Jump to content

யாழில்- இறைச்சி மேடைக்கு அனுப்பும் முன் காட்சி மேடையில் வைக்கப்பட்ட மாடு


Recommended Posts

யாழில்- இறைச்சி மேடைக்கு அனுப்பும் முன் காட்சி மேடையில் வைக்கப்பட்ட மாடு

 
 

யாழில் மாடொன்றை காட்சிப்படுத்தி அதனை இறைச்சிக்காக வெட்டுப்படவுள்ளமை தொடர்பில் சமூக ஆர்வலர்கள் மத்தியில் கடும் விமர்சனங்களஏற்படுத்தியுள்ளது.

 

02.jpg

 

 

யாழ்.ஐந்து சந்திப்பகுதியில் உள்ள பள்ளிவாசல் ஒன்றுக்கு முன்பாகவுள்ள காணி ஒன்றில் குறித்த மாடு கடந்த செவ்வாய்க்கிழமை முதல் காட்சிப்படுத்தப் பட்டுள்ளது. 

அதனை இறைச்சிக்காக வெட்டப்படவுள்ளதாகவும் , அதன் ஒரு பங்கு இறைச்சி ஆயிரம் ரூபாய் எனவும் அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.

03.jpg

 

 

குறித்த மாடு யாழ்.குப்பிளான் பகுதியில் உள்ள ஒருவர் வளர்த்துள்ளார், குடும்பத்தின் பொருளாதார நிலைமை காரணமாக அதனை தமிழர் ஒருவருக்கு விற்றோம். அவர் அதனை வளர்க்க எனவே வாங்கி சென்றார். இறைச்சிக்காக அதனை விற்பார் என தெரிந்திருந்தால் அதனை அவரிடம் விற்று இருக்க மாட்டோம். 

இரண்டரை வயதுடைய மாட்டை இறைச்சிக்காக வெட்டுவதை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இந்த மாட்டை தன்னார்வலர்கள் முன் வந்து அதனை காப்பற்றுங்கள் என மாட்டின் ஆரம்ப உரிமையாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை குறித்த மாட்டினை விலைக்கு வாங்கி அதனை காப்பாற்ற சில தன்னார்வலர்கள் முன் வந்து , மாட்டின் தற்போதைய உரிமையாளரை தொடர்பு கொண்ட போது , அதனை விற்கும் எண்ணம் தனக்கு இல்லை என காட்டமாக பதில் அளித்து வருகிறார் என தெரிவிக்கப்படுகின்றது.

01.jpg

 

இதே போன்று கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இவ்வாறு மாட்டினை காட்சிப்படுத்தி இறைச்சிக்காக வெட்டப்பட இருந்த போது யாழில் அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது பின்னர் அந்த மாடு சிலரின் நிதியுதவியுடன் மாட்டினை  கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயத்திற்கு அன்பளிப்பாக வழங்கினார் என ஆரம்ப உரிமையாளர் தெரிவிக்கின்றார்..

அதேவேளை நல்லூர் பிரதேச சபையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் , சபை எல்லைக்குள் மாட்டிறைச்சி கடைகளுக்கு அனுமதியளிக்க கூடாது எனவும். மாடு வெட்டவும் அனுமதிக்க கூடாது என தீர்மானம் முன் மொழியப்பட்டு , அது சபையில் ஏக மனதாகவும் நிறைவேற்றப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/40480

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகிலே கொடூரமான முறையில் கொல்லப்படும் விலங்குகள் என்றால் என்னைபொறுத்தவரை இந்த ஓதி போட்டு கழுத்தில் ஓட்டை போட்டு ரத்தம் முழுவதும் வெளியேறும் வரை அந்த வாயில்லா ஜீவன் துடித்து துடித்து இறப்பை காணுமட்டும் சித்திரவதை பட்டு சாவது இதை எந்த  விலங்கு நல அமைப்பும் தட்டி கேட்பதில்லை என்பது பெரும் ஆச்சரியமான விடயம் .............

Link to comment
Share on other sites

இன, மத, மொழிகளுக்கு அப்பால் நான் ஒரு மாட்டு வியாபாரி புரிந்து கொள்ளுங்கள்…

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…

How.jpg?resize=600%2C800

http://globaltamilnews.net/2018/95720/

Link to comment
Share on other sites

மாட்டை வெட்டி இறச்சியைக் கடையில்போட்டு விற்கும்போது முழுவதும் விலைப்படுமா இல்லையா என்ற கவலையும் சிரமமும் இல்லாது பணம் சம்பாதிக்க முனையும் ஒரு புதிய முறையிலான வியாபாரத் தந்திரமே இது. இந்தத் தந்திரம் 100 வீதமும் முகமதியர்கள் வாழும் ஊர்களில் செல்லுபடியாகாது. ?  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, பெருமாள் said:

உலகிலே கொடூரமான முறையில் கொல்லப்படும் விலங்குகள் என்றால் என்னைபொறுத்தவரை இந்த ஓதி போட்டு கழுத்தில் ஓட்டை போட்டு ரத்தம் முழுவதும் வெளியேறும் வரை அந்த வாயில்லா ஜீவன் துடித்து துடித்து இறப்பை காணுமட்டும் சித்திரவதை பட்டு சாவது இதை எந்த  விலங்கு நல அமைப்பும் தட்டி கேட்பதில்லை என்பது பெரும் ஆச்சரியமான விடயம் .............

நானும் பல இடங்களில் பார்த்துள்ளேன்... மிக மிக கொடூரமாக இருக்கும்....மிருகவதை எதிர்ப்பு பன்னாடைகளுக்கெல்லாம் இதை தண்டிக்க நேரமில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

நானும் பல இடங்களில் பார்த்துள்ளேன்... மிக மிக கொடூரமாக இருக்கும்....மிருகவதை எதிர்ப்பு பன்னாடைகளுக்கெல்லாம் இதை தண்டிக்க நேரமில்லை.

ம் இப்ப ஆட்டிறைச்சியை விட மாட்டிறைச்சிதான் வியாபாரம் அதிகம்  கொலை ஒன்றுதான் ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக கொல்லுவதை ரசிக்க மனம் வருவதில்லை  ருசிக்க மனம் வருகிறது சமைத்த பின் 

அந்த  நாட்டு கோழிய உரிச்சு தாங்க............ நான் மாட்டன் பாவம் அப்ப கறியாக்கி தந்தா தின்னுவியா .... ஓ தின்னுவனே:) 

Link to comment
Share on other sites

யாழில்.காட்சிப்படுத்தப்பட்டு மாடு இறைச்சிக்காக இன்னும் வெட்டப்படவில்லை..

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…

IMG_8390.jpeg?resize=800%2C600

 

யாழில்.காட்சிப்படுத்தப்பட்டு இறைச்சிக்காக வெட்டப்படவிருந்த மாடு இன்று வெட்டப்படவில்லை. குறித்த மாட்டினை காட்சிப்படுத்திய வேளை நுழைவுக்கட்டணமாக 100 ரூபாய் அறவிப்பட்டிருந்தது. அந்நிலையில் நுழைவு சீட்டினை வழங்குவதற்கு மாநகர சபையிடம் அனுமதி பெறவில்லை எனவும், அதற்காக வரிகள் தமக்கு செலுத்தப்பட்டவில்லை எனவும் யாழ் காவல் நிலையத்தில் மாநகர சபையினரால் முறைப்பாடு செய்யப்பட்டது. அதனை அடுத்து மாட்டினை காட்சிப்படுத்திய நபரை காவல்துறையினர் அழைத்து வாக்கு மூலத்தை பெற்றுக் கொண்டனர்.

அத்துடன் இன்று காலை திடீரென சுகாதார பிரிவினரும் இறைச்சிக்கு குறித்த மாட்டை வெட்ட அனுமதிக்கவில்லை எனவும், பின்னர் மாட்டினை மீண்டும் ஒரு தடவை பரிசோதனைக்கு உட்படுத்திய பின்னர் காலை 9 மணிக்கு பின்னர் வெட்ட அனுமதி தரப்படும் எனவும்  தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இவ்வாறாக ஏற்பட்ட நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக இன்று காலை மாடு இறைச்சிக்காக வெட்டப்பட்டவில்லை. அதேவேளை மாடு இன்றைய தினம் இறைச்சிக்காக வெட்டும் நோக்குடன், யாழ்.பண்ணை பகுதியில் உள்ள கொள்கலனில் கட்டப்பட்டு இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

http://globaltamilnews.net/2018/95888/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நிச்சயமாக இல்லை. இங்கே ஒரு பிரித்தானிய இடை மத்திய வர்க்க வாழ்கையை (middle middle class) இலங்கை உயர் மத்திய தர வர்க்கத்துடனோ (upper middle class) ஒப்பிட்டுள்ளேன். நாம் இலங்கை போய் அனுபவிப்பது அங்கே உள்ள upper class இன் வாழ்க்கை அல்ல. 5 நட்சத்திர விடுதிகள் போன்ற வீடுகள். கடற்கரையோர வீக் எண்ட் ஹொலிடே வீடுகள். Q8, X7, GLS வாகனங்கள்….Sri Lankan upper class இன் ரேஜ்ஞே வேறு. 
    • 2 நிமிடம் மட்டுமென்பதால் பார்த்தேன். மேலே சிவகுமார் கேட்பதற்கும் செந்தமிழன் சீமான் தன் மகனை ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிக்கும் பாசாங்குச் செயலுக்கும் என்ன சம்பந்தம்? "தமிழ் நாட்டில் தமிழ் கட்டாயம் படிக்க வேண்டும் என்ற சட்டம் இல்லாதிருப்பது திமுக வின் தவறு, எனவே தான் சீமான் மகனை ஆங்கில மூலம் படிப்பிக்கிறார்" என்கிறீர்களா😂? "சட்டம் போட்டால் செய்வேன், போடா விட்டால் செய்யாமல் பேச மட்டும் செய்வேன்!" என்பது தானே சீமான் அவர்களின்  பாசாங்கு (hypocrisy) என்கிறோம்?  உண்மையில், சீமானும், அவர் விசிறிகளும் தமிழ் மொழிக்குச் செய்வதை விட அதிகமாக தற்போதைய திமுக அரசு செய்து வருகிறது. நானும் சில முயற்சிகளில் பங்களித்திருக்கிறேன். சொற்குவை என்ற கலைச்சொல்லாக்கத் திட்டம் பற்றி எத்தனை பேர் அறிந்திருக்கிறீர்கள்? "பேச்சுக்கு முன்னால் ஸ் போட்டு ஸ்பீச் வந்தது" என்று சீமான் அவிழ்த்து விடும் அரைவேக்காட்டு கருத்துகளுக்கு விசிலடிக்கும் சீமான் தம்பிகள் பலருக்கு, சொற்குவை, தமிழ் சொல்லாக்கப் பயிலரங்கு, தமிழ் மொழி இயக்ககம், இவை பற்றி ஏதாவது தெரியுமா என்று கேட்டுப் பாருங்கள். ஒன்றும் தெரிந்திருக்காது. ஏனெனில், எதை எப்படி பேசுகிறார் என்று கேட்டு கைதட்டும் கூட்டமாக சீமான் விசிறிகள் இருக்கிறார்கள். செயல், விளைவு ஆகியவை பற்றி ஒரு அக்கறையும் கிடையாது!
    • சிறையில் ஒரு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தானே இருக்கும். அது தானை உங்கள் கவலை அண்ணா?😜
    • நீதிமன்ற அவமதிப்பு, இனங்களுக்கு இடையில் முரண்பாடு தோற்றுவித்தமைக்காக 201´ம் ஆண்டு   ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனையும் ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டிருந்த இவரை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  பொதுமன்னிப்பு வழங்கினார். மிக  விரைவில்... இருமுறை பொதுமன்னிப்பு பெற்றவர் என்ற விதத்தில் தேரர் "கின்னஸ் சாதனை புத்தகத்தில்" இடம் பெற சாத்தியங்கள் நிறைய உண்டு.  😂 ஞானசார தேரருக்கு பிரான்சில் மனைவியும் இரண்டு பெண் பிள்ளைகளும் வசித்து வருவதாக அவரின் முன்னாள் கார் சாரதி, படங்களுடன் வெளியிட்ட  செய்தி யாழ்.களத்திலும் வந்து இருந்தது.
    • 5 எள்ளு பாகுகள் பாக்கெட்டில் அடைத்து லேபல் ஒட்டி - வீட்டில் போய் வாங்கினால் ரூ 200 ( 50 பென்ஸ்). இலண்டனில் தமிழ் கடையில் குறைந்தது £3.50? ஏற்றுமதி செலவை கழித்து பார்த்தாலும்? பிகு எள்ளை இடித்து மாவாக்கி பிசையும் உருண்டை. எள்ளுருண்டை அல்ல.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.