Jump to content

கோழி வெப்புடு, வெஞ்சன மாமிசம், மைசூர் சில்லி சிக்கன்...சண்டே சமையல்!


Recommended Posts

கோழி வெப்புடு, வெஞ்சன மாமிசம், மைசூர் சில்லி சிக்கன்...சண்டே சமையல்!

3284_thumb.jpg
 

வ்வளவுதான் மெனக்கெட்டாலும் வறுவல், குழம்பு தவிர, புதுமையான சிக்கன் ரெசிப்பிக்களைப் பலருக்கும் செய்யத் தெரியாது. அல்லது செய்வதில் தயக்கம் இருக்கலாம். அப்படிப்பட்டவர்களுக்கு இதோ சில புதுமையான சிக்கன் ரெசிப்பிக்கள்...

கோழி முந்திரி வறுவல்

கோழி முந்திரி வறுவல்

 

 

தேவையானவை:

சிக்கன் – 250 கிராம் (துண்டுகளாக நறுக்கவும்)

இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்

மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்

மல்லித்தூள் (தனியாத்தூள்) – ஒரு டீஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிதளவு

காய்ந்த மிளகாய் – 3

முந்திரி – 10

மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன்

வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)

தக்காளி – ஒன்று (பொடியாக நறுக்கவும்)

நறுக்கிய கொத்தமல்லித்தழை – சிறிதளவு

எண்ணெய் – 3 டீஸ்பூன்

பட்டை, கிராம்பு, ஏலக்காய் – சிறிதளவு

உப்பு – தேவையான அளவு

செய்முறை:

வாணலியில் எண்ணெய்விட்டு பட்டை, கிராம்பு, ஏலக்காய், காய்ந்த மிளகாய் தாளிக்கவும்.  இதனுடன் வெங்காயம், இஞ்சி - பூண்டு விழுது, தக்காளி, சிக்கன் துண்டுகள் சேர்த்து வதக்கவும். பிறகு மிளகாய்த்தூள், மல்லித்தூள், உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர்விட்டு வேக விடவும். சிக்கன் துண்டுகள் வெந்து தண்ணீர் வற்றிய பின் முந்திரி, கறிவேப்பிலை, மிளகுத்தூள் சேர்த்துக் கலந்து இறக்கவும். மேலே கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

 

 

சுக்கா வறுவல்

கோழி சுக்கா வறுவல்

தேவையானவை:

எலும்பில்லாத சிக்கன்  – 250 கிராம்

இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்

மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன்

பச்சை மிளகாய் – 3 (பொடியாக நறுக்கவும்)

காய்ந்த மிளகாய் – 3

வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)

தக்காளி – ஒன்று (பொடியாக நறுக்கவும்)

சோம்பு – ஒரு டீஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிதளவு

நறுக்கிய கொத்தமல்லித்தழை – சிறிதளவு

எண்ணெய் – 3 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

செய்முறை:

வாணலியில் எண்ணெய்விட்டு சோம்பு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும். இதனுடன் இஞ்சி - பூண்டு விழுது, தக்காளி, சிக்கன், உப்பு சேர்த்து வதக்கி வேகவிடவும். நீர் வற்றி சிக்கன் துண்டுகள் வெந்த பிறகு மிளகுத்தூள் தூவிக் கிளறி இறக்கவும். நறுக்கிய கொத்தமல்லித்தழையால் அலங்கரித்துச் சூடாகப் பரிமாறவும். 

ஆந்திரா சிக்கன்

ஆந்திரா ஸ்டைல் ஸ்பைசி சிக்கன்

தேவையானவை:

சிக்கன் – 250 கிராம் (துண்டுகளாக நறுக்கவும்)

காய்ந்த மிளகாய் – 4

பச்சை மிளகாய் – 5 (பொடியாக நறுக்கவும்)

காஷ்மீரி மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்

வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)

இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்

பச்சை மிளகாய் சாஸ் – ஒரு டீஸ்பூன்

நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு

எண்ணெய் – 2 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

செய்முறை:

வாணலியில் எண்ணெய்விட்டு வெங்காயம் சேர்த்து வதக்கவும். இதனுடன் இஞ்சி - பூண்டு விழுது, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பிறகு சிக்கன் துண்டுகள், காஷ்மீரி மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து அடுப்பைக் குறைந்த தீயில் வைத்து சிக்கனை வேகவிடவும். சிக்கன் மிருதுவாக வெந்த பிறகு பச்சை மிளகாய் சாஸ், நறுக்கிய கொத்தமல்லித்தழை சேர்த்துக் கிளறி இறக்கி, சூடாகப் பரிமாறவும்.

ஆந்திரா கோழி பிரியாணி

ஆந்திரா கோழி பிரியாணி

தேவையானவை:

சிக்கன் – அரை கிலோ 

(துண்டுகளாக நறுக்கவும்)

சீரக சம்பா அரிசி – அரை கிலோ

பச்சை மிளகாய் – 8 

(நீளவாக்கில் நறுக்கவும்)

வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கவும்)

தக்காளி – 2 

(சிறிய சதுர துண்டுகளாக நறுக்கவும்)

இஞ்சி – பூண்டு விழுது – 2 டீஸ்பூன்

புதினா – ஒரு கட்டு (ஆய்ந்து வைக்கவும்)

கொத்தமல்லித்தழை – ஒரு கட்டு (பொடியாக நறுக்கவும்)

பால் – கால் லிட்டர் 

(காய்ச்சி ஆறவைக்கவும்)

தயிர் – 100 மில்லி

எண்ணெய் – 50 மில்லி

நெய் – 2 டீஸ்பூன்

பட்டை, கிராம்பு, ஏலக்காய்  – சிறிதளவு

உப்பு – தேவையான அளவு

செய்முறை:

அரிசியை அரை மணி நேரம் ஊறவிடவும். பாத்திரத்தில் எண்ணெய்விட்டு பட்டை, கிராம்பு, ஏலக்காய், வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். இதனுடன் சிக்கன், கொத்தமல்லித்தழை, புதினா சேர்த்து வதக்கவும். பிறகு தயிர், உப்பு, பால், அரை லிட்டர் தண்ணீர், தக்காளி சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். இதனுடன் அரிசியைச் சேர்த்து வேகவிடவும். அரிசி பாதியளவு வெந்த பிறகு தம் போட்டு இறக்கவும். கொத்தமல்லித்தழை, புதினா, நெய் சேர்த்து 15 நிமிடங்கள் அப்படியே வைக்கவும். பிறகு ராய்த்தாவுடன் பரிமாறவும். 

வெப்புடு

கோழி வெப்புடு

தேவையானவை:

எலும்பில்லாத சிக்கன் – கால் கிலோ (துண்டுகளாக நறுக்கவும்)

தட்டிய பூண்டு – 30 கிராம்

நறுக்கிய வெங்காயம் – 50 கிராம்

கறிவேப்பிலை – சிறிதளவு

மஞ்சள்தூள் – 2 சிட்டிகை

காய்ந்த மிளகாய் – 3

மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன்

பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு

சீரகம் – அரை டீஸ்பூன்

எண்ணெய் - 2 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்த மிளகாய், சீரகம், பூண்டு, கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும். இதனுடன் சிக்கன் துண்டுகள், மஞ்சள்தூள் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு வேகவிடவும். பிறகு மிளகுத்தூள் தூவிக் கிளறவும். மேலே கொத்தமல்லித்தழை தூவி இறக்கிப் பரிமாறவும்.

வெஞ்சன மாமிசம்

வெஞ்சன மாமிசம்

தேவையானவை:

எலும்பில்லாத மட்டன் – கால் கிலோ (துண்டுகளாக நறுக்கவும்)

வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கவும்)

காய்ந்த மிளகாய் – 3

பட்டை, கிராம்பு, ஏலக்காய்  – சிறிதளவு

கறிவேப்பிலை – சிறிதளவு

மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன்

மல்லித்தூள் (தனியாத்தூள்) – 2 டீஸ்பூன்

மிளகுத்தூள் – 2 டீஸ்பூன்

இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்

பூண்டு – 5 பல் (தட்டவும்)

எண்ணெய் – 3 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

செய்முறை:

வாணலியில் எண்ணெய்விட்டு பட்டை, கிராம்பு, ஏலக்காய், வெங்காயம் சேர்த்துப் பொன்னிறமாக வறுக்கவும். பிறகு இஞ்சி - பூண்டு விழுது, மட்டன், மிளகாய்த்தூள், மல்லித்தூள், உப்பு சேர்த்து,  கொஞ்சம் தண்ணீர் விட்டு, மட்டன் மிருதுவாகும் வரை நன்கு வேகவிடவும். இதனுடன்  மிளகுத்தூள் சேர்த்துக் கலக்கவும். மற்றொரு வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்த மிளகாய், பூண்டு, கறிவேப்பிலை தாளித்து, மட்டனுடன் சேர்த்துக் கலந்து சூடாகப் பரிமாறவும்.

மைசூர் சில்லி சிக்கன்

மைசூர் சில்லி சிக்கன்

தேவையானவை

சிக்கன் – கால் கிலோ 

(துண்டுகளாக நறுக்கவும்)

சதுர துண்டுகளாக நறுக்கிய வெங்காயம் – 100 கிராம்

சதுர துண்டுகளாக நறுக்கிய குடமிளகாய் (பச்சை, மஞ்சள், சிவப்பு) – 100 கிராம்

பச்சை மிளகாய் – 5 

(வட்ட வடிவமாக நறுக்கவும்)

தோல் சீவி, பொடியாக நறுக்கிய 

இஞ்சி – ஒரு டீஸ்பூன்

பொடியாக நறுக்கிய பூண்டு – 

ஒரு டீஸ்பூன்

தேங்காய்த் துருவல் – அரை கப்

வெள்ளை எள் – ஒரு டீஸ்பூன்

வேர்க்கடலை – 2 டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் – 3

கறிவேப்பிலை – சிறிதளவு

நறுக்கிய கொத்தமல்லித்தழை – சிறிதளவு

மஞ்சள்தூள் – 2 சிட்டிகை

எண்ணெய் – 3 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

செய்முறை:

வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டு காய்ந்த மிளகாய், தேங்காய்த் துருவல், வேர்க்கடலை, எள் சேர்த்து வறுத்து, மிக்ஸியில் பவுடராக அரைக்கவும். அதே வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டு வெங்காயம், குடமிளகாய் சேர்த்து வதக்கி தனியாக எடுத்து வைக்கவும். மீண்டும் அதே வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், சிக்கன், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும். இதனுடன் அரைத்த பவுடர், கறிவேப்பிலை, வெங்காயம், குடமிளகாய், நறுக்கிய கொத்தமல்லித்தழை சேர்த்துக் கிளறி இறக்கிச் சூடாகப் பரிமாறவும்.  

https://www.vikatan.com/news/miscellaneous/137056-mouth-watering-chicken-recipes.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
    • அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)      
    • முள்ளிவாய்க்கால் அழிவிற்கு நன்றி சொல்லி பொன்னாடை போர்த்திய நிகழ்வுகளுக்கு ஊமையாக இருந்தோர் சீமான் விடயத்தில் கதறுவது ஏன்?  தமிழை விட திராவிடம் வலிமையானது என்றா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.