Jump to content

புலிகளின் போராட்டத்தை விடவும் பெரியதொரு போராட்டத்தை நடத்த யாரும் தயாரா?


Recommended Posts

புலிகளின் போராட்டத்தை விடவும் பெரியதொரு போராட்டத்தை நடத்த யாரும் தயாரா?

04PRO16092018Page1Image0003-a6cb53e02103b1ca302b8350b62ca2c9e42584eb.jpg

 

கர­வெட்டி பிர­தேச சபை பொது மண்­ட­பத்தில் நேற்று முன்தினம் நடை­பெற்ற தியாக தீபம் திலீ­பனின் 31ஆவது ஆண்­டு நினைவுநிகழ்வில் சுமந்­திரன் எம்.பி.   ஆற்­றிய உரை

தியாக தீபம் திலீ­பனின் 31 ஆவது நினைவு தினம் அனுஷ்­டிக்­கப்­ப­டு­கி­றது. எமது இன விடு­தலைப் பய­ணத்தில் பல வித­மான தியா­கங்கள் செய்­யப்­பட்­டுள்­ளன. அதில் அதிக தியாகம் செய்­த­வர்­களில் திலீபன் முக்­கி­ய­மா­னவர். அகிம்சை வழியில் எமது கட்சி பல ஆண்­டுகள் போரா­டி­யது. இடையில் ஆயுதப் போராட்டம் நடை­பெற்­றது. அப் போராட்­டத்தில் பலர் தமது உயிர்­களை அர்ப்­ப­ணித்­தனர். பலர் பல்­வேறு தியா­கங்­களைப் புரிந்­தனர். ஆயுதப் போராட்டத்தின் போது அகிம்சை வழியில் போரா­டிய திலீபன் உயிரை மாய்த்துக் கொண்டார். இத் தியா­கத்தின் மூலம் அவர் உயர்ந்த இடத்தைப் பெற்­றுள்ளார். பல்­லா­யி­ரக்­க­ணக்­கான தியா­கங்­களில் திலீ­பனின் தியாகம் பெரிதும் முக்­கி­யத்­துவம் வாய்ந்­தது. அவ­ரது தியாகம் பெரிதும் போற்­றப்­ப­டு­கின்­றது.

எங்கள் இனத்தின் விடு­தலை சுய­கௌ­ர­வத்­தோடும் சுய­நிர்­ண­யத்­தோடும் சுயாட்சி அதி­கா­ரத்­தோடு எமது மண்ணில் எமது தலை­வி­தியை நாங்­களே நிர்­ண­யிக்கும் வாழ்­வி­யலையப் பெறு­வதே எமது போராட்­டத்­தின் குறிக்­கோ­ளாக இருந்­தது. இதற்கு சாத்­தி­ய­மான சட்­டங்கள் இருந்­ததை நாம் கருதி வந்­துள்ளோம்.

இலங்கை தீவில் எமக்கு உரிமை கிடை­யாது என நாங்கள் தனி நாடு கோரினோம். ஆனால் 1988 ஆம் ஆண்டு இலங்­கையில் ஆட்சி அதி­காரம் பல­வந்­த­மான முறையில் ஏற்­ப­டுத்­தப்­பட்­ட­மையால் இலங்­கைக்குள் சுய உரிமை அடைய வழி­வ­கை­களைத் தேடுவோம் என முடிவு எடுத்தோம். 1988 ஆம் ஆண்டு அர­சியல் மாற்றம் நாங்கள் விரும்­பா­விட்­டாலும் அது நடந்­தது. இருந்­த­போதும் அதற்குள் இருந்­து­கொண்டு எமது இலக்­கினை அடைய நிர்ப்­பந்­திக்­கப்­பட்­டோம்.

1983 ஆம் ஆண்டு பிரி­வி­னைக்கு எதி­ராக 6 ஆவது திருத்தச் சட்டம் கொண்டு வரப்­பட்­டது. இதனை எங்கள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர்கள் சத்­தியப் பிர­மாணம் செய்ய மாட்டோம் என்று கூறி பத­வி­களை இழந்­தார்கள். மாகாண சபை முறைமை வந்­த­போது உள்­நாட்டு சுய­நிர்­ணய உரி­மையை அதன் மூலம் பெறலாம் என்று நாம் அனை­வரும் ஒரு கட்­சி­யாக இணைந்தோம். எமது பிர­தி­நி­திகள் பாரா­ளு­மன்றம் சென்­றார்கள். தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பும், அகில இலங்கை தமிழ்க் காங்­கிரஸ் கட்சி உறுப்­பி­னர்­களும் 6ஆவது திருத்தச் சட்­டத்தை ஏற்று சத்­தியப் பிரமாணம் செய்து கொண்­டார்கள். காங்­கிரஸ் உறுப்­பி­னர்­களும் தனிநாடு கோர­மாட்டோம் என சத்­தியப் பிரமாணம் செய்­தனர். இதனை 2001, 2002 ஆம் ஆண்­டு­களில் புலி­களின் தலைவர் பிர­பாகரன் ஒரு நாட்­டுக்குள் தீர்வு என்­பதை அச்­ச­ம­யத்தில் வெளிப்­ப­டுத்­தி­யி­ருந் தார். குறித்த ஆண்­டு­களில் புலி­களின் தலைவர் பிர­பாகரன் தனது உரையில் உள்­ளக சுய­நிர்­ணய அடிப்­ப­டையில் தீர்வு வரு­மானால் அதனைப் பரீ­சீ­லிக்க தயா­ராக இருப்­ப­தாகத் தெரி­வித்தார்.

2002 ஆம் ஆண்டு ஒரு இணக்­கப்­பாடு ஏற்­ப­டுத்­தப்­பட்­டது. ஒவ்­வொரு கால­கட்­டத்தில் ஒரு குறித்த நிலப்­ப­ரப்பில் நாங்கள் எங்­க­ளது தலை­வி­தியை நாங்­களே நிர்­ண­யிப்­ப­வர்­க­ளாக இருக்க வேண்டும் என்ற நிலை ஏற்­ப­டுத்­தப்­பட்­டது. சர்­வ­­­­­தேச ரீதியில் நாங்கள் சுய­நிர்­ணய உரி­மை­யைக் கொண்­டுள்ளோம் என்­பதை சர்­வ­தேசம் இணங்­கி­யது. ஆனால் தீர்வு எட்­ட­வில்லை. 2015 ஆம் ஆண்டு ஜன­வ­ரி ­மாதம் இந் நாட்­டுக்­கு எதிரும் புதி­ரு­மாக இருந்த இரண்டு பிர­தான அர­சியல் கட்­சிகள் ஒன்று சேர்ந்து அர­சியல் அபி­லா­ஷை­களை உரு­வாக்க வேண்டும் என இணங்­கி­ன. இவற்­றுடன் நாங்­களும் உடன்பட்டோம். தமிழ் மக்­களின் வாக்­குகள் தான் இதனை ஏற்­ப­டுத்­தி­ன. பொதுத் தேர்­த­லிலும் இது­வரை காலமும் ஏற்­ப­டாத இரு பிர­தான கட்­சிகள் ஒன்று சேர்ந்து ஆட்சி நடத்­தின. இந்த தேசிய அர­சா­னது ஒன்று சேர்ந்த காரணம் இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வு காண­வேண்டும் என்ற ஒன்­றுதான். அதை எதிர்க்­கட்சி வரி­சையில் இருந்து நாமும் ஆத­ரவு கொடுத்தோம். இதை நிறை­வேற்ற அர­சியல் அமைப்புச் சட்டம், மக்கள் கருத்­த­றியும் குழு என்­பன அமைக்­கப்பட்டு பார­ளு­மன்­றத்தில் யோச­னைகள் முன்­வைக்­கப்­பட்­டன. 2016 ஜன­வரி 9 ஆம் திகதி ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஆற்­றிய உரையில் அதனைக் குறிப்­பிட்­டி­ருந்தார். அதனை அவ­ருக்கு நாங்கள் ஞாப­கப்­ப­டுத்­து­ப­வர்­க­ளாக இருக்­கிறோம்.

வடக்கில் ஒற்­றை­யாட்சி என்றால் தமிழ் மக்கள் பயப்­ப­டு­கி­றார்கள். தெற்கில் சமஷ்டி என்றால் சிங்­கள மக்கள் பயப்­ப­டு­கி­றார்கள். ஒரு அரசியல் சட்டம் என்­பதும் மக்கள் பயப்­ப­டாமல் இருக்க வேண்டும். ஒரு இனத்­திற்கு முக்­கி­யத்­துவம் கொடுப்­பதோ, ஒரு சம­யத்­திற்கு முக்­கியம் கொடுப்­பதோ ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. அதன்­படி புதிய அர­சி­ய­ல­மைப்பு மும்­மு­ர­மாக ஏற்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்த காலத்தில் இடைக்­கால அறிக்கை வரும் போது சுதந்­திரக் கட்சி பின்­ன­டித்து 10, 11 மாதங்கள் பிற்­போடப்­பட்­டது. கடந்த வருடம் செப்­டெம்பரில்தான் இடைக்­கால அறிக்கை முன்­வைக்கப்­பட்­டன. 2016 ஜன­வரி 9 ஆம் திகதி ஜனா­தி­பதி ஆற்­றிய உரைக்கு அமைய பல மாற்­றங்கள் செய்­யப்­பட்­டது. அதைத் தொடர்ந்து உள்­ளூ­ராட்சி தேர்­தலில் அர­சுக்கு ஏற்­பட்ட பின்­ன­டை­வினால் 6 மாதத்­துக்குப் பின் பிரே­ரணை முன்­வைக்­கப்­பட்­டது. இது இந்த ஆட்­சியில் நிறை­வே­றுமா என்ற சந்­தேகம் பல­ரிடம் உண்டு. முற்று முழு­தாக நாங்கள் அர­சியல் உரி­மை­க­ளுக்கு பாதிப்பு ஏற்­ப­டாது அர­சியல் நகல் முன் வைக்­கப்­பட்­டது. இவை கட்­டாயம் நிறை­வேற்­றப்­பட்­டது.

2000 ஆம் ஆண்டு சந்­தி­ரிகா அரசு புதிய அர­சியல் வரைபு ஒன்றை கொண்­டு­வந்­தது. சிறப்­பான அந்த அர­சியல் நகல் வரைபு பாரா­ளு­மன்­றத்தில் வெற்றி பெற முடி­யாமல் போனது. இப்­படிப் பல வழி­களில் கைக்கு எட்­டி­யது வாய்க்கு எட்­டாமல் அல்­லது வாய்ப்பு கிட்ட வந்து தவ­றி­விட்­டது. இது போன்ற நிலை ஏற்­பட்­டது. நகல் வரைபு வர முன்னர் அது வெற்றி பெறுமா என்ற எண்ணம் மக்­க­ளிடம் வந்­துள்­ளது. இதை எப்­படி நம்­பு­வீர்கள் என்று கேட்­கின்­றீர்கள். நம்­பிக்­கை­யில்லாமல் ஒன்றும் செய்ய முடி­யாது. மாண­வர்கள் பரீட்­சையில் வெற்­றி­பெ­றுவோம் என்று நம்­பிக்­கையில் பரீட்சை எழு­தினால் தான் வெற்­றி­ பெ­ற­மு­டியும். அதே­போல விளை­யாட்­டு வீரர்­களும் வெற­்றி­பெ­றுவோம் என்ற நம்­பிக்­கையில் போட்­டி­யிட்­டால்தான் வெற்­றி­பெ­றலாம்.

இந்த முறை இம் முயற்சி முறிந்து பய­ன­ளிக்­கா­விட்டால் பாரிய விளை­வு­களை எதிர்­நோக்க வேண்டி வரும் என அர­சுக்கு எடுத்துச் சொல்­லி­யுள்ளோம்.

இன்று எமக்கு எதி­ராக பிர­சாரம் செய்­கின்­ற­வர்கள் கூட இது வெற்­றி­ய­ளிக்­காது எனப் பிரச்­சாரம் செய்­கி­றார்கள். நாங்கள் எங்­க­ளுக்கு எதி­ராகப் பிர­சாரம் செய்­ப­வர்­களைக் கேட்­டுக்­கொள்­வது என்ன வென்றால் உங்­களின் மாற்று வழி என்ன அதனை வெளிப்­ப­­டுத்­துங்கள். வெறு­மனே பத்­தி­ரி­கை­களில் அறிக்கை விடு­வதன் மூலமோ உணர்ச்­சி­வசமாக மக்­களை தூண்டும் வகையில் செயற்­ப­டு­வதன் மூலமோ எத­னையும் செய்­ய­மு­டி­யாது. அகிம்சை வழியில் உயிர் நீத்த தியாக தீபம் திலீபன் வழியில் செல்லப் போகி­றீர்­களா அதனை விட வேறு என்ன செய்­யப்­போ­கி­றீர்கள் அல்­லது புலி­களால் நடத்­தப்­பட்ட ஆயுதப் போராட்­டத்தை விட பெரிய போராட்டம் ஒன்றை ஆரம்­பிக்கத் தயாரா. உலக சரித்­தி­ரத்­திலே எவரும் தொட முடி­யாத, சிக­ரத்தை தொட்ட கலாட்­படை, கடற்­படை, விமா­னப்­படை, எல்­லாவற்­றையும் வைத்துப் போரா­டிய புலி­களின் போராட்­டத்­தை­விட நீங்கள் போராடப் போகி­றீர்­களா. அதை மக்­க­ளிடம் சொல்­லவும். அப்­ப­டி­யானால் உங்­க­ளிடம் உள்ள மாற்­றுவழி என்ன? மாற்று வழி­களைப் பிரே­ரிக்­காது நாங்கள் செய்யும் முயற்­சி­களை ஏளனம் செய்யும் உங்­க­ளது காரணம் என்ன. இந்த நாட்­டுக்குள் எங்­க­ளது தீர்­வினை பெற்றுக் கொள்ள அரசு இணங்க வேண்டும். நாங்கள் ஒன்றும் நியா­ய­மற்­றதைக் கோர­வில்லை. உல­கத்தில் வாழ்­கின்ற மக்கள் பெறு­கின்ற உரி­மை­களைத் தான் நாங்­களும் கோரு­கின்றோம். இதை அவர்கள் ஏற்­றுக்­கொள்ள வேண்டும். திரும்ப திரும்ப குண்டுச் சட்­டிக்குள் குதிரை ஓட்­டு­ப­வர்கள் போல ஒன்றும் தெரி­யாமல் இருக்­கக்­கூடாது. மாறாக அவர்­க­ளது சந்­தேகம் வலுக்­கக்­கூடிய வகையில் செயற்­ப­டு­கி­றார்கள்.

மாறாக நாங்­களும் செயற்­பட்டால் எங்கள் இலக்கை அடை­வது கஷ்டம். நாங்கள் எவரி­டமும் பொய் சொல்ல வேண்­டிய அவ­சியம் கிடை­யாது. எங்கள் உரித்து உரித்­துதான். நாங்கள் சொல்­கின்ற தோரணை சொல்­கின்ற வடிவம் எல்லாம் முக்­கி­ய­மா­னவை. மற்­றத்­த­ரப்பு சம­ரசம் செய்­யும்­போது அவ­ருக்கு மதிப்­ப­ளித்து சந்­தேகம் ஏற்­ப­டாது செயற்­ப­ட­வேண்டும். பேச்­சுக்­கான இந்த அணு­கு­மு­றை­களைக் கையா­ளும்­போது உடனே அவர் விலை­போய்­விட்டார் என சொல்­கி­றார்கள். எல்லா ஆயு­தங்­களும் இருந்தும் கூட பெற­மு­டி­யா­ததை ஒரு ஆயு­தமும் இல்­லாமல் அவர்­க­ளுடன் முட்டி மோதிப் பெற­மு­டி­யுமா? என்ன மாற்று முறை­களை அணு­கு­மு­றை­களை சொல்ல வேண்டும்.

இப்­போது சர்­வ­தே­சத்­தின் முழு ஆத­ரவும் எமக்கு உள்­ளது. ஆயுதப் போராட்ட காலத்தில் புலி­களை 33 நாடுகள் தடை செய்­தி­ருந்­தன. இன்­றைக்கு அந்த நாடுகள் எமக்கு ஆத­ர­வாக இருக்­கின்­றன. அவர்­களின் மனதில் பொறுப்­பற்­ற­வர்கள் என்ற எண்ணம் இந் நாடு­க­ளுக்கு வரக்­கூ­டாது. எங்­க­ளது தரப்பில் 5 வரு­ட­மாக பத­வியை தக்க வைத்­தி­ருப்­ப­வர்கள் ஒன்­றுமே செய்­ய­வில்லை என்­பது சர்­வ­தே­சத்தின் எண்ணம். உங்­களின் அவர் ஏன் இப்­படி செய்­கி­றார்கள் என்று எம்மை அவர்கள் கேட்­கி­றார்கள். வரு­கின்­ற­தையும் திருப்பி அனுப்புகிறார்கள் செய்யக் கூடியதையும் செய்வதில்லை என்று. வெறுமனே வெட்டிப் பேச்சைப் பேசிக்கொண்டு எதையுமே செய்யாமல் இருக்கிறார் என்பது சர்வதேசத்தின் எண்ணமாகும். இன்று எம்மிடம் பலத்தை உதறக்கூடாது. அதற்காக எந்த விட்டுக்கொடுப்பும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

சாதாரண இலக்கை அடைய சமூகத்தில் பின்பற்ற வேண்டிய முறைகள் இருக்கின்றன. அவற்றை நாங்கள் பின்பற்ற வேண்டும். இந் நாட்டில் பெரும்பான்மை இனத்தின் எதிர்ப்பை சம்பாதித்து எமது இலக்கை நிறைவேற்ற முடியாது. ஆனால் சமரசமாக பேசி இலக்கை அடைய முடியும். அந்த பக்குவம் எங்கள் மக்கள் மனதில் இருக்க வேண்டும். இது எமது மக்களிடம் இருக்கிறது. அதை இல்லாமல் செய்யும் பிரசாரத்தை அனுமதிக்க முடியாது. அந்தப் பொறுப்பற்ற பிரசாரத்தை மக்களிடம் முறியடிக்க வேண்டியது இளைஞர்களின் கைளிலேயே இருக்கிறது என்றார்.

– வடமராட்சி நிருபர் –

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-09-17#page-4

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.