Jump to content

மட்டக்களப்பில் மண் மாபியாக்களால் அழியும் ஒரு விவசாய பூமி!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பில் மண் மாபியாக்களால் அழியும் ஒரு விவசாய பூமி!

September 16, 2018
agetamil-cenkaladi-5-696x392.jpg

©தமிழ்பக்கம்

மண் வியாபாரிகளால் இந்த பூமி சுரண்டப்படுவதை யாராலும் தடுக்க முடியாது போலுள்ளது. திரும்பும் திசையெல்லாம் மண் மாபியாக்களால் பூமியின் துண்டுகள் பணமாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. மண்ணை நம்பி வாழும் விவசாயிகளின் வாழ்வில் பேரிடியாக விழுந்து கொண்டிருக்கும் மண் வியாபாரத்திற்கு எதிராக அவர்கள் தொடர்ந்தும் குரல் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அது பெரும் திருவிழாவில் தொலைந்து சிறு குழந்தையின் அழுகுரலைப் போல, அதிகார அமைப்புக்களின் காதில் விழாமலேயே போய் விடுகிறது.

அப்படியொரு கதைதான் இந்த கதையும்.

மட்டக்களப்பில் பாலமடு வடக்கு கண்ட விவசாயிகள், தமது விவசாய நிலங்களும், ஆறும் அழிவடையும் அபாயத்தை சந்திக்க ஆரம்பித்துள்ளனர். அதற்கெதிராக அவர்கள் எழுப்பும் குரலை யாரும் கவனிக்கவில்லையென்பதே பெரும் துயரமானது. இது குறித்து தமிழ்பக்கம் விசேட கவனம் செலுத்தியது. நமது செய்தியாளர்கள் அங்கு சென்று திரட்டிய தகவல்களின் தொகுப்பே இது.

செங்கலடி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதி பாலாமடு கண்டம். முற்றிலும் விவசாய நிலங்கள். மாவடி ஓடை ஆற்றை நம்பிய பல நூறு ஏக்கர் விவசாய நிலங்களின் ஒரு பகுதியே பாலாமடு வடக்கு கண்டம். சுமார் 550 ஏக்கர் விவசாய நிலங்களை உள்ளடக்கிய பகுதி.

 

மட்டக்களப்பில் கொடிகட்டி பறக்கும் மண் வியாபாரிகளின் கண், மாவடி ஓடை ஆற்றிலும் விழுந்து விட்டது. விளைவு- விவசாயிகளும், விவசாய நிலங்களும் அபாய கட்டத்தை எட்ட ஆரம்பித்துள்ளனர்.

மாவடி ஓடை ஆற்றில் இரவு பகலாக மண் அள்ளப்பட்டு வருகிறது. மண் வியாபாரிகளின் வேகத்தில், ஆறு விரைவில் குளமாகி விடும் அபாயத்தை சந்திக்க ஆரம்பித்துள்ளது.

agetamil-cenkaladi-1-300x169.jpg

ஆற்றுக்குள் அளவு கணக்கில்லாமல் மண் தோண்டப்படுவதால் ஆற்றின் அகலம் அதிகரிப்பதுடன், ஆங்காங்கே பெரிய பள்ளங்கள் ஏற்பட தொடங்கி விட்டது. ஆற்றின் ஓரமாக வளர்ந்து, ஆற்றின் கரைகளை பாதுகாத்து வந்த நூற்றாண்டு வயதான மரங்கள் அடியோடு சாய்க்கப்படுகின்றன. வாகனம் நிறைய மண், பொக்கட் நிறைய பணம் என்ற ஒற்றைக் குறிக்கோளுடன் இயங்கும் மண் வியாபாரிகளிற்கு இயற்கையின் அழிவு ஏற்படுத்தும் இயல்பு நிலை மாற்றங்களில் அக்கறையிருப்பதில்லை. ஆற்றின் கரைகளில் மரங்கள் விழுவதையடுத்து, கரைகளில் உள்ள விவசாய நிலங்களையும் ஆறு அரிக்க ஆரம்பித்துள்ளது. இதனாலேயே பல ஏக்கர் நிலங்கள் காணாமல் போய் விட்டது.

agetamil-cenkaladi-6-300x169.jpg

இந்த பகுதியில் மண் அள்ள முறையான அனுமதி பெறாமல், சட்டவிரோத மண் வியாபாரிகளே அண் அள்ளுகிறார்கள். ஆனால், அதை சட்டபூர்வமாக செய்வதை போல, வேறிடத்தில் மண் அள்ள வழங்கப்பட்ட அனுமதியை பகிரங்கமாக காட்சிப்படுத்தியுள்ளனர்.

முந்தன்குமாரவெளி ஆற்றில் மண் அள்ள வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரத்தை வைத்தே இந்த பகுதியில் மண் அள்ளப்படுகிறது. ஈரளக்குளம் கிராமசேவகர் பிரிவுக்கு உள்ளடங்கியது முந்தன் குமாரவெளி. அங்கு மண் அள்ள ஈரளக்குளம் கிராமசேவகர் அனுமதி பெறப்பட்டது. அந்த அனுமதி பத்திரத்தை வைத்தே, மாவடி ஓடை ஆற்றில் மண் அள்ளப்பட்டு வருகிறது. இதற்கு பாலமடு கிராமசேவகரின் அனுமதி பெறப்பட்டிருக்கவில்லை.

 

எனினும், பிரதேசசெயலகத்தின் அனுமதி தமக்கு உள்ளதாக மண் வியாபாரிகள் உள்ளூர்வாசிகளை மிரட்டி வைத்துள்ளனர். சட்டவிரோத மண் வியாபாரிகள் தொடர்பாக பிரதேச செயலகத்தில் நீண்டகாலமாக முறையிட்டும், உள்ளூர் விவசாயிகளின் கருத்துக்கள் கவனத்தில் எடுக்கப்படவில்லை. சட்டவிரோத மண் அகழ்வை கேள்வி கேட்டால், மண் அள்ளும் சவளுடன் தாக்க வருகிறார்கள் என விவசாயிகள் மிரண்டு போயுள்ளனர்.

1-9-212x300.jpg2-1-206x300.jpg

வேறு எங்கேயே மண் அள்ள வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரத்தை வைத்து, விவசாய நிலங்களின் நடுவில் மண் அள்ளுகிறார்கள்- அதுவும் பகிரங்கமாக அள்ளுகிறார்கள்… கேள்வி கேட்க வேண்டிய பிரதேச செயலகம் அந்த பக்கமே திரும்பி பார்க்காமல் இருக்கிறது…. சட்டவிரோத மண் தாதாக்கள் பற்றி முறையிட பிரதேச செயலகத்திற்கு சென்றால், அதிகாரிகள் ஏறிப்பாய்கிறார்கள் என்றால் என்ன அர்த்தம்?

இந்த விவகாரத்தில் ஏதோ “சம்திங்“ இருக்கிறது என்பதுதானே பொருள்!

ஆற்றில் இரவு நேரங்களில் மண்ணை அள்ளி அருகிலுள்ள நிலங்களில் குவித்து வைக்கிறார்கள். பகலில் வாகனங்களில் அந்த மண்ணை ஏற்றுகிறார்கள். ஆற்று மண் அனேகமாக விவசாய நிலங்களிலேயே குவித்து வைக்கப்படுகிறது. இதனால் விவசாய நிலங்களான களி மண் தரைகளின் மேல், மணல் படை உருவாகி, விவசாயம் செய்ய முடியாத நிலைமை ஏற்படுகிறது. விவசாய நிலங்களை ஊடறுத்து மண் வியாபாரிகளின் கனரக வாகனங்களும் சென்று வருகின்றன.

 

இதுதவிர, ஆற்றோரமாக மண் வியாபாரிகள் ஒரு பாதையை தமது வாகன பயன்பாட்டிற்கு பாவிக்கிறார்கள். அது தனக்குரிய காணியென விவசாயியொருவர் உரிமை கோருகிறார். இதற்கான ஆவணங்களையும் அவர் வைத்திருக்கிறார். அதுதவிர, நீர்ப்பாசன பொறியியலாளர், கமநலசேவைகள் உத்தியோகத்தர் ஆகியோரும் அது தனிநபரின் காணி என்பதை உறுதிசெய்துள்ளனர்.

ஆனால்- அந்த பாதை பொதுப்பயன்பாட்டிற்கான பாதை, அதை யாரும் உரிமைகோர அனுமதிக்க வேண்டாமென பிரதேசசெயலாளர் கையெழுத்திட்டு கடிதமொன்றை பொலிசாருக்கு வழங்கியுள்ளார். இது கமநல சேவைகள் திணைக்களம், நீர்ப்பாசன திணைக்களம் என்பவற்றுடன் தொடர்புடைய விவகாரம். அதன் உத்தியோகத்தர்களே, தனியார் காணியென உறுதிசெய்து கடிதம் வழங்கியிருக்கின்ற போது, பிரதேச செயலாளர் ஏன் அப்படியொரு கடிதம் அனுப்பினார்?

அவர் மண் தாதாக்களிற்கு சார்பாக நடக்கிறார் என்ற சந்தேகத்தை பொதுமக்களிடம் இது ஏற்படுத்தியுள்ளது.

சட்டமும், நிர்வாகமும் மக்களின் பக்கமே நிற்க வேண்டும். ஆனால் இங்கு அது மண் வியாபாரிகளின் பக்கம் நிற்பதாக சிந்திக்க வேண்டிய சம்பவங்கள் நடப்பதாக விவசாயிகள் விசனித்து போயிருக்கிறார்கள்.

6-193x300.jpg

சட்டவிரோத மண் அகழ்வால் யானை வேலிகளும் அழிவடைய ஆரம்பித்துள்ளன.  இதனால் மீண்டும் அங்கு யானை- மனிதன் மோதல் உருவாகும் அபாயம் எழுந்துள்ளது.

சட்டவிரோத மண் அகழ்வால் அந்த பகுதியின் விவசாயமே அழிவடையும் இன்னொரு ஆபத்தும் உள்ளது. ஆற்றில் பெரிய பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளதால், அதில் நீர் தேங்கி விடுகிறது. உறுகாமம் குளத்திற்கு நீர் செல்வது இந்த ஆற்றின் மூலமே. பள்ளங்களில் நீர் தேங்கி விடுவதால் உறுகாமம் குளத்திற்கு போதிய நீர் செல்வதில்லை. குளத்திற்கு செல்லும் நீரில் கிட்டத்தட்ட அரைவாசி நீர் சட்டவிரோத மண் அகழ்வால் ஏற்பட்டுள்ள பள்ளங்களில் தேங்கி நிற்கிறது. உறுகாமம் குளத்தின் கீழ் கிட்டத்தட்ட 10,000 ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன.  இப்பொழுதே அவற்றில் முழுமையாக விவசாயம் செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

சட்டவிரோத மண் அகழ்வால் மாவடி ஓடை ஆற்று பாலமும் உடைந்து விழும் அபாயம் உள்ளது. பாலம் உடைந்தால், அந்த பகுதிக்கான ஒட்டுமொத்த விவசாயமும் அழிவடையும்.

இது தொடர்பாக ஜனாதிபதி செயலகம் வரை விவசாயிகள் முறைப்பாட்டு கடிதம் அனுப்பியுள்ளனர். பிரதேச செயலகத்தில் பல முறைப்பாடுகளை பதிவு செய்திருக்கிறார்கள். மண் அகழ்வை தடுத்து நிறுத்துவதாக பிரதேச செயலாளர் பலமுறை உறுதி வழங்கிய போதும், சட்டவிரோத மண் அகழ்வு நிற்கவேயில்லை. பொதுமக்களின் அழுத்தம் அதிகரித்த போது, இனி மண் அகழ்வு நடக்காதென இரண்டு வாரங்களின் முன்னர் பிரதேச செயலாளர் உறுதியளித்திருந்தார்.

 

ஆனால், ஆற்றில் மண் அள்ளி விவசாய நிலங்களில் குவிக்கும் நடவடிக்கை நிற்கவேயில்லை. இரண்டு நாட்களின் முன்னர், அதிகாரிகளே அந்த இடத்திற்கு சென்று நேரில் பார்வையிட்டு, அங்கு மண் அள்ளும் நடவடிக்கைக்கு சட்டபூர்வ அனுமதியளிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாக குற்றம்சாட்டப்படுகிறது.

சட்டவிரோத மண் வியாபாரத்தால் தமது விவசாயம் பாதிக்கப்படுவதாக மக்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள். இதை சுலபமாக எதிர்கொள்ள ஒரே வழி- அங்கு சட்டவிரோதமாக மண் அள்ளுபவர்களிற்கு சட்டபூர்வ அனுமதியளிப்பது. அதாவது திருடனிற்கு தேசப்பற்றாளர் வேசம் அணிவிக்க பிரதேசசெயலகம் முயற்சிக்கிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

5-2-216x300.jpg

7-1-224x300.jpg

தனது பிரதேச எல்லைக்குள் உள்ள பாலாமடு வடக்கு கண்டத்தில் விவசாயத்தை நம்பியுள்ள 300 இற்கும் அதிகமான குடும்பங்களின் வாழ்க்கை, இந்த விடயத்தில் பிரதேசசெயலாளர் எடுக்கப் போகும் முடிவிலும் நடவடிக்கையிலுமே தங்கியுள்ளது.

agetamil-cenkaladi-1-300x169.jpgagetamil-cenkaladi-3-300x169.jpgagetamil-cenkaladi-4-300x169.jpgagetamil-cenkaladi-7-169x300.jpg

 

http://www.pagetamil.com/16067/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதற்கான சின்ன உதாரணம் Pearl  harbour பற்றியது. 100 தொடக்கம் 150 விமானங்களை ரேடாரில் கண்டதாக ஒரு உயர் அதிகாரியிடம் ஒருவர் கூறும்போது 10 தொடக்கம் 15 சோதனை  பறப்பில் ஈடுபட்ட விமானங்கள்தான் அவை என கூறி அதை அப்படியே விட்டுவிடும்படி கூறினார் என்பதெல்லாம் நம்பக்கூடியதாகவா உள்ளது. அமெரிக்க ஊடகங்களில் எல்லாம் அலசப்பட்ட விடயம் என்றால் அது உண்மையாகிவிடுமா? இதே போல்தான் ரஷ்யா உக்ரைன் விடயங்களிலும் RT இல் வந்த செய்திகள் என்றால் எல்லாம் பொய், அதே BBC , CNN என்றால் அதுவே வேத வாக்கு என்பது. முயலுக்கு 3 கால்தான் என்று அடம்பிடிப்பது உங்கள் பழக்கம். இல்லை 4 கால்தான் என்றால் உடனே ஆதாரம் காட்டுங்கள் என்பது.
    • இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது - ஜெரூசலேம் விஜயத்தில் டேவிட் கமரூன் 18 APR, 2024 | 10:58 AM   ஈரானின் தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது என பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சர் டேவிடகமரூன் தெரிவித்துள்ளார். ஜெரூசலேத்திற்கான விஜயத்தின்போது அவர் இதனை தெரிவித்துள்ளார். பதற்றத்தை மேலும் அதிகரிக்காத வகையில் இஸ்ரேல் தனது நடவடிக்கையை முன்னெடுக்கவேண்டும் என எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் அடுத்த கட்ட நடவடிக்கையை முன்னெடுப்பது குறித்து தீர்மானித்துள்ளனர் என்பது தெளிவாகின்றது என டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார். இதன் மூலம் இஸ்ரேலின் தாக்குதல்தவிர்க்க முடியாத விடயம் என்பதை ஏற்றுக்கொண்ட முதலாவது வெளிநாட்டு அரசியல்வாதியாக டேவிட்கமரூன் மாறியுள்ளார். https://www.virakesari.lk/article/181353
    • 18 APR, 2024 | 01:20 PM யாழ்ப்பாண பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கை பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ஐம்பது ஆண்டுகளை பூர்த்தி செய்து பொன்விழா காண்கிறது. ஈழத் தமிழர்களின் அறிவுக் கருவூலமாக திகழும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தமிழ்ச் சமூகத்தின் இருப்புக்கும் வளர்ச்சிக்கும் ஆற்றிய பங்களிப்பு ஏராளம். அந்த வகையில் ஐம்பதாவது ஆண்டு நிறைவிலும் அது புதிய பல பரிமாணங்களை பிரசவிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.  அந்த வகையில், முதலாவது சர்வதேச கல்வியியல் ஆய்வு மாநாட்டை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப் படிப்புக்கள் பீடமும் கலைப்பீடத்தைச் சேர்ந்த கல்வியியல் துறையும் இணைந்து ஒழுங்கமைத்துள்ளன.  ‘நாளையை வலுப்படுத்தல் - கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் கருப்பொருளில் இம்மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்.சி.சிறிசற்குணராசா தலைமையிலும் உயர்பட்டப்படிப்புக்கள் பீட பீடாதிபதி பேராசிரியர் செ.கண்ணதாசன் மற்றும் கலைப் பீடாதிபதி பேராசிரியர்.சி.ரகுராம் ஆகியோரின் இணைத்தலைமையிலும் இந்த ஆய்வு மாநாடு அரங்கேறவுள்ளது.  கல்வியியல் துறைத் தலைவர் கலாநிதி ஆ.நித்திலவர்ணண் மாநாட்டின் இணைப்பாளராக செயற்படுகிறார்.  வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம. பற்றிக் டிரஞ்சன் மற்றும் வட மாகாண கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்கின்றனர்.   எதிர்வரும் 20ஆம் திகதி சனிக்கிழமையும் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் காலை மற்றும் மாலை அமர்வுகள் நடைபெறவுள்ளன.  இம்மாநாட்டின் காலை அமர்வுகள் கைலாசபதி கலையரங்கிலும் மாலை அமர்வுகள் உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்திலும் நடைபெறவுள்ளன.  சனிக்கிழமை நடைபெறவுள்ள அங்குரார்ப்பண நிகழ்வில் திறவுகோல் உரையினை கொழும்புப் பல்கலைக்கழக கல்வியியல் பீட கல்வி உளவியல் இருக்கை பேராசிரியர் மஞ்சுளா விதாணபத்திரண நிகழ்த்தவுள்ளார்.  ‘வாண்மைத்துவ விருத்திக்கான ஆய்வு மைய புத்தாக்கங்கள் : வடக்கு இலங்கையின் ஆசிரியர் கல்விக்கான தந்திரோபாய அணுகுமுறை’ எனும் தலைப்பில் இந்த உரை நிகழவிருக்கிறது.  திறவுகோல் உரையினைத் தொடர்ந்து மாநாட்டின் கருப்பொருளை மையப்படுத்திய மையக்கருத்துரைகள் இடம்பெறவுள்ளன. இக்கருத்தரங்குக்கு உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் தலைமைதாங்கவுள்ளார்.  ‘இலங்கையின் ஆரம்ப பிள்ளைப்பருவக் கல்வியை முறைமைப்படுத்தல் - சவால்களும் பிரச்சினைகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீட பேராசிரியர் தி.முகுந்தனும், ‘வட மாகாண கல்வியின் சமகால உள சமூக நிலைமைகள்’ எனும் தலைப்பில் உள மருத்துவ நிபுணர் சி.சிவதாஸும், ‘இலங்கையின் பாடசாலைக் கலைத்திட்டத்தின் சவால்களும் புதிய போக்குகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீட பேராசிரியர் எவ்.எம்.நவாஸ்தீனும், ‘சட்டத் தீர்மானங்களை அறிவிப்பதில் கல்வியியல் ஆய்வுகளின் தேவைகள்’ எனும் தலைப்பில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பி.ஏ.ரஞ்சித்குமாரும் உரையாற்றவுள்ளனர்.  ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாம் நாள் நிகழ்வுகளுக்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்வியியல் துறைப் பேராசிரியர் ஜெயலக்சுமி இராசநாயகம் தலைமைதாங்கவுள்ளார். இந்நிகழ்வில் திறவுகோல் உரையை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மைத் துறைத் தலைவர் பேராசிரியர் கு.சின்னப்பன் ‘தமிழ் கற்பித்தலில் புதிய போக்குகள்’ எனும் தலைப்பில் நிகழ்த்தவுள்ளார்.  அதனைத் தொடர்ந்து ‘நாளையை வலுப்படுத்தல் - கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் தலைப்பில் கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தலைமையில் திறந்த புலமைத்துவக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இக்கலந்துரையாடலில் ஓய்வுபெற்ற வலயக் கல்விப்பணிப்பாளரும் அதிபருமான என்.தெய்வேந்திரராஜா, கல்வியியல் ஆய்வாளரும் அகவிழி மற்றும் ஆசிரியம் சஞ்சிகைகளின் ஆசிரியருமான தெ.மதுசூதனன், தேசிய கல்வி நிறுவன விரிவுரையாளர் ஐ.கைலாசபதி, கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலய அதிபர் ஐயா மாணிக்கவாசகர், இலங்கை பரீட்சைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஜீவராணி புனிதா, யாழ்ப்பாணம் இந்து கல்லூரி அதிபர் இ.செந்தில்மாறன், யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்லூரியின் முன்னாள் பணிப்பாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் திட்ட முகாமையாளருமான ஜே. ஜூட் வோல்ற்றன் மற்றும் கிளிநொச்சி வடக்கு கல்வி வலய தொழில் வழிகாட்டல் அலுவலர் சு.வீரசுதாகரன் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். பார்வையாளர்களின் வினாக்களுக்கும் விடையளிக்கும் நிகழ்வாகவும் இக்கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது.  ‘வடக்கு மாகாண பாடசாலைகளின் வெற்றிகளும் பின்னடைவுகளும்’, ‘பாடசாலைகளும் சமூகமும் - எங்கு நாம் நிற்கின்றோம் - முன்னோக்கிப் போவதற்கான வழிகள்’, ‘எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறுகளை அளவிடுதல்’ மற்றும் ‘கல்வியும் வேலைவாய்ப்பும் - சந்தர்ப்பங்களும் சவால்களும்’ எனும் தலைப்புக்களில் இக்கலந்துரையாடல் கட்டமைக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் கருத்துச்செறிவுகளை மாநாடு நிறைவுபெற்ற பின்னர் கொள்கை ஆவணமாக வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  இரண்டு நாட்களும் மாலை அமர்வுகள் பலாலி வீதியில் அமைந்துள்ள உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்தில் நடைபெறும். இரண்டு நாள் மாலை அமர்வுகளிலும் தலா நாற்பத்து நான்கு ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு தலைப்புக்களிலும் சமர்ப்பிக்கப்படவுள்ளன. பல்கலைக்கழகங்களின் ஆய்வு மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை ஆசிரியக் கல்வியியலாளர்கள், கல்வி நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பன்முகப்படுத்தப்பட்ட ஆய்வாளர்களினால் பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகள் முன்வைக்கப்படவுள்ளன. https://www.virakesari.lk/article/181365
    • அரச பெருந்தோட்ட நிறுவனங்களின் கீழ் பணியாற்றும் ஊழியர்களின் செலுத்தப்படாத சட்டரீதியான பங்களிப்புகளை (EPF/ETF) செலுத்துவது தொடர்பான அமைச்சரவை பத்திரம் அடுத்த வாரம் அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. அரச பெருந்தோட்ட நிறுவன மறுசீரமைப்பு அமைச்சரும் நிதி இராஜாங்க அமைச்சருமான ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் மேலதிக கட்டணங்களுடன் 500 கோடி ரூபாவிற்கும் அதிகமான தொகை செலுத்தப்பட உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த வருடத்தின் முதல் கடமையாக அமைச்சின் செயலாளருக்கு தேவையான அறிவுறுத்தல்களை வழங்கியதாக சுட்டிக்காட்டிய இராஜாங்க அமைச்சர், உழைக்கும் மக்களின் சட்ட உரிமைகளை பாதுகாத்து பெருந்தோட்ட நிறுவன சீர்திருத்தங்களை ஆரம்பிக்க வேண்டும் என்றார். இது தொடர்பாக ஊழியர்கள் தரப்பினால் 2000க்கும் மேற்பட்ட வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், சட்டத்தரணி கட்டணமாக சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பெருமளவு பணத்தை செலவிடுவதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/299474
    • ஆகவே தாங்கள்  அவரது குடும்பம் கோத்திரம் எல்லாவற்றையும் நன்கு அறிந்திருக்கிறீர்கள். அந்த அடிப்படையில்தான் அவரது செயலைக் குறிப்பிடும்போது குலவழக்கம் என்று குறிப்பிட்டீர்கள்.  சூப்பரப்பூ சூப்பர்,.........👏 @கிருபன்@பெருமாள்@குமாரசாமி
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.