Jump to content

இந்திய- சிறிலங்கா கடற்படைகளின் கூட்டுப் பயிற்சி நிறைவு


Recommended Posts

இந்திய- சிறிலங்கா கடற்படைகளின் கூட்டுப் பயிற்சி நிறைவு

 

SLINEX-2018-1-1-300x199.jpg

IF

இந்திய- சிறிலங்கா  கடற்படைகள் திருகோணமலையில் நடத்தி வந்த SLINEX-2018 கூட்டுப் பயிற்சி கடந்தவாரம் நிறைவடைந்துள்ளது.

கடந்த 7ஆம் நாள் ஆரம்பமாகிய இந்தக் கூட்டுப் பயிற்சி 17ஆம் நாள் நிறைவடைந்தது.

துறைமுகம், கடல் என இரண்டு கட்டங்களாக, நடந்த ஒரு வார கால கூட்டுப் பயிற்சியில் இரண்டு நாடுகளினதும், 1000 கடற்படையினர் பங்கேற்றனர்.

சிறிலங்கா கடற்படையின் சயுரால, சமுத்ர, சுரனிமல ஆகிய போர்க்கப்பல்களும், இந்தியக் கடற்படையின், சுமித்ரா கிர்ச், கோரா டிவ் ஆகிய போர்க்கப்பர்களும், இரண்டு டோனியர் விமானங்கள் மற்றும் ஒரு உலங்குவானூர்தியும் இந்தக் கூட்டுப் பயிற்சியில் பங்கேற்றன.

இந்தக் கூட்டுப் பயிற்சியில் முதல் முறையாக, சிறிலங்கா கடற்படையின் சயுரால போர்க்கப்பலில், சிறிலங்கா விமானப்படையின் உலங்குவானூர்தி தரையிறக்கப்பட்டு பயிற்சிகள்  மேற்கொள்ளப்பட்டன.

SLINEX-2018-1-1.jpg

SLINEX-2018-3.jpgSLINEX-2018-4.jpg

SLINEX-2018-2-1.jpg

http://www.puthinappalakai.net/2018/09/17/news/32933

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாட்டா உலகின் இரு பெரும் வல்லரசுகள் கூட்டுப் பயிற்சியை முடித்துவிட்டன. எனி என்ன உலகமே அதிரப் போகுது. சீனா ஆடிஅடங்கப் போகுது. ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nedukkalapoovan said:

அப்பாட்டா உலகின் இரு பெரும் வல்லரசுகள் கூட்டுப் பயிற்சியை முடித்துவிட்டன. எனி என்ன உலகமே அதிரப் போகுது. சீனா ஆடிஅடங்கப் போகுது. ?

இப்படி எதிரியை  நக்கலடிச்ச்சு நக்கலடிச்சுத் தான் அழிந்து போய் இருக்கிறோம் 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, ரதி said:

இப்படி எதிரியை  நக்கலடிச்ச்சு நக்கலடிச்சுத் தான் அழிந்து போய் இருக்கிறோம் 

 

அப்ப நக்கல் அடிக்காமல்.. சீரியஸா கதைத்திருந்தால்.. வென்றிருப்பமாக்கும்.

நாம் தோற்றதற்கு பதிலை மகிந்தவே சொல்லிட்டார். உலக நாடுகள் குறிப்பாக.. ஹிந்தியாவின் உதவி இன்றி போரில் நிச்சயம் வென்றிருக்கவே முடியாதுன்னு.

ஹிந்தியாவால்.. ஒரு சின்னத்தீவில் இருந்த புலிகளை தமிழர்களை அழிக்கத் தெரிந்திருக்கலாம்... ஆனால்.. அருகில் இருக்கும் சீனாவையோ.. பாகிஸ்தானையோ.. அது தொட்டும் பார்க்க முடியாது. ? 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.