Jump to content

‘பெர்லின் மாரத்தான்’- உலக சாதனை படைத்த கென்யா வீரர்


Recommended Posts

‘பெர்லின் மாரத்தான்’- உலக சாதனை படைத்த கென்யா வீரர்

 

மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் ஒலிம்பிக் சாம்பியனான கென்யா வீரர் எலியாட் கிப்சோஜ் புதிய உலகசாதனை படைத்துள்ளார்.

மாரத்தான்

‘பெர்லின் மாரத்தான்’ போட்டி ஜெர்மன் தலைநகர் பெர்லினில் நேற்று நடைபெற்றது. இதில் ஒலிம்பிக் சாம்பியனான கென்ய வீரர் எலியாட் கிப்சோஜ் (33) பங்கேற்றார். இந்தப் போட்டியில் 42 கிலோ மீட்டர் பந்தய இலக்கை அவர் 2 மணி ஒரு நிமிடம் 39  விநாடிகளில் கடந்து தங்கம் வென்றார். இது உலக சாதனையாகவும் அமைந்தது. 2014-ம் ஆண்டில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் கென்ய வீரரான  டென்னிஸ் கிமெட்டொ 2 மணி 2 நிமிடம் 57 விநாடிகளில் இலக்கை அடைந்ததே முந்தைய சாதனையாக இருந்தது. இதை 1 நிமிடம் 18 விநாடிகள் வித்தியாசத்தில் முறியடித்துள்ளார் கிப்சோஜ். கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற பெர்லின் மாரத்தான் போட்டியில் இவர் தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது. இதுவரை கிப்சோஜ் பங்கேற்ற 12 மாரத்தான் போட்டிகளில் 11 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார். சிகாகோ (2014), பெர்லின் (2015, 2017), லண்டன் ( 2015, 2016, 2018), மற்றும் ஒலிம்பிக் போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளார்.

 

 

இதுகுறித்து பேசிய கிப்சோஜ், ``இந்த நாளை வர்ணிக்க என்னிடம் வார்த்தைகளே இல்லை. உலக சாதனை நிகழ்த்தியது மகிழ்ச்சி. இரண்டு முறை வாய்ப்பை நழுவவிட்டு விட்டாய். மூன்றாவது முறை அப்படி நிகழக்கூடாது என அனைவரும் கூறினர். எனக்கு உதவிய அனைவருக்கும் நன்றி.  தனியாக ஓடுவது என்பது கடினமான ஒன்று. நான் எனது நம்பிக்கையைத் தளரவிடவில்லை. நான் என் பாணியில் ஓடினேன். என் பயிற்சியாளர்கள் மீது நம்பிக்கை வைத்திருந்தேன். இவை அனைத்தும்தான் களத்தில் என்னைச் செலுத்தியது’ என்றார். 

https://www.vikatan.com/news/sports/137097-kenyan-eliud-kipchoge-shatters-marathon-world-record-in-berlin.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.