Jump to content

என்னை ஒசாமா என்று அழைத்த ஆஸி. வீரர்: மொயீன் அலி வெளிப்படுத்தும் ‘இனப்பாகுபாடு’ சம்பவங்கள்!


Recommended Posts

என்னை ஒசாமா என்று அழைத்த ஆஸி. வீரர்: மொயீன் அலி வெளிப்படுத்தும் ‘இனப்பாகுபாடு’ சம்பவங்கள்!

 

 
moen_ali87

 

இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயீன் அலி தன்னுடைய சுயசரிதையை எழுதி வருகிறார். அதன் சில பாகங்கள் தி டைம்ஸ் பத்திரிகையில் வெளிவருகின்றன. அதில் மொயீன் அலி, ஆஸ்திரேலிய வீரர்களின் நடத்தை குறித்து கூறியதாவது:

2015 ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய வீரர்கள் என்னிடம் மோசமாக நடந்துகொண்டார்கள். ஒரு சம்பவம் என்னை பாதித்தது. மைதானத்தில் ஒரு ஆஸ்திரேலிய வீரர் என்னைப் பார்த்து ஒசாமா (பின்லேடன்) என அழைத்தார். அவர் என்னிடம் அப்படிக் கூறியதை என்னால் நம்பமுடியவில்லை. எனக்கு மிகவும் கோபம் வந்தது. மைதானத்தில் ஒருபோதும் நான் கோபமாக இருந்ததில்லை. அணி வீரர்களிடம் இதுகுறித்துக் கூறினேன். இதை ஆஸ்திரேலியப் பயிற்சியாளர் டேரன் லேமனிடம்  எடுத்துச் சென்றார் இங்கிலாந்துப் பயிற்சியாளர் டிரெவர் பேலிஸ். 

அந்த வீரரிடம் டேரன் லேமன் கேட்டார், மொயீன் அலியை ஒசாமா என அழைத்தாயா? என்று. ஆனால் அந்த வீரர் தான் அவ்வாறு சொல்லவில்லை என்று கூறிவிட்டார். பகுதிநேரப் பந்துவீச்சாளர் என்றுதான் கூறினேன் என்றார். எனக்கு இது ஆச்சர்யமாக இருந்தது. ஆனாலும் அவர் சொல்வதை ஏற்றுக் கொண்டுதானே ஆகவேண்டும். எனினும் அந்தப் போட்டியில் நான் கோபமாகவே இருந்தேன். 3-2 என ஆஷஸ் தொடரை நாங்கள் வென்றபிறகும் அந்த வீரரிடம் இதுகுறித்துக் கேட்டேன். அப்போதும் அதை மறுத்தவர், தனக்கு நிறைய முஸ்லிம் நண்பர்கள் இருப்பதாகக் கூறினார் என்று தான் சந்தித்த இனப்பாகுபாடு சம்பவம் குறித்து தன்னுடைய சுயசரிதையில் மொயீன் அலி எழுதியுள்ளார்.

இங்கிலாந்தின் பிர்மிங்கமில் பிறந்த மொயீன் அலியின் தாய் இங்கிலாந்தைச் சேர்ந்தவர். தந்தை, பாகிஸ்தானியர். தி டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் மொயீன் அலி, ஆஸ்திரேலிய வீரர்கள் குறித்துக் கூறியதாவது:

நான் விளையாடிய அணிகளில் மிகவும் வெறுப்பது ஆஸ்திரேலிய அணியைத்தான். அவர்கள் பழைய எதிரி என்பதற்காகச் சொல்லவில்லை. அவர்கள் நடந்துகொள்ளும் விதத்தாலும் மக்களையும் வீரர்களையும் அவமரியாதையாக நடத்துவதாலும்தான். நான் அவர்களிடம் தொடர்ந்து விளையாடும்போதுதான் அவர்களின் மோசமான நடத்தையை முழுவதுமாக உணர்ந்தேன்.

2015 ஆஷஸ் தொடரில் இன்னும் மோசமாக நடந்துகொண்டார்கள். ஆனால் தனிப்பட்ட முறையில் அவர்கள் நல்லவிதமாகப் பழகுவார்கள். ஓர் அணி சிரமங்களை மேற்கொள்ளும்போது அவர்கள் மீது பரிதாபம் ஏற்படும். ஆனால் தென் ஆப்பிரிக்காவில் பந்தைச் சேதப்படுத்திய விவகாரத்தின்போது ஆஸ்திரேலிய அணி மீது பரிதாபமே ஏற்படவில்லை என்று கூறியுள்ளார்.

http://www.dinamani.com/sports/sports-news/2018/sep/15/moeen-ali-alleges-racial-abuse-during-2015-ashes-3000884.html

Link to comment
Share on other sites

எப்போது உன் கெபாப் ஷாப்பைத் திறப்பாய்?- வசையினால் ஆஸி.மீதான மொயீன் அலியின் வெறுப்பு

 

 
moeen%20ali2

படம்.| ராய்டர்ஸ்.

மொயீன் அலி தன் சுயசரிதை நூலில் ஆஸ்திரேலிய வீரர்களை, அதன் ரசிகர்களை கடுமையாக விமர்சித்துள்ளார். ஒரு வீரர் இவரை ஒசாமா என்று வர்ணித்தச் சம்பவம் தற்போது சர்ச்சையைக் கிளப்ப ஆஸ்திரேலிய அணி அதன் ரசிகர்கள் என்று மொயீன் அலி தன் நூலில் ஒருவரையும் விட்டு வைக்காமல் சாத்தியுள்ளார்.

அவரது சுயசரிதை டைம்ஸ் இதழில் தொடராக வெளி வருகிறது.

 

மொயீன் அலியின் தந்தை பர்மிங்ஹாமில் வசிக்கும் பாகிஸ்தானியர் தாய் பிரிட்டனைச் சேர்ந்தவர். தான் நிறவெறி ரீதியாக ஆஸ்திரேலிய ரசிகர்களால் வசைபாடப்பட்டதை நினைவு கூரும் மொயீன் அலி, கடந்த ஆஷஸ் தொடரில் ரசிகர் ஒருவர் தன்னிடம் வந்து ‘உன் கெபாப் ஷாப் எப்போது திறப்பாய்?’ என்று கேட்டதை கோபத்துடன் நினைவுகூர்ந்துள்ளார்.

“ஆஸ்திரேலியா மிகவும் முரட்டுத் தனமான இடம் என்று எதிர்பார்த்தேன். ஆனால் இவ்வளவு மோசமாக இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. கெபாப் ஷாப் போன்ற நிறவெறி வசைகளெல்லாம் நான் கேட்டதில்லை, பயிற்சி ஆட்டங்களில் கூட இப்படிப்பட்ட வசைகளை எதிர்கொண்டேன்.

மைதானத்தில் ஆடும் ஆஸி.வீர்ர்கள் முதல், பார்வையாளர்கள் வரை எதிரணியையோ அந்நாட்டு மக்களையோ மதிப்பவர்கள் அல்ல. என்னுடைய ஒட்டுமொத்த கிரிக்கெட் வாழ்க்கையிலேயே ஆஸ்திரேலிய அணியை நான் வெறுக்குமளவுக்கு வேறு அணிகளை வெறுத்ததில்லை. காரணம் அவர்கள் அப்படி தங்களை நடத்திக் கொள்கிறார்கள், வீரர்களையும் எதிரணி நாட்டின் மக்களையும் அவர்கள் மதிப்பதில்லை.

2015 உலகக்கோப்பைக்கு முன் சிட்னியில் நான் அவர்களை எதிர்த்து ஆடியபோது, அவர்கள் உங்களிடம் கடுமையாக மட்டுமல்ல வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் வசைபாடுவார்கள். முதலில் சரி என்று விட்டு விடுவேன், ஆனால் போகப்போக அவர்கள் நடத்தை மோசமாகி வந்தது. ஆஷஸ் தொடர் என்றால் அவர்கள் மேலும் கொடூரமானவர்களாக மாறி விடுகின்றனர். தனிநபர்களாக அவர்கள் ஓகே. ஆனால் அணியாக இறங்கினால் அவ்வளவுதான்.

கடைசியாக ஆடிய ஒருநாள் தொடரில் நன்றாக நடந்து கொண்டார்கள்.

இவ்வாறு கூறியுள்ளார் மொயின் அலி.

https://tamil.thehindu.com/sports/article24955449.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

Link to comment
Share on other sites

ஆஸ்திரேலியா கிறிக்கட் அணியையும் அதன் ரசிகர்கள் பற்றியும் முழு உலகமும் அறியும்.

Link to comment
Share on other sites

சூடு பிடித்துள்ள மொயின் அலியின் ஒசாமா விவகாரம்

cover-photo-14-696x522.jpg
 

அவுஸ்திரேலிய வீரர் ஒருவர் தன்னை ஒசாமா பின்லேடனுடன் ஒப்பிட்டு இனவெறியுடன் அவமதித்ததாக பரபரப்பான குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி சகலதுறை வீரர்களில் ஒருவரான மொயின் அலி.

மொயின் அலி எழுதியுள்ள தனது சுயசரிதை புத்தகம் ஒன்றிலேயே இந்த தகவலை வெளியிட்டுள்ளார். 31 வயதான மொயின் அலி பிறந்தது, வளர்ந்தது எல்லாமே இங்கிலாந்தில் தான் என்றாலும், பாகிஸ்தானை பூர்விகமாக கொண்டவர். இங்கிலாந்து அணிக்காக 2014ஆம் ஆண்டில் இருந்து விளையாடி வரும் அவர் தனது சுயசரிதை புத்தகத்தில் எழுதியிருப்பதாவது:–

 

2015ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் கார்டிப்பில் நடைபெற்ற முதலாவது டெஸ்டில் நாங்கள் வெற்றி பெற்றோம். அது தான் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக எனது முதல் ஆஷஸ் டெஸ்ட் போட்டியாகும். இதில் எனது தனிப்பட்ட செயல்பாடு (மொத்தம் 55 ஓட்டங்கள் மற்றும் 5 விக்கெட் எடுத்தார்) மகிழ்ச்சி அளித்தாலும், இன்னொரு சம்பவம் என்னை வெகுவாக பாதித்தது.

ஒசாமா என்று அழைத்தார்

இந்த போட்டியில் நான் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த போது, அவுஸ்திரேலிய வீரர்கள் இருவர், என் பக்கமாக திரும்பி, இந்த ஓசாமாவை சீக்கிரம் எடுக்க வேண்டும் (அவுட் ஆக்க வேண்டும்) என பேசினர். இதைக்கேட்ட நான் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்றேன். என்னால் நான் கேட்டதை நம்பவே முடியவில்லை. எனக்கு கோபத்தில் கன்னம் சிவந்தது. இதற்கு முன்பு கிரிக்கெட் களத்தில் இது மாதிரி கோபமடைந்ததில்லை.

அவுஸ்திரேலிய வீரர் என்னை மோசமாக வசைபாடியதை சக வீரர்கள் சிலரிடமும், எங்களது பயிற்சியாளர் ட்ரெவர் பெய்லிசிடமும் சொன்னேன். அவர் அதை அப்போதைய அவுஸ்திரேலிய பயிற்சியாளர் டேரன் லீமனின் கவனத்துக்கு கொண்டு சென்றார். பயிற்சியாளர் லீமன், சம்பந்தப்பட்ட அந்த அவுஸ்திரேலிய வீரரிடம்மொயின் அலியை ஒசாமா என்று அழைத்தீர்களா?’ என்று கேட்டதற்கு அந்த வீரர் அவ்வாறு கூறவில்லை என்று மறுத்தார். ‘அதை எடுத்துக் கொள்பகுதி நேர பந்துவீச்சாளர் (Part Timer)’ என்று தான் சொன்னேன் என்று விளக்கம் அளித்துள்ளார்.

எனக்கு ஒசாமா என்ற வார்த்தைக்கும், ‘பார்ட் டைமர்என்ற வார்த்தைக்கும் வித்தியாசம் தெரியாதா என்ன? இருந்தாலும் அந்த வீரரின் வார்த்தையை ஏற்றுக் கொள்ள வேண்டியதாயிற்று. இருப்பினும், அந்த ஆட்டம் முழுவதும் நான் கோபத்திலேயே இருந்தேன்.

 

 

இந்த ஆஷஸ் தொடரை நாங்கள் 3–2 என்ற கணக்கில் கைப்பற்றினோம். தொடர் நிறைவடைந்ததும் அந்த அவுஸ்திரேலிய வீரரிடம் மீண்டும் இது பற்றி கேள்வி எழுப்பிய போது அதே போன்றே பதில் அளித்தார். இவ்வாறு மொயின் அலி சுயசரிதை புத்தக்கத்தில் கூறியுள்ளார்.

இந்த நிலையில், மூர்க்கத்தனமாக செயல்படும் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த வீரர்களுக்காக அனுதாபம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று மொயின் அலி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மொயீன் அலி கூறுகையில்நான் விளையாட விரும்பாத ஒரே அணி எது என்றால், அது அவுஸ்திரேலியாதான். அவர்கள் எங்களது பழைய எதிரிதான். என்றாலும், அவர்கள் வீரர்களுக்கும் மக்களுக்கும் மதிப்பு அளிப்பதில்லை. அவர்கள் எனக்கு எதிராக கடினமாக மட்டும் நடந்து கொள்ளவில்லை. என்னை இழிவுப்படுத்தினார்கள்.  

  • ali1.jpg
  • ali2.jpg

 

 

2015 கார்டிப்பில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் போது இதேபோல, பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் போட்டித் தடைகளுக்கு ஆளாகியுள்ள ஸ்மித், வோர்னர் மற்றும் பேன்ட்கிராப்ட் ஆகிய மூவர் மீதும் சிலருக்கு அனுதாபம் ஏற்படலாம். ஆனால், அவர்களுக்காக வருத்தப்பட கடினமாக உள்ளது எனவும் தெரிவித்தார்.

முன்னதாக கடந்த வருடம் அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியின் போது மொயின் அலி களத்தடுப்பில் ஈடுபட்டிருந்தார். அப்போது பார்வையாளர் அரங்கில் இருந்த ஒருவர், எப்போது உங்களுடைய ஹிஜாப் கடை திறக்கப்படும் என கோஷமிட்டார். எனினும் போட்டி நடைபெற்ற மைதானத்தில் குளிரான காலநிலை நிலவியதால் அவர் தனது காதை அடைத்துக் கொண்டிருந்ததாகவும், இதனால் எதையும் அவரால் கேட்க முடியாமல் போனதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கிரிக்கெட் அவுஸ்திரேலிய விசாரணை

மொயின் அலியின் குற்றச்சாட்டை விசாரிக்க தொடங்கியுள்ள அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை, அது தொடர்பான விபரங்களை உடனடியாக தரும்படி இங்கிலாந்து கிரிக்கெட் சபையிடம் கோரியுள்ளது.

 

இதுதொடர்பில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை செய்தி தொடர்பாளர் கூறுகையில், ‘இது போன்ற எல்லை மீறிய விமர்சனங்கள் ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல. இதற்கு எங்களது விளையாட்டு சமூகத்தில் இடமில்லை. தேசத்திற்காக விளையாடும் போது, எங்களுக்கு என்று மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கிறோம். எனவே இந்த விவகாரத்தை நாங்கள் ரொம்ப தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளோம்.’ என்றார்.

ஏற்கனவே அவுஸ்திரேலிய வீரர்களான ஸ்டீவன் ஸ்மித், டேவிட் வோர்னர், கெமரூன் பான்கிராப்ட் ஆகியோர் பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டத்தில் தடையை அனுபவித்து வரும் நிலையில், மேலும் ஒரு அவுஸ்திரேலிய வீரர் சர்ச்சையில் சிக்கி இருப்பது கிரிக்கெட் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவுஸ்திரேலியர்கள் இனவெறியர்களா?

அவுஸ்திரேலியர்கள் உலகின் மிகச் சிறந்த இன வெறியர்கள் என்பது உலகம் அறிந்த விடயம். வெள்ளை இனத்தவர்கள்தான் உலகிலேயே மிகச் சிறந்தவர்கள் என்பது அவர்களது தாழ்மையான எண்ணம். ஏனைய யாரையும் அவர்கள் திறமையானவர்களாக அங்கீகரிப்பதில்லை.

அதிலும் குறிப்பாக கிரிக்கெட் விளையாட்டில் முன்னிலை அணியாக விளங்குகின்ற அவுஸ்திரேலியாவில் சர்வதேச கிரிக்கெட் அணிகள் சுற்றுப்பயணங்களை மேற்கொண்டு விளையாடும் போது இனவெறியான செயற்பாடுகளில் அந்நாட்டு ரசிகர்கள் ஈடுபடுவது வழக்கமான ஒரு விடயமாகவும் மாறிவிட்டது. இதற்கு முன்பு இந்திய, இலங்கை வீரர்கள் மற்றும் தென்னாபிரிக்க அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களும் இதுபோன்ற இனவெறி இழிவுபடுத்தல்களுக்கு ஆளாகியுள்ளனர்.

முன்பு இலங்கை அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரனை அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களே இனவெறியை வெளிப்படுத்தும் வகையில் கடுமையாக விமர்சித்து பெரும் சர்ச்சை கிளம்பியது நினைவிருக்கலாம்.

 

 

அதேபோல, கடந்த 2006ஆம் ஆண்டு இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆஷஸ் தொடரில் விளையாடுவதற்காக அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இதன்போது இங்கிலாந்து அணிக்கும் நியூ சௌத் வேல்ஸ் அணிக்கும் இடையில் சிட்டினியில் நடைபெற்ற பயிற்சிப் போட்டியில், இங்கிலாந்து அணியின் சுழற்பந்துவீச்சாளர் சீக்கியரான மொண்டி பனீசரும், தென்னாபிரிக்க நாட்டைச் சேர்ந்த வெள்ளையரான கெவின் பீட்டர்சனும் விளையாடியிருந்தனர். எனினும் இப்போட்டியின்போது பனீசரையும், பீட்டர்சனையும் அவுஸ்திரேலிய ரசிகர்கள் துவேஷமாக விமர்சித்து தங்களது இன வெறியை வெளிப்படுத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தமை வரலாறுகள் சான்று பகர்கின்றன.

இந்நிலையில், உலக கிரிக்கெட்டின் பிக் 3 நாடுகளில் ஒன்றாக விளங்குகின்ற அவுஸ்திரேலிய அணியிலும், நிற பேதம் மற்றும் இன பாகுபாடுகளைக் கொண்டு வீரர்களை அணிக்குத் தெரிவு செய்கின்ற நடைமுறை அரிதாக இருந்தாலும், அவுஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் அண்மையில் இடம்பிடித்து ஒரு சில போட்டிகளில் விளையாடி வருகின்ற பாகிஸ்தான் வம்சாவளி வீரரான உஸ்மான் கவாஜா நிற பேதம் மற்றும் இனவெறி விமர்சனங்கள் காரணமாக தான் சிறுவயது முதல் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுக்க நேரிட்டதாக கடந்த வருடம் முதற்தடவையாக தெரிவித்திருந்தமை விளையாட்டு உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தண்டனை விதிக்கப்படுமா?

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் விதிமுறைகளின் படி இனவெறி கருத்துக்களை தெரிவித்தாலோ அல்லது பேசினாலோ, வீரர்களை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டாலோ, அந்த நாட்டின் மீது ஆயுட்கால தடை விதிக்க முடியும். ஆனால், அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்யும் அனைத்து வெளிநாட்டு அணிகளும் இந்தப் பிரச்சினையை சந்தித்து வருகின்றபோதிலும் இதுவரை அவுஸ்திரேலியா மீது கடுமையான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

மாறாக, இனவெறி மற்றும் கறுப்பின வீரர்களுக்கு எதிராக மேற்கொள்கின்ற பாகுபாடு காரணமாக ஒரு காலத்தில் தென்னாபிரிக்க அணியின் டெஸ்ட் உறுப்புரிமையை சர்வதேச கிரிக்கெட் பேரவை ரத்து செய்தமை அனைவரும் அறிந்த விடயம்.

எனவே, விளையாட்டில் நிற பேதம் மற்றும் இன பாகுபாட்டுக்கு முன்னுரிமை அளித்தால் ஒருபோதும் அந்த நாடு விளையாட்டுத்துறையில் முன்னேற்றம் அடையாது என்பது நிதர்சனமான உண்மையாகும். அதேபோல, இன்று கால்பந்து, கிரிக்கெட், மெய்வல்லுனர் உள்ளிட்ட முக்கியமான விளையாட்டுக்களில் வெளிநாடுகளைச் சேர்ந்த அல்லது வம்சாவளி வீரர்கள் அதிகளவில் விளையாடி வருகின்றனர். இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றதையும் எம்மால் அவதானிக்கலாம். ஆனால் சகோதரத்துவத்தை ஏற்படுத்துகின்ற முக்கிய ஆயுதமாக விளையாட்டு விளங்குகின்றமையினால், மைதானத்திலும், மைதானத்துக்கு வெளியிலும் அனைத்து வீரர்களுடனும் இன, மத, மொழி பாகுபாடின்றி வீரர்கள் நடந்துகொள்ள வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகும்.

http://www.thepapare.com

Link to comment
Share on other sites

மொயின் அலியின் ஆஸி.வீரர் மீதான ‘ஒசாமா’ வசை புகார் புஸ்...: ஆதாரம் இல்லையென் கிரிக்கெட் ஆஸி. கைவிரிப்பு

 

 

 
moeen%20ali

மொயீன் அலி. | படம்: ராய்ட்டர்ஸ்.

2015 ஆஷஸ் தொடரின் போது ஆஸி. வீரர் ஒருவர் தன்னை ‘ஒசாமா’ என்று பின்லேடனைக் குறிப்பிடுமாறு கூறி நிறவெறி வசை செய்ததாக இங்கிலாந்தின் மொயின் அலி எழுப்பிய புகார்களுக்கு ஆதாரம் இல்லை என்று கிரிக்கெட் ஆஸ்திரேலியா தன் விசாரணையில் முடிவுக்கு வந்துள்ளது.

தன்னுடைய புதிய நூலின் ஒரு பகுதியில் மொயின் அலி 2015ம் ஆண்டு கார்டிப் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வீரர் தன்னை ஒசாமா என்று பயங்கரவாதியின் பெயரைக் குறிப்பிட்டு நிறவெறி வசை செய்ததாக எழுதியிருந்தார்.

 

இதனையடுத்து கிரிக்கெட் ஆஸ்திரேலியா இதனைப் பொறுத்துக் கொள்ள முடியாது, யார் அப்படிக் கூறியிருந்தாலும் நடவடிக்கை பாயும்... இதோ விசாரணை என்றெல்லாம் சூளுரைத்தது நினைவிருக்கலாம்.

இதனையடுத்து கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் நேர்மைக்குழு ஆஸ்திரேலிய வீரர்கள் பலரை விசாரித்து கார்டிப் டெஸ்ட்டில் நடந்தது என்ன என்பதைப் பற்றி கேட்டறிந்தனர். இதன் விசாரணை வார இறுதியில் முடிந்தது.

இது குறித்து கிரிக்கெட் ஆஸ்திரேலியா செய்தித் தொடர்பாளர் கூறும்போது, “இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துடன் இணைந்து இந்தச் சம்பவம் அப்போதே விசாரிக்கப்பட்டது. இதன் முடிவையும் மொயினிடம் தெரிவித்தோம். மொயீனும் இதனை மேலும் முன்னெடுத்துச் செல்ல விரும்பவில்லை. மேலும் புதிய விசாரணைகளில் அவரது புகாருக்கான புதிய ஆதாரங்களும் எதுவும் கிடைக்கவில்லை. ஆகவே இந்த விவகாரம் இத்துடன் முடிவுக்கு வருகிறது.

ஆனால் இம்மாதிரி நிறவெறிப்போக்குக்கு இங்கு சமூகத்திலும் இடமில்லை, கிரிக்கெட்டிலும் இடமில்லை, இதனை சிறிதளவும் பொறுத்துக் கொள்ள முடியாது. நாட்டை பிரதிநிதித்துவம் செய்பவர்கள் எந்தத் துறையினராக இருந்தாலும் உயர்தர நடத்தைகளையும் மதிப்பீடுகளையும் கொண்டிருக்க வேண்டும். இதில் அவர்கள் தவறினால் விளைவுகள் என்னவென்பதையும் வீரர்கள் அறிந்திருக்கிறார்கள்” என்றார்.

மொயின் அலியும், “இதனை நான் புகாராக எழுப்பியது உண்மைதான், ஆனால் இனி இதனை பெரிதாக கொண்டு செல்ல விரும்பவில்லை, அடுத்த கட்ட வேலைகளைப் பார்க்க வேண்டும். பெரிய விஷயம் ஒன்றுமில்லை. 3 ஆண்டுகளுக்கு முன்பாக நடந்தது, கடுமையாக போராடி இரு அணிகளும் ஆடிய தொடர். களத்தில் நடந்ததை ரிப்போர்ட் செய்தேன் அவ்வளவே” என்று கூறியுள்ளார்.

அப்போதே லீ மேன் தன் வீரர்களிடம் ‘ஒசாமா’ என்று கூறினீர்களா என்று கேட்ட போது, பார்ட் டைமர் என்று கூறியதாக வீரர் ஒருவர் தெரிவித்த செய்தி வெளிவந்தது. ஆனால் மொயின் அலி ‘ஒசாமா’ என்ற வார்த்தைக்கும், ‘பார்ட்டைமர் என்பதற்கும் எனக்கு வித்தியாசம் தெரியாமலா புகார் எழுப்புவேன் என்றார்.

ஆனால் இப்போது இந்தவிவகாரம் முடிவுக்கு வந்தது.

https://tamil.thehindu.com/sports/article25028719.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.