Jump to content

யாழில் மாபெரும் தமிழ் விழா வெகு விமர்சையாக ஆரம்பம்


Recommended Posts

யாழில் மாபெரும் தமிழ் விழா வெகு விமர்சையாக ஆரம்பம்

 

 

யாழில் தமிழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் தமிழ் கலாச்சாரத்தினை உலகுக்கு எடுத்துரைக்கும் வகையில் மாபெரும் தமிழ் விழா வெகு விமர்சையாக ஆரம்பமாகியுள்ளது.

யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் “தமிழமுதம்” எனும் தொனிப்பொருளில் இன்று காலை 9.30 மணியளவில் தமிழ் கலாச்சார முறைப்படி இந்த நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளன.

தமிழ் பாரம்பரிய கலை அம்சங்களான மங்கள வாத்தியம் முழக்கம், சிலம்பாட்டம், மயிலாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய கலைகளைக் கொண்ட ஊர்வலம் ப்றவுன் வீதி வழியாக பல்கலைக்கழக மைதானத்தினை வந்தடைந்துள்ளது.

தொடர்ந்து, தமிழ் தாய் வாழ்த்து பாடப்பட்டு கலை,கலாச்சார நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளன.

 

அனைத்து பல்கலைக்கழக தமிழ் மாணவர்களை ஒன்றிணைத்து, யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்த தமிழ் விழாவில் பிரதம விருந்தினராக இந்திய தமிழ்நாடு கவின் கலைக் கல்லூரி பேராசிரியர் முனைவர் கு.புகழேந்தி கலந்து சிறப்பித்துள்ளார்.

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

அத்துடன், யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் ரட்ணம் விக்னேஸ்வரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் உட்பட வடமாகாண சபை உறுப்பினர் கே.சயந்தன் மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

தமிழர்களின் வரலாற்றினையும், வாழ்வையும், அரசியலையும் நிர்ணயிக்கும் வகையில் இந்த நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

 

https://www.tamilwin.com/events/01/193616?ref=home-feed

Link to comment
Share on other sites

மாபெரும் தமிழ் விழா – யாழ்.பல்கலைக்கழகத்தில்!!

 
 
41931814_10217383822413895_1747756706823

 

 

“நாமும் நமக்கென்றோர் நலியாக் கலையுடையோம் ” என்ற தொனிப் பொருளில் இலங்கையின் அனைத்துப் பல்கலைக்கழக தமிழ் மாணவர்களையும் ஒன்றிணைத்து யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நடத்தும் – மாபெரும் தமிழ் விழா தற்போது நடைபெற்று வருகிறது.

தமிழர்களின் கலை, பண்பாட்டு விழுமியங்களை வெளிக் கொணரும் வகையில் கலாசார ஊர்வலம் யாழ். பல்கலைக்கழகத்தின் பிரதான வாயிலில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு, பல்கலைக்கழக மைதானத்தைச் சென்றடைந்து அரங்க நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் ஜக்சன் லீமா தலைமையில் இடம்பெறும் நிகழ்வில் ஈழத் தமிழர் விடுதலையில் பேரவாக் கொண்ட ஓவியர் எனப் புகழப்படும் தமிழக ஓவியர் புகழேந்தி பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டுள்ளார்.

யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் இ. விக்னேஸ்வரன், பல்கலைக்கழக அதிகாரிகள், விரிவுரையாளர்கள், பணியாளர்கள், மாணவர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர்.

41992028_10217383853534673_854380337047541991986_10217383823173914_629638376200741965085_10217383824413945_307610351352541946185_10217383825213965_497061731582241934093_10217383826413995_207185604708041926131_10217383821773879_245787071245941861686_10217383823933933_887031655966341858744_10217383825773979_194365531915442085517_10217383822813905_2863515538749

https://newuthayan.com/story/11/மாபெரும்-தமிழ்-விழா-யாழ்-பல்கலைக்கழகத்தில்.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாவலர் யாழ்ப்பாணத்தில் சைவத்தையும் தமிழையும் காக்க ஆங்கிலேய.. கிறிஸ்தவ ஆதிக்கத்துக்குள் இருந்து எப்படி போராட வேண்டி இருந்ததோ.. அதை விடப் பல மடங்கு நிலை இன்று தமிழையும் தமிழர் தேசத்தையும் தமிழர் கலை கலாசார பண்பாட்டு விழுமியங்களையும் வடக்குக் கிழக்கில்.. சிங்கள பெளத்த.. இஸ்லாமிய முஸ்லீம்.. மத வெறியர்களிடம் இருந்தும்.. சர்வதேச, பிராந்திய வல்லாதிக்க சக்திகளிடம் இருந்தும் பாதுகாக்க போராட வேண்டி உள்ளது. 

Link to comment
Share on other sites

3 hours ago, நவீனன் said:

வடமாகாண சபை உறுப்பினர் கே.சயந்தன்

தன்ற வாள்வெட்டு குஞ்சுகளை மறந்திடாரோ?

முகப்புத்தக பலாத்காரங்களையும் மறந்திடாரோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாபெரும் தமிழ்விழாக்கள் என்று கொண்டாட ஆசையிருந்தால், அதனை மட்டகளப்பில்  முஸ்லிம்களால் ஆக்கிரமிக்கப்படும் ஊர்களில்,மற்றும்  அம்பாறை ,மணலாறு...திருமலையில் கொண்டாட ஏற்பாடு செய்யுங்கள், அதுவே எம் இருப்பை இறுமாப்பை பிற இனங்களுக்கு உணர்த்தும்...

அதைவிடுத்து யாழ்நகரத்துக்குள்ளயே சுற்றி சுற்றி தமிழ்விழா என்று பொங்குவது வெறும் ஏமாற்று வித்தை...

நீங்கள்  இப்போ செய்வதை  சிங்களவன்கூட விரும்புவான் ஒரு வட்டத்துக்குள்ளயே நீங்கள் இருங்கோ என்ற அவன் ஆசையை நீங்கள் நிறைவேற்றுவதால்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி இப்படங்களில் களிசான் போட்டிருப்பவர்கள் என்ன வேற்று இனத்தவரோ தமிழ் விழா எனக்கூறிவிட்டு அதுக்குச் சம்பந்தமில்லாத உடைகளுடன் நிற்கிறார்கள்

Link to comment
Share on other sites

20 minutes ago, Elugnajiru said:

அது சரி இப்படங்களில் களிசான் போட்டிருப்பவர்கள் என்ன வேற்று இனத்தவரோ தமிழ் விழா எனக்கூறிவிட்டு அதுக்குச் சம்பந்தமில்லாத உடைகளுடன் நிற்கிறார்கள்

தோணியைக் கவிழ்த்தது போன்ற தலைப்பாகை அணிந்த ஆண்களே சிங் என்ற இனத்தை அடையாளப்படுத்துகின்றனர். அங்கு பெண்களைக்கொண்டு சிங் இனத்தை அடையாளம் காண்பது கடினம்.

இடுப்பை மறைத்து சேலை அணியும் பெண்களே தமிழினத்தை அடையாளப்படுத்துகின்றனர். இங்கு ஆண்களைக்கொண்டு தமிழ் இனத்தை அடையாளம் காண்பது கடினம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது இடுப்பில் ஒட்டு வேட்டியைக் கட்டிக்கொண்டு கலாச்சாரத்தைக் காப்பாத்திறம் எனவும் ஒரு கூட்டம் கிளம்பியிருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் இப்ப  எல்லாத்துக்கும் இந்தியக்காரரை சீப் கெஸ்ட்ட்தாக கூப்பிட்டினம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

ஏன் இப்ப  எல்லாத்துக்கும் இந்தியக்காரரை சீப் கெஸ்ட்ட்தாக கூப்பிட்டினம்?

அவர் ஹிந்தியர் அல்ல. தொப்புள் கொடி உறவு என்பதால். ☺️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Elugnajiru said:

அது சரி இப்படங்களில் களிசான் போட்டிருப்பவர்கள் என்ன வேற்று இனத்தவரோ தமிழ் விழா எனக்கூறிவிட்டு அதுக்குச் சம்பந்தமில்லாத உடைகளுடன் நிற்கிறார்கள்

அவையள் கோட்டு சூட்டோடைதான் பிறந்து வளர்ந்தவையள்.....:cool:

எண்டாலும் பட்டுவேட்டி திலகங்களுக்கும்  தமிழ்க்கலாச்சாரம் பெரிசாய்..tw_tounge: tw_tounge_xd: tw_thumbsdown:

Link to comment
Share on other sites

13 hours ago, நவீனன் said:

அனைத்து பல்கலைக்கழக தமிழ் மாணவர்களை ஒன்றிணைத்து, யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

தமிழ் மாணவர்களின் முயற்சி பாராட்டுக்கு உரியது! 

வரும் காலங்களில் மேலும் மேலும் சிறப்படையும் என்ற எதிர்பார்ப்பு உண்டு! 

Link to comment
Share on other sites

ஈழத்தில் தமிழ் வளர்வதை பார்க்கையில் பெருமையே- கலைஞர் புகழேந்தி!!

 
 
625.0.560.320.160.600.053.800.700.160.90
 
 
 

தமி­ழ­கத்­தில் தமிழ் அழிந்து கொண்­டி­ருந்­தா­லும் தமி­ழீ­ழத்­தில் தமிழ் வளர்ந்து கொண்­டு­தான் இருக்­கின்­றது. இத­னைப் பார்க்­கும் போது பெரு­மை­யாக இருக்­கி­றது எனறு தமி­ழக கலை­ஞர் கு.புக­ழேந்தி தெரி­வித்­தார்.

இலங்­கை­யி­லுள்ள 15 பல்­க­லைக் கழ­கங்­க­ளைச் சேர்ந்த தமிழ் மாண­வர்­கள் ஒன்­றி­ணைந்து நடத்­தும் மாபெ­ரும் தமிழ் விழா பல்­க­லைக் கழக மைதா­னத்­தில் நேற்று இடம்­பெற்­றது.

இந்த நிகழ்­வில் முதன்மை விருந்­தி­ன­ரா­கக் கலந்­து­கொண்டு உரை­யாற்­றும்­போதே அவர் இத­னைத் தெரி­வித்­தார். அவர் அங்கு தெரி­வித்­த­தா­வது:

தமி­ழீழ மண்­ணில் எனக்­குப் பல அனு­ப­வங்­கள் உள்­ளன. நான் இங்கு பல தட­வை­கள் வந்­துள்­ளேன். நாம் ஒரு வர­லாற்­றுக் கால­கட்­டத்­தில் உள்­ளோம். கடந்த காலத்­தில் பெரும் பின்­ன­டை­வைச் சந்­தித்­துள்­ளோம்.

இந்த நிகழ்வு தமிழ் இனத்­தின் வர­லாற்­றை­யும், புகழ்­க­ளை­யும் வெளிக்­கொண்­டு­வ­ரும் நிகழ்­வாக அமைந்­துள்­ளது. தமி­ழர்க் கலை என்­பது உல­கின் மூத்த குடி­க­ளின் கலை­யா­கும். நாங்­கள் பல­வற்றை இழந்து விட்­டோம். அது­மட்­டு­மல்­லாது இருப்­ப­தை­யும் இழந்து கொண்­டி­ருக்­கின்­றோம்.

தமி­ழர் கலையை மீட்­டெ­டுக்­கப் போரா­டிக் கொண்­டி­ருக்­கின்­றோம். தமிழ் நாட்­டில் தமிழ் அழிந்து கொண்­டி­ருக்­கின்­றது. ஆனால் தமி­ழீ­ழத்­திலே தமிழ் வளர்ந்து கொண்­டி­ருக்­கின்­றது. அதற்­காக முத­லில் தமி­ழீழ மக்­க­ளுக்கு நன்­றி­க­ளைக் கூற­வேண்­டும்.உல­கெங்­கும் தமிழ் பர­வி­யுள்­ளது.

அதற்கு மூல கார­ணம் ஈழத்­துத் தமி­ழர்­களே. ஏனெ­னில் அவர்­கள் கடந்த காலங்­க­ளில் இடப்­பெ­யர்­வு­க­ளைச் சந்­தித்து உல­கின் பல நாடு­க­ளில் வாழ்­கின்­ற­னர். இத­னால் உல­கம் முழு­வ­தும் தமிழ் பர­வி­யுள்­ளது. அது­மட்­டு­மல்­லாது தமி­ழ­ரின் கலை, கலா­சா­ர­மும் பர­வி­யுள்­ளது. இதன் விளை­வாக தமி­ழ­ரின் வாழ்­வி­யல் அர­சி­யல் அடுத்த நிலைக்­குக் கொண்டு செல்­லப்­பட்­டுள்­ளது.

நாம் இன்று தோற்­றி­ருக்­க­லாம் பின்­ன­டை­வு­ க­ளைச் சந்­தித்­தி­ருக்­க­லாம். இவை அனைத்­தும் நாம் முன்­னோக்­கிப் பய­ணிப்­ப­தற்­கான பாட­மா­கவே நாங்­கள் பார்க்க வேண்­டும். நான் பத்து ஆண்­டு­க­ளுக்கு முன்­னர் கிளி­நொச்சி மாவ­ட­டத்­துக்கு வந்­தி­ருந்­தேன். அங்கு எத்­த­னையோ நிகழ்­வு­கள் உணர்வு பூர்­வ­மா­க­வும் இடம்­பெற்­றி­ருந்­தது. நான் இப்­போ­தும் அதே உணர்­வி­னைப் பார்க்­கின்­றேன் -– என்­றார்.

இந்த நிகழ்­வில் யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக்­க­ழ­கத் துணை­வேந்­தர் இ.விக்­னேஸ்­வ­ரன், தமி­ழ­ர­சுக் கட்­சி­யின் தலை­வ­ரும், நாடா­ளு­ம­னற உறுப்­பி­ன­ரு­மான மாவை சேனா­தி­ராஜா, நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான ஈ.சர­வ­ண­ப­வன், சி.சிறி­த­ரன், வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர்­க­ளான சிவா­ஜி­லிங்­கம் சயந்­தன், கஜ­தீ­பன் வடக்கு மாகாண எதிர்க்­கட்­சித் தலை­வர் சி.தவ­ரா­சா­உள்­ளிட்ட பலர் கலந்­து­ கொண்­ட­னர்.

IMG_20180917_103524.jpgIMG_20180917_094019.jpgIMG_20180917_090712.jpgIMG_20180917_104220.jpg

IMG_20180917_093906.jpg

https://newuthayan.com/story/09/ஈழத்தில்-தமிழ்-வளர்வதை-பார்க்கையில்-பெருமையே-கலைஞர்-புகழேந்தி.html

Link to comment
Share on other sites

22 hours ago, நவீனன் said:

மாபெரும் தமிழ் விழா – யாழ்.பல்கலைக்கழகத்தில்!!

41934093_10217383826413995_2071856047080

                                         :101_point_up:                                           :102_point_up_2:

 

மிழர் விழா நிகழ்வில் ஏன் முதல்வர் விக்கினேசுவரனைக் காணவில்லை...? அவர் ஒதுங்கினாரா…?? அல்லது ஒதுக்கப்பட்டாரா...??? அல்லது அவருக்கு எப்படி வேட்டி உடுக்கவேண்டும் என்பதில் பிரச்சனையா...? இடப்பக்கமா வலப்பக்கமா…?  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, Paanch said:

மிழர் விழா நிகழ்வில் ஏன் முதல்வர் விக்கினேசுவரனைக் காணவில்லை...? அவர் ஒதுங்கினாரா…?? அல்லது ஒதுக்கப்பட்டாரா...??? அல்லது அவருக்கு எப்படி வேட்டி உடுக்கவேண்டும் என்பதில் பிரச்சனையா...? இடப்பக்கமா வலப்பக்கமா…?  

 

பத்த வைச்சிடீ ங்களே பாஞ்ச் ..?

Link to comment
Share on other sites

3 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

பத்த வைச்சிடீ ங்களே பாஞ்ச் ..?

இலங்கையில் சர்வாதிகார ஆட்சி இல்லை. மக்கள் ஆட்சி என்று சொல்கிறார்கள். அப்படியாயின் அனைத்தும் வெளிச்சத்துக்கு வரவேண்டும் என எண்ணுவதில் தவறில்லையே தேசிகரே.!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, nedukkalapoovan said:

அவர் ஹிந்தியர் அல்ல. தொப்புள் கொடி உறவு என்பதால். ☺️

நெடுக்கர்  உங்களை    போன்றவர்களுக்கு இதன் பின்னால் உள்ள ஆபத்து புரியாது 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, ரதி said:

நெடுக்கர்  உங்களை    போன்றவர்களுக்கு இதன் பின்னால் உள்ள ஆபத்து புரியாது.

ஒரு ஆபத்தும் இல்லை. அவர் தேசிய தலைவரால் கூட வரவேற்கப்பட்ட ஒருவர். மேலும் எமது விடுதலைப் போராட்ட வடிவங்களை ஹிந்திய தடைகள் மத்தியிலும் ஓவியங்களாக தமிழகத்துக்குள் கொண்டு சென்ற ஒருவர்.

இவரையும்.. ஹிந்திய துணைத்தூதரகம் அமைத்து.. ரோவின் திட்டங்களை செயற்படுத்தும் கூலிகளையும் ஒரே கூடையில் போட முடியாது. ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎9‎/‎18‎/‎2018 at 7:28 AM, nedukkalapoovan said:

ஒரு ஆபத்தும் இல்லை. அவர் தேசிய தலைவரால் கூட வரவேற்கப்பட்ட ஒருவர். மேலும் எமது விடுதலைப் போராட்ட வடிவங்களை ஹிந்திய தடைகள் மத்தியிலும் ஓவியங்களாக தமிழகத்துக்குள் கொண்டு சென்ற ஒருவர்.

இவரையும்.. ஹிந்திய துணைத்தூதரகம் அமைத்து.. ரோவின் திட்டங்களை செயற்படுத்தும் கூலிகளையும் ஒரே கூடையில் போட முடியாது. ?

நான் அவரை மட்டும் சொல்லவில்லை....தமிழ்நாட்டுக்காரரும் தமிழ் தான் கதைக்கிறார்கள்...அவர்களும்,நாங்களும் ஒரே கலாச்சராம் தான் ஆனால் அவர்கள் வேற நாங்கள் வேற .

நூலகத்திற்கு நூல் வழங்குதல் அது,இது என்று அவர்கள் காலடி எடுத்து வைப்பது  மிச்ச சொச்ச போராடடத்தையும் மழுங்கடிக்க செய்வதாகும்....என்ன மாதிரியான நூல்களை அன்பளிப்பு செய்து இருப்பார்கள் என்று நினைக்கிறீர்கள்?

இப்பவே கட்டவுட்டுக்கு பால் ஊத்துறது என்று தொடங்கி இருக்குது...எழுத இன்னும் கனக்க இருக்கு...இது இப்படியே போனால் தமிழ்நாடடை விட தமிழீழம் சீரழிந்து போகும்...

அதே நேரத்தில்  தமிழ்நாட்டில் எமக்காக உயிர் நீத்த/தியாகம்  செய்தவர்களையும் நன்றியுடன் நினைவு கூறுகிறேன்  

 

 

 

Link to comment
Share on other sites

17 hours ago, ரதி said:

தமிழ்நாட்டுக்காரரும் தமிழ் தான் கதைக்கிறார்கள்...அவர்களும்,நாங்களும் ஒரே கலாச்சராம் தான் ஆனால் அவர்கள் வேற நாங்கள் வேற . 

குறைந்தது 6 வேறுபாடுகளை கூற முடியுமா?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அடுத்த‌ பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில் ஸ்டாலின் தான் பிர‌த‌மரா போட்டி போடுவார் என்று அமெரிக்கா க‌னடா தொட்டு ப‌ல‌ நாட்டில்  க‌தை அடி ப‌டுது.....................துண்டறிக்கை பார்த்தே த‌மிழ‌ ஒழுங்காய் வாசிக்க‌ தெரியாது............ பிரத‌மர் ஆகினால் ஒட்டு மொத்த‌ உல‌க‌மே அதிரும் ஸ்டாலின் ஜயாவின் பேச்சை கேட்டு  😁😜................ வீட்டில் சீமான் பிள்ளைக‌ளுக்கு க‌ண்டிப்பாய் தூய‌ த‌மிழ் சொல்லிக் கொடுப்பார் அதில் எந்த ச‌ந்தேக‌மும் இல்லை யுவ‌ர் ஆன‌ர்.............ஆட்சிக்கு வ‌ராத‌ ஒருத‌ர‌ 68கேள்வி கேட்ப‌து எந்த‌ வித‌த்தில் ஞாய‌ம்...........ஒரு முறை ஆட்சி சீமான் கைக்கு போன‌ பிற‌க்கு அவ‌ர் த‌மிழை தமிழை வளர்க்கிறாரா அல்ல‌து திராவிட‌த்தை போல் தமிழை அழிக்கிறாரா என்று பின்னைய‌ காலங்களில் விவாதிக்க‌லாம்............இப்ப‌ அவ‌ர் எடுக்கும் அர‌சிய‌லை ப‌ற்றி விவ‌திப்ப‌து வ‌ர‌வேற்க்க‌ த‌க்க‌து...................
    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.