Jump to content

சிவனடிபாதமலை பெயர் மாற்றமும், பெரும்பான்மையினரின் நிலைப்பாடும்!!!


Recommended Posts

சிவனடிபாதமலை பெயர் மாற்றமும், பெரும்பான்மையினரின் நிலைப்பாடும்!!!

 

 
 

சிவனடிபாத மலை அடிவாரத்தில் பல வருடங்களாக மும்மொழிகளிலும் காட்சிப்படுத்தப்பட்டிருந்த  பெயர்ப்பலகை அகற்றப்பட்டு  புதிய பெயருடன் கூடிய பெயர்க்கல் அமைக்கப்பட்டமை கடந்த சில வாரங்களாக சர்ச்சைக்குரிய விடயமாக பேசப்பட்டு வந்தது. 

sivanoli1.jpg

இது குறித்த உண்மை நிலைமையறியாது சிலர்  சமூக ஊடகங்களில்  இனங்களுக்கிடையில் முறுகல்களை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை பகிர்ந்திருந்தனர். இது குறித்து உண்மை நிலைமையை  அறிய அவ்விடத்துக்கு நேரடியாக சென்றதில்  சில தகவல்களைப்பெறக்கூடியதாக இருந்தது. 

சிவனடிபாத மலை புனித பிரதேசமானது மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்கள் இரண்டுக்கும் உரித்தான நிலப்பரப்பில் அமைந்துள்ளது. எனினும் இலங்கை மக்கள் உட்பட உல்லாசப்பயணிகள் அனைவரும் கூடுதலாக அட்டன் மற்றும் நோட்டன் மார்க்கத்தின் வழியாக நல்லதண்ணீர் பிரதேசம் சென்று அங்கிருந்தே தமது பயணத்தை இம்மலைக்கு மேற்கொள்கின்றனர். 

ஆரம்பத்தில் அம்பகமுவ பிரதேச சபையின் அதிகார எல்லைக்குள் இப்பிரதேசம் இருந்தது. பின்பு புதிதாக உருவாக்கப்பட்ட மஸ்கெலியா பிரதேச சபைக்கு தற்போது இப்பிரதேசம் உள்வாங்கப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்டத்தில் புதிதாக பிரதேச சபைகள் அதிகரிக்கப்பட்டபோது சிவனடிபாதமலை பிரதேசம் சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் பகுதிக்குள் செல்வதை ஏற்க முடியாது என்றும் இது பௌத்த பிரதேசம் என்றும் சர்ச்சைகளை ஏற்படுத்திய அப்போதைய அம்பகமுவ பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் இதற்கு எதிராக வழக்கு தொடர்ந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. பின்னர் இவ்வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

புதிய பெயர்

உள்ளூராட்சி சபைத்  தேர்தல்களுக்குப் பின்னர்  ஆட்சியமைப்பதற்கு முதன் முதலாக கூடிய மஸ்கெலியா பிரதேச சபை கன்னி அமர்வின் போது இரு கட்சி ஆதரவாளர்களுக்கிடையில் கைகலப்பு ஏற்பட்டதில் அப்பிரதேசமே பதற்றத்துக்குள்ளாகியிருந்தது. 

ஆனால் அன்றைய தினமான  மார்ச் 28 ஆம் திகதியன்றே மேற்படி புதிய பெயருடன் கூடிய பெயர்க்கல் அடிவாரத்தில் கொண்டு வந்து வைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இப்புனித பிரதேசம் தமிழர்கள் செறிந்து வாழ்ந்து வரும் மஸ்கெலியா பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் இருப்பதை விரும்பாத சில இனவாத சக்திகளே இவ்வாறு திட்டமிட்டு அன்றைய தினம் இவ்வேலையை செய்திருக்கலாம் என இப்பகுதி வாழ் மக்கள் தெரிவிக்கின்றனர். 

ஆனால் குறித்த பெயர்க்கல் ஆனது பக்தர் ஒருவரின் அனுசரணையில் வழங்கப்பட்டதாகும். அதில் அவரது பெயரும் பதிக்கப்பட்டுள்ளது. புதிய பெயர்க்கல் இவ்விடத்தில் வைக்கப்பட்டதற்கு நாம் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை ஆனால் பழைய பெயருடன் கூடிய பெயர்ப்பலகை அகற்றப்பட்டதற்கே நாம் விசனமடைந்துள்ளோம் என்கின்றனர் நல்லதண்ணீர் பிரதேச தமிழ் மக்கள்.

பெரும்பான்மையினத்தவர்களின் கருத்து

sivanoli2.jpg

சிங்களத்தில் சிறிபாதய, ஆங்கிலத்தில் சிறிபாத, தமிழில் சிவனடிபாதம் என்ற விளக்கத்துடன் ஆரம்பத்தில் இருந்த பெயர்ப்பலகை அகற்றப்பட்டு தற்போது மும்மொழிகளிலும் கௌதம புத்த பகவானின் ஸ்ரீ பாதஸ்தானம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து இப்பிரதேசத்தின்  கிராம அதிகாரி கருத்துத்தெரிவிக்கையில் இந்த திடீர் ஏற்பாடுகள் பற்றி இப்பிரதேசத்தில் எவரும் அறிந்திருக்கவில்லை என்பது முக்கியம். அதே வேளை நாம் பௌத்தர்கள் விகாராதிபதிக்கு கட்டுப்பட்டவர்கள். ஆகையால் இது குறித்து விமர்சிக்கும் அளவுக்கு எமக்கு ஆன்மிக ரீதியான அதிகாரங்கள் இல்லை என்பதை சிறுபான்மையினர் புரிந்து கொள்ளல் அவசியம்.  சிவனொளிபாதமலை உச்சியில் அமைந்துள்ள விகாரையின் பிரதான  விகாராதிபதி இரத்தினபுரியில் இருக்கின்றார். பக்தர் ஒருவரின் அனுசரணையில் புதிய பெயர்க்கல் இங்கு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

ஆகவே இது இரு நபர்கள் சம்பந்தப்பட்ட ஒரு விடயமாகவே நாம் பார்க்க வேண்டியுள்ளது. எனினும் இவ்விடத்தின் தமிழ் அர்த்தம் மாற்றப்பட்டுள்ளதாக சில ஊடகங்கள் கருத்துத்தெரிவித்திருக்கின்றன ஆனால் சிங்கள மொழியிலும் ஆங்கிலத்திலும் கூட அர்த்தம் மாறுபட்டுள்ளதாகவே நாம் நினைக்கின்றோம். 

புத்தரின் புனித பாத ஸ்தானம் இருக்கின்ற இடம் மலையுச்சியிலாகும் ஆனால் இந்த பெயர்க்கல்லின் படி அடிவாரத்திலேயே இருப்பது போன்ற அர்த்தம் அல்லது மாயை உருவாகின்றது. இது இங்கு வருகை தரும் உல்லாசப்பயணிகளுக்கு குழப்பத்தை ஏற்படுத்துகிறது. பாதஸ்தானத்துக்கு செல்லும் வழி என்று இருந்திருக்க வேண்டும். 

எது எப்படியானாலும் இங்குள்ள மக்கள் இது குறித்து அலட்டிக்கொள்ளாமல் ஒற்றுமையாகவே இருக்கின்றனர். பருவ காலம் இல்லாவிட்டாலும் கூட வருடந்தோறும் மும்மதத்தவர்களும் வந்து செல்லும் புனித இடமாக இவ்விடம் உள்ளது என்று தெரிவித்தார். இதே வேளை இப்பிரதேச பெரும்பான்மையின மக்கள் கருத்துத்தெரிவிக்கையில் பெயர்மாற்றம் இங்குள்ள மக்களை பாதித்ததாகத்தெரியவில்லை. 

நாம் ஒற்றுமையாகவே இருக்கின்றோம். மலையடிவாரத்தில் அமைந்துள்ள சிவாலயத்தையும் நாம் வணங்குகின்றோம். எத்தனையோ வருடங்கள் இங்கு பல்லின மக்களும் வந்து செல்கின்றனர். இந்த பெயர் மாற்ற விவகாரத்தை பூதகரமாக்கி இன ஐக்கியத்தை குழப்பும் செய்கைகளில் எவரும் ஈடுபட வேண்டாம் என்பதே எமது கருத்து. 

எனினும் இரத்தினபுரி  விகாராதிபதிக்கு இச்சம்பவம் பற்றிய செய்திகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன என்று கேள்வியுறுகிறோம்.. பழைய பெயருடன் மீண்டும் இவ்விடத்தில் ஒரு பெயர்ப்பலகையை வைப்பது பற்றி ஆலோசிக்கப்பட்டு வருவதாக எமக்கும் தகவல்கள் வந்தவண்ணமுள்ளன என்றனர்.

மஸ்கெலியா பிரதேச சபைத் தலைவர்

இது குறித்து மஸ்கெலியா பிரதேச சபைத்தலைவர் செண்பகவல்லி கருத்துத் தெரிவிக்கையில்,

இது மிகவும் உணர்வுபூர்வமாக அணுக வேண்டிய விடயம். புதிதாக மஸ்கெலியா பிரதே சபை ஸ்தாபிக்கப்பட்ட தினமன்றே இப்புதிய பெயர்க்கல் இங்கு வைக்கப்பட்டதாக எமக்குத்.தெரிவிக்கின்றனர். இது குறித்து நான் அரசாங்க அதிபரிடம் வினவிய போதும் அது குறித்து தனக்கு எவரும் அறிவிக்கவில்லையென்றே தெரிவித்தார். எமது மத உரிமையை விட்டுக்கொடுக்க முடியாத அதே நேரம் இவ்விவகாரத்தை மென்போக்கோடு அணுக வேண்டும். 

இது தொடர்பாக நான் ஆறுமுகன் தொண்டமானிடம் ஆலோசனைகளைப்பெற்றேன். அவரும் இதை பொறுமையாக கையாளும்படி கூறினார். பிரதான விகாராதிபதி இரத்தினபுரியில் இருக்கின்றார். இவ்வருடம் பருவ காலம் ஆரம்பிக்கும் தறுவாயில் அது குறித்து அவருடன் பேசலாம் என்றார். ஆகவே இவ்விவகராம் தொடர்பில் நாம் தொடர்ச்சியாக அவதானித்து வருகிறோம். அதற்கிடையில் எவரும் இதை வைத்து சமூக ஒற்றுமையை சீர்குலைக்கும் படியான கருத்துக்களை சமூக ஊடகங்களிலோ அல்லது ஊடகங்களிலோ தெரிவிக்க வேண்டாம் எனக்கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

அடிவாரத்தில் சிவன் ஆலயம்

sivanoli3.jpg

இது இவ்வாறிருக்க சிவனொளிபாத மலை அடிவாரத்தில் அமைக்கப்பட்டுள்ள சிவன் ஆலயத்தில் கடந்த 9 ஆம் திகதி சிவலிங்கம் ஒன்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. உலக சைவத்திருச்சபையின் ஏற்பாட்டில் தீவெங்கினும் 108 சிவலிங்கங்களை பிரதிஷ்டை செய்யும் திட்டத்தின் முதற்கட்டமாக அன்றைய தினம் முதலாவது லிங்கம் மலையடிவாரத்திலமைந்துள்ள மேற்படி சிவனாலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. 

இந்நிகழ்வுக்கு பெருந்.தொகையான தமிழ், சிங்கள பக்தர்கள் வருகை தந்திருந்தமை முக்கிய விடயம். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் கருத்துத்தெரிவித்த போது சிவனடி பாதமலை என்ற பெயர்ப்பலகை மாற்றப்பட்டமை வேதனையைத்தருகிறது என்றாலும் அது குறித்து எமது பிரதேச அரசியல் பிரமுகர்கள் நல்ல முடிவை எடுப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. 

அதே போன்று இங்கு சிவாலயம்  அமைக்கப்படுவதற்கும்  தற்போது லிங்கம் பிரதிஷ்டை செய்யப்படுவதற்கும் அனைத்து மக்களினதும் ஆதரவு கிடைத்துள்ளது. பெயர்ப்பலகை அகற்றப்பட்டாலும் பொது மக்கள் வழிபாட்டுக்காக சிவலிங்கம் இங்கு ஸ்தாபிக்கப்பட்டமையை நாம் சிவனின் அற்புதம் என்றே நினைக்கின்றோம். 

அதன் படி அவர் அருளால் மீண்டும் சிவனடிபாதம் என்ற பெயர் பழைய இடத்தில் மீண்டும் காட்சி தரும் என்ற நம்பிக்கை எமக்குள்ளது என்று தெரிவித்தனர். பக்தர்களும் மக்களும்  மிகத் தெளிவாகவே உள்ளனர். ஆகவே இவ்விடயத்தில் இன முறுகல்களை ஏற்படுத்தும் வீண் பிரசாரங்களை எமது மக்கள் மேற்கொள்ளாமலிருப்பதே சிறந்தது.

(சிவலிங்கம் சிவகுமாரன்)

http://www.virakesari.lk/article/40493

Link to comment
Share on other sites

சிவனடிபாதமலை பெயர் மாற்றம் ; மனோவின் அதிரடி நடவடிக்கை

 

 

சிவனடிபாதமலை என்ற தமிழ் பெயர் பலகை யாரால் எப்படி, எந்த அடிப்படையில் அகற்றப்பட்டது என்பது தொடர்பில் உடனடியாக ஆய்வு அறிக்கை அனுப்பும்படி நுவரெலியா மாவட்ட செயலாளரை கேட்டுக் கொண்டுள்ளதாக அமைச்சர்  மனோகணேசன் தெரிவித்துள்ளார்.

sivanoli3.jpg

மேலும் சிவனடிபாதமலை என்ற தமிழ் பெயர் பலகையை மலையடிவாரத்தில் மீண்டும் பொருத்தும்படியும் நுவரெலியா மாவட்ட செயலாளரிடம் வலியுறுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

http://www.virakesari.lk/article/40530

Link to comment
Share on other sites

19 hours ago, நவீனன் said:

உடனடியாக ஆய்வு அறிக்கை அனுப்பும்படி நுவரெலியா மாவட்ட செயலாளரை கேட்டுக் கொண்டுள்ளதாக அமைச்சர்  மனோகணேசன் தெரிவித்துள்ளார்.

மனோகணேசனை யார்தான் மதிக்கிறார்கள்?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 5 எள்ளு பாகுகள் பாக்கெட்டில் அடைத்து லேபல் ஒட்டி - வீட்டில் போய் வாங்கினால் ரூ 200 ( 50 பென்ஸ்). இலண்டனில் தமிழ் கடையில் குறைந்தது £3.50? ஏற்றுமதி செலவை கழித்து பார்த்தாலும்? பிகு எள்ளை இடித்து மாவாக்கி பிசையும் உருண்டை. எள்ளுருண்டை அல்ல.
    • அவள் ஒருநாள் வீதியோரம் கூடை நிறைந்த கடவுளர்களை கூவிக் கூவி விற்றுக்கொண்டிருந்தாள்   போவோர் வருவோரிடம் 'கடவுள் விற்பனைக்கு' என்று கத்திச் சொன்னாள்   அவள் சொன்னதை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை   பிள்ளை பாலுக்கு அழுதது கடவுளர்களின் சுமை அவளின் தலையை அழுத்தியது   'கடவுள் விற்பனைக்கு' அவள் முகம் நிறைந்த புன்னகையுடன் மீண்டும் கூவினாள்   கடவுள் மீது விருப்புற்ற பலரால் கடவுள் அன்று பேரம் பேசப்பட்டார்   அந்நாளின் முடிவில் அவளின் வேண்டுதலை ஏற்றுக் கடவுளர்கள் அனைவரும் விலை போயினர்     தியா - காண்டீபன் மார்ச் 29, 2024 காலை 7:20
    • வருகை, கருத்துக்கு நன்றி. இரெண்டு வாரம் இல்லை. மாதம். ஆனால் இதை வைத்தும் கணிக்க முடியாதுதான். ஒரு ஊக கணிப்புத்தான். பேசிய பலரும் யாருக்கும் வாக்களிக்காத மனநிலையில், ஒதுங்கி போவதாகவே இருந்தார்கள். இவர்கள் வீட்டில் இருக்க, சலுகை அரசியலை விரும்புவோர் வாக்களித்தால் யாழில் தமிழ் தேசிய எம்பிகள் அளவு குறையும் என நினைக்கிறேன்.  ஜேவிபி க்கு முன்னர் இல்லாத ஆதரவு யாழில் உள்ளது. பிள்ளையார் இன்னில் அண்மையில் கூட்டம் வைத்து, உள்ளூர் பிரமுகர்கள் பலரும் சமூகமாகி இருந்தனர்.
    • சிறப்பான கவிதை... மகிழ்ச்சியாக இருங்கள் 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.