Jump to content

சிறிலங்காவை பௌத்த நாடு என்று மோடியிடம் ஏற்றுக் கொண்டாரா சம்பந்தன்?


Recommended Posts

சிறிலங்காவை பௌத்த நாடு என்று மோடியிடம் ஏற்றுக் கொண்டாரா சம்பந்தன்?

 

 

sam-modi-300x200.jpgசிறிலங்காவை ஒரு பௌத்த நாடாக ஏற்றுக் கொள்வதாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம், இரா.சம்பந்தன் ஏற்றுக் கொண்டுள்ளார் என்று இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையிலான அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழு அண்மையில் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்தது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், டக்ளஸ் தேவானந்தா, மனோ கணேசன் உள்ளிட்டவர்களைக் கொண்ட இந்தக் குழுவினர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தனர்.

இதன் பின்னர், டெக்கான் குரோனிக்கல் நாளிதழ், நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தாவிடம் செவ்வி கண்டுள்ளது.

இந்தச் செவ்வியில் அவரிடம், உங்களின் பிரதிநிதி இரா.சம்பந்தன், முற்றிலுமாக தமிழரின் நிலைப்பாட்டில் இருந்து மாறியுள்ளார் என்றும், இந்தியப் பிரதமர் மோடியிடம் அவர், தமிழர்கள் சிறிலங்காவை ஒரு பௌத்த அரசாக ஏற்றுக்கொள்வதாக கூறியுள்ளார் எனவும் எமது புதுடெல்லி வட்டாரங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது, அதுபற்றிய உங்கள் கருத்து என்ன என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு டக்ளஸ் தேவானந்தா அளித்துள்ள பதிலில்,

“முதலில் நான் ஒன்றைக் கூற வேண்டும். இரா.சம்பந்தன் ஒட்டுமொத்த தமிழ் மக்களினதும் தலைவர் அல்ல. அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக மாத்திரம் இருக்கிறார்.

ஈபிடிபி சார்பில் நானும், தமிழ் முற்போக்கு முன்னணியின் சார்பில் மனோ கணேசனும், முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ரவூப் ஹக்கீமும் இந்தக் குழுவில் வந்திருக்கிறோம்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்த போது, சிறிலங்காவை பௌத்த நாடாக அங்கீகரிப்பதாக இரா.சம்பந்தன் கூறினார். இந்தக் கருத்து, துரதிஷ்டவசமானது என்றும் அவர் குறிப்பிட்டார்.

அது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடாக இருக்கலாம். ஆனால் தமிழ் மக்களின் நிலைப்பாடு அதுவல்ல.

சிறிலங்கா ஒரு மதச்சார்பற்ற நாடு. அனைவருக்கு சமமான உரிமைகள் வழங்கப்பட வேண்டும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

http://www.puthinappalakai.net/2018/09/17/news/32942

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் தரப்பை குழாயடி சண்டை மூலம் பலவீனம் செய்து சிங்கள கட்சிகளை நோக்கி தள்ளுவதே கிந்தயத்தின் மூலமாகும். மாகாண சபை வேண்டாம் என்ற போது போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அபிவிருத்தி, சர்வதேசத்தோடு பேச வேண்டும் என்றினம் .

தமிழர் தரப்பை இரண்டு பிளவாக.நிறுத்தி (திமுக /அதிமுக போல்) உள்ளடி அரசியல் செய்ய வைக்கும்??

     

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தன்.. எப்பவும் மக்களின் முன்னாள் ஒன்றும்.. தனிப்பட்ட முறையில் தனது இருப்பை.. தனது அரசியல் வியாபாரத்தை கொண்டு நடத்த இன்னொன்றும் பேசும் இரட்டை நாக்குக்காரர்.

அதற்காக ஒட்டுக்குழுக்கள் திறம் என்றில்லை. இப்ப வியாபாரச் சண்டை நடக்குது. 

இவர்களின் அரசியல் தலைமையை நம்பியதாலும் தான் முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களின் வாக்குகளின் அடிப்படையில் ஓரளவுக்குப் பெரும்பான்மையுடன் உறுப்பினர்களைக் கொண்ட கட்சி, தமிழ்க் கூட்டமைப்பாகும். அதன் தலைவரான சம்பந்தரோ அல்லது அதன் மூளையான சுமந்திரனோ மக்களின் ஆதரவை இப்போது படிப்படையாக இழந்துவருகின்றபோதிலும்கூட, வேறு தெரிவுகள் இன்றிருப்பதால் தமிழர்கள் தொடர்ந்தும் இவர்களுக்கே வாக்களித்து வருகின்றனர்.

புலிகள் இருக்கும்வரை, இவர்கள் உற்பட எந்த ஒரு கட்சிக்கோ அல்லது குழுவிற்கோ தமிழர்களுக்குத் தலைமை ஏற்பதற்கான தேவையோ அல்லது மக்கள் அவர்களை நோக்கிச் செல்லவேண்டிய தேவையோ இருந்ததில்லை. தமிழ் மக்களுக்கான அரசியலையும், விடுதலைக்கான பயணத்தையும் புலிகளே முன்னின்று நடத்திவந்தனர்.

இன்று அவர்களால் ஏற்படுத்தப்பட்ட நிரப்பமுடியாத பாரிய வெற்றிடத்தை தமிழ்க் கூட்டமைப்பு, புலிகளால் அங்கீகரிக்கப்பட்டவர்கள் என்கிற ஒரே காரணத்தினால் பாரிய ஒட்டையுடன் நிரப்ப முயன்று வந்தது.

ஆனால், அண்மைய வருடங்களில் சம்மந்தன் மற்றும் சுமந்திரன் போன்றவர்கள், புலிகளின் அரசியலிலிருந்து கூட்டமைப்பை வெளிநகர்த்தியும், புலிகளால் முன்னெடுக்கப்பட்ட தமிழ்த் தேசியத்தை முன்னிறுத்திய அரசியலிலிருந்தும் தம்மை விலக்கிச் செல்ல விளைவது தெரிகிறது.

ஏற்கனவே புலிகளின் வீழ்ச்சியென்பது தமிழர்களின் விடுதலைக்கான அரசியலில் பாரிய பின்னடைவைச் செலுத்தியிருக்கும் நிலையில், சுமந்திரனது அண்மைய சமஷ்ட்டி தொடர்பான கருத்தும், சம்பந்தனது சிங்கள பெளத்த நாடென்று இலங்கையை ஏற்றுக்கொள்ளும் கருத்தும் மேலும் மேலும் தமிழரது அரசியலையும் , இருப்பையும் பலவீனப்படுத்தும் ஒரு செயற்பாடென்றே நான் நினைக்கிறேன். 

அரசியலில் பலவருடங்கள் இருந்துவருகின்ற சம்பந்தன் அவர்கள் இனி ஓய்வுபெறும் காலம் நெருங்கிவிட்டதைத்தான் அவரது கருத்துக்களும் செயற்பாடுகளும் நிரூபிக்கின்றன. இலங்கை சிங்கள அரசியல்வாதிகளுடனாக இருக்கட்டும்,  மேற்குலக ராஜதந்திரிகளுடனாக இருக்கட்டும், அல்லது இந்திய அரசியல் தலைவர்களுடனாக இருக்கட்டும், அவர் பேசும் தொனி அல்லது முக பாவனைகளைப் பார்க்கும்போது (Body Language), ஒரு சரணாகதி அடைந்தவருக்கான அத்தனை அம்சங்களையும் நான் பார்க்கிறேன்.
இப்படியான ஒருவர் தமிழருக்கான  நீதியான அரசியல் தீர்வொன்றிஒனை எப்படி பெற்றுத்தரப்போகிறார் என்பது எனது கேள்விக்குறி. ரணிலுடன் யாழ்ப்பாணத்தில் தேர்தல் மேடையில் சிங்கக்கொடிய ஏந்திய வேளையாகட்டும், இலங்கைப் பாராளுமன்றத்தில் எதிர்கட்சித்தலைவராக இருந்த காலத்திலாகட்டும், அவர் ஒரு தமிழ் அரசியல்த் தலைவர் என்பதனை ஒருபொழுதிலும் காட்டவில்லை.

சுமந்திரனது அரசியல் விசித்திரமானது. முதிர் வயதில் தள்ளாடும் சம்பந்தனை வைத்துக்கொண்டு இவர் ஆடும் ஆட்டம் நிச்சயமாக தமிழருக்குத் தீர்வைப் பெற்றுத்தரப்போவதில்லை என்பது திண்ணம்.
 

Link to comment
Share on other sites

11 hours ago, ragunathan said:

ஏற்கனவே புலிகளின் வீழ்ச்சியென்பது தமிழர்களின் விடுதலைக்கான அரசியலில் பாரிய பின்னடைவைச் செலுத்தியிருக்கும் நிலையில், சுமந்திரனது அண்மைய சமஷ்ட்டி தொடர்பான கருத்தும், சம்பந்தனது சிங்கள பெளத்த நாடென்று இலங்கையை ஏற்றுக்கொள்ளும் கருத்தும் மேலும் மேலும் தமிழரது அரசியலையும் , இருப்பையும் பலவீனப்படுத்தும் ஒரு செயற்பாடென்றே நான் நினைக்கிறேன். 

சம்மந்தன் 40 வருடங்களாகவும் சுமந்திரன் 7, 8 வருடங்களாகவும் தமிழின படுகொலைகாரர்களைப் பலப்படுத்தும்  செயற்பாடுகளையும், தமிழரது அரசியலையும் இருப்பையும் பலவீனப்படுத்தும் செயற்பாடுகளையும்  மட்டுமே செய்து வந்துள்ளனர்! 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.