Jump to content

ஆயுதக் கடத்தல் குற்றச்சாட்டு: சிறைத் தண்டனை பெற்ற அல்பி மோர்கல்


Recommended Posts

ஆயுதக் கடத்தல் குற்றச்சாட்டு: சிறைத் தண்டனை பெற்ற அல்பி மோர்கல்

 

 
gdjpgjpg

ஆயுதக் கடத்தல் குற்றச்சாட்டில்  சிறைத் தண்டனை பெற்றதாக தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரருமான அல்பி மோர்கல் தெரிவித்துள்ளார்.

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் அல்பி மோர்கல் கிழக்கு ஆப்பிரிக்க நாடான மொசாம்பிக்காவில் வேட்டை ஆடுவதற்காகச் சென்றபோது ஆயுதக் கடத்தல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி சிறைத் தண்டனை பெற்றதாக அண்மையில் பகிர்ந்திருக்கிறார்.

 

இதுகுறித்து அல்பி மோர்கல் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கூறும்போது,  "நான் மொசாம்பிக்காவில் எனது பயணத்தை முடித்துவிட்டுத் திரும்பும்போது காரை சுத்தம் செய்யுமாறு தோட்டக்காரரிடம் கூறினேன். அவர் அந்தக் காரில் ஏதோ ஆயுதத்தைப் பார்த்து அதை எங்கு வைப்பது என்று தெரியாமல் அதனை எனது கிரிக்கெட் பையில் வைத்திருக்கிறார்.

நான் மீண்டும் வீடு திரும்பும்போது விமான நிலையத்தில் அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் எனது பையில் அந்த ஆயுதத்தைக் கைப்பற்றி கேள்வி கேட்டார்கள். எனக்கு அதுகுறித்து ஒன்றும் தெரியவில்லை. எனக்கு அவர்களது மொழியும் தெரியவில்லை. இதன் காரணமாக நிலைமை மிகவும் மோசமாகியது. அவர்கள் என் மீது வழக்குப் பதிவு செய்தார்கள். மேலும் ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டில் இரண்டு நாள் சிறையில் அடைக்கப்பட்டேன். அந்த நாட்கள் மிகவும் மோசமானதாக என் வாழ்வில் இருந்தன. அதன்பின்னர் என் நண்பர்கள் என்னை வெளியே கொண்டு வந்தனர்” என்று மோர்கல் தெரிவித்தார்.

https://tamil.thehindu.com/sports/article24966177.ece

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.