Jump to content

இலங்கைத் தமிழருக்கு சர்வதேசம் துரோகமிழைக்கிறது!


Recommended Posts

இலங்கைத் தமிழருக்கு சர்வதேசம் துரோகமிழைக்கிறது!

Chanal-4.png?resize=800%2C558

இனப்படுகொலைப் போரினால் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழ் மக்களுக்கு அவர்களின் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் சர்வதேசம் தவறியுள்ளதாகவும் அதன் மூலம் சர்வதேசம் அந்த மக்களுக்கு துரோகம் இழைத்து வருகின்றது எனவும் பிரித்தானியாவைச் சேர்ந்த பிரபல ஊடகவியலாளரும், சனல்4 ஆவணப் படத்தின் இயக்குனருமான கெலும் மக்ரே குற்றம் சாட்டியுள்ளார்.

 

இலங்கைப் படையினர் மீதான போர்க்குற்றச்சாட்டுக்களை நீக்கிக்கொள்ளுமாறு எதிர்வரும் ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத் தொடரின்போது யோசனையொன்றை முன்வைக்கவுள்ளமையுடன் பின்னர் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ஜெனிவா அமர்வின்போது இந்த யோசனையைப் பிரேரணையாகக் கொண்டுவரத் தாங்கள் திட்டமிட்டுள்ளதாக இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறிய கருத்துக்கள் தொடர்பாக ருவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவொன்றுக்குப் பதிலளிக்கையிலேயே மக்ரே இதனைச் சுட்டிக்காட்டி உள்ளார்.

ஊடகப் பிரதானிகளை சந்தித்தபோது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இது தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்தார். அது தொடர்பாக மனித உரிமை ஆர்வலர் மரியோ அருள், “இதிலே மிகவும் மோசமான விடயம் யாதெனில் இதற்குப் பின்னரும் கூட இலங்கையின் முன்னேற்றம் தொடர்பாக நாங்கள் உற்சாகமடைந்துள்ளோம் என்ற பல்லவியைப் பாடுவதை அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட தரப்புகள் மாற்றிக்கொள்ளமாட்டா. இலங்கை அரசு நீதியை ஒருபோதும் வழங்கமாட்டாது என்ற விடயத்தைத் தான் தமிழ் மக்கள் தொடர்ந்தும் கூறி வந்துள்ளனர்” – எனத் தெரிவித்துள்ளார்.

இக் கருத்தினை மேற்கோள் காட்டி தனது ருவிட்டர் பதிவிலே கருத்து தெரிவித்த கெலும் மக்ரே, “சர்வதேச சமூகம் இலங்கையில் தமிழ் மக்களுக்கு வழங்கிய தன் சொந்த வாக்குறுதிகளுக்கு துரோகமிழைத்து வருகின்றது. இலங்கையில் நீதிக்குத் தொடர்ந்தும் துரோகமிழைக்கப்படுகின்றது” என சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில் இலங்கை ஜனாதிபதியின் கருத்துக்கள் சர்வதேச மனித உரிமை செயற்பாட்டாளர்களிடையே அதிருப்திகளை ஏற்படுத்தியுள்ளமையை அவதானிக்க முடிகின்றது. குறிப்பாக இலங்கை ஜனாதிபதி மைத்திரிபாலவின் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாதது என யஸ்மின் சூக்காவின் உண்மைக்கும் நீதிக்குமான சர்வதேச அமைப்பும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://globaltamilnews.net/2018/95853/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கெலும் மக்ரே தமிழர்கள் மீதான இனப்படுகொலையை சர்வதேச சமூகம் விசாரிக்கவேண்டும் என சலிக்காமல் தொடர்ந்தும் கேட்டுவருகின்றார். ஆனால் தமிழ்த் தலைமைகள் “நல்லாட்சி” அரசுக்குப் பின்னர் ஒளிந்துள்ளன. 

Link to comment
Share on other sites

36 minutes ago, கிருபன் said:

கெலும் மக்ரே தமிழர்கள் மீதான இனப்படுகொலையை சர்வதேச சமூகம் விசாரிக்கவேண்டும் என சலிக்காமல் தொடர்ந்தும் கேட்டுவருகின்றார். ஆனால் தமிழ்த் தலைமைகள் “நல்லாட்சி” அரசுக்குப் பின்னர் ஒளிந்துள்ளன. 

நிலைமை இன்னும் மோசமாக போக இருக்கிறது.  சீன ஆதிக்கத்தை  தடுக்க முடியாத ரனிலினால் அமெரிக்காவுக்கு இனி பயன் இல்லை என்ற முடிவுக்கு வந்த அமெரிக்கா, மோடியின் உதவியுடன் மகிந்த வை தமது பக்கம் திருப்பி உள்ளது. மீண்டும் மகிந்த குடும்பம் ஆட்சிக்கு வரும் என்பதில் அமரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் எந்த சந்தேகமும் இல்லை. ரனில் இனி பயன் அற்றவர் என முடிவு எடுத்து விட்டார்கள்.

மகிந்தவை   வழிக்கு கொண்டுவர மட்டுமெ போர்க்குற்ற விசாரணை  அமெரிக்காவுக்கு தேவைப்பட்டது. இப்போது அந்த தேவை முடிந்து விட்டது. 

இனிமேல் போர்க்குற்ற விசாரணையால் பயன் பெறக்கூடிய சக்தி யு.என்.பி. மட்டுமெ. இறாஜபக்ச குடும்பத்தை உள்ளே தள்ளி அது பற்றி எதுவும் எவரும் பேசக்கூடாது என்று சட்ட ரீதியாகவும், வெள்ளை வான் முறையிலும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமெ அமெரிக்க - இந்திய ஆதரவுடன் களம் இறங்க கூடிய மகிந்தவை யு,என்,பி. தடுக்க முடியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Jude said:

மகிந்தவை   வழிக்கு கொண்டுவர மட்டுமெ போர்க்குற்ற விசாரணை  அமெரிக்காவுக்கு தேவைப்பட்டது. இப்போது அந்த தேவை முடிந்து விட்டது. 

இனிமேல் போர்க்குற்ற விசாரணையால் பயன் பெறக்கூடிய சக்தி யு.என்.பி. மட்டுமெ. இறாஜபக்ச குடும்பத்தை உள்ளே தள்ளி அது பற்றி எதுவும் எவரும் பேசக்கூடாது என்று சட்ட ரீதியாகவும், வெள்ளை வான் முறையிலும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமெ அமெரிக்க - இந்திய ஆதரவுடன் களம் இறங்க கூடிய மகிந்தவை யு,என்,பி. தடுக்க முடியும்.

மகிந்த அணியினர்தான் அடுத்ததாக ஆட்சியில் அமர்வார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் மேற்குநாடுகளின் சொல்கேட்டு நடப்பார்கள் என்பதில் நம்பிக்கையில்லை. சீனாவின் அபிவிருத்தி உதவிகள் சிறிலங்காவுக்கு தொடர்ந்தும் தேவை என்பதால் போர்க்குற்றத்தில் இருந்து தப்பிக்க தேவையான குறைந்தளவு செயற்பாடுகளை மேற்கு நாடுகளைத் திருப்தி செய்யும் அதே நேரத்தில் சீனாவையும் அனுசரிப்பார்கள்.

மகிந்த அணியினர் சிங்கள இனவாதத்தில் குளிர்காய்பவர்கள் என்பதால் பிற இனங்கள் நெருக்குவாரப்படும் ஆனால் அதன் அளவு மட்டுப்படுத்தப்படலாம். எனினும் சிறுகச் சிறுக வடக்கு கிழக்கு பகுதிகளில் தமிழர்களின் இனப்பரம்பலைக் குறைத்து தமிழர்களின் அரசியல் பலத்தை இல்லாமல் செய்யும் திட்டம் தொடரும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • வணக்கம் வாத்தியார் .........! ஆண் : உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு நிலவே நிலவே இந்த விண்ணோடு கலந்துவிடு காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு ஆண் : என் சுவாசக் காற்று வரும்பாதை பாா்த்து உயிா்தாங்கி நானிருப்பேன் மலா்கொண்ட பெண்மை வாராமல் போனால் மலைமீது தீக்குளிப்பேன் என் உயிா் போகும் போனாலும் துயாில்லை கண்ணே அதற்காகவா பாடினேன் வரும் எதிா்காலம் உன் மீது பழிபோடும் பெண்ணே அதற்காகத்தான் வாடினேன் முதலா முடிவா அதை உன் கையில் கொடுத்துவிட்டேன் ஆண் : காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு பெண் : ஓா் பாா்வை பாா்த்தே உயிா்தந்த பெண்மை வாராமல் போய்விடுமா ஒரு கண்ணில் கொஞ்சம் வலிவந்த போது மறு கண்ணும் தூங்கிடுமா நான் கரும்பாறை பலதாண்டி வேராக வந்தேன் கண்ணாளன் முகம் பாா்க்கவே என் கடுங்காவல் பலதாண்டி காற்றாக வந்தேன் கண்ணா உன் குரல் கேட்கவே அடடா அடடா இன்று கண்ணீரும் தித்திக்கின்றதே பெண் : மழைபோல் மழைபோல் வந்து மண்ணோடு விழுந்துவிட்டேன் மனம்போல் மனம்போல் உந்தன் ஊனோடு உறைந்துவிட்டேன் உயிரே உயிரே இன்று உன்னோடு கலந்துவிட்டேன் நினைவே நினைவே உந்தன் நெஞ்சோடு நிறைந்துவிட்டேன் .......! --- உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு ---
    • ஏன் பழனிச்சாமி வாக்குகளைப் பிரிக்கிறார் என்றும் சொல்லலாம்தானே. இந்த முறை நிரந்த சின்னம் கிடைக்குமளவுக்கு வாக்கு சதவீதம் இருக்கும். யாழ்கள திமுக ஆதரவாளர்களுக்கு இது எரிச்சலாக இருக்கும். எதற்கும்  பான் ஓன்று வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.
    • உன்மேலே கொண்ட ஆசை .......!  😍
    • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் புல‌வ‌ர் அண்ணா🙏🥰.................................................................
    • ம்....ம்...ம் சொந்த மண்ணினத்தவெனையே பாகுபாடு பார்க்கும் தமிழ்நாட்டில்  இலங்கை பொண்ணு வாக்களிச்சு எத சாதிக்கப்போகுதாம்? 🤣 கவனம். உயிராபத்து நிறைந்த விடயம். 😎
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.