Jump to content

யாழ்ப்பாணத்து -திருமண மண்டபங்களும்- உணவுகளும்!!


Recommended Posts

யாழ்ப்பாணத்து -திருமண மண்டபங்களும்- உணவுகளும்!!

 
 
death-after-eating-meat.jpg

 

 

இந்­தக் கட்­டு­ரையை வாசிப்­ப­தற்கு முன்­ப­தாக நீங்­கள் ‘றற் ராட்­ரூய்லி’ என்­கிற கர்ட்­டூன் திரைப்­ப­டத் தைப் பார்த்­தி­ருக்­க­வேண்டும். அந்­தப் படத்­தைப் பார்த்­தி­ருந்­தால் இந்த விட­யத்­தைப் புரிந்து கொள்­வது மிக­வும் சுல­ப­மாக இருக்­கும். ‘பிரட் பேர்ட்’ இயக்கி, 2007 ஆம் ஆண்­டில் வெளி­யான இந்­தத் திரைப் ப­டத்­துக்­குச் சிறந்த அசை­வூட்­டத் திரைப்­ப­டத்­துக்­கான ஒஸ்­கார் விருது கிடைத்­தி­ருந்­தது.

குப்பை கூளங்­க­ளைக் கிள­றி­யும், களவு செய்­தும், மனி­தர்­கள் கழித்­து­விட்ட உண­வு­களை உண்­கின்ற எலி­க­ளுக்கு மத்­தி­யில் அதற்­கெல்­லாம் அப்­பாற்­பட்­டுச் சுவை­யான உணவை உண்­ண­வேண்­டும் என்று நினைக்­கி­றது இந்­தப் படத்­தின் முதன்­மைக் கதா­பாத்­தி­ர­மான ‘ரெமி’ என்ற எலி.

இறந்­து­விட்ட சமை­யல்­கா­ரர்(செவ்) வூஸ்­தோ­வி­னு­டைய ‘எவ­ரும் சமைக்­க­லாம்’ என்­கிற கூற்­றுக்கு அமை­வாக அந்த எலி சமைக்க முற்­ப­டு­கி­றது. சமை­யல் கலை­யில் பிர­சித்­தி­பெற்ற வூஸ்­தோ­வின் சமை­யல் திற­னில் குறை­கண்டு பிடித்து அவ­ரு­டைய உண­வ­கத்­தைத் தரம் தாழ்த்தி எழு­தி­யி­ருந்­தார் பத்­தி­ரிகை எழுத்­தா­ளர் ஒரு­வர்.

மன­மு­டைந்த வூஸ்தோ இறந்­து­விட்­டார். வூஸ்­தோ­வின் உண­வ­கத்­திலே சமை­ய­லா­ளி­யா­கப் பணி­பு­ரி­கின்ற ஒரு சிறு­வ­னுக்­குச் சமிக்­ஞை­கள் கொடுப்­ப­தன் ஊடக அந்த எலி­யின் சமை­யல் திறன்­கள் வெளிப்­ப­டு­கின்­றன. சிறு­வன் அணிந்­தி­ருக்­கின்ற நீண்ட தொப்­பிக்­குள் இருந்­த­படி சிறு­வ­னைக் கொண்டு தனது சமை­யல் வேலை­யைச் செய்­து­வ­ரு­கி­றது எலி. வூஸ்தோ இறந்­த­பின்­னர் பொலி­வி­ழந்து போயி­ருந்த அந்த உண­வ­கத்­தின் பெயர் பிர­ப­ல­மடையத் தொடங்­கு­கின்­றது.

வூஸ்­தோவை விஞ்­சிய அந்­தச் சமை­யல் நிபு­ணர் யார்? என்­பதை அறி­வ­தற்­கா­கக் கறார் விமர்­ச­க­ரான முன்­னைய பத்­தி­ரி­கை­யா­ளர் உண­வ­கத்­துக்கு வந்து, உண­வ­ருந்தி வியக்­கி­றார். சமை­யல் பகு­திக்­குச் சென்று பார்த்­த­போது எலி சமைப்­பது அவ­ருக்­குத் தெரி­ய­வ­ரு­கின்­றது. ஆனால், அவர் அதை வெளிப்­ப­டுத்­த­வில்லை. எலி­யின் சமை­யல் திற­னால் பின்­னா­ளில் அந்த உண­வ­கம் பிர­ப­ல­மா­கின்­றது.

சுவை­யான உண­வைச் சமைத்­தெ­டுப்­பது என்­பது ஒரு கலை உரு­ வாக்­கச் செயற்­பாடு என்­ப­தா­க­வும், அதைச் சுவைத்து உண்­ப­தி­லுள்ள அலா­தி­ய­னு­ப­வத்­தைக் கலையை நுக­ரும் போது இர­சி­கர்­கள் அல்­லது பார்­வை­யா­ளர்­க­ளுக்­குக் கிடைக் கின்ற நுகர்­வ­னு­ப­வ­ மா­க­வும் குறிப்­பிட்­டுச் செல்­கின்­றது, குழந்­தை­களை மையப்­ப­டுத்­தித் தயா­ரிக்­கப்­பட்ட குறித்த கார்ட்­டூன் படம்.

தூய்­மை­யான உணவை உண்­ண­வேண்­டும் என்­ப­தற்கு ஒரு­ப­டி­மேலே போய் சுவையே உணவு உண்­ப­தைத் தீர்­மா­னிக்­க­வேண்­டும் என்­ப­தைப் பற்­றி­யும் பேசு­கின்­றது படம். அண்­மைக்­கா­ல­மா­கப் பத்­தி­ரி­கைச் செய்­தி­கள் மூலம் அறி­யக் கிடைத்த யாழ்ப்­பா­ணத்­துத் திரு­மண மண்­ட­பங்­க­ளின் உண­வுத் தரத்­தில் கண்­ட­றி­யப்­பட்ட குறை­பா­டு­கள் பற்றி வாசித்­த­றிந்­த­போது, இந்­தப் படம் ஞாப­கத்­துக்கு வந்­து­போ­னது.

சமன் என்­கிற சிங்­கள நண்­பர் கழுத்­து­றை­யைச் சேர்ந்­த­வர். அவர் தனது உண­வக அனு­ப­வம் ஒன்­றைப் பகிர்ந்து கொள்­கி­றார்.

‘‘நான் ஜப்­பா­னில் உண­வ­கம் ஒன்­றில் வேலை பார்த்­து­விட்டு நாட்­டுக்­குத் திரும்­பி­ய­போ­து, கழுத்­து­றை­யில் ஓர் உண­வ­கத்தை நிறு­வும் எண்­ணத்­து­டன் வந்­தேன். ஆனால், உள்­ளூர்ச் சமை­யல் காரர்­க­ளின் சமை­யல் தரம் நான் நடத்­த­வி­ருக்­கின்ற உண­வ­கத்­துக்­குப் போது­மா­ன­தாக இருக்­க­வில்லை. முன்­ன­ணிச் சிங்­க­ளப் பத்­தி­ரிகை ஒன்­றில் சமை­யல்­கா­ரர் தேவை என விளம்­ப­ரப் படுத்­தி­னேன்.

ஆறு­பேர் வரையில் வந்­தார்­கள். அவர்­க­ளது சமை­யல் முன்­ன­னு­ப­வத்தை வைத்து இரு­பது ஆயி­ரம் ரூபா வரை­யில் சம்­ப­ளம் கேட்­டார்­கள். அப்­போது (1980ஆம் ஆண்டு காலப்­ப­குதி) அதி­கூ­டிய சம்­ப­ள­மாக ஒரு சமை­யல் கார­ருக்கு 15ஆயி­ரம் ரூபாவே வழங்­கப்­ப­டு­வ­தாக இருந்­தது.

இறு­தி­யாக ஓர் இளை­ஞன் வந்­தான். தான் படித்­தி­ருந்த சமை­யல் பயிற்சி நெறிச் சான்­றி­தழ்­க­ளைக் காட்­டி­னான். அவ­னது நடத்தை எனக்­குப் பிடித்­துக்­கொண்­டது. அவனை வேலைக்கு அமர்த்­த­லாம் என்று முடி­வெ­டுத்­தேன். ஒரு லட்­சம் ரூபா சம்­ப­ள­மும்இ ஒரு காரும் வேண்­டும் என்­றான். எனக்­குத் தலை சுற்­றி­யது. மயக்­கம் வரும்­போல இருந்­தது.

உங்­க­ளுக்­குச் சம்­ம­தம் என்­றால் தொடர்­பு­கொள்­ளுங்­கள் என்­று­கூறி தனது வில­ாசத்­தைத் தந்­து­விட்­டுப் போய்­விட்­டான். ஒரு வார­மா­க, இரவு பக­லா­க,அவ­னது சம்­ப­ளத்­தைப் பற்­றியே யோசித்­தேன். இறு­தி­யில் ஒரு முடி­வுக்கு வந்­தேன். என்­னி­டம் ஒரு புதிய மாரு­திக் கார் இருந்­தது. அதை­யும் கொடுத்து ஒரு மூன்று மாதங்­க­ளுக்கு அந்த நபரை வேலைக்கு அமர்த்­திப் பார்ப்­போம் என முடி­வெ­டுத்­தேன். அவ­ரி­டம் அப்­படி என்­ன­தான் இருக்­க­மு­டி­யும் என்­ற­றி­வதே எனது நோக்­கம்.

அவனை அழைத்து எனது முடிவை அறி­வித்­தேன். அவ­ரும் உடன்­பட்­டான். அதி­காலை 5.30மணிக்­குக் காரைக் கொண்டு உண­வ­கத் தரிப்­பி­டத்­தில் வந்து நிறுத்­தி­விட்­டுத் தனது சமை­யல் வேலையை ஆரம்­பிப்பான். இரவு பதி­னொரு மணிக்­குக் காரில் வீட்­டுக்­குச் செல்வான். அந்­தக் கார் வேறு தேவை­க­ளுக்­குப் பயன்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை.(நான்­கூட அந்­தக் காரை அப்­ப­டிப் பக்­கு­வ­மா­கப் பயன்­ப­டுத்­தி­யி­ருக்­க­வில்லை).

தனது வேலைக்கு நேரம், போக்­கு­வ­ரத்­து, மழை, வெயில் என எவை­யும் தடை­யாக இருக்­கக்­கூ­டாது என்­ப­தில் அவர் கவ­ன­மாக இருந்­தான். நான் ஐந்து வரு­டங்­கள் அந்த உண­வ­கத்தை நடத்­தி­னேன். மாதாந்­தம் பல லட்­சம் ரூபாய்­க­ளைச் சம்­பா­தித்­தேன். சகல வித­மான இறைச்­சி­கள், மரக்­க­றி­கள், அரி­சி,மா,சீனி போன்ற அவ­னால் தரப்­பட்ட பட்­டி­ய­லின்­படி சமான்­களை வாங்கி வைப்­பது மட்­டும் தான் எனது பொறுப்பு.

எந்­த­வொரு பொரு­ளும் குறை­யக்­கூ­டாது என்­பது அவ­னது எதிர்­பார்ப்பு. அவன் தயா­ரிக்­கின்ற தேநீ­ரைக் குடிப்­ப­தற்­கா­கப் 10கிலோ மீற்­றர்­கள் தூரத்­தி­லி­ருந்­கூ­டக் காரில் வாடிக்­கை­யா­கப் பலர் வந்­து­போ­வார்­கள்’ என்று அவர் தனது உண­வ­கத் தொழில் அனு­ப­வத்­தைக் கூறி முடித்­தார்.

கன­டா­வைச் சேர்ந்த ஒரு­வர் இப்­ப­டிக் கூறு­கி­றார்

கன­டா­வில் ‘செவ்’ ஆகப் பல வரு­டங்­க­ளா­கப் பணி­யாற்­றிக் கொண்­டி­ருக்­கும் யாழ்ப்­பா­ணத்­த­வர் ஒரு­வர் யாழ்ப்­பா­ணத்­துக்கு வந்­தி­ருந்த சம­யம் திரு­மண மண்­ட­பம் ஒன்­றுக்கு ஒரு நிகழ்வுக்­குப் போய்­வந்­தி­ருக்­கி­றார். பிறி­தொரு நாள் என்­னைச் சந்­தித்­த­போது அது­பற்றி உரை­யா­டி­யி­ருந்­தார்.

‘இங்­குள்­ள­வர்­கள் ஒரு நிகழ்­வுக்கு அழைப்­ப­வர்­க­ளுக்கு எத்­த­கைய தர­மான உணவை வழங்­க­வேண்­டும் என்று நினைப்­ப­தில்லை. மண்­ட­பத்­தி­னர் கோவில் அவி­யல் சாப்­பாட்­டைக் கொடுத்தே அதிக பணம் சம்­பா­திக்­கின்­ற­னர். நிகழ்வை ஒழுங்கு செய்­ப­வர்­க­ளின் முழுக்­க­வ­ன­மும் வீடியோ எடுப்­ப­தில் தான் தங்­கி­யி­ருக்­கி­றது. அழைத்­த­வர்­க­ளுக்கு சுவை­யான சுத்­த­மான உணவு வழங்­க­வேண்­டும் என்­பது பற்றி அவர்­கள் கரி­சனை கொள்­வ­தா­கத் தெரி­ய­வில்லை’ என்­றார்.

திரு­மண நிகழ்­வொன்­றின்­போது அத்­த­கை­தொரு மண்­ட­பத்­தில் சந்­தித்த நண்­பர் ஒரு­வர் தனது அனு­ப­வத்தை இவ்­வாறு கூறி­னார்.’ எனக்கு இண்­டைக்கு மூன்று திரு­மண வைப­வங்­க­ளுக்­குச் செல்­ல­வேண்­டி­யி­ருந்­தது. நான் முத­லில் எடுத்த முடி­வு, அன்று எந்த மண்­ட­பத்­தில் சாப்­பி­டு­வது என்­ப­து­தான்.

இரண்டு மண்­ட­பங்­க­ளின் சாப்­பாடு மோசம் என்று ஏற்­க­னவே எனக்­குத் தெரிந்­தி­ருந்­த­த­தால் அதி­லி­ருந்து தப்­பிக்­கொண்­டேன். பலர் இப்­ப­டி­யான சாப்­பாட்­டைத் தவிர்ப்­ப­தற்­காக வைப­வங்­க­ளுக்கு வந்து உரி­ய­வர்­க­ளுக்கு முகத்­தைக் காட்­டி­விட்­டுச் சாப்­பி­டா­மல் வெளி­யே­று­கின்­ற­னர். அதற்­குக் கார­ணம் அந்­தந்த மண்­ட­பங்­க­ளின் சாப்­பாட்­டுத் தரம்’ என்­றார்.

உண­வக முகா­மைத்­து­வம் அறி­யாத
யாழ்ப்­பா­ணத்து மண்­ட­பங்­கள்

யாழ்ப்­பா­ணத்­தில் திரு­மண மண்­ட­பங்­களை அமைத்­துள்ள பல­ருக்கு ‘ஹொட்­டேல் மனேஜ்­மன்ற்’ என்­கிற விட­ய­மோ, கொழும்­பு, இந்­தி­யா, சிங்­கப்­பூர் போன்ற நாடு­க­ளில் திறம்­பட இயங்கி வரு­கின்ற மண்­ட­பங்­க­ளின் செயற்­பாட்டை முன்­மா­தி­ரி­யா­கக் கொண்ட அனு­ப­வமோ இல்லை. மண்­ட­பத்­தில் பொருத்­தப்­பட்­டுள்ள குளி­ரூட்­டிச் சாத­னங்­கள் ஐம்­பது பேருக்­கு­மட்­டுமே போது­மா­ன­தாக இருக்­கின்­றன.

ஆனால். ஐந்­றூறு பேருக்கு மேல் விருந்­தி­னர்கள் உள்­ள­டக்­கப்­ப­டு­கி­றார்­கள். இத­னால், சுவா­சம் அத­னால் ஏற்­ப­டும் மணம் தொற்­று­நோய்ப் பர­வல் சடங்­கு­ க­ளின்­போது வெளி­யா­கும் புகை என்­ப­வற்­றால் தலை இடி எற்­ப­டு­கின்­றது. ஒவ்­வா­மை­கள் ஏற்­ப­டு­கின்­றன.

விருந்­தி­னர்­க­ளின் தொகை அதி­க­மாக இருக்­கின்­றது என்­றால், இருக்­கை­களை(கதி­ரை­களை) அதற்­கேற்ப அடுக்கி விடு­கி­றார்­களே தவி­ர, ஏனை­யவை பற்­றிச் சிந்­திப்­ப­ தில்லை. இதை­விட இந்த மண்­ட­பங்­க­ளில் ஆபத்து வேளை­க­ளில் வெளி­யே­று­வ­தற்­கான கத­வு­கள் போதி­ய­ள­வுக்கு இல்லை.

அவ­சர வேளை­யில் விருந்­தி­னர்­கள் வெளி­யேற முடி­யாது இறு­குப்­பட்­டுச் சாவ­டைய வேண்­டிய நிலை ஏற்­ப­டும். பல மண்­ட­பங்­க­ளில் மல­ச­ல­கூட வச­தி­கள், கழி­வ­கற்­றும் வச­தி­கள் என்­பவை போதா­மல் உள்­ளன. சில மண்­ட­பங்­க­ளில் உண­வ­ருந்­தும் இடங்­க­ளில் இலை­யான்­கள் மொய்க்­கின்ற நிலை­யும் காணப்­ப­டு­கின்­றது. சில மண்­ட­பங்­கள் குளி­ரூட்­டப்­ப­டா­மல் மின் விசி­றி­யைப் பாவிப்­பது என்ற வகை­யில் இயங்­கு­கின்­றன.

தேர்ச்சி பெற்ற சமை­யல்­கா­ரர் இருப்­ப­தில்லை

பெரும்­பா­லான மண்­ட­பங்­க­ளில் ‘ஹொட்­டல்’ முகா­மைத்­து­வம் படித்த ‘செவ்’ எனப்­ப­டு­கின்ற தொழில் ரீதி­யான தேர்ச்சி பெற்ற சமை­யற்காரர்­கள் இருப்­ப­தில்லை. அவர்­கள் பல இலட்­சம் ரூபாக்­கள் சம்­ப­ளம் கேட்­பார்­கள் என்­ப­தால், கோவில் சமை­யல்­கா­ரர்­கள் மற்­றும் உள்­ளூர்ச் சமை­யற்காரர்­களை வைத்து ஒரே வகை­யான உணவை மட்­டும் வழங்­கு­கின்­ற­னர்.

வித்­தி­யா­ச­மான உண­வு­க­ளைத் தயா­ரிப்­ப­தற்கு இந்­தச் சமை­யல்­கா­ரர்­க­ளால் முடி­வ­தில்லை. அதற்­கென்­று பிரத்­தி­யோ­க­மா­கப் படித்­த­வர்­க­ளால் மட்­டுமே உண­வுப் பட்­டி­ய­லின்­படி(மெனு) பல்­வேறு வகை­யான உண­வு­க­ளைத் தயா­ரிக்க முடி­யும். அத்­தோடு உண­வின் தரத்­தில் ஏதா­வது குள­று­ப­டி­கள், தரக்­கு­றை­வான நிலை இருந்­தால், சுகா­தா­ரப் பரி­சோ­த­க­ருக்கு (பி.எச்.ஐ) உட­ன­டி­யாக அறி­விக்­கும் ஒரு தொலை­பேசி இலக்­கத்­தை­யும் அவர்­க­ளது விலா­சத்­தை­ யம் எல்­லாத் திரு­மண மண்­ட­பங்­க­ளின் உணவு பரி­மா­றும் இடத்­தில் காட்­சிப்­ப­டுத்­து­வது அவ­சி­யம். இத­னு­டாக உணவு ஒவ்­வாமை மற்­றும் சுத்­த­மின்மை தொடர்­பான விட­யங்­களை பொது­மக்­கள் உரி­ய­வர்­க­ளுக்கு அறி­விக்க முடி­யும்.

உரி­மம் அளித்­த­வர்­க­ளின்
பொறுப்­பற்ற தன்மை

குளி­ரூட்­டப்­பட்ட ஒரு மண்­ட­பத்­தி­லோ அறை­யிலோ அதி­கம் காற்­றோட்­டம் இருப்­ப­தில்லை. அதற்­கேற்ப ஜன்­னல்­கள் போடப்­பட்­டி­ருப்­ப­தில்லை. சில மண்­ட­பங்­க­ளில் ஒரு பக்­கம் அல்­லது இரண்டு பக்­கங்­கள் மூடப்­பட்ட சுவர்­க­ளாக உள்­ளன. அவற்­றில் ஜன்­னல்­கள் இல்லை. அரு­கில் வேறு கட்­ட­டங்­கள் இருப்­ப­தால் அதில் ஜன்­னல்­கள் வைப்­ப­தற்கு அனு­ம­திக்க மாட்­டார்­கள்.

இந்த நிலை­யில்­தான் பிர­தேச சபை­க­ளும் மாந­கர சபை­க­ளும் அவ்­வி­டங்­க­ளில் திரு­மண மண்­ட­பங்­க­ளைக் கட்­டு­வ­தற்கு அனு­ம­தித்­தி­ருக்­கின்­றன. பல மண்­ட­பங்­க­ளில் வாக­னத் தரிப்­பி­டம் இல்லை. பலாலி வீதி, காங்­கே­சன்­து­றை­வீ­தி, யாழ். நக­ர­மத்­தி­யில் அமைக்­கப்­பட்­டுள்ள மண்­ட­பங்­க­ளின் நிகழ்­வு­க­ளுக்கு வரு­கின்ற பல­ரது வாக­னங்­கள் முதன்மை வீதி­யின் இரு­ம­ருங்­கும் நிறுத்தி வைக்­கப்­ப­டு­கின்­றன.

குறித்த மண்­ட­பங்­க­ளில் வாக­னத் தரிப்­பிட வச­தி­கள் இல்லை. அல்­லது போது­மா­ன­தாக இல்லை. இது விட­யத்­தில் மண்­ட­பங்­க­ளைக் கட்­டு­வ­தற்கு அனு­மதி வழங்­கிய உத்­தி­யோ­கத்­தர்­க­ளின் திறமை இன்­மை­யும் ஊழ­லுமே வெளித்­தெ­ரி­கி­றது.

வச­தி­கள் பர­வ­லாக்­கப்­பட வேண்­டும்

துணி துவைப்­ப­தற்­கு, சுத்­தி­க­ரிப்­ப­தற்­கு,பழுது பார்ப்­ப­தற்­கு, கொள்­வ­னவு செய்­வ­தற்­கு, உண­வு­களை வெளி­யில் வழங்­கு­வ­தற்­கு, சமைப்­ப­தற்­கு, பரி­மா­று­வ­தற்­கு, வர­வேற்­ப­தற்கு பாவ­னை­யா­ளர்­க­ளைத் திருப்­திப்­ப­டுத்­தும் வகை­யில் அவர்­க­ளது பிரச்­சி­னையை என்ன என்று கேட்டு உத­வு­வ­தற்­கு, பாது­காப்பு வழங்­கு­வ­தற்கு எனத் தனித்­த­னி­யான ஊழி­யர்­கள் நிய­மிக்­கப்­பட்டு அதற்­கான மாதாந்­தச் சம்­ப­ளம் வழங்­கும் நிலை­யில் யாழ்ப்­பா­ணத்­தில் எந்­தத் திரு­மண மண்­ட­பங்­க­ளும் இல்லை.

இது­வி­ட­யத்­தில் மருத்­து­வர்­க­ளும் சுகா­தா­ரத்­துறை அதி­கா­ரி­க­ளும் பரி­சீ­லித்து அந்த மண்­ட­பம் இத்­த­னை­ பே­ரைத்­தான் உள்­ள­டக்­கக்­கூ­டி­யது என்­பதை உறு­திப்­ப­டுத்­து­கின்ற விளம்­ப­ரப் பலகை ஒன்றை மண்­ட­பத்­தின் முன்­ப­கு­தி­யில் காட்­சிப்­ப­டுத்­து­வது அவ­சி­யம். அந்­தத் தொகைக்கு மேல­தி­க­மாக மக்­களை உள்ளே அமர்த்தினால் அதற்­கான சட்ட நட­வ­டிக்கை எடுப்­பது அவ­சி­யம்.

கொழும்­பில் பிர­ப­ல­மான உண­வ­கங்­கள் தமது வியா­ப­கத்தை யாழ்ப்­பா­ணத்­தில் ஏற்­ப­டுத்­தும்­போது தற்­போ­துள்ள திரு­மண மண்­ட­பங்­கள் பல அவற்­று­டன் போட்­டி­போட முடி­யாத நிலை அல்­லது மிகக் குறைந்த பதி­வு­க­ளைச் செய்­ய­வேண்­டிய நிலை ஏற்­ப­டும்.

மண்­ட­பங்­க­ளின் இந்த நிலை நீடித்­தால்
மக்­க­ளின் நாட்­டம் வெகு­வா­கக் குறை­யும்

யாழ்ப்­பா­ணத்து மண்­ட­பங்­க­ளின் இத்­த­கைய நிலை நீடித்­தால், சந்­நி­திக் கோவில்­போல ஒரே நேரத்­தில் பல தம்­ப­தி­யர் திரு­ம­ணம் செய்­கின்ற மிக எளி­மை­யான திரு­மண முறை­யும், திறந்த வெளி­க­ளில், வீடு­க­ளில் கொண்­டாடி மகிழ்­கின்ற நிலை­யும் ஏற்­ப­டும். இத­னால் தற் போதுள்ள பல திரு­மண மண்­ட­பங்­கள் பொலி­வி­ழக்க வாய்ப்­புண்டு.

மண்­ட­பங்­க­ளைப் பதிவு செய்­வ­தில் சிர­மம் இருப்­ப­தா­கச் செயற்­கை­யான ஒரு தட்­டுப்­பாட்டை இந்த மண்­டப உரி­மை­யா­ளர்­களே ஏற்­ப­டுத்தி வைத்­தி­ருக்­கின்­ற­னர். இந்­தத் தட்­டுப்­பாட்­டைக் கார­ணம் காட்­டியே தரம் குறைந்த மண்­ட­பங்­க­ளை­யும் மக்­கள் நாட­வேண்­டி­யுள்­ளது.

வெளி­யான இடங்­க­ளி­லும் மர நிழல்­க­ளி­லும் பச்­சைப் புல் தரை­க­ளி­லும் இயற்­கை­யாக இந்த வைப­வங்­களை நடாத்­து­கின்ற நிலை ஏற்­ப­டும்­போ­து, இயற்­கை­யான நிழ­லை­யும், பசு­மை­யை­யுமே மக்­கள் விரும்­பு­வர். ஒரு பெரு விருட்­சத்­தின் கீழ் அம­ரும்­போது கிடைக்­கின்ற சுவாத்­தி­யம் அடைக்­கப்­பட்­டுக் குளி­ரூட்­டப்­பட்ட கட்­ட­டத்­துக்­குள் கிடைக்­காது.

ஆக, யாழ்ப்­பா­ணத்து மண்­ட­பங்­கள் களுத்­து­றைச் சம­னைப்­போல ஒரு பயிற்­று­விக்­கப்­பட்ட சமை­யல்­கா­ர­ர­ரை­யோ, பரா­ம­ரிப்­புக்கு எனத் தனி­யான நபர்­க­ளையோ வேலைக்கு அமர்த்­தித் தமது சேவை­க­ளைத் திருத்­திக் கொள்­ளாத பட்­சத்­தில், எதிர்­கா­லத்­தில் இந்த மண்­டப விழாக் கலா­சா­ரம் மக்­க­ளின் மனங்­க­ளில் இருந்து புற­மொ­துங்­கி­வி­டும் என்­ப­தில் ஐய­மில்லை.

https://newuthayan.com/story/09/யாழ்ப்பாணத்து-திருமண-மண்டபங்களும்-உணவுகளும்.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நேரங்கெட்ட நேரத்தில சனியன் தலைக்கேறுவதுபோல ஈரானிய சனாதிபதி இலங்கைக்கு போகப்போகிறார். அங்கே நம்ம நானாக்கள் "இஸ்ரேலுக்கே ஏவுகணை ஏவிய எங்கள் ஈரானிய சனாதிபதிக்கு ஜெயவேவா "" சொல்லுவதற்கு ஆயத்தமாக இருப்பதாகக் கேள்வி.  😁
    • வ‌ண‌க்க‌ம் மோக‌ன் அண்ணா என‌து பெய‌ரை (வீர‌ப்ப‌ன் பைய‌ன்26 ) மாற்றி விடுங்கோ    ந‌ன்றி🙏🥰.......................................
    • த‌மிழ் சிறி அண்ணா அந்த‌ 800ரூபாய் வீடியோ ப‌ழைய‌ வீடியோ அண்ணா அந்த‌ வீடியோ போன‌ வ‌ருட‌மே ரிக்ரோக்கில் பார்த்து விட்டேன்....................இதை ப‌ற்றி அல‌ட்ட‌ என்ன‌ இருக்கு 800ரூபாய் வீடியோ அடிச்சு சொல்லுறேன் அது போன‌ வ‌ருட‌த்தான் வீடியோ ம‌ற்ற‌ வீடியோ ப‌ற்றி நான் வாயே திற‌க்க‌ல‌...................எப்ப‌ பார்த்தாலும் எல்லாத்துக்கையும் என்னை கோத்து விடுவ‌தில் கோஷானுக்கு ஏதோ இன்ப‌ம் இருக்கிற‌ மாதிரி தெரியுது அவ‌ரின் இன்ப‌த்துக்கு அவ‌ர் என்னை எப்ப‌டியும் க‌ழுவி ஊத்த‌ட்டும் ஹா ஹா😂😁🤣.......................... 
    • படக்குறிப்பு,இந்திய தேர்தலில் வாக்களித்த முதல் இலங்கைத் தமிழர் நளினி கிருபாகரன். கட்டுரை தகவல் எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன் பதவி, பிபிசி தமிழ் 18 ஏப்ரல் 2024 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் திருச்சி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வரும் பெண் ஒருவர், இந்திய அரசின் சட்டத்தை உயர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டி பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை ஆகிய ஆவணங்களைப் பெற்றிருந்தார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை (ஏப். 19) நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அப்பெண் முதல் இலங்கைத் தமிழராக வாக்கு செலுத்தியுள்ளார். இலங்கைத் தமிழர் பெண் இந்திய குடியுரிமை பெற்றது எப்படி? இலங்கைத் தமிழர்கள் இந்திய குடியுரிமை பெற முடியுமா? திருச்சி மாவட்டம் கொட்டப்பட்டு இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வருபவர் நளினி, இவருக்கு 38 வயது ஆகிறது. இவரது பெற்றோர்களான கண்ணன், சாந்தி இலங்கையைச் சேர்ந்த தமிழர்கள். அங்கு ஏற்பட்ட போர் பதற்றத்தால் கடல் வழியாக ராமேஸ்வரத்திற்கு 1983ஆம் ஆண்டு வந்தடைந்தனர். ராமேஸ்வரம் அருகே இருக்கும் மண்டபம் இலங்கை மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டனர். அங்கு 1986ஆம் ஆண்டு நளினி பிறந்தார். அதைத் தொடர்ந்து அங்கிருந்து திருச்சியில் உள்ள இலங்கை மறுவாழ்வு முகாமிற்கு மாற்றப்பட்டு அங்கு கிருபாகரன் என்பவரை நளினி திருமணம் முடித்து இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார். இவர் பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்திருந்தார். அவர் இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பதால் அவருக்கு பாஸ்போர்ட் வழங்க அதிகாரிகளால் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் பாஸ்போர்ட் கேட்டு வழக்கு தனக்கு பாஸ்போர்ட் வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் தேதி வழக்கு தொடுத்தார். அதில், இந்திய குடியுரிமைச் சட்டம் 1955 பிரிவு 3iன் படி, 26.1.1956 முதல் 1.7.1986 வரை இந்தியாவில் பிறந்த குழந்தைகள் அனைவரும் இந்தியர்கள்தான் என்ற அடிப்படையில் தனக்கு பாஸ்போர்ட் வழங்க வேண்டும் எனக் கேட்டிருந்தார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட்12இல் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பு வழங்கினார். அதில், "மனுதாரர் நளினி இலங்கையைச் சேர்ந்த பெற்றோருக்குப் பிறந்திருந்தாலும் அவர் இந்திய குடிமகள்தான்” எனத் தீர்ப்பளித்து, அவருக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். இதையடுத்து, நளினிக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்திய குடியுரிமை பெற்று வாக்களிக்க எண்ணிய நளினி வாக்காளர் அடையாள அட்டைக்கு கடந்த ஆண்டு விண்ணப்பித்து அதையும் பெற்றார். நாளை நடைபெறும் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கும் முதல் இலங்கை தமிழர் என்ற பெயரை பெற்றிருக்கிறார்.   40 ஆண்டு போராடத்திற்குக் கிடைத்த வெற்றி பட மூலாதாரம்,HIGHCOURT MADURAI BENCH படக்குறிப்பு,நளினிக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய நளினி கூறுகையில், “கடந்த 40 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் முகாமில் எனது தாய், தந்தை வசித்து வருகின்றனர். இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் எனப் போராடி வருகின்றனர். எங்களுக்கு அரசிடமிருந்து சலுகைகள் கிடைத்தாலும் நாங்கள் நாடற்ற அகதிகளாகவே இன்னும் பார்க்கப்பட்டு வருகிறோம். எனவே, எங்களுக்கான அடையாளம் குடியுரிமை மட்டுமே. அதைப் பெற வேண்டும் என்பதற்காகப் போராடி வருகின்றோம். கடந்த 1986ஆம் ஆண்டு பிறந்தவர் என்ற அடிப்படையில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து அது மறுக்கப்பட்டது. இந்திய குடியுரிமை சட்டத்தை மேற்கோள் காட்டி நீதிமன்றத்தை அணுகியபோது பாஸ்போர்ட் கிடைத்தது. அதைத் தொடர்ந்து, தற்போது முதல் இலங்கைத் தமிழராக வாக்களிப்பதற்கான உரிமையும் பெற்றுள்ளேன்,” என்றார். ‘இலங்கைத் தமிழர்களின் குரலாக முதல் வாக்கு’ நாளை நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க இருப்பது மிகவும் மகிழ்ச்சியான நிகழ்வாக இருக்கப் போகிறது எனக் கூறும் அவர், "நாடற்ற பெண்ணாக இருந்தேன். ஆனால் தற்போது இந்திய குடியுரிமை பெற்று இனி ஜனநாயகக் கடமையைச் செய்யப் போகிறேன்," எனத் தெரிவித்தார். தமிழ்நாட்டில் இலங்கை மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் ஒட்டுமொத்த மக்களின் குரலாகத் தனது ஒற்றை வாக்கை நாடாளுமன்றத் தேர்தலில் செலுத்த உள்ளதாகவும் நளினி தெரிவித்தார். அதோடு, இந்திய அரசு தமிழ்நாட்டில் உள்ள பிற இலங்கைத் தமிழர்களுக்கும் வாக்களிக்கும் உரிமையை வழங்க வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.   ‘150 இலங்கைத் தமிழர்கள் வாக்களிக்க வாய்ப்பு’ படக்குறிப்பு,தேர்தல்களில் வாக்களிக்கும் இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என வழக்கறிஞர் ரோமியோ ராய் தெரிவித்தார். இந்திய குடியுரிமைச் சட்டத்தை மேற்கோள் காட்டி நளினிக்கு பாஸ்போர்ட் கொடுக்கப்பட்டு இந்திய குடியுரிமை பெற்ற நபராக மாறினார். அதைத் தொடர்ந்து வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்து அதையும் பெற்றுள்ளார். இதை அடிப்படையாகக் கொண்டு இலங்கைத் தமிழர் முகாமில் வசிக்கும் மூன்று பேர் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து உள்ளதாகவும் நளினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரோமியோ ராய் குறிப்பிட்டார். அதேவேளையில், "தமிழ்நாடு அரசு சார்பில் 1986ஆம் ஆண்டு மற்றும் அதற்கு முன்பாகப் பிறந்தவர்களின் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 150 பேர் இருப்பது தெரிய வந்தது. இவர்களும் இந்திய அரசின் குடியுரிமையைப் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். இவர்கள் குடியுரிமை பெறும் பட்சத்தில் எதிர்வரும் தேர்தல்களில் இவர்களும் வாக்கு செலுத்த வாய்ப்பு கிடைக்கும்," என்றார் வழக்கறிஞர் ரோமியோ ராய். தமிழ்நாட்டில் 110 இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்கள் உள்ளன. அதில் தோராயமாக 1.10 லட்சம் மக்கள் வசிப்பதாகவும் காவல் நிலையத்தில் அனுமதி பெற்று 80,000க்கும் மேற்பட்டோர் வெளியில் வசித்து வருவதாகவும் கூறுகிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழர்கள் உரிமைகள் நலனுக்காக இயங்கி வரும் வழக்கறிஞர் புகழேந்தியிடம் பிபிசி தமிழ் பேசியபோது, "அவர்கள் குடியுரிமை வேண்டுமென நீண்டகாலமாகப் போராடி வருவதாகவும்" குறிப்பிட்டார்.   படக்குறிப்பு,"தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர்," என்கிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய இலங்கைத் தமிழர்களுக்கு ஆதார், குடும்ப அட்டை போன்ற அடையாள ஆவணங்கள் வழங்கப்படுவதாகவும் குடும்பத் தலைவருக்கு ஆயிரம் ரூபாய், மற்ற உறுப்பினர்களுக்கு 750 ரூபாய் என உதவித் தொகையும் கொடுக்கப்படுவதாகவும் கூறுகிறார் புகழேந்தி. அவர்களது நிலை குறித்துப் பேசிய அவர், "இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குழந்தைகளால் படித்து முன்னேறி அரசு வேலைக்குச் செல்ல முடியவில்லை. வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்ல முடியாது. இதனால் படித்த இளைஞர்கள் கூலித் தொழிலாளர்களாக கட்டட வேலைகளுக்கு மட்டுமே செல்லும் சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர் அதிலும் பல சிக்கல்களை அவர்கள் சந்தித்து வருகின்றனர்," என்கிறார். மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தில் 2014ஆம் ஆண்டுக்கு முன் ஆப்கனில் இருந்து வந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தச் சட்டத்தின்கீழ், "இலங்கைத் தமிழர்களையும் சேர்த்துவிட்டால் இவர்களுக்கும் குடியுரிமை கிடைக்கும். அதைச் செய்ய மத்திய அரசு தயங்குவது ஏனென்று புரியவில்லை," என்றும் கூறுகிறார் புகழேந்தி. இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள் லண்டன், ஆஸ்திரேலியா, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்குச் சென்று மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக வசித்தால் அவர்களுக்கு கிரீன் கார்டு வழங்கப்படுகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வசித்தால் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படுகிறது. ஆனால், "இங்கே 30 ஆண்டுகள் தாண்டி வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை என்பது மறுக்கப்படுக்கிறது. தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர். இதில் மாற்றம் நிகழ வேண்டும் அதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்," எனவும் வலியுறுத்தினார் வழக்கறிஞர் புகழேந்தி. https://www.bbc.com/tamil/articles/cd1w2q1qx2yo
    • "சிந்து வெளி பல் மருத்துவமும் வீட்டு மருத்துவமும்"     50 வருடங்களுக்கு முன்பு வரை, பண்டைய இந்தியா நாகரிகம் சிந்து சம வெளியாக இருந்தது. எமது பண்டையதைப் பற்றிய அறிவு ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிக்குள் அடங்கி விட்டது. அவையை தனித்துப் பார்க்கும் போது அவையின் முன்னேற்றம் விந்தையாக எமக்கு காட்சி அளித்தது. ஆனால் அன்றில் இருந்து எமது அறிவாற்றலிலும் தொலை நோக்கிலும் பெரும் முன்னேற்றமடைந்தது. 1974 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப் பட்ட புதிய கற்காலக் குடியேற்ற பகுதியான, இன்றைய பாகிஸ்தானில் உள்ள சிந்து சமவெளி நகரமான, மெஹெர்கர் [Mehrgarh] இதற்கு வழி வகுத்தது. இது அதி நவீன நாகரிக சிந்து வெளிக்கு முன்பும் அது வரையும் உள்ள முக்கிய தொடர்புகளை கொடுத்தது.   தொல்லியல் ஆய்வு ரீதியாய் பல முக்கியங்களை கொண்டிருந்த இந்த பகுதி, 2001 ஆம் ஆண்டு பல் துளைத்தலுக்கும் பல் அறுவை சிகிச்சைக்குமான முதலாவது சான்றை கொடுத்தது. ஆண்ட்ரியா கசினா [Professor Andrea Cucina ,University of Missouri-Columbia] தலைமையில் தொல்லியல் ஆய்வாளர்கள் அங்கு அகழ்வாராய்ச்சி செய்த போது, இரண்டு சிந்து சமவெளி நாகரிக மனிதனின் சிதை வெச்சங்கள் கிடைத்தன. இந்த மனித மண்டை ஓடுகளை ஆய்வுகளுக்கு உட் படுத்தி, ஒரு மண்டை ஓட்டின் பல்லை துப்பரவு செய்யும் போது ஒரு அதிர்ச்சி யூட்டத்தக்க அல்லது திகைக்கச் செய்கிற ஒரு உண்மை தெரிய வந்தது. அது கி மு 7000 ஆண்டில் இருந்தே இவர்களுக்கு பல் மருத்துவம் தெரிந்து இருந்தது என்பது ஆகும். அதாவது கி மு 7000 ஆண்டில் வசித்த மக்கள் பல் வலிக்கு தீர்வாக சொத்தை விழுந்த [cavity] பற்களை கூர்மையான ஒரு வித கற்களைக் கொண்டு, வில்லினால் சுற்றி [bow drills] துளை யிட்டு அறுவைச் சிகிச்சை செய்து அகற்றியது தெரிய வந்தது.   முதலில் பல்லில் சிறிய துவாரத்தை கண்டு பிடித்த ஆய்வாளர் ஆண்ட்ரியா கசினா, அந்த துவாரங்கள் ஈமச் சடங்கு போல தெரியவில்லை என்றும் மேலும் இந்த பல் இன்னும் அந்த மனிதனின் தாடையில் இருப்பதால் அவை கழுத்து மாலை செய்ய துளைக்கப் படவில்லை என்றும் தெரியப் படுத்தினார். அவரும் அவரின் மற்ற சக தொல்லியல் ஆய்வாளர்களும் அது பல் சிதைவுக்கான சிகிச்சையாக இருக்கக் கூடும் என்றும் மேலும் அங்கு தாவரம் அல்லது வேறு ஒரு பொருள் பாக்டீரியா வள ர்ச்சியைத் தடுக்கும் பொருட்டு அந்த துவாரத்திற்குள் திணிக்கப் பட்டது எனவும் சந்தேகிக்கிறார்கள். இந்த மெஹெர்கர் அகழ் வாராய்ச்சியின் போது ஒன்பது தனிப்பட்டவர்களில் மொத்தம் பதினொன்று துளை யிடப்பட்ட பற்களை அடையாளம் கண்டா ர்கள். இதில் ஒரு தனிப்பட்டவர் மூன்று துளை யிடப்பட்ட பற்களையும் மற்றும் ஒருவர் இரு தரம் துளை யிடப்பட்ட பல்லையும் கொண்டு இருந்தார். இந்த எல்லா தனிப் பட்டவர்களும் முதிர்ந்த வர்களாக, நாலு பெண், இரண்டு ஆண், மற்றும் மூன்று பால் அடையாளம் சரியாக அடையாளம் காணப்படாத தனிப்பட்ட வர்களாக இருந்தனர். இவர்களின் வயது பெரும்பாலும் இருபதில் இருந்து நாற்பதிற்கு மேலாக உள்ளது. மிக நுணுக்கமாக அவையை உற்று நோக்கும் போது, குறைந்தது ஒரு சிகிச்சையில் பல்லு துளைக்கப்பட்டதும் இன்றி அங்கு உண்டாகிய பொந்து அல்லது உட்குழி நேர்த்தியாய் திரும்ப வடிவமைக்கப் பட்டுள்ளது காணக் கூடியதாக உள்ளது.   சிறிய மேற்பரப்பை கொண்ட இந்த பல்லில் துளையிடுவதற்கு மெஹெர்கர் பல் வைத்தியர் அதிகமாக நெருப்பை உண்டாக்க ஆதி காலத்தில் பாவிக்கப்பட்ட பொறி போன்ற ஒன்றை பாவித்து இருக்கலாம். கயிறு இணைக்கப்பட்ட வில் போன்ற கருவி ஒன்றில் தனது முனையில் கூர்மையான ஒரு வித கற்களை கொண்ட மெல்லிய மரத் துண்டு, அந்த கயிற்றுனால் சுற்றப்பட்டு அழுத்தி சுற்றப்ப டுகிறது. அப்பொழுது அந்த கூர்மையான கல் பல்லில் துளையிடுகிறது. மணி ஆபரணங்கள் செய்வதற்கு பண்டைய கைவினைஞர்கள் மணிகளில் துளையிடும் தொழில் நுட்பத்தில் இருந்து இந்த மெஹெர்கர் பல் வைத்தியர்கள் இந்த அறிவை பெற்றிருக்கலாம் என அறிஞர்கள் நம்புகிறார்கள். பற்கள் அடைப்பதற்கான சான்றுகள் ஒன்றும் இதுவரை கிடைக்கப் படவில்லை. என்றாலும், சில பற்கள் ஆழமாக துளைக்கப் பட்டு இருப்பதால், ஏதாவது ஒன்று அதை அடைக்க அதற்குள் செருகி இருக்கலாம் என ஆய்வாளர்கள் நம்புகிறார்கள். ஆனால் எதனால் அடைத்தார்கள் என தெரியவில்லை. இந்த துளைகள் அரை மில்லி மீட்டரில் இருந்து 3.5 மில்லிமீட்டர் வரை இருக்கிறது. இது பல்லின் மிளரியை [எனமல்/ enamel] ஊடுருவி பல்திசுக்களுக்குள் [dentin] செல்ல போதுமானது. எனினும் பல் அடைப்புக்கான சான்றுகளை ஆய்வாளர்கள் இன்னும் காண வில்லை. எப்படியாயினும் தார் போன்ற பொருள் அல்லது இலகுவான தாவர பொருள் ஒன்று பல் குழிக்குள் அடைத்து இருக்கலாம் என நம்புகி றார்கள்.  துளைக்கப் பட்ட பற்களை கொண்ட இந்த தனிப்பட்டவர்கள் எவரும் சிறப்பு கல்லறையில் இருந்து எடுக்கப்படவில்லை. இது அங்கு வாழ்ந்த எல்லோருக்கும் இந்த வாய் சம்பந்தமான சுகாதார சிகிச்சை அல்லது பராமரிப்பு இருந்ததை சுட்டிக்கா ட்டுகிறது.   இந்த பல் சுகாதார பராமரிப்பு மெஹெர்கரில் கிட்டதட்ட 1,500 ஆண்டுகள் தொடர்ந்து இருந்தாலும், இந்த நீண்ட பாரம்பரியம் அதன் பின் அடுத்த நாகரிகத்திற்கு பரவ வில்லை. இவர்களைத் தொடர்ந்து அங்கு இருந்த செம்புக்கால மக்கள் பல் வைத்தியரிடம் எப்பவாவது சென்ற தற்கான அறி குறிகள் அங்கு இல்லை. ஏன் இந்த பராமரிப்பு தொடராமல் நின்றுவிட்டது என தெரிய வில்லை. ஒருவேளை, இது ஏற் படுத்திய வலி இந்த நீண்ட பாரம்பரியத்தின் செல்வாக்கை இல்லாமல் செய்து இருக்கலாம்?   இங்கே  தரப்பட்ட துளையிட்ட  பல்லின் படம் Nature என்ற ஆய்வு இதழில் வெளியிடப் பட்டு உள்ளது. பாக்கிஸ்தானில் உள்ள புதிய கற்கால இடு காட்டில் இருந்து எடுக்கப்பட்ட  துளைக்கப் பட்ட கடைவாய்ப்பல். இங்கு  2.6 மில்லிமீட்டர் அகலமுள்ள துவாரம் ஒன்று துளைக்கப் பட்டு உள்ளது. இந்த துவாரம் வழவழப்பாக உள்ளது. இது அந்த தனிப்பட்ட மனிதன் இறக்கும் முன் துளைக்கப் பட்டதை காட்டுகிறது. பல்லை நன்றாக பரிசோதனை செய்ததில் இந்த துளையிடும் கருவி பழுதடைந்த பல் திசுவை அகற்றுவதில் மிகவும் திறமை வாய்ந்தது என இதை ஆய்வு செய்த குழு கூறுகிறது. ஆகவே நாம் முன்பு நினைத்ததை விட பல் வைத்தியம் மேலும் 4000 ஆண்டு பழமை வாய்ந்தது. அதுமட்டும் அல்ல மயக்க மருந்து கண்டு பிடிப்பதற்கு எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் இது பழமையானது. . இந்த பூமி கிரகத்தில் மனிதன் தோன்றிய காலம் தொட்டு நோய் அவனுக்கு ஒரு கொடிய விஷமாக இருக்கிறது. மனிதன் பல வித வியாதிகளுடன் வரலாற்றிற்கு முந்திய காலத்தில் இருந்து போராட வேண்டி இருந்தது. இறுதியாக, அவன் உள்நாட்டு மருத்துவம் ஒன்றை உருவாக்கினான். என்றாலும் மேலே கூறிய பல் அறுவைச் சிகிச்சையை விட, இந்த சிந்து வெளி மக்கள் எந்த வித மருந்துகளை அல்லது வீட்டு மருத்துவத்தை கையாண்டார்கள் என அறிய முடியவில்லை. ஆனால், சிந்து வெளி நூலோ அல்லது ஆவணமோ வாசிக்கக் கூடியதாக இதுவரை கண்டுபிடிக்கப் படாததால், இவர்களுடன் வர்த்தக உறவு வைத்திருந்த மற்ற கி மு 3000 ஆண்டு நாகரிக மக்கள் போல ஒரு நாட்டு வைத்தியம் அங்கு நிலவி இருக்கலாம் என எம்மால் ஓரளவு ஊகிக்க முடியும். ஆகவே இது சமயம், சூனியம், அனுபவ ரீதியான சடங்குகள், முறைகள் போன்ற வையாக இருக்கலாம். அவர்கள் தாயத்து போன்றவைகளை தீங்கில் இருந்து தம்மை காப்பாற்ற, ஆகவே நோயில் இருந்து காப்பாற்ற, அணிந்து இருந்தார்கள். மற்ற மக்களை மாதிரி, அவர்களுக்கு மருந்துகளும் வீட்டு வைத்தியமும் நோய்ப் பட்டவர்களை சிகிச்சையளிக்கவும் தெரிந்து இருக்க வேண்டும். இதற்கான சான்றுகளை அனேகமாக ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிகளில் உள்ள தொல் பொருள் எச்சங்களில் தேடவேண்டும்.   ஹரப்பான் மக்கள் தாவரங்கள், விலங்குகளில் இருந்து எடுத்த பொருள்கள், கனிப்பொருள்கள் போன்றவைகளை பாவித்து இருக்கலாம். மலைகளில் இயற்கையாக உண்டாகும் கருப்பு நிலக்கீலம் [Silajit, Black Asphaltum] என்ற கருத்த கனிப் பொருள் அகழ்வின் போது அங்கு கண்டு பிடிக்கப் பட்டது. Shilajit ஆசியாவில் ஒரு சில தேர்ந்தெடுக்கப் பட்ட மலைத்தொடர்களில் இருந்து பெறப்படுகிறது, குறிப்பாக திபெத்திய இமய மலை, ரஷியன் காகசஸ், மங்கோலியன் அல்தை, மற்றும் பாகிஸ்தான் கில்ஜித் மலைகள் [Tibet mountains, Caucasus mountains Altai Mountains, mountains of Gilgit Baltistan] ஆகும். ஆகவே இது சிந்து சம வெளியில் பாவிக்கப்பட்டு இருக்கவேண்டும் என்பதை எமக்கு எடுத்து காட்டு கிறது. இந்த கருப்பு நிலக்கீலம் பல நன்மைகளை கொண்டது. இந்திய துணைக் கண்டத்தில் உள்ள மிகவும் பிரபலமான மருத்துவ கலவை இதுவாகும். மேலும் ஆசியா முழுவதும் பரவலாக ஆயுர் வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் அதிகரித்த ஆற்றல், அதிகரித்த நோய் எதிர்ப்பு சக்தி அதனால் நல்ல தரமான வாழ்க்கை, ஒவ்வாமை தணிப்பு , நீரிழிவு குணப்படுத்தல் [increased energy, improved quality of life allergy relief, diabetes relief,] போன்றவற்றிற்கு இது பயன் படுத்தப்படுகிறது.   அதே போல அங்கு இரைப்பை யழற்சிக்கு [gastritis / இரைப்பையின் உட்புறச் சுவர் பல்வேறு காரணங்களினால் அழற்சி அடைதல். வயிறு எரிச்சலடைதல், வயிற்று வலி ஆகியவை பொது வாகக் காணப்படும் அறி குறிகளாகும்] மருந்தாக பாவிக்கப்படும் கடனுரை [cuttlebone / ஒருவகைக் கடல் மீனின் ஓடு], மற்றும் சில [staghorn,] கண்டு எடுக்கப்பட்டது. இவைகள் இன்றும் இந்தியாவின் ஆயுர்வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் பாவிக்கப்படுகின்றன, ஆகவே பெரும்பாலும் இவை அந்த பழங்காலத்திலும் பாவிக்கப்பட்டு இருக்கலாம். மேலே கூறியவாறு நாம் சில அடிப்படைகளில் அல்லது ஒப்பீடுகளில் ஊகிப்பதை தவிர எம்மால் ஒன்றும் செய்ய முடியாத நிலை இருந்தாலும், சிந்து வெளியின் மற்றும் ஒரு அம்சமான, மக்களின் சுகாதாரத்தை முதன்மையாக கொண்ட, அவர்களின் கட்டிடமும் வடிகால் அமைப்பும் எமது இந்த ஊகத்தை மிகவும் ஆணித்தரமாக ஆதரிக்கிறது.   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]           
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.