரண்டு அரச அமை­வு­கள்: சில சுயா­தீ­னங்­களை உள்­ள­டக்­கிய சட்­ட­வாக்­கங்­கள் மற்­றும் நிறை­வேற்­ற­தி­கா­ரங்­க­ளையும் நிதி வளங்­க­ளை­யும் இவ்­விரு அரச அமை­வு­க­ளி­டையே சட்­ட­பூர்­வ­மா­கப் பகிர்ந்து கொள்­ளும் ஒரு முறைமை.
2. மத்­திய கொள்கை வகுப்பு நிறு­வ­னங்­க­ ளில் பிராந்­தி­யங்­க­ளின் அபிப்­பி­ரா­யங்­க­ளை­யும் பெற்­றுக்­கொள்­ளு­தல். இது மத்­தி­யி­லி­ருக்­கும் இரண்­டாம் (மேல்) சபைக்கு பிராந்­தி­யங்­கள் அல்லது மாகா­ணங்­கள் தமது பிர­தி­நி­தி­களை அனுப்­பு­வ­தன் மூலம் செயற்­ப­டுத்­த­லாம்.
3. ஓர் எழு­தப்­பட்ட, தன்­னிச்­சை­யாக மாற்­றப்­ப­ட­மு­டி­யாத மீயு­யர் அர­ச­மைப்­புச் சட்­டம்
4. மத்­திக்­கும் மாகா­ண­ங்க­ளுக்­கு­மி­டை­யி­லான சர்ச்­சை­க­ளைத் தீர்க்­கும் ஒரு நடு­நி­லை­யா­ளர்
5. மத்­தி­யும் மாகா­ணங்­க­ளும் சேர்ந்து கையா­ளு­கின்ற பொறுப்­புக்­களை நிறை­வேற்­று­வ­தற்­கான பொறி­முறை

13ஆம் திருத்­தச் சட்­டம்

இந்­தக் குணா­தி­ச­யங்­க­ளின் அடிப்­ப­டை­யில்­தான் 13ஆம் திருத்­தச்­சட்­டத்­தில் இருக்­கும் குறை­பா­டு­க­ளைத் தன்­னு­டைய பல கட்­டு­ரை­க­ளில் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கி­றார்.
13ஆம் அர­ச­மைப்­புத் திருத்­தம் 1987ஆம் ஆண்டு அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­ட­போது அந்­தத் திருத்­தம் இலங்­கை­யின் ஆட்சி முறையை ஒற்­றை­யாட்­சி­யி­லி­ருந்து சமஷ்டி ஆட்­சி­மு­றைக்கு மாற்­றி­வி­டு­மென்று குற்­றஞ்­சாட்­டிப் பலர் உயர் நீதி­மன்­றத்தை நாடி­யி­ருந்­த­னர்.

அர­ச­மைப்­புச் சட்­டத்­தின் இரண்­டாம் உறுப்­புரை இலங்­கையை ஓர் ஒற்­றை­யாட்சி முறை­யென்று வர்­ணித்­தி­ருக்­கின்ற கார­ணத்­தால், பொது வாக்­கெ­டுப்­பில்­லா­மல் 13ஆம் திருத்­தத்தை நிறை­வேற்ற முடி­யா­தென்­பது அவர்­க­ளு­டைய வாதம். இந்த மனுக்­களை விசா­ரித்த நீதி­மன்­றக் குழா­மில் ஒன்­பது நீதி­ய­ர­சர்­கள் இருந்­தார்­கள். அதில் நால்­வர் 13ஆம் திருத்­தம் ஒற்­றை­யாட்­சி­மு­றையை மீற­வில்­லை­யென்று தீர்ப்­ப­ளித்­தார்­கள். வேறு நால்­வர் 13ஆம் திருத்­தம் இலங்­கை­யி­னு­டைய அர­ச­மைப்பை ஒற்­றை­யாட்சி முறை­யி­லி­ருந்து சமஷ்டி முறைக்கு மாற்­றி­வி­டு­மென்ற சாரப்­ப­டத் தீர்ப்­ப­ளித்­தார்­கள். ஒன்­ப­தா­வது நீதி­ய­ர­ச­ரான பாரிந்த ரண­சிங்க 13ஆம் திருத்­தத்­தி­லி­ருந்த இரண்டு பிரி­வு­க­ளைச் சுட்­டிக்­காட்டி அவை மாற்­றப்­ப­டா­விட்­டால் பொது வாக்­கெ­டுப்பு அவ­சி­ய­மெ­னத் தீர்ப்­ப­ளித்­தார்.

அந்த இரண்டு பிரி­வு­க­ளை­யும் மாற்­றி­ய­மைத்த கார­ணத்­தால் தான் 13ஆம் திருத்­தம் பொது வாக்­கெ­டுப்பில்­லா­மல் நிறை­வேற்­றக்­கூ­டி­ய­தாக இருந்­தது. மாகாண நிர­லி­லுள்ள விட­ய­மொன்று சம்­பந்­த­மாக மாகா­ண­மொன்­றின் இணக்­க­மில்­லா­மல் மத்தி சட்­ட­மி­யற்­றி­னால் அந்­தச் சட்­டம் அந்­தக் குறித்த மாகா­ணத்­துக்­குப் பொருந்­தாது என்­கின்ற ஏற்­பாடே மாற்­றி­ய­மைக்­கப்­பட்டு அப்­ப­டி­யான சந்­தர்ப்­பத்­தில் மத்தி 2/3 என்ற பெரும்­பான்­மை­யோடு அந்­தச் சட்­டத்தை நிறை­வேற்­றி­னால் இணங்­காத மாகா­ணத்­துக்­கும் அது பொருந்­து­மென்­கின்ற மாற்­றம் செய்­யப்­பட்­டது. ஒற்­றை­யாட்­சி­யின் ஒரு குணா­தி­ச­ய­மா­கிய மத்­திய நாடா­ளு­மன்­றத்­தின் மீயு­யர் சட்­ட­வாக்­கத் தகைமை 13ஆம் திருத்­தத்­துக்குக் கொண்­டு­வ­ரப்­பட்ட மேற்­கூ­றிய சிறிய திருத்­தத்­தின் முலம் உறுதி செய்­யப்­பட்­டி­ருந்­தது.

இதன் கார­ணத்­தால் தான் திவி­நெ­கும திட்­டத்­துக்கு வட மாகா­ணம் இணங்­கி­யி­ராத போதும் 2/3 என்ற பெரும்­பான்­மை­யோடு அது நிறை­வேற்­றப்­பட்டு வடக்கு மாகா­ணம் மீதும் திணிக்­கப்­பட்­டது. வடக்கு மாகா­ணத்­தின் இணக்­கப்­பாடு இல்­லாத கார­ணத்­தால் சாதா­ரண பெரும்­பான்­மை­யோடு அந்­தச் சட்­டம் நிறை­வேற்­றப்­பட முடி­யாது என்­கின்ற உயர் நீதி­மன்­றத் தீர்ப்­புக்­கள், மாவை சேனா­தி­ரா­ஜாவை மனு­தா­ர­ரா­கக் கொண்ட இரண்டு வழக்­கு­க­ளூ­டா­கப் பெறப்­பட்­டன.

மாகாண நிர­லி­லுள்ள விட­யங்­கள் மீது இப்­ப­டி­யாக மத்­திய நாடா­ளு­மன்­றம் மேலா­திக்­கம் செலுத்­து­வ­தைத் தவிர்ப்­பது சமஷ்­டி­யின் முத­லா­வது அடிப்­ப­டைக் குணா­தி­ச­ய­மா­கக் கரு­த­லாம். சமஷ்­டி­யின் இரண்­டா­வது அடிப்­ப­டைக் குணா­தி­ச­ய­ மாக நான் கரு­து­வது மாகா­ணத்­துக்கு என்று பகிர்த்த­ளிக்­கப்­பட்ட அதி­கா­ரத்தை ஒரு தன்­னிச்­சை­யான அர­ச­மைப்­புத் திருத்­தத்­தின் மூலம் மத்தி மீளப்­பெற முடி­யா­த­தாக இருத்­தல் வேண்­டும்.

இவ்­வி­ரண்டு அடிப்­ப­டைக் குணா­தி­ச­யங்­க ­ளும் தற்­போது நடை­மு­றை­யி­லுள்ள 13ஆம் திருத்­தத்­தில் இல்­லாத கார­ணத்­தால் இது சமஷ்­டி­யல்ல என்று நாம் கூறி­னா­லும் கூட, மேற்­சொன்ன நான்கு நீதி­ய­ர­சர்­க­ளின் கருத்­துப்­படி 13ஆம் திருத்­தம் இலங்கை அர­ச­மைப்பை ஒற்­றை­யாட்­சி­யி­லி­ருந்து சமஷ்­டிக்கு மாற்­றி­யி­ருக்­கி­றது. ஆனால் மேற்சொன்ன திருத்­தங்­க­ளுக்­குப் பிறகு ஐந்து நீதி­ய­ர­சர்­கள் ஒற்­றை­யாட்சி முறை பாதிக்­கப்­ப­ட­வில்­லை­யெ­னச் சொன்ன கார­ணத்­தால் 5/4 பெரும்­பான்­மை­யின் அடிப்­ப­டை­யில் இன்று நடை­ மு­றை­யி­லி­ருக்­கும் ஒற்­றை­யாட்சி முறை­மை­யைப் பெய­ர­ள­வில் மட்­டு­மல்­லா­மல் உள்­ள­டக்­கத்­தி­லும் கொண்­ட­தாக அமைந்­தி­ருக்­கின்­றது.

ஒற்­றை­யாட்­சிக் கோட்­பாடு
ஒற்­றை­யாட்சி முறை என்­பது பிரிட்­ட­னில் உரு­வான ஒரு கோட்­பா­டா­கும். இது சட்­ட­வாக்­கல் அதி­கா­ரத்தை மட்­டும் மையப்­ப­டுத்­தி­ய­தா­கும். அதா­வது மத்­திய நாடா­ளு­மன்­றத்­துக்கு நிக­ரா­கச் சட்­டங்­களை ஆக்­கும் அதி­கா­ர­முள்ள வேறு நிறு­வ­னங்­கள் இருக்க முடி­யா ­தென்­பது அந்­தக் கோட்­பாட்­டின் அடித்­த­ள­மா­கும். எழு­தப்­ப­டாத அர­ச­மைப்­பைக் கொண்ட பிரிட்­டன் இன்­றைக்­கும் ஒற்­றை­யாட்­சி­யைக் கொண்­ட­தா­கக் கரு­தப்­ப­டு­கின்­றது. அப்­ப­டி­யி­ருந்தபோதி­லும் பிரிட்­ட­னில் இன்று இருக்­கும் அதி­கா­ரப் பகிர்­வின் விரி­வாக்­கம் எந்­தச் சமஷ்டி நாட்­டின் அதி­காரப் பகிர்­வுக்­கும் சளைத்­த­தல்ல.

1920ஆம் ஆண்­டில் அயர்­லாந்­தைத் தனி­நா­டா­கப் பிரித்­துக் கொடுத்த சட்­டத்­தி­லி­ருந்து 1998ஆம் ஆண்டு ஸ்கொட்­லாந்­துக்­குப் பிரிந்­து­செல்­லும் உரித்­தோடு அதி­கா­ரப்­ப­கிர்­வைக் கொடுத்த ஸ்கொட்­லாந்­துச் சட்­டம் வரைக்­கும், ஒற்­றை­யாட்­சி­யின் பிர­கா­ரம் பிரிட்­டன் நாடா­ளு­மன்­றத்­தி­லேயே நிறை­வேற்­றப்­பட்­ட­வை­யா­கும். கோட்­பாட்­ட­ள­வில் இந்­தச் சட்­டங்­க­ளைப் பிரிட்­டன் நாடா­ளு­மன்­றம் தன்­னிச்­சை­யாக நீக்­கம்­செய்­யும் தகை­மை­யைக் கொண்­டி­ருந்­தா­லும் கூட நடை­மு­றை­யில் அது எப்­போ­துமே சாத்­தி­ய­மற்­றது. ஆத­லால் பெய­ர­ள­வில் ஒற்­றை­யாட்சி முறை­யைப் பிரிட்­டன் கொண்­டி­ருந்­தா­லும், நடை­மு­றை­யில் உல­கி­லுள்ள பெரும்­பா­லான சமஷ்டி ஆட்­சி­மு­றையை விடக் கூடு­த­லான சமஷ்­டிக் குணா­தி­ச­யங்­க­ ளைக் கொண்­ட­தா­கக் காணப்­ப­டு­கின்­றது.

ஆகவே பலர் கரு­து­வ­தைப் போல சமஷ்டி என்­பது ஒற்­றை­யாட்­சிக்கு நேரெ­தி­ரான ஆட்­சி­முறை என்­பதை விடப் பெய­ர­ள­வில் ஒற்­றை­யாட்சி நாடு­க­ளுக்­குள்­ளும் முழு­மை­யாக ஊடு­ரு­வக்­கூ­டி­யது. ஆகவே ‘இன்­றைய சமஷ்­டி­யின் விரி­வாக்­கத்­தைப்’ பற்றிப் பேசு­கி­ற­போது ஒரு குறு­கிய வட்­டத்­துக்­குள் மட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட ஒரு முறை­மை­யாக அதை அணுக முடி­யாது.

சமஷ்டி
அமெ­ரிக்­கா­வின் அர­ச­மைப்­புச் சட்­ட­தில் சமஷ்டி என்ற சொல் பாவிக்­கப்­ப­ட­வில்லை. ஆனால் அமெ­ரிக்க அர­ச­மைப்­புச் சட்­டம் சமஷ்டிக் கட்­ட­மைப்­பி­லா­ன­தென்­ப­தில் எவ­ருக்­குமே சந்­தே­கம் கிடை­யாது.

பல நாடு­க­ளின் அர­ச­மைப்­புச் சட்­டங்­களை ஒப்­பீடு செய்­கின்ற தாமஸ் ஓ ஹூக்­லின்­னு ­டைய புத்­த­கத்­தில் கீழ்க் காணும் குறிப்­பு­க­ளை­யும் காண­லாம்.
ஸ்பெய்ன் நாட்­டி­னு­டைய அர­ச­மைப்­புச் சட்­டம் சமஷ்­டி­யென்று பெயர் குறிப்­பி­டப்­ப­ டாத போதி­லும் அதி­கா­ரப்­ப­கிர்வு அல­கு­க­ளின் சட்­ட­வாக்­கல் அதி­கா­ரத்தை மீறித் தேசிய அரசு சட்­டங்­கள் இயற்ற முடி­யாது.

அதே­போல் மத்­திய அரசு தன்­னிச்­சை­யாக அர­ச­மைப்­புச் சட்­டத்தை மாற்­ற­வும் முடி­யாது. இந்த இரண்டு கார­ணங்­க­ளின் நிமித்தம் ஸ்பெய்ன் நாடு பெய­ரில் தவிர மற்­றெல்­லா­வற்­றி­லும் சமஷ்டி நாடா­கக் கரு­தப்­ப­டு­கின்­றது. மாறாக ஆஸ்­தி­ரியா நாட்­டின் அர­ச­மைப்­புச் சட்­டத்­தில் பெய­ர­ள­வில் சமஷ்டி முறை­யென்று என்று அழைக்­கப்­பட்­டா­லும் மத்­தி­யின் மேலா­திக்­கம் மிக­வும் கூடி­ய­தா­கக் காணப்­ப­டு­கின்­றது.

எமது அண்­டைய நாடான இந்­தி­யா­வின் அர­ச­மைப்­புச் சட்­டம் ஒற்­றை­யாட்சி என்றோ, சமஷ்டி என்றோ பெய­ரி­டப்­ப­டாத ஒன்று. இது முழு­மை­யான சமஷ்­டி­யும் அல்ல, முழு­மை­யான ஒற்­றை­யாட்­சி­யும் அல்­லாத இரண்­டும் கலந்த ஒரு முறைமை என்று கூறப்­ப­டு­கின்­றது.

இந்­திய அர­ச­மைப்­புச் சட்­டத்தை வரைந்த அர­சி­யல் நிர்­ணய சபை­யின் தலை­வர் அம்­பேத்­கார் ‘‘எமது அர­ச­மைப்­புச் சட்­டம் காலச் சூழ்­நி­லை­க­ளின் தேவைப்­பாட்­டுக்­க­மைய ஒற்­றை­யாட்­சி­யா­க­வும் சமஷ்­டி­யா­க­வும் இருக்­கக்­கூ­டி­யது’’ என்று கூறி­யி­ ருக்­கின்­றார்.

சமஷ்­டிக் குணா­தி­ச­யம்
2014ஆம் ஆண்டு இலங்­கைத் தமிழ் அரசு கட்­சி­யின் செய­லர் என்ற வகை­யில் மாவை.சேனா­தி­ரா­ஜா­வுக்கு எதி­ராக 6ஆம் அர­ச­மைப்­புத் திருத்­தத்­துக்கு அமை­வா­கத் தொட­ரப்­பட்ட வழக்­கொன்­றின் தீர்ப்பு 2017ஆம் ஆண்டு ஓகஸ்ட் 4ஆம் திகதி தலைமை நீதி­ய­ர­சர் உள்­ளிட்ட மூன்று நீதி­ய­ர­சர்­க­ளைக் கொண்ட உயர் நீதி­மன்­றக் குழா­மொன்­றால் வழங்­கப்­பட்­டது. பல நாடு­க­ளி­னு­டைய அர­ச­மைப்பு, பல சட்ட நிபு­ணர்­க­ளின் கருத்­துக்­க­ளை­யும் ஆராய்ந்து வழங்­கப்­பட்ட தீர்ப்­பிலே பின்­வ­ரு­மாறு கூறப்­பட்­டி­ருக்­கின்­றது.

‘நாடு­களை ஒற்­றை­யாட்சி அல்­லது சமஷ்டி என்று பெய­ரி­டு­வது தவ­றான அர்த்­தத்­தைத் தரக்­கூ­டும். சில ஒற்­றை­யாட்சி நாடு­கள் சமஷ்டி குணா­தி­ச­யங்­க­ளோ­டும் சில சமஷ்டி நாடு­கள் சில ஒற்­றை­யாட்­சிக் குணா­தி­ச­யங்­க­ளோ­டும் காணப்­ப­ட­லாம். ஆகை­யால் இறைமை, அதி­கா­ரப் பகிர்வு மற்­றும் அதி­கா­ரப் பர­வ­லாக்­கம் என்­பவை ஓர் ஒற்­றை­யாட்சி அர­சுக்­குள் சமஷ்­டி­ மு­றை­யி­லான ஆட்­சி­மு­றையை ஏற்­ப­டுத்த வழி­வ­குக்­க­லாம்.’

‘சமஷ்டி’ என்று அழைக்­கப்­ப­டு­கின்ற அர­ச­மைப்­புச் சட்­டங்­க­ளைக் கொண்ட எல்லா நாடு­க­ளி­லே­யும் சில ‘ஒற்­றை­யாட்சி’ குணா­தி­ச­யங்­கள் காணப்­ப­டும். அந்த நாடு பிள­வு­ப­டா­மல் ஒரே நாடாக இருப்­ப­தற்­கான ஏற்­பா­டு­கள் தான் அந்த ஒற்­றை­யாட்­சிக் குணா­தி­ச­யங்­கள். அனால் இவற்­றைக் கார­ண­மா­கக் கொண்டு அது சமஷ்டி அல்­ல­வென்று கூறி­விட முடி­யாது.

இன்­றைய சமஷ்டி என்­பது வெறு­மனே பெய­ர­ள­வில் நின்­று­வி­டா­மல் எல்லா வகை­யான அர­ச­மைப்பு முறை­மை­க­ ளுக்­குள்­ளும் விரி­வாக்­கம் அடைந்­துள்­ளது. ஆகை­யால் சமஷ்­டி­யென்­பது வெறு­மனே பெய­ரால் மட்­டும் வர்­ணிக்­கப்­ப­டும் ஓர் ஆட்­சி­மு­றை­யாக இருக்­க­மு­டி­யாது. மாறாக ஒரு நாட்­டின் அர­ச­மைப்­புச் சட்­டத்­தின் உள்­ள­டக்­கத்தை ஆராய்­கின்ற போது சமஷ்­டி­யின் அடிப்­ப­டைக் குணா­தி­ச­யங்­கள் காணப்­ப­டு­மாக இருந்­தால், அதற்கு என்ன பெயர் கொடுத்­தா­லும், பெயரே கொடுக்­கா­விட்­டா­லும் அது சமஷ்டி ஆட்சி முறை­யா­கவே இருக்­கும்.

https://newuthayan.com/story/10/இன்­றைய-கூட்­டாட்­சி­யின்-விரி­வாக்­கம்.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் புல‌வ‌ர் அண்ணா🙏🥰.................................................................
    • ம்....ம்...ம் சொந்த மண்ணினத்தவெனையே பாகுபாடு பார்க்கும் தமிழ்நாட்டில்  இலங்கை பொண்ணு வாக்களிச்சு எத சாதிக்கப்போகுதாம்? 🤣 கவனம். உயிராபத்து நிறைந்த விடயம். 😎
    • இவ‌ர் சொல்வ‌தை கேலுங்கோ.......................... உத்திர‌பிர‌தேஸ்சில் 24  கோடி ம‌க்க‌ளுக்கு மேல் வ‌சிக்கின‌ம் அவ‌ர்க‌ளின் ஓட்டு ச‌த‌வீத‌ம் / புரிய‌ல‌.....................
    • வாக்களிக்க செல்லும் போது இவ்வளவு பணத்தை யாரும் எடுத்து செல்வார்களா? 😂
    • # Question Team1 Team 2 No Result Tie Prediction 1) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.     No Result Tie     CSK     Select CSK CSK   DC     Select DC Select   GT     Select GT Select   KKR     Select KKR KKR   LSG     Select LSG Select   MI     Select MI Select   PBKS     Select PBKS Select   RR     Select RR RR   RCB     Select RCB Select   SRH     Select SRH SRH 2) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.             #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4 புள்ளிகள் )         RR   #2 - ? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் )         CSK   #3 - ? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         KKR   #4 - ? (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி )         SRH 3) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         RCB 4) மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத் Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team         KKR 5) மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team         SRH 6) மே 24 வெள்ளி 19:30 சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator         CSK 7) Final போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5 புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2         CSK 😎 இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         CSK 9) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         GT 10) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Virat Kholi 11) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RR 12) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         JJ Bumra 13) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         MI 14) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் )         Virat Kholi 15) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RR 16) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Pathiran 17) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         csk 18) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Virat Kholi 19) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RR 20) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         CSK  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.