Jump to content

யாழில் மாபெரும் தமிழ் விழா வெகு விமர்சையாக ஆரம்பம்


Recommended Posts

யாழில் மாபெரும் தமிழ் விழா வெகு விமர்சையாக ஆரம்பம்

 

 

யாழில் தமிழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் தமிழ் கலாச்சாரத்தினை உலகுக்கு எடுத்துரைக்கும் வகையில் மாபெரும் தமிழ் விழா வெகு விமர்சையாக ஆரம்பமாகியுள்ளது.

யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் “தமிழமுதம்” எனும் தொனிப்பொருளில் இன்று காலை 9.30 மணியளவில் தமிழ் கலாச்சார முறைப்படி இந்த நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளன.

தமிழ் பாரம்பரிய கலை அம்சங்களான மங்கள வாத்தியம் முழக்கம், சிலம்பாட்டம், மயிலாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய கலைகளைக் கொண்ட ஊர்வலம் ப்றவுன் வீதி வழியாக பல்கலைக்கழக மைதானத்தினை வந்தடைந்துள்ளது.

தொடர்ந்து, தமிழ் தாய் வாழ்த்து பாடப்பட்டு கலை,கலாச்சார நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளன.

 

அனைத்து பல்கலைக்கழக தமிழ் மாணவர்களை ஒன்றிணைத்து, யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்த தமிழ் விழாவில் பிரதம விருந்தினராக இந்திய தமிழ்நாடு கவின் கலைக் கல்லூரி பேராசிரியர் முனைவர் கு.புகழேந்தி கலந்து சிறப்பித்துள்ளார்.

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

அத்துடன், யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் ரட்ணம் விக்னேஸ்வரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் உட்பட வடமாகாண சபை உறுப்பினர் கே.சயந்தன் மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

தமிழர்களின் வரலாற்றினையும், வாழ்வையும், அரசியலையும் நிர்ணயிக்கும் வகையில் இந்த நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

 

https://www.tamilwin.com/events/01/193616?ref=home-feed

Link to comment
Share on other sites

மாபெரும் தமிழ் விழா – யாழ்.பல்கலைக்கழகத்தில்!!

 
 
41931814_10217383822413895_1747756706823

 

 

“நாமும் நமக்கென்றோர் நலியாக் கலையுடையோம் ” என்ற தொனிப் பொருளில் இலங்கையின் அனைத்துப் பல்கலைக்கழக தமிழ் மாணவர்களையும் ஒன்றிணைத்து யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நடத்தும் – மாபெரும் தமிழ் விழா தற்போது நடைபெற்று வருகிறது.

தமிழர்களின் கலை, பண்பாட்டு விழுமியங்களை வெளிக் கொணரும் வகையில் கலாசார ஊர்வலம் யாழ். பல்கலைக்கழகத்தின் பிரதான வாயிலில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு, பல்கலைக்கழக மைதானத்தைச் சென்றடைந்து அரங்க நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் ஜக்சன் லீமா தலைமையில் இடம்பெறும் நிகழ்வில் ஈழத் தமிழர் விடுதலையில் பேரவாக் கொண்ட ஓவியர் எனப் புகழப்படும் தமிழக ஓவியர் புகழேந்தி பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டுள்ளார்.

யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் இ. விக்னேஸ்வரன், பல்கலைக்கழக அதிகாரிகள், விரிவுரையாளர்கள், பணியாளர்கள், மாணவர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர்.

41992028_10217383853534673_854380337047541991986_10217383823173914_629638376200741965085_10217383824413945_307610351352541946185_10217383825213965_497061731582241934093_10217383826413995_207185604708041926131_10217383821773879_245787071245941861686_10217383823933933_887031655966341858744_10217383825773979_194365531915442085517_10217383822813905_2863515538749

https://newuthayan.com/story/11/மாபெரும்-தமிழ்-விழா-யாழ்-பல்கலைக்கழகத்தில்.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாவலர் யாழ்ப்பாணத்தில் சைவத்தையும் தமிழையும் காக்க ஆங்கிலேய.. கிறிஸ்தவ ஆதிக்கத்துக்குள் இருந்து எப்படி போராட வேண்டி இருந்ததோ.. அதை விடப் பல மடங்கு நிலை இன்று தமிழையும் தமிழர் தேசத்தையும் தமிழர் கலை கலாசார பண்பாட்டு விழுமியங்களையும் வடக்குக் கிழக்கில்.. சிங்கள பெளத்த.. இஸ்லாமிய முஸ்லீம்.. மத வெறியர்களிடம் இருந்தும்.. சர்வதேச, பிராந்திய வல்லாதிக்க சக்திகளிடம் இருந்தும் பாதுகாக்க போராட வேண்டி உள்ளது. 

Link to comment
Share on other sites

3 hours ago, நவீனன் said:

வடமாகாண சபை உறுப்பினர் கே.சயந்தன்

தன்ற வாள்வெட்டு குஞ்சுகளை மறந்திடாரோ?

முகப்புத்தக பலாத்காரங்களையும் மறந்திடாரோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாபெரும் தமிழ்விழாக்கள் என்று கொண்டாட ஆசையிருந்தால், அதனை மட்டகளப்பில்  முஸ்லிம்களால் ஆக்கிரமிக்கப்படும் ஊர்களில்,மற்றும்  அம்பாறை ,மணலாறு...திருமலையில் கொண்டாட ஏற்பாடு செய்யுங்கள், அதுவே எம் இருப்பை இறுமாப்பை பிற இனங்களுக்கு உணர்த்தும்...

அதைவிடுத்து யாழ்நகரத்துக்குள்ளயே சுற்றி சுற்றி தமிழ்விழா என்று பொங்குவது வெறும் ஏமாற்று வித்தை...

நீங்கள்  இப்போ செய்வதை  சிங்களவன்கூட விரும்புவான் ஒரு வட்டத்துக்குள்ளயே நீங்கள் இருங்கோ என்ற அவன் ஆசையை நீங்கள் நிறைவேற்றுவதால்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி இப்படங்களில் களிசான் போட்டிருப்பவர்கள் என்ன வேற்று இனத்தவரோ தமிழ் விழா எனக்கூறிவிட்டு அதுக்குச் சம்பந்தமில்லாத உடைகளுடன் நிற்கிறார்கள்

Link to comment
Share on other sites

20 minutes ago, Elugnajiru said:

அது சரி இப்படங்களில் களிசான் போட்டிருப்பவர்கள் என்ன வேற்று இனத்தவரோ தமிழ் விழா எனக்கூறிவிட்டு அதுக்குச் சம்பந்தமில்லாத உடைகளுடன் நிற்கிறார்கள்

தோணியைக் கவிழ்த்தது போன்ற தலைப்பாகை அணிந்த ஆண்களே சிங் என்ற இனத்தை அடையாளப்படுத்துகின்றனர். அங்கு பெண்களைக்கொண்டு சிங் இனத்தை அடையாளம் காண்பது கடினம்.

இடுப்பை மறைத்து சேலை அணியும் பெண்களே தமிழினத்தை அடையாளப்படுத்துகின்றனர். இங்கு ஆண்களைக்கொண்டு தமிழ் இனத்தை அடையாளம் காண்பது கடினம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது இடுப்பில் ஒட்டு வேட்டியைக் கட்டிக்கொண்டு கலாச்சாரத்தைக் காப்பாத்திறம் எனவும் ஒரு கூட்டம் கிளம்பியிருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் இப்ப  எல்லாத்துக்கும் இந்தியக்காரரை சீப் கெஸ்ட்ட்தாக கூப்பிட்டினம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

ஏன் இப்ப  எல்லாத்துக்கும் இந்தியக்காரரை சீப் கெஸ்ட்ட்தாக கூப்பிட்டினம்?

அவர் ஹிந்தியர் அல்ல. தொப்புள் கொடி உறவு என்பதால். ☺️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Elugnajiru said:

அது சரி இப்படங்களில் களிசான் போட்டிருப்பவர்கள் என்ன வேற்று இனத்தவரோ தமிழ் விழா எனக்கூறிவிட்டு அதுக்குச் சம்பந்தமில்லாத உடைகளுடன் நிற்கிறார்கள்

அவையள் கோட்டு சூட்டோடைதான் பிறந்து வளர்ந்தவையள்.....:cool:

எண்டாலும் பட்டுவேட்டி திலகங்களுக்கும்  தமிழ்க்கலாச்சாரம் பெரிசாய்..tw_tounge: tw_tounge_xd: tw_thumbsdown:

Link to comment
Share on other sites

13 hours ago, நவீனன் said:

அனைத்து பல்கலைக்கழக தமிழ் மாணவர்களை ஒன்றிணைத்து, யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

தமிழ் மாணவர்களின் முயற்சி பாராட்டுக்கு உரியது! 

வரும் காலங்களில் மேலும் மேலும் சிறப்படையும் என்ற எதிர்பார்ப்பு உண்டு! 

Link to comment
Share on other sites

ஈழத்தில் தமிழ் வளர்வதை பார்க்கையில் பெருமையே- கலைஞர் புகழேந்தி!!

 
 
625.0.560.320.160.600.053.800.700.160.90
 
 
 

தமி­ழ­கத்­தில் தமிழ் அழிந்து கொண்­டி­ருந்­தா­லும் தமி­ழீ­ழத்­தில் தமிழ் வளர்ந்து கொண்­டு­தான் இருக்­கின்­றது. இத­னைப் பார்க்­கும் போது பெரு­மை­யாக இருக்­கி­றது எனறு தமி­ழக கலை­ஞர் கு.புக­ழேந்தி தெரி­வித்­தார்.

இலங்­கை­யி­லுள்ள 15 பல்­க­லைக் கழ­கங்­க­ளைச் சேர்ந்த தமிழ் மாண­வர்­கள் ஒன்­றி­ணைந்து நடத்­தும் மாபெ­ரும் தமிழ் விழா பல்­க­லைக் கழக மைதா­னத்­தில் நேற்று இடம்­பெற்­றது.

இந்த நிகழ்­வில் முதன்மை விருந்­தி­ன­ரா­கக் கலந்­து­கொண்டு உரை­யாற்­றும்­போதே அவர் இத­னைத் தெரி­வித்­தார். அவர் அங்கு தெரி­வித்­த­தா­வது:

தமி­ழீழ மண்­ணில் எனக்­குப் பல அனு­ப­வங்­கள் உள்­ளன. நான் இங்கு பல தட­வை­கள் வந்­துள்­ளேன். நாம் ஒரு வர­லாற்­றுக் கால­கட்­டத்­தில் உள்­ளோம். கடந்த காலத்­தில் பெரும் பின்­ன­டை­வைச் சந்­தித்­துள்­ளோம்.

இந்த நிகழ்வு தமிழ் இனத்­தின் வர­லாற்­றை­யும், புகழ்­க­ளை­யும் வெளிக்­கொண்­டு­வ­ரும் நிகழ்­வாக அமைந்­துள்­ளது. தமி­ழர்க் கலை என்­பது உல­கின் மூத்த குடி­க­ளின் கலை­யா­கும். நாங்­கள் பல­வற்றை இழந்து விட்­டோம். அது­மட்­டு­மல்­லாது இருப்­ப­தை­யும் இழந்து கொண்­டி­ருக்­கின்­றோம்.

தமி­ழர் கலையை மீட்­டெ­டுக்­கப் போரா­டிக் கொண்­டி­ருக்­கின்­றோம். தமிழ் நாட்­டில் தமிழ் அழிந்து கொண்­டி­ருக்­கின்­றது. ஆனால் தமி­ழீ­ழத்­திலே தமிழ் வளர்ந்து கொண்­டி­ருக்­கின்­றது. அதற்­காக முத­லில் தமி­ழீழ மக்­க­ளுக்கு நன்­றி­க­ளைக் கூற­வேண்­டும்.உல­கெங்­கும் தமிழ் பர­வி­யுள்­ளது.

அதற்கு மூல கார­ணம் ஈழத்­துத் தமி­ழர்­களே. ஏனெ­னில் அவர்­கள் கடந்த காலங்­க­ளில் இடப்­பெ­யர்­வு­க­ளைச் சந்­தித்து உல­கின் பல நாடு­க­ளில் வாழ்­கின்­ற­னர். இத­னால் உல­கம் முழு­வ­தும் தமிழ் பர­வி­யுள்­ளது. அது­மட்­டு­மல்­லாது தமி­ழ­ரின் கலை, கலா­சா­ர­மும் பர­வி­யுள்­ளது. இதன் விளை­வாக தமி­ழ­ரின் வாழ்­வி­யல் அர­சி­யல் அடுத்த நிலைக்­குக் கொண்டு செல்­லப்­பட்­டுள்­ளது.

நாம் இன்று தோற்­றி­ருக்­க­லாம் பின்­ன­டை­வு­ க­ளைச் சந்­தித்­தி­ருக்­க­லாம். இவை அனைத்­தும் நாம் முன்­னோக்­கிப் பய­ணிப்­ப­தற்­கான பாட­மா­கவே நாங்­கள் பார்க்க வேண்­டும். நான் பத்து ஆண்­டு­க­ளுக்கு முன்­னர் கிளி­நொச்சி மாவ­ட­டத்­துக்கு வந்­தி­ருந்­தேன். அங்கு எத்­த­னையோ நிகழ்­வு­கள் உணர்வு பூர்­வ­மா­க­வும் இடம்­பெற்­றி­ருந்­தது. நான் இப்­போ­தும் அதே உணர்­வி­னைப் பார்க்­கின்­றேன் -– என்­றார்.

இந்த நிகழ்­வில் யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக்­க­ழ­கத் துணை­வேந்­தர் இ.விக்­னேஸ்­வ­ரன், தமி­ழ­ர­சுக் கட்­சி­யின் தலை­வ­ரும், நாடா­ளு­ம­னற உறுப்­பி­ன­ரு­மான மாவை சேனா­தி­ராஜா, நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான ஈ.சர­வ­ண­ப­வன், சி.சிறி­த­ரன், வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர்­க­ளான சிவா­ஜி­லிங்­கம் சயந்­தன், கஜ­தீ­பன் வடக்கு மாகாண எதிர்க்­கட்­சித் தலை­வர் சி.தவ­ரா­சா­உள்­ளிட்ட பலர் கலந்­து­ கொண்­ட­னர்.

IMG_20180917_103524.jpgIMG_20180917_094019.jpgIMG_20180917_090712.jpgIMG_20180917_104220.jpg

IMG_20180917_093906.jpg

https://newuthayan.com/story/09/ஈழத்தில்-தமிழ்-வளர்வதை-பார்க்கையில்-பெருமையே-கலைஞர்-புகழேந்தி.html

Link to comment
Share on other sites

22 hours ago, நவீனன் said:

மாபெரும் தமிழ் விழா – யாழ்.பல்கலைக்கழகத்தில்!!

41934093_10217383826413995_2071856047080

                                         :101_point_up:                                           :102_point_up_2:

 

மிழர் விழா நிகழ்வில் ஏன் முதல்வர் விக்கினேசுவரனைக் காணவில்லை...? அவர் ஒதுங்கினாரா…?? அல்லது ஒதுக்கப்பட்டாரா...??? அல்லது அவருக்கு எப்படி வேட்டி உடுக்கவேண்டும் என்பதில் பிரச்சனையா...? இடப்பக்கமா வலப்பக்கமா…?  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, Paanch said:

மிழர் விழா நிகழ்வில் ஏன் முதல்வர் விக்கினேசுவரனைக் காணவில்லை...? அவர் ஒதுங்கினாரா…?? அல்லது ஒதுக்கப்பட்டாரா...??? அல்லது அவருக்கு எப்படி வேட்டி உடுக்கவேண்டும் என்பதில் பிரச்சனையா...? இடப்பக்கமா வலப்பக்கமா…?  

 

பத்த வைச்சிடீ ங்களே பாஞ்ச் ..?

Link to comment
Share on other sites

3 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

பத்த வைச்சிடீ ங்களே பாஞ்ச் ..?

இலங்கையில் சர்வாதிகார ஆட்சி இல்லை. மக்கள் ஆட்சி என்று சொல்கிறார்கள். அப்படியாயின் அனைத்தும் வெளிச்சத்துக்கு வரவேண்டும் என எண்ணுவதில் தவறில்லையே தேசிகரே.!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, nedukkalapoovan said:

அவர் ஹிந்தியர் அல்ல. தொப்புள் கொடி உறவு என்பதால். ☺️

நெடுக்கர்  உங்களை    போன்றவர்களுக்கு இதன் பின்னால் உள்ள ஆபத்து புரியாது 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, ரதி said:

நெடுக்கர்  உங்களை    போன்றவர்களுக்கு இதன் பின்னால் உள்ள ஆபத்து புரியாது.

ஒரு ஆபத்தும் இல்லை. அவர் தேசிய தலைவரால் கூட வரவேற்கப்பட்ட ஒருவர். மேலும் எமது விடுதலைப் போராட்ட வடிவங்களை ஹிந்திய தடைகள் மத்தியிலும் ஓவியங்களாக தமிழகத்துக்குள் கொண்டு சென்ற ஒருவர்.

இவரையும்.. ஹிந்திய துணைத்தூதரகம் அமைத்து.. ரோவின் திட்டங்களை செயற்படுத்தும் கூலிகளையும் ஒரே கூடையில் போட முடியாது. ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎9‎/‎18‎/‎2018 at 7:28 AM, nedukkalapoovan said:

ஒரு ஆபத்தும் இல்லை. அவர் தேசிய தலைவரால் கூட வரவேற்கப்பட்ட ஒருவர். மேலும் எமது விடுதலைப் போராட்ட வடிவங்களை ஹிந்திய தடைகள் மத்தியிலும் ஓவியங்களாக தமிழகத்துக்குள் கொண்டு சென்ற ஒருவர்.

இவரையும்.. ஹிந்திய துணைத்தூதரகம் அமைத்து.. ரோவின் திட்டங்களை செயற்படுத்தும் கூலிகளையும் ஒரே கூடையில் போட முடியாது. ?

நான் அவரை மட்டும் சொல்லவில்லை....தமிழ்நாட்டுக்காரரும் தமிழ் தான் கதைக்கிறார்கள்...அவர்களும்,நாங்களும் ஒரே கலாச்சராம் தான் ஆனால் அவர்கள் வேற நாங்கள் வேற .

நூலகத்திற்கு நூல் வழங்குதல் அது,இது என்று அவர்கள் காலடி எடுத்து வைப்பது  மிச்ச சொச்ச போராடடத்தையும் மழுங்கடிக்க செய்வதாகும்....என்ன மாதிரியான நூல்களை அன்பளிப்பு செய்து இருப்பார்கள் என்று நினைக்கிறீர்கள்?

இப்பவே கட்டவுட்டுக்கு பால் ஊத்துறது என்று தொடங்கி இருக்குது...எழுத இன்னும் கனக்க இருக்கு...இது இப்படியே போனால் தமிழ்நாடடை விட தமிழீழம் சீரழிந்து போகும்...

அதே நேரத்தில்  தமிழ்நாட்டில் எமக்காக உயிர் நீத்த/தியாகம்  செய்தவர்களையும் நன்றியுடன் நினைவு கூறுகிறேன்  

 

 

 

Link to comment
Share on other sites

17 hours ago, ரதி said:

தமிழ்நாட்டுக்காரரும் தமிழ் தான் கதைக்கிறார்கள்...அவர்களும்,நாங்களும் ஒரே கலாச்சராம் தான் ஆனால் அவர்கள் வேற நாங்கள் வேற . 

குறைந்தது 6 வேறுபாடுகளை கூற முடியுமா?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மேலும் தொடருங்கள் வாசிக்க காத்திருக்கிறோம். நிலாமதி அக்கா
    • "இப்பொது Neanderthals (Homo neanderthalensis) இன் மரபணு இப்போதுள்ள மனித வர்க்கத்தில் 2 - 2.5% இருக்கிறது என்பது பின்னைய முடிவு" ஆம் , அது சரி , ஏனென்றால்,     Though Modern humans and Neanderthals lived in separate regions evolving along separate evolutionary lineages for hundreds of thousands of years, Neanderthals are still our closest currently known relative. Because of that evolutionary proximity, despite being recognized as different species, it is still possible that members of our two species exchanged genetic information. This exchange of DNA is called introgression, or interbreeding. Neanderthal-Homo sapiens interbreeding Neanderthals are known to contribute up to 1-4% of the genomes of non-African modern humans, depending on what region of the word your ancestors come from, and modern humans who lived about 40,000 years ago have been found to have up to 6-9% Neanderthal DNA (Fu et al., 2015).  ............................................................... "சிங்கமும், மனிதனும் species அடிப்படை யில் மிக தொலைவு என்பதால் சாத்திய கூறுகள் மிக, மிக  குறைவு என்பதே இப்பொது நம்ப கூடியது" ஆம், அது முற்றிலும் சரியான வாதம்  ................................................................... "மகாவம்சம்  சிங்கம் என்ற சொல்லை மிருகத்தை குறிக்க பயன்படுத்தியதா அல்லது அந்த தன்மை மனிதன் (போன்ற) குறிக்க பயன்படுத்தியதா. " கட்டாயம் சிங்கத்தைக் [மிருகத்தைக்] குறிக்கத்தான் பயன்படுத்தப் பட்டுள்ளது தெளிவாக அங்கு தெரிகிறது  ஆறாம் அத்தியாயம் / விஜயன் வருகையில் [CHAPTEE VI / THE COMING OF VIJAYA ]  "மற்றவர்கள் அங்கும் இங்குமாக ஓடி விட்டனர். ஆனல் அவள் [விஜயனின் தாய்], சிங்கம் வந்த அதே பாதையில் ஓடினாள் .... தூரத்தில் அவளைப் பார்த்தது. உடனே காமவெறி சிங்கத்தைப் பற்றிக்கொண்டது. வாலைக் குழைத்துக் [ஆட்டிக்] கொண்டும், காதுகளை மடக்கிக் கொண்டும் அவளை நோக்கி வந்தது ....  அவளைத் தனது முதுகின் மீது சுமந்து கொண்டு வேகமாகத் தனது குகையைச் சென்றடைந்தது. அங்கு சிங்கம் அவளுடன் கூடியது. இந்தக் கூடலின் விளவாக ராஜகுமாரி இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தாள். ஒன்று ஆண் [சீகபாகு / சிங்கபாகு /Sihabahu / Sinhabahu] ; ஒன்று பெண் [சிங்கசீவலி / சீகவலி / Sinhasivali or Sihasivali]. [the other folk fled this way and that, but she fled along the way by which the lion had come ...  love (for her) laid hold on him, and he came towards her with waving tail and ears laid back ...  took her  upon his back and bore her with all speed to his cave, and there he was united with her, and from this union with him the princess in time bore twin-children, a son and a daughter.]   "வாலைக் குழைத்துக் [ஆட்டிக்] கொண்டும், காதுகளை மடக்கிக் கொண்டும் அவளை நோக்கி வந்தது" [he came towards her with waving tail and ears laid back]   என்ற வரி தெளிவாக மிருகம் என்று சொல்லுகிறது. அதில் எந்த சந்தேகமும் இல்லை  ..................................................................... மகாவம்சம் அத்தக்கதா [Aṭṭhakathā - Buddhist Commentarial Literature / The word aṭṭhakathā is a general term, meaning exposition of the sense (aṭṭha = attha, Skt. artha), explanation, commentary.] Buddhist monks of Mahavihara, maintained this historical record of the Sri Lankan history starting from 3rd century B.C., some what similar to a modern day diary. These records were combined and compiled into a single document in the 5th century CE by Buddhist monk Mahathera Mahanama. There is evidence as per Wilhelm Geiger, there was another compilation prior to this known as “Mahavamsa Atthakatha” and Mahathera Mahanama relied on this text. Earlier document known as “Dipavamsa” also come down to us which is much simpler and contain less information than Mahavamsa, probably compiled using previously mentioned “Mahavamsa Atthakatha”?   ........................................... "சிங்களத்தில் இருந்த அத்தக்கதாவை  புத்தகோச பாளியில் எழுதிவிட்டு, சிங்கள மூலத்தை எரித்து விட்டததாகவும், ஏனெனில் சிங்களம் தெய்வ மொழி இல்லை என்றும் கருதப்படுகிறது' It is observed two groups of people in the 5th century A.D. – Hindus, speaking Tamil and the converts (Buddhists) speaking the new language (Sinhala).  There is a popular here say, emerged from the Later Burmese Biographical Text Buddhaghosuppatti ( perhaps as early as the 15th century) that Buddhaghosa Thera burnt ancient Sihala Atthakathas after he translated them into  Pali, introducing the Mula Bhasha [first language, primary language; epithet for Pali, the liturgical language of Theravada Buddhism. /  பாளி மொழியை வழிபாட்டு அல்லது தெய்வீக மொழியாக தேரவாத பௌத்தத்தில் கருதப்படுகிறது]  Please note that The Buddhaghosuppatti, a later biographical text, is generally regarded by Western scholars as being legend rather than history. So the text is not very reliable. Also It is not stated in Culavamsa [The Cūḷavaṃsa is a continuation of the Mahavamsa. But unlike the Mahavamsa it was written by different authors at different periods. / இதுவும்  பாளி மொழியில் தான் எழுதப்பட்டது / கிபி நான்காம் நூற்றாண்டு தொடக்கம் கிபி 1815 ஆம் ஆண்டு இலங்கைத்தீவின் கடைசி இராசதானியான கண்டி பிரித்தானியர் வசம் செல்லும் வரையான காலப்பகுதியின் இலங்கை அரசர் பற்றி இந்நூல் குறிப்பிடுகிறது] that he burned the scriptures , Though it contains the main account of Buddhaghosa’s life. ஆகவே உண்மையில் அவர் எரித்தாரா என்பதும் ஒரு கேள்விக்குறியே? Tradition regarding the Aṭṭhakathā [Buddhist Commentarial Literature by L. R. Goonesekere, BPS / Buddhist Publication Society, Kandy • Sri Lanka] The Ceylonese tradition regarding the aṭṭhakathā is that they were composed (in Pali, it is to be presumed) at the First Council (Saṅgīti) and rehearsed at the two following Councils. They were introduced to Ceylon by Mahinda who also, it is said, translated them into Sinhala. The earliest record of this tradition is contained in the introduction in Buddhaghosa’s commentaries. [“For explaining the meaning, the Commentary was originally recited by the 500 Masters (i.e. the Arahats assembled at the First Council) and was later rehearsed (at the two following Councils). Then it was brought to the island of the Sinhalese by the great Mahinda, the master (of Dhamma), and was rendered into the Sinhala language for the benefit of the island dwellers.”] It recurs in the accounts of Buddhaghosa contained in the Mahāvaṃsa  and the Saddhammasaṅgaha.  According to the Dīpavaṃsa  and the Mahāvaṃsa,  the commentaries (the Sinhala version, it is to be inferred) were put into writing in Ceylon along with the Pali canon in the reign of Vaṭṭagāmaṇī Abhaya in the first century B. C. The Mahāvaṃsa,  and Saddhammasaṅgaha  further state that, at the time of Buddhaghosa, the aṭṭhakathā (the original Pali) had disappeared in India. It is not known how far this statement was correct, but the original Pali aṭṭhakathā were not recorded in writing and no trace of them exists today. As will be seen, the Sinhala aṭṭhakathā put into writing in Vaṭṭagāmaṇī Abhaya’s time have also disappeared.
    • இலங்கையரசாங்கம் முன்வைத்த தீர்வுத்திட்டத்தினை முற்றாக நிராகரித்து, நான்கு அம்சக் கோரிக்கையின் அடிப்படையிலான தீர்வினை கோரிய தமிழ்த் தரப்பு   நான்காம் நாள் பேச்சுக்கள் பெரும் குழப்பத்திற்குள் நுழைந்தன. ஜெயவர்த்தன இன்னொரு சதியைத் திட்டமிட்டு அரங்கேற்றினார். பொலீஸாரைக் கொண்டு அரங்கேற்றப்பட்ட இச்சதியில் கொழும்பில் குண்டுத்தாக்குதலில் ஈடுபட வந்திருந்த ஈரோஸ் அமைப்பின் உறுப்பினர்களைத் தாம் கைதுசெய்திருப்பதாக ஜெயார் தெரிவித்தார். ஜனாதிபதி மாளிகைக்கு அண்மையாக சுற்றித்திருந்த இரு இளைஞர்களைக் கைதுசெய்து விசாரித்தவேளை அவர்கள் ஜனாதிபதியைக் கொல்வதற்காக ஈரோஸ் தலைமைப் பீடத்தால் அனுப்பிவைக்கப்பட்டிருப்பதை ஒத்துக்கொண்டதாக பொலீஸார் அறிவித்தனர். ஜெயாரின் திட்டத்தின்படி, கொழும்பு ஊடகங்களும் இச்செய்தியை பெரும் எடுப்பில் வெளியிட்டிருந்தன. இதனைச் செய்தியாக்கும்போது டெயிலி நியுஸ் காரியாலயத்தில் இருந்த உற்சாககத்தினை நேரடியாக நாண் கண்டேன். மறுநாள் ஆசிரியர்த் தலையங்கம் "முறியடிக்கப்பட்ட ஜனாதிபதி மீதான படுகொலை முயற்சி" என்று வெளியாகியிருந்தது. தன்மீதான இந்தப் பழியை சோடிக்கப்பட்ட புரளி என்று ஈரோஸ் தலைமைப்பீடம் அறிவித்தது. பொதுத் தபாலகத்திற்குச் சென்றுகொண்டிருந்த இரு அப்பாவிகளைக் கைதுசெய்து, கடுமையான சித்திரவதைகளின் பின்னர் பொய்யான வாக்குமூலம் ஒன்றினை கொடுக்க வைத்தே பொலீஸார் இந்த நாடகத்தினை ஆடுகிறார்கள் என்று ஈரோஸ் அமைப்பு விளக்கியிருந்தது.  நான்காம் நாள் பேச்சுக்கள் ஆரம்பமாகிய வேளை, அரசாங்கத்தின் பொய்யான வதந்திகுறித்து ஈரோஸ் அமைப்பினரும் ஏனைய தமிழ்ப் பிரதிநிதிகளும் தமது ஆட்சேபணையைத் தெரிவித்தார்கள். "இது ஜெயாரின் புரளி" என்றும் அதனை அழைத்தார்கள். அன்றைய நாளின் பெரும்பகுதி யுத்தநிறுத்த மீறல்கள் குறித்து ஒருவரையொருவர் சாடுவதிலேயே கழிந்தது. யுத்தநிறுத்த மீறல்கள் குறித்த வாக்குவாதங்கள் முடிவடைந்த பின்னர் பேசிய ஹெக்டர் ஜெயவர்த்தன தான் முன்வைத்துள்ள யோசனைகளை அதிகாரப் பரவலாக்கத்திற்கான அடிப்படையாக வைத்து செயற்பட முடியும் என்று கூறினார். அதற்குப் பதிலளித்த தமிழ்த் தரப்பு, அதிகாரங்கள், அதிகாரப் பரவலாக்கத்திற்கான அலகு, அரசாங்கத்தின் கட்டமைப்பு என்பன குறித்த சிக்கல்கள் தீர்க்கப்பட வேண்டும் என்றும், தமிழர்கள் எதிர்பார்க்கும் அதிகாரங்களுக்கும், அரசால் முன்வைக்கப்படும் அதிகாரங்களுக்கும் இடையே பாரியளவு இடைவெளி காணப்படுவதாகவும் விமர்சித்தனர்.  பேச்சுக்கள் முறிவடைவதைத் தவிர்ப்பதற்காக இந்திய அரசாங்கம் தனது வெளிநாட்டமைச்சர் ரொமேஷ் பண்டாரியை திம்புவிற்கு அனுப்பியது. இரு தரப்பினருடனும் ரொமேஷ் பண்டாரி ஒன்றன் பின் ஒன்றாக பல சந்திப்புக்களை நடத்தினார்.தமிழர் தரப்புடன் பேசிய பண்டாரி, அரசாங்கம் முன்வைத்திருக்கும் தீர்வு ஆலோசனையினை நிராகரிப்பதாகவும், ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்களின் அபிலாஷைகளை தீர்க்கக்கூடிய புதியதொரு தீர்வுத்திட்டத்துடன் அரசு வரவேண்டும் என்கிற கோரிக்கையினையும் முன்வைத்து அறிக்கையொன்றினை வெளியிடுமாறு கேட்டுக்கொண்டார். இதன்மூலம் அன்று முறிவடைய‌ இருந்த பேச்சுக்களை அவரால் நீட்டிக்க முடிந்தது. பேச்சுவார்த்தையின் ஐந்தாம் நாளான ஆடி 12 ஆம் திகதி தமிழ்ப் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து அரசு முன்வைத்திருக்கும் தீர்வுக்கான ஆலோசனைகளை நிராகரிப்பதாக அறிக்கையொன்றினை வெளியிட்டனர். அறிக்கை வெளியிடப்பட முன்னர் தமிழ் மக்களைஅவமானப்படுத்தும் விதமாக இலங்கைஅயரசாங்கம் தனது தீர்வு யோசனையினை முன்வைத்திருப்பதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டினர். அமிர்தலிங்கம் ஒருபடி மேலே சென்று, அரசு முன்வைத்திருக்கும் யோசனைகளை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று கூறினார்.  தமிழ்ப் பிரதிநிதிகள் சார்பாக டெலோ அமைப்பின் சார்ள்ஸ் அறிக்கையினை சமர்ப்பித்தார். தொடர்ச்சியாக ஆட்சிக்கு வந்த சிங்கள அரசாங்கங்களுக்கு தமிழரின் அபிலாஷைகள் குறித்த எமது கோரிக்கைகளை ஜனநாயக வழியில் புரியப்படுத்த முடியாமையினாலேயே நாம் ஆயுதம் தூக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டோம். மேலும், எமது தேசியம் மீதான சிங்கள அரசுகளின் ஒடுக்குமுறையும், எம் மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கும் அரச பயங்கரவாதமும், எம் மக்கள் மீதான இனவழிப்பும் அடக்குமுறைக்குள்ளாக்கப்பட்டிருக்கும் எம் மக்களுக்கான தர்க்கரீதியான ஒரே தீர்வு தனிநாடுதான் என்கிற நிலைமைக்கு எம்மைக் கொண்டுவந்து விட்டிருக்கிறது. இதன் தர்க்கரீதியான வெளிப்பாடே ஆயுதப்போராட்டம் என்றால் அது மிகையில்லை. ஆனாலும், இலங்கையரசாங்கம் நியாயமான, ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வொன்றினை முன்வைக்கும் பட்சத்தில் அமைதியான அத்தீர்வினை பரிசீலிக்க தமிழ் மக்கள் தயாராகவே இருக்கிறார்கள். ஏனென்றால், தமிழ் மக்கள் அமைதியினை விரும்பும் ஒரு மக்கள் கூட்டமாகும். சிறிலங்கா அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டிருக்கும் தீர்வு ஆலோசனைகள் எந்தவிதத்திலும் நேர்மையானதாகவோ, அமைதியை ஏற்படுத்தும் முகாந்திரங்களையோ கொண்டிருக்கவில்லை என்பதை எம்மால் உணர்ந்துகொள்ளமுடிகிறது. முதலாவதாக, சிறிலங்கா அரச பிரதிநிதிகள் குழுவின் தலைவர் தனது உரையில், இந்தத் தீர்வு ஆலோசனைகள் கடந்த வருடம் நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டில் இலங்கையரசாங்கத்தால் தீர்மானிக்கப்பட்ட ஆலோசனைகள் என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டார். ஆனால், பின்வரும் காரணங்களுக்காக சர்வகட்சி மாநாட்டினை நாம் முற்றாக நிராகரித்திருக்கிறோம், முதலாவதாக, சர்வகட்சி மாநாட்டில் பங்குகொண்ட தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி, சர்வகட்சி மாநாடு குழப்பகரமான நிலையில் முடிவிற்குக் கொண்டுவரப்பட்டவுடன் வெளியிட்ட அறிக்கையில் அதிகாரம் மிக்க பிராந்தியம் எனும் அடிப்படையில் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்விற்கு அருகில்க் கூட சர்வக‌ட்சி மாநாட்டில் அரசால் முன்வைக்கப்பட்ட தீர்வு வரவில்லை என்பதைத் தெளிவாகக் கூறியிருந்தது. இரண்டாவதாக, ஒரு விடுதலைப் போராட்ட அமைப்பு என்கிற வகையில், நவ பாஸிஸ இலங்கையரசு, தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்கு இராணுவ ரீதியில் தீர்வினை வழங்கவே சர்வகட்சி மாநாட்டினை போர்வையாகப் பாவித்தது என்பதனை ஐயம் திரிபுற  நம்புகிறோம். மேலும், ஈழத்திற்கான தேசியப் பிரச்சினையினை இலங்கையரசாங்கம் இதுவரையில் புரிந்துகொள்ளவில்லை என்பதையே அது இங்கு முன்வைத்திருக்கும் தீர்வு சுட்டிக் காட்டுகிறது. அதற்கான காரணங்களை நாம் முன்வைக்கிறோம்,   1. அரசாங்கம் முன்வைத்திருக்கும் தீர்வில் தமிழ் மக்கள் ஒரு தேசமாக அங்கீகரிக்கப்படவில்லை. ஆனால், தமிழ் மக்களால் எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத மாவட்ட ரீதியிலான அதிகாரப் பரவலாக்க அலகினை அரசு முன்வைத்திருக்கிறது. 2. அரசு முனைத்திருக்கும் தீர்வு, தமிழ் மக்களினதோ அல்லது சிங்கள மக்களினதோ சுயநிர்ணய உரிமையினை புறக்கணித்திருப்பதுடன், சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றின்மூலமாகவோ அல்லது அதையொத்த இன்னொரு வாக்கெடுப்பு ஒன்றின்மூலமாகவோ தீர்வினை மக்கள் முன் கொண்டுசெல்லும் வழிவகையினைக் கொண்டிருக்கவில்லை. மக்களின் விருப்பினை நிராகரித்திருக்கும் அரசாங்கம், பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினைக் கொண்டு அரசியல் சட்டத்தில் திருத்தத்தினைச் செய்யலாம் என்று கூறுகிறது.இப்படிச் செய்வதனூடாக மக்கள் மீது அரசியல் யாப்பின் அடைப்படையில் உருவாக்கப்படவிருக்கும் சர்வாதிகாரத்தைத் திணிக்க முயல்கிறது.  ஆகவே, இந்த நிலையில் மேற்கொண்டு பேச்சுக்களில் ஈடுபடுவதில் பயனில்லை என்கிற நிலைப்பாட்டிற்கு நாம் வந்திருப்பதுடன், நாடு இன்றிருக்கும் இக்கட்டான நிலைக்குக் காரணமாகியிருக்கும் அரசாங்கமே தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய நேர்மையானதும், அவர்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யக்கூடியதுமான தீர்வினை முன்வைக்க வேண்டும் என்றும் கோருகிறோம்.    நிரந்தர சமாதானத்தினைக் கருத்தில்க் கொண்டு, தமிழ் மக்களால் பரிசீலித்துப் பார்க்கக் கூடிய தீர்வொன்றுடன் மீண்டும் இலங்கையரச பிரதிநிதிகள் குழு பேச்சுவார்த்தைகளுக்குத் திரும்பவேண்டும் என்கிற தீர்க்கமான கோரிக்கையினை நாம் முன்வைக்கிறோம். ஜனாதிபதி ஜெயாரைப் படுகொலை செய்ய எத்தனித்ததாக தம்மீது முன்வைக்கப்பட்ட அரசின் குற்றச்சட்டிற்கெதிரான தனது அதிருப்தியினை ஈரோஸ் அமைப்பு எழுத்துமூல அறிக்கையொன்றின் ஊடாக வெளியிட்டது. இந்தியாவின் ரொமேஷ் பண்டாரி பேச்சுவார்த்தைக்குழுக்களுக்கான விருந்துபசராம் ஒன்றினை வழங்கினார். பேச்சுவார்த்தையின் இறுதிநாளான ஆடி 13 ஆம் திகதி அரச தரப்புப் பிரதிநிதிகளுடன் பேசிய தமிழ்த் தரப்பு தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளக்கூடிய புதிய‌ தீர்வொன்றுடன் அடுத்த கட்டப் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்ததுடன் தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய தீர்வு அமையவேண்டிய அடிப்படைகள் குறித்து தனது நிலைப்பாட்டினையும் முன்வைத்தது.   பேச்சுவார்த்தைக் குழுக்கள் இணைந்து வெளியிட்ட சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த திம்புப் பிரகடணம் இவ்வாறு அமைந்திருந்தது, தமிழ்த் தரப்பு முன்வைத்த பிரகடணம்,   தமிழ்த் தேசிய பிரச்சினைக்கான அரத்தபுஷ்ட்டியான தீர்வு பின்வரும் நான்கு அடிப்படை விடயங்களை உள்ளடக்கியதாக இருக்கவேண்டும் என்று நாம் கருதுகிறோம்,   1. இலங்கைத் தமிழர்களைத் தனியான தேசமாக அங்கீகரிப்பது 2. இலங்கையில் தமிழருக்கென்று தனியான தாயகம் இருப்பதை அடையாளம் காண்பதும் அதனை அங்கீகரிப்பதும் 3. தமிழ்த் தேசத்தின் சுயநிர்ணய உரிமையினை அங்கீகரிப்பது 4. இலங்கையில் வாழும் அனைத்துத் தமிழர்களினதும் குடியுரிமை மற்றும் அடிப்படை உரிமைகளை அங்கீகரிப்பது   பல்வேறு நாடுகள் தமக்கு உகந்த செயற்திட்டங்கள் ஊடாக இந்த அடிப்படைகள் ஏற்றுக்கொள்ளப்படுவதனை உறுதிப்படுத்தியிருக்கின்றன. தமிழ் மக்களுக்கான அடிப்படை உரிமைகள் நிராகரிக்கப்பட்டமையினாலேயே அதற்குத் தீர்வாக தனிநாட்டினை முன்வைத்துப் போராடி வருகிறோம். தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினைக்கான தீர்வாக இலங்கையரசாங்கம் முன்வைத்திருக்கும் தீர்வினை எம்மால் எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை திட்டவட்டமாகக் கூறிக்கொள்கிறோம். ஆகவே, 1985 ஆம் ஆண்டு ஆடி மாதம் 12 ஆம் திகதி நாம் வெளியிட்ட அறிக்கையின்படி இலங்கையரசாங்கம் இங்கு முன்வைத்திருக்கும் தீர்வு யோசனைகளை நாம் முற்றாக நிராகரிக்கிறோம். ஆனாலும், அமைதிக்கான வழிகளைத் தேடும் மக்கள் கூட்டம் எனும் அடிப்படையில், நாம் மேலே குறிப்பிட்ட நான்கு அடிப்படை அம்சங்களை உள்ளடக்கிய புதிய தீர்வு யோசனைகளை இலங்கையரசாங்கம் முன்வைக்கும் பட்சத்தில் அவற்றைப் பரிசீலிர்த்துப் பார்க்கத் தயாராக இருப்பதையும் இங்கு கூறிக்கொள்கிறோம்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.